Friday, April 29, 2011

தூங்கும் போது என்ன நடக்கிறது


1 .தூங்கும் போது நடப்பது என்ன
  • மூளை தன்னை Recharge செய்கிறது
  • கலங்கள் தம்மை Repair செய்கின்றன
  • உடல் முக்கிய Hormones ஐ சுரக்கிறது

2 .வயதும் தேவையான தூக்கமும்
  • 00 -02  -------  16 மணிநேரம்
  • 03 -12 --------  10 மணிநேரம்
  • 13 -18 --------  08 மணிநேரம்
  • 19 -55 --------  08 மணிநேரம்
  • 56 -85 --------  06 மணிநேரம்

3 .யாரை பற்றி கனவு
  • ஆண்களின் 70 % ஆன கனவு ஒரு ஆணை பற்றி இருக்கும்
  • பெண்களின் 50 % ஆன கனவு ஒரு பெண்ணை பற்றி இருக்கும்
  • ஏற்கனவே பார்த்த முகங்களையே கனவில் காண முடியும்

4 .தூக்க நோய்
  • Parasomnia என்பது தூக்கத்தில் உள்ள போது செயற்படல்
  • இதன் போது புரியப்படும் குற்றங்கள்
  • கொலை,கற்பழிப்பு,வாகனம் ஓட்டல்

5.கனவின் தன்மை
  • 12 % ஆன கனவு கருப்பு வெள்ளை
  • கனவு காணாதவர்கள் மன நோய் உடையவர்கள்

6.கணவன் மனைவி
  • நான்கில் ஒரு தம்பதியினர் தனி தனி கட்டிலில் தூங்குகின்றனர்

7 .உச்சா போதல்
  • 50 பேரில் இல் ஒரு டீன்ஏஜ் கட்டிலில் சிறுநீர் கழித்து விடுகிறார்

8.கனவை மறத்தல்
  • முழித்து 5 நிமிடத்தில் 50 % கனவு மறந்து விடும்
  • முழித்து 10 நிமிடத்தில் 90 % கனவு மறந்து விடும்

9 .முக்கியம்
  • உண்ணாமல் 2 வாரம் இருக்கலாம்
  • தூங்காமல் 10 நாள் இருந்தால் மரணம் தான்

10 .கண்பார்வை அற்றோர்
  • இவர்கள் கனவில் பார்க்கமுடியும்
  • Born Blind பார்க்க முடியாது
  • அனால் தொடுகை,மணம் என்பவற்றை உணர்வார்கள்

11 .தூங்கும் விதம் - குணம் 
 
சரிந்து உடலை முற்றாக வளைத்து (41 %)
   இளகிய திறந்த மணம்
சரிந்து சற்று உடலை  வளைத்து (13 %)
   சந்தேகபடுபவர்கள்
சரிந்து படுத்து முழுஉடலும் நேராக தூங்குவோர் (15 %)
   சமூக பறவைகள் 
நீட்டு நிமிந்து மல்லாக்க(8 %)
   Reserved type
நேராக குப்புற படுத்து (7 %)
   ஜாலி யான பேர்வழிகள் 
மல்லாக்க படுத்து சற்று உடலை வளைத்து (5 %)
  மறவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பர்..
 
சத்தியமா இந்த சர்வே நான் எடுக்கலிங்க எனக்கு வந்த மெயிலை உங்களுடன் பகிர்கிறேன்...

Thursday, April 28, 2011

அஞ்சறைப்பெட்டி 28.04.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கோடை மழையால் ஊரொங்கும் குளிர்ச்சியாகவே இருக்கிறது. சித்திரை தொடங்கியதும் எப்பா என்னா வெய்யிலு என்று தான் எப்பவும் சொல்வோம் இந்தமுறை எங்க ஊரில் நல்ல மழை அங்க எப்படி என்று தான் அதிக பேச்சுக்கள் வருகின்றன.

இந்த கோடையில் தப்பியது மின்சார வாரியம் தான் அதிக வெய்யில் அடிக்கம் போது மின்சாரத்தின் பயன் அதிகரிக்கும் இந்த முறை மழை பெய்ததால் மின்சாரம் பயன்படுத்தும் அளவு கொஞ்சம் குறைந்துள்ளது. இல்லை எனில் அனைவரும் மின்சார வாரியத்தையும், மின்சார அமைச்சரையும் திட்டி தீர்த்திருப்பார்கள்..

...............................................................................................

சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் அனைத்தும் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிவந்துள்ளது இதை அனைவரும் பயன்படுத்துவதால் சர்வர் பிரச்சனையில் பாடத்திட்டங்களை டவுன்லோடு செய்ய முடியவில்லை.

இப்பாடத்திட்டங்களை தனியார் இணையதளத்துக்கு லிங்க் கொடுத்துள்ளனர் அவர்கள் இரண்டு முறையில் டவுன்லோடு வசதி செய்துள்ளனர் இலவச வசதி, கட்டண வசதி இரண்டு முறையில் டவுன்லோடு செய்ய முடியும்.
இதில் இலவச வசதியில் டவுன்லோடு செய்தால் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகின்றது ஆனால் கட்டண முறையில் டவுன்லோடு செய்தால் 2 நிமிடங்களில் டவுன்லோடு சேய்ய முடிகிறது.

அரச இலவசமாக தரும் பாட புத்தகங்களை எப்படி எல்லாம் யோசிச்சு காசு ஆக்குகிறார்கள். எத்தனையோ கோடிகளை செலவளிக்கும் அரசு நல்ல சர்வர் வாங்கி அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் பராமரிக்கலாமே..
...............................................................................................

இலங்கையின் போர்க்குற்ற செய்திகள் ஒவ்வொன்றையும் படிக்கும் போது கண்ணீர் வருகிறது அதுவும் படங்களைப் பார்க்கும் போது மனம் ரணமாகிறது.

இவர்கள் போர்குற்றம் செய்தது அனைவருக்கும் தெரியும் என்ன செய்வது தமிழனுக்கு உதவ இந்த உலகத்தில் யாருமே இல்லையே....

........................................................................................................

அனைவரும் தமிழக தேர்தல் ரிசல்ட்டை எதிர்பார்த்து ஓய்வு எடுக்கும் வேளையில் ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிக்கையில் கனிமொழியின் பெயரை சேர்த்து ஓய்வு எடுக்கும் தலைவர்களை ஓய்வில்லாமல் செய்துவிட்டது.

சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தும் எங்கள் மேல் தவறில்லை நீதிமன்றத்தில் பார்ப்போம் என்கிறார்கள்.. இப்படித்தான் ராசாவும் சொன்னார் இப்ப உள்ளே இருக்கிறார்... தேர்தல் முடிவுகளைப்பொறுத்து இந்த வழக்கின் வேகம் இன்னும் அதிகரிக்கலாம்.

நாட்டு நடப்பு
தற்போது தேர்தல் நடக்கும் அனைத்து இடங்களிலும் 75 சதவீதத்திற்கு மேல் ஓட்டுபதிவாகிறது மிகவும் சந்தோசமான விசயம் இன்னும் அடுத்த தேர்தலில் நிச்சயம் 85 சதவீதத்தை நெருங்க வாய்ப்பிருக்கிறது. தேர்தல் கமிஷனின் அற்புத முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

தகவல்
உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1980-ம் ஆண்டில் புதிய கருத்தடை மாத்திரைகளை தயாரித்தனர். அவை “மூன்றாம் தலைமுறை கருத்தடை மாத்திரை” என அழைக்கப்படுகிறது.  இவை இதற்கு முன்பு பெண்களால் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைவிட ஆபத்தானது. இது ரத்தத்தை உறைய செய்யக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.    இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நிபுணர்கள் 2 ஆய்வுகள் நடத்தினர். அதில் மேற்கண்ட தகவல் தெரிய வந்துள்ளது.  ரத்தம் உறைவதால் சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே டாக்டர்கள் பரிந்துரையின் பேரில்தான் பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் தமிழ்வாசி என்னும் பெயரில் பிரகாஷ் என்பவர் எழுதி வருகிறார்.  இவரின் பதிவுகளில் கொளுத்தும் வெய்யிலுக்கு என்ன சாப்பிடலாம் என்று காலத்திற்கு ஏற்ற அற்புதமான பதிவாக எழுதி உள்ளார்..

http://tamilvaasi.blogspot.com/2011/04/blog-post_24.html

தத்துவம்
பேசும்முன் கேளுங்கள், எழுதுமுன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. என்னால் மட்டுமே முடியும் என்பது அகம்பாவம்.

Wednesday, April 27, 2011

அதிகமாக வியர்ப்பது பெண்களுக்கா? ஆண்களுக்கா??

 

கோடை காலம் என்றாலே அனைவரும் அலறுவது வியர்வைத் தொல்லைக்குத்தான் அதுவும் பொது இடங்களில் இளைய தலைமுறையினர் படும் பாடு சொல்லி மாளாது.
வியர்வை என்பது அழுக்கு உடல் நலத்துக்கு கேடு என்று அனைவரும் நினைக்கின்றனர்  ஆனால் உண்மையில் வியர்வை என்பது உடல் நலத்தை பேணு வதற்காகவே. வியர்வை என்ற ஒன்று இல்லையானால் மரணம் நிச்சயம். வியர்வை சுரப்பிகள் மிகமுக்கியமாக சிறுநீரகத்தின் வேலைப்பளுவை குறைக்கின்றது.
 
 

வியர்வையின் வேலை
  • உடட்கழிவுகளை வெளியேற்றல்
  • உடல் வெப்பநிலையை சீராக பேணுதல்
  • தோலை ஈரலிப்பாக பாதுகாப்பாக பேணல்
சுரப்பிகள்
  • 2 - 4 மில்லியன் சுரப்பிகள் உடலில் உள்ளன
  • இவை ஒருநாளைக்கு 12 லீற்றர் வியர்வையை சுரக்க வல்லன
  • வியர்வையில் நீர்,உப்பு,சீனி அடங்கியுள்ளது
உருவாக்கம்
  • உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் பகுதி வியர்வைசுரப்பிகளுக்கு Signals களை அனுப்பி தேவைக்கேற்ப வியர்வைவை சுரக்க வைக்கிறது.
வியர்வை சுரப்பி வகைகள்
  • Eccrine
                   உடல் சூடாக உள்ளபோது வியர்வையை சுரப்பவை
  • Apocrine
                    நாம் Emotion அடையும் போது சுரப்பவை

சூழ்நிலை
  • சூடான காலத்தில்,அதிகவேலை/டென்சன் நாளில் சாதாரண நாளை விட 7 மடங்கு நீரை வியர்வையாக இழக்கின்றோம்.
ஆண் - பெண்
  • பெண்களுக்கு ஆண்களை விட அதிக வியர்வை சுரப்பிகள் இருந்தாலும் ஆண்களுக்கு பெண்களை விட 40 % அதிகமாக வியர்க்கின்றது.
வீரியம்
  • சிறுநீரகங்கள் 24 மணிநேரம் வேலை செய்து வெளியேற்றும் உடற்களிவுகளை, Sauna எனும் இடத்தில் 15 நிமிடங்கள் இருந்தால் உடலிலிருந்து வெளியேறும் 1 லீட்டர் வியர்வை வெளியேற்றிவிடும்.
உறுப்பு
  • பாதங்கள் வியர்வைசுரப்பிகள் செறிவாகவுள்ள உறுப்பு
  • பாதத்தில் 25000 சுரப்பிகள் உள்ளன
வியர்வையை தூண்டும் உணவுகள்
  • வெங்காயம்
  • மிளகாய்
  • பூண்டு
விளையாட்டும், ஒருமணிக்கு வியர்க்கும் வியர்வை
  • 2 .43 லீட்டர்    - உதைபந்தாட்டம்
  • 1 .49 லீட்டர்    - ஓட்டம்
  • 1 .25 லீட்டர்    - சைக்கிளோட்டம்
  • 1 .6 லீட்டர்     - கூடைப்பந்தாட்டம்
  • 0 .8 லீட்டர்      - கரப்பந்தாட்டம்
  • ????                 -  விளையாட்டு
வியர்வை நோய்கள்
  • Hyperhidrosis - அதிக வியர்வை
  • Anhidrosis - குறைந்த வியர்வை
  • Prickly heat - வியர்வை தடைப்படல்
விலங்குகளும் வியர்வையும்
  • குதிரை   - அதிகம் வியர்க்கும் விலங்கு
  • பன்றி      - வியர்வைசுரப்பிகளற்றது.
  • மாடு       - மூக்கில் சுரப்பிகள் உண்டு
  • முயல்   - உதட்டில் சுரப்பிகள் உண்டு
  • நாய்       - பாதத்தில் சுரப்பிகள் உண்டு
  • பூனை   - பாதத்தில் சுரப்பிகள் உண்டு
அனைவரும் அதிகமாக தண்ணீர் குடியுங்கள் நிறைய வியர்வையை வெளியேற்றுங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக பேணுங்கள்...

Monday, April 25, 2011

அறியுங்கள்! இந்த " கட்டிப்பிடி வைத்தியத்தை"...


வா‌ழ்‌க்கை‌யி‌ல் எ‌ப்போது‌ம் டெ‌ன்ஷனா? மன அழு‌த்‌த‌‌த்தா‌ல் அ‌வ‌தி‌ப்படு‌கி‌றீ‌ர்களா? ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் தோ‌ன்று‌கிறதா? கை‌யி‌ல் வெ‌‌ண்ணையை வை‌த்து‌க் கொ‌ண்டு நெ‌ய்‌க்கு அலைவானே‌ன்?

ஆ‌ம்.. உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌த் துணை‌யிடமே உ‌ள்ளது மரு‌ந்து. வா‌ழ்‌க்கை‌த் துணையை அடி‌க்கடி க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பதா‌ல் மன அழு‌த்த‌ம் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்‌வு ஒ‌ன்று கூறு‌கிறது.

சு‌வி‌ட்ச‌‌ர்லா‌ந்து நா‌‌ட்டி‌ல் உ‌ள்ள ஜூ‌ரி‌ச் ப‌ல்கலை‌க் கழக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த டா‌க்ட‌ர் ‌பீ‌ட் டி‌ட்ச‌ன் தலைமை‌யிலான குழு‌வின‌ர் சுமா‌ர் 51 த‌ம்ப‌திக‌ளிட‌ம் இது கு‌றி‌த்த ஆ‌ய்வை நட‌த்‌தின‌ர்.

எ‌ப்படி‌ப்ப‌ட்ட ப‌ணி அமை‌ப்பை‌க் கொ‌ண்டவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், அ‌திக மன உளை‌ச்சலு‌க்கு ஆளானவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், வார‌த்‌தி‌ல் பல முறை து‌ணையை‌க் க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பது, மு‌த்த‌மிடுவது, உடலுறவு‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ஈடுபடு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு மன அழு‌த்த‌ம் குறை‌ந்‌திரு‌ந்தது.

இது வெறு‌ம் க‌ண்துடை‌ப்பு ‌ஆ‌‌ய்வு ம‌ட்டும‌ல்ல. அதாவது அ‌றி‌விய‌ல் ‌ரீ‌தியாகவு‌ம் இதனை ஆ‌ய்வு செ‌ய்தவ‌ர்க‌ள் ‌விள‌க்கு‌கிறா‌ர்க‌ள்.

அதாவது, அலுவலக ‌பிர‌ச்‌சினைக‌ள், ‌வீ‌ட்டு ‌பிர‌ச்‌சினைக‌ள் என எதையு‌ம் த‌ங்களது படு‌க்கை அறை‌க்கு‌ள் நுழைய ‌விடாம‌ல், வா‌ழ்‌க்கை‌த் துணையை அ‌‌ன்பாக நட‌த்து‌ம், ஒருவரு‌க்கொருவ‌ர் த‌ங்களது அ‌ன்பை ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு, மன அழு‌த்த‌த்து‌க்கு காரணமான கா‌ர்டிசா‌ல் எ‌ன்ற ஹா‌ர்மோ‌ன் குறைவான அள‌விலேயே சுர‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம் மன அழு‌த்த‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌சில த‌ம்ப‌திகளு‌க்கு இடையே, நெரு‌க்க‌த்தை உருவா‌‌க்‌கிய‌ப் ‌பிறகு அவ‌ர்களது மன அழு‌த்த‌ம் பெருமளவு குறை‌ந்ததாகவு‌ம் கூ‌றியு‌ள்ளன‌ர். வெறு‌ம் மன அழு‌த்த‌த்தை‌க் குறை‌ப்பத‌‌ற்காக ம‌ட்‌டு‌ம் நமது வா‌‌ழ்‌க்கை‌த் துணையை‌க் க‌ட்டி‌பிடி‌ப்பதா‌ல் ‌எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. இருவருமே மன‌ம் ஒரு‌மி‌த்து, த‌ங்களது அ‌ன்பை வெ‌ளி‌க்கா‌ட்டு‌ம் ‌விதமாக நெரு‌க்கமாக இரு‌ப்பதா‌ல்தா‌ன் உ‌ண்மையான பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.

இதையு‌ம் பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்ட ‌பீ‌ட் டி‌ட்ச‌ன்.

குறிப்பு... இது உண்மையா பொய்யான்னு தெரியலிங்க நான் ஒரு புத்தகத்தில் படித்தேன் அப்படியே மொழி பெயர்த்து இருக்கிறேன்... இனி தான் இது உண்மையான்னு சோதனை செய்யனும்...

Thursday, April 21, 2011

அஞ்சறைப்பெட்டி 21.04.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
வெய்யிலின் தாக்கம் இந்த முறை கொஞ்சம் அதிகமகவே உள்ளது. வெய்யில் குறைவாக அடித்தாலும் வெப்பம் போட்டுத்தாக்குகின்றது. மின்சாரம் எப்ப இருக்கும் என்று சொல்லவே முடியாது. இன்று கிராமப்  புறங்களில் எப்ப மின்சாரம் இருக்கும், இருக்காது என்று யாராலும் சரியாக சொல்ல இயலாது குறைந்த பட்சம் 4 மணி நேரம் இருப்பதில்லை. என்ன அப்ப அப்ப மழை பெய்து மக்களின் மனதை குளிர்விக்கிறது.

...............................................................................................

சமீபத்தில் சென்னை சென்று திரும்பி வரும் போது ஏசி சிலிப்பர் பேருந்தில் கோவை வந்தேன் எனக்கு கடைசியாக மேலே உள்ள 32 வது சீட். பேருந்து போட்ட ஆட்டத்தால் தூங்காமல் உட்கார்ந்திருந்தேன் அப்பறம் தான் தெரிந்தது சிலிப்பர் கோச் கில்மா கோச்சாக இருந்தது இரண்டு கப்புல்கள் இரண்டு சிங்கிள் பெட், ஒரு டபுள் பெட் எடுத்திருந்தனர் அவர்கள்   ஆட்டம் பெரிய ஆட்டம். இதை துணை ஓட்டுநரிடம் என்னய்ய இப்படி எல்லாம் நடக்குது என்றால் இது பரவாயில்ல இதுக்கு மேல சொன்ன அது அதைவிட கொடுமை என்கிறார். (பல்லு இருக்கறவன் பக்கோட சாப்பிடுகிறான்)

...............................................................................................

தேர்தல் முடிந்தாலும் முடிந்தது தினமும் அரசியல் கட்சிகள் அறிக்கை போர் நடத்திக்கொண்டுள்ளனர். ஒரு பத்திரிக்கை யார் யார் மந்திரி யாகப்போகிறார்கள் என்று அவர்கள் சார்ந்துள்ள பத்திரிக்கையில் கட்டுரையாக எழுதி தள்ளுகின்றனர். நிச்சயம் இம்முறை தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

........................................................................................................


ஓட்டு எண்ணிக்கையில் இந்த தடவை புதிய முறை கடைபிடிக்கப்பட உள்ளது. கடந்த தேர்தல்களில் ஓட்டு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றாக முடிய, முடிய அதன் விபரம் வெளியிடப்பட்டு விடும். இதனால் உடனடியாக முன்னணி நிலவரம் தெரிந்து விடும்.
 
ஆனால் இந்த தடவை ஒவ்வொரு ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்கப்படும். அவர் ஒப்புதல் கொடுத்த பிறகே, ஓட்டு விபரத்தை வெளியிட முடியும். ஒவ்வொரு தொகுதி ஓட்டுக்களும் தலா 14 மேஜை மீது வைத்து எண்ணப்படும்.
 
ஒவ்வொரு பகுதி மின்னணு எந்திரங்களை 14 மேஜைகளிலும் வைத்து எண்ணுவார்கள். 14 மேஜை ஓட்டுக்களும் எண்ணி முடித்த பிறகே அந்த சுற்று ஓட்டு விபரத்தை பார்வையாளர் வெளியிடுவார். இந்த புதிய நடைமுறையால் ஓட்டு முன்னணி விபரம் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படலாம்.
 
தேர்தல் பார்வையாளர் ஒப்புதல் கொடுக்காமல் அடுத்த சுற்று ஓட்டுக்களை எண்ண முடியாது என்பதால் மதியத்துக்கு பிறகே தெளிவான நிலை தெரியவரும் என்று கூறப்படுகிறது.

எப்படியோ நம்மூரு அரசியல்வாதிகளுக்கு BP ஏருவது நிச்சயம் ...

 
........................................................................................................

ஐபில் கிரிக்கெட் என்னும் பணம் காய்ச்சும் மரம் இம்முறையும் பணத்தை வாரி இறைத்திருக்கிறது. திறமை உள்ள அணி வெற்றி பெருமா?
........................................................................................................  
சீன வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அக்ரோ உயிரி தொழில்நுட்ப பரிசோதனை கூடத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் லீ நிங் மனிதனை போன்று மரபணு செய்யப்பட்ட பசுவை உருவாக்கியுள்ளார்.
 
அந்த பசுவின் பால் தாய்ப்பால் போன்றது. மற்ற பசுகளின் பாலைவிட முற்றிலும் மாறுபட்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுவின் பால் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துக்களை கொண்டது.
 
அதில் தாய்ப்பாலில் இருப்பது போன்று சக்திமிக்க லேக்டால்புமின், லேக்டோ பெரின், லைசோசும் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் நிறைந்தது.
 
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுக்களில் இருந்து பெறப்படும் தாய்ப்பால் இன்னும் 2 ஆண்டுகளில் சீன கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.
 
அதற்கான சோதனை சீனாவில் உள்ள நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்றது. அதில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுவின் பால் தாய்ப்பால் போன்று மிகவும் சத்தானது என நிரூபனமாகியுள்ளது.
 
எனவே சீன அரசின் வேளாண் அமைச்சகம் அனுமதி அளித்த பிறகு இப்பால் விற்பனைக்கு வரும். இத்தக வலை ஆராய்ச்சியாளர் லீ நிங் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்பு
தேர்தல் முடிந்து ரிசல்டை எந்த அளவிற்கு மக்கள் எதிர்பார்கிறார்களோ அதை விட கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லத்தான் அதிக அளவில் குழந்தை குட்டிகளோடு எதிர்பார்க்கின்றனர் குழந்தைகளின் விடுமுறை நாளை.
தகவல்
உலகிலேயே சீனாவில் தான் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அங்கு 60 கோடி பேரிடம் செல்போன் இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜனவரியில் இருந்து மார்ச் வரை உள்ள 3 மாதத்தில் மட்டும் 1 கோடியே 68 லட்சம் பேர் புதிதாக செல்போன் இணைப்பு வைத்து உள்ளனர்.
சீனாவில் ஏற்கனவே “3-ஜி” தொழில்நுட்பம் செல்போன் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் ரசித்த பாடல்  என்ற தலைப்பில் வெங்கட் நாகராஜ் என்பவர் எழுதி வருகிறார்.  அனைத்து பாடல்களும் அவர் ரசித்த பாடல் மமட்டுமல்ல நாமும் ஒவ்வொரு முறையும் மிக ரசிக்கும் பாடலாக இருக்கின்றது...
http://rasithapaadal.blogspot.com/

தத்துவம்

ந‌ம்‌பி‌க்ககுறையு‌மபோதஒ‌வ்வொரம‌னிதனு‌மநெ‌றிய‌ற்கொ‌ள்கையமே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

ஊ‌சி முனை‌யி‌லதவ‌மசெ‌ய்தாலு‌மஉ‌ன்னதுதா‌ன் ‌கி‌ட்டு‌ம்.

Saturday, April 16, 2011

கோடை வெப்பத்தை தகர்க்க நொங்கு சாப்பிடுங்க


முற்றாத பனங்காயை நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான ஒரு பானம்.  நுங்குக்கு என ஒரு நுணுப்பமான பருவம் உள்ளது. இந்தப் பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த திண்ம விதையானது மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும். இந்தப் பருவம் தாண்டி சற்று முற்றி விட்டால் இதன் சுவை குன்றி விடும். 

பெண் பனையின் பாளையிலிருந்து உண்டாகும் இளம் பனங்காய்கள் கொத்தாக குலைகளில் தோன்றும். இவை சில குறித்த மாதங்களிலேயே தோன்றத் தொடங்கும். இக்காய்கள் பொதுவாக மூன்று கண்கள், என அழைக்கப்படும் குழிகளைக் கொண்டிருக்கும். சில இரண்டு கண்களையும் இன்னும் சில ஒரு கண்ணையும் உடையவை.

இவற்றில் ஜெலி போன்ற திரவப்பதார்த்தம் உண்டு. இது நுங்கு அல்லது நொங்கு என்று அழைக்கப்படும். இது சுவைப்பதற்கு ருசியானது. காயை வெட்டி நுங்கை உறிஞ்சிக் குடிப்பார்கள். நுங்கின் மேல்பகுதியில் மூன்று, கோது போன்ற செவியமைப்பையுடைய அமைப்புக்கள் உண்டு. இவை பணிவில் அல்லது பணுவில் என அழைக்கப்படும். நுங்கை குடிப்பதற்கு சிலர் இதனைப் பாவிப்பர். பணிவிலைப் பாவித்து சிலர் கஞ்சி, கூழ் போன்றவற்றையும் குடிப்பது உண்டு.

நுங்கு 10-11% வெல்லத்தையும், 2% புரதத்தையும், கொண்டுள்ளது. காயை நுங்குக்காக வெட்டியபின் சிறிது நேரத்தில் வெட்டிய மேற்பரப்பு மண்ணிறமாக மாறும். இதற்கு காரணம் இதிலுள்ள polyphenols  என்னும் பதார்த்தங்கள் காற்றிலுள்ள ஒக்சிஜனினால் ஒக்சியேற்றப்பட்டு மண்ணிறமான quinone என்னும் பதார்த்தங்களை தோற்றுவிப்பதினால். இவை விருத்தியடைந்து பனம்பழமாகவும் நுங்கு இருந்த பகுதி பனம் விதையாகவும் மாறும்.
நுங்கு சாப்பிட்டபின் மிகுதியாக இருக்கும் பகுதி கோம்பை என அழைக்கப்படும். இதனை சிறு துண்டுகளாக வெட்டி மாடுகளுக்கு உணவாகக் கொடுப்பார்கள்.

நன்கு முற்றி விட்ட பின் இதனை சீக்காய் என்பர். சீக்காய் திரவநிலை குறைந்து இறுக்கமாகக் காணப்படும். இதை உண்பதால் வயிற்றில் உபாதை ஏற்படும் என நம்பப் படுகிறது. சீக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி ஆடு, மாடுகளுக்கு உணவாகவும் கொடுப்பார்கள்.

சிறுவயதில் நொங்கு சாப்பிடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. நொங்கு இரு முறையில் சாப்பிடலாம் நொங்கை தனியாக எடுத்து தோல் நீக்கி சாப்பிடலாம். இரண்டாவது முறை நொங்கின் மேல் பகுதியை மட்டும் சீவி எடுக்கும் போது 2 அல்லது 3 கண்கள் இருக்கும். இந்த கண்களில் பெருவிரலை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நோண்டி திண்கும்சுவை சொல்லி மாளாது அனுபவித்தால் தான் கிடைக்கும். 

நுங்கு வெய்யிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அருமருந்தாகும். 

எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். 

நுங்கின் நீரை வேர்க்குருவிற்குத் தடவ குணம் கிடைக்கும்.

பனை நொங்கு அம்மை நோயின் வேகத்தைக் குறைக்கும்

நுங்கை நாம்  தொழில் முயற்சியில் பயன்படுத்துவது இல்லை. 2 மில்லியன் பனைமரங்களே இருக்கும் தாய்லாந்தில் இருந்து நுங்கு தகரத்தில் அடைக்கப்பட்டு உலகம் எங்கும் ஏற்றுமதியாக அதிக பனைமர வளத்தை கோண்ட இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படாமை கொசுறு செய்தி.

Thursday, April 14, 2011

ரியல் ஹீரோ சகாயம் கடந்து வந்த பாதை...


"ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...' புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.

பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:

* அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.

* காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.

* கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார்.

* அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

* சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.

* தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.

* நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.

* இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'

நன்றி தினமலர்..

அஞ்சறைப்பெட்டி 14.04.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
...............................................................................................

தமிழக மக்கள் இது வரை இல்லாது 76 சதவீத வாக்குகள் அளித்துள்ளனர். மிகவும் மகிழ்ச்சியான செய்தி நேற்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியதில் இருந்து மக்கள் ஆர்வமாக ஓட்டளித்தது சந்தோசமாக இருந்தது. மக்களின் விழிப்புணர்வு நன்றாக தெரிகிறது...

நிறைய புதிய வாக்காளர்கள் ஆர்வமாக ஓட்டளித்தனர். நான் இருக்கும் வார்டில் காலை 11 மணிக்கு வாக்களித்தேன் மாலை எங்கள் வார்டு எத்தனை சதவீதம் என்று கேட்டதும் ஆச்சர்யம் ஆம் 95 சதவீத வாக்குகள் எங்கள் வார்டில் பதிவாகி உள்ளது என்றனர்.  எங்கள் கிராமத்திலேயே 95 சதவீதம் என்றால் தமிழகம் முழுவதும் எவ்வளவு இருக்கும் என்று நண்பர்களுடன் விவாதித்துக்கொண்டு இருக்கும் போது தமிழகம் முழுவதும் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி காதில் விழுந்தது.


...............................................................................................

தமிழக மக்கள் இவ்வளவு ஆர்வமாக ஓட்டளிக்க மிக முக்கிய காரணம் தேர்தல் கமிஷன் என்றால் அது மிகையாகது. தமிழகம் முழுவதும் தேர்தல் நடப்பதற்கான சுவடே இல்லை தலைவர்களின் பிரச்சாரமும், செய்ததித்தாள், தொலைக்காட்சி விளம்பரம் தான் அதிக அளிவில் இருந்தது. இப்படி அமைதியா இருந்தால் யார் ஓட்டளிக்க வருவார்கள் என்று பார்த்தால் 76 சதவீத மக்கள் ஓட்டளித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கிளியை ஏற்படுத்தி உள்ளனர்.

தேர்தலை அற்புதமாக நடத்தி அதிக மக்களை வாக்களிக்க வைத்த தேர்தல் கமிஷனர் பிரவீன் குமாருக்கு ஓர் சல்யூட்...


........................................................................................................

இது வரை வந்த கருத்து கணிப்புகள் எல்லாம் ஓரளவு சரியாக இருந்தன இது அனைத்து தேர்தலிலும் அறிந்தது ஆனால் இத்தேர்தலில் அதிக வாக்குகள் விழுந்துள்ளது கருத்து கணிப்புகள் பொய்யாகி ஏதோ ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போகிறது என்பது என் கணிப்பு... காத்திருப்போம் இன்னும் 30 நாட்கள்...

........................................................................................................

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மசினகுடியில் நேற்று நடந்த தேர்தலின்போது இப்பகுதியில் 3,605 பேர் ஓட்டளித்தனர். இதில், 690 பேர், 49(ஓ) விதிப்படி, "யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை' என்று, பதிவு செய்தனர். ஊட்டி தொகுதிக்குட்பட்ட பொக்காபுரம் பகுதியில் மொத்தம் 681 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று தேர்தலின்போது, 543 ஓட்டுக்கள் பதிவாகின. இதில், 385 பேர், 49(ஓ) விதிப்படி, தங்களது கருத்தை பதிவு செய்தனர்.

49 ஓ பற்றி அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் இன்னும் அதிக ஓட்டுக்கள் 49 ஓ விற்கு விழம் வாய்ப்பு அதிகம் உள்ளது. இது வரை நடந்த தேர்தலில் அதிக அளவில் 49 ஓ விற்கு மக்கள் நீலகிரியில் தான் வாக்களித்துள்ளனர்...

அவர்களின் தைரியமான இம்முடிவிற்கு வாழ்த்துக்கள்...


........................................................................................................

உயிர்காக்கும் ஹெல் மட்டை கண்டிப்பாக அணிய வேண்டும் என்று தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநிலங்களில் சட்டமே உள்ளது. ஆனால் நிறைய பேர் ஹெல்மட் அணிவது இல்லை. போலீசாரும் அதை கண்டு கொள்வது இல்லை. 


உத்தரபிரதேச மாநிலம் பரூக்சாபாத் மாவட்டத்தில் அனைவரையும் ஹெல்மட் அணிய வைக்க அந்த மாவட்ட நிர்வாகம் புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. ஹெல்மட் அணியாமல் இருக்கர வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு பெட்ரோல் கொடுக்கப்படமாட்டாது என்று உத்தரவிடப்பட்டுளளது.

இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்தும்படி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சமீப காலமாக பரூக் காயாத் மாவட்டம் முழுவதும் ஹெல்மட் இல்லாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கொடுக்க மறுக்கிறார்கள்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் இந்த ஒத்துழைப்பால் இந்த புதிய திட்டத்துக்கு வெற்றி கிடைக்க தொடங்கி உள்ளது. பரூக் காயாத் மாவட்டம் முழுவதும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணியும் பழக்கத்துக்கு மாறி உள்ளனர். 

இதை தமிழகத்திலும் அமுல் படுத்தினால் மிக நன்றாக இருக்கும்...
நாட்டு நடப்பு
மக்கள் அனைவரும் ஓட்டுப்போட்டு விட்டு தலைவர்கள் நாங்க தான் வெற்றி பெருவோம் என்று மாறி மாறி பேட்டி அளித்துக்கொண்டு இருக்கின்றனர்... என்ன செய்வது தமிழக மக்கள் இன்னும் ஒரு மாதத்திற்கு இது தான் தலைவிதி கேட்டும், படித்தும் தான் ஆகவேண்டும்...
தகவல்

தற்போது இதய நோய் சர்வ சாதாரணமாகி விட்டது. அந்த நோய் தாக்குமா? என்பதை குழந்தை பருவத்திலேயே கண்டு பிடிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி பெரிய மணிக்கட்டு இருக்கும் குழந்தைகளை அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் இருதய நோய்கள் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என கண்டறிந்துள்ளனர்.

இவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் இருதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.


அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் கோமு என்ற தலைப்பில் கோமதி கோமு என்பவர் எழுதி வருகிறார்.  இவரின் மும்பை டு கோவா என்ற கட்டுரையும் மெஹந்தி பார்ட்டியும் படிக்கத் தூண்டுகிறது...
http://gomathykomu.blogspot.com/

தத்துவம்
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி
அழகான பசி
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்....

Tuesday, April 12, 2011

சரக்கடிக்கும் ஆண்களும் பெண்களும் அறிய வேண்டியவை..


இன்றய உலகில் மது பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . குறிப்பாக சிறுவர்கள் கூட மது பாவனைக்கு  அடிமையாகி  விட்டார்கள்.சோகம், வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் super market க்கு போய் அங்குள்ள அனைத்து ரக குடிவகைகளையும் வீட்டிற்கு கொண்டு வந்து மூச்சு முட்ட குடித்து விட்டு , மிச்சமெல்லாம் அடுத்த நாள் விடியலில் தான்.  


இவர்கள் தமக்கு எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய நோய்களை கண்டு கொள்வ தாக தெரியவில்லை. இங்கு நாம் மதுவால் ஏற்பட கூடிய தீங்குகளை பார்க்கலாம்.


மது பிரியர்கள்

  • சராசரியாக ஒருவர் ஒரு வருடத்திற்கு 152 ounces சாராயம் அருந்துகிறார்
  • அதிகமாக சாராயம் உபயோகிப்போர் உள்ளது Wisconsin என்னும் இடத்தில் 7 .4 %
  • Wisconsin என்னும் இடத்தில் சாராயம் அருந்தி விட்டு மற்றவர்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள் 11 .32 %
  • குறைவாக சாராயம் உபயோகிப்போர் உள்ளது West Virginia , Utah என்னும் இடங்களில்  2 .8 %
  • சாராயம் அருந்தி விட்டு மற்றவர்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள் உள்ளது North Carolina வில்  5 .97 %

வருடத்திற்கு ஒரு நபர் அதிகமாக உபயோகிப்பது ( நாடுகள் )

  • 526 ounces   Luxembourg  
  • 463 ounces   Ireland             
  • 397 ounces   UK                   
  • 386 ounces   France            
  • 349 ounces   Russia            
  • 291 ounces   USA                  
  • 263 ounces   Canada         
  • 256 ounces   Japan             
  • 0 .0 ounces   Iran                  
  • 0 .0 ounces   Saudi Arabia   
ஈரான், சவூதி அரேபியா வில்  மது பாவனை தடை செய்யபட்டு உள்ளது

அதிக இறப்பை சந்தித்துள்ள நாடுகள்

  • 10 -14 %   கிழக்கு ஐரோப்பா, ரஷ்ஸியா
  • 5 -10 %    இந்தோனேசியா, வியட்னாம்
  • 5 -10 %    மத்திய, கிழக்கு அமரிக்கா
  • 2 -5 %      வடக்கு அமரிக்கா
  • 2 -5 %      தெற்கு அமரிக்கா
  • 0 -2 %     மத்திய கிழக்கு
  • 0 -2 %     மேற்கு ஐரோப்பா
  • 0 -2 %     வடக்கு ஆபிரிக்கா

பாடசாலைகளில் மது பாவனை

  • 6 % ஆன மாணவர்கள்  மது பாவனைக்கு அடிமையாக உள்ளார்கள்
  • 25 % ஆன மாணவர்கள் எங்கே இருந்தோம், குடிக்கும் போது என்ன செய்தோம் என்பதை நினைவு படுத்த முடியாது உள்ளார்கள்.
  • 599000 ஆனோர் ஒவ்வொருவருடமும்  போதையில் உள்ள போது காயப் படு கிறார்கள்.
  • 1700 பேர் மரணத்தை தழுவுகிறார்கள்.

ஆபத்துகள்   ( 20 -30 % )

  • Oesophageal cancer
  • Liver Cancer
  • Cirrhosis of the Liver
  • Homicide
  • Epilepsy
  • Motor Vehicle Accident
HippoCampus என்கிற இடம், எங்களுக்கு குடிப்பதை நிறுத்துவதற்கான Self Control ஐ தருகிறது. அதிகமாக மது அருந்துவது Brain Cell உற்பத்தியை HippoCampus எனும் இடத்தில் குறைக்கிறது.


குடும்பத்தில் அண்ணன், தம்பி இரட்டையர்களாக இருந்தால் , ஒருவர் மதுவிற்கு அடிமையானால் மற்றையவரும் அடிமையாவதற்கான சாத்தியம் அதிகம். இருவரும் Twins ஆக இல்லாத விடத்து இது குறைவாக உள்ளது.

நோய்களில் ஏற்பட கூடிய அதிகரிப்பு

  •  70%    Throat Cancer             
  •  80%    Colon Cancer          
  •  50%    Lung Cancer             
  • 100%    High Blood Pressure

கர்ப்பிணி தாய்மார்கள் மது அருந்துவது ( Ratio )
National : Native American =  1 : 3

கர்ப்பிணி தாய்மார்கள் இறப்பது ( Ratio )
National : Native American  =  1 : 6
  

நல்ல செய்தி

  1. 35 %   ஆன இருதய நோயை குறைக்கிறது
  2. 85 %   ஆன குளிரில் இருந்து எம்மை பாதுகாக்கிறது
  3. 25%    ஆன இறப்பை  குறைக்கிறது 




நன்றி இப்பதிவை என் மெயிலுக்கு அனுப்பிய நண்பனுக்கு...

Thursday, April 7, 2011

அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன்லோக்பால் மசோதா


லோக்பால் என்றால் என்ன? அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பு தான் லோக்பால். பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற பொது கருத்து நிலவுகிறது. லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான் லோக்பால் சட்டம்.

இப்போதுள்ள ஊழல் குறித்த சட்டங்கள் எவை? இந்திய தண்டனை சட்டம், 1860 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம், 1988 ஆகியவை, அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவற்றின் படி நடவடிக்கை எடுக்க, போலீசோ, வேறு புலனாய்வு துறையோ, மாநில, மத்திய அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அரசில் நிர்வாக துறையை பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே, ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.

லோக்பால் அமைப்பினால் என்ன லாபம்? இது முறையாக நிறுவப்பட்டால், அரசின் சட்டத்துறை மற்றும் நிர்வாகத் துறையின் கலவையாக இருக்கும். புகார்களை பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையை போன்றும், தண்டனை கொடுப்பதில் நீதித் துறையை போன்றும் செயல்படும். மக்களின் பிரச்னை, அலைக்கழிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் தீர்க்கப்படும்.

இதே போல் இந்தியாவில் வேறு அரசு நிறுவனம் உள்ளதா? ஆந்திரா, அசாம், பீகார், சத்திஸ்கர், டில்லி, குஜராத், ஜார்க்கண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இவை, மாநில அளவில் லோக்பாலின் வேலைகளை, குறுகிய அளவில், அதிகாரமற்ற நிலையில் செய்து வருகின்றன. இவற்றில் பிரபலமானது, கர்நாடகாவில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் இயங்கும் லோக் ஆயுக்தா. இது கர்நாடகாவில் அரசியல் பலம் படைத்த பெல்லாரி சகோதரர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும்? கடந்த 1968 முதல், லோக்சபாவில் எட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு, தகுந்த காலவரைக்குள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தற்போது நிலவும் தொடர் ஊழல் சூழலில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஊழலை தடுக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் லோக்பால் மசோதாவின் வடிவம் மற்றும் அதை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டது. லோக்பால் மசோதாவின் வடிவம் குறித்து போராடி வரும் அன்னா ஹசாரே உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டால், இந்த ஆண்டே லோக்சபாவில் நிறைவேற வாய்ப்பு உள்ளது.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ஏன்? தற்போது அரசுக்கு பரிசீலிக்கப்பட்ட லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது. அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு, பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும். இதுவரை வெவ்வேறு அரசு ஆணையங்கள் லோக்பால் குறித்து செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்துக்கு வலிமையூட்டும் வகையில், அன்னா ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர் குழு, மாதிரி மசோதா தயார் செய்திருந்தது. அந்த மாதிரி மசோதாவின் அடிப்படையில் புதிய லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரி, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கின்றார்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள லோக்பால் மசோதாவில் உள்ள குறைகள்

* நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மீது மட்டுமே லஞ்சம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தும் உரிமை கொண்டது.

* லஞ்சம் தொடர்பான விசாரணையை துவங்கவோ, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார்களை பெறவோ அதிகாரம் கொடுக்கப்படாது. புகார்களைப் பெறுவதற்கென நியமிக்கப்படும், எம்.பி.,க்கள் மூலமே, அவை பெறப்படலாம்.

* புகாரில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; அமைச்சர்கள் மீதான புகார் குறித்து பிரதமரிடமோ, பிரதமர், அமைச்சர்கள் மீதான புகார் குறித்து, புகார்களை பெற நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.,க்களிடமோ சிபாரிசு மட்டுமே செய்ய முடியும்.

* காவல் துறைக்கான அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு கொடுக்கப்படாது. எனவே, எந்த புகார் மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது.

* லோக்பால் அமைப்பில் தவறான புகார் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.

* இந்த அமைப்பை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும்.

* இவர்கள் மூவரும் இணைந்து, லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர். உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக, குறிப்பாக ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பர்.

* நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு தொடர்பாக, பிரதமருக்கு எதிராக புகார் வந்தால், அது குறித்து விசாரிக்க பரிந்துரை செய்ய, இந்த அமைப்புக்கு அதிகாரம் கிடையாது.

* புகாரின் அடிப்படையில் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும். ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை.

* லஞ்ச அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், தவறான வழிகளில் ஈட்டிய சொத்துக்களை அனுபவிப்பதற்கு, இந்த அமைப்பின் மூலம் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன் லோக்பால் மாதிரி மசோதா விவரம்

* அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் மீதும் லஞ்சம் தொடர்பான நீதி விசாரணை நடத்த லோக்பால் கட்டுப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் மத்திய அரசின் அனைத்து கண்காணிப்பு அமைப்புகளும், லோக்பால் அமைப்பிற்குள் கொண்டு வரப்படும்.

* பொது மக்களிடமிருந்து, புகார்களை நேரடியாகப் பெற்று, நடவடிக்கை எடுக்கலாம். யாரிடமும் சரிபார்க்க வேண்டிய அவசியமோ, அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

* புலனாய்வு முடிந்ததும், வழக்கு தொடரலாம்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் அல்லது இரண்டையும் மேற்கொள்ளலாம்.

* லோக்பால் அமைப்புடன் சி.பி.ஐ., இணைக்கப்பட்டு விட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்தல், வழக்கு தொடர்தல் ஆகியவை மேற்கொள்ள முடியும்.

* லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்களில் 4 பேருக்கு மட்டுமே முன் அனுபவம் இல்லாத வக்கீல்களாக இருக்கலாம்.

* தேர்வு கமிட்டியில் சட்டம் தொடர்பான பின்னணி உடையவர்கள், தலைமை தேர்தல் கமிஷனர், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைவர், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள், லோக்பால் அமைப்பில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.

* லோக்பால் அமைப்பின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த எந்த தடையும் இருக்க கூடாது.

* ஓராண்டிற்குள் புலனாய்வை முடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும்.

* ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் தொடர்புடைய அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசு இழப்பைச் சரிகட்ட வேண்டும்.

நன்றி தினமலர்...

அஞ்சறைப்பெட்டி 07.04.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
தேர்தல் கமிஷனின் அதிரடி உத்தரவு பட்டையை கிளப்புகிறது கடந்த திங்கள் மாலை ஊரில் இருந்து கோவை காரில் திரும்பிக்கொண்டு இருக்கும் போது நாங்கள் வந்த வாகனம் கிட்டத்தட்ட 6 இடங்கிளில் சோதனைக்கு உள்ளானது.

அனைத்து இடத்திலும் ஒரு உதவி ஆய்வாளர் 5 படையினர் ஒரு கேமரா மேன் சகிதமாக காரில் இருக்கும்  பொருட்களை செக் செய்து அனுப்புகின்றனர். நிறைவாக இருந்தது அவர்கள் சோதனை.

தேர்தல் நேரத்தில் இவ்வளவு கோடிகள் கணக்கில் வராமல் சிக்குகிறது என்றால் மற்ற நேரங்களில் சோதனை செய்தால் எவ்வளவு பணம் சிக்குமோ????

...............................................................................................
 
மீண்டும் கிரிக்கெட் திருவிழா இந்த திருவிழா கிரிக்கெட் வாரியம் பணம் சம்பாரிப்பதற்காக நடத்தும் திருவிழா. உலக போப்பைக்கு கொடுத்த வரவேற்பை இதற்கும் கொடுத்து கிரிக்கெட் வாரியத்தை பணத்தால் வாழவைப்போம்.

...............................................................................................

திருச்சி ஆம்னி பஸ்ஸில் அநாதையாக கிடைத்த 5 கோடி இது தான் ஊரெல்லாம் பேச்சு எப்படி வந்தது 5 கோடி அதை எப்படி கண்டு பிடிச்சாங்க இதை யோசித்தாலே தலை சுற்றுகிறது..

........................................................................................................

வாக்குச் சாவடிகளில் நாம் செல்வதற்கு முன்பே வேறு யாரும் சென்று கள்ள ஓட்டு போட்டு விட்டால் வாக்காளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

தேர்தல் அதிகாரியிடம் அடையாள அட்டையை காட்டி வாக்காளர்கள் தங்கள் வாக்கு உரிமையை பதிவு செய்யலாம். இதற்காக வாக்குச் சாவடிகளில் ஓட்டுச் சீட்டும் வைக்கப்பட்டு இருக்கும்.

நல்ல விசயம் தேர்தல் முடிந்ததும் எத்தனை கள்ள ஓட்டுக்கள் விழந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க உதவும்.

........................................................................................................

தேர்தல் பிரச்சாரம் களை கட்டுவது நடிகர், நடிகைகளால் தான் இவர்கள் அவர்களை திட்டுகிறார்கள் அவர்கள் இவர்களை திட்டுகிறார்கள் மொத்தத்தில் கூட்டம் கூடி களை கட்டுகிறது பிரச்சாரம்....

நாட்டு நடப்பு
எந்த இடத்தில் பார்த்தாலும் தேர்தல் பிரச்சாரம் களை கட்டுகிறது அந்த அளவிற்கு தேர்தல் கமிஷனின் உத்தரவும், கெடுபிடியும் வேட்பாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையாகது.

தகவல்

நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். அதை விடுத்து அதிக நேரம் வேலையிலேயே செலவு செய்தால் தேவையற்ற உடல் நலக் கோளாறு ஏற்படும் குறிப்பாக 11 மணி நேரம் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த தகவலை லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர் கள் அங்குள்ள ஒயிட்ஹால் அலுவலகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக 7 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.   இந்த கால கட்டத்தில் அவர்கள் வேலை பார்த்த நேரத்தை கணக்கிட்டனர்.

மேலும் இருதயம் மற்றும் உடல் நலம் குறித்த மருத்துவ அறிக்கையை ஆராய்ந்தனர். அவர்களில் 192 பேர் மாரடைப்பு நோயாளிகளாக இருந்தனர். அவர்கள் நாள் ஒன்றுக்கு 11 மணி நேரத்துக்கு மேலாக பணிபுரிந்தவர்கள் இவர்கள் ஒயிட்ஹால் அலுவலகத்தில் மட்டுமின்றி வெளியிலும் கூடுதலாக வேறு வேலைகள் செய்து வந்தனர்.

எனவே 11 மணி நேரத்துக்கு அதிகமாக வேலை பார்த்தால் மாரடைப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் என் செய்வேன் என்ற தலைப்பில் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார். அனைத்தும் அனைவரும் அறிய வேண்டிய விசயங்கள்..
http://www.tamiltel.in/

தத்துவம்

வெற்றிபெற காது கொடுத்து கேளுங்கள்; குறைவாக பேசுங்கள்; நிறைய நேரம் செயல்படுங்கள்.

தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது
.

Monday, April 4, 2011

கும்..கும்..கும்..கும்தலக்கா...


இன்று ஒவ்வொரு இந்தியனும் காலரை தூக்கிக்கொண்டு சந்தோசமாக பேசும் செய்தி நம்மாளுக ஜெயிச்சிட்டாங்க.. நிச்சயம் சந்தோசப்பட வேண்டிய விசயம் தோனியின் பாய்ஸ் ஒவ்வொரு அன்று சிறப்பான பந்து வீச்சையும், சிறப்பா தடுப்புயையும் ஏற்படுத்தி இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கினர்.

நாம் விளையாடும் போதும் ஒவ்வொரு பந்தும் டென்சன் டென்சன் இறுதியில் தேடித்தந்த வெற்றி இந்தியாவிற்கே ஆணந்தக்கண்ணீர்...

இப்போட்டியை காண வந்த ராசபக்சேவை சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது  கடுப்பை ஏற்றினாலும், தோற்கடித்தது சந்தோசத்தைக் கொடுத்தது.

••••••••••••••••••••••••••••••••••


தமிழகத்தில் உச்சகட்ட தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டு இருக்கிறது வழக்காமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஜெவைத் தாக்கும் திமுகவினர் இம்முறை ஜெ வை விட விஜயகாந்தைத்தான் அதிகம் தாக்குகின்றனர். 

அவரிடம் ஓட்டு வங்கி இருக்குது என்பதை அறிந்துதான் அவரை தாக்குகின்றனர். பார்க்கலாம் இவர்கள் தாக்கும் தாக்கு அவர் ஓட்டு வங்கியை சிதறடிக்குமா என்று...

விஜயகாந்த் குடிகாரன் குடித்து விட்டு பேசுகிறான் என்று கூறும் ஆட்சியாளர்கள் அவர்கள் தான் அந்தக்கடையை நடத்துகின்றனர் என்பதை மறந்து விட்டு பேசுகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மார்க்கை மூடிவோம் தமிழ்நாட்டில் விஜயகாந்த் மட்டுமல்ல யாரும் குடிக்க கடை இருக்காது டாஸ்மார்க்கை இழுத்து மூடுவோம் என்று மார்தட்ட முடியுமா???

••••••••••••••••••••••••••••••••••  

இத்தேர்தலில் இரு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை கதாநாயகன், கதாநாயகி என்று வர்ணித்தாலும் உண்மையில் இத்தேர்தலில் கதாநாயகன் தேர்தல் கமிஷன் தான். அனைவருக்கும் கிடுக்குப்பிடி போட்டு இப்படியும் தேர்தலை நடத்த முடியும் என்று அற்புதமாக அவர்கள் பணியை செய்கின்றனர்.

கிராமப்புற மக்கள் கூட என்னப்ப தேர்தல் என்று சொல்றீங்க ரேடியோ சத்ததத்தை காணமே என்று சொல்லம் அளவிற்கு இவர்கள் நடவடிக்கை மக்களிடம் ரீச் ஆகிஉள்ளது.

••••••••••••••••••••••••••••••••••••


வெய்யிலின் தாக்கம் அதிகரித்துள்ளது எத்தனை வெய்யில் அடிச்சாலும் நம் வேட்பாளர்கள் தங்கள் தொகுதியை வியர்க்க விறு விறுக்க ஓட்டு சேகரிக்கின்றனர். ( ஒரு வேளை இந்த 10 நாளைக்கு கஷ்டப்பட்டால் போதும் அப்புறம் 5 வருசத்திற்கு இந்த பக்கம் வரவேண்டியதில்லை என்று கஷ்டப்படுகிறார்களோ )

நேற்று நான் ஒரு டீக்கடை கூட இல்லாத கிராமத்தில் வேட்பாளர் வாக்கு சேகரித்து விட்டு அந்த ஊரில் உள்ள வேப்பமரத்தடியில் வெய்யிலின் உக்கரம் தாக்குதலில் ஒரு 10 நிமிடம் இளப்பாரினர். வேட்பாளரை பார்த்த போது மனுசன் வியர்வையால் நனைந்திருந்தார். (வெற்றி பெற்று விட்டால் ஏசி காரில் தான் இருப்பார்)

•••••••••••••••••••••••••••••••••••

இப்ப திமுகவின் முக்கிய பிரச்சார பீரங்கி வடிவேலு தான் மனுசன் கல கலன்னு கலக்குகிறார். (ரொம்ப பேசி ஓட்டை கலைச்சிறப்போறார்)

••••••••••••••••••••••••••••••••••

கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் பிரபல பத்திரிக்கைகள் எல்லாம் தங்கள் விற்பனையை அதிகரித்துக்கொள்கின்றன கருத்துக்கணிப்புகள் நிஜமாவதில்லை ஆனால் மக்கள் கணிப்பு நிச்சயம் நிஜமாகும் மே 13 வரை காத்திருப்போம் மக்கள் கணிப்புக்கு...