இந்தியாவைச் சார்ந்த ஒருவருக்கு ஓர் உயர் பதவி கிடைத்தால் இந்தியாவில் உள்ள அனைவரும் மிக மகிழ்ச்சி அதே போல் ஒரு மாநிலத்தில் உள்ளவருக்கு உயர் பதவி கிடைக்கும் போது அந்த மாநில மக்களுக்கு மிக மகிழ்ச்சியான ஒன்று.. நம்ம ஊர்க்காரர் ஒருவர் இந்தியாவின் உயர் பதவியில் அமரும் போது அவரின் ஊரே மிக மகிழ்ச்சியாக இருக்கும் அந்த மகிழ்ச்சியை இன்று கொண்டாடி வருகின்றனர் ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் காடப்பநல்லூர் கிராமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களான சித்தார், மாணிக்கம்பாளையம், குரும்பபாளையம், கேசரிமங்கலம், சிங்கம்பேட்டை ஊர் மக்கள்..
இந்த கிராம மக்கள் இவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான தலைமை நீதியரசர் என்ற பதவியை பெற்றுள்ள எங்கள் மண்ணின் பிறந்து எங்கள் மண்ணிற்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர் நீதியரசர். திரு.சதாசிவம் அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் காடப்பநல்லூர் என்ற கிராமத்தில் தான்... இதனால் இன்று இந்த கிராமங்கள் எல்லாம் மகிழ்ச்சி கடலில் மூழ்கிஉள்ளது.
எங்கள் பகுதியில் டீக்கடை, பெட்டிக்கடை என்று எங்கு பார்த்தாலும் இது தான் பேச்சு அவர் கல்லூரி படிக்கும் போது இங்கு தான் பேருந்து ஏறுவார், இவர்கடையில் தான் தேநீர் அருந்துவார் அவருடன் ஒன்றாவது முதல் நான் படித்தேன் என எங்கும் இவரின் பேச்சுதான்.. அவருடன் படித்தவர்கள் எல்லாம் சந்தோசமிகுதியில் இருக்கின்றனர்.
எங்கள் பகுதி அவ்வளவு ஒன்றும் வளர்ந்த பகுதியல்ல அன்று.. மேட்டூர் அணை கட்டியதால் ஆங்கிலேயர் புண்ணியத்தில் சிற்றாறு ஒன்று போய்க்கொண்டு இருந்தது அத்ன் மீது பாலம் கட்டியபோது சிற்றாறு பாலம் மருவி சித்தார் பாலம் ஆகி இன்று சித்தார் என்ற ஊராக வளர்ந்து நிற்கிறது எங்கள் கிராமம்.. இங்குள்ள தொடக்க பள்ளியில் கல்வி பயன்ற அவர் 6ம் வகுப்பு படிக்க சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்த அவர் பின் சிஎன்சி கல்லூரியில் படித்துள்ளார்.. இன்று எல்லா பேருந்துகளும் எங்கள் ஊரில் நின்று செல்லும் அன்று அப்படி அல்ல மிக குக்கிரமான இந்த கிராமத்தில் இருந்து இன்று உயர்பதவியை பெற்ற அவருக்கு வாழ்த்துக்கள்...
நீதியரசருக்கு இந்தியாவில் வாழ்த்து சொல்லாதவர்களே இருக்க வாய்ப்பில்லை அப்படி இருக்கும் போது எங்கள் ஊரில் பிறந்து எங்கள் ஊருக்கு பெருமை சேர்த்த நீதியரசருக்கு வலைப்பதிவின் மூலம் வாழ்த்து சொல்வதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.. அவர் பிறந்த மண்ணில் நாங்கள் பிறந்ததற்கு மகிழ்ச்சி.. நீதியரசர் இந்த பதவியில் அமர்ந்து இந்திய வரலாற்றில் இடம் பிடித்ததால் எங்கள் கிராமத்துக்கு பெருமையே....