Wednesday, August 24, 2011

அஞ்சறைப்பெட்டி 25-08-2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........


அன்னா ஹசாரே இந்தப் பேரக் கேட்டாலே காங்கிரஸ் தலைவர்களுக்கு தலை சுத்துது..

எளிமையான இம்மனிதரின் உண்ணாவிரதத்துக்கு உலகமெங்கும் வாழ்த்துக்கள் குவிகின்றன. கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று அன்னா ஹசாரே தலைமையில் நடக்கின்றது என்றால் அது மிகையாகது. காங்கிரஸ் அரசுக்கு தற்போது நேரம் சரியில்லை போலும் பாராளுமன்றத்தை கூட்டினாலே எதாவது ஒரு பிரச்சனை பின்னி பெடலெடுக்குது.
...............................................................................................

அம்மாவின் 100 நாள் ஆட்சி அனைத்து தரப்பினரும் பாராட்டி தள்ளுகின்றனர். அம்மாவின் 100 நாள் ஆட்சியில் தீட்டிய திட்டங்களை செயல் படுத்த முனைவதும், மின்சார பிரச்சனையை ஓரளவு தீர்த்ததும் மிக முக்கயமானதாகும். 100 நாள் ஆட்சியில் இதுவரை எந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது சிறப்பு அம்சம்...

சமச்சீர் கல்வியில் அம்மாவுக்கு பின்னடைவு என்கிறார்கள் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது சமச்சீர்கல்விக்கு அதிமுக எதிரி அல்ல சமச்சீர் கல்விக்காக முந்தைய அரசால் கொண்டு வரப்பட்ட பாடங்கள் சரியில்லை அதை மாற்றி தருகிறோம் என்று தான் சொன்னார்கள் இதை யாரும் ஏற்கவில்லை இந்த அரைவேக்காடு பாடங்கள் இன்று சரியில்லை என்று கூறி என்ன பிரயோசனம்.


...............................................................................................
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆரவளிக்க இளைய தளபதி டெல்லி பயணமாம்.... இளைய தளபதி நீங்க எங்க வேண்டும் என்றாலும்ட ஆதரவு கொடுங்க தப்பில்லை...

முதலில் தமிழ்நாட்டு மக்கள் உங்க திரைப்படத்துக்கு ஆதரவு தருகிறார்களா என்று பாருங்கள்....



........................................................................................................
அனைத்து கட்சி கூட்டத்தில் லோக்பால் சட்ட மசோதா விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

அனைத்து கட்சி கூட்டம் என்று சொல்லிவிட்டு காங்கிரஸ் சொல்றத எல்லாரும் கேளுங்க என்றால் எப்படிப்பா உடன்பாடு ஏற்படும்...

........................................................................................................
ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் மரியாடெல் ரொசாரியோ 85 வயதான இவர் கோடீசுவரி ஆவார். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருக்கு பல அரண்மனைகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் என பலவகைப்பட்ட சொத்துகள் உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி.  இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் மற்றும் பேரக் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் இவர் திருமணம் செய்ய முடிவு செய்தார்.  
இதை தொடர்ந்து கடந்த மாதம் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார். அப்போது தன்னை விட 24 வயது இளையவரான 61 வயது கிழவரை திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். அவரது பெயர் அல்போன்சோ டயஷ். அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர்களது திருமணம் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.   கோடீசுவரி மரியாடெல் ரொசாரியோவுக்கு இது 3-வது திருமணமாகும். ஏற்கனவே இவர் 2 ஆண்களை திருமணம் செய்துள்ளார். அவர்கள் இருவரும் மரணம் அடைந்து விட்ட நிலையில் 3-வதாக அல்போன்சோ டயசை திருமணம் செய்ய உள்ளார்.

இதுக்கு பேரும் காதல் தானா?????


........................................................................................................

சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த ஒரு விவாகரத்து வழக்கில் நீதிபதி கூறியது

 சாதாரண சண்டைகளுக்கு எல்லாம் விவாகரத்து வழங்க முடியாது. மனுவில் ஈகோ தான் அதிகமாக வெளிப்படுகிறது. அற்ப கரணங்களுக்காக தம்பதிகள் யாரும் விவாகரத்து கோரி ஐகோர்ட்டுகளை நாடக் கூடாது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி இருவரும் ஈகோ வை கைவிட்டு தூக்கி எரிந்து விட்டு, மனம் ஒத்து சேர்ந்து வாழுங்கள்.

நிச்சயமான உண்மை இன்று விவாகரத்திற்கு முக்கிய காரணமே ஈகோதான்., தம்பதிகள் மனம் விட்டு பேசினால் எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு நிச்சயம் உண்டு.

குழந்தைகள் நலன் கருதியாவது மனம் விட்டு பேசுங்கள்.


........................................................................................................

வல்வெட்டி துறையில் பிரபாகரன் வீடு சிங்கள் ராணுவத்தால் இடிக்கப்பட்டுள்ளது. அடேய் சிங்கள இன வெறி பிடிச்சவன்களே உங்களால் பிரபாகரன் வீட்டைத்தான் இடிக்க முடியும்.. 7 கோடி தமிழ் நெஞ்சங்களில் பிரபாகரன் இருக்கிறார். 
உங்களால் என்றுமே பிரபாகரனை அழிக்க முடியாது....
........................................................................................................

 இன்று காலை திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேரு கைது இன்னும் எத்தனை பேர் உள்ள போகப்பபோறங்களோ?

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரின் மேலும் பொய் வழக்கு பொய் வழக்கு என்று கூறுகிறார் ஏன் இக்கைதை எதிர்த்து ஐகோர்ட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் செல்லவில்லை?

மடியில் கனம் இல்லையேல் பயம் எதற்கு....
........................................................................................................
 
 சித்திரை திருநாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்த அம்மாவிற்கு நன்றி.
 

தகவல்


ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பாரா மாகாணத்தின் கடைகோடி பகுதியில் “ஸ்டெரெலி” ஏரி உள்ளது. அங்கு சுமார் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுக்கு முந்தைய புதை படிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.
வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தனர்.   அப்போது அதில் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்த நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருந்தன.
ஆனால் புதை படிவத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாக்டீரியாக்கள் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவை. அப்போது பூமியில் உயிர் வாழ்வதற்கான ஆக்சிஜன் இல்லை. கடல் நீரால் மட்டுமே பூமி சூழப்பட்டு இருந்தது. கடும் வெப்பமாகவும் இருந்தது. உயிர் வாழக்கூடிய தட்ப வெப்ப சூழ்நிலை இல்லை.
எனவே உயிரினம் செவ்வாய் கிரகத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புதை படிவம் கண்டெடுக்கப்பட்ட பில்பாரா பகுதி செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த வண்டல் மண் சார்ந்த பாறைகளாக இருக்கலாம். அவை மண்ணில் புதையுண்டு படிவங்களாக மாறியிருக்கிறது என்றும் கருதப்படுகிறது.


அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் தனலட்சுமி Make Everybody smile என்ற பெயரில் வலைப்பூ எழுதிவருகிறார்.. இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது... நீங்களும் ரசியுங்கள் இவரின் வரிகளை....

http://www.smile.charmhost.com/

 

தத்துவம்


அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் நமக்கு வேண்டும்

கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்

Tuesday, August 23, 2011

இந்து தர்ம சாஸ்திரம் !! நம்பிக்கையா? மூடநம்பிக்கையா?


சமீபத்தில் ஒரு இதழில் படித்தேன் இந்து தர்ம சாஸ்திரம் சில அறிவுரைகள் கூறிஉள்ளது ஒருவன் எப்படி இருக்க வேண்டும் எப்போது எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என இந்து தர்ம சாஸ்திரம் கூறுகிறது. இதைப்படிக்கும் போது சிறுவயதில் வீட்டில் உள்ள பெரியவர்கள் வடக்கில் தலை வைத்து  படுக்கக்கூடாது மேற்கில் தலைவைத்து தான் படுக்க வேண்டும் என என் வீட்டில் எனக்கு கூறியது ஞாபகம் வந்தது. இதில் கூறப்பட்டுள்ள நிறைய அறிவுரைகள் நம் வீட்டு பெரியவர்கள் நமக்கு கூறி இருக்க வாய்ப்பிருக்கிறது.

* இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

* ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

* சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

* அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

* பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

* குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

* கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

* நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

* கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

* எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

* திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

* சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

* சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

* கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

* இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

*சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

*சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

* மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

* குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

* தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

* இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

* தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

* வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

* மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

* பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

* ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

* வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

* ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

* தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

* பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

* பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

* அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

* ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

* பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

* பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

* பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

* பசு மாட்டை, "கோமாதா'வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

* தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

* பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

* தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

* அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

* வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

* நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

இதில் உள்ள அறிவுரைகள் இக்காலத்திலும் பின்பற்ற முடியுமா என்பது சந்தேகம் தான். இதில் பல, மூட நம்பிக்கையாகவும் தெரிகிறது!  இதை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக பதிவிடுகிறேன்இந்த அறிவுரைகளை பின்பற்றுவது என்னைப் பொருத்தவரை இப்போது இருக்கும் வேகமான காலகட்டத்திற்கு முடியாது...

Monday, August 22, 2011

பாழாகும் விளைநிலங்கள்!

 
சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், உணவு உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்திருப்பதைப் பெருமையுடன் குறிப்பிட்டார். உண்மைதான். கடந்த இரு ஆண்டுகளாக உணவு உற்பத்தி நன்றாகவே இருக்கிறது. உணவுப் பொருள் கையிருப்பும்கூட வழக்கத்தைவிட அதிகமாகவே உள்ளது.  

உணவு மற்றும் விநியோக அமைச்சகத்தின் அறிக்கையில் அரிசி கையிருப்பு 268 லட்சம் டன், கோதுமை கையிருப்பு 371 லட்சம் டன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 639 லட்சம் டன். இந்த அளவு வழக்கமான கையிருப்பாகிய 319 லட்சம் டன் உணவு தானியத்தைப்போல இரு மடங்கு! உணவுப் பொருள்கள் தற்போது கையிருப்பில் உள்ளதென்பது பிரதமருக்கு மட்டுமல்ல, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்திதான்.  

இருப்பினும், இந்த வேளையில் நிகழ் நிதியாண்டில் இதுநாள் வரை உர நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உர மானியத்தின் அளவைப் பார்க்கும்போது மலைப்பாக இருப்பதோடு, கவலை தருவதாகவும் இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.   இந்த உர மானியம் நேரடியாக உர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்போது, இதனால் நிறுவனங்கள் அடையும் லாபம் அதிகமாகவும், விவசாயி பெறும் நன்மை குறைவாகவும் உள்ளது என்பது முதல் காரணம்.  

மானிய விலையில் கிடைக்கும் யூரியா உரத்தை மிக அதிகமாகப் போட்டு இந்திய விவசாயிகள் தங்கள் நிலத்தைப் பாழாக்கி விட்டார்கள். இந்த நிலைமை மாற்றப்படாவிட்டால், இதே உற்பத்தி நீடிக்குமா என்பது சந்தேகம்தான் என்று வேளாண் வல்லுநர்கள் தரும் தகவல்கள் இரண்டாவது காரணம்.  

யூரியா, பொட்டாசியம், பாஸ்பேட் என அடிப்படை உரங்களுக்காக இந்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியம் 2009-10-ம் ஆண்டில் ரூ. 64,032 கோடி, 2010-11-ம் ஆண்டில் ரூ. 65,836 கோடி என்று உர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உரங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டாலும், இவை விநியோகத்துக்கு வந்து, விவசாயிகளைச் சென்றடையும்போது, அரசு நிர்ணயிக்கும் விலையைவிட அதிகவிலை கொடுத்து வாங்கும் நிலைதான் இன்றளவும் உள்ளது. இதற்காக எத்தனை புகார்கள், போராட்டங்கள் நடைபெற்றாலும் விவசாயி அதிக விலை கொடுப்பதும், உரங்கள் பதுக்கப்படுவதும் தொடர்கதையாகவே இருக்கிறது.   இந்த உர நிறுவனங்கள் தரமான உரங்களைத் தயாரிப்பதில்லை என்கிற புகார்கள் ஒருபுறம், இவை தொழில்நுட்பத்தைப் புதுப்பிக்காமல் பழைய நிலையிலேயே உரங்களைத் தயாரித்து, சுற்றுச்சூழல் மாசுக்குக் காரணமாகின்றன என்பது இன்னொருபுறம். ஆனால், அதுபற்றி அரசு எந்தக் கவலையும் கொள்வதில்லை.  

ரசாயனத் துறை மற்றும் உரங்கள் அமைச்சகம் தரும் புள்ளிவிவரத்தின்படி, சந்தை மதிப்பில் யூரியாவின் அதிகபட்ச விலையான ரூ.5,310 (ஒரு டன்) என்பதில் விவசாயிக்கு 27 முதல் 58 விழுக்காடு வரை பயன் கிடைக்கும் வகையில் மானியம் அளிக்கப்படுகிறது என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த அதிகபட்ச விற்பனை விலை என்பதை யார் தீர்மானிக்கிறார்கள், எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்பது அரசுக்கே வெளிச்சம்.  

இந்திய விவசாயிகளுக்கு உரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உர ஆலைகளுக்கே நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவரச் சொல்லப்பட்ட காரணம், இந்தியா முழுவதும் சிதறியுள்ள விவசாயிகளுக்குத் தனித்தனியாக மானியம் நேரடியாகக் கிடைக்கச் செய்வது இயலாது என்பதுடன், அது ஊழலில் போய் முடியும் என்பதுதான். அதனால்தான் உர நிறுவனங்களுக்கே நேரடியாக மானியத்தை அளிக்க முடிவு செய்தது அரசு.  

உரத்தின் அதிகபட்ச விலையைத் தீர்மானிக்கும்போது, அந்த நிறுவனத்தின் முதலீட்டுக்கு, வரிக் கழிவுகள் நீங்கலாக, 12 விழுக்காடு லாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த அடிப்படையில்தான் உர நிறுவனங்களால் இந்த விலைகள் தீர்மானிக்கப்படுகின்றனவா என்பது பரம ரகசியம். அது பற்றிய கேள்விகள் எழாமல் இருப்பதற்காகவோ என்னவோ, உர நிறுவனங்கள் தங்களுக்கு 3 விழுக்காடு லாபம்தான் கிடைக்கிறது என்று தங்களுக்கான ஆதரவுக் குரலைத் திரட்டிக் கொண்டிருக்கின்றன, மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.  

விவசாயியின் நன்மைக்காகவும், உணவு உற்பத்தியை உறுதி செய்வதற்காகவும் உரத்துக்கு அரசு அளிக்கும் மானியத்தை, உர நிறுவனங்கள் அதிகமாகவே பெற்று நன்றாக இருக்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை.

இந்த உரத்தை, குறிப்பாக யூரியா உரத்தை, சலுகை விலையைவிடக் கூடுதலான விலைக்கு வாங்கி நிலத்துக்குப் போட்டு, தானும் பாழாகி, நிலத்தையும் பாழாக்கிக்கொண்டு வருகிறார்கள் நமது விவசாயிகள் என்பதும் கசப்பான உண்மை. இதுபற்றி எந்தவிதமான விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்தவில்லை என்பது அதைவிடக் கொடுமையான உண்மை.   இந்திய விளைநிலங்களில் யூரியாவின் பயன்பாடு மிக அதிகமாக இருப்பதால், நமது விளைநிலங்களின் உற்பத்தித் திறன் குறைந்துள்ளது என்கின்றன ஆய்வுகள். இந்தியாவில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 3.4 டன் நெல் உற்பத்தியாகிறது என்றால், சீனாவில் இதே ஒரு ஹெக்டேர் நிலத்தில் 6.5 டன் நெல் உற்பத்தியாகிறது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்திய விவசாயிகள் உரத்தை அதிகமாகப் போட்டதுதான் என்கிறார்கள்.  

இந்த உர மானியத்தை உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்குக் கொடுப்பதைப் படிப்படியாகக் குறைக்கும் அதே நேரத்தில், பாரம்பரிய வேளாண்மைக்கு இந்த மானியத்தை கொண்டுபோய்ச் சேர்த்து ஊக்கப்படுத்தவும் பாரம்பரிய வேளாண்மையை மீட்டெடுக்கும் விழிப்புணர்வை இந்தியா முழுவதும் ஏற்படுத்தவும் தேவையான முயற்சிகளை அரசும், ஊடகங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முடுக்கி விட்டால், விளைநிலங்கள் முற்றிலும் பாழாகிவிடும் முன்பாக மீட்டு விடலாம். விவசாயியும் மீட்கப்படுவார். விவசாயி வாழ்ந்தால் மட்டும்தான் நாடு வாழும்!  

நன்றி தினமணி..

Thursday, August 18, 2011

அந்தியூர் குதிரை சந்தை படங்கள் 2

அவிநாசியில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரை இரண்டரை இலட்சம்

இந்த குதிரை 3ம் கிராஸ்க்காக கொண்டு வரப்பட்டதாம் 
ஒரு கிராஸ்க்கு 5 ஆயிரம்
65 ஆயிரம்


ஒரு லட்சத்து 50 ஆயிரம்
இது குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரை 2 இலட்சம், சாரட் வண்டிக்கு பழக்கப்டுத்தப்பட்ட குதிரையாம்..


இக்குதிரை தான் இந்த முறை அனைவரும் பார்த்த குதிரை சூர்யாவுடன் நடித்த குதிரையாம் இதன் விலை 5 இலட்சம், இதனுடன் கிராஸ்க்கு அனுப்பினால் 10000

3 இலட்சம்

இக்குதிரை ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்தது 1 லட்சமாம் இதன் மேல் அமர்ந்து புகைப்படம் எடுக்க அனுமதித்தார்கள் என் மகன் குதிரையில் உட்கார்ந்ததும் அழ ஆரம்பித்துவிட்டான்..


திருவிழாவில் சந்தைக்கு அடுத்த படியாக ராட்டினங்கள் தான் அனைவரது விருப்பம்.



சின்ன இராட்டினத்தில் என் மகன்

 
திருவிழாவில் சந்தையை காண அலைமோதியக் கூட்டம்

திருவிழாவை காண வந்திருந்த புதிய தலைமுறை உதவி ஆசிரியர் நண்பர் கல்யாண்ஜி உடன் நான்...

இந்த வருடம் திருவிழா முடிந்தது இனி அடுத்த வருடம் தான்... அடுத்த வருடம் இன்னும் பல புகைப்படங்களுடன் சந்திப்போம்...

இச்சந்தை படங்களின் முதல் பகுதியை காண


அந்தியூர் குதிரை சந்தை வரலாறும் படங்களும் 1

இக்குதிரை சந்தை பதிவிற்கு நன்கு வரவேற்பளித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி...

Wednesday, August 17, 2011

அஞ்சறைப்பெட்டி 18-08-2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........


இன்று இந்தியா மட்டுமல்ல உலகயையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் அன்னா ஹசாரே. ஊழலுக்கு எதிராக போராடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இன்று இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பேசப்படும் ஒருவர் இவர்தான்.

இவரின் முயற்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...


...............................................................................................

அன்னா ஹசாரேவை தேவை இல்லாமல் காங்கிரஸ் அரசு கைது செய்து இப்ப ஏன்டா கைது செய்தோம் என்று கையை பிசைகிறது. ஊர்ல தேவை இல்லாமல் உண்ணாவிரதம் இருப்பவர்களை எல்லாம் ஒன்றும் செய்வதில்லை ஒரு நல்ல விசயத்திற்கு உண்ணாவிரதம் இருப்பவரை ஏன் கைது செய்வானேன் செய்த பின் ஏன் பின்வாங்க வேண்டும். காங்கிரஸ் அரசு ஆப்பை தேடி சென்று கொண்டு இருக்கின்றது..


...............................................................................................

செலவே இல்லாமல் அம்மா 12 பாலங்களை திறந்து விட்டதாக ஏளனம் செய்கின்றனர் சிலர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது பாலம் கட்ட செலவு செய்வது அய்யாவுமல்ல, அம்மாவும் அல்ல அனைத்தும் நம் பொதுமக்கள் பணம். பொதுமக்கள் பணத்தில் கட்டிய பாலத்தை முதல்வராக இருப்பவர் திறக்கிறார். எதிர்கட்சி கூட ஆகமுடியாமல் இருப்பவர்கள் 5 வருடத்திற்கு வேடிக்கை பாருங்க...


இதுவே கடந்த ஆட்சியில் பாலம் திறந்திருந்தால் இதற்கு பல கூட்டமும், பல பாராட்டு விழாவும் நடந்திருக்கும்...


........................................................................................................

நில அபகரிப்பு வழக்குகள் எல்லாம் இன்னும் முடிந்தபாடில்லை தினமும் ஒரு வழக்கு முன்னாள்கள் மேல் பாய்ந்து கொண்டு இருக்கிறது. இன்னும் எத்தனை பேர் தான் கைதாவர்களோ?

........................................................................................................

இன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறித்துள்ளது. இந்த அறிவிப்பு யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ சில்லரை வியாபரிகளுக்கு மிக கொண்டாட்டம் இன்னும் இந்த ஸ்ட்ரைக் வாபஸ் பெரும் வரை இவர்கள் வைத்தது தான் விலை.


எல்லாரும் இன்னிக்கே பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்....


........................................................................................................

ஊழல் செய்தவர்களுக்கும் ஒரே இடம்., ஊழலை எதிர்ப்பவர்களுக்கும் ஒரே இடம்....


இதுதாம்ப்பா உண்மையிலேயே கொடுமையான விசயம்....


........................................................................................................

16.08.2011  அன்று மாலையில் இருந்து இன்று காலை வரை இதுவரை 10 இலட்சம் டிவிட்டுகள் அன்னா ஹாசரே வுக்கு ஆதரவாக பின்னூட்டமிட்டு அவருக்கு வரவேற்பு அளித்துள்ளனர். 

உலகில் அதிக மக்கள் கடந்த இரண்டு நாட்களாக உச்சரிக்கும் வார்த்தை அன்னா ஹாசரே...
 

தகவல்



விண்வெளியில் செயற்கை முறையில் ஓட்டல் ஒன்றை நிர்மாணிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. பூமியிலிருந்து 217 மைல்கள் உயரே அமையவிருக்கும் இந்த ஓட்டலில் ஒரு நேரத்தில் 7 பேர் தங்கும் வகையில் நான்கு அறைகள் மற்றும் பூமி கீழே சுற்றுவதை எளிதாக பார்க்கும் வகையில் அமைந்த பெரிய ஜன்னல்கள் ஆகியவை இடம் பெறும்.

ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் உதவியுடன் 2 நாட்கள் பயணம் செய்து இதனை அடையலாம். விண்வெளி சுற்றுலா செல்ல விரும்பும் பணக்காரர்கள், விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்வோர் ஆகியோருக்கு ஏற்ற வகையில் உருவாகும்.

இதில் 5 நாட்கள் தங்குவதற்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் பவுண்டுகள் வரை செலவாகும். மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள் அவசர காலத்தில் பூமிக்கு திரும்புவதற்கு பதிலாக தங்குமிடமாகவும் இந்த ஓட்டல் இருக்கும்.

இதனை ஆர்பிடல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் உருவாக்குகிறது. வரும் 2016-ம் ஆண்டிற்குள் இதன் பணிகள் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் சாகம்பரி. என் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன என்று கூறி அதற்கு தகுந்தார்போல் எழுதி வருகிறார் இவரின் தாய்மையின் தேடல் என்னும் அற்புதமான கவிதைய பாருங்கள்...

http://mahizhampoosaram.blogspot.com/2011/08/blog-post_17.html


 

தத்துவம்

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌மஇ‌ல்லா‌‌வி‌ட்டா‌லவா‌ழ்‌க்கஎ‌ன்பதசும‌க்முடியாபெ‌ரிசுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

ஊ‌சி முனை‌யி‌லதவ‌மசெ‌ய்தாலு‌மஉ‌ன்னதுதா‌ன் ‌கி‌ட்டு‌ம்.

எ‌ளியாரவ‌லியா‌ரஅடி‌த்தா‌ல், வ‌லியாரை‌ததெ‌ய்வ‌மஅடி‌க்கு‌ம். 

Tuesday, August 16, 2011

அந்தியூர் குதிரை சந்தை வரலாறும் படங்களும் 1

கடந்த வார இறுதியில் விடுமுறை கிடைக்குமா கிடைக்காதா என்று இருந்த போது சனிக்கிழமை மட்டும் விடுமுறை கிடைத்தது வெள்ளி இரவே ஊருக்குச் சென்று சனிக்கிழமை காலை கூட்டம் குறைவாக இருக்கும் என கோயிலுக்குச் சென்றோம்.
குருநாதசுவாமி கோயில்

இக்கோயில் ஊரை விட்டு 10கிலோ மீட்டர் தொலைவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த இடத்திற்கு பெயர் வனம். இக்கோயிலைச்சுற்றி உள்ள வனத்தில் மக்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டி திருவிழாவை கொண்டாடுவார்கள். திருவிழா சமயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோவிலுக்குச் சென்றால் திரும்பிய பக்கம் எல்லாம் ஆடு, கோழி என விருந்து களை கட்டும். திருவிழா சமயம் மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகலும் விருந்து நடைபெறும்

குதிரை சந்தை மற்றும் மாட்டுச்சந்தைகளில் இந்த வருடம் முடிந்தவரை படங்கள் அனைத்தையும் அள்ளி வந்துள்ளேன்.

குதிரை சந்தை

அந்தியூரில் குதிரை சந்தை திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. திப்புசுல்தான்னின் படைத்தளங்களில் முக்கியமான தளம் அந்தியூர் இங்கு முன் இருந்த கோட்டையில் தான் குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் இவரின் குதிரைகளை விற்கவும் அந்த காலத்தில் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபுகுதிரைகளை வாங்கவும் அதிகம் குதிரை உள்ள இடமான அந்தியூரை தேர்வு செய்து சந்தையை உருவாக்கி உள்ளனர். குதிரைக்கான லாடம், சாரம் வண்டி மற்றும் அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் சந்தை தனியாக இருப்பதை விட திருவிழாவின் போது சந்தை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குருநாத சுவாமி திருவிழாவின் போது இச்சந்தை வருடா வருடம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் எங்கும் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிகின்றனர். குதிரைச்சந்தையுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது, தமிழகத்தில் பிரபலமான காங்கேயம் காளைகள் இச்சந்தையில் அதிகம் விற்பனை ஆகிறது.

இப்போதைய சந்தையில் மக்கள் அதிகம் கூடுவதால் வீட்டு உபயோகப்பொருட்கள், சோளக்கருது, பேரிக்கா, மைசூர் பருப்பி, அல்வா ம்ற்றும் புதிதாக வந்துள்ள விவசாயப்பொருட்கள், பொழுது போக்கிற்காக பல வகையான இராட்டினங்கள் என்று களை கட்டியது அந்தியூர் சந்தை...
இக்குதிரையின் விலை ஒரு லட்சத்து 50 ஆயிரம்

80 ஆயிரம்

காங்கேயம் காளை

 ஜமுனா பாரி ஆடுகள்

தற்போது எங்கள் பகுதியில் அதிக மக்கள் விரும்பி வளர்க்கும் ஈமு கோழி

ஜோடி 1ஒரு இலட்சத்து 50 ஆயிரம்

2 லட்சம்

சாரட் வண்டியின் விலை 60 ஆயிரம்



காங்கேயம் காளை (க்ராஸ்க்காக கொண்டு வரப்பட்டது)

4 இலட்சம்

3 இலட்சம்

4 இலட்சம்

2 லட்சத்து 50 ஆயிரம்

3 இலட்சம்

4 இலட்சம்

இசைக்கு தகுந்த படி நடனம் ஆடும் குதிரை 4 இலட்சமாம்

மீதி படங்கள் அடுத்த பதிவில்....

Wednesday, August 10, 2011

அஞ்சறைப்பெட்டி 11-08-2011 ( இந்தவாரம் விடுமுறை...)

வணக்கம் நண்பர்களே.,

கடந்த 1  மாதமாக அலுவலகத்தில் வேலைப்பளுகாரணமாக வலையுலகம் பக்கம் அதிகம் வர இயலவில்லை இருந்தாலும் வார வாரம் அஞ்சறைப்பெட்டி மட்டும் எழுதிக்கொண்டு இருந்தேன் இந்தவாரம் அதுவும் எழுத இயலவில்லை. நண்பர்களின் பதிவையும் படிக்க இயலவில்லை விரைவில் வேலைப்பளு குறைந்து உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன்.

நான் மிகவும் எதிர்பார்த்த எங்கள் ஊர் குதிரை சந்தை தற்போது நடைபெற்று வருகிறது என்னால் சனிக்கிழமைதான் செல்ல முடியும். அதற்கு முன் கிடைக்கும் படங்களை பதிவு செய்கிறேன். அடுத்த வாரம் முழுவதும் உங்களுக்காக ஸ்பெசல் குதிரைப்படங்களுடன் வருகிறேன்.

பதிவு ஏன் எழுதுவதில்லை, எங்கள் பதிவின் பக்கம் வருவதில்லை என்று தொலைசியிலும், மின்அஞ்சலிலும் விசாரித்த அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி...
விரைவில் வருகிறேன் குதிரை படங்களுடன்....

குதிரை சந்தை “களை” கட்டுகிறது

 
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த புதுப்பாளையத்தில் பழமையான குருநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப் பெருந்திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இந்த கோவில் திருவிழாவையொட்டி மாட்டு சந்தை- குதிரை சந்தையும் நடக்கிறது. மாட்டு சந்தை தொடங்கி நடந்து வருகிறது. இதில் காரி, சிம்மி, காங்கயம், நாட்டு மாடுகள் இடம் பெற்றுள்ளன. காரி மாடு வண்டிகளுக்கு பூட்ட ஏற்றது. சிம்மி, காங்கயம், நாட்டு மாடுகளும் வண்டியில் பூட்டவும், உழவு போடவும் ஏற்ற மாடுகள் ஆகும்.

இதுதவிர மலைமாடுகளும் விற்பனை செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் இறைச்சிக்காக வாங்கி செல்லப்படுகிறது. காங்கயம் ஜோடி மாடுகள் ரூ.32 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரை விற் பனையாகிறது. இவைகளை வாங்கிச் செல்ல தமிழகம் முழுவதும் இருந்து வியாபாரிகளும், விவசாயிகளும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

கோவில் திருவிழாவையொட்டி குதிரை சந்தை நாளை (10-ந்தேதி) தொடங்கு கிறது. இந்த சந்தைக்கு நூற்றுக்கணக்கான குதிரை கள் கொண்டு வரப்பட்டுள் ளன. ஒரு மாத குதிரைக்குட்டி ரூ.7 ஆயிரம் முதல் விலை போகிறது. ரூ.7 ஆயிரம் தொடங்கி ரூ.2 லட்சம் வரை மதிப்புள்ள குதிரைகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

திருவிழாவை முன் னிட்டு அந்தியூர் முதல் புதுப்பாளையம் வரை ரோட்டின் இருபுறமும் சுமார் 1000 திருவிழா கடைகள் அமைக்கப்பட்டுள் ளன. அல்வா கடை, பர்பி கடை, சோளக்கதிர் கடை, பேன்சி கடை, பிளாஸ் டிக் பொருட்கள் கடை, பாத்திரக்கடை, வீட்டு உப யோகப்பொருட்கள் கடை, ஓட்டல்கள் உள்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் பொதுமக்களை மகிழ்விக்கும் சர்க்கஸ், ராட்டினம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடை பெறுகின்றன. பக்தர்கள் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற் பாடும் செய்யப்பட்டுள் ளது. நாளை (10-ந் தேதி) காலை 10 மணிக்கு புதுப்பாளையத்தில் இருந்து குருநாத சாமி, பெருமாள் சாமி தேரில் எழுந்தருளி வனக்கோவில் செல்லும் நிகழ்ச்சியும், காமாட்சி அம்மன் சப்பரத்தில் வனக் கோவில் செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மதியம் சிறப்பு வழிபாடும், இரவு 9 மணிக்கு தண்ணீரில் விளக்கு எரியும் நிகழ்ச்சியும், இரவு முழுவதும் சிறப்பு பூஜையும் நடக்கிறது.
 
நன்றி மாலைமலர்

Thursday, August 4, 2011

அஞ்சறைப்பெட்டி 04.08.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
சமீபத்தில் இன்ஜினியரிங்க கவுன்சிலிங்கிற்கு சென்று இருந்த மாணவி ஒருவர் 194 கட் ஆப் வாங்கி உள்ளார் இவர் கோவையில் உள்ள கல்லூரிகளை தேர்ந்தெடுத்துள்ளார் இவரின் கட் ஆப் மார்க்கிற்கு பிரபல மற்றும் கேம்பஸ் இன்டர்வியூ அதிகம் நடைபெறும் கல்லூரி சிஐடி எடுங்க என்று அவந்த பெண்ணின் ஆசிரியர் போனில் கூறி உள்ளார் இவர் சிஐடி என நினைத்து சிஐஇடி என்ற தனியார் கல்லூரியை தேர்ந்தெடுத்து விட்டார் அரசு கோட்டாதான் என்றாலும் தனியார் கல்லூரி துவங்குபவர்கள் முன்னாள் உள்ள பிரபல கல்லூரியின் பெயரை ஒட்டி வருமாறு புது கல்லூரி நிறைய துவங்கி உள்ளனர் நிறைய மாணவர்கள் அது என்று நினைத்து இங்கு சேர்ந்துவிடுகின்றனர் என்று என் ஆசிரியர் நண்பர் புலம்பினார்.

அவர் புலம்பியதும் சரியே இன்று கவுன்சிலிங் செல்லும் மாணவர்களில் பல கிராமப்புற மாணவர்கள் சரியான வழிகாட்டிகள் இல்லாததால் பிரபல கல்லூரிக்கு வாய்ப்பிருந்தும் புதிய கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர். இவர்களுக்கு நாம் செய்யும் உதவி நமக்கு தெரிந்தவர்கள் கவுன்சிலிங் சென்றால் நம்மால் ஆன அறிவுரைகளை சொல்லி அவர்கள் முன்னேற நாமும் ஒரு ஏணிப்படியாக இருக்கலாம்...

...............................................................................................

மீண்டும் ஆரம்பித்துவிட்டது சிங்கமுத்து வடிவேல் பிரச்சனை. கடந்த ஆட்சியில் வடிவேலு முதல்வருக்கு நெருக்கமாக இருந்ததால் சிங்கமுத்து மேல் நடவக்கை மேற்கொண்டனர் இப்போது நிலைமை தலைகீழ்...


...............................................................................................

ஊரில் நிறைய முன்னாள் அமைச்சர்கள் கைதாகிகொண்டு இருக்கும் போது போன ஆட்சியிலேயே கைதான அமைச்சர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது இரவோடு இரவாக கைது செய்துவிட்டார்கள்...

........................................................................................................

இலங்கை தமிழருக்கு மாத ஓய்வூதியமாக ரூபாய் 1000 அறிவித்த முதல்வருக்கு மிக்க நன்றி...

இந்த அருமையான திட்டத்தை அம்மா செயல்படுத்தி விட்டார் என் ஐயாவிற்கு பொறுக்கவில்லை உடனே ஒரு அறிக்கை இலங்கை தமிழர்களுக்கு என் ஆட்சியில் அதிகம் செய்துள்ளேன் என ஒரு பட்டியல் விட்டுள்ளார்..

ஒரு இலட்சம் தமிழர்கள் சாகும் போது அறிக்கை... இப்பவும் அறிக்கை...

........................................................................................................


சமையல் கியாஸ் சிலிண்டரை மானிய விலையில் வழங்குவதால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த இழப்பை தவிர்க்க, ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு மானியம் இல்லாமல் சமையல் கியாஸ் வழங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கிறதாம்...

விலை உயராத பொருள் எதாவது இருக்குதான்னு தெரியல...

........................................................................................................

தகவல்


“மேக்அப்” மூலம் தங்களை அழகுபடுத்தி கொள்வதில் இங்கிலாந்து பெண்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.12 நாடுகளில் தயாராகும் 54 விதமான “மேக்அப்” பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதற்காகவே பெருமளவில் பணத்தை செலவிடுகின்றனர்.

சமீபத்தில் இங்கிலாந்தில் அதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2200 பெண்களிடம் “சர்வே” நடத்தப்பட்டது. அதில், அவர்கள் தங்கள் வாழ்நாளில் “மேக்அப்” செய்ய மட்டும் ரூ.70 லட்சம் செலவிடுவது தெரியவந்தது. ஆண்டு ஒன்றுக்கு மட்டும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், வாரத்துக்கு ரூ.3 ஆயிரமும் செலவு செய்கின்றனர். “மேக்அப்” சாதனங்களுக்கு மட்டும் ரூ.40 ஆயிரம் செலவிடுகின்றனர்.

தங்களின் கணவர்கள் மற்றும் காதலர்களை கவரவே இதுபோன்ற அழகு கலையில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அழகாக இல்லாவிட்டால் தங்களை அவர்கள் கைவிட்டு விடுவார்கள் என்றும் அச்சப் படுகின்றனர்.அதற்காகவே எப்போதும் தங்கள் கைப்பையில் “மேக்அப்” பொருட்களையும், சாதனங்களையும் எடுத்து செல்கின்றனர். இதனால் அங்கு பெண்களின் அழகுகலை பொருட்களின் வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கிறது.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் கார்வேந்தன். இவர் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் என்ற பெயரில் வலைப்பூ எழுதி வருகிறார். இதில் விவசாயம் சார்ந்த பல அறிய வேண்டிய தகவலை அளித்துள்ளார்.

http://marutam.blogspot.com/2010/12/blog-post.html

தத்துவம்


நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

”காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,
சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி”

Wednesday, August 3, 2011

கணவனிடம் பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்...


ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விசயங்களை தமக்காக செய்ய வேண்மும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணாக அமைந்தால் குடும்ப வாழ்க்கை பூதம்பமாக வெடிக்க ஆரம்பிக்கும்.

பெண்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் அனைத்தும் ஆண்களால் செய்ய முடியவில்லை என்றாலும் செய்ய முடிகிற காரியத்தை நிறைவேற்றினால் அது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வேராக அமையும் என்பதை ஒவ்வொரு ஆணும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆண்களிடம் பெண்கள் பொதுவாக எதிர்பார்ப்பது என்ன

பெண்கள் ஒரு விசயம் குறித்து ஆண்களிடம் பேசும் போது அதை தெளிவாகவும் கவனமாகவும் கேக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவ்வாறு கேட்டுக்கொண்டு அதற்கு ஏற்றாற் போல் நடந்து கொண்டால் அவளது மன உணர்வை ஆண்கள் புரிந்துகொண்டதாக நினைக்கின்றனர்.

பெண்களின் கோப, எதிர்மறைவான எல்லா உணர்வுகளும் அவர்களின் 3 நாள் பிரச்சனையுடன் தொடர்புடையவை அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்கள் இரக்க உணர்ச்சியை முன்னேற்றிக்கொண்டால் நல்லது. அதற்காக கண்ணீர் விட்டு அழவேண்டியதில்லை. தோழமையின் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும்.

பெண்களைப் பொறுத்த வரை தனிமையில் தொட்டு பேசுவது, மெல்ல அடித்து விளையாடுவது போன்றவற்றை மிக்க விரும்புவர் அதனால் அடிக்கடி பேச வேண்டும்

தனது கணவர் மாதத்திற்கு ஒரு முறையாவது தமக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்று விரும்புவர். இது பொதுவானது தான் ஆனால் எதிர்பார்க்காவண்ணம் சமைத்து அசத்த வேண்டும் இதை மிக ரசிப்பார்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பாக இருங்கள் ஆனால் அவர்களை சொந்த உடமைகளாக கருதாதீர்கள்.

தனது ஆண் எப்போதும் தங்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதை பெண்கள் விரும்புவர், பெண்களை விட்டு செல்லும் தருணங்களில் அந்த அன்பை வித்தியாசமாக வழியில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆண்கள் விரும்பும் பெண்களை மிக வேகமாக இழப்பதற்கு ஒரு வழி பொய் சொல்வது ஆண்கள் மிக நேர்மையாக இருப்பதை அதிகம் விரும்புவர்.

வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் அதிகமாக கணவனிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.

விடுமுறை நாளில் கூட இருக்கும் போது வேலையை பகிர்ந்து கொண்டு வெளியில் சென்று வரலாம் என்று அவர்களை அழைப்பதை மிக விரும்புகின்றனர்.

பெண்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறினால் குடும்பமும் மிக மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை...