Wednesday, February 20, 2013

அஞ்சறைப்பெட்டி 21.02.2013


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
 
கெஜட்டில் காவிரி தீர்ப்பு வெளியானது யாருக்கு சந்தோசமோ இல்லையோ டெல்டா விவசாயிகளுக்கு மிக கொண்டாட்டமான நிகழ்வு இது. இதற்கு நான் தான் காரணம் நீ தான் காரணம் என்று அரசியல் செய்யாமல் இருந்தால் சரி.. தமிழனுக்கு கிடைக்க வேண்டிய நீதி காவிரி பங்கீட்டில் கிடைத்து விட்டது என்றே சொல்லலாம்... நல்லது நடந்தால் நமக்கும் சந்தோசம் தானே...

  ................................................................

 
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது குறித்த புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியானபோதும் கூட  நாம் அதை பாவத்தோடு தான் பார்த்தோம். தற்போது சின்னஞ்சி சிறுவனான பாலச்சந்திரன் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரங்கள் வெளியாகி அனைவரையும் பதறடிக்க வைத்துள்ளது. என்னைக்கண்கலங்க செய்தது என்னைப்போல் நிச்சயம் பலர் கண் கலங்கி இருப்பனர். பாவமாக இருக்கிறது அந்த சிறுவனின் முகம். சட்டை கூட போடாமல் உட்கார வைத்து கையில் பிஸ்கட் கொடுத்து சாப்பிட வைத்து கொன்றுள்ளனர் படுபாவிகள் இதை விட கேவலமான செயல் எதுவுமில்லை இது போர்க்குற்றம் தான் ஆனால் என்ன ஒன்றும் நடக்கப்போவதில்லை.  உலகிலேயே மிகப் பெரிய அசிங்கம் பிடித்த கோழைகளாக மாறிப் போயுள்ள சிங்கள படையினர், அந்த சிறுவனின் நெஞ்சில் சுட்டு வெற்றியை காட்டி உள்ளனர். ஒரு தலைவனின் மகன் லுங்கியோடு உட்கார்ந்திருப்பதை பார்க்கும் போது சொல்லத்தோனுகிறது இவர் அல்லவா தலைவர் என்று...

மன்னித்துக்கொள்ளடா பாலச்சந்திரா...
நாங்கள் கையாலாகாத தமிழர்கள்........

..........................................................................................

சமீபத்தில் தூக்கு தண்டனை என்பது சாதாரண நிகழ்வாக இருக்கிறது தவறு செய்தவன் அதுவும் மிகக்கொடுரமான தவறு செய்தவர்களுக்கு இந்த தண்டனை அழித்தால் நிச்சயம் பாராட்டலாம் ஆனால் வீரப்பனை பார்க்காதவர்கள் எல்லாம் அனுபவிக்கப்போகிறார்கள் என்பது கொஞ்சம் வருந்ததத்தக்கதாக உள்ளது.. என்னைப்பொறுத்தவரை ஒருவனை அழிக்கும் உரிமை நமக்கு இல்லை ஒரு முறை தான் மீண்டும் அந்த உயிர் கிடைக்காது என்பதால் தூக்கு தண்டனையை எதிர்ப்பதில் தான் நிற்கிறது எனது மனது..

................................................................................................

அகில இந்திய அளவில் பந்த் என்றனர் இருந்தாலும் ஒரு 50 பைசாவாது குறைப்பார்கள் என்று நம்பி இருந்தேன் இந்த பந்தால் ஆனால் நடந்தது ஒரு பைசா கூட குறைக்கவுமில்லை பந்த் தமிழ்நாட்டில் வெற்றி பெறவுமில்லை. இவர்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திக்கொண்டு தான் இருப்பர் நாம் தான் அதை பக்குவமாக அல்லது கட்டாயமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

...............................................................................................

வைகோ முதல்வர் சந்திப்பு கூட்டணிக்கு அச்சாரமா என்று தான் பல செய்திகள் வருகின்றன அது உண்மையாகவும் இருக்கலாம் மக்கள் பிரச்சனைக்கு முன்னின்று போராட்டம் நடத்தும் வைகோ அரசியலில் சோபிக்காதது அவரின் அரசியல் சாணக்கியத்தனம் இல்லாதது என்பது தெரிகிறது.. தேர்தலில் நின்று வெற்றி பெறுவதை விட நிறைய போராட்டங்களால் மக்கள் ஆதரவை பெறலாம்.
...............................................................................................

 
பையன பள்ளியில் சேர்த்தனும் என்று பக்கத்தில் இருக்கும் பள்ளிகளில் விசாரித்ன் Pre K.G க்கு.. கோவைப்புதூரில் உள்ள அந்த பள்ளியில் சின்ன சின்ன விளையாட்டு சறுக்கல்கள் இருந்தன நானும் பையனும் சென்றோம் வாங்க என்று இனிமையான ஆங்கிலத்தில் வரவேற்றார்கள் ( ஆடு சிக்கிறுச்சுன்னு நினைச்சிறுப்பாங்க போல) அதை சொல்லித்தருகிறோம், இதை சொல்லித்தருகிறோம் எல்லாம் செய்முறை விளக்கத்தோடு தான் என்றனர். எவ்வளவு கட்டணம் என்றேன் அவர்கள் பதில் சொல்லவே இல்லை மறுபடியும் அவர்களின் பெருமையை பீத்தினார்கள் எல்லாம் இருக்கட்டும் கட்டணத்தை சொல்லுங்க என்றேன்.. வருடக்கட்டணம் 25000 மட்டுந்தான் அப்புறம் புத்தகம் துணி எல்லாம் எங்க கிட்டத்தான் வாங்கனும் அதற்கு 8000 ஓ பரவாயில்லையே அவ்வளதானா என்றேன் மீண்டும் கொஞ்சம் பேசிவிட்டு செய்முறை விளக்கங்களுக்கு ஒரு 6000 என்றனர். மொத்தம் 39 ஆயிரம் சரிங்க என்றேன் மறுபடியும் சில வரிகள் பேசிவிட்டு அட்டிமிஷன் பீஸ் 20000 ஆயிரம் ஒரு முறை செலுத்தினால் போதும் அப்புறம் கேக்கமாட்டோம் இது இல்லாம ஆண்டுவிழா, பாட்டுப்போட்டி என் நிறைய போட்டிகள் நடத்துவோம் ஒரு போட்டிக்கு 1000 செலவுவரும் என்றனர்...

ஆகா பணத்தை தவிர மற்றவற்றை பேச ஏனோ மறுக்கின்றனர் இங்கு மட்டுமல்ல எல்லா பள்ளிகளிலும் இது தான் நிலமை.. இவர்களே ஒரு சீட்டுத்தான் இருக்கு ரெண்டு சீட்டுதான் இருக்குன்னு பிட்ட போட்டு விட்டு நம்மை நாமம் போட பார்க்கின்றனர்...

அந்த பள்ளியில் இருந்து வெளியே வந்ததும் ஒரு டீக்கடையில் டீ குடிக்கும் போது எதாச்சையாக அங்கிருந்த பெரியவர் சொன்னார்... படிக்கிற குழந்தை எங்கிருந்தாலும் படிக்கும் என்று....

தகவல்
 
 
அமெரிக்கா சந்திரனுக்கு விஞ்ஞானிகளை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. அதற்கு 'அப்பல்லோ மிஷன்' என பெயரிடப்பட்டது. அப்போது, அங்கிருந்து எடுத்து வரப்பட்ட பாறைகளின் மூலம் சந்திரனில் தண்ணீர் உள்ளதா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட மிசிகன் பல்கலைக்கழக நிபுணர்கள் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன்படி சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட பாறை படிவங்களை ஆய்வு செய்வதில் சந்திரனில் தண்ணீர் இருந்ததற்கான அறிகுறி உள்ளது என உறுதி செய்துள்ளனர்.

சந்திரன் உருவானபோது அது ஈரத்தன்மையுடன் இருந்திருக்க வேண்டும். அது முழு வடிவாக மாறியபோது அதன் ஈரத்தன்மை குறைந்து கெட்டியாகி பாறையாக மாறி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பளபளப்பான நிறத்தினால் ஆன இந்த பாறை சந்திரன் தோன்றியபோது உருவாகியிருக்கலாம்.

எடை குறைவு காரணமாக இவை அங்கிருந்த மேக்மா என்ற கடலில் மேற்பரப்பில் மிதந்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த பாறைகளில் 'பிலிஜியோகல்ஸ் பெல்ட்ஸ்பா' என்ற தண்ணீர் துகள்கள் உள்ளன. எனவே சந்திரனில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தத்துவம்

நீ நடந்து போக பாதை இல்லையே
என்று கவலைப் படாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.

மகிழ்ச்சியை எண்ணலாம்; விரும்பலாம்; அடையலாம். ஆனால் விலைக்கு வாங்க முடியாது!

நீ எப்பொழுதும் நல்லவற்றையே சிந்தி, உனக்கு எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் இது விதி, தீயவற்றைச் சிந்தித்தால் தீயவையே நடக்கும் இதுவும் விதி.

18 comments:

  1. படிக்கிற குழந்தை எங்கிருந்தாலும் படிக்கும் என்று....

    இது யாருக்கும் இப்போது தெரியவில்லை.பழமொழியாகி விட்டது.

    ReplyDelete
  2. அன்பார்ந்த பதிவர் சங்கவி அண்ணா அவர்களே!

    கடல் படத்தில் ஒரு குருவானவரை ஊரார் நடத்தும் விதம் அதிர்ச்சிகரமாக காட்டப்பட்டுள்ளது . எக்காரணத்தைக் கொண்டும் ஒரு குருவனாவரை அடிப்பது , உதைப்பது , கிட்டத்தட்ட எல்லோருமே நாராச மொழியில் பேசுவது போன்றவை மணிரத்தினமும் , ஜெயமோகனும் பொதுவாக மீனவர்கள் படிப்பறிவற்றவர்கள் , முரடர்கள் , மரியாதை தெரியாதவர்கள் என்ற பொதுப்புத்தியை தாண்டி எந்த கள ஆய்வும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது . முந்தைய காலங்களைப் போல குருவானவர் என்றால் பிரமிப்பும் , பக்தியும் இப்போது இல்லாதிருக்கலாம் . அதற்கு காரணம் இன்றைக்கு மிக அதிக அளவில் குருவானவர்கள் வருவது இந்த கடற்கரை கிராமங்களிலிருந்து தான் . இப்போது சொந்த குடும்பத்திலோ அல்லது ஒன்று விட்ட குடும்ப வட்டத்திலோ குறைந்தபட்சம் ஒரு குருவானவரோ அல்லது கன்னிகாஸ்திரியோ இல்லாத ஒரு மீனவ குடும்பத்தை பார்ப்பது அரிது .அந்த வகையில் பிரமிப்பும் பக்தியும் குறைந்து போயிருக்கலாம் .ஆனால் குருவானவரை ஏதோ வேண்டப்படாத விரோதி போல பார்க்கும் நிலை கண்டிப்பாக இல்லை .. சில ஊர்களில் சில குருவனாவர்களை ஏசுவதும் , அரிதாக சிறிது தாக்குவதும் நடந்திருக்கலாம் .ஆனால் இது போல ஊர்முழுக்க வசையும் தாக்குதலும் குருவனாவர் மீது நடப்பதாக காட்டுவது மீனவர் பற்றிய பொதுப்புத்தி என்றே நினைக்கிறேன். அதுவும் எடுத்தவுடனே அந்த பையன் பாதிரியாரை வசை மாறி பொழிவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை . அப்படி நடந்தால் கண்டிப்பாக மக்கள் பார்த்துக்கொன்டிருக்க மாட்டார்கள்.

    இத்தனைக்கும் ஜெயமோகன் என்ற பெரும் எழுத்தாளர் இந்த கடற்கரை சமூகம் வாழும் நிலப்பரப்பிலிருந்து 10 கிமீ தூரத்தில் வசிப்பவர் தான் , மணப்பாடு பண்ணீர் சோடா குடித்து வளர்ந்தவர் தான். அவர் இப்படி காட்சிபடுத்த களன் அமைக்கலாமா ?

    இதையெல்லாம் நீங்கள் ஏன் கண்டிக்கவே இல்லை. மற்ற் பதிவர்களும் ஏன் கண்டிக்கவில்லை. என்னமோ போங்க எல்லாருமே ஒரு சார்பு நிலையில் சுற்றிவருகிறீர்கள். கண்டிப்பதை கண்டிக்காம விட்டங்காட்டிக்கு தான் இந்த ஊரே இப்படி இருக்குதுங்க. பிரபல் பதிவராக இருந்தால் எதையும் கண்டுக்க் கொள்ளாது இருக்கனுமா

    ஜோஸ்

    ReplyDelete
  3. பாலசந்திரன் மரணம் கண் கலங்க வைத்த ஒன்று. என் பெண்ணை அரசு பள்ளியில் சேர்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் அரசு பள்ளிகள் மூடுவிழா கண்டுவிடும் போல இருக்கிறது.

    ReplyDelete
  4. இறப்பை கண்டால் எனக்கு அழுகை வராது. அதும் ஒரு நிகழ்வாகவே எடுத்துப்பேன். நெருங்கிய உறவுகள் இறப்பிற்கும் என் நிலைப்பாடு இதுவே. சில வருடங்களுக்கு முன் பாலச்சந்திரன் சுடப்பட்டு இறந்திருந்த படத்தை பார்த்துக்குட பெரிதாய் அலட்டி கொள்ளவில்லை. ஆனால், பிணையகைதியாய் இருக்கும் அந்த இரு படங்களும் பார்த்ததிலிருந்து நிஜமாவே மனசு ரொம்ப பாதிச்சு அழுகை பொத்துக்கிட்டு வருது.

    ஸ்கூல் விட்டு ஓடி வந்து பசியோடு பிஸ்கட் சாப்பிடும் ஒரு குழந்தையின் சாயல் அந்த படத்தில்.., எந்த கள்ளாம் கபடும் இல்லாமல் இருக்கும் பால் வடியும் முகம். இதை சிதைக்க மிக்க கொடூர மனம் வேண்டும் அப்பாதர்களுக்கு..,

    ReplyDelete
  5. //ஆனால் வீரப்பனை பார்க்காதவர்கள் எல்லாம் அனுபவிக்கப்போகிறார்கள் என்பது கொஞ்சம் வருந்ததத்தக்கதாக //

    உளறனும்னு முடிவு பண்ணீட்டே எழுதுவ போலருக்கு... தம்பி இந்திய கோர்ட்டுகள் கொஞ்சம் டவுட் வந்தாக்கூட குற்றவாளிய ப்ரியா விட்டுடும். இவ்வளவு நீதிமண்றங்களை கடந்த தீர்ப்பை எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா பூன்னு ஊதித் தள்ளுற.....படிச்சவன் தானே நீ...இல்லா அந்தா அவனா.....நீ

    இரண்டு வருசத்துக்கு வந்தா முட்டை பூரி பதிவல தப்பும் தவறுமா இருந்ததை சுட்டிக் காட்டினா திருத்தினியா நீ... சொந்த மொழிமேல அபிமானமே இல்லாம கெடக்க பயதானே நீ..... பரிமாற்றம் என்பது சரி நீ இன்னா எழுதிருந்த... அண்ணன் ஆருரன் பறிமாறினார்னு

    இத்தனை வருசத்துக்கும் அந்த அசிங்கம் திருத்தப்படாமலே இருக்கு...
    இதுல பாலசந்திரனுக்கு வருத்தபடறான்.

    அது வருந்துற விஷயம் தான் ஆனா பக்கி அந்தப் புள்ளையோட அப்பன் ஊரில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் கேடயாமா பயன்படுத்தினப்ப கண்டிச்சியா நீ.... இல்ல கேட்கிறேன் கண்டிச்சியா ?

    உன்னைப் பார்த்து நீயே கேட்டுக்க எனக்கு ப்ளைட்டுக்கு நேரமாச்சு கிளம்புறேன்.

    ReplyDelete
  6. பிழை திருத்தம் பிள்ளாய்:
    //இரண்டு வருசத்துக்கு வந்தா முட்டை பூரி பதிவல//

    இரண்டு வருசத்துக்கு முன்னாடி வந்த முட்டை பூரி பதிவுல.

    தம்பி பின்னூட்டத்தில கூட பிழை கூடாது ஆமா....

    ReplyDelete
  7. Anonymous அண்ணே....

    நீ சொன்னா நான் எதுக்குடா திருந்தனும்... தவறாக எழுதுவது தானடா என் ஸ்டைல்... ஆனால் பதிவுலகில் எந்த பதிவாக இருந்தாலும் நேரடியாக என் பெயரில் எழுதித்தான் பழக்கம்...

    பொட்டை போல் வேறு பெயரில் எழுதி எனக்கு பழக்கமில்லை...

    தவறை நேரடியாக கேள்... ஏனய்யா பேரே இல்லாமல் வருகிறாய்...

    ReplyDelete
  8. // பிழை திருத்தம் பிள்ளாய்:
    //இரண்டு வருசத்துக்கு வந்தா முட்டை பூரி பதிவல////

    இதற்கு நீர் தூக்கு போட்டுக்கலாம்... அதில் சப்பை கட்டு வேற...

    கிளம்பு தம்பி காத்து வரட்டும்...

    ReplyDelete
  9. கதவைத் திற காற்று வரட்டும்

    அட இந்த அவணாடா நீய்ய்யு !!!! இது தெரியாமா என் நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டனே

    சொந்தக் கருத்தை எவண்டா பதிவுல எழுதியிருக்கீங்க எதை எழுதினா யாரவது பாராட்டுவாங்களேன்னு கேனைத்தனமா தானே எழுதுறீங்க....சும்மா தூக்கு தண்டனைய எதுக்கிறேன் அது இதுன்னு வேஷம் தானே கட்டுறீங்க........தீவிரவாதினால் செத்தவன் எல்லாம் மனுஷனே இல்லையாடா நாதாரி........ஈரோட்டின் பேரை கெடுக்காதே...காந்திபுரம் பஸ்ஸ்டாண்ட்கிட்ட சுத்தி திரியறவனுக்கு ...பதிவு வேற...:தவறா எழுதறதுக்கு எந்த ”ற” வருனும்னாவது தெரியுமா.....

    ReplyDelete
  10. //Terror returns, again on cycle: 13 killed in Hyderabad blasts//

    இதை செஞ்சவனையும் ( எந்த மதமோ கட்சியையோ சேர்ந்தவான வேனா இருக்கட்டும்)போலீஸ் கஸ்டப்பட்டு பிடிக்கட்டும் அவனுக்கு தண்டனை தர்றபோது பெரிய வெளக்கெண்ணை மாதிரி ஒன் இளகின மனசைக் காட்டு.... போடா போடா...இது மாதிரி ஆளுங்களுக்கு பரிந்து பேசாமலாவது இருங்கடா பக்கிங்களா....மூஞ்சிய போய் இப்ப கண்ணாடில பாரு... இந்தியா மாதிரி நிதானமா நியாயம் வழங்கிற நாட்டிலே இருந்துக்கிட்டு கிரிமினல்களுக்கு..... சே...சே.... போ....போ..

    சொந்தபேரில ரேஷன் கார்டோட வரனுமா..... உண்மை சுடும்லே சுடும்.......

    ReplyDelete
  11. யோவ் அனானிம்ஸ் நீ யாருன்னு எனக்கு தெரியும்லே...

    சரக்கடிச்சிட்டு காசு கொடுக்கும் நேரத்துல வெளியில் ஓடுன கஞ்சப்பையந்தானே நீ...

    எந்த ஊருக்கு சந்திப்புக்கு போனாலும் அந்த ஊரில் தண்ணியப்போட்டு உன் பேரை கொடுக்கறது எங்களுக்கு தெரியாதா...

    முதல்ல நான் எந்த ஊருன்னு கூட தெரியல சும்மா தண்ணியப்போட்டுட்டு உளறவதை விட்டுட்டு போய் யாராவது கிரிமினல்கள் வராங்களான்னு பாரு....

    ReplyDelete
  12. // உன்னைப் பார்த்து நீயே கேட்டுக்க எனக்கு ப்ளைட்டுக்கு நேரமாச்சு கிளம்புறேன். //

    அங்ககேயும் காசு கொடுக்காமா ஏமாத்தலான்னு உன் கிரிமினல் புத்திய காட்டி பாதியல் இறக்கிவிட்டுட்டாங்களா...

    நீ எல்லாம் பஸ்ல போறதே பொசு இதுல ப்ளைட் வேறையா....

    போ போ... எவனாவது இளிச்சவாயன் இன்னிக்கு கிடைப்பானான்னு பாரு கிரிமினலோ, சிவிலோ....

    ReplyDelete
  13. // காந்திபுரம் பஸ்ஸ்டாண்ட்கிட்ட சுத்தி திரியறவனுக்கு ...பதிவு வேற...:தவறா எழுதறதுக்கு எந்த ”ற” வருனும்னாவது தெரியுமா.....//

    கோவையில் உனக்கு தெரிந்த இடம் இது ட்டும் தானா...

    நீ அடிக்கடி ஜெயிலுக்கு வருவபோல அதனால தான் அந்த இடம் தெரிஞ்சிருக்கு....

    ReplyDelete
  14. // சொந்தபேரில ரேஷன் கார்டோட வரனுமா..... உண்மை சுடும்லே சுடும்....... //

    ரேஷன் கார்டு கூட கிரிமினல் யாராவது வந்ததானே உமக்கு பிடிக்கும் இல்லைன்னா அவங்கிட்ட புடுங்க முடியாதே...

    ReplyDelete
  15. //முதல்ல நான் எந்த ஊருன்னு கூட தெரியல சும்மா தண்ணியப்போட்டுட்டு உளறவதை விட்டுட்டு போய் யாராவது கிரிமினல்கள் வராங்களான்னு பாரு....//

    அட நானம் கெட்ட நல்ல தம்பி..பொத்தாம் பொதுவா நாறினாப்பத்தாது எக்ஸாக்ட் ஊர் பேரோட
    latitude, longitude மற்றும் local time எல்லாம் வச்சு மேப்-ல குறிச்சு தான் நாறுவேன்னு அடம் பிடிக்கிறியே
    எனக்கு தரக்குறைவா நடக்க தெரியாதப்பனே உன்னை மாதிரி.

    வாங்க வாங்கன்னு கூப்பிட்டவன் தான் சரக்குக்கு காசு கொடுக்கனும் கெஸ்ட் தரலைன்னு சொல்லி பதிவில் எழுதிய முதல் ஹோஸ்ட் நீயா தான் இருக்கனும். பதிவில ஆக்டீவ்-ஆக இல்லைன்னா என்னா வேணா சொல்லுவியா ?

    கருத்துக்கு பதில் சொல்லு வீனா ஆவேசம் கூடாது. என்னைப் பார்க்க இரத்தினசபாபதிபுரம் வந்து பிறகு சரக்கு வாங்கியது மறந்துடுத்தா ? அதான்லே ஆர்.எஸ்.புரம்

    ReplyDelete
  16. // என்னைப் பார்க்க இரத்தினசபாபதிபுரம் வந்து பிறகு சரக்கு வாங்கியது மறந்துடுத்தா ? அதான்லே ஆர்.எஸ்.புரம்//

    எப்படி மறக்கம் சரக்கு காசு கொடுத்து வாங்கியது நான் ஓசியில ஒரு லிட்டர் குடிச்சது நீ எப்படியா மறக்கும்...

    அதுதான் யார்ன்னு தெரிஞ்சு போச்சே சொந்த பெயரிலே வரலாமுள்ள பயமா இருக்கா...

    அடுத்த முறை பார்க்கும் போது சரக்கு வாங்கித்தரமாட்டான் என்று...

    ReplyDelete
  17. வானவில் மாதிரி மல்டிகலர் சட்டைய போட்டுகிட்டு என் கடைப்பக்கம் வந்துராத ராசா.... பேண்ட் சட்டை காம்பினேஷன் தெரியாத @#$%^*&*& வந்திருக்குன்னு என் ப்ரண்டெஸ் கலாய்ச்சிறப் போறாங்க.....

    கேட்ட கேள்விய விட்டு சரக்கு சரக்குனு செக்குமாடு கணக்கா சுத்தாதே! பதில் சொல்லு நீ புரிஞ்சு எழுதுறியா இல்லையான்னு......

    வனம் காக்கும் சாரை உனக்கு அறிமுகம் செய்யாதது எவ்வளவு நல்லதாப் போச்சு. ஆஹா வடை போச்சா !!

    ReplyDelete
  18. //
    கேட்ட கேள்விய விட்டு சரக்கு சரக்குனு செக்குமாடு கணக்கா சுத்தாதே! பதில் சொல்லு நீ புரிஞ்சு எழுதுறியா இல்லையான்னு......//

    நான் எப்படி வேண்டுமானாலும் எழுதுவேன் அது என் இஷ்டம்... பெயர் இல்லாதவன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்வதில்லை... பெயரோடு கேள் பதில் சொல்கிறேன்...

    // வானவில் மாதிரி மல்டிகலர் சட்டைய போட்டுகிட்டு என் கடைப்பக்கம் வந்துராத ராசா.... பேண்ட் சட்டை காம்பினேஷன் தெரியாத @#$%^*&*& வந்திருக்குன்னு என் ப்ரண்டெஸ் கலாய்ச்சிறப் போறாங்க..... //

    உனக்கு நண்பர்கள் எல்லாம் இருக்காங்களா... பாவம் உன் மொக்கைய கேட்டு தலைதெறிக்க ஓடிடுவாங்க... ரெண்டு பேர் போன் நெம்பர் சொல்லு உன் சங்கதி அப்ப தெரியும்....

    ReplyDelete