குழந்தை பருவத்தில் இருந்தே ஆரம்பித்துவிடும் இந்த சைட் அடிக்கும் பழக்கம் இதை மறுக்க இயலாது ஆனால் மறைக்க இயலும். குழந்தையாக இருக்கும் போது இது தான் தம்பி உன் மாமன் மகள் அத்தை மகள் நீ இவளை கட்டிக்கிறியா அவள கட்டிக்கிறியான்னு கேட்கும் போதே அந்த அறியாத வயதும் வெட்கத்துடன் சிரிக்கும் அந்த அத்தை மாமன் மகள்களை நேருக்கு நேர் பார்க்க மறுப்பர் இது எனக்கு நடந்திருக்கு என்பதை மறுக்கமாட்டேன் மறுப்பவர்கள் எல்லாம் நிச்சயம் அத்தை மகளையும், மாமன் மகளையும் ஒரு செகன்ட் நினைச்சுப்பார்ப்பீங்க...
ஒவ்வொரு கால கட்டதிற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும் பொண்ணுகளை சைட் அடிப்பதற்கு. இது ஊருக்கு ஊர் வித்தியாசப்படும் சென்னை பசங்க கலாய்க்கறாங்க என்று சொல்வார்கள் கோவை பக்கம் ஒட்டறான் என்று சொல்வதை போல மதுரை பக்கம் வேற பெயர் இருக்கும்.
சைட் அடிக்கிற பொண்ணுகளை உன் ஆளு வருது என்பர், அப்புறம் உன் பிகர் வருது என்பர் பொதுவாக பெண்களை பார்க்கும் போது கலருங்க கும்முன்னு சுத்துகிறது என்போம் பலர் அம்மணிகளை பாத்தாலே மனது பத்திகிட்டு எறிகிறது என்றும் சொல்வாங்க..
நாங்க குதிரை வருதுங்க என்போம், கிளிகள் வருகிறது என்போம், செல்லங்கள் வருகிறது என ஒவ்வொரு வயதிலும் ஒரு பெயர் வைத்து அழைப்போம்... வயது ஏற ஏற சைட் அடிப்பதற்கு பெயரும் மாறும்.
நானெல்லாம் 3ம் வகுப்பு படிக்கம் போது சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டேன் 5 ம் வகுப்பில் அதை சொல்லி அவுங்க அம்மா எங்க வூட்ல வந்து போட்டு கொடுத்து ஊதாங்குழலில் குத்து வாங்கியது வரை இன்னும் ஞாபகம் இருக்கு.. அப்ப எல்லாம் திங்கள், புதன், வெள்ளி மட்டும் தான் சீருடைகள் செவ்வாயும், வியாழனும் கலர் துணி இந்த செவ்வாய் கிழமையும் வியாழக்கிழமையும் ஒரு தனி குதுகலம் தான்...
ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு பெண்ணை சைட் அடிப்பது தான் வழக்கம் இப்படியாக போய்க்கொண்டு இருந்த வாழ்க்கையில் இனி சைட் அடிக்கவே வாய்ப்பில்லை என்று செய்துவிட்டாங்க ஆமாங்க... ஹாஸ்டலில் கொண்டு வந்து விட்டு விட்டார்கள் அங்க இருந்தாலும் பரவாயில்லை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து அத்தனைக்கும் ஆப்படித்து விட்டார்கள். அடப்பாவமே இனி பிகர் பார்க்க வாய்ப்பே இல்லை என்று ஒரு வருசம் போனது..
10ம் வகுப்பில் விடுதியில் இருந்து டியூசனுக்காக வெளியே போய்க்கலாம் என்று சொன்னதும் எங்கு போகலாம் என்று பயங்கர கன்பியூஸ் தனம் டீச்சர்கிட்ட டியூசனுக்கு போகலாம் அங்கு தான் இருபாலரும் படிக்கலாம் என்று மனதில் சபலத்தை உண்டு செய்தபோது அங்கு இடம் இல்லை என்று செவித்தில் அடித்த பந்து போல நண்பன் வந்து சொன்னான் அப்புறம் எங்கே போகலாம் என்றால் பிவி. ஜிவி, பிஸி என் 3 ஆசிரியர்கள் அவர்கள் மூன்று பேர் பேரும் ஆறுமுகம் அங்கு சென்றோம் அங்கு சென்றால் தான் தப்பித்தவறி 10ம் வகுப்பு தேறினேன் இல்லையேல் டுட்டோரியல் தான்..
சைட் அடிப்பதற்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது... சின்ன வயதில் இருந்து பெரியவர்கள் வரை இதற்கு விதி விலக்கு கிடையாது. பல பெரிசுகள் அழகான பெண்களை பார்க்கும் போது பெருமுச்சு விட்டு தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துவார்கள்... என்னைப்போன்ற இறசுகள் எல்லாம் கண்ணிலேயே ஒரு ரவுண்டு சைட் அடிச்சி முடிச்சிடுவோம்.. காரில் சென்று கொண்டு இருந்தால் அழகான பெண்கள் செல்லும் போதெல்லாம் நம்மை அறியாமல் வேகம் குறைந்து அந்த இரண்டு நிமிடம் கவனம் பக்கத்தில் தான் இருக்கும்...
இவ்வளவு நேரம் சைட் அடிச்சத பத்தி பேசியாச்சு இனி தலைப்புக்கு வருவோம் நண்பன் ஒருவன் காதல் வலையில் விழுந்தான் நண்பனுக்கு தூது போகவில்லை என்றால் காதல் இலக்கியத்தில் தூதுவனுக்கு இடம் இருக்காது என்பதால் தூதுவன் ஆனோம் நாங்க இருவர். அவன் அப்படியே சைக்கிளை உருட்டிகிட்டு பார்க்கில் போய் கடலை போட்டுவிட்டு வரும் வரை நாங்க லைப்ரெரியில் உட்கார்ந்து பத்திரிக்கைகளை மேய்ந்து கொண்டு இருப்போம் நண்பனின் காதல் வெட்ட வெளிச்சமாகி அவனை மிரட்ட ஒரு சில பெரியவர்கள் வந்தனர் வந்து அருமையாக பேசினர் இனி இதெல்லாம் வேண்டாம் போய் படிக்கற வேலைய பாருங்க நண்பன்னா உயிரைகொடுப்பேன் என்று வீர வசனம் எல்லாம் வேண்டாம் தம்பி இதெல்லாம் இருக்கற வயது தான் தப்பில்லை இனி வேண்டாம் விடுங்க என்றார்கள். நம் வாயில் தான் சனி தாண்டவர் ஆடுகிறாரே உடனே சார் சைட் அடிச்சா தப்பா சார் என்றேன் அதற்கு அந்த பெரியவர் சைட் அடிச்சா தப்பில்ல தம்பி ஆனா எங்க பொண்ணு அடிச்சா தப்பு.. நீ கண்ணல பார்த்தால் நாங்க கையால அதை நோண்டிடுவோம் என்றார் சிரிச்சகிட்டே. ஏண்டா கம்முன்ன இருக்காம வாயக்கொடுத்து வாங்கிகட்ட சொல்றியான்னு அப்புறம் என்ன பார்க்கின் நாலு வீதியிலும் துரத்தியதெல்லாம் தனிக்கதை...
ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு பெண்ணை சைட் அடிப்பது தான் வழக்கம் இப்படியாக போய்க்கொண்டு இருந்த வாழ்க்கையில் இனி சைட் அடிக்கவே வாய்ப்பில்லை என்று செய்துவிட்டாங்க ஆமாங்க... ஹாஸ்டலில் கொண்டு வந்து விட்டு விட்டார்கள் அங்க இருந்தாலும் பரவாயில்லை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து அத்தனைக்கும் ஆப்படித்து விட்டார்கள். அடப்பாவமே இனி பிகர் பார்க்க வாய்ப்பே இல்லை என்று ஒரு வருசம் போனது..
10ம் வகுப்பில் விடுதியில் இருந்து டியூசனுக்காக வெளியே போய்க்கலாம் என்று சொன்னதும் எங்கு போகலாம் என்று பயங்கர கன்பியூஸ் தனம் டீச்சர்கிட்ட டியூசனுக்கு போகலாம் அங்கு தான் இருபாலரும் படிக்கலாம் என்று மனதில் சபலத்தை உண்டு செய்தபோது அங்கு இடம் இல்லை என்று செவித்தில் அடித்த பந்து போல நண்பன் வந்து சொன்னான் அப்புறம் எங்கே போகலாம் என்றால் பிவி. ஜிவி, பிஸி என் 3 ஆசிரியர்கள் அவர்கள் மூன்று பேர் பேரும் ஆறுமுகம் அங்கு சென்றோம் அங்கு சென்றால் தான் தப்பித்தவறி 10ம் வகுப்பு தேறினேன் இல்லையேல் டுட்டோரியல் தான்..
சைட் அடிப்பதற்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது... சின்ன வயதில் இருந்து பெரியவர்கள் வரை இதற்கு விதி விலக்கு கிடையாது. பல பெரிசுகள் அழகான பெண்களை பார்க்கும் போது பெருமுச்சு விட்டு தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துவார்கள்... என்னைப்போன்ற இறசுகள் எல்லாம் கண்ணிலேயே ஒரு ரவுண்டு சைட் அடிச்சி முடிச்சிடுவோம்.. காரில் சென்று கொண்டு இருந்தால் அழகான பெண்கள் செல்லும் போதெல்லாம் நம்மை அறியாமல் வேகம் குறைந்து அந்த இரண்டு நிமிடம் கவனம் பக்கத்தில் தான் இருக்கும்...
இவ்வளவு நேரம் சைட் அடிச்சத பத்தி பேசியாச்சு இனி தலைப்புக்கு வருவோம் நண்பன் ஒருவன் காதல் வலையில் விழுந்தான் நண்பனுக்கு தூது போகவில்லை என்றால் காதல் இலக்கியத்தில் தூதுவனுக்கு இடம் இருக்காது என்பதால் தூதுவன் ஆனோம் நாங்க இருவர். அவன் அப்படியே சைக்கிளை உருட்டிகிட்டு பார்க்கில் போய் கடலை போட்டுவிட்டு வரும் வரை நாங்க லைப்ரெரியில் உட்கார்ந்து பத்திரிக்கைகளை மேய்ந்து கொண்டு இருப்போம் நண்பனின் காதல் வெட்ட வெளிச்சமாகி அவனை மிரட்ட ஒரு சில பெரியவர்கள் வந்தனர் வந்து அருமையாக பேசினர் இனி இதெல்லாம் வேண்டாம் போய் படிக்கற வேலைய பாருங்க நண்பன்னா உயிரைகொடுப்பேன் என்று வீர வசனம் எல்லாம் வேண்டாம் தம்பி இதெல்லாம் இருக்கற வயது தான் தப்பில்லை இனி வேண்டாம் விடுங்க என்றார்கள். நம் வாயில் தான் சனி தாண்டவர் ஆடுகிறாரே உடனே சார் சைட் அடிச்சா தப்பா சார் என்றேன் அதற்கு அந்த பெரியவர் சைட் அடிச்சா தப்பில்ல தம்பி ஆனா எங்க பொண்ணு அடிச்சா தப்பு.. நீ கண்ணல பார்த்தால் நாங்க கையால அதை நோண்டிடுவோம் என்றார் சிரிச்சகிட்டே. ஏண்டா கம்முன்ன இருக்காம வாயக்கொடுத்து வாங்கிகட்ட சொல்றியான்னு அப்புறம் என்ன பார்க்கின் நாலு வீதியிலும் துரத்தியதெல்லாம் தனிக்கதை...
ஹா ஹா ஹா...... நான் சைட் அடிச்சதை நினைச்சி பார்த்தேன் !! நல்லா விளக்கமா எழுதி இருகீங்கா, வீட்டு அம்மா படிப்பாங்களா ?! பிஞ்சிலேயே பழுத்திடீங்க போல...... :-)
ReplyDeleteநிச்சயம் இதைப்படிக்கும் அனைவரும் அவர்கள் சைட் அடிச்சதை நினைச்சிப்பார்க்கனும்... ஹவுஸ் பாஸ் நல்லா விழுந்து விழுந்து சிரிப்பாங்க...
Deleteஎன் சைடும்(side) சைட்(sight) க்கு தான்..சைட் அடிக்கலாம் ஆனா சீரியசா பண்ணைனாத் தான் பிரச்சனை யாயிடும் அந்த வயதிலும் ;)...very nicely written..
ReplyDeletechelli
சீரியசா பண்டினால் சீரியஸ் ஆகிடும்...
Deleteகருத்துக்கும் வருகைக்கும் நன்றி செல்லி...
ஹா... ஹா... ரசிக்க வைத்தது சைட்...
ReplyDeleteஅடிக்கிறமோ இல்லையோ ஒரு பொண்ணு நமக்கிட்ட பேசிட்டா பசங்களுக்கு தாங்காது.... யாருடா அவ்... உன்னோட ஆளான்னு குதிப்பாய்ங்க... ம்ம்... அது ஒரு கனாக்காலம்... (எல்லாருக்கும்ன்னு சொல்ல வந்தேன்...)
3 ஆப்புலேயே ஆரம்பிச்சாச்சா?? நான் டீச்சராய் இருந்த போது பிரபு என்ற 3 ஆம் வகுப்பு மாணவன் தன் கூட படித்த பெண்ணிற்கு I LOVE YOU என்று ஒரு பேப்பரில் எழுதி கொடுத்து அது என் பஞ்சாயத்திற்கு வந்ததும் நினைவிற்கு வருகிறது. எனக்கு கோவமே வரலை.ஆனால் மாட்டி கொண்ட பிரபு முகத்தில் அப்படி ஒரு வெட்கம்.எல்லாம் டிவி,சினிமா செய்யும் வேலை என்று விஷயத்தை பெரிசாக்க விடலை.
ReplyDeleteநல்ல விசயம்... நல்ல டீச்சர்...
Deleteகருத்துக்கும் வருகைக்கும் நன்றி
ரைட்டு... தூது போனங்கிளா... நல்லவிஷயம்...
ReplyDeleteபார்த்து சூதானமா நடந்துக்கங்க
நான் 5வது படிக்கும் போதே ஒரு பொண்ணு என் மனசுக்குள்ள வந்தா.
ReplyDeleteதூரத்து சொந்தத்தில் அவள் எனக்கு அத்தை மகள்.
பிளஸ் டூ படிக்கும் வரை அவளுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறப்பது போல் கனவெல்லாம் கண்டு கொண்டிருந்தேன்....நிழல்கள் படம் போல்.
சோகம் என்னன்னா...நான் காலேஜ் போறதுக்குள்ள... அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாள்.
அவளும் என்னை நினைத்திருந்தாள் என்பது போன வருடம் தெரிந்து கொண்ட போது எனது சந்தோஷத்துக்கு அளவேயில்லை.
அவள் மகளுக்கு குழந்தை பிறந்து அவள் பாட்டியாகி விட்டாலும்...அவளை பார்க்கும் போது இன்னும் அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது.
என் நினைவலைகளை தட்டியெழுப்பிய சங்கவிக்கு நன்றி.
உங்கள் நினைவுகளால் சந்தோத்தில் நீந்தியதற்கு மிக்க நன்றி சார்...
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
இருபாலரும் படிக்கலாம் என்று மனதில் சபலத்தை உண்டு செய்தபோது அங்கு இடம் இல்லை என்று செவித்தில் அடித்த பந்து போல நண்பன் வந்து சொன்னான் //சத்திய சோதனை...
ReplyDeleteஆமா நண்பா... அப்ப மனசு அடிச்சிகிட்டுச்சு பாரு....
Deleteபெரியவர் சைட் அடிச்சா தப்பில்ல தம்பி ஆனா எங்க பொண்ணு அடிச்சா தப்பு.. நீ கண்ணல பார்த்தால் நாங்க கையால அதை நோண்டிடுவோம் என்றார் சிரிச்சகிட்டே.// நல்ல வேளை கண்ணு தப்பிடுச்சி... வெரி பேட் பெரியவர்...
ReplyDeleteஆமாம்பா.. கண்ணை நோண்டிவிடுவேன் என்கிறாரே...
Deleteஊதாங்குழல்ல குத்து மட்டும் தான் வாங்கினியா மச்சி, ஒரு சூடு போட்டிருந்தா தான் இந்த காட்சிக்கு பொருத்தமா இருந்திருக்கும்.
ReplyDeleteமச்சிக்கு சூடுவாங்கிய அனுபவம் இருக்கும்போல...
Deleteஓ.... ஆம்பள பசங்க கிட்ட இவ்வளவு விசயங்கள் இருக்குதா...?
ReplyDeleteபெண்களிடம் மட்டும் தான் இதெல்லாம் நடக்குது என்று நினைத்திருந்தேன்....
சரி சரி.. அப்புறம் என்னவாச்சி?
நீங்களும் இப்படித்தானா...
Deleteஅடடா நம்ம பழைய ஆளுங்களை நியாபகப் படுத்திட்டியே மக்கா....!
ReplyDeleteஆமா மக்கா நிச்சயம் ஞாகபம் வரனும்...
Deleteசைட் அடிப்பதற்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது... பார்ரா... நல்ல எழுத்துநடை,,,
ReplyDeleteஆம் கருண்... 70 வயச தாண்டியதுங்க தான் ரொம்ப அடிக்குதுங்க..
Deleteநான் சின்ன வயசில் சைட் அடிக்க ஆரம்பிசேன் அதை இன்னும் விடலை.. இப்பவும் இங்கே சைட் அடிப்பேன் ஆனா இந்திய பெண்களை அல்ல இந்திய பெண்களை சைட் அடிக்கனும்னா இங்கே உள்ள கோயில்களுக்கு சனிக் கிழமை ஈவினிங்க் போன நல்லா புடவை கட்டி கிட்டு வரும் போது மனசு துள்ளும்.. ஆனால் அதே பெண்களை ஜீன்ஸ் பேண்டில் பாத்தா அடிக்கிற மூடே வராது. என் வொர்க்கில் பல தரபட்ட மக்களை பார்க்கும் போது என் கூட வேலை செய்யும் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் (கல்யாணமான) சைட் அடிப்போம்
ReplyDeleteஅமெரிக்காவில் ஒரு செளரியம் என்ன்னா யாரையும் சைட் அடிக்கலாம் அப்பா சகோதரனை யாரும் கூப்பிட்டு அடிக்க வரமாட்டார்கள் ஆனா அப்பா சகோதரன் நண்பர்கள் என்று எல்லோரையும் கூப்பிட்டுவந்து பார் ரெஸ்டரெண்ட் என்று கூப்பிட்டு போய் நம் பர்ஸை அழ அழ வைத்து விடுவார்கள்
அப்ப சைட் அடிச்சா பர்ஸ் பழுத்திடும்ன்னு சொல்லுங்க..
Delete:)))
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்...
Deleteசைட்டோ புராணம் அருமை! நான்லாம் ரொம்ப்ப லேட்டு! எட்டாம் கிளாஸ் படிக்கறப்பதான் சைட்டடிக்கவே தெரிஞ்சுக்கிட்டேன்.(கெரகம்... அப்பப் பழகிக்கிட்ட இந்தப் பழக்கத்தை இப்பவும் நிறுத்த முடியல! ஹி... ஹி...!) பழைய நாட்களுக்கு மீண்டும் போய்த் திரும்பினேன் உங்களால.. மிக்க நன்றிங்கோ!
ReplyDeleteரெமோன்னா சும்மாவா..
Deleteராணுவ வீரர்களில் எத்தனைபேர் இவ்வாறு அசடுவலிபவர்கள் என்று அறிந்துகொல்வதர்க்காக இப்படி அழகான பெண்களை அனுப்பி இருப்பார்களோ? தப்பில்லை
ReplyDeleteஹா ஹா... இருக்கலாம் சார்...
Deleteநான் 3 ம் வகுப்பு படிக்கும் போது டீச்சரையே சைட் அடித்து இருக்கிறேன் இப்போது அதை நினைத்தால் சிரிப்பாக இருகிறது
ReplyDeleteபால்ய நினைவுகளை கிளறிவிட்டீர்கள்! அருமையான பதிவு!
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.