Tuesday, May 31, 2011

அழகுக்கு அழகு சேர்க்கும் குங்குமப்பூ


ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே..

இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.

குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.

நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

 

அழகுக்கு...

1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.


3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.


4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

5. முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.


6. எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.


7. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.


சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு சிலையாக மாறி அசத்தலாம்.

Friday, May 27, 2011

தாம்பத்ய உறவு மேம்பட கற்றாழை...


கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு  இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள்  நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும்.

கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.


கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும்  காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

தாம்பத்திய உறவு மேம்பட

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்க்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும். 

கூந்தல் வளர

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டால்

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும். 

குளிர்ச்சி தரும் குளியலுக்கு

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.


முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. 

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. 

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. 

இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

Thursday, May 26, 2011

அஞ்சறைப்பெட்டி 26.05.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
முதல்வரின் முந்தைய ஆட்சிக்கும் தற்போதுக்கும் அவரின் போக்கில் நிறைய மாற்றங்கள் இருக்கிறது இம்மாற்றத்தில் மக்கள் அனைவரும் நிறைவான ஆட்சியை தருவார் என்று எதிர்பார்ப்பு மேல் ஓங்கி உள்ளது.

பத்திரிக்கை பேட்டியில் அவரின் அனுபவம் பளிச்சென்று தெரிகிறது. முதல்வரிடம் நாங்கள் கேட்பதெல்லாம் மின்சார பற்றாக்குறையை முந்தைய ஆட்சியாளர்கள் சரிசெய்ய முடியாது என்றார்கள் அதை சரிசெய்து முடியாததை முடித்து காட்ட வேண்டும்.

இலவசங்களுக்கு பதில் மின்சாரத்தையும், பெட்ரோல், மண்ணென்ணை, கேஸ் விலையின் வரிகளை குறைத்து விலையை கட்டுப்படுத்தாலாம்..


...............................................................................................
அனைவரும் எதிர்பார்த்த கனிமொழி கைது நடந்தாகிவிட்டது. யார் தவறு செய்தாலும் அவர்களை தட்டிக்கேட்க சட்டம் இருக்கிறது என்பதை நினைக்க சந்தோசமாக உள்ளது.
தவறு செய்தவர்கள் தண்டைணையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இன்று கனிமொழி நாளை?????


...............................................................................................

ஒரு காலத்தில் தலைவர் டெல்லிக்கு சென்றால் உடன்பிறப்புகள் மட்டுமின்றி எந்த கூட்டணியில் இருக்கிறாரோ அந்த கூட்டணியின் தலைவர்கள் முதல் கொண்டு அனைவரும் தலைவரை நிச்சயம் சந்திப்பார்கள். ஆனால் இன்று ????


........................................................................................................

அதிமுகவில் கடைநிலை தொண்டனாக இருந்து படிப்படியாக முன்னேறி எம்எல்ஏவாகி, மந்திரி ஆகியும் அப்பதவி அனுபவிக்க முடியாமல் இறந்த மரியம்பிச்சைக்கு ஆழ்ந்த இரங்கள்..

முதல்வர் முதல் அடிமட்ட தொண்டன் வரை ஒருவர் கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை இப்படி ஒரு நம்பிக்கைக்குரியவரை இழப்போம் என்று...

........................................................................................................

இந்த வருடம் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தான் படித்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்ற புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

........................................................................................................

புதிய தலைமைச் செயலகத்தை மாற்றியதற்கும் சமச்சீர் கல்வியை வேண்டாம் என்று சொன்னதும் என்னடா மறுபடியும் அம்மா மாறிட்டாங்களா என்று தோன்றியது. இரண்டையும் மாற்றியதாற்காக அவர்கள் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தது பாராட்டத்தக்கது.

........................................................................................................


“செக்ஸ்” வீரியம் மற்றும் ஆண்மைக் குறைவு போன்ற காரணங்களுக்காக “வயாகரா” மாத்திரையை சில ஆண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் “செக்ஸ்” உணர்ச்சி தூண்டப்படும் அதே வேளையில் பக்க விளைவுகள் ஏற்படுவதாக தற்போது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, “வயாகரா” மாத்திரைகளை பயன்படுத்துபவர்களின் காது கேட்கும் திறன் படிப்படியாக குறைகிறது. பின்னர் காது முழுவதும் கேட்காமல் செவிடாகும் நிலை உருவாகிறது.

இத்தகவலை அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, வயாகரா மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

வயாகரா மாத்திரையில் காதுகள் செவிடாவது அமெரிக்காவில் மட்டுமின்றி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் கண்டறியப்பட்டு உள்ளது.

வயாகரா மாத்திரை பயன்படுத்த தொடங்கிய சிறிது நாளிலேயே செவிட்டு தன்மை ஏற்படுவது உறுதி செய்யப்படுகிறது.

நாட்டு நடப்பு
தேர்தல் முடிந்து அனைவரும் பதவி ஏற்றுவிட்டனர் முதல்வர் மந்திரிகளிடமும், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி கவர்னர் உரையை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி உள்ளார்.

 சூன் 3 ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் முதல்வருக்கு கழக தொண்டர்கள் உற்சாகமான விழாவிற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர் என்ற செய்தி அடிபடுகிறது. முதல்வர் பதவியில் இருந்தாலும் இல்லை என்றாலும் பாராட்டு விழாவிற்கு பஞ்சமில்லை...

தகவல்

ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக பிரதமர் தலைமையில் தேசிய குழுக்கள் அமைக்கப்பட்டன.

ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் வங்கதேசத்துடன் இணைந்து கூட்டாக கொண்டாடப்பட்டது. பண்டித மதன்மோகன் மாளவியாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் தேசிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி தேசிய கலைகள் மையமானது 12 முக்கிய கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தியது. இதில் சுமார் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை இல்லாத ஒரு சாதனை அளவாகும்.

சங்கீத நாடக அகாடமியானது விருதுகளின் எண்ணிக்கையை 30-லிருந்து 40-ஆக உயர்த்தியிருப்பதுடன் விருது தொகையையும் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி உள்ளது.  

உலகின் சீரிய கலாச்சார பாரம்பரியத்தின் சிறந்த உதாரணங்களாக யுனெஸ்கோ அமைப்பு இந்தியாவின் மூன்று சிறந்த பழமையான கலைகளை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

கேரளாவின் “முடியேட்டு” பழமையான நாடகம் ராஜஸ்தானின் “கால்பெலியா” கிராமப்புற பாடல் மற்றும் நடனம் கிழக்கு இந்தியாவின் “சாவ்” கிராமப்புற நடனம் ஆகியவை மூன்று சிறந்த பண்பாட்டு பாரம்பரியங்களாகும். அருணாச்சலப் பிரதேசத்தின் டாஹங் என்ற இடத்தில் ஒரு புதிய மைய இமாலய கலை கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் யோஹன்னா யாழினி என்பவர் இவர் கோவையைச் சேர்ந்தவர். இவர் மூகம், அரசியல், சினிமா, கேட்டது, பார்த்தது, படித்தது, பிடித்தது, ரசித்தது, ருசித்தது, சொந்த அனுபவங்கள், நொந்த அனுபவங்களை தமிழ் நட்புகளுடன் பகிர்ந்திடுவதற்கான ஒரு மேடை போன்ற தலைப்புகளை நம்மிடம் பகிர்கிறார்...

http://yohannayalini.blogspot.com/

தத்துவம்
வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை.

உன் இதயம் ரோஜா மலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்.

Thursday, May 19, 2011

அஞ்சறைப்பெட்டி 19.05.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
தமிழக மக்கள் என்றும் குறைவைக்க மாட்டார்கள் என்பது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் சொல்கின்றன. தொங்கு சட்டமன்றம் அமையும் திமுக தான் மீண்டும் வெற்றி பெரும் என்று நிறைய கருத்துக்கள் வந்த நிலையில் மக்கள் அமைதியாக ஆப்பு வைத்தார்கள் அராஜக ஆட்சிக்கு. யாரும் எதிர்பாராத வேளையில் அம்மா மேல் நம்பிக்கை வைத்து 202 இடங்களை அம்மா கூட்டணிக்கு கொடுத்து இருக்கிறார்கள். 
பணநாயகம் தோற்று ஜனநாகத்தை வெற்றி பெற வைத்ததற்காக தலைவணங்குகிறேன் என் தமிழ் இனத்துக்கு...

...............................................................................................

வாழ்த்துக்கள் அம்மா...

அம்மாவிற்கு பல இடங்களில் வாழ்த்து சொன்னாலும் அஞ்சறைப்பெட்டியில் வாழ்த்து சொல்வது தான் எனக்கு பெருமை...

தமிழகமக்கள் உங்கள் மேல் அசாராத நம்பிக்கை வைத்து தமிழகத்தை உங்களிடம் அளித்துள்ளனர் அந்த நம்பிக்கையை உயர கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறோம்...


...............................................................................................

திமுகவிற்கு இது வரலாறு காணத தோல்வி என்று கூறினால் அது மிகையாகது. 1991ல் திமுக தோற்றாலும் அது ராஜீவ் இறந்த அலை என்று சொல்லலாம். ஆனால் தற்போது ஏற்பட்ட தோல்வி அலையல்ல மக்கள் அமைதியாக வைத்த ஆப்பு..

திமுகவின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் கலைஞரோ, ஸ்டாலினோ, அழகிரியோ அல்ல அக்கட்சியின் நிறைய மந்திரிகளும், எம்எல்ஏக்களும் பொதுமக்களை மட்டுமல்ல கட்சி தொண்டனை அரவணைக்காதது தான் மிகப்பெரிய காரணம்.

கலைஞர் நிறைய திட்டங்கள் போட்டார் ஆனால் தன் அமைச்சரவை, எம்எல்ஏக்கள் மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் என்ன செய்கிறார்கள் என்று அதை கவனிக்க ஒரு திட்டம் தீட்டி இருந்தால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும்.

........................................................................................................

 
கட்சி ஆரம்பித்து சில வருடங்களில் எதிர்கட்சி தலைவர் என்றால் அது சும்மாவா? கேப்டனுக்கு மக்கள் ஓர் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் கேப்டன் பயன்படுத்துவாரா என்று போக போகத்தான் தெரியும்.

எத்தனையோ ஜாதிக்கட்சிகள் இருந்தாலும் ஜாதியை முன்னிருத்தாமல் கேப்டனை மட்டுமே முன்னிருத்தி இன்று 29 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று உள்ளார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியே..

கேப்டன் முதல் தேர்தலில் 1 சட்ட மன்ற உறுப்பினராக 2006ல் சட்டமன்றம் சென்றார் 2011ல் 29 பேருடன் எதிர்கட்சி தலைவர் என்ற பெரும் தகுதியோடு வீறு நடைபோட்டு சட்டசபைக்குள் செல்ல இருக்கிறார்.

கேப்டனுக்கு வாழ்த்துக்கள்...
........................................................................................................
 

அம்மாவின் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் நிறைய பெரும் தலைவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சென்னையை திக்குமுக்காடச் செய்தனர் என்றால் அது மிகையாகது.

........................................................................................................

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து சகஜநிலைக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நாட்டு நடப்பு
அதிக தொகுதிகள் வென்று தனி மெஜாரிட்டியில் ஆட்சி அமைத்த அம்மா தலைமை செயலகம் சென்று மந்திரிசபை கூட்டத்தில் நவீன தகவல் தொழில் நுட்பத்தோடு அமைச்சர்களுக்கு  துறை சம்பந்தமாக கருத்துக்கள் கூறி மந்திரிகளுக்கு பொதுமக்களிடம் நல்ல பேர் வாங்கும் வேண்டும் அந்த அளவிற்கு உங்கள் செயல் இருக்க வேண்டும் என அறிவுரை கூறியது வரவேற்கத்தக்கது..

தகவல்

ஒரு மனிதனின் ஆயுட் காலத்தை குரோம்சோம்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒருவரது குரோம்சோம்களின் நுனிப் பகுதி “டெலோமியர்” என அழைக்கப்படுகிறது. அவை நீளமாக இருந்தால் ஒருவரது ஆயுட்காலம் அதிகமாக இருக்கும்.

அதே பட்சத்தில் நுனிப் பகுதி சிறிதாக இருந்தால் அவரின் வாழ்நாள் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.டெலோமியரின் அளவை கண்டுபிடிக்க ஒரு சிறிய ரத்த பரிசோதனை மட்டுமே போதும்.

இச்சோதனையை மாட்ரிட் நகரில் உள்ள ஸ்பெயின் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மரியா பிளாஸ்கோ மேற் கொண்டார். ஐரோப்பாவின் பல நாடுகளில் ரத்த மாதிரி எடுத்து இப்பரிசோதனை நடத்தப்பட்டது.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் எனது பயணங்கள் என்ற தலைப்பில் எழுதி வருகிறார்கள். நிறைய பயனுள்ள பல கட்டுரைகள் இப்பதிவில் காணலாம்

http://enathupayanangal.blogspot.com/

தத்துவம்
எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

Wednesday, May 18, 2011

ஆண்களுக்கான " விசேஷ வயாகரா " உணவு


பெண்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன. குடும்ப பராமரிப்பு, மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் முதலியன. ஆனால் ஆண்களுக்கு உள்ள பெரும் பொறுப்பு பாலியல் உறவில் மனைவியை மகிழ்விப்பது! அதில் சிறிய குறைபாடு இருந்தால் கூட ஆண்கள் மனமுடைந்து போகின்றனர். எனவே தான் ஆதி காலத்திலிருந்து பாலுணர்வை தூண்டி உடலுறவை மேம்படுத்தும் உணவு, மருந்துகளை ஆண்கள் அதிகமாக நாடுகின்றனர். தங்கபஸ்பம், சிட்டுக்குருவி லேஹியம் முதலியன ஆணுக்கான “ரகசிய” மருந்துகளாக இருந்தன.

புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண்டும் உணவுக் கலவையாக கருமிளகு, தேன், மிளகாய் முதலியன கூறப்படுகின்றன.

உணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. ஒட்டகத்தின் திமில் அரேபியர்களுக்கும் குங்குமப்பூ ஸ்பெயின் நாட்டவர்களுக்கும், கோகோ அஸ்டெக் இனத்தவருக்கும், பறவைக்கூடு சூப் சீனர்களுக்கும் முறையே ஆண்மைக்குறைவுக்கு மருத்துவ உணவாக கருதப்படுகின்றன. 

சில பிரசித்தி பெற்ற உணவுகள்

ஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும்.

சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மையலிலும் பயனாகிறது! இதன் விதைகளை உறிஞ்சி உண்டால் ஆசை அதிகமாகும்.

அஸ்பாரகஸ் சுவைவயுள்ள தோட்டக் கீரை.

பாதாம் பருப்பு – தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக கருதப்படுகிறது.

வாழைப்பழம் – வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயாரிக்கத் தேவை. எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழம்.

துளசி – உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது துளசி. ஆண்களின் உடலுறவு ஆர்வத்தை தூண்டுகிறது.

சாக்லேட் – சாக்லேட்டில் தியோப்ரோமைன் இந்தப் பொருள் வேட்கையை பெருக்கும். தவிர சாக்லேட் ஒரு ஆன்டி – ஆக்சிடான்ட்.

காய்கறிகள் – பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை.

தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை ‘காதல் ஆப்பிள்’ என்பார்கள். வெங்காயமும் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது.

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும். பிரசித்தி பெற்ற ‘அரேபிய இரவுகள்’ கதையில் ஒரு வியாபாரி 40 வருடங்களாக குழந்தையில்லாமல் இருந்து கொத்தமல்லி இலைகள் அடங்கிய மருந்தை உண்டு குழந்தை பெற்றுக் கொண்டதாக வருகிறது. 

பழங்கள்

பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்.

பால் சார்ந்த உணவுகள் – பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.

மாமிசங்கள், மீன் – மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.

வெற்றிலை – உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.

தேன் – எகிப்தியர்கள் காலத்திலிருந்தே பல பழங்கால மருந்துகள் தேன் அடங்கியவை. மீட் என்ற பானம் தேனிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது காதல் உணவை அதிகப்படுத்தும் மருந்தாக கருதப்படுகிறது.

வாசனை திரவியங்கள் – ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் “விந்து முந்துதலை” தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். ஞாபக மிருக்கட்டும் – இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். அதன் இலைகள், எதிர்மாறாக ஆண்மை ஆசையை குறைத்து விடும். 

தற்கால உணவு நிபுணர்களின் கருத்து

ஆண்மை வீரியத்தை அதிகரிக்க துத்தநாகம் இன்றியமையாதது. சர்க்கரை, மைதா மாவு, பாலிஷ் செய்யப்பட்ட பச்சரிசிகளில் துத்தநாகம் குறைவு. இந்த தாதுப்பொருளின் குறைவு பெண்களின் மாதவிடாய் சுழற்சியையும் பாதிக்கும். முழுத்தானியங்களில் துத்தநாகம் இருந்தாலும் அவற்றில் உள்ள பைடாடஸ் என்ற பொருள், உடல் துத்தநாகத்தை உட்கிரகிப்பதை தடை செய்யும். துத்தநாகம் உள்ள இதர பொருட்கள் – சிவப்பு மாமிசம், முத்துச்சிப்பிகள், பரங்கி விதைகள், அங்கக மாமிசங்கள், முட்டைகள்.

எல்லா பழங்களிலும் காய்கறிகளில் இருக்கும் பொட்டாசியம் ஆண்மை வீரியத்தை அதிகரிக்கும்.

செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலியவைகளும் காதல் உணவுகள் மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலியவைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும்.

பாஸ்பரஸ் (பரங்கிக்காய், முழுத்தானியங்கள், சூர்யகாந்தி விதைகள்) தாதுப்பொருளும் ‘தாது விருத்திக்கு’ உதவும். 

ஆண்மை வீரியத்திற்கு தேவையான விட்டமின்கள்

விட்டமின்கள்
விட்டமின் ‘இ’
விட்டமின் ‘சி’
விட்டமின் ‘ஏ’
விட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ்
ஃபோலிக் அமிலம்
விட்டமின் பி 6
விட்டமின் பி 12 இருக்கும் உணவுகள்

முழுத்தானியங்கள், முட்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாதாம், கீரைகள்
எல்லா காய்கறிகளும், பழங்களும் குறிப்பாக சிட்ரஸ் பழங்கள், தக்காளி, நெல்லி முதலியன லிவர், முட்டைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கேரட், மீன் எண்ணெய் முழுத்தானியங்கள், லிவர் அஸ்பாரகஸ், இதர கீரைகள், முளைகட்டிய உணவுகள், முழுக்கோதுமை, சீஸ், பருப்புகள் முழுக்கோதுமை, தவிடு, பால், வாழைப்பழம், வேர்க்கடலை, உலர் திராட்சை, லிவர், கிட்னி, மாமிசங்கள், மீன், இறைச்சி பால், பால் சார்ந்த உணவுகள், முட்டை, லிவர்.
 
பாலியல் இச்சையை குறைக்கும் உணவுகள் 
 
ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, விட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும். சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குன்றினால் ஆண்மையும் குறையும். எனவே அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவுகளால் இச்சையை ஒரளவாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம். 
 
பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளை குறைக்கும். தைராய்டு தான் பாலியல் உணவுகளை கன்ட்ரோல் செய்கிறது.

இப்பதிவை மெயிலில் அனுப்பிய நண்பனுக்கு நன்றி...

Monday, May 16, 2011

2011 தேர்தலின் நாயகன் பிரவீன்குமார் ஒரு பார்வை....

தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் 2011ம் ஆண்டு தேர்தலின் நாயகன் என்று சொன்னால் அது மிகையாகது. அதிக வாக்குகள் பதிவானதுக்கும், பொதுமக்கள் தைரியமாக வாக்களித்தற்கும் இவரின் செயல்களும் ஆக்கமும் முக்கிய காரணம் என்று சொல்லலாம். தமிழக தேர்தலில் இவரின் பெயர் காலத்திற்கும் இருக்கும் என்பது நிச்சயமான உண்மை...

இவரது சொந்த ஊர், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அசாரிபாக் (முன்பு பீகார்) ஆகும். இவர், 1987-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தார். 1961-ம் ஆண்டில் பிறந்த அவர், கான்பூர் ஐ.ஐ.டி.யில் உலோகவியலில் பி.டெக், எம்.டெக் பட்டம் பெற்றுள்ளார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் எம்.பில். பட்டமும் பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றபின், முதலில், 1988-ல் சேலத்தில் உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார். 1989-ல் தஞ்சையில் சப்-கலெக்டராகவும், 1989-ல் செட்டில்மென்ட் அதிகாரியாகவும், 1991-ல் தஞ்சை கூடுதல் கலெக்டராகவும், 1996-97-ல் விழுப்புரம் கலெக்டராகவும் பணிபுரிந்தார்.

1997-ல் தொழில்துறை கூடுதல் செயலாளராகவும், 2000-த்தில் நிதித்துறையில் கூடுதல் செயலாளராகவும் பணிபுரிந்தார் பிரவீன்குமார். பின்னர், 2001-ம் ஆண்டில் டெல்லியில் மத்திய அரசு பணிக்குச் சென்ற அவர் அங்கு கல்வித்துறை இயக்குனராகவும், கம்பெனி விவகாரத் துறையில் இயக்குனராகவும் பணிபுரிந்தார்.

2001 முதல் 2007 வரை மத்திய அரசு பணியில் இருந்த அவர், தமிழகம் திரும்பி, நிதித்துறையில் சிறப்பு செயலாளராக இருந்தார். தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றுகிறார்.

இவரது மனைவி அனிதா பிரவீன். இவரும், தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கணவர் பணிபுரியும் நிதித்துறையிலேயே செயலாளராக (திட்டம் மற்றும் வளர்ச்சி) பணி புரிந்து வருகிறார். பீகார் மாநிலம் பாட்னா இவரது சொந்த ஊராகும். 1989-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அனிதா பிரவீன் பணியில் சேர்ந்தார்.
தமிழக தேர்தல்
தமிழக தேர்தல் அதிகாரியாக இவரை நியமித்தபோதும் அனைவரும்  இவரும் சராசரி அதிகாரியாகத்தான் இருப்பார் என நினைத்திருப்பர். ஆரம்பத்தில் இவர் தேர்தல் வேலைகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது இவரை யாருக்கும் தெரியவில்லை.
தேர்தல் அறிவித்த நாளில் இருந்து தான் ஆரம்பித்தது இவரின் அதிரடி பணபுழக்கத்தை நிறுத்த நடவடிக்கை, பிரச்சாரத்தில் கெடுபிடி, ஒரு கொடி இல்லை ஒரு ப்ளக்ஸ் பேனர் இல்லை, போஸ்டர் இல்லை அனைத்து சுவரும் வெறிச் என தனது கெடுபிடிகளை அனைவரிடமும் காட்டி அதை நடத்தியும் காட்டினார். இவரின் பேட்டிகள் அனைத்து சுருக்கமாகவும் நறுக்கென்றும் இருந்தது.
தேர்தல் கமிஷன் பற்றி புகார் கூறியபோது அதற்காக அதிகம் அலட்டிகொள்ளாமல் தனது பணியை நச் என்று செய்தார். தற்போது உள்ள டெக்னாலஜியை பயன்படுத்தி அதில் தவறுகள் ஏற்பட வண்ணம் பார்த்துக்கொண்டார்.

ஓட்டுப்பதிவின் போது தமிழகத்தில் இப்படியொரு தேர்தலை இது வரை யாரும் பாத்திருக்க வாய்ப்பில்லை கள்ள ஓட்டு இல்லை; கை கலப்பு இல்லை; கலவரம் எதுவுமில்லை. அமைதியான ஓட்டுப்பதிவு என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதை துல்லியமாக காட்டி, இந்த தேர்தலின் கதாநாயகன் தான்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது தேர்தல் கமிஷன்.

இந்த தேர்தலில் ஓட்டு போட வந்த மக்களைப் பார்க்கும் போது ஏதோ திருவிழாக் கூட்டத்தைப் பார்க்க அழைத்து வருவதைப்போல, ஓட்டுச்சாவடிக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய்மார்களும், முதியவர்களும் வந்த காட்சி, முன் எப்போதும் பார்த்திராதது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் எப்படி ஒரு மாதம் பெட்டியை பாதுகாக்கப் போகிறார்கள்  என்று அனைவரது கவனமும் அதில் இருந்தது அதையும் அழகாக திட்டமிட்டு யாரும் குறை கூறமுடியாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தி அங்கேயும் புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி அனைவரையும் அசத்தினார்.

எங்கேயும் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அடக்கமான பதில் தேர்தலின் விதிமுறைகளை தவிர வேறு எதுவும் பேசவில்லை அனைத்தையும் செயல்களில் காண்பித்தார். தேர்தல் கமிஷன் என்றால் அனைவருக்கும் சேஷன் ஞாபகம் வரும் தற்போது பிரவீன்குமார் ஞாபகத்திற்கு வருகிறார்.

குக்கிராமம் முதல் நகரெங்கும் தேர்தல் கமிஷன் போட்டு ஆட்றாங்களாம் அதனால் எல்லா வேட்பாளரும் பம்பறாங்க என்ற வார்த்தையை நிறைய இடங்களில் கேட்க முடிந்துது இவரின் வெற்றியைக்காட்டுகிறது.

மொத்தத்தில் தமிழகத்தில் நேர்மையாக தேர்தல் நடத்தி ஓட்டு எண்ணிக்கையும் சிறப்பாக செயல்படுத்தி அனைவரிடமும் சபாஷ் வாங்கியவர் பிரவீன்குமார். அவருக்கு என் வாழ்த்துக்கள்...

இவரைப்போன்ற நேர்மையான அதிகாரிகளை பதிவதால் நம் பதிவுலகிற்கு பெருமையே... நாளைய தலைமுறை நிச்சயம் அறிய வேண்டும்..

Friday, May 13, 2011

ஜெய் ஜெய் அம்மா ஜெயிச்சிட்டாங்க அம்மா....






தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற வாக்கிற்கேற்ப அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. முக்கியமாக மெஜாரிட்டி ஆட்சி அமைக்க உள்ளது. ஜெயலலதா ஆட்சி அமைக்கும் பேதேல்லாம் அதிக இடங்களில் வெற்றி பெற்று தான் ஆட்சி அமைத்து உள்ளார்.

பனநாகயத்தை எதிர்த்து மக்கள் ஜனநாகத்துக்கு வாக்களித்துள்ளனர். இந்த வெற்றி மக்கள் அலை அல்ல மக்கள் அமைதியாக வைத்த ஆப்பு..

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளார். அ.தி.மு.க., கூட்டணி, 198 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க., மட்டும் போட்டியிட்ட, 160 தொகுதிகளில், 148ல் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

தமிழகத்தின், 14வது சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 13ம் தேதி நடந்த தேர்தலுக்கான, ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. இதில், ஆரம்பம் முதல், அ.தி.மு.க., கூட்டணியே பெரும்பாலான இடங் களில் முன்னணியில் இருந்தது.பெரும்பாலான, அ.தி.மு.க., கூட்டணியினர் வெற்றி முகத்தில் இருந்தனர். தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில், பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர். அதேபோல, தி.மு.க., தலைமையின் குடும்ப சிபாரிசு மூலம் சீட் வாங்கியவர்களும் தோல்வியடைந்தனர்.அ.தி.மு.க., கூட்டணியில் அக்கட்சி போட்டியிட்ட, 160 தொகுதிகளில், 148ல் அமோக வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை பெற, 118 எம்.எல்.ஏ.,க்களே தேவை என்பதால், அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைப்பது மிக எளிதானது.

தே.மு.தி.க., போட்டியிட்ட, 41 தொகுதிகளில், 29ல் வெற்றி பெற்றது. இதன் மூலம், பிரதான எதிர்க்கட்சி வாய்ப்பு, தி.மு.க.,வுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க.,வே பிரதான எதிர்க்கட்சி ஆகிறது.அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், கொங்கு இளைஞர் பேரவை போன்ற கட்சிகளும், பிரதான கட்சிகளை எதிர்த்து, தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா, திருவாரூரில் கருணாநிதி, ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் அமோக வெற்றி பெற்றனர். அ.தி.மு.க., வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியினர், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டு முன்பும், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் முன்பும் குவிந்து, பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அதே நேரத்தில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், போயஸ் கார்டனுக்கு படையெடுத்தனர்.

அ.தி.மு.க.,வின் வெற்றி உறுதியானது தெரிந்ததும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, கவர்னருக்கு, கருணாநிதி அனுப்பி வைத்தார்; அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.இந்நிலையில், அடுத்து ஆட்சி அமைக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு கவர்னர் பர்னாலா அழைப்பு விடுக்க உள்ளார். இதையடுத்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடத்தப்பட்டு, முதல்வராக ஜெயலலிதாவை தேர்வு செய்ய உள்ளனர். இதனால், ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களது பதவியேற்பு விழா, நாளை நடக்க வாய்ப்புள்ளது.

3 வது முறையாக முதல்வராகும் அம்மாவிற்கு என் இனிய வாழ்த்துக்கள்...

வாழ்க ஜனநாயகம்...

Thursday, May 12, 2011

அஞ்சறைப்பெட்டி 12.05.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
கடந்த வாரம் அஞ்சறைப்பெட்டி எழுத இயலவில்லை எனது கிராமத்து திருவிழாவிற்கு சென்று 3 நாட்கள் திருவிழாவை கொண்டாடியதால் இணையத்துப்பக்கம் வரஇயலவில்லை மீண்டும் இந்தவாரத்தில் இருந்து நம் அஞ்சறைப்பெட்டி தகவல்கள் தொடரும்.

...............................................................................................
நாளை., நாளை., நாளை தமிழகத்தின் அடுத்த 5 வருடத்திற்கான தலைவிதி என்ன வென்று தெரிந்து விடும் கடந்த ஒரு மாதமாக பதிவுலகம் மட்டுமின்றி அரசியல், அரசு சம்பந்தப்பட்ட அனைத்து துறையும் சப்பென்று இருந்தது தமிழகமெங்கும் அடுத்த ஆட்சி யார் யார் என்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர் அது நாளை தெரியும்.. யார் மீண்டும் தமிழகத்தை ஆண்டு சம்பாரிக்கப்போகிறார்கள் என்று....
...............................................................................................

திருவிழாவிற்கு சென்றதன் மூலம் ஒரு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது மனதில் கடந்த வாரம் கிராமிய திருவிழாவை செவ்வாய் இரவு தொடங்கி வெள்ளி வரை கொண்டாடினோம் உற்றார் உறவுகளுடன்..

இந்த வருடத் திருவிழாவில் வழக்கம்போல் கரகாட்டம், நையாண்டி மேளம், குத்தாட்டம், நடன நிகழ்ச்சி என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

எங்க ஊர் பெரியவர்கள் புதிதாக கேரளவில் இருந்து பெண்களை இறக்கி சிங்காரி நடனம் என்று ஒரு நடனத்தை எங்கள் பகுதியில் அறிமுகப்படுத்தினஙா அற்புதமாக இருந்தது அந்த சிங்காரி நடனம். கேரள பெண்கள் ஒரு 15 பேர் மேளத்தை இசைத்துக்கொண்டே அவர்கள் ஆடிய நளினமாக ஆட்டம் காண்பவர் அனைவரைம் கொள்ளை கொண்டது..
........................................................................................................

கனிமொழி ஆஜர் ஆவரா மாட்டாரா என்ற அனைவரின் கேள்விக்கும் பதில் கிடைத்தது ஆஜர் ஆகிவிட்டார். அடுத்த தீர்ப்பு வரும் 14ம்தேதி பார்ப்போம் ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என்று....
........................................................................................................

இந்த வருடம் ப்ளஸ் 2 தேர்வில் வழக்கம்போல் பெண்களே அதிக தேர்த்தி பெற்றுள்ளவனர்.... வாழ்த்துக்கள் மகளிருக்கு...

இந்த வருடம் ஐஏஎஸ், ஐபிஸ் தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் முதல் 3 இடங்களில் தேர்வாகி இருப்பது நமக்கு பெருமையான விசயம். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...
........................................................................................................


இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம். இவருக்கும் கேட்மிடில்டனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இளவரசர் வில்லியம்மின் தம்பியும், சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனுமான ஹாரியும் காதலில் விழுந்துள்ளார். இவர் ஆலிவுட் நடிகை சார்லிஷ் தெரோன் என்பவருடன் ஊர் சுற்றி வருகிறார். இவர்கள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வருகின்றனர்.
 
நடிகை சார்லிஷ் தெரோன் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். அங்கு இவர் எய்ட்ஸ் நோய் தடுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இளவரசர் ஹாரியும் இதுபோன்ற சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார்.  
 
தென்ஆப்பிரிக்காவில் அனாதைகள், ஏழைகள், சமுதாயத்தில் புறக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிபுரிந்து வருகிறார். அப்போது தான் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இத்தனைக்கும் நடிகை சார்லிஷ் தெரோன் இளவரசர் ஹாரியை விட 9 வயது மூத்தவர். அவருக்கு 35 வயதாகிறது. ஹாரிக்கு 26 வயதே ஆகிறது. ஏற்கனவே இவர் செஸ்லி டேவி என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்பு
 
ஜெயிக்கப் போவது யாரு...? தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? இந்த கேள்விக்கு நாளை பிற்பகலில் விடை தெரியும். பரீட்சை எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களை போல் பதட்டத்தில் வேட்பாளர்கள் காத்திருக்கிறார்கள். 
 
தகவல்

உலக மக்கள் தொகை பற்றிய ஆய்வு ஒன்றை ஐ.நா சபை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது:-
 
இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளில், அதாவது 2060-ம் ஆண்டு 170 கோடியைத் தாண்டும். 2030-ம் ஆண்டு, இந்திய ஜனத்தொகை உலக நாடுகளிலேயே அதிகமாக இருக்கும். பின்னர் மக்கள் தொகை விகிதம் படிப்படியாக குறைய வாய்ப்பு இருக்கிறது.
 
ஆனாலும் 2060-ம் ஆண்டு, இந்திய மக்கள் தொகை 170 கோடி இருக்கும். 2025-ம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகை 140 கோடியைத்தொடும். இந்த நூற்றாண்டின் மத்தியில் உலக ஜனத்தொகை 930-ம் கோடியாக இருக்கும்.
 
2100-ம் ஆண்டு இது 1000 கோடியைத் தாண்டும். இந்த வருடம் அக்டோபர் 31-ம் தேதி பிறக்கும் முதல் குழந்தை, உலக மக்கள் தொகையின் 700-வது கோடி ஆளாக கணக்கிடப்படுவார். இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுகப்பதிவர் ஸ்ரீ தேவியின் பதிவுகள் என்ற பெயரில் ஸ்ரீ தேவி என்பவர் எழுதி வருகிறார்.  இவரின் கவிதைகள் அனைத்தும் நேரில் நடப்பது போலவே இருக்கும் அற்புதமான வரிகளை கொண்டு எழுதி இருக்கிறார்...

http://srithought.blogspot.com/

தத்துவம்
 
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

“நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

Wednesday, May 11, 2011

அதிமுக வெற்றி - சிஎன்என்-ஐபிஎன் கருத்துக்கணிப்பு


தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும், திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று ஹெட்லைன்ஸ் டுடேவும் தெரிவித்துள்ளன.

அதிமுக வெற்றி:  

சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பின்படி அதிமுக கூட்டணிக்கு 120 முதல் 132 இடங்களும், திமுக கூட்டணிக்கு 102 முதல் 114 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகளும், திமுக கூட்டணிக்கு 44 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது திமுக கூட்டணி ஒரு சதவீத வாக்கை இழந்திருப்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்குகள் அதிகரித்திருப்பதாகவும் சி.என்.என்.-ஐ.பி.என். தெரிவித்துள்ளது.  

ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி. நிறுவனங்கள் இணைந்து நடத்திய கணிப்பில், திமுக கூட்டணி 115- 130 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 105- 120 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிவிஜி நியூஸ்- சி வோட்டர் இணைந்து நடத்திய கணிப்பில், தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 168 முதல் 176 இடங்களும், திமுக கூட்டணிக்கு 54 முதல் 62 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக திமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்கு வங்கி குறைந்திருப்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 4 சதவீத வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகவும் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய கணிப்பில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 124 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.என்.என்.- ஐ.பி.என்., 2006 பேரவைத் தேர்தலில் வெளியிட்ட வாக்குக் கணிப்பை ஒட்டியே தேர்தல் முடிவுகளும் அமைந்திருந்தன. அதன் விவரம்:  

2006 பேரவைத் தேர்தல் வாக்குக் கணிப்பு முடிவு  

அதிமுக கூட்டணி 64- 74 வரை  
திமுக கூட்டணி 157- 167 வரை  

தேர்தல் முடிவு  

அதிமுக கூட்டணி 69  

திமுக கூட்டணி 163    

2011 பேரவைத் தேர்தல் வாக்குக் கணிப்பு முடிவு  

அதிமுக கூட்டணி 120- 132 வரை  
திமுக கூட்டணி 102- 114 வரை  

தேர்தல் முடிவு  

வெள்ளிக்கிழமை வரை காத்திருப்போம்... 

எல்லோரும் ஆவலுடன் தான் இருக்கின்றோம் யார் வெற்றி பெறுவார்கள் என்று எத்தனை கருத்துக்கணிப்புகள் வந்தாலும் குத்துன மகராசனுக எதுல குத்துனாங்களோ... 

பொறுத்திருப்போம்... 

யார் மீண்டும் சம்பாரிக்கப்போகிறார்கள் என்று அறிய....

Tuesday, May 10, 2011

ஆண்களின் ஆணவமே விபச்சாரத்திற்குக் காரணம் - பெரியார்

 
‘விபச்சாரம்' என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக, இப்பொழுது "பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபச்சாரம்' என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் "விபச்சாரம்' என்றே கூறலாம்.


ஜன சமூகத்தை அரித்துக் கொல்லும் புழுக்களில் ‘விபச்சார'த்தைப் போன்ற வேறொரு கொடிய புழு இல்லையென்றே சொல்லலாம். பண்டைக்காலந்தொட்டு வழங்கி வரும் அநேக தீய விஷயங்களில் ‘விபச்சார'மும் ஒன்றாகும். இந்த ‘விபச்சாரம்' என்னும் கொடிய வழக்கம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதையும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நமது நாட்டில் நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம்.


சிற்றின்ப வேட்கை கொண்ட முரட்டு ஆண்கள் பலரால் பலவந்தப்படுத்தப்பட்டு விபச்சாரியானவர்கள் பெருகியே விபச்சாரிகள் அதிகமானார்கள் என்று கூறுவது, எவ்வகையிலும் பொருந்தாமற் போகாது. இரண்டாவது, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பல கொடுமையான சட்ட திட்டங்களும் விபச்சாரத்தை மிகுதிப்படுத்தின என்பதில் அய்யமில்லை.


காதல் மணமில்லாமை, விதவை மணம் இல்லாமை, விவாக விடுதலை உரிமை இல்லாமை, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமை முதலிய சமூகக் கட்டுப்பாடுகள், பெண்கள் விபச்சாரிகளாவதற்கு முக்கிய காரணமாயிருப்பனவாகும். ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளாத ஒரு தம்பதிகளின் வாழ்க்கை, தூய வாழ்க்கையாக இருப்பது கஷ்டம். அத்தம்பதிகள் இருவரும் தங்கள் மன இச்சையைத் தகாத வழியில்தான் பூர்த்தி செய்து கொள்ள நேரும்.


பருவ காலத்தில் விதவையான பெண்களைச் சாஸ்திரங்களின் மேலும், மதத்தின் மேலும் பழி சுமத்தி மணஞ்செய்து கொடாமல் வைத்திருப்பதனால் விளையும் விபச்சாரக் கொடுமையை அளவிட்டுக் கூற யாரால் முடியும்? இன்று குளங்களிலும், ஆறுகளிலும், கிணறுகளிலும், சாக்கடைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் எறிந்து கொல்லப்படும் குழந்தைகளெல்லாம் விபச்சாரிகளாலும் விதவைகளினாலும் பெற்ற குழந்தைகள் என்பதை யார் மறுக்க முடியும்? வீட்டுக்கு வீடு விதவைகள் குடி கொண்டிருக்கும் ஜாதியில்தான் விபச்சாரங்களும், சிசுக் கொலைகளும் அதிகம் என்று அறியாதார் எவர்?


ஆகவே, உண்மையில் விபச்சாரம் ஒழிய வேண்டுமானால், ஆண்களுடைய ஆணவத்தை அடக்குவதற்கும் பெண்கள் சுதந்திரமாகிய காதல் மண உரிமை, விவாக விடுதலை உரிமை, விதவை விவாக உரிமை, சொத்துரிமை முதலியவற்றிற்கும் சட்டங்களின் மூலம் பலவந்தமாக உதவி செய்ய வேண்டும். இப்பொழுது பல நாடுகளிலும் விபச்சாரத்தை ஒழிப்பதற்குச் சட்டங்கள் செய்யப்பட்டு அமுலிலும் இருந்து வருகின்றன. ஆனால், விபச்சாரத் தடைச் சட்டம் அமுலில் இருக்கும் எல்லா நாடுகளிலும் அது அடியோடு ஒழிந்து விட்டது என்று கூறத்தகாது. ஒருகால் இந்தியாவைத் தவிர, மற்ற தேசங்களில் விபசாரத்தடைச் சட்டத்தினால் அதை அடியோடு நிறுத்தி விடக்கூடும். ஏனெனில் இந்தியாவைத் தவிர, மற்ற இடங்களில் நடைபெறும் விபச்சாரம் வெளிப்படையானவை. வெளிப்படையாக வியாபாரம் போல் நடைபெறும் விபச்சாரத்தைத் தடுப்பது எளிது. ஆனால், நமது நாட்டில் நடைபெறுவது போன்ற மறைமுகமான விபச்சாரங்களைத் தடுப்பது முடியாது. விதவைகள் செய்யும் விபச்சாரத்தையும், விவாக விடுதலை செய்து கொள்ள முடியாமல் பேருக்குத் தம்பதிகளாக வாழும் குடும்பங்களில் நடைபெறும் விபச்சாரங்களையும் எப்படித் தடுக்க முடியும்?


மேல் நாடுகளில் ரஷிய தேசம் ஒன்றில்தான் அடியோடு விபச்சாரம் ஒழிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூக வாழ்க்கையில் எத்தகைய வேற்றுமையும் இருப்பதற்கு இடமில்லாமல், சட்ட மூலம் ஏற்பட்டிருக்கும் சவுகரியமேயாகும்.


ஆகையால் மற்ற நாடுகளைப் போல், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமூக விஷயங்களில் எத்தகைய வித்தியாசமும் இல்லாமல் சம சுதந்திரம் ஏற்படுத்தி, அதை அனு÷பாகத்தில் கொண்டு வருவதன் மூலம்தான் விபச்சாரத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.


மதப்புரட்டுகளையும் சாஸ்திரப் புரட்டுகளையும் நம்பி பெண்களைக் கொடுமைப்படுத்தி விபச்சாரத்தனத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் இந்த மடையர்களான வைதீகர்களும், பகுத்தறிவற்றவர்களும், நமது நாட்டில் அரசியல் விஷயங்களிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் வரையிலும், விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தகையச் சட்டங்கள் செய்யப்பட்டாலும் அவைகளுக்குத் தகுந்த முழுப்பலனும் கிடைக்க முடியாதென்றே கூறுவோம்.

‘குடி அரசு' இதழில் பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் 29.5.1932

Monday, May 9, 2011

ஈரோட்டுப் பகலவன் தந்தை பெரியார் 25


 

ந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...


ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!


பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான். இவர்களுக்கு ஈ.வெ.ரா.ம. என்பது இனிஷியல்!


தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!


தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!


வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!


பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தார். பிரெஞ்சு தொடங்கி ராஜபாளையம் வரை பல வகைகள் இருக்கும். வெளியூர் பயணத்தின்போதும் அவை வேனில் ஏறி வந்து மேடைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும்!


தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்துவைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!


வாரம் ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறைதான் குளிப்பார். ''குளிக்கணும்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்ல. அதை ஒரு தொந்தரவாக நினைக்கிறேன்'' என்பார்!


தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!


உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!


தன்னுடைய மனைவி நாகம்மை, அம்மா சின்னத் தாய் ஆகியோர் இறந்தபோது, தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். 'எனக்குஇருந்த குடும்பத் தொல்லைகள் ஒழிந்தன' என்று காரணம் சொன்னார்!


இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!


இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!


தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!


தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரதுசேகரிப் பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!


முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!


உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் 'செகண்ட் செக்ஸ்' வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் வெளியாகிவிட்டது!


'நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொள்கையை மாற்றிக்கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று எல்லாக் கூட்டத்திலும் மறக்காமல் சொல்வார்!


அவருடைய நண்பர்களில் எட்டுப் பேர் 42 வயதில் இறந்துவிட்டார்களாம். தானும் 42 வயதில் இறந்து போவோம் என்று நினைத்தாராம். ஆனால், அதன்பிறகுதான் தீவிரப் பொது வாழ்க்கையில் இறங்கினார்!


'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!
புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!


பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை-வெங்காயம். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார்!


நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்!


95 வயது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!

Tuesday, May 3, 2011

அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிரது... வெய்யிலை எப்படி சமாளிப்பது...


அக்னி நட்சத்திரம் நாளை ( 4-ந்தேதி) தொடங்குகிறது. நாளை  தொடங்கும் அக்னி வெயில் 29-ந்தேதி வரை மொத்தம் 26 நாட்கள் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில்தான் பொது மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

வெயிலில் அலைவதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும். வெயிலில் அலைவதை தவிர்ப்பதன் மூலம் கோடை கால வெப்ப நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். வெயில் நோய்கள் கோடை காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் கொப்பளங்கள் ஏற்படும்,

மேலும் வியர் குரு, சின்னம்மை போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றில் இருந்து தப்பிக்க குறைந்தது ஒருநாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மேலும் வெள்ளரிக்காய், தர்பூசணி பழங்கள் போன்றவற்றையும் சாப்பிடலாம். இளநீர் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

நொங்கு பதனீர் போன்றவையும் சாப்பிடலாம். இவை உடல் சூட்டை தணிக்கும். ஆடைகள் கோடை காலத்தில் ஆடைகளை அணிவது நல்லது. வியர்வை அதிக அளவில் வெளியேறுவதால் பருத்தி ஆடை உடலுக்கு இதமாக இருக்கும்.

மேலும் ஆடைகளை இறுக்கமாக அணியாமல் தளர்வாக அணிவது நல்லது. அடர்த்தி யான நிறம் கொண்ட ஆடைகளை பயன்படுத் துவதை குறைத்து கொள்ளுங்கள். வெயிலில் செல்லும் போது குடைபிடித்து செல்வது நல்லது. பகலில் வெயிலில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தொப்பி அணிந்து செல்வது நல்லது.

நடந்து செல்பவர்கள் குடை பிடித்து செல்லவேண்டும். அல்லது தலையில் கைக்குட்டையால் மூடலாம். முடிந்த அளவு அசைவ உணவை தவிர்த்து விடுவது நல்லது. குறிப்பாக வெயில் காலத்தில் சிக்கன் சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிடும்போது உணவை ஆறவைத்து சாப்பிட வேண்டும்.சாப்பாட்டில் காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வயிற்று உபாதை ஏற்படும்.

கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக சூரியன் பயனிக்கும் 15 நாட்கள் அதாவது சித்திரை மாதத்தின் கடைசி வாரமும், வைகாசி மாதத்தின் முதல் வாரமும் மிக அதிக வெப்ப நாட்கள் என்று வானியல் வல்லுனர்கள் கணித்து அதற்கு கத்தரி என்று அழைத்தார்கள்.

கத்திரியில் சில விசேஷங்களை மட்டும் தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது.

கத்திரி காலத்தில் செய்ய தகுந்தவை: திருமணம், நிச்சயம், பெண்- மாப்பிள்ளை பார்த்தல், உபநயனம், பொது கட்டிடங்கள் (சத்திரங்கள், அரசு கட்டிடங்கள்) கட்டுதல், பரிகார ஹோமங்கள் போன்றவை செய்ய தகுந்த வையாகும்.
 
 
அக்னிநட்சத்திரத்தில் செய்யக்கூடாதவை
மொட்டை அடித்தல், நிலம் தோண்டுதல், வீடு கட்ட தொடக்கம், மரங்கள், செடிகள் வெட்டுவது, தோட்டம் அமைப்பது, விதை விதைத்தல், புதிய குடியிருப்பு பகுதி அமைப்பது (பிளாட் போடுவது) போன்றவை செய்யக்கூடாது.
 
விஞ்ஞானரீதியாக பூமி 23.5 பாகை சாய்வான நிலையில் சீரான அச்சில் சூரியனை நீள் வட்டபாதையில் சுற்றுகிறது. அப்படி சுற்றும் பொழுது பூமியின் வடபகுதி 6 மாதங்களும் அடுத்து தென்பகுதி 6 மாதங்களும் சூரியனின் ஒளி விழும் வகையில் உள்ளது நேராக சூரியன் விழும் காலம் கோடை என்றும், சாய்வாக சூரியனின் ஒளி விழும் காலம் குளிர் காலம் என்றும் அழைக்கப்படுகிறது.
 
இத்தகைய மாற்றமே புவியின் பருவநிலை மாற்றத்தின் முக்கிய காரணியாகும். இதில் சூரியனின் கதிர் நேர்கோணத் தில் விழும் காலமே கத்திரி ஆகும். இக்காலத்தில் சூரியனின் மிக அதிக பட்ச வெப்பம் பூமியின் மீது தாக்கும். இதனால்தான் அக்னி வெயில் மண்டையை பிளப்பது போல் உள்ளது. இத்தகைய கத்திரி வடபகுதியில் உள்ள இந்தியா மட்டும் அல்ல பூமத்திரேகை கீழ் தென் பகுதியில் உள்ள நாடுக ளுக்கும் ஏற்படும்.
 
தென் பகுதியில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், வட பகுதிக்கு நேர் எதிரான காலத்தில் அது இந்தியாவில் குளிர் காலம் எனில் ஆஸ்திரேலியாவில் கத்திரி மிகவெப்ப காலம் ஆகும். சிவன் கோவில்களில்: அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் முடியும் நாள் வரை கர்ப்பகிரகத்தில் சிவலிங் கத்தின் மீது தாரா பாத்திரம் கலம் தொங்கவிடப்பட்டு அதில் வெற்றி வேர் இட்டு, பன்னீர் நிரப்பி சொட்டு சொட்டாக பன்னீர் சிவலிங் கத்தின் மீது விழும் வகையில் அமைத்திருப்பார்கள். இதனால் அக்னி நட்சத்திரத்தில் சிவன் உக்கிரம் தணிந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு அருளுவார் என்பது ஐதீகம். மேலும் சிவலிங்கம் 3 பிரிவுகளால் ஆனதாகும்.
 
இவை அனைத்தும் சாந்து கொண்டு பிணைக்கப்பட்டு இருக்கும். அக்னி நட்சத்திர காலத்தில் சாந்து காய்ந்து சிவலிங்கம் ஆவுடையாரில் இருந்து பிரிவதை தடுப் பதற்கும் தார் பாத்திரத்தில் இருந்து விழும் நீர் உதவுகிறது.