Wednesday, August 3, 2011

கணவனிடம் பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்...


ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விசயங்களை தமக்காக செய்ய வேண்மும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணாக அமைந்தால் குடும்ப வாழ்க்கை பூதம்பமாக வெடிக்க ஆரம்பிக்கும்.

பெண்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் அனைத்தும் ஆண்களால் செய்ய முடியவில்லை என்றாலும் செய்ய முடிகிற காரியத்தை நிறைவேற்றினால் அது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வேராக அமையும் என்பதை ஒவ்வொரு ஆணும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆண்களிடம் பெண்கள் பொதுவாக எதிர்பார்ப்பது என்ன

பெண்கள் ஒரு விசயம் குறித்து ஆண்களிடம் பேசும் போது அதை தெளிவாகவும் கவனமாகவும் கேக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவ்வாறு கேட்டுக்கொண்டு அதற்கு ஏற்றாற் போல் நடந்து கொண்டால் அவளது மன உணர்வை ஆண்கள் புரிந்துகொண்டதாக நினைக்கின்றனர்.

பெண்களின் கோப, எதிர்மறைவான எல்லா உணர்வுகளும் அவர்களின் 3 நாள் பிரச்சனையுடன் தொடர்புடையவை அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்கள் இரக்க உணர்ச்சியை முன்னேற்றிக்கொண்டால் நல்லது. அதற்காக கண்ணீர் விட்டு அழவேண்டியதில்லை. தோழமையின் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும்.

பெண்களைப் பொறுத்த வரை தனிமையில் தொட்டு பேசுவது, மெல்ல அடித்து விளையாடுவது போன்றவற்றை மிக்க விரும்புவர் அதனால் அடிக்கடி பேச வேண்டும்

தனது கணவர் மாதத்திற்கு ஒரு முறையாவது தமக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்று விரும்புவர். இது பொதுவானது தான் ஆனால் எதிர்பார்க்காவண்ணம் சமைத்து அசத்த வேண்டும் இதை மிக ரசிப்பார்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பாக இருங்கள் ஆனால் அவர்களை சொந்த உடமைகளாக கருதாதீர்கள்.

தனது ஆண் எப்போதும் தங்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதை பெண்கள் விரும்புவர், பெண்களை விட்டு செல்லும் தருணங்களில் அந்த அன்பை வித்தியாசமாக வழியில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆண்கள் விரும்பும் பெண்களை மிக வேகமாக இழப்பதற்கு ஒரு வழி பொய் சொல்வது ஆண்கள் மிக நேர்மையாக இருப்பதை அதிகம் விரும்புவர்.

வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் அதிகமாக கணவனிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.

விடுமுறை நாளில் கூட இருக்கும் போது வேலையை பகிர்ந்து கொண்டு வெளியில் சென்று வரலாம் என்று அவர்களை அழைப்பதை மிக விரும்புகின்றனர்.

பெண்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறினால் குடும்பமும் மிக மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை...

18 comments:

  1. கலக்குறீங்க போங்க... அனைத்தும் உண்மையான விடயங்கள்..

    ReplyDelete
  2. நல்ல யோசனைகள்..!! :)

    ReplyDelete
  3. //பெண்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறினால் குடும்பமும் மிக மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை... //

    மேற் சொன்ன வற்றை எல்லாம் கணவன் நிறைவேற்றுவார் என்று எதிர் பார்க்க கூடாது என்பதை மனைவி புரிந்து கொண்டாலும் குடும்பம் மிக மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை... :)

    ReplyDelete
  4. //பெண்களைப் பொறுத்த வரை தனிமையில் தொட்டு பேசுவது, மெல்ல அடித்து விளையாடுவது போன்றவற்றை மிக்க விரும்புவர் அதனால் அடிக்கடி பேச வேண்டும்//

    அடிக்கடி அடித்துப் பேசிடப்போறாய்ங்க! :-)

    //தனது கணவர் மாதத்திற்கு ஒரு முறையாவது தமக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்று விரும்புவர்//

    அடுத்த மொக்கைக்கு ஐடியா கொடுத்ததற்கு மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  5. நல்ல யோசனை தான்... :) :)

    ReplyDelete
  6. என்னமா டைட்டில் வைக்கறார் சித்தார்க்காரர்

    ReplyDelete
  7. ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு குடுத்து வாழ்தலே நன்மை....

    ReplyDelete
  8. இந்த லிஸ்ட் சின்னதாக இருக்கே.... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

    ReplyDelete
  9. இவ்வளவு விஷயத்தையும் சரியா புரிந்துகொண்டாலே ஓரளவு சந்தோஷம்தான் !

    ReplyDelete
  10. //பெண்களுக்கு பாதுகாப்பாக இருங்கள் ஆனால் அவர்களை சொந்த உடமைகளாக கருதாதீர்கள்.//


    மற்ற கருத்துக்களை விட இது ஆணித்தரமானது.
    இதைப் புரிந்துகொண்டாலே பல பிரச்சனைகள் ஓய்ந்துவிடும்.

    ReplyDelete
  11. பல வருஷமாச்சு இன்னும் புரிஞ்சிக்க முயற்சி பண்ணிக்கிட்டே.......... இருக்கேன்

    ReplyDelete
  12. unmai.........anbu unmaiyaga irupin...unarvaga seyal irukkum.

    ReplyDelete
  13. பெண்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறினால் குடும்பமும் மிக மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை...

    அருமையாகச் சொன்னீர்கள் சகோ .ஆனால் அட்டவணை கொஞ்சம் சின்னதாய்ப் போச்சே.அதுவும் ஒண்ணுக்கு நல்லதுதா. ஹி...ஹி.ஹி...மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் தொடருங்கள் அடுத்த அட்டகாசமான பதிவை .
    தமிழ்மணம் 11

    ReplyDelete
  14. உண்மையான விடயங்கள்..

    ReplyDelete
  15. உண்மையான விடயங்கள்..

    ReplyDelete