நாட்டுப்புறப்பாடல்களில் கும்மிப்பாட்டும் ஒன்று என அனைவருக்கும் தெரிந்ததுதான். நம் முன்னோர்கள் ஊர்த்திருவிழா என்றால் அதில் நிச்சயம் பெண்களின் கும்மிப்பாட்டு இடம் பெறும் ஆனால் இன்று கும்மிப்பாட்டு கிட்டத்தட் அழியும் நிலையில் உள்ளது ஒன்று என்று சொன்னால் அது மிகையாகது.
இன்று தமிழக குக்கிராமங்கிளில் எங்கோ ஒரு மூலையில் கும்மிப்பாட்டுக்கலை நிச்சயம் இருக்கும் நானும் குக்கிராம்தைச் சேர்ந்தவன் தான் ஆனால் எங்கள் பகுதியில் இப்போது இக்கலையே இல்லை. விழாக்காலங்களில் தொலைக்காட்சியில் ஒரு அரைமணிநேர நிகழ்ச்சியாகத்தான் பார்க்க முடிகிறது. நாளைய சமுதாயத்திற்கு இது தான் கும்மிப்பாட்டு என்று தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சியைத்தாக் காண்பிக்க முடியும்.
சில கிராமங்களில் பெண்கள் நெல் அறுவடை முடிந்து அறுவடையில் கிடைக்கும் நெல்லை பங்கு போடுவார்கள் பங்கு பிரித்த பின் அனைவரும் கொஞ்சம் பணம் போட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து அன்று ஒரு மூன்று மணி நேரம் கும்மியடித்து பாடிக்கொண்டு சிறப்பாக நிகழ்ச்சியை கொண்டாடுவர். மற்றும் ஊரின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அந்த கிராமத்தின் பெண்கள் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வர்.
கும்மிப்பாட்டு பெண்களால் ஒரு குழுவாக வட்டமிட்டு நின்று கைகளால் கும்மியடித்து கீழே குனிந்து மீண்டும் திரும்பி வட்டமிட்டவாரே பாடிக்கொண்டு நளினமாக ஆடியும் வருவார்கள். ஆடும் போது நடுவில் குத்துவிளக்கு அல்லது பூக்கூடை வைத்து இருப்பார்கள்.
கும்மிப்பாடல்கள் நம் தமிழர்களின் தொன்று தொட்டு உண்டு சித்தர்கள் முதல் பாரதியார் மற்றும் இன்று வரை உள்ள கவிஞர்கள் கும்மிப்பாடல்களை எழதி உள்ளனர்.. இதில் இப்பாடல் ரொம்ப பிரபலம்....
இன்று தமிழக குக்கிராமங்கிளில் எங்கோ ஒரு மூலையில் கும்மிப்பாட்டுக்கலை நிச்சயம் இருக்கும் நானும் குக்கிராம்தைச் சேர்ந்தவன் தான் ஆனால் எங்கள் பகுதியில் இப்போது இக்கலையே இல்லை. விழாக்காலங்களில் தொலைக்காட்சியில் ஒரு அரைமணிநேர நிகழ்ச்சியாகத்தான் பார்க்க முடிகிறது. நாளைய சமுதாயத்திற்கு இது தான் கும்மிப்பாட்டு என்று தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சியைத்தாக் காண்பிக்க முடியும்.
சில கிராமங்களில் பெண்கள் நெல் அறுவடை முடிந்து அறுவடையில் கிடைக்கும் நெல்லை பங்கு போடுவார்கள் பங்கு பிரித்த பின் அனைவரும் கொஞ்சம் பணம் போட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து அன்று ஒரு மூன்று மணி நேரம் கும்மியடித்து பாடிக்கொண்டு சிறப்பாக நிகழ்ச்சியை கொண்டாடுவர். மற்றும் ஊரின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அந்த கிராமத்தின் பெண்கள் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வர்.
கும்மிப்பாட்டு பெண்களால் ஒரு குழுவாக வட்டமிட்டு நின்று கைகளால் கும்மியடித்து கீழே குனிந்து மீண்டும் திரும்பி வட்டமிட்டவாரே பாடிக்கொண்டு நளினமாக ஆடியும் வருவார்கள். ஆடும் போது நடுவில் குத்துவிளக்கு அல்லது பூக்கூடை வைத்து இருப்பார்கள்.
கும்மிப்பாடல்கள் நம் தமிழர்களின் தொன்று தொட்டு உண்டு சித்தர்கள் முதல் பாரதியார் மற்றும் இன்று வரை உள்ள கவிஞர்கள் கும்மிப்பாடல்களை எழதி உள்ளனர்.. இதில் இப்பாடல் ரொம்ப பிரபலம்....
கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!
கும்மிப்பாட்டு திருவிழா காலங்களில் பாடும் போது நக்கலும் நையாண்டியுமாக கேட்பவரை இன்புறச்செய்யும்...
கும்மியடி பெண்ணே! கும்மியடி!
கொங்க குலுங்கவே கும்மியடி
நம்மப் பொங்களும் சேர்ந்து – அவர
நாடிக் கும்மி யடியுங்கடி – அவரத்
தேடி கும்மி யடியுங்கடி!
நம்பிடக் காத்திட வந்தவண்டி – அவரை
நாடிக் கும்மி யடியுங்கடி - அவரத்
தேடி கும்மி யடியுங்கடி!
கொங்க குலுங்கவே கும்மியடி
நம்மப் பொங்களும் சேர்ந்து – அவர
நாடிக் கும்மி யடியுங்கடி – அவரத்
தேடி கும்மி யடியுங்கடி!
நம்பிடக் காத்திட வந்தவண்டி – அவரை
நாடிக் கும்மி யடியுங்கடி - அவரத்
தேடி கும்மி யடியுங்கடி!
இப்படிதான் சரணம்...செல்கிறது..
தன்னன நாதினம் தன்னன நாதினம் தன்னன நாதினம் தன்னானே..
பெண்ணைப் பெண்ணே கும்முதல்..
*கண்ணாடிக் கன்னத்தில் வேர்க்கு தடி - உந்தன் கடைக்கண்ணு எங்கேயோ பார்க்கு தடி
முன்னாடி சாமியை கும்பிடடி பின்னே
முத்துப் போல புருசன் வருவானடி!
பக்தியாக
**மாயன் அழகு மலை மேலே - என்றும் மல்லிகைப் பூ வாசம் வீசுதடி
நாயன் அவன் புகழே பாடி - இள
நங்கை யரே கும்மி அடிங்கடி*
*
**நந்தன் மதலையைக் கும்பிடு வோம் - அந்த
நாரணன் தாளையே நம்பிடு வோம்
செந்திரு மார்பனை சுந்தர ராஜனை
செந்தமிழ் பாடியே கும்மி யடி
சாத்தின கதவு திறக் காமல் - என்றும்
சந்தன காப்புக் கலை யாமல்
சத்தியம் காக்கும் கருப்பண்ண சாமியை
சரணம் என்றே ஒரு கும்மி யடி
சந்தன காப்புக் கலை யாமல்
சத்தியம் காக்கும் கருப்பண்ண சாமியை
சரணம் என்றே ஒரு கும்மி யடி
இன்று இக்கலை அழிவை நோக்கி இருந்தாலும் இக்கும்மிப்பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாது என்றால் அது மிகையாகது....