Friday, October 28, 2011

போதிதர்மர் வரலாறு...


இன்று வலையுலகில் அதிகம் பேர் கூகுளில் தேடும் பெயர் போதி தர்மர் ஆகத்தான் இருக்கும் நானும் அவரின் வரலாற்றை அறியும் நோக்கில் போதிதர்மரைப் பற்றி தேடும் போது பிரபஞ்சக்குடில் என்னும் பதிவில் இவரைப்பற்றியான பல அற்புத தகவல்கள் இருந்தது.

அனைவரும் அறிவதற்காகவே இப்பதிவு.

இப்பதிவை எழுதிய பிரபஞ்சக்குயில் என்னும் பெயரில் பதிவெழுதும் நண்பருக்கு மிக்க நன்றி....

போதிதர்மாவைப் பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்று நான் சொல்வது தியானத்தைதான். எனினும் அவர் குங்ஃபூ கலையின் பிதாமகராகக் கருதப்படுவதற்கும் சில பின்னணிகள் இருக்கின்றன.
 
 
போதிதர்மா பற்றிய தொன்மையான பதிவுகள் எதுவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவரைப் பற்றிய புனைவுகள் நிறைய பின்னப்பட்டுள்ளன. குங்ஃபூ கலை பற்றி அவரின் பெயரால் அழைக்கப்படும் நூல்களும் வேறு யாரோ எழுதியவை என்றே சொல்லப்படுகின்றன. போதிதர்மா தன் கைகளால் நேரடியாக எந்தப் புத்தகத்தையும் எழுதவில்லை. அவருடைய போதனைகளை அவரின் சீடர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள். போதிதர்மாவின் கதையை ‘non-linear’ அமைப்பில் சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.

போதிதர்மாவுக்கும் குங்ஃபூ கலைக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் பார்ப்போம். தமிழகத்தில் இருந்து சீனா சென்ற போதிதர்மா (ஆம், போதிதர்மா ஒரு தமிழர்!) மன்னர் ’வூ-டி’யைச் சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக் கடந்து ஹெனான் பகுதியின் மலைச் சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு தியானம் செய்துகொண்டிருந்த புத்த பிட்சுக்களைப் பார்த்தபோது அவருக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. நாட்பட்ட பட்டினியாலும் தவத்தாலும் அவர்களின் தேகங்கள் வத்தலும் தொத்தலுமாக இருந்தன. ஆன்மிகவாதிகள் என்றால் இப்படி சோப்ளாங்கிகளாக இருக்க வேண்டும் என்று அவர்களின் மனதில் ஒரு தவறான கருத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை அவர் கண்டார். அவர்களின் ஆன்மா ஒளி வீசிக் கொண்டிருந்தாலும் உடல் படு மோசமாக இருந்தது. போதிதர்மா ஒரு முழுமைவாதி. உடல் ஆராதனைக்கு உரியது என்னும் கருத்துடையவர். ஓர் ஆன்மிகவாதிக்கு உடல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை அந்த பிட்சுக்களுக்கு எடுத்துச் சொல்லி அதற்கான செய்முறைகளை அவர்களுக்கு வகுத்துக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதற்காக அருகில் இருந்த ஒரு குகையில் ஒன்பது வருடங்கள் தியானம் செய்கிறார் போதிதர்மா. ஒன்பது வருடங்களும் அவர் ஒரு சுவற்றைப் பார்த்தபடி அமர்ந்து தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. (இது என்ன வகை தியானமோ தெரியவில்லை. ஓஷோ இந்த தியானத்தைத் தன் சீடர்களுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். கம்பம் நகரில் அடங்கியுள்ள சூஃபி மகான் அம்பா நாயகம் (ரஹ்) அவர்கள் இதுபோல் சுவற்றைப் பார்த்தபடி பல வருடங்கள் அமர்ந்திருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.)


ஒன்பது வருடங்கள் தியானம் செய்த போதிதர்மா அங்கிருந்து கிளம்பியபோது அந்த இடத்தில் இரும்புப் பெட்டி ஒன்றை விட்டுச் செல்கிறார். பிட்சுக்கள் அதைத் திறந்து பார்த்தபோது அதில் இரண்டு கிரந்தங்கள் இருந்தன. ”க்ஸி சுய் ஜிங்” (மஜ்ஜை சுத்திகரிப்பு) மற்றும் “யி ஜின் ஜிங்” (தசைகளின் மாற்றம்) என்னும் நூல்கள் அவை. இவற்றில் முதல் நூலை போதிதர்மாவின் சீடரான ஹுய்கே என்பவர் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறைந்து போகிறார். இரண்டாம் நூலை புத்த பிட்சுக்கள் எடுத்துக்கொண்டு அதில் இருந்த பயிற்சிகளை மாற்றியமைத்து ஷாவொலின் குங்ஃபூ கலையாக மாற்றிவிட்டார்கள். இப்படித்தான் போதிதர்மா குங்ஃபூவின் பிதாமகராக புனையப்பட்டார் என்று டாங் ஹாவோ, ஸூசென், மத்ஸுடா ர்யூச்சி, லின் போயுவான் போன்ற வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இது ஒரு புனைவுக்கதையாகவே இருந்தாலும் இதில் அற்புதமான ஒரு உள்-பார்வை (insight) இருக்கிறது. அதாவது, போதிதர்மா மனம்-உடல் இரண்டையுமே வலிவுள்ளதாக மாற்றுவதற்கான பயிற்சிகளைத்தான் வழங்கியிருக்கிறார். மஜ்ஜை என்பது அகத்தைக் குறிக்கும். தசைகள் என்பது உடலைக் குறிக்கும். இன்னொரு பார்வையில் மஜ்ஜை என்பது ஆன்மிக சாராம்சத்தைக் குறிக்கும். தசைகள் என்பவை புறச் சடங்குகளைக் குறிக்கும். ஆனால் அந்த பிட்சுக்கள் போதிதர்மாவின் ஆன்மிக சாராம்சத்தை விளங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை. எனவே அது ஒரு சீடரின் வழியே ரகசியமாக்கப்பட்டு விட்டது. பிட்சுக்கள் புறச்சடங்குகளை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். அதனைப் போர்க்கலையாக மாற்றிவிட்டார்கள்!


இதில் இன்னொரு புள்ளியும் கவனத்திற்குரியது. அதாவது, போதிதர்மா சீனாவிற்குச் சென்றபோதே அங்கே பௌத்த மதம் ஏற்கனவே பரவியிருந்தது. பிறகு ஏன் போதிதர்மா சீனாவிற்குச் சென்றார்? இதற்கான அருமையான விளக்கத்தை ஓஷோவின் “BODHIDHARMA – THE GREATEST ZEN MASTER” என்னும் நூலில் காணலாம். போதிதர்மா ஓஷோவைக் கவர்ந்த மிக முக்கியமான ஆன்மிக ஆளுமை. போதிதர்மா புத்தருக்கு அறுநூறு வருடங்கள் பின்னால் தோன்றியவர். அவர் சீனா செல்வதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே பௌத்தம் அங்கே சென்றுவிட்டது. போதிதர்மா பௌத்த குரு-சிஷ்ய மரபில் இருபத்தெட்டாவது தலைமைக் குருவாக வருகிறார். ஜென் ஞானியான அவருடைய குரு ஒரு பெண் ஞானி! அவரின் பெயர் ‘ப்ரக்யதாரா’. அவர்தான் போதிதர்மாவை சீனாவிற்குச் செல்லும்படி கட்டளையிட்டவர். சீனாவில் பௌத்த மதத்தின் சடங்குகள் மட்டும் இருந்தன. அவை ஆன்மிக சாரமற்று வெறும் சக்கைகளாக இருந்தன. கன்ஃப்யூசியஸின் ‘அறத்துப்பால்’ மீண்டும் மீண்டும் மக்களைக் காய்ச்சிக்கொண்டிருந்தது. லாஓஸு, சுவாங்க்ஸு மற்றும் லெய்ஸு ஆகிய தாவோ மூலவர்கள் உருவாக்கிய அற்புதமான ஆன்மிக நெறி பொதுமக்களிடம் சென்று சேராமல் இருந்தது. இந்தச் சூழலில்தான் போதிதர்மாவின் பணி தேவைப்படுகிறது. அப்பணியால் பௌத்தம் தாவோவுடன் இணைந்து ‘ச்சான்’ (chan) ஆகிப் பின்பு அது ஜப்பானில் ’ஜென்’ (ZEN) என்பதாக வடிவம் கொண்டுவிட்டது. இது ஒரு மகத்தான ஆன்மிகப் புரட்சி!

புறச்சடங்குகள் வெகுஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும், ஆன்மிக சாராம்சம் தகுதியான சிலரால் மட்டுமே ரகசியமாகப் பேணப்படுவதுமான நிலையை நாம் எல்லாச் சமயங்களிலும் பார்க்க முடியும். உதாரணமாக, இஸ்லாத்தில் சூஃபி மரபு தோன்றுவதன் புள்ளியைக் காட்டும் ஒரு நபிமொழியைப் பாருங்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (மார்க்கக் கல்வியின்) இரண்டு பாத்திரங்களை நான் பாதுகாத்துக் கொண்டேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்.” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி, அத்தியாயம் 3 – கிதாபுல் இல்ம், ஹதீஸ் எண்:120)


புத்தரைப் போலவே போதிதர்மாவும் ஓர் இளவரசர். அவர் பல்லவ மன்னனின் மகன் என்று சொல்லப்படுகிறது. ‘களறிப்பயட்டு’ என்னும் தற்காப்புக் கலை வளர்ந்திருந்த கேரளப்பகுதியில் இருந்தவர் என்று ஒரு கருத்தும் உள்ளது. புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட போதிதர்மா அரச வாழ்வைத் துறந்து பௌத்த நெறியில் தீட்சை பெற்றுக்கொண்டார். 

அரச வாழ்வைத் துறந்து ஆன்மத் தேடலில் நாடோடியாகக் கிளம்புகிறேன் என்ற தன் முடிவை போதிதர்மா சொன்னபோது மன்னர் அவரைத் தடுத்தார். போதிதர்மா அவரை நோக்கி “சாவை விட்டும் என்னை நீங்கள் காக்க முடியும் என்றால் இங்கேயே இருக்கிறேன். உங்களால் அது முடியாது என்றால் நான் புறப்படுவதைத் தடுக்காதீர்கள்” என்று சொன்னார். ஆனால், மரணத்தை விட்டு ஒருவரை எந்த மனிதரால்தான் காப்பாற்ற முடியும்? எனவே கண்ணீரோடும் ஆசிகளோடும் மன்னர் தன் இளவரசனை அனுப்பிவைத்தார். அப்படிப் புறப்பட்டவர்தான் போதிதர்மா.

தன் குரு ப்ரக்யதாராவின் மறைவிற்கும் பின் அவரின் கட்டளையை நிறைவேற்ற போதிதர்மா கி.பி.520-ல் சீனா சென்றார். இந்தியாவிலிருந்து ஒரு மகாஞானி – பௌத்த மதத்தின் 28-வது தலைமைக்குரு - வருகிறார் என்பதை அறிந்த நான்ஜிங் பிரதேச மன்னர் லியாங் வூ-டி அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கிறார். அப்போது அவர் போதிதர்மாவிடம் கேட்ட கேள்வியும் அதற்கு போதிதர்மா சொன்ன பதிலும் மிகவும் சுவையானவை. போதிதர்மா எப்படிப்பட்ட ஞானி என்று காட்ட அது ஒரு சோற்றுப்பதம்.

ஓஷோவின் வார்த்தையில் சொல்வதென்றால் போதிதர்மா ஒரு கிளர்ச்சியாளர் (REBEL). அவருடைய அகப்பார்வை சடங்குகளின் தோலையும் சதையையும் எலும்பையும் துளைத்து நேராக மஜ்ஜையைத் தொடுவது. மன்னர் வூ-டி சீனாவில் நிறைய புத்த மடாலயங்களைக் கட்டியிருந்தார், அதில் பல்லாயிரம் பிட்சுக்களுக்கு போஷகம் அளித்து வந்தார். எனவே அவர் தன் பௌத்தத் தொண்டினைச் சுட்டிக்காட்டி போதிதர்மரிடம் கேட்டார், “மகாஞானியே! என்னுடைய இந்த தர்ம காரியங்களுக்காக சொர்க்கத்தில் நான் பெறப்போகும் சன்மானம் என்ன?” இதைக் கேட்டதும் போதிதர்மா மிக நிதானமாகச் சொன்னார், “உங்களின் காரியங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. நீங்கள் நேராக நரகத்தில்தான் விழுவீர்கள்.” இந்த விடையைக் கேட்டு மன்னருக்கு ஆத்திரமும் குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த உணர்வு ஏற்பட்டது. போதிதர்மா ஏன் அப்படிச் சொன்னார்? அந்த மன்னர் பெயருக்காகவும் புகழுக்காகவும்தான் அந்த தர்ம காரியங்களை எல்லாம் செய்துவந்தார் என்பதை அவரைப் பார்த்ததுமே போதிதர்மா கண்டுவிட்டார். போதிதர்மா போன்ற ஒரு ஞானியின் கண்கள் உள்ளத்தை ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்கள் கொண்டவையாகத்தான் இருக்கும்! சுயநல எண்ணத்துடன் நிறைவேற்றப்படும் தர்ம காரியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதைத்தான் அவர் அப்படிச் சுட்டிக்காட்டினார்.

இக்கருத்தைக் கூறும் நபிமொழி ஒன்று என் நினைவுக்கு வருகிறது: “செயல்கள் அனைத்தும் உள்நோக்கத்தைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது.” (அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் (ரலி), நூல்: புகாரி, அத்தியாயம்: 1 – கிதாப் பத்உல் வஹ்யி, ஹதீஸ் எண்: 1)

போதிதர்மாவைப் பற்றிப் பேசும்போது மறக்காமல் பேசவேண்டிய இன்னொரு விஷயம் தேநீர். ஆமாம், குங்ஃபூ கலையின் பிதாமகர் என்று அவர் சிலாகிக்கப்படுவது போலவே தேநீரைக் கண்டுபிடித்தவர் என்றும் போற்றப்படுகிறார். தேநீர் என்பது சீனர்களின் வாழ்வில் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. ஜென் நெறியில் தேநீர் என்பது விழிப்புணர்வின், ஞானத்தின் குறியீடு. அலுவலகங்களில் நாமும்கூட கொஞ்சம் அசமந்தமாக உணர்ந்தால் தேநீர் பருகிவர கடை நோக்கி நடையைக் கட்டுகிறோம் அல்லவா? ஆனால், நாம் அரசியல் அல்லது கிசுகிசு பேசிக்கொண்டே, போண்டா, வடை அல்லது பஜ்ஜியைக் கடித்துக்கொண்டே அருந்துவது போல் சீனாவிலும் ஜப்பானிலும் உள்ள ஜென் மக்கள் தேநீர் அருந்துவதில்லை. அப்படிச் செய்வது அவர்களுக்குத் தெய்வ குத்தம்! நரகத்தில் தள்ளிவிடக்கூடிய பாவம். தேநீர் பருகுவது என்பது அவர்களுக்கு ஒரு நுட்பமான கலை, ஆழமான தியானம், ஒருவகை தாம்பத்ய சம்போகம்! 


மேலும், அவர்கள் அருந்துவது ஆங்கிலேயன் விரும்பிப் பருகும் தூசித் தேநீர் (dust tea) அல்ல. அவர்கள் பருகுவது பச்சைத் தேநீர் (Green Tea) அல்லது வெண் தேநீர் (White Tea). நான் ஒரு தேநீர்ப் பைத்தியம். பழச் சுவை கொண்ட தேநீர், பூக்களின் மணம் கொண்ட தேநீர், பெர்கமாண்ட் என்னும் சிட்ரஸ் பழம் போட்ட ‘ஏர்ல் க்ரே’ தேநீர், இஞ்சி-புதினா-எலுமிச்சை போட்ட பச்சைத் தேநீர், கெமோமைல் போட்ட பச்சைத் தேநீர் என்று விதவிதமான தேநீர் வாங்கி வைத்து அவ்வப்போது பருகுவேன். அவற்றில் மிகவும் விரும்பிப் பருகுவது க்ரீன் டீதான். என் பிள்ளைகளும் அதற்கு ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். (வெண் தேநீர் தேச்செடியின் பூக்களில் இருந்து எடுக்கப்படுவது. அதைச் சுவைக்க வேண்டும் என்னும் ஆசை இன்னும் நிறைவேறவில்லை.)

சரி, தேநீரை போதிதர்மா எப்படிக் கண்டுபிடித்தார் என்பதைப் பார்ப்போம். இது ஒரு தொன்மக் கதையாக ஜென் வட்டாரத்தில் சொல்லப்பட்டு வருகிறது. போதிதர்மா இரவும் பகலும் தொடர்ந்து தியானம் செய்து வந்தார். அப்படி இருக்கையில் அடிக்கடி சொக்கிக்கொண்டு தூக்கம் வந்தது. தியான நிலையில் இருந்து நழுவித் தூக்கத்தில் மனம் விழுவதை எண்ணி அவருக்குத் தன்மீதே கோபம் வந்தது. ஒரு நாள் அவர் தன் இமைகளைப் பிய்த்து மண்ணில் வீசியெறிந்தார். அவை விழுந்த இடத்தில் புதர் ஒன்று முளைத்தது. அவர் தியானம் செய்து கொண்டிருந்த மலையின் பெயர் ’டாய்’. எனவே அந்த மூலிகை சீன மொழியில் ‘டே’ என்று அழைக்கப்பட்டது. அதன் இலைகளைக் கொதிநீரில் போட்டு கசாயம் வைத்துக் குடித்தபோது சோம்பலை நீக்கிப் புத்துணர்ச்சி ஏற்படுவதை அறிந்தார்கள். அப்போதிலிருந்து தேநீர் அருந்துவது ஜென் நெறியிலும் சீனக் கலாச்சாரத்திலும் ஒரு முக்கியமான நிகழ்வாக, தியான முறையின் ஒரு அங்கமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

போதிதர்மா ஒரு முரட்டு மனிதர் என்பதை முன்பே சொன்னேன். அவர் தன் கையில் எப்போதும் ஒரு கைத்தடி வைத்திருப்பார். மகாத்மா காந்தி வைத்திருப்பது போன்று வழவழப்பான நேரான கைத்தடி அல்ல அது. காந்திஜி வைத்திருந்தது அஹிம்ஸா கைத்தடி. போதிதர்மா தன்னைப் போலவே கரடு முரடான கைத்தடி வைத்திருந்தார். பேருக்குத்தான் அது கைத்தடியே தவிர, அதைப் பார்த்தால் அவர் ஏதோ ஒரு மரத்தையே வேறோடு பிடுங்கி வைத்திருப்பது போல் இருக்கும். முண்டு முடிச்சு உள்ள அந்தத் தடியை அவர் ஆன்மிக போதனைக்கும் பயன்படுத்தினார். அதாவது, ‘மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனம் குரங்கு போல் தாவிக்கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனதிலிருந்து விடுதலை அடைவது எப்படி?’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டு வரும் சீடர்களை நோக்கி, “அப்படியா அந்த மனதைப் பிடித்துக் கொண்டு வாருங்கள். ஒரே அடியில் போட்டுத் தள்ளிவிடுகிறேன்.” என்று சொல்லித் தன் கைத்தடியைக் காட்டுவார்! (இந்தக் கைத்தடியை போதிதர்மா வைத்திருப்பதாக ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தில் காட்சிப் படுத்தியிருப்பதைப் பார்க்க நன்றாக இருக்கிறது.)

இதையெல்லாம் படிக்கும்போது அவர் ஒரு தமாஷ் பேர்வழியாக நமக்குத் தெரியலாம். அது உண்மைதான். ஜென் நெறியில் தமாஷ் செய்யத் தெரியவில்லை என்றால் ஞானம் அடைந்த குருவாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஞானத்தின் அலாதியான சுவைகளில் நகைச்சுவை அவர்களுக்குப் பிரதானமானது. சூஃபி மரபில் நகைச்சுவைக்கு ஒரே ஒரு முல்லா நஸ்ருத்தீன் மட்டுமே இருக்கிறார். ஆனால் ஜென்னில் ஏறத்தாழ எல்லா ஞானிகளுமே முல்லாக்கள்தான்!

போதிதர்மா தன் கடைசிக் காலத்தில் இமயமலைப் பகுதிக்குச் செல்ல விரும்பினார். ஹாய்கோ என்னும் சீடனைத் தன் வாரிசாக அறிவித்தார். இதனால் அவர் மேல் மனத்தாபம் கொண்ட ஒருசில சீடர்கள் அவரின் உணவில் விஷம் வைத்து விட்டார்கள். அதை உண்ட போதிதர்மா ‘கோமா’வில் விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக அறிவித்து மடாலயத்திலேயே அவரைப் புதைத்துவிட்டார்கள். இது நடந்து சில நாட்கள் கழித்து சீனாவின் எல்லையில் அவர் நடந்து செல்வதை எல்லைக் காவல்காரன் ஒருவன் காண்கிறான். அவனுக்கு போதிதர்மாவை நன்றாகத் தெரியும். அவர் தன் கைத்தடியின் முனையில் ஒற்றைச் செருப்பைக் கட்டித் தொங்க விட்டிருப்பதைக் கண்டு அதற்கான காரணத்தை வினவுகிறான். “மடாலயத்திற்குப் போய் என்னை நீ இந்தக் கோலத்தில் பார்த்ததாகச் சொல். விவரம் உனக்கே விளங்கும்” என்று போதிதர்மா அவனிடம் சொல்லிவிட்டு எல்லையைக் கடந்து இமயமலைக்குச் சென்றுவிட்டார். அந்தக் காவலன் மடாலயத்திற்குச் சென்று தான் போதிதர்மாவைப் பார்த்ததாகச் சொல்கிறான். அவர்கள் அவரின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அதனுள் அவருடைய மற்றொரு செருப்பு மட்டும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியாக போதிதர்மாவின் முடிவு சொல்லப்படுகிறது.
 
போதிதர்மாவை நான் நேசிப்பது அவர் ஒரு தமிழர் என்பதற்காகவோ அல்லது குங்ஃபூ கலைக்காகவோ அல்ல. அவரின் ஞானத்திற்காகத்தான். ‘மனதிலிருந்து விடுதலை அடைய வேண்டியதில்லை. மனதிற்குள் ஆழ்ந்து ஆழ்ந்து போய்க்கொண்டே இருங்கள். இறுதியில் மனமே புத்தராக இருப்பதைக் காண்பீர்கள். மனதின் எதார்த்த நிலையே ஞானம்தான்” என்பதுதான் அவரது போதனைகளின் சாரம். மனம் என்பது ஆறாம் அறிவாகச் சொல்லப்படுகிறது. ஏழாம் அறிவு என்பது மனத்திற்கு அப்பால் உள்ளதல்ல. மனம் தன் எதார்த்த நிலையை அடைவதாகும் என்று சொன்னவர் அவர். அந்த நிலையை அடையும்போது மனத்தின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். கால-இடத் தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.
 
போதிதர்மாவின் ஞானம் மிளிரும் பல நூறு பொன்மொழிகளை எடுத்துச் சொல்ல முடியும். ஒரு மரியாதைக்காக இங்கே ஏழு மட்டும் தருகிறேன் (ஏழாம் அறிவு என்று வந்துவிட்டதால் ஏழு):
 
’மனம் எப்போதும் இக்கணத்தில் இருக்கிறது. நீதான் அதைக் காண்பதில்லை’
பாதையை அனைவரும் அறிவார்கள். அதில் நடப்பவர்கள் சிலரே’
’மாயைகளை உருவாக்காமல் இருப்பதே ஞானம்’
’வாழ்வும் சாவும் முக்கியமானவை. அவற்றை வீணடிக்காதீர்கள்’
’ஞானமே உங்களின் நிஜ உடல், உங்கள் நிஜ மனம்’
’மொழியைக் கடந்து போ, எண்ணத்தைக் கடந்து போ’
 
 
நன்றி...

Sunday, October 16, 2011

உள்ளாட்சி தேர்தலும்... பண மழையும்...

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெருமளவு பணப்புழக்கம் தடுக்கப்பட்டது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் எங்கு பார்த்தாலும் பணமே மூலதனமாக கொண்டு வாக்காளர்களை நன்கு கவனிக்கின்றனர். இன்று பட்டி தொட்டி எல்லாம் பேச்சு தேர்தலிப்பற்றித்தான். தேர்தல் முடிவு வந்த பின் வெற்றி பெற்றவர் கிளம்பிவிடுவார் செலவு செய்த தொகையை சம்பாரிப்பதற்கு.

உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என்று பிரித்து பல பதவிகள் இருந்தாலும் கிராமப்புறங்களில் அனைவருக்கும் ஈர்ப்பு ஊராட்சி மன்ற தலைவருக்குத்தான். இந்திய அரசியல் அமைப்பில் மற்ற தலைவர்களுக்கு இல்லாத தகுதி இவருக்கு உண்டு அதுதான் செக் பவர். நமது சட்ட அமைப்பில் குடியரசுத் தலைவரை President என்று அழைக்கிறோம் அவருக்கு அடுத்து ஊராட்சி மன்ற தலைவருக்கு அந்த பெருமை உண்டு.

பச்சை மையில் கையெழுத்திடும் அதிகாரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு உண்டு. அதனால் தான் ஊராட்சி அமைப்பில் கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் போன்ற பதவிகள் இருந்தும் ஊராட்சி மன்ற தலைவருக்கு தான் அநேகம் பேர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.

4000 ஓட்டுக்கள் கொண்ட ஊராட்சியில் தலைவருக்காக குறைந்த பட்சம் 7 பேராவது போட்டியிடுகின்றனர். 7 பேரும் தங்கள் மாமன், மச்சான், அண்ணன், தம்பி என அனைவரையும் அழைத்து பணத்தை தண்ணீராக செலவழிக்கின்றனர் என்றால் அது மிகையாகது.

கடந்த வாரத்தில் சிலநாட்கள் மேற்கு மண்டலத்தில் சுற்றும் வாய்ப்பு கிடைத்தது எங்கு காணினும் மினி வேன்களில் வேட்பாளரது பெயருடன் இரு பக்கமும் ப்ளக்ஸ் பேனர் வண்டி மேற்கூரையில் ஸ்பீக்கர் என களை கட்டுகிறது. அதுவும் கிராமப்புறங்களில் முச்சந்திப்பு இருக்கும் அங்கு எல்லா வாகனமும் நின்று என் சின்னத்துக்கு போடுங்க என்ற குரல் விண்ணைப்பிளக்கும்.

வேட்பாளர்கள் ரொம்ப பிஸியான நேரம் மாலை 7 மணிக்கு மேல் தான் ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தன்னுடன் ஒரு 50 பேரை சேர்த்துக்கொண்டு இரவு 11 மணி வரை வாக்கு சேகரித்து பின் வந்தவர்கள் அனைவருக்கும் ஒரு குவாட்டர் மற்றும் இரவு விருந்து நடைபெறுகிறது. இன்னும் வெற்றி செலவு செய்பவர்கள் கிடாவிருந்து நடத்துகின்றனர்.

ஒரு சில  வேட்பாளர்கள் தன் வீட்டருகே பந்தலிட்டு அதில் டேபிள் சேர் போட்டு எப்போது யார் அந்த பக்கம் வந்தாலும் உட்கார வைத்து விருந்திட்டு கையில் ஒரு குவாட்டர் கொடுத்து எங்களுக்கே உங்கள் வாக்கு என்று சத்தியம் வாங்கி அனுப்புகின்றனர். தங்களது ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களை பிரித்து தினமும் ஒரு ஊரில் உள்ள மக்களை அழைத்து அனைவருக்கும் கிடா விருந்து வைத்து ஓட்டு கேக்கின்றனர்.
 
பல இடங்களில் பரிசுப்பொருட்கள் கொடுத்து வாக்கு கேட்டால் மக்கள் கூச்சப்படாமல் வாங்கி மகிழ்கின்றனர். பொதுமக்களைப் பொறுத்த வரை கிடைத்தவரை இலாபம் என்று உற்சாகமாகத்தான் இருக்கின்றனர். வேட்பாளர்கள் பெண்கள் ஆராத்தி எடுக்கும் போது பணம் கொடுத்து வாக்கு சேகரித்தல் அனைத்து இடங்களிலும் நடக்கும்.
வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தலால் சட்டமன்ற தேர்தலில் கிடைக்காத அனைத்தும் இப்போது கிடைக்கின்றது என்று பாகுபாடு இன்றி அனைத்து வேட்பாளர்களிடமும் உங்களுக்குத்தான் எங்கள் வாக்கு என்று சந்தோசமாக அனுபவிக்கின்றனர்.

இந்த உள்ளாட்சி தேர்தலால் அதிக இலாபம் அரசுக்குத்தான். தினமும் டாஸ்மார்க்கில் பெட்டி பெட்டியாக சரக்கு விற்பனையாகின்றது. தினமும் 100 கோடிக்கு விற்பனை ஆகிறது என்றால் கடந்த 15 நாட்களாக விற்பனை இரு மடங்கை நிச்சயம் எட்டி இருக்கும். 5 நாட்கள் டாஸ்மார்க்கு விடுமுறை என்றதும் கடைசி நாள் மட்டும் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 கோடியைத்தாண்டும் விற்பனை என்கிறார்

இத்தனை பணத்தை தண்ணீராக  செலவழித்தாலும் நிச்சயம் செலவு செய்பவருக்குத்தான் உங்கள் ஓட்டா என்று மக்களிடம் பேசியதில் அறிந்தது அது எங்களுக்கு பிடித்தவர்களுக்கும் எங்கள் ஊர் முடிவு செய்யும் வேட்பாளருக்கும், யார் வந்தால் நமக்கு எளிதாக காரியம் ஆகும் என்று மக்கள் பார்த்து தான் வாக்களிக்கின்றனர்.
எவ்வளவு தான் பண மழை பெய்தாலும் மக்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு பிடித்தவருக்கு வாக்களிப்போம் என்று தெளிவாகத்தான் இருக்கின்றனர்....

Thursday, October 13, 2011

அஞ்சறைப்பெட்டி 13.10.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

தொடர்ந்து 35 வாரங்கள் எழுதிய அஞ்சறைப்பெட்டி கடந்த ஒரு மாதமாக சரியாக எழுத இயலவில்லை. அலுவலக வேலை பளு முக்கிய காரணம். எனது தந்தைக்கு கடந்த இருவாரங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருடன் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாகிவிட்டது. இனி வரும் காலங்களில் அஞ்சறைப்பெட்டியில் காரம் சாரமாக எதிர்பாருங்கள்...

...............................................................................................

மருத்துவமனையில் இருந்த நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவங்கள்...

ஒரு பெண்ணின் கணவர் 25 நாட்களாக கோமா நிலையில் உள்ளார் அவரின் உறவினர்கள் யாரும் பிழைக்க மாட்டார் என்று சொல்லியும் அப்பெண் பிழைக்க வைப்பேன் என்று தனது கணவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். 25 நாட்களுக்கு பின் அவரின் கை, கால்கள் அசைந்துள்ளது. நாங்கள் சென்ற அன்று அவருக்கு பிடித்த இளையராஜா பாடல்களை கேட்க வைத்திருந்தனர். அப்பெண்ணின் தீவிர முயற்சி பலன் அளித்துள்ளது அப்பெண் மாமா என்று அழைத்தால் அவர் கண் விழித்துப் பார்க்கிறார் தற்போது. நாங்கள் வந்த அன்று அவர் கையை அசைத்து கண்களை சிமிட்டும் அளவிற்கு முன்னேற்றம் இருந்தது...

தனது கணவனை காப்பாற்ற வேண்டும் அவருடன் வாழ வேண்டும் என்ற வைராக்கியம் நிறைய இருக்கும் ஆனால் இப்பெண் தன் கணவன் மேல் கொண்ட காதலை சொல்ல வார்த்தையில்லை...

அப்பெண்ணின் கணவர் மீண்டும் அப்பெண்ணிற்கு கிடைக்க எனது வாழ்த்துக்கள்.... அந்த பெண்ணின் காதலுக்கும், தன்னம்பிக்கைக்கும் ஒரு சல்யூட்...

...............................................................................................

எப்ப வரும் எப்ப வரும் என்று காத்திருந்த மழை நேற்று வானத்தை பொத்துக்கொண்டு ஊத்தியது. நேற்று மழை பெய்யும் போது கேன்டினில் நின்று கொண்டு இருந்தேன் அடித்த பலமான மழையில் 30 அடி தூரமுள்ள பக்கத்து அபார்ட்மெண்ட் தெரியாத அளவிற்கு பொத்துக்கொண்டு ஊற்றியது.
மாநகரங்களில் மழை பெய்தால் சாலையோர கழிவு நீர் எல்லாம் சாலையில் புகுந்தது வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை எல்லாம் நாற்றத்துடன் வீடு போய் சேர வேண்டி உள்ளது.

கோவையிலேயே இப்படினா சென்னை எல்லாம் கேக்க வேண்டியதில்லை....

................................................................................................

உள்ளாட்சி தேர்தல் களை கட்டுகிறது தினமும் இரவு கோட்டரும், புரோட்டாவும் உள்ளே போகிறது. சில பஞ்சாயத்துகளில் மக்கள் இரவு நேரங்களில் வீட்டுல் அடுப்பு பற்றவைப்பதில்லையாம் தினமும் சூடான சோறு இலவசமாக...

எல்லாம் இன்னும் ஒரு நாலு நாளைக்குத்தான் அப்புறம் ஜெயிச்சவன் கண்டுக்கவே மாட்டானுக....
................................................................................................


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்து கைதாகப்போவது யார் என்று பட்டி தொட்டி எல்லாம் பட்டிமன்றமே நடக்கிறது.. யாருன்னு பொறுத்திருந்து பார்ப்போம்....

..................................................................................................

இந்த உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால் ஒவ்வொரு கட்சியின் வாக்கு வங்கியை தற்போது தெரியவரும்...


அதுவும் காங்கிரஸ் வாக்குவங்கியை காண ஆவலுடன் இருக்கிறேன்....

..................................................................................................

 கூடங்குளம் பிரச்சனை மீண்டும் கிளம்பி உள்ளது பிரதமரின் கடிதத்தால் முதல்வரின் முடிவு நிச்சயம் பொதுமக்கள் பக்கம் இருக்கும்....

..................................................................................................
பிஎட் மாணவர் சேர்க்கையில் ஊழல், டிஎன்பிசியில் ஊழல் என தினமும் ஒரு செய்தி வருகிறது... ஊழல் இல்லாத துறை என்று எதையும் சொல்ல இயலாது....


தகவல்

சந்திரனில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா ஒரு விண்கலம் அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமராக்கள் சந்திரனின் மேற்பரப்பை போட்டோக்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

7 விதமாக எடுத்து அனுப்பப்பட்ட அவற்றை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் மூலம் ஏற்கனவே கடந்த 1972-ம் ஆண்டு அப்பல்லோ-17 விண்கலம் மூலம் சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்கள் அங்கு வெட்டி எடுத்து வந்த பாறைகளில் பரிசோதனை மேற்கொண்டனர்.  

அதில் டைட்டேனியம் டி என்ற உலோக தாதுக்கள் இருப்பது தெரியவந்தது. டைட்டேனியம் என்பது உருக்கு உலோகத்தை விட மிகவும் உறுதியானது. இந்த உலோகம் பூமியில் ஒரு சதவீதம்தான். அதாவது மிக குறைவாக உள்ளது. ஆனால் சந்திரனில் அவை கொட்டிக் கிடக்கின்றன. அதாவது 10 மடங்கு அதிகம் இருக்கிறது. இவை பாறைகளில் மறைந்து கிடக்கின்றன.   டைட்டேனியம் தவிர இரும்பு தாதுக்களும் மறைந்துள்ளன.

இந்த தகவலை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் தெரிவித்தார். பிரான்சில் உள்ள நான்டெஸ் என்ற நகரில் நடந்த மாநாட்டில் தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்து இந்த தகவலை வெளியிட்டார்.


அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் யசோதாகாந்த். இதமான அலைகள் என்ற பெயரில் வலைப்பூ எழுதிவருகிறார்.. இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது.

 
தத்துவம்

குழ‌ந்தைகளே, ம‌னித‌ர்க‌ளம‌னித‌ர்களாவா‌ல ‌சிற‌ந்பொ‌ன்மொ‌ழிகளமகா‌ன்களு‌ம், அ‌றி‌ந்தவ‌ர்களு‌‌மகூ‌றியு‌‌ள்ளன‌ர். அவ‌ற்றபடி‌த்தஅத‌ன்படி வா‌ழ்‌‌ந்தகா‌ட்டுவோ‌ம். 

ந‌ம்‌பி‌க்ககுறையு‌மபோதஒ‌வ்வொரம‌னிதனு‌மநெ‌றிய‌ற்கொ‌ள்கையமே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

ஊ‌சி முனை‌யி‌லதவ‌மசெ‌ய்தாலு‌மஉ‌ன்னதுதா‌ன் ‌கி‌ட்டு‌ம். 

Tuesday, October 11, 2011

கிராமத்துக் காதல்

செந்தாம்பாளையம் என்னும் அழகிய கிராமத்தில் உள்ள பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 40 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இதில் 15 மாணவ, மாணவிகள் செந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள். இக்கிராமத்தை சேர்ந்த மாணவர்களில் 5பேர் மட்டும் தனி அணி எப்போதும் ஒன்றாகத்தான் இருப்பார்கள் பள்ளியிலும் ஊரிலும் இவர்கள் அனைவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள்.

அந்த ஊரில் உள்ள மைதானத்தில் தினமும் மாலை வேலை இவர்களுக்கு கபடி விளையாடுவது மற்றும் சைக்கிள் ஓட்டிப்பழகுவது இதுதான் வேலை. இது தான் இவர்களின் அன்றாட நடைமுறை 6 மணிக்குமேல் ஊரில் உள்ள சிறுபாலத்தின் மேல் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருப்பது பொழுதுபோக்கு. அப்போது வந்த சினிமா பாடல்களை எல்லாம் கேட்டு காதலைப்பற்றி பேசுகிறார்கள். இதுதான் இவர்களது பொழுதுபோக்கு.
 ஒருநாள் செந்தில் கூறுகிறான் டேய் நாமளும் காதல் செய்யலாமடா. ஐயோ எங்கம்மாவுக்கு தெரிஞ்சா விளக்குமாத்துல பின்னிடுவாங்கடா நான் வரலை என விஜய் கூறுகிறான் அதற்கு குமார் ஆமாண்ட எங்க வீட்லியும் பின்னிடுவாங்க. போடா யாருக்கும் தெரியாது நாம பண்ணலாமடா இது சத்யா. எல்லாரும் இன்னிக்கு இரவு வீட்டுக்குப்போய் முடிவுபண்ணுங்க நாளை ஞாயிறு தான் எல்லாம் காலை கிணத்து மேட்டில் சந்திப்போம் இது கவுதமன்.

 அடுத்தநாள் கிணத்துமேட்டில் அனைவரும் ஆஜர். சத்யா மட்டும் வரல. என்னடா முடிவு செய்தீர்கள் என ஆரம்பிக்கிறான் கவுதமன் எல்லோருக்கும் சரின்னு நினைக்கிறேன் ஆனா யாருக்கும் தெரியாம செய்யனும் இருங்கடா சத்யாவும் வரட்டும் இல்லைனா இரண்டு நாளைக்கு பேசமாட்டான்னு விஜய் சொல்லவும் சத்யா காதில் கேட்டபடியே வர என்னாடா என்னைத் திட்டறீங்க எங்க அப்பா கறி வாங்கிட்டு வான்னு கடைக்கு அனுப்பீட்டார் அதுதான் லேட்டு சரி மேட்டருக்கு வாங்க நான் முடிவு செய்துவிட்டேன் என் பக்கத்து வீட்டு கயல்விழிய லவ் பன்றதுன்னு இவன் சொல்ல என்னடா சொல்றீன்னு மற்றவர்கள் கேட்க இல்லடா வரும்போது என்னைப்பார்த்து சிரிச்சிட்டுப் போனா எனக்கும் அவளைப்பிடிக்கும் அதுதான் முடிவு செய்துவிட்டேன். டேய் நீங்க எல்லாம். என்னடா விஜய் சொல்லுங்கடா. ஆமாம் நாங்களும் முடிவு செய்துவிட்டோம் லவ் பண்ணாலாம்னு. நீ கயல்னு சொல்லிட்ட நாங்க யோசிக்கிறேன். உடனே கவுதம் இதில் என்னடா யோசிக்கிறது கயல் நம்ம கூட படிக்கற அது கூட நம்ம பள்ளிக்கூடத்துக்கு வர்ற தேவி எனக்கு, அப்ப விஜய் உனக்குடா எனக்கு நித்யாடா அது எனக்கு மாமா பொண்ணுதான்டா, செந்தில் உனக்கு எனக்கு ஸ்ரீ. டேய் எனக்கு ஸ்ரீடா நீ வேனும்னா ரம்யாவ லவ் பண்ணுடா நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே சண்டை போடுவீங்களே இது குமார். சரிடா உனக்க ஸ்ரீ எனக்கு ரம்யா ஒரு வழியா முடிவு செய்து எல்லாரும் அடுத்த நாள் பள்ளிக்குச் செல்கிறார்கள்.

 பள்ளியில் இவர்களுக்குள்ளே ஒரு சிரிப்பு டேய் என்னப்பாக்கராலான்னு பாரு ஆமாண்டா பாக்கற மாதிரி இருக்கு ஆனா பாக்கலடா எப்படிடா அவகிட்ட பேசறது சரி சாயங்காலம் பள்ளி விட்டு போகும் போது பேசலாமடா என முடிவு செய்து மாலை நாலு மணிக்காக அனைவரும் காத்துகிடக்கின்றனர்.

 பள்ளி விட்டு அனைவரும் போகும் போது பொண்ணுங்க எல்லாம் முன்னாடி போக இவர்கள் பின்னாடி போக நீ பேசு, இல்ல நீ பேசுன்னு யாருமே பேசல இப்படியே நாட்கள் கடந்து விட்டது. ஒரு நாள் டேய் சத்யா உன் வீட்டுக்குப் பக்கத்தில் தான கயல் வீடு நீ பேசு என உசுப்பேத்த சத்யா கயல் எங்க வீட்டுக்கே போறான்னு கேட்க கயல் இல்ல அக்கா வீட்டுக்கு ஏன் கேக்கற என்ன சொல்றதுன்னு தெரியாம பய பேந்த பேந்த விழிக்க கவுதம் புக் வேணும்னு கேள்றான்னு சொல்ல இல்ல என் புத்தகத்தை காணம் அதுதான் உங்கிட்ட வாங்கிக்கலாம்னு கேட்டேன் இரு உங்க அம்மாகிட்ட சொல்றன் புக்கத் தொலைச்சிட்டு ஊர் சுத்தரியா என கயல் கூற பய டேய் ஏன்டா இப்படி பன்றீங்க அவ வீட்ல சொன்னா எனக்கு மாத்துதான்.

இப்படி நாட்கள் செல்ல செல்ல பரிட்சையும் முடிந்து அவர்கள் வகுப்பாசிரியர் அன்று தான் அன்பாக பேசினார் என் மாணவ மணிகளே உங்களுக்கு இந்த வருடத்துடன் இங்கு படிப்பு முடிகிறது இனி நீங்க மேலே படிக்க வேண்டும் என்றால் ஆவாரம்பாளையம் சென்று தான் படிக்க வேண்டும் அனைவரும் நன்றாக படிக்க எனது வாழ்ததுக்கள் உங்களுக்கு எல்லாம் பரிட்ச்சை ரிசல்ட் வருகிற 18ம் தேதி ஒட்டப்படும் பாசானவங்க எல்லாம் ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு செல்லலாம்.

Monday, October 10, 2011

தேன் தேன் தித்திக்கும் தேன்....


தேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நம் சித்தர்கள் தங்களின் தவப்பயனால் கண்டறிந்த சித்த மருத்துவத்தில் தேனை துணை மருந்தாக பயன்படுத்துகின்றனர். தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது. தன்னுடன் சேர்ந்த பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கும்.

சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.


தேனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு தேனுக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள உண்டு.

தேன்.. தேன்.. தித்திக்கும் தேன்..
மலைத்தேன்.. காட்டுத்தேன்...
அழகுக்கு அழகு சேர்க்கும் தேன்...
நோயை விரட்டும் தேன்...
தேன்.. தேன்.. தித்திக்கும் தேன்..

என்று தேனைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். 
மலைத்தேன்

இது மலைப் பகுதிகளில் பாறைகளின் இடுக்குகளிலும் பெரிய மரக் கிளைகளிலும் பெரும் கூடாக கட்டியிருக்கும். இந்த வகைத் தேன் அரிய மருத்துவ குணங்களைக் கொண்டது. சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

நாள்பட்ட சளி, இருமல் போன்றவற்றிற்கும் உடலை வலுப்படுத்தவும், நோயுற்றவர்களுக்கு உடல் நலம் பேணவும் மலைத்தேன் சிறந்த மருந்தாகும். நல்ல குரல் வளத்தைக் கொடுக்கக்கூடியது.


கொம்புத்தேன்

மரங்களின் பொந்துகளில் கூடு கட்டும். இந்த தேனீக்கள் சிறிய கொசுவைப் போல் காணப்படும். இந்த வகையான தேன் கிடைப்பது மிகவும் அரிது.


புற்றுத்தேன்


கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.


மனைத்தேன்

இது வீடுகளில் கட்டுகின்ற தேன். பசியினைத் தூண்டும். உடலை வலுவாக்கும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. 
தேனின் பயன்கள்....


பொதுவாக தேன் சிறந்த கிருமி நாசினி. புண்களை ஆற்றும். நெருப்பினால் உண்டான காயங்களை குணப்படுத்தவும், கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்கவும் இது பயன்படுகிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது.
ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.

அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன.

இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.

ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.

படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும்.

120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும்.

நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.

சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது.

ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

சுத்தமான தேனா என்பதை அறிய...


தேன் வாங்குகிறீர்கள். இது உண்மையான தேனா அல்லது சர்க்கரைப் பாகா என்று கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விடுங்கள். அது சமர்த்தாகப் போய் முத்துப்போல் கப்பின் அடியில் உட்கார்ந்து கொண்டால் நல்ல தேன். கரைந்துவிட்டால் சர்க்கரைப்பாகு.