Tuesday, May 3, 2011

அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிரது... வெய்யிலை எப்படி சமாளிப்பது...


அக்னி நட்சத்திரம் நாளை ( 4-ந்தேதி) தொடங்குகிறது. நாளை  தொடங்கும் அக்னி வெயில் 29-ந்தேதி வரை மொத்தம் 26 நாட்கள் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில்தான் பொது மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

வெயிலில் அலைவதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும். வெயிலில் அலைவதை தவிர்ப்பதன் மூலம் கோடை கால வெப்ப நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். வெயில் நோய்கள் கோடை காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் கொப்பளங்கள் ஏற்படும்,

மேலும் வியர் குரு, சின்னம்மை போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றில் இருந்து தப்பிக்க குறைந்தது ஒருநாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மேலும் வெள்ளரிக்காய், தர்பூசணி பழங்கள் போன்றவற்றையும் சாப்பிடலாம். இளநீர் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

நொங்கு பதனீர் போன்றவையும் சாப்பிடலாம். இவை உடல் சூட்டை தணிக்கும். ஆடைகள் கோடை காலத்தில் ஆடைகளை அணிவது நல்லது. வியர்வை அதிக அளவில் வெளியேறுவதால் பருத்தி ஆடை உடலுக்கு இதமாக இருக்கும்.

மேலும் ஆடைகளை இறுக்கமாக அணியாமல் தளர்வாக அணிவது நல்லது. அடர்த்தி யான நிறம் கொண்ட ஆடைகளை பயன்படுத் துவதை குறைத்து கொள்ளுங்கள். வெயிலில் செல்லும் போது குடைபிடித்து செல்வது நல்லது. பகலில் வெயிலில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தொப்பி அணிந்து செல்வது நல்லது.

நடந்து செல்பவர்கள் குடை பிடித்து செல்லவேண்டும். அல்லது தலையில் கைக்குட்டையால் மூடலாம். முடிந்த அளவு அசைவ உணவை தவிர்த்து விடுவது நல்லது. குறிப்பாக வெயில் காலத்தில் சிக்கன் சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிடும்போது உணவை ஆறவைத்து சாப்பிட வேண்டும்.சாப்பாட்டில் காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வயிற்று உபாதை ஏற்படும்.

கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக சூரியன் பயனிக்கும் 15 நாட்கள் அதாவது சித்திரை மாதத்தின் கடைசி வாரமும், வைகாசி மாதத்தின் முதல் வாரமும் மிக அதிக வெப்ப நாட்கள் என்று வானியல் வல்லுனர்கள் கணித்து அதற்கு கத்தரி என்று அழைத்தார்கள்.

கத்திரியில் சில விசேஷங்களை மட்டும் தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது.

கத்திரி காலத்தில் செய்ய தகுந்தவை: திருமணம், நிச்சயம், பெண்- மாப்பிள்ளை பார்த்தல், உபநயனம், பொது கட்டிடங்கள் (சத்திரங்கள், அரசு கட்டிடங்கள்) கட்டுதல், பரிகார ஹோமங்கள் போன்றவை செய்ய தகுந்த வையாகும்.
 
 
அக்னிநட்சத்திரத்தில் செய்யக்கூடாதவை
மொட்டை அடித்தல், நிலம் தோண்டுதல், வீடு கட்ட தொடக்கம், மரங்கள், செடிகள் வெட்டுவது, தோட்டம் அமைப்பது, விதை விதைத்தல், புதிய குடியிருப்பு பகுதி அமைப்பது (பிளாட் போடுவது) போன்றவை செய்யக்கூடாது.
 
விஞ்ஞானரீதியாக பூமி 23.5 பாகை சாய்வான நிலையில் சீரான அச்சில் சூரியனை நீள் வட்டபாதையில் சுற்றுகிறது. அப்படி சுற்றும் பொழுது பூமியின் வடபகுதி 6 மாதங்களும் அடுத்து தென்பகுதி 6 மாதங்களும் சூரியனின் ஒளி விழும் வகையில் உள்ளது நேராக சூரியன் விழும் காலம் கோடை என்றும், சாய்வாக சூரியனின் ஒளி விழும் காலம் குளிர் காலம் என்றும் அழைக்கப்படுகிறது.
 
இத்தகைய மாற்றமே புவியின் பருவநிலை மாற்றத்தின் முக்கிய காரணியாகும். இதில் சூரியனின் கதிர் நேர்கோணத் தில் விழும் காலமே கத்திரி ஆகும். இக்காலத்தில் சூரியனின் மிக அதிக பட்ச வெப்பம் பூமியின் மீது தாக்கும். இதனால்தான் அக்னி வெயில் மண்டையை பிளப்பது போல் உள்ளது. இத்தகைய கத்திரி வடபகுதியில் உள்ள இந்தியா மட்டும் அல்ல பூமத்திரேகை கீழ் தென் பகுதியில் உள்ள நாடுக ளுக்கும் ஏற்படும்.
 
தென் பகுதியில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், வட பகுதிக்கு நேர் எதிரான காலத்தில் அது இந்தியாவில் குளிர் காலம் எனில் ஆஸ்திரேலியாவில் கத்திரி மிகவெப்ப காலம் ஆகும். சிவன் கோவில்களில்: அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் முடியும் நாள் வரை கர்ப்பகிரகத்தில் சிவலிங் கத்தின் மீது தாரா பாத்திரம் கலம் தொங்கவிடப்பட்டு அதில் வெற்றி வேர் இட்டு, பன்னீர் நிரப்பி சொட்டு சொட்டாக பன்னீர் சிவலிங் கத்தின் மீது விழும் வகையில் அமைத்திருப்பார்கள். இதனால் அக்னி நட்சத்திரத்தில் சிவன் உக்கிரம் தணிந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு அருளுவார் என்பது ஐதீகம். மேலும் சிவலிங்கம் 3 பிரிவுகளால் ஆனதாகும்.
 
இவை அனைத்தும் சாந்து கொண்டு பிணைக்கப்பட்டு இருக்கும். அக்னி நட்சத்திர காலத்தில் சாந்து காய்ந்து சிவலிங்கம் ஆவுடையாரில் இருந்து பிரிவதை தடுப் பதற்கும் தார் பாத்திரத்தில் இருந்து விழும் நீர் உதவுகிறது.

15 comments:

  1. நான் அக்னி நட்சத்திரம் பார்த்துட்டேன். அலைபாயுதே,நாயகன், ராவணா டீவீடி குடுங்கன்னு மணிரத்னம் கிட்ட கேட்கலாம். :)

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அக்கினி வெய்யிலுக்கு அசத்தல் முன்னேற்பாடா?

    காலாம் காலம் வெய்யில் அடிப்பதால் பழகிருச்சு எல்லாமே :)

    ReplyDelete
  4. தேவையான நேரத்தில் பயனுள்ள பதிவு..
    நன்றி..

    ReplyDelete
  5. ஹி ..ஹி ..இங்க இப்போ இடியுடன் கூடிய மழை பெய்யுது ........பருவ நிலை ரொம்ப மாறுது .

    ReplyDelete
  6. இதன் தாக்கம் மத்திய கிழக்கு நாடுகளை அதிகம் தாக்கும் எப்படித்தான் சமாளிக்க போறனோ இந்த அக்னி வெயில

    ReplyDelete
  7. இந்த முறை அக்னி நட்சத்திரம் பொய்க்குமா? நம்மை வியர்வை பொழியவைக்குமா என கணிக்க இயலாத நிலையில் உங்கள் பதிவு இரண்டினையும் எதிர்கொள்ள நம்பிக்கையூட்டுகிறது.'

    ReplyDelete
  8. சங்கவியை எப்படி சமாளிக்கரதுன்னு உங்க ஆஃபீஸ் ஃபிகர்கள் எல்லாம் தனி மீட்டிங்க் போட்ற அளவு நீங்க தொந்தரவு பண்ரீங்களாமே ? ஹா ஹா

    ReplyDelete
  9. Super anna... didnt expect tis much from u... u r very clear at ur point.. Nice sharing..

    ReplyDelete
  10. ரொம்ப நல்ல பதிவு

    ReplyDelete
  11. பயனுள்ள பதிவு நன்றி

    ReplyDelete
  12. நண்பரே அமீரகத்தில் வெயில் கடந்த ஒருமாதகாலமாக வதைக்கத் தொடங்கிவிட்டது . தங்களின் ஆலோசனைகள் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete