Monday, February 28, 2011

எனக்கும் காதல்....


அழகான கண்கள்
கொழு கொழு கன்னம்
முத்துப்போல் சிரிப்பு
நுனி நாக்கில் ஆங்கிலம்
நிமிர்ந்த நடை
அனைவரும் திரும்பி பார்க்கும் கூந்தல்

எனக்கும் அவள் மேல் காதல்

என் அக்கா பொண்ணு தான் அவள் நான்காம் வகுப்பு படிக்கும் இளங்கனி....

Friday, February 25, 2011

உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி



நாம் தினமும் பல உடற்பயிற்சிகளை கேள்விப்பட்டு இருக்கிறோம் இன்னும் சில பேர் செய்து கொண்டு இருக்கிறோம் எல்லா பயிற்சியிலும் ஒரு நிவாரணம் இருக்கும். உடலில் உள்ள அனைத்து பாகங்களும் வேலை செய்ய நீச்சல் என்னும் உடற்பயிற்சி பயன்படுகிறது.

நீச்சல் கலையை கிராமத்தில் உள்ள சிறுவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள் நகர்புரத்து இளைஞர்கள் நிறைய பேருக்கு நீச்சல் தெரியாது என்பது மறுக்க இயலாத உண்மை. கிராமத்து இளைஞர்கள் நீச்சல் கற்க காரணம் அவர்கள் ஊரில் கிணறு, வாய்க்கால், ஏரி அல்லது ஆறு இருக்கும் இதனால் இவர்களுக்கு நீச்சல் கற்கும் வாய்ப்பு தானாக வருகிறது.

நீச்சலில் பல வகை உண்டு கிணற்று நீச்சல், ஆற்று நீச்சல், கடல் நீச்சல் என மூன்று வகையாக சொல்லலாம். கைகளையும் கால்களையும் இடத்திற்கு தகுந்தவாறு அதன் அசைவுகளை மாற்றுவதால் நீச்சலை பிரித்துச் சொல்கிறோம்.

முக்கியமான விசயம் நீச்சலும், சைக்கிள் ஓட்டுவதும் வாழ்க்கையில் ஒரு முறை கற்றால் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்.


நீச்சல் கற்பது எப்படி?

கிணற்று நீச்சல்

நீச்சல் கற்க நிச்சயமாக நன்கு நீச்சல் தெரிந்த நபர் வேண்டும். அவரின் உதவியுடன் தான் கற்க முடியும். முதலில் அவர் தனது கைகால்களை எவ்வாறு அசைக்கிறார் என பார்க்கவேண்டும். காலும் கையும் தண்ணீருக்குள் இருக்கும் தலைமட்டும் மேலே தூக்கி கை, கால்களை மெதுவாக ஆட்டியபடி மிதப்பார் இதை நன்கு கவனித்துவிட்டு நாம் தண்ணீரில் இறங்க வேண்டும். 

தண்ணீருக்குள் இறங்குவதற்கு முன் கிராமத்தில் புரடை(சுரைக்காயை ஒரு 2 மாதம் காய வைத்தால் அதற்கு பெயர் புரடை) கட்டுக்கொண்டு இறங்க வேண்டும். தற்போது லாரி டியூப்பில் காற்றை நிரப்பி நடுவில் உட்கார்ந்து கொண்டு காலை மட்டும் அசைக்கலாம். 

ஒரு இரண்டு நாட்கள் உதவியுடன் நன்கு நீச்சல் அறிந்தவருடன் இறங்கினால் மூன்றாம் நாள் தைரியம் வந்து நாமும் மெதுவாக இறங்கி கை, கால்களை அசைக்கும் போது நன்கு நீச்சல் தெரிந்தவர் நமது அரைநான் கயிறை பிடித்துக்கொள்ள வேண்டும் அப்போது கையையும் காலையும் ஒன்றாக அசைக்க வேண்டும். 
ஒரு இரண்டு முறை பிடித்து விட்டு மூன்றாவது முறை விட்டு விட்டு பிடிக்கும் போது நல்ல பழக்கம் ஏற்படும் கிணற்றில் பழகும் போது இந்தப்பக்க சுவரையும் அந்தப்பக்க சுவரையும் நீச்சல் அடித்து பிடிக்க முயற்சிக்க வேண்டும். ஒரு வாரத்தில் எளிதாக நீச்சல் கற்றுக் கொள்ளலாம்.

இந்த வகை நீச்சல் கிணறு, நீச்சல்குளம், ஏரி, கோயில் குளத்திற்கு மட்டுமே பொருந்தும்.


ஆற்று நீச்சல்

ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது எப்பபொழுதும் தண்ணீர் செல்லும் பக்கமாகதான் செல்ல வேண்டும். எதிர் திசையில் செல்வதை எதிர் நீச்சல் என்பர் இது மிகவும் கடினமான ஒன்று. ஆற்றிற்கும் ஒரு நல்ல அனுபவமிக்க நீச்சல் தெரிந்தவர்களுடன் செல்லவேண்டும். ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது கால்களை விட இரண்டு கைகளையும் ஒவ்வொன்றாக முன்புறம் தூக்கி தண்ணீரை பின்னுக்கு கொண்டு வரைவேண்டும் அப்பொழுது நாம் முன்னுக்குச்செல்வோம். கைகளை எந்த அளிவிற்கு வீசுகிறோமோ அந்த அளவிற்கு நாம் முன்னிற்குச் செல்லலாம். ஆற்று நீச்சல் கற்க குறைந்தது 10 நாட்கள் ஆகும். கைகளை வீசும் போது சுழல் இருந்தாலும்  எளிதாக தப்பிக்கலாம்.
நீச்சலின் பயன்கள் :

1. நீச்சல் என்பது ஒரு வகையான கலை மட்டும்லல நல்ல உடற்பயிச்சியும் தான்.
2. தினமும் 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் உள்ள ஊளைச் சதைகள் குறையும்.
3. கை, கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும்.
4. நன்கு பசி எடுக்கும். கை, காலை குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
5. இரத்த ஓட்டம் சீராகிறது.
6. நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.
7. நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.
8. சிறந்த முதலுதவிக்கலையாகவும், தற்காப்புக்கலையாகவும் விளங்குகிறது.
9. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க நீச்சல் உதவுகிறது.
10. ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப்பகுதிகளும் இயங்குகிறது.

நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க முடியும்
நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது. மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.

வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

1. தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

2. நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.

3. நீச்சல் பயிற்சியில் முதல் 10 நிமிடங்களுக்கு கைகால் களை நீட்டியடிக்கும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகால்களை அசைத்து நீந்த வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
 
எனது வேண்டுகோள் :

குழந்தைகள் படிக்கும்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கண்டிப்பாக கற்றுத்தரவேண்டும். நீச்சல் கற்றுத்தருவதன் மூலம் உடல் நலம் நலன்பெறும்.

Thursday, February 24, 2011

பழமொழியும் விளக்கமும்


பழமொழி நாம் அனைவரும் அறிந்த ஒன்று பழமொழிக்கு பல அர்த்தங்கள் உண்டு இது வரை நான் அறிந்த பழமொழிகளை பாட்டியின் பழமொழியும் சங்கவியும் என்றும் பழமொழி என்றும் இருபதிவாக பதிவிட்டுள்ளேன். இப்பதிவில் நான் படித்த பலமொழிகளை தொகுத்துள்ளேன்.

பழமொழி என்றால் என்ன?
ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயத்தில், ஒரு பண்பாட்டில் உருவான நம்பிக்கைகளை, எண்ணங்களை, கருத்துக்களை, புத்திமதிகளை, அனுபவங்களை நறுக்குத்தெரித்தாற்போல நாலு வார்த்தைகளில் சொல்வதே பழமொழி. இது இலக்கிய நயமான சொற்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கொச்சையான கிராமத்தான் சொற்களிலும் இருக்கலாம். ஆனால் அதிலுள்ள ஆழமான கருத்தை விளக்க ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையே தேவைப்படும். பாமர மக்களும் பழமொழிகளைச் சரளமாகப் பயன்படுத்துவது ஒரு பண்பாட்டின் அறிவு முதிர்ச்சியையும் அனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது.

"திருநீறிட்டார் கெட்டார் ; இடாதார் வாழ்ந்தார்" 

இதன் உண்மை பொருள் "திருநீறிட்டு யார் கெட்டார் ; இடாது யார் வாழ்ந்தார்" என்பதாகும்.

"மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" .

உண்மையிலே இது "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே சரி. மண்குதிர் என்பது ஆற்று நீரின் சுழற்சியால் ஏற்படும் மணல்மேடுகள்.இது பாறை போல் காட்சியளித்தாலும், அதன் மீது ஏறினால் அது நீரில் அமிழ்ந்து விடும்.எனவே மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.குதிர் என்பது குதிரை என திரிந்து விட்டது. 

"ஊரிலே கல்யாணம் மாரிலே சந்தனம்"

முன் காலத் திருமணங்களின் போது, பெரிய பெரிய கிண்ணங்களில் (சந்தனப்பேலா என்று பெயர்) குழம்பு போன்று சந்தனம் தயாரித்து நிறைத்திருந்தார்கள். வருகிற முதியவர்களுள் பெரும்பாலோர் சட்டையணிந்திருப்பதில்லை. குளிர்ச்சி பெறவும், வியர்வை நாற்றம் போகவும் சந்தனக் குழம்பை அள்ளி மார்பு முழுவதும் அவர்கள் பூசிக்கொண்டார்கள். அந்த வழக்கம் நீங்கிவிட்டதால் பழமொழிக்கும் வேலையில்லாமல் போய்விட்டது.
"தூங்கினவன் தொடையில் திரித்தவரை லாபம்"

தனித்தனியாய் உள்ள தேங்காய் நாரைத் தொடையில் வைத்துத் திரித்தால் அது ஒன்றாகச் சேர்ந்து கயிறு ஆகும். தரையில் அமர்ந்து வலக்காலை நீட்டிக் கொண்டு வெற்றுத் தொடை மேல் நாரை வைத்து இடுப்புப் பக்கமிருந்து முழங்கால் பக்கமாகக் கையால் உருட்டவேண்டும். அதற்குப் பெயர்தான் திரித்தல். திரிக்கும்போது நார் உறுத்தும், சிராய்ப்பு உண்டாகலாம். கஷ்டந்தான். பக்கத்தில் ஒருவன் காலை நீட்டித் தூங்குகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவனுடைய தொடையில் திரிக்கலாம் அல்லவா? விழித்துக்கொண்டான் என்றால் எதிர்ப்பான், திட்டுவான், மொத்தவும் கூடும். இருப்பினும் திரித்தவரை லாபந்தானே? முடிந்தவரைக்கும் பிறரை ஏமாற்றிக் காரியம் சாதிக்கலாம் என்று எண்ணுகிற எத்தர்கள் பயன்படுத்தும் பழமொழியிது!

“சுக்கிற்கு மிஞ்சின மருந்துமில்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சின கடவுளும் இல்லை”
இஞ்சியைக் காயவைத்து அதனை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துவர். பித்தம், வாயு, வயிற்றுப் பொருமல், அஜீரணம், வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்ற நோய்களை முற்றிலும் விரட்டும் தன்மை கொண்டது சுக்கு. இதனை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நோய்வருவதில்லை. இந்நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பிற நோய்கள் உடலில் ஏற்படாத வண்ணம் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு அளிக்கும் குணம் சுக்கிற்கு உண்டு.

“ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டும் போக்கும்”

ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும். அது போன்றே அருவி நீரில் பல கனி(ம)ச் சத்துக்கள் மிகுந்து காணப்படுவதால் இதனைக் கனிமச்சத்து நீர் என்றும் கூறலாம். பருகினால் அல்லது இதில் குளித்தால் பித்தநோய், கல்லீரல் தொடர்புடைய நோய்கள், கீழ் வாதம் உள்ளிட்ட பல நோய்கள் போகும். சோற்று நீர் என்பது நீராகாரம். இது அருந்திவர வாதம், பித்தம் இரண்டும் நீங்கும்


‘வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி’

முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். அகத்திக் கீரையை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது.

"பாவிக்குப் பாம்பு கண்"

யாயத்திற்கும்,உண்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பவர்களைக் குறிக்கும். பாம்புக்கு கண்ணிருந்தாலும் அது தனது உணர்திறத்தாலேதான் பிறவற்றைக் கண்டுணர்கின்றது 

"ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்"

ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோசத்தை கொடுக்கும்
மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம், அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள் , தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம். எருதுவின் மேலே ஏறுவது தான் இங்கே செயல் , ஏறினால் எருதுவுக்கு வலிக்கும், ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது. 

"புல் தடுக்கிப் பயில்வான் போல"

புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான் .. ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர், உடனே அதை வேரோடு பிடுங்கி, எரித்து சாம்பலாக்கி – கரைத்துக் குடித்தாராம்…. எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர் சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது.

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி "

ஆல் என்பது ஆலமரம் . வேல் என்பது வேப்பமரம். ஆல மரத்தின் குச்சியும், வேப்ப மரத்தின் குச்சியும் கொண்டு பல் துலக்கும்போது இவை பற்களுக்கு நல்ல வலுவைத் தரும். சிறந்த மருத்துவப் பண்புகளையும் கொண்டவை. ஆகையால் இவை கொண்டு பல் விளக்க பல்வளம் சிறக்கும் . 

  
எட்டாப் பூ தேவருக்கு எட்டும் பூ தங்களுக்கு

கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு

ஆ வேறுருவினதாயினும் பால் வேறுருவினதாமோ? 

பகுத்தறிவில்லாத அறிவு பாரமில்லாத கப்பல் 

இலையின் வீழ்ச்சி வாழ்க்கையின் இரகசியம்

Wednesday, February 23, 2011

அஞ்சறைப்பெட்டி +கும்தலக்கா 24.02.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
தை முடிந்து மாசி தொடக்கத்தில் கோடை வெய்யில் காய்ச்சும் ஆனால் இந்த வருடம் கோடை காலம் குளு குளு என்று தொடங்கி உள்ளது. கோடையை குளு குளு என்று வரவேற்போம்..
...............................................................................................

உலக கோப்பை முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று 100 கோடி பேரை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.  இனி வரும் ஆட்டங்களிலம் வெற்றி பெற வாழ்த்துவோம்.
...............................................................................................

ஒரு வழியாக பாரளுமன்றத்தில் பிரதமர் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக கூட்டுக்குழு அறிவித்துள்ளார் இதை கடந்த பாராளுமன்ற கூட்டத்தின் போதே அறிவித்திருந்தால் கொஞ்சம் நல்லபேராவது கிடைத்திருக்கும் பார்ப்போம் இக்கூட்டுக்குழு என்ன கேள்வி கேட்கப்போகின்றது என்று..

........................................................................................................

எகிப்து, பஹ்ரைனை தொடர்ந்து இப்ப லிபியாவில் மக்கள் புரட்சி ஏற்பட்டுள்ளது எங்கு புரட்சி ஏற்படலாம் இதில் நம்மாளுக  பாதிக்கப்படுகின்றனர்.  ஏன் இந்த மக்கள் புரட்சி என்று அனைவரும் யோசிக்க வேண்டும். மக்களை காப்பற்றவும் அவர்களுக்கு அனைத்து வசதியும் செய்து தரத்தான் அரசாங்கம் இதை சரிவர செய்யாத காரணத்தால் ஏற்பட்டது புரட்சி அங்கெல்லாம் புரட்சி நம்ம ஊரில் ஆட்சிமாற்றம் ...

..........................................................................................................
 
நெதர்லாந்து இங்கிலாந்து ஆட்டம் விறுவிறுப்பாக இருந்து சமீபத்தில் வந்து கத்துக்குட்டி அணிகளில் நெதர்லாந்து அணி பலம் வாய்ந்ததாக தெரிகிறது. அவர்களின் நேத்தியான பந்து வீச்சு, சிறப்பான பேட்டிங் நல்ல பீல்டிங் என சிறப்பாக செயல்பட்டனர் வரும் காலங்களில் பலம் பொருந்திய அணியாக வலம் வரும் என்பது உறுதி.
................................................................................................

மத்திய அரசு 150 ரூபாய் நாணயத்தை விரைவில் வெளியிட உள்ளது. இந்தியாவில் வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து 150 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் வகையில் இந்த நாணயம் வெளியாகிறது.மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்படும். இது தவிர, சிறப்பு 5 ரூபாய் நாணயமும் வெளியிடப்பட உள்ளது. இந்திய அரசு 150 ரூபாய் நாணயம் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இது தொடர்பான அறிவிக்கையை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை சமீபத்தில் வெளியிட்டது.வெள்ளி, தாமிரம், நிக்கல், துத்தநாகம் ஆகியவற்றின் கலவையாக இந்த நாணயம் இருக்கும். இதில் "சத்யமேவ ஜெயதே' என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். சாணக்கியர் மற்றும் தாமரை பூ ஆகியன இதில் இடம்பெற்றிருக்கும்.
 
நாட்டு நடப்பு
 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிறைய கேட்கிறார்கள் திமுகவும் சுமுகமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள், அதிமுகவில் தேமுதிக இன்னும் கூட்டணிக்கு இன்னும் இறுதி வடிவம் கிடைக்கவில்லை அவர்களும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ஒரு வேளை திமுகவில் காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு ஆனதற்குப்பின் தேமுதிக உடன்பாடு ஆகவும் வாய்ப்பிருக்கிறது. எனது மற்றொரு பார்வையில் காங்கிரஸ் திமுகவைவிட்டு வெளியே வந்து தேமுதிகவுடன் 3 அணி அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது அப்படி ஒரு அரசியல் நிகழ்வு நடந்தாலம் நடக்கலாம் அப்படி நடந்தால் அதிமுக + மதிமுக+ கம்யூனிஸ்டுகள் ஒரு அணியாகவும், திமுக+பாமக+விடுதலைச்சிறுத்தைகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ் + தேமுதிக மூன்றாவது அணி அமைத்து போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டால் நிச்சயம் தொங்கு சட்டமன்றம் தான் அமையும்..

தகவல்
 
 
அவரச கால இவ்வுலகில் எதிலும் உடனடியாக தீர்வு வேண்டும் என்பதால் மக்களும் இந்த அவசர பழக்க வழக்கங்களை முழுமையாக பின்பற்றி வருகின்றனர். உணவு வழக்க வழக்கங்களில் நவீன வரவான பாஸ்ட்புட் உணவுவகைகளை இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதும் விரும்பி உண்ணுகின்றனர்.
 
இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலைமுறையினர் தொடர்ந்து பாஸ்புட் உணவு வகை சாப்பிட்டு வருவதால் 50 வயது வரும் போது கேன்சர் உள்ளிட்ட நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர்.
 
குழந்தைகளுக்கும் இரண்டாம் தர ரீதியிலான நீரளிவு நோய் ஏற்படலாம் என்றும் பெண்களுக்கு எழும்புறுக்கி நோய், இரத்த சோகை ஏற்படலாம் என்றும் மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் பாஸ்புட் கலாச்சாரத்தால் அங்கு மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
 
 மேலும் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட 60க்கும் மேற்பட்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளிலும் இதய நோய் கேன்சர் இளம் வயதிலேயே தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக உணவியில் மற்றும் உணவு அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.
 
ஐந்தில் ஒரு குழந்தை பழம் மற்றும் காய்கறிகளை உணவு உண்பதில்லை. என்றும் வெஜிடபிள் உணவு வகைகளை தவிர்பதால் இரண்டாம் தர நீரளவு தாக்கும் ஆபாயம் உள்ளதாக நியூட்ரீசியன் டாக்டர். கேர்ரீ ருக்ஷ்டன் தெரிவித்துள்ளார்.  
 
மருத்துவர்கள் பாஸ்புட் (ஜங்புட்) உணவு வகைகளை தவிர்த்து விட்டு இயற்கையான காய்கறி வகைகளை உண்ண வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுகப்பதிவர் முனைவர், எழுத்தாளர், கவிஞர் என பல சொற்களுக்கு சொந்தக்காரர் முனைவர் பரமேசுவரி இவர்  காஞ்சியில் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் பல பிரபல பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன இவர் "அன்பென்று கொட்டு முரசே" என்ற பெயரில் ஓர் வலைப்பூ வில் எழுதி வருகிறார்...

http://tparameshwari.blogspot.com/

தத்துவம்
 
தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம்.

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.
கும்தலக்கா

நாகையில் மீனவர்கள் சுடப்படுவதை கண்டித்து நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் ஏன் இந்த தேவை இல்லாத வேலை ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் இதுவரை 500க்கும் மேல் பட்ட மீனவர்கள் இறந்துள்ளனர் அப்ப ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கலாம் தேர்தல் நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் நிறைய கூட்டம் வரும்... கூட்டம் கூடியவர்கள் எல்லாம் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. முதலில் உங்கள் ரசிகர் மன்றத்தின் மூலம் பல நலத்திட்டங்களை முறையாக அனைவருக்கும் செல்லும்படி செய்து மக்கள் நம்பிக்கையை பெறுங்கள் அப்புறம் இந்த மாதிரி ஆர்ப்பாட்டத்திற்கு நிறைய ஆதரவு பெருகும்.

சமீபத்தில் இலங்கை தமிழக மீனவர்களை கைது செய்த விவகாரத்தில் நிறைய உள்குத்து இருப்பது போல் இருக்கிறது. இப்பிரச்சனையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைப்பார்த்தால் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் போக வேண்டும்...

மீனவர் பிரச்சனையை பற்றி வெளியுறத்துறை அமைச்சர் நேற்று பாரளுமன்றத்தில் பேசும் போது விரைவில் இப்பிரச்சனையை பேசி தீர்ப்போம் என்கிறார் எப்பதான் பேசித் தீர்ப்பாங்களோ. இதுவே தமிழனைத் தவிர வேறு மாநிலத்தினர் யாராவது இதே போல் பிரச்சனையில் சிக்கி இருந்தால் வடநாட்டு அரசியல் வாதிகளும், மீடியாக்களும் இதை பெரிய விசயமாக்கி ஒரு முடிவுக்கு கொண்டு வந்து இருப்பனர்.

ஆந்திராவில் இது உண்ணாவிரத வருடம் போல முன்னே சந்திரபாபு நாயுடு இருந்தார் இப்ப ஜெகன் மோகன் ரெட்டி இருக்கிறார் ஆக இவர்கள் உண்ணாவிரதம் தினமும் தலைப்புச் செய்திதான் மாற்றங்கள் வருமா என்று ஆந்திர மக்கள் வேடிக்கை பார்ப்பது மட்டுமே நிஜம்.

தனித்து போட்டியிட்டாலும் காங்கிரஸ் ஆட்சியைப்பிடிக்கும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேசி உள்ளார் என்ன ஒரு அற்புதமான பேச்சு இவர்களை யார் தனித்து போட்டியிட வேண்டாம் என்கிறார்கள் பேசாம திமுக கூட்டணி விட்டு வந்து தனித்து நின்று வெற்றி பெற வேண்டியது தானே.

Monday, February 21, 2011

நம்ம ஊரு வயாகரா "தர்பூசணி"


இனி கோடை காலம் வந்து விட்டது உடல் சூட்டைத்தணிக்க தர்பூசணி சாப்பிடலாம் என்று அனைவரும் எண்ணுவோம். நம் ஊரின் முக்கிய வீதிகளில் இப்பொழுதே தர்பூசணி கடைகள் முளைக்க ஆரம்பித்து விட்டது. தர்பூசணி வெய்யில் காலத்தில் அதிகம் உண்ணக்கூடிய உணவாகும். இதில் பல பயன்கள் உள்ளன.

நம் ஊரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக்கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தவர் எல்லாம், 'ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே...!" என்று அங்கலாய்க்கும் தகவல் இது. 

அதாவது, தர்பூசணி பழம் ஓர் இயற்கையான 'வயாக்ரா' என்பது தான். 

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தியர், இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்துள்ளன. 

அதன்படி, தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பூசணிக்கு என்ன சிறப்பு?

தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.
வெள்ளை பகுதியில்தான்...

இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.

இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.

தர்பூசணியின் பயன்கள்:

கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.

பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.

மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.

விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.

வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள். கோடையைக் கொண்டாடுங்கள்.

Sunday, February 20, 2011

சுரேசை தேடி வந்த தேவகி... (சிறுகதை)


ஏய் நித்யா எப்படி இருக்க?

தேவகி நீ எப்படி இருக்க?

பார்த்து எத்தனை வருசம் ஆச்சு குழுந்தைகள் நலமா? நீ எப்படி இருக்க என இருவரும் பாச மழை பொழிந்தார்கள்..

சரி எங்க வீட்டுக்கு வா என்று இருவரும் மாறி மாறி விலாசத்தை கொடுத்து விட்டு விடை பெற்றனர் விடை பெறும் போது ஏய் தேவகி சுரேஷ் இங்க தான் இருக்கிறான் நான் அடிக்கடி பார்ப்பேன்.

என்னடி சொல்ற சுரேஷ் சென்னையிலா இருக்கிறான்!

ஆமாம் அவள் மனைவி என் அலுவலகத்தில் தான் வேலை செய்கிறாள்

அப்படியா ! ஏய் எனக்கு அவன் நெம்பர் வேணும்?

சரிடி நான் நம்பர் வாங்கி உனக்கு சொல்றேன்.

வீட்டுக்கு வந்ததும் தேவகிக்கு எனோ மனது சரியில்லை எத்தனைவருடம் அவன் கூட சிரித்து பேசி இருப்போம், திருவிழா என்றால் அவன் கூட சுத்தாத இடம் இல்லை என சுரேசின் நினைவுகளை சுற்றியே இரண்டு நாட்கள் போயிற்று.

சுரேசிடம் பேசவேண்டும் அனைப்பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு அதிகமாகியது. மாலை நித்யாவிற்கு போன் செய்து நெம்பர் கேக்கும் போது ஏய் சுரேஷ் மனைவியிடம் நெம்பர் கேட்டேன் இது வரை தரலடி.. ஆனான் நான் ஆலுவலகத்தில் அவள் பைல் பார்த்து வீட்டு விலாசம் குறித்து வைத்திருக்கிறேன் குறித்துக்கொள் என்றதும் வேளச்சேரியில் வீடு என்று விலசாத்தை வாங்கிக்கொண்டு எப்படி அவன் வீட்டுக்கு செல்வது என்று யோசித்தாள்..

கணவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற மிகுந்த மனப்போராட்டத்திற்குப்பின் சரி வரும் சனிக்கிழமை அவனுக்கு விடுமுறையாகத்தான் இருக்கும்  நித்யா வீட்டுக்கு செல்கின்றேன் என்று கணவனிடம் கூறியது அவனும் சரி என்றான். பக்கத்து வீட்டு அத்தையிடம் எப்படி செல்ல வேண்டும் என்று விசாரித்து விட்டு சனிக்கிழமை காலை பரபரப்போடு சென்றாள்.

வேளச்சேரியில் இறங்கி ஆட்டோ பிடித்து அவன் வீட்டு வாசல் முன் நின்றதும் கை, கால் உதறியது அவனைப் பார்க்கலாமா வேண்டாமா என்ற எண்ணமும் பார்த்ததும் வெளியே போ என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற தைரியத்தை வரவழித்துக்கொண்டு வீட்டு மணியை அமுத்தினாள் உள் இருந்து சுரேசின் மனைவி வாங்க யார் நீங்க யாரைப்பார்க்க வேண்டும் என்று கூற நான் சுரேசைப் பார்க்க வேண்டும் நான் தேவகி என்று சொல்லுங்கள் என்றதும் சுரேசின் மனைவிக்கு இவள் அந்த தேவகியாக இருக்குமோ என்ற ஒரு சந்தேகத்துடன் உட்காருங்க அவர் துணி காயப்போட்டுட்டு இருக்கார் கூப்பிடுகிறேன் என்ற சுரேசை அழைத்தாள் சுரேஷ் உள்ளே வந்து தேவகியைப் பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து நின்றான்..

பின் எப்படி இருக்க ஏனக்கா இப்படி செய்த எங்கிட்ட சொல்லியிருந்தா நான் உனக்கு திருமணத் செய்து வைத்திருப்பேனே இப்படி வீட்டை விட்டு வந்து தான் திருமணம் செய்ய வேண்டுமா கதறிய சுரேஷ் எங்கக்கா மாமா வரலியா என்று பாசத்துடன் தன் தம்பி கண்கலங்கியதைப் பார்த்து கண் கலங்கி நின்றாள் தேவகி..

Thursday, February 17, 2011

சில சுவாரஸ்யமான நிகழ்வுகள்..


நாம் செல்லும் இடங்களில் எல்லாம் நிறைய மனிதர்களை சந்திக்கின்றோம் நிச்சயமாக ஒவ்வொருவரும் சுவாரஸ்யமான மனிதர்களாக இருப்பார்கள் சமீபத்தில் நான் பெரம்பலுர் சென்ற போது பேருந்தில் நிறைய சுவாரஸ்யமான மனிதர்களை சந்தித்தேன் அவர்களின் குறும்பும், நக்கலும், சிரிக்க வைத்த சம்பவங்களும் இப்பதிவில்..

பவானியில் இருந்து சேலம் செல்லும் பைபாஸ் ரைடர் என்னும் பேருந்தில் சென்றேன் ஏறிய 20வது நிமிடத்தில் மோட்டலில் பேருந்தை நிறுத்தி 10 நிமிடம் தான் நிற்கும் என்று பயணிகள் அனைவரும் இறங்கி அந்த மோட்டலில் பொருட்கள் வாங்கும் வரை 25 நிமிடம் பேருந்து நின்றது இதை ஓட்டுநரிடம் கேட்டதற்கு எல்லா வண்டியும் நிக்குங்க என்றார் அங்கு வண்டி நின்றதற்காக ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் சாப்பாடு, டீ. சிகெரெட் இலவசமாம். ஓட்டுனருக்குத்தான் இலவசம் என்றால் பேருந்தில் வந்த கல்லூரி பெண்கள் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே 4 பைவ்ஸ்டார் சாக்லெட் சுட்டுவிட்டார்கள். அந்த கடை ஓனருக்கு என்ன லாபமோ.

பேருந்தில் அந்த பைவ் ஸ்டார் சுட்ட பெண்கள் செய்த அட்டூழியம் தாங்க முடியாதது இருக்கையில் முட்டி போட்டு உட்கார்ந்து இந்த பொண்ணுக்கு அந்த பொண்ணு ஊட்டி விட இதை ரசித்த இரண்டு பெண்களும் திடீரென வாயைப்பொத்தி விளையாட பொறுமை இழந்த ஓட்டுநர் வண்டிய ஓட்டாம அவுங்க பார்த்தே ஓட்டினார். நமக்குத்தான் உசிரு பயம் அவருக்கென்ன.. அந்த பெண்கள் லேப்டாப்பை எடுத்து ஒரு நடிகரின் குடும்ப போட்டோவிற்கு முத்த மழை பொழிந்தார்கள் நான்கு பெண்களும் கொடுத்த முத்தத்தால் லேப்டாப்க்கு வாய் இருந்தால் நிச்சயம் கதறி இருக்கும்.

சேலம் தாண்டி ஆத்தூர் செல்லும் வழியில் எங்கள் முன் இருக்கையில் ஒரு 35வயதுள்ள ஒரு பெண்மணி அமர்ந்தார் அயேத்தியா பட்டணம் தாண்டி அந்த பெண்ணுக்கு ஒரு போன் வந்தது அந்தம்மா பேச ஆரம்பித்ததும் அவ அவுங்ககூட போய்ட்டா, இவ இவங்கூட போய்ட்டா அது குடும்பமா என்றும் அந்தம்மா பேசிய வரிகள் அட அட பேருந்தில் இருந்த அனைவரும் சிரி சிரி என்று சிரிக்கும் அளவிற்கு அவுங்க புருஷன் குடும்பத்தை நாறடித்தது. இதுல ஆத்தூர் வந்ததே தெரியல..

அடுத்து ஆத்தூரில் இருந்து பெரம்பூர் செல்லும் போது ஒருவர் செல்லில் பேசிக்கொண்டு வந்தார் நடத்துனர் அவரிடம் எங்க போகனும் என்று சொன்னதும் இவர் பணத்தைக்கொடுத்தார் அவரே பெரம்பலூருக்கு டிக்கெட் கொடுத்து விட்டு வந்தார். நடத்துனர் முன்னாடி சென்றதும் போன் செய்த நபர் சார் எங்கிட்ட பணத்த வாங்கிட்டு டிக்கெட்டும் கொடுக்கல சில்லறையும் கொடுக்கல என்று சத்தமிட்டார் நடத்துனர் பொறுமையாக உங்க பாக்கெட்டில் கைய விடுங்க மஞ்சள் கலர், சிகப்பு கலர்ல இரண்டு டிக்கெட் இருக்குங்க பாருங்க என்றதும் தேடி பார்த்துட்டு ஆமா என்றார். நடத்துனர் நீங்க போன் பேசிகிட்டே இருக்கறீங்க கேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்றதும் இந்த செல்போன எந்த நாயி கண்டுபிடிச்சுதோ செல்போனை கையில் பிடித்து திட்டுகிட்டே வந்தார். அவரிடம் இன்னொருவர் செல்லைத்திட்டாதே உன்தவறு என்றும் இருவரும் செல்போனில் இருந்து ராசாவில் ஆரம்பித்து அடுத்த ஆட்சி வரைக்கும் பேசி கலகலப்பூட்டினர்...

அடுத்து திருமண ஊரான வெண்பாவூர்  அங்கு இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் பெண்களை பாப்பா என்று அன்போடு அழைத்தார்கள் முன்பின் தெரியாத பெண்ணைக்கூட பாப்பா நீங்க பொண்ணு தோழியா என்று அங்கிருந்தவர்கள் எங்களிடம் பேசியவர்கள் அனைவரும் என் மனைவியை மட்டுமில்லால் அவர்கள் தோழிகள் அனைவரையும் பாப்பா பாப்பா என்று பாசமுடன் பழகியது கொஞ்சம் ஆச்சர்யப்பட வைத்தது. குறிப்பாக பார்க்கும் அனைவரும் பாப்பா என்று பாசத்துடன் அழைப்பது ரொம்ப பிடித்திருந்தது. மீண்டும் ஒரு நாள் அந்த ஊருக்குச் செல்ல வேண்டும் அவர்களின் ஆசை வார்த்தையான பாப்பாவை கேட்க வேண்டும் போல் உள்ளது.

Wednesday, February 16, 2011

அஞ்சறைப்பெட்டி +கும்தலக்கா 17.02.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
வீட்டு வசதி வாரியத்தில் வீடுவாங்கியவர்களுக்க வட்டி தள்ளுபடி தேர்தலுக்காக வரும் அறிவிப்புகள் பலமாக உள்ளது. இப்படி எல்லாத்தையும் தள்ளுபடி செய்தால் கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம் வாங்கதவர்களுக்கு?
...............................................................................................

ராசா விவகாரத்தில் இப்பதான் பிரதமர் விளக்கம் அளித்துள்ளார் ஆகமொத்தம் எங்களுக்கு எந்த சம்பந்தமுமில்லை எல்லாத்துக்கும் காரணம் ராசாதான் என்று கூறியது போல் உள்ளது.

...............................................................................................

அனைவரின் தூக்கத்தை கெடுக்க வருகிறது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை நாடுகள் விளையாடினாலும் நமக்கு இந்தியா தான் ஜெயிக்கனும் என்ற எண்ணம் இருக்கும். பார்ப்போம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா கோப்பையை வெல்லுமா என்று.. என் எண்ணப்படி இந்த உலககோப்பையில் நிச்சயம் சச்சின் அதிக ரன்களை எடுப்பார் என்பது என் கருத்து சமீபத்தில் அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது ஒவ்வொரு அடியும் நேர்த்தியாக உள்ளது. எந்த பந்து வீச்சாளரையும் கலங்கடிக்கும் ஒரே வீரர் சச்சின்தான்.
...............................................................................................

பழங்களில் அதிக சத்து இருப்பதால் அது உடலுக்கு உகந்தது என்ற கருத்து பரவலாக உள்ளது. தற்போது பழங்களை விட சாக்லேட்டுகளில்தான் அதிக அளவு சத்து உள்ளது.
 
எனவே, அதுதான் சிறந்த உணவு, ஆகவே பழங்களை விட சாக்லேட்டுகளை அதிகம் சாப்பிடலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. 
 
பொதுவாக சாக்லேட்டுகள் தயாரிக்க அதிக அளவில் “கோ-கோ” பவுடர் சேர்க்கப்படுகிறது. இது சத்துமிக்கது. அவை தவிர மற்ற மூலப்பொருள் பவுடர்கள் மாதுளம் பழம் உள்ளிட்ட பல பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
 
இவை பழங்களில் இருக்கும் சத்துக்களை விட அதிகமாகும். இருந்தும் சாக்லேட்டுகளை அளவாக சாப்பிட வேண்டும். அதில் கொழுப்பு, சர்க்கரை சத்துக்கள் அதிகம் உள்ளன என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்பு
 
இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்ததை கண்டித்து கனிமொழி ஆர்ப்பாட்டம் 500 பேருக்கு மேல் சுட்டுக்கொல்லப்படனர் அப்ப இல்லா அக்கறை இப்ப ஏன்? தேர்தல் நேரம் நெருங்க நெருங்க காட்சிகள் நிறைய மாறும்.

காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலம் வரும் தேர்தலில் ஆட்சியில் பங்கு என்று திமுகவை நெருக்குவார்கள் காங்கிரஸ் நிற்கும் இடங்களில் எல்லாம் திமுக தயவு இல்லாமல் வெற்றி பெறுவது கடினம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு ஏற்பட்ட நிலை இந்த முறை காங்கிரசுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பீகார் போல தான் தமிழ்நாடும் என்று போக போக புரிந்து கொள்வார்கள்.

தகவல்
 
 
சி​றிய வவ்வால்​க​ளால் பார்க்க முடி​யாது.​ அவற்​றிற்கு வெளிச்​ச​மும் அவ​சி​ய​மில்லை.​ அவை வாயாலோ,​​ மூக்​காலோ ஒரு​வித ஓசையை எழுப்​பு​கின்​றன.​ இதை "அல்ட்​ரா​சா​னிக் ஓசை' என்று சொல்​வார்​கள்.​ மனி​தர்​க​ளால் இந்த ஓசை​யைக் கேட்க முடி​யாது.​ இந்த ஓசை,​​ முன்​னால் உள்ள பொருட்​க​ளின் மீது பட்​டுத் திரும்பி வரும்.​ இப்​ப​டித் திரும்பி வரும் எதி​ரொ​லி​யின் தன்​மை​யைப் புரிந்​து​கொண்டு,​​ இந்​தப் பொருட்​க​ளின் பரு​ம​னை​யும்,​​ வடி​வத்​தை​யும்,​​ அது இருக்​கின்ற தூரத்​தை​யும்,​​ அதன் அசை​வை​யும் வவ்வால்கள் தெரிந்​து​கொள்​ளும்.​ ​

வ​ளர்ந்த பெரிய வவ்வால்​கள் பார்​வைத் திற​னைப் பயன்​ப​டுத்​தி​தான் இரவு நேரங்​க​ளில் பறக்​கின்​றன.​ வவ்வால்​கள் பொது​வாக பழங்​க​ளையே விரும்பி உண்​ணும்.​ வெளி​நா​டு​க​ளில்,​​ மற்ற பாலூட்​டி​க​ளின் உதி​ரத்​தைக் குடிக்​கின்ற வவ்வால்​க​ளும் உண்டு.​
 
அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுக பதிவர் குணலட்சுமி மனிதனாய் இருந்து மனிதனை நேசிப்போம் என்று பெயரிட்டு கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார் அம்மா என்ற பெயரில் இவர் எழுதிய கவிதை ஆழமாக இருந்தது..
http://senthildl.blogspot.com/2010/12/blog-post_31.html

தத்துவம்
 
யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.

தினை ‌வி‌தை‌த்தவ‌ன் ‌தினை அறு‌ப்பா‌ன், ‌வினை ‌விதை‌த்தவ‌ன் ‌வினை அறு‌ப்பா‌ன்.

கும்தலக்கா

சமீபத்தில் ஒரு 200 கிலோ மீட்டருக்க ஊரைச்சுற்றினேன் சில இடங்களிலில் சாலைவசதிகள் பரவாயில்லை பல இடங்களில் சாலைகள் தரம் ரொம்ப மோசமாக உள்ளது இப்படி இருந்தால் எப்படித்தான் வாக்கு கேக்க போவார்களோ?
பெரம்பலூரில் ஒரு திருமண மண்டபத்திற்கு செல்ல ஆட்டோ பிடித்தேன் ஆட்டோவில் செல்லும் போது இரவு 10மணி இருக்கும் ஆட்டோ சென்ற சாலை வெறும் குண்டும், குழியுமாக  இருந்தது 10 நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு 20 நிமிடம் ஆகியது, மீண்டும் விடியற்காலை 6 மணிக்கு திரும்ப ஆட்டோவில் வந்தேன் வரும் போது எந்த குண்டு, குழியையும் காணவில்லை என்னடா இது 8 மணி நேரத்தில் இவ்வளவு மாற்றமா என்று ஆட்டோ ஓட்டுநரை கேட்டால் காலை11மணிக்கு துணை முதல்வர் வருகிறார் அதுதான் அவர் வரும் பாதை எல்லாம் விடிவதற்குள் போட்டுட்டாங்க என்றார். இப்படி தமிழ்நாடு முழுவதும் துணை முதல்வர் வந்தால் எல்லா சாலைகளையும் சரி செஞ்சுடுவாங்க இதுக்காகவாவது துணை முதல்வர் தமிழ்நாடு முழுவதும் வரனம் அப்பதான் நாளைக்கு ஓட்டு கேட்க போகும் போது சரியில்லாத சாலைகளை செப்பனிட்டோம் என்று சொல்ல முடியும். இல்ல எனில் ஓட்டு கேட்க போகும் சாலை குண்டும், குழியுமாகத்தான் இருக்கும் எதிர்கட்சிகள் பொழந்து கட்டுவார்கள்...

புறநகரில் செல்லும் தொலை தூர  பேருந்துகள் எல்லாம் குறிப்பிட்ட சில மோட்டலில் நிறுத்தி பயணிகளை உணவு அருந்த சொல்வது கண்டிக்கத்தக்கது சுகாதாரமான உணவகமாக இருந்தால் நிச்சயம் வரவேற்கலாம் ஆனால் இவர்கள் நிறுத்தும் இடமெல்லாம் சுகாதாரமற்ற இடங்களாகவே இருக்கின்றது.
தேர்தல் வந்ததும் தான் பொதுமக்கள் மேல் நிறைய அக்கறை வருகின்றது அரசுக்கு கோவையில் செம்மொழி மாநாடு நடந்த போது பல புதிய பேருந்துகள் விட்டார்கள் இவை அனைத்தும் மிதவைப்பேருந்து என கட்டணம் அதிகமான பேருந்துகள் மட்டுமே இயங்கியது ஆனால் இப்ப பல புதிய பேருந்துகள் வலம் வருகின்றன முக்கியமாக அனைத்தும் சாதராண கட்டணம் என்று எழுதப்பட்டு இருக்கின்றது. இது தேர்தல் பயத்தைக் காட்டுகிறது.

Monday, February 14, 2011

சிங்கை பிரபாகர் இப்ப தெடாவூர் பிரபா...


கடந்த வார இறுதியில் நெருங்கிய தோழியின் திருமணத்திற்காக பெரம்பலூர் செல்ல நானும் மனைவியும் முடிவு செய்தோம் என் இனிய பங்காளி பிரபாகரிடம் பேசியபோது எங்க ஊர் பக்கத்தில் தான் இருக்கும் வாங்க என்று அழைத்தார். துறையூர் வழியாக சென்றால் வர முடியாது என்று கூறிவிட்டு சந்திக்க முயற்சிக்கிறேன் என்றேன்.

சித்தார் சென்று விட்டு திருமணத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து இருசக்கர வாகனத்தை பவானியில் விட்டு விட்டு சேலம் , ஆத்தூர் செல்லும் போது பங்காளி ஞாபகம் வந்து போன் செய்து இந்த வழியாகத்தான் வருகிறேன் ஆனால் வீட்டுக்கு வர நேரம் இல்லை என்றேன் பரவாயில்லை என்று எனக்கு பேருந்து எங்க நிற்கும் எந்த பேருந்தில் ஏறவேண்டும் என அடிக்கடி போன் செய்து எங்கே இருக்கறீங்க என்றார். கெங்கவல்லி தாண்டியதும் இன்னும் 10 நிமிடத்தில் எங்க ஊரைக்கடந்து விடுவீர்கள் என்றார்.

தெடாவூர் வந்ததும் அங்கு மூன்று இடத்தில் பேருந்து நிற்கும் என்றார்கள் இரண்டவாது பேருந்து நிலையத்தில் திடீரென பேருந்தில் ஏறி என்னையும், என் மனைவியையும் ஆச்சர்யப்படுத்தினார். எனக்கு மிக மிக மகிழ்ச்சி ஒரு போன் தான் செய்தோம் வீட்டுக்கு வர இயல வில்லை என்றோம் நம்மை சந்திப்பதற்காக பேருந்தில் ஏறி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பேருந்தில் ஏறியதும் எங்க மகன் என்றார் நாங்க இரண்டு பேர்தான் வந்தோம் என்றார் அவர் ஊரில் இருந்து ஒரு 7 கிலோமீட்டர் எங்களுடன் பயணம் செய்து எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் என் பங்காளி.

வலைப்பூ மூலம் நண்பராகி அப்புறம் பேச பேச என் பங்காளி ஆகி வாரம் ஒரு முறை தொலைபேசியில் பேசி கடந்த ஈரோடு சங்கமத்தில் சந்தித்தது எல்லாம் இந்த வலைப்பூவின் நட்பால் எதிர்பார்க்கவில்லை பங்காளி இந்த அளவிற்கு எங்களை மகிழ்ச்சியில் தில்லாட வைப்பீர்கள் என்று.

சிங்கையில் இருந்த நண்பர் இப்ப வீட்டுக்கு வந்ததும் குடும்பத்தின் மேலும் தன் மகனின் அன்பாலும் மீண்டும் சிங்கை செல்லவில்லை இங்கேயே இருந்து மகனுடன் நேரம் செலவழிக்கிறேன் என்று சொன்னது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது சிங்கை பிரபாகராக இருந்து இனி தெடாவூர் பிரபாவாக மாறிவிட்டார்.

பிரபாரவை சந்தித்தும் என் மனைவி என்னிடம் நம்ம ஊர் வழியாக யாராவது வந்தால் நிச்சயம் வீட்டுக்கு வாங்க என்போம் நேரம் இல்லை அடுத்த முறை வருகிறேன் என்றால் சரிங்க என்போம் இல்லை எனில் பேருந்து நிலையத்தில் நின்று கை அசைப்போம் ஆனால் இவர் தனது குழந்தைகளை விட்டு நம்மை சந்திப்பதற்காக பேருந்தில் ஏறி சந்தித்து ஆச்சசர்யப்படுத்தினார் நிச்சயம் நாம் இதை செய்திருக்க மாட்டோம் இப்படி எல்லாம் இணையத்தின் மூலம் நண்பர்கள் கிடைப்பார்களா என்றால் ஆச்சர்யந்தான்.

என் பங்காளி தெடாவூர் பிரபாவிற்காக இப்பதிவு...

Thursday, February 10, 2011

உங்களுக்கு தெரியுமா ஈரோம் சர்மிளாவை?


நேற்று மாலை ஆறு மணி அளவில் காந்தி மியூஸியத்தில் ஈரோம் சர்மிளாவின் வாழ்வையொட்டி அமைக்கப்பட்ட "ஒளியேந்திய பெண்" என்கிற ஒரு நபர் நாடகம் நடத்தப்பட்டது. ஈரோம் சர்மிளா யாரெனக் கேட்பவர்களுக்கு... கடந்த பத்து வருடங்களாக இந்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மணிப்பூரைச் சேர்ந்த பெண். ஆயுதப்படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம் - 1958 தன்னுடைய மாநிலத்திலிருந்து திரும்பிப் பெறப்பட வேண்டும் என்கிற கோரிக்கையோடு இவர் போராடி வருகிறார். பத்தாண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த அறப்போராட்டத்தை கலைக்க அரசால் மூக்கின் வழியே கட்டாயமாக உணவு செலுத்தப்பட்டு வருகிறது. அப்பாவி மக்களை தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் சுட்டுக் கொன்று சித்திரவதை செய்யும் ராணுவத்தை எதிர்த்து சர்மிளா போராடி வருகிறார்.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஓஜெஸ் என்கிற இளம்பெண் சர்மிளாவின் பாத்திரத்தை ஏற்று இந்த நாடகத்தை நடத்துகிறார். மணிப்பூரின் வரலாறு, வடகிழக்கு மாகாணங்கள் மீதான அரசின் மெத்தனம், ராணுவத்தின் பாலியல் அத்துமீறல்கள், சர்மிளாவின் தொடர்கைதுகள் என எல்லாமே நாடகத்தின் வாயிலாக அருமையாக சொல்லப்படுகிறது. நாடகத்தில் இருந்து சில துளிகள் உங்களுக்காக..
** உங்களை நான் இப்போது மணிப்பூருக்கு அழைத்துப் போகப்போகிறேன். அதற்கு முதலில் நாம் ரயில் டிக்கட் புக் செய்ய வேண்டும். ஆனால் எங்கள் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் ரயில் நிலையம் கிடையாது. மிக அருகில் இருக்கும் வேறொரு ஊரின் ரயில் நிலையமோ 260 கிமீ தொலைவில் உள்ளதே.. உங்கள் நேரம் நன்றாக இருந்தால் அங்கிருந்து சாலைவழிப்பயணமாக எட்டு மணி நேரத்தில் வந்து விடலாம்.

** உங்களுக்கு ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரமும் மின்சாரம் உண்டு. எங்களுக்கு அது வெறும் கனவு. பெட்ரோல் ஒரு லிட்டர் 150 ரூபாய். அதற்கும் மூன்று மணி நேரங்கள் க்யூவில் காத்திருக்க வேண்டும். இந்தியாவோடு எங்களை இணைக்கும் சாலையான NH31 இருந்தும் இல்லாத கதைதான்.

** எங்கள் தீஸ்தா - பிரம்மபுத்திரா நதிக்கரைகளில் மின் திட்டங்கள் எத்தனையோ செயல்படுத்தபடுகின்றன. மொத்த இந்தியாவும் எங்களால் ஒளிரக்கூடும். ஆனால் எங்கள் வாழ்வோ.. என்றும் மீள முடியாத இருளிலேயே இருக்கிறது.

** இந்த நாட்டின் தேசிய கீதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். புவியியல் ரீதியாக எல்லா மாநிலங்களுக்கும் இடமுண்டு. ஆனால் ஒரு வடகிழக்கு மாகாணம் கூட இல்லையே.. இதை எப்படி எங்களால் தேசியகீதமாக ஏற்றுக் கொள்ள முடியும்? உஷ்ஷ்ஷ்.. இதையெல்லாம் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது.

** எங்கள் சமூகம் தாய்வழி சமூகம். இங்கெ இருக்கக் கூடிய மார்க்கெட்டுகள் எல்லாமே பெண்களால் நடத்தப்படுபவை. நாட்டிலேயே ரொம்பப் பெரிய இந்த மார்க்கெட்டுகளை “இமா மார்க்கெட்” என்றழைப்பார்கள். இதைத்தான் இந்திய அரசு மொத்தமாக இடித்து விட்டு பெருவணிக அரக்கர்களை இறக்குமதி செய்யத் துடிக்கிறது.

** பள்ளியில் நாம் படிக்கும்போது புத்தகங்களோடு எனக்கு சிநேகம் உண்டானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எத்தனை எத்தனை பேர்.. அற்புதம். ஆனால்.. அவர்களில் ஒருவர் கூடவா எங்கள் மாநிலத்தில் இருந்து வரவில்லை? ஏன் அவர்கள் சரித்திரம் இருட்டடிக்கப்படுகிறது? இந்தியாவுக்கு வெகு முன்னரே எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை நீங்கள் அறிவீர்களா?

** வளர்ந்து பெரியவளாகி ஒரு மனித நல இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். கிராமங்களுக்குச் சென்ற போது எனக்கு பல அதிர்ச்சிகள். வன்புணர்ச்சிகள், காரணமே இல்லாத ஆள் கடத்தல்கள், கொலைகள்.. இந்த சட்டம் எதை எல்லாம் தவறு என்று சொல்கிறதோ, அது எல்லாமே. எங்கள் கிராமங்களில் சர்வசாதரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

** ௨000 ஆம் ஆண்டின் ஒரு கறுப்பு தினம். அந்த கிராமத்தில் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டு சிலர் நின்றுந்தார்கள். ஆனால் அங்கே வந்ததோ ஆயுதம் ஏந்திய வீரர்களைத் தாங்கிய ஒரு கவச வண்டி. சட் சட் சட்... துப்பாக்கிகள் அதிர்ந்து அடங்கின. பத்து சவங்கள். அந்த சாலையின் நடுவில் கிடந்தது. ஏன் இந்தப்படுகொலைகள்? தெரியாது. மறுநாள் செய்தித்தாளில் அதைச் செய்தது அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் என்கிற இந்திய ராணுவப்பிரிவு எனத் தெரிந்தது. இறந்து போனவர்களில் சிறுவயதிலேயே வீரச்செயல் புரிந்ததற்காக விருது வாங்கிய ஒரு சிறுவனும் இருந்தான். என்ன மாதிரியான கொடுமை இது?

** நான் யோசிக்க ஆரம்பித்தேன். எம்மாதிரியான செயலில் ஈடுபட்டால் இந்த நிலை மாறும்? நான் என்னுடைய எந்தப் பொருளை பணயம் வைத்தால் என் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? நான் அந்த தீர்மானத்துக்கு வந்தேன். அது அற வழியிலான உண்ணாவிரதம். என் முடிவைப் பார்த்து நிறைய பேர் சிரித்தார்கள். இந்த அரசாங்கம் கல்லைப் போன்றது. உன்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள் என்று கேலி செய்தார்கள். ஆனால் உண்ணாவிரதம் ஆரம்பித்த இரண்டே நாட்களில் நான் கைது செய்யப்பட்டேன். எனக்கு நம்பிக்கை வந்தது. நான் சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்.

** போராட்டம் அதிகமாக இந்திய ராணுவம் எங்கள் ஊரைச் சூழ்ந்து கொண்டது. சொல்ல முடியாத அட்டூழியங்கள். ஜூலை 2004, எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த சகோதரி மனோரமா இரவோடிரவாக ராணுவத்தால் வீட்டை விட்டு இழுத்துச் செல்லப்பட்டார். “ஏ பெண்ணே.. வீணாக சத்தம் போடாதே. அரசியல் உனக்கெதற்கு? நீ வெறும் சதைக்கோளம் மட்டுமே.. இரண்டு வட்ட மார்புகளும் ஒரு யோனியும் கொண்ட பெண் அவ்வளவே..” இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு காட்டுப்பகுதியில் அவருடைய பிணம் கிடைத்தது. அவருடைய யோனியில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து இருந்தன. அவள் பெண்ணாக இருந்ததற்கான விலையைக் கொடுத்திருந்தார் மனோரமா.

** இதன் எதிர்வினையாகவே மணிப்பூரிப் பெண்கள் அஸ்ஸாம் ரைஃபிள்களின் அலுவலகம் முன்பு நிர்வாணமாக போராடினார்கள். “Indian Army Rape Us". நாங்கள் உங்கள் முன்பு திறந்த மார்புகளோடு இருக்கிறோம். வந்து உங்கள் மூவர்ணக்கொடியை எங்கள் உடம்புகள் மீது பொறித்துச் செல்லுங்கள் என அறைகூவல் விடுத்தார்கள்.

** பண்டிகைகள் வந்துபோவது போல நானும் வருடா வருடம் கைது செய்யப்படுவதும் விடுவிக்கப்படுவதுமாக இருந்தேன். என்னுடைய ஆதர்ஷமான காந்தி மகாத்மாவின் சமாதியில் நான் சங்கல்பம் எடுத்துக் கொண்டேன் தொடர்ந்து போராட. அதற்குப் பிறகு நான் தற்கொலைக்கு முயன்றதாக கைது செய்யப்பட்டேன். ஆனால் அது உண்மையல்ல. நான் என்னையும் என் உயிரையும் ரொம்பவே நேசிக்கிறேன். அதனாலேயெ அதை என் பகடைக்காயாக பயன்படுத்த விழைகிறேன். எனவேதான் என் உடம்பையும் உயிரையும் வருத்திக் கொண்டு போராடி வருகிறேன். நான் ஏற்றியிருக்கும் இந்த நெருப்பு பெரிதாகப் பரவும். கடைசியில் உண்மை வென்றே தீரும் என நான் தீவிரமாக நம்புகிறேன். கண்டிப்பாக ஒரு நாள் எனது ஊருக்கான விடிவுகாலம் பிறந்தே தீரும். அதுவரை நான் பொறுமையாகக் காத்துக் கிடப்பேன். நான் ஈரொம் சர்மிலா...

ரொம்ப அருமையாக நடந்த நாடகத்தின் முடிவில் சர்மிளாவுக்கு மதுரை நண்பர்களின் சார்பாக சால்வை அணிவிக்கப்பட்டது. அதை ஈரோம் சர்மிளாவிடம் கொண்டு போய் சேர்ப்பிப்பதாக அவர் சொன்னதால் அதில் நண்பர்கள் அத்தனை பேரும் கையொப்பம் இட்டார்கள். அதன் பின்பாக கேள்வி பதில் நேரமும் சில அரசியல் விஷயங்களும் பகிரப்பட்டன. தன் மக்களின் நலனுக்காக போராடி வரும் சர்மிளாவின் கனவாகும் என நாமும் நம்புவோம்.

குறிப்பு: இதை வசிக்கும் நண்பர்கள் தங்கள் வலைப்பதிவுகளில் இதை எழுத முடிந்தால் இன்னும் நிறைய பேரைப் போய்ச்சேரும் வாய்ப்பு இருக்கிறது. பஸ்ஸிலும் ரீஷேர் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர் மதுரை கார்த்திகை பாண்டியன் இந்த அற்புதமான பதிவை பதிவிட்டு உள்ளார். அனைவரும் ஈரோம் சர்மிளாவை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு மறுபதிவு...

நன்றி கார்த்திகை பாண்டியன்.

Wednesday, February 9, 2011

அஞ்சறைப்பெட்டி +கிசு கிசு 10.02.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........


ஸ்பெக்டரம்  அலைவரிசையின் ஊழல் தொகையைக் கேட்டு நாட்டில் நிறைய பேர் தூங்காம இதுக்கு எத்தனை சைபர் என்று யோசிச்சுகிட்டு இருக்கும் போது அடுத்து அலைவரிசையில் இன்னொரு ஊழல் இது இஸ்ரோ அலைவரிசையாம் இதுல 2 லட்சம் கோடி ஊழல்ங்கறானுக இதுக்கு எத்தனை சைபரோ..
...............................................................................................

ஆந்திராவில் தனியாக நின்றால் எப்பவும் ஜெயிக்க முடியாது இருக்கற காசை செலவு செஞ்சுட்டோம் இனி என்ன பன்றதுன்னு யோசிக்காம காங்கிரசில் இணைந்து விட்டார் சிரஞ்வீவி இனி அடுத்த கோஷ்டி ஒன்று தயாராகிவிட்டது ஆந்திரா காங்கிரசில்.

........................................................................................................

பாராளுமன்றத்தை சுமுகமாக நடத்த பிரனாப்பும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார் எதிர்கட்சிகள் செவிசாய்ப்பார்களா?

..........................................................................................................
சமீபத்தில் ஆடுகளம் திரைப்படம் பார்த்தேன் எனது சின்ன வயதில் எங்க தாத்தா கட்டுச்சாவலுக்கு போவர் வீட்டில் கட்டுச்சாவல் வளர்த்துவார் ஒன்னு தான் வளர்த்துவார் சேவலை சண்டைக்கு கொண்டு செல்வதற்கு முன் தினமும் அதற்கு சண்டைப்பழக்கு வார்கள் சேவல் முன் கையை நீட்டு கொத்த விடுவார்கள் கட்டுச்சாவலை சண்டைக்கு பழக்குவது ஓர் அற்புதமான கலை இதை அழகாக படம் எடுத்த ஆடுகளம் இயக்குநருக்கு ஒரு சபாஷ்... 

..................................................................................................
#tnfisherman என்ற பெயரில் மீனவர்களுக்கு ஆதராவக டிவிட்டர்கள் எல்லாம் பொங்கி கமெண்ட் பின்னிவிட்டார்கள் இந்த கமெண்டில் பிடித்த கமெண்ட் எல்லாம் போட்டால் 10 பதிவு பத்தாது.


நாட்டு நடப்பு

தமிழக காங்கிரசில் திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச குழு அமைத்திருக்கிறார்கள் இந்த குழுவில் ஈரோட்டுத் தலைவருக்கு இடம் இல்லை என்றதும் அவருடைய ஆதரவாளர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனராம். இவர் குழுவில் இடம் பெற்றிருந்தால் தான் ஆதரவாளர்களுக்கு சீட் பெற உதவியாக இருக்கும் இப்ப என்ன செய்யப்போறாரோ இனி அதிரடி பேட்டி குறைவாகத்தான் இருக்கும்.

பாமக இப்போது எந்த கூட்டணி என்று தெரியாமல் விழிக்கின்றனர் தொண்டர்கள் ஐயா தினமும் அதிரடி பேட்டி கொடுத்து கலக்கிக்கொண்டு இருக்கின்றார் ஆனால் கூட்டணியில் கலக்க முடியாமல் போய்விடுமோ ? இவரை தேடித் தேடி கூட்டணி வைத்தவர்கள் எல்லாம் இன்று இவர் தேடி செல்ல வேண்டி இருக்கிறது.

தகவல்


கால்களுடன் வாழ்ந்த பாம்பின் எலும்புக்கூடு லெபனானில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பாம்புகள் ஊர்வன இனத்தை சேர்ந்தவை. அவைகளுக்கு கால்கள் கிடையாது. இதற்கு முன்பு கால்களுடன் பாம்புகள் இருந்ததற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது.

பழங்காலத்தில் வாழ்ந்த அரிய உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் லெபனானில் ஒரு பாம்பின் எலும்பு கூட்டை கண்டெடுத்தனர்.   சுமார் 19 “இஞ்ச்” நீள முள்ள அந்த பாம்பின் எலும்பு கூட்டில் கால்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.

இவை சுமார் 9 1/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. லெபனானில் கண்டெடுக்கப்பட்ட பாம்பின் எலும்பு கூட்டில் சுமார் “1 இஞ்ச்” அளவுக்கு கால் எலும்புகள் இருந்தன. அதே நேரத்தில் பாம்பின் வயிற்றுப் பகுதியில் கால்கள் வளர்ந்து வந்ததற்கான அறிகுறிகளும் இருந்தன.

அந்த எலும்புகள் “1/2 இஞ்ச்” அளவில் வளர்ந்திருந்தன.இந்த வகை பாம்புகள் கால்கள் மூலம் நடந்து திரிந்ததால் நிலத்திலும், நீரிலும், பொந்துகளிலும் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த வகை பாம்புகளின் கால்கள் காலப்போக்கில் படிப்படியாக மறைந்து அவை ஊர்வன இனத்தை சேர்ந்தவையாக மாறியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர் தமிழன் எங்கே போகிறது இந்து மதம் என்ற தலைப்பில் பல அற்புதமான கட்டுரைகள் எழுதி வருகிறார். அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள் என்று அறிவித்து பல தகவல்கள் தந்துள்ளார்.

http://thathachariyar.blogspot.com/2011/02/blog-post_2453.html



குறுஞ்செய்தி

ஒரு டீக்கடையில்: என்னையா டீயிலே
“ஈ” குளிக்குது!
ஆமா...நீ கொடுக்கர இரண்டார் ரூபா காசுக்கு
திரிஷ்ஷாவா வந்து குளிப்பா!

.....................................................................................


ஆசிரியர்: அசோகர் ஏன் குளங்கள் வெட்டினார்?

மரங்கள் நட்டினார்?
மாணவன்: குளங்கள்... பெண்கள் குளிக்க!
மரங்கள்... பின்னாலிருந்து எட்டிப்பார்க்க!



பதிவுலக கிசு கிசு

சமீபத்தில் ஒரு புதிய பதிவர் ஒரு பிரபல பதிவர் வீட்டுக்கு சென்றுள்ளார் தங்கமணியின் அனுமதியுடன் இருவரும் மொட்டை மாடியில் உற்சாகபானம் அருந்தி உள்ளனர். தங்கமணி கொடுத்த ஆம்லெட்ல வெங்காயம் போடாம  என்ன சமைக்கிற நீ என்று அதட்டி உள்ளார் ரங்கமணி. சரி விடுங்க என்று ஓசியில் உற்சாக பானம் அருந்திய புதிய பதிவர் முடிந்தவரை குடித்துவிட்டு  புறப்பட்டாரம் இவர் வெளியே வந்து வாசலை தாண்டியதும் வீட்டில் கும் கும் என்று சத்தமாம் வீட்ல குடிக்கறதே தப்பு இதுல வெங்காயம் விக்கற விலைக்கு ஆம்லெட்ல வெங்காயம் போடலைன்னு  குத்தம் வேறையா என்று கும்மிவிட்டாராம் தங்கமணி இதைப்பார்த்த ஓசில குடிக்கப்போனவருக்கு மப்பு தெளிந்து இத பதிவா எழுதலாமா வேண்டாமா என்று விடிய விடிய யோசிக்கிறாராம்....

Tuesday, February 8, 2011

புகழ் என்னும் போதையில் பதிவுலகம்..


பதிவுலகம் ஒரு மாற்று ஊடகம் என்று சொன்னால் அது மிகையாகது அந்த அளவிற்கு இன்று பல உண்மைகள் வெளிவர காரணமாக இருப்பது பதிவுலகம். இந்த 20ஆம் நூற்றாண்டில் தனி மனித சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகிப்பது பதிவுலகம்.

இன்று தமிழில் பதிவுலகில் எழுதுபவர்களின் எண்ணிக்கை ஏராளம் தமது எண்ணங்கள், கவிதைகள், கதைகள் என்று தன் மனதில் தோன்றுபவற்றை பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினால் வரும் வராது என்ற வாரம் வாரம் புத்தகத்தை வாங்கி படிப்பது தான் மேல் ஆனால் இவை அனைத்தையும் யாருடைய கெடுபிடியும் இல்லாமல் எந்த நிர்பந்தமும் இல்லாமல் வலைப்பூக்களின் மூலம் வெளியிடலாம் இது தான் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி.

நிறைய பேர் பதிவுகள் எழுதுகின்றனர் எழுதும் அனைத்து பதிவுகளும் அனைவரும் படிப்பதில்லை அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் திரட்டிகள் நிறைய வந்தன. திரட்டிகளில் பதிவை பதிவு செய்வதன் மூலம் நிறைய வாசகர்களை தமது வலைப்பூக்களுக்கு எதிர்பார்க்கலாம்.


நிறைய வாசகர்கள் வர வர நம் எழுத்துமேல் மேலும் காதல் வந்து புகழ் என்னும் போதைக்கு தள்ளப்படுகின்றோம். புகழ் சேர சேர தினமும் பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. இதனால் அலுவலகம் மற்றும் நமது வீட்டை விட்டு கொஞ்சம் விலகுகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. பதிவர்கள் வீட்டில் இரவு 10 மணிக்கு மேல் தான் கணினி கதறும்.

இதில் புகழ் பெறுவதற்கு என்ன வழி என்று நிறைய பதிவுகள் இருக்கின்றன முதலில் அனைத்துப் பதிவிற்கும் சென்று பின்னூட்டமிட்டு அவர்கள் பதிவில் பளோயராவது அப்புறம் அவர்களை நம் வலைப்பதிவிற்கு வரவேற்பது இதை தினமும் செய்வதால் நமக்கு வருபவர்களின் எண்ணிக்கையும், பளோயர்ஸ் எண்ணிக்கையும் அதிகமாகிறது.

இதனால் புகழ் மேலும் அதிகமாகிறது புகழ் அதிகமாக அதிகமாக தினமும் எதாவது எழுத வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம் எழுதும் அகைத்து பதிவுகளும் தரமானதா என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும் தலைப்பை மட்டும் அனைவரையும் ஈர்க்குமாறு வைத்துவிட்டு உள்ளே சேதிகள் என்ன தருவது என்று தெரியாமல் எழுத வேண்டியதாகிறது.

பதிவு எழுதுபவர்களில் பல ரகம் சிலர் அழகான நையாண்டியுடன் சிரிப்பு பதிவுகள் எழுதுகின்றனர் அனைத்து தரப்பும் ரசிக்கும் வகையில் அற்புதமாக இருக்கும் இப்படி எல்லாரும் எழுத முடியாது ஒரு சிலர் தான் எழுத முடியும் இவர்கள் வாரத்திற்கு சில பதிவுகள் எழுதினாலும் படித்து விட்டு 10 நிமிடம் சிரிப்பது போல் இருக்கும்.

பதிவுலகம் இப்படி அழகாக சென்று கொண்டு இருக்கும் போது தமிழ்மணம் இந்தவார சிறந்த 20 பதிவர்கள் என்று தேர்ந்தெடுக்க ஆரம்பித்தது இந்த தமிழ்மணம் டாப் 20க்குள் வந்து விட வேண்டும் என்று அதற்காகவே பதிவுகள் வந்தன என்றால் அது மிகையாகது. ஒரு வாரம் டாப் 20க்குள் வந்து விட்டால் அடுத்த வாரம் அதே இடம் அல்லது அதற்கு மேல் வர வேண்டும் என்ன செய்ய புகழ் என்னும் போதை இழுக்கிறது அதற்காகவே பதிவு போட வேண்டி உள்ளது.

கடந்த வாரம் வந்த பெயர் இந்த வாரம் வரவில்லை என்றால் மனது பதைபதைக்கிறது. இந்த போதையைப் பற்றி நண்பரிடம் பேசிய போது உண்மைதான் இது போதைதான் நானும் பல மகுடத்தையும், புகழ்ச்சியையும் பார்த்து விட்டேன் ஆனால் இப்போதையில் விழாமல் இருக்கிறேன் வாரத்திற்கு இரண்டு பதிவு தான் போடுகிறேன் மன திருப்திக்காக என்றார்.

பதிவுலகம் என்னும் போதை என்று தலைப்பு வைத்ததற்கு காரணம் என் நண்பன் என்னடா எப்ப பார்த்தாலும் பதிவு பதிவு ஒரு போன் கூட பேச மாட்டிங்கற இந்த போதைக்கு நீ அடிமையாகிவிட்டாய் என்று நினைக்கிறேன் என்றான் அப்போது தான் எப்படி பதிவு எழுதி புகழ் பெற்று இந்த போதைக்கு அமையா என்று தோணியது எழுதினேன்...

புகழ் என்னும் போதையில் பதிவர்களாகிய நிறைய பேர் இருக்கின்றோம் அது மறுக்க முடியாத உண்மை...

இப்பதிவு என் மனதிற்கு தோன்றிய பதிவு இதை எழுதி ரொம்பநாள் ஆகிவிட்டது இதற்கு நிறைய எதிர்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன் உங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் வரவேற்கிறேன்....

Saturday, February 5, 2011

நோயின்றி வாழ மீன் சாப்பிடுங்க...


ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவு இல்லாமல் சாப்பிடுவர்கள் எண்ணிக்கை குறைவுதான். அசைவ உணவுப் பிரியர்கள் நிறைய உள்ளனர். அசைவ உணவுகளை பல விதமாக சொல்லலாம். அதிகம் பேர் உண்ணுவது ஆடு, மாடு, கோழி மற்றும் மீன்களைத்தான் அதிகம் உண்ணுகின்றனர். ஆடு, மாடு, கோழிகள் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சம்பந்தமான நோய்கள் வர அதிக வாய்ப்பு உண்டு. இன்று பலர் சர்க்கரை, இருதய, இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகம் பேர். இதில் எந்த நோயால் தாக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீன் சாப்பிடலாம்.

மீன் இன்று நமது நாட்டில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் உணவுப்பொருட்களில் மீனுக்கு தனி இடம் உண்டு. மீனை பல வகை உணவுகளாக சாப்பிடுகிறார்கள். ஆனல் அநேகம் பேர் முந்திய நாள் வைத்த மீன் குழம்பில் தான் அதிக சுவை என்பர். அசைவ உணவுகளில் மற்ற எந்ந உணவை விட மீனை மட்டுமே அடுத்த நாள் வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.
மீனில் பல வகைகள் உண்டு. ஆற்று மீன் கடல் மீன் என்று இன்று தனித்தனியாக மீனை பிரித்து ரகம் வாரியாக விற்பனை செய்கின்றனர். கடலோர மாவட்டங்களை தவிர மற்றவர்களுக்கெல்லாம் ஐஸ்ல் வைக்கப்பட்ட மீன்தான் கிடைக்கின்றது.


மீன் எல்லா வகையிலும் மனிதனுக்கு பயன் உள்ளதாகவே இருக்கின்றது மீன், கருவாடு, மீனில் இருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணை என்ற அனைத்தும் மனிதனின் உணவுப்பொருளாகவே இருக்கின்றது.

மீனைப்பற்றியான ஆராய்ச்சி முடிவுகள்:

மீன் உணவு உண்ணும் தாய்மார்களை மகிழ்விப்பதற்காகவே வந்திருக்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. அதாவது, தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படு சுட்டியாக இருப்பார்களாம்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது.
இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு வெளியிட்டிருக்கிறது.

தாய்மார்களின் உணவுப் பழக்கம் ஆராயப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு மூன்று வயதான போது அவர்களுக்கு சில சோதனைகள் கொடுக்கப்பட்டன. பார்வை, எளிதில் உள்வாங்குதல், கவனம் சிதறாமை போன்ற வகைகளில் நடந்த இந்த சோதனையில் முன்னிலை வகித்தவர்கள் மீன் உணவு உட்கொண்ட தாய்மாரின் குழந்தைகளே.

மீன்களை உண்ணும் மீன்கள், மற்றும் அதிக காலம் வாழும் மீன்கள் போன்றவை பாதரச அளவு அதிகம் கொண்ட மீன்கள் எனும் வரிசையில் வருகின்றன. அத்தகைய மீன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது. பாதரச அளவு குறைந்த அளவு உள்ள மீன்களே தேவையானது என்பது இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

நீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்கள்.
  ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றும் மேற்பட்ட முறை மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும் மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது,
`15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது' என்றனர். 


 மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்: 

மீன் சாப்பிடுபவர்கள் எந்த நோயைப்பற்றியும் கவலைப்பட வேண்டியது இல்லை. ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை அனைத்தையும் தடுக்கும் மருத்துவ குணம் கொண்டது.

மீனில் கொழப்பு இல்லை, அதிகமாக புரோட்டின் சத்து உள்ளது. இதில் ஒமேகா 3 என்ற ஒரு வகை ஆசிட் வேறு எந்த உணவிலும் இல்லை உடலில் எந்த நோயும் வரமால் தடுக்க இந்த ஆசிட் மிகவும் உதவுகிறது.

ஆண் ஒருவர் நாள்தோறும் ஒருமுறை மீன் உட்கொண்டால் இருதயநோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் விகிதத்தை 30 சதவீதம் வரை குறைக்கலாம். 2 நாட்களுக்கு ஒரு முறை உட்கொண்டால் உடலுக்குத் தேவைப்படுமங சத்து போதிய விகிதம் கிடைக்கும்.

ஆஸ்துமா நோய் வரவே வராது. அதுவும் குழந்தையில் இருந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்பே இல்லை.

மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயன் அளிக்கிறது.

புற்று நோய வராமல் தடுப்பதில் பெரும் பங்களிக்கிறது.