Wednesday, October 31, 2012

அஞ்சறைப்பெட்டி 1/11/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
தற்போது இணையஉலகில் பரபரபப்பான விசயம் சின்மயி ராஜன் விவகாரம் தான் இவர்கள் பிரச்சனையில் புகார் கொடுத்ததும் உடனே இதன் மேல் நடவடிக்கை எடுத்ததில் எனக்கு உடன்பாடில்லை ஊரில் எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் இருக்கும் போது இதற்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் இதற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இனி இணையத்தில் தனிநபர் தாக்குதல் எதிர் கருத்துக்கள், மாற்றுக்கருத்துக்கள் நிச்சயம் இனி வரும் நாட்களில் குறையும்... இந்த பிரச்சனை பற்றி நண்பர் அதிஷா அவர்கள் வெட்டி எறியப்படும் சிறகுகள் என்ற தலைப்பில் எழுதி கட்டுரை மிக உண்மையான ஒன்று...
  ................................................................
 
 
 
நீலம் புயல் ரொம்ப நீண்டு சென்னையை மிக பாதிப்புக்களாக்கிவிட்டது... மழையைக்காணம் மழையைக்காணம் என்று கூப்பாடு போட்டோம் இன்று நின்றால் போதும் என்ற அளவில் உள்ளது. இந்த புயலுக்காக மாவட்ட நிர்வாகங்கள் எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கை மிக பாராட்டுக்குரியது. அதிக சேதம் இல்லை என்றாலும் நிறைய இடங்கிளில் மரங்கள் விழுந்து கிடக்கின்றன.
..........................................................................................

தமிழகத்தில் தற்போதைய பிரச்சனையான மின்வேட்டு விரைவில் தீர்க்கப்படும் என்று சொல்கின்றனர் இது எந்த அளவிற்கு உண்மை என்று போக போகத்தான் தெரியும். இந்த மின்வெட்டால் மிக பாதிப்புக்குள்ளாவவது சிறு தொழில் மையங்கள் தான். தினமும் வேலை செய்யும் நேரத்தை விட சும்மா இருக்கும் நேரம் தான் அதிகம் என்று புலம்ப ஆரம்பித்துள்ளனர்..


................................................................................................


 
கொசுவால் உருவாகும் டெங்கு காய்ச்சலுக்கு நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலுக்கு பப்பாளி இலையின் சாற்றைக் குடித்தால் சரியாக நிறைய வாய்ப்புக்கள் உள்ளது என்கின்றனர்.

கொசுவை வீட்டினுள் ஒழிக்க சிறிய டம்ளரில் மண்ணெண்ணை ஊற்றி அதில் இரண்டு கற்பூர துண்டுகளை போட்டால் அந்த வாசத்திற்கு கொசுக்கள் வருவதில் என்று அறிவித்துக்கொண்டு இருந்தனர் பஸ்நிலையத்தில் நானும் வீட்டில் போய் செய்து பார்த்தேன்... உண்மைதான் கொசு வரவில்லை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்...

...............................................................................................

குப்பை கூழங்கள் நிறைந்த புனேவின் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் ஜான்முகமதுவின் இரண்டு மகன்களின் ஒருவன் ரிஷ்வான் சேக். அவன் சிறுவயதிலேயே 1 - 100 வரையுள்ள அனைத்து வாய்ப்பாடுகளையும் சரளமாக கூறியுள்ளான். அவன் 5 வயதாக இருக்கும்போதே சிவில் சர்வீஸ் பரீட்சைக்கு தேவையான அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறான். பிறகு பொது அறிவு புத்தகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான போட்டித் தேர்வு புத்தகங்களை வாங்கிக் கொடுக்க, அவன் அனைத்தையும் படிக்க ஆரம்பித்திருக்கிறான்.
 
அவனது திறமையைப் பாராட்டி ஜெர்மன் நிறுவனம் ஒன்று ஒரு பன்னாட்டு கல்வி நிறுவனம் ஒன்றில் 5 வருடத்திற்கு அவனை சேர்த்துவிட்டது. பல்வேறு அவமானங்களுக்கிடையே பள்ளியில் முதலாவது மாணவனாக திகழ்ந்தான்.  பின்னர் உலக பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து அந்த நிறுவனம் அவனுக்கு அளித்த உதவியை நிறுத்திவிட்டது. 10 வயதாகும் இந்த இளம் அறிவு ஜீவியான ரிஷ்வான் சேக்குக்கு ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளும் நன்றாக தெரியும்.
 
...............................................................................................

 
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும் என ஆய்வு நடத்த அமெரிக்காவின் 'நாசா' மையம் கியூரியாசிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பி வைத்துள்ளது. அங்கு அது போட்டோக்களை எடுத்து அனுப்பியும், பல ஆய்வுகளை மேற்கொண்டும் தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.
 
அங்குள்ள பாறையை வெட்டி எடுத்து போட்டோ எடுத்து அனுப்பியது.   தற்போது, அங்கு கனிம வளங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மணலை கியூரியாசிட்டி ஆய்வகத்தில் உள்ள அதிநவீன எக்ஸ்ரே டெலஸ்கோப் மிகவும் உன்னிப்பாக ஆய்வு செய்தது. அதில், பளிங்கு கற்படி வங்கள் உள்ளன. இது ஹவாயில் எரிமலை பகுதியில் இருப்பது போன்று உள்ளது. அதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள மணல் பூமியின் மணல் பரப்பை ஒத்துள்ளது.
 
எனவே அங்கு பூமியை போன்ற கனிம வளங்கள் இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை கியூரியாசிட்டி விண்கல ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி டேவிட் பிளேக் தெரிவித்துள்ளார். தனது 22 ஆண்டு காலகட்டத்தில் தற்போதுதான் அதுபோன்ற அதிசய நிகழ்வுகளை காணமுடிகிறது என தெரிவித்தார்.
...............................................................................................

உலக அளவில் திருமணமான பெண்களில் 3 பேரில் ஒருவர் தாம்பத்திய உறவில் முழு திருப்தி அடைவதில்லை என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே இவர்களுக்கு உதவுவதற்காக வயாகரா போன்ற மருந்து ஒன்றை கனடா மருந்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி இருக்கிறார்கள்.


பெண்களுக்காக விசேஷமாக தயாரிக்கப்பட்ட இத்தகைய மருந்து இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. தாம்பத்திய உறவுக்கு சற்று முன்பு இதை மூக்கு வழியாக நுகர வேண்டும். விரைவில் இது விற்பனைக்கு வர உள்ளது.

இது பற்றி கனடா மோனாஷ் பல்கலைக்கழக பெண்கள் சுகாதாரநல ஆராய்ச்சி திட்ட பேராசிரியர் சூசன் டாவிஸ் கூறுகையில், இது பெண்களுக்கு என்றே பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட வயாகரா ஆகும். 30 வயது முதல் 40 வயதுள்ள இளம்பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்கிறார்.


தகவல்
 ஆஸ்துமா என்பது உடல் நலக்குறைவை ஏற்படுத்தும் சுவாச நோயாகும். இது குழந்தை பருவத்தில் இருந்தே உருவாகி பல வருடங்கள் கழித்து வெளிப்படும். இதற்கு முக்கிய காரணம் 'நிக்கோடின்' பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது. பெண்களின் கர்ப்ப காலத்தின்போது அவர்களின் கருவியில் வளரும் குழந்தை நுரையீரலை சிகரெட்டில் பயன்படுத்தும் 'நிகோடின்' பாதிப்பை ஆஸ்துமாவை உருவாக்குகிறது.

மேலும் அது சிகரெட் பிடிப்பவர்களின் 3-வது தலைமுறையையும் பாதிக்கிறது. இதன் மூலம் அவர்களின் பேரக்குழந்தைகளும் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த தகவல் கலிபோர்னியாவில் உள்ள ஹார்பர்-யூசி.எல்.ஏ. மெடிக்கல் சென்டர் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. அவர்கள் கர்ப்பமாக இருந்த எலிகளிடம் ஆய்வு நடத்தி இதை கண்டறிந்துள்ளனர்.

சிகரெட் பிடிக்கும் அல்லது சிகரெட் புகையினால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்பட்டு செயல்பாடு குறைகிறது. இதன் மூலம் ஆஸ்துமா உருவாகிறது. நிகோடினின் வீரியம் முதல் தலைமுறை குழந்தைகளை தாக்காவிட்டாலும், ரத்தத்தில் தேங்கியிருந்து அது அவர்களின் குழந்தையை பாதிக்கும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எனவே சிகரெட் பிடிப்பது அவர்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவித்தாலும், பேரக் குழந்தைகளின் நலனையும் அது பாதிக்கிறது.


அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுக பதிவர் பலே பிரபு என்ற பெயரில் எழுதி வரும் பிரபு கிருஷ்ணா அவர்கள்.. இவரின் அனுபவங்களும், கவிதைகளும் இவருடைய எழுத்துடன் நம்மையும் அழைத்து செல்லும்...

http://www.baleprabu.com/

 
தத்துவம்
 
நல்ல யோசனையை தோன்றும்போது உடனே செய்து விடுங்கள், ஏனென்றால் காலம் உங்களுக்காக காத்திருக்காது.
 
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!
 
உன் மேல் நம்பிக்கை வை... வெற்றி உன்னைத் தேடி வரும்...

Wednesday, October 10, 2012

அஞ்சறைப்பெட்டி 11/10/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
தற்போதைய மிகப்பெரிய பிரச்சனை முதலில் மின்வெட்டு மின்சாரம் இல்லை என்றால் எந்த தொழிலும் செய்வது இயலாத காரியம் என்பது அனைவரும் அறிந்ததே இருந்தாலும் தினமும் 14 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருப்பது நிச்சயம் வேற்று கிரகத்தில் இருப்பது போலத்தான். இரவுகளில் கொசுக்கடியில் தூங்காமல் இருப்பது ரொம்ப வேதனையான ஒன்று தான்... என்று விடிவுகாலம் பிறக்குமோ...
..............................................................................................

காவிரி நீரை திறந்து விட்டு விட்டு மீண்டும் அடைத்தது ரொம்ப கேவலமான ஒன்று அதைவிட அதற்காக கர்நாடக மத்திய அமைச்சர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்கள்.. இங்க தமிழக மக்கள் ஓட்டு போட்டு தேர்தெடுத்த மத்திய அமைச்சர்கள் அதைப்பற்றி பேச்சையேக் காணம் அவர்களை விட இங்கு தான் மத்திய அமைச்சர்கள் அதிகம் ஆளுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தால் மக்களாவது சந்தோசமடைந்துருப்பர்.. என்ன செய்வது தமிழனின் தலைவிதி...
..........................................................................................



உலக கோப்பை 20 / 20 மேட்ச் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இலங்கை அடித்துவிடுவார்களோ என்று கொஞ்சம் தயக்கத்துடன் பார்த்து வந்ததேன்.. நமது இந்தியா அணிக்கு அப்புறம் எனக்கு பிடித்த அணி வெஸ்ட் இண்டியன்ஸ் தான் விவியன் ரிச்சட்ஸ், ரிச்சி ரிச்சட்ஸ், அம்புரோஸ், வால்ஸ், கூப்பர், லாரா, சந்திரப்பால் என எனக்கு பிடித்த வீரர்கள் நிறைய உண்டு அந்த அணியில். ரொம்ப வருடங்களுக்கு அப்புறம் இறுதி போட்டிக்கு வந்ததால் அவர்கள் தான் வெற்றி பெற வேண்டும் என விரும்பினேன்..

இலங்கை கொஞ்சம் பாமில் இருப்பதால் சந்தேகமாக இருந்தது ஆனால் இறுதி போட்டியை காண வந்திருந்து அவர்களின் சனாதிபதியை பார்த்ததும் நிச்சயம் அவர்களுக்கு தோல்வி தான் என்று என் மனசு சொல்லுச்சு அது போலவே நடந்தது... சிகப்பு கலர் பிடிச்ச அவர் எங்கே இறுதி போட்டிக்கு போனாலும் எதிர் அணியினர் மிக்க சந்தோசமாக இருக்கலாம் இனி....

................................................................................................

 
 
பல ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட விஸ்கிகளை ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் உள்ள பொன் ஹாம்ஸ் நிறுவனம் ஏலம் விடுகிறது. அதில் 12 வகை விஸ்கிகள் இன்று ஏலத்திற்கு வருகின்றன.

ஜலே தீவில் 55 ஆண்டுக்கு முன்பு அதாவது 1957-ல் தயாரிக்கப்பட்ட விஸ்கி பழமையானது. இந்த விஸ்கி பாட்டில் குறைந்தது ரூ.85 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.1 கோடியே 25 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஸ்கி பலவகை சுவை கொண்டது. இதை குடிக்கும்போது முதலில் அத்திப்பழம், உப்பு, புளு பெர்ரி மற்றும் பூகலிப்டஸ் போன்றவற்றின் சுவை தெரியும். பின்னர் சாக்லெட் மற்றும் திராட்சையின் சுவையை அறிய முடியும். இந்த விஸ்கியை குடித்த பின்னரும், பெருஞ்சீரகத்தின் சுவை நீண்ட நேரம் நாவில் இருக்கும். எனவேதான் இதற்கு அதிக கிராக்கி உள்ளது.

ஆகவே பெரிய தொகைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

...............................................................................................


தோல் புற்று நோயை குணப்படுத்த தற்போது புதிய வகை கிரீம் மருந்தை ஆஸ்திரேலிய நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். தோல் புற்று நோயின் ஆரம்ப அறிகுறியான ‘மெலனோமா’ என்றழைக்கப்படும் கருப்பு நிற கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் மெல்போர்ன் ‘ஆர்.எம்.ஐ.டி’ பல்கலைக்கழக நிபுணர்கள் இந்த கிரீம் மூலம் சிகிச்சை மேற்கொண்டனர்.
 
அதில், நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. தோல் புற்று நோயின் தாக்கம் குறைந்திருந்தது. அந்த ‘கிரீம்’ மருந்தில் உள்ள ரசாயன வேதி பொருள் புற்று நோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகளையும், புற்று நோய் ‘செல்’களையும் அழிக்கும் திறன் கொண்டது. இந்த மருந்தினால் நோய் பாதிக்காத மற்ற ‘செல்’களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனவே தோல் புற்று நோயை குணப்படுத்தும் அரிய மருந்தாக இந்த ‘கிரீம்‘ விளங்கும் என நிபுணர் டாக்டர் தக்ரீத் இஸ்டிவான் தெரிவித்துள்ளார். 

...............................................................................................

 
இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரை சேர்ந்தவர் ஆலிவியா மேன்னிங். 12 வயதான இவள் இளம் வயதிலேயே மிகவும் அறிவாளியாக திகழ்கிறாள். உலகிலேயே மிகவும் பழமையான, மிகப்பெரிய அறிவு திறன் சமூக நிறுவனமான 'மென்சா' சமீபத்தில் அறிவு திறன் போட்டி நடத்தியது.
 
அதில் பங்கேற்ற அவள் 162 மதிப்பெண்கள் பெற்றாள். அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இவள் 2 மதிப்பெண்கள் அதிகம் பெற்று அவர்களை விட அறிவு திறன் பெற்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
 
இதனால் உலகில் அதிக நுண்ணறிவு கொண்டவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறாள். மேலும் 'மென்சா'வில் இணையும் வாய்ப்பையும் பெற்று இருக்கிறாள்.


தகவல்
 
 
உயிரினங்கள் வாழமுடியுமா என ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி என்ற ஆய்வுக்கூட விண்கலத்தை அனுப்பியுள்ளது.

2 ஆண்டுகள் அங்கு தங்கி ஆய்வு மேற்கொள்ள இருக்கும் அந்த விண்கலம் தற்போது பல அரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. பாறையை வெட்டி எடுத்து போட்டோக்களை அனுப்பியது. மற்றும் செவ்வாய் கிரகத்தின் தோற்றத்தை பல கோணங்களில் படம் எடுத்து அனுப்பி வருகிறது.

இந்த நிலையில், கியூரியாசிட்டி விண்கலம் கடந்த 8-ந்தேதி எடுத்து அனுப்பிய போட்டோவில் செவ்வாய் கிரக மண்ணில் ஒரு ஒளிரும் பொருள் உள்ளது. அது என்னவாக இருக்கும் என விவாதம் தற்போது நடந்து வருகிறது. இது விண்கலத்தில் இருந்து கழன்று விழுந்த அதன் ஒரு பாகமாக இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் ஆய்வு செய்தபோது கியூரியாசிட்டியின் 7 அடி நீளமுள்ள ரோபோட் கரங்களின் வெளிச்சம் மண்ணில் விழுந்திருக்கலாம். அதன் நிழல் ஒளிரும் அதிசய பொருள் போன்று தெரிகிறது என்று மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.

எது எப்படியிருப்பினும் அதுகுறித்த தீவிர ஆய்வு நடைபெற்று வருவதாக கியூரியாசிட்டி விண்கலத்தின் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுக பதிவர் நிஜமாகும் நிழல்கள் என்ற பெயரில் விஷ்ணு என்பவர் எழுதி வருகிறார். இவரது கவிதைகள் ஒவ்வொன்றும் காதல் மொழிகள் பேசுகிறது..

http://www.vichu-vishnu.blogspot.in
 
தத்துவம்
 
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
 
உனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்....  உயர் வாய்ப்புக்கள் தானாக வரும்....
 
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.