Wednesday, February 9, 2011

அஞ்சறைப்பெட்டி +கிசு கிசு 10.02.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........


ஸ்பெக்டரம்  அலைவரிசையின் ஊழல் தொகையைக் கேட்டு நாட்டில் நிறைய பேர் தூங்காம இதுக்கு எத்தனை சைபர் என்று யோசிச்சுகிட்டு இருக்கும் போது அடுத்து அலைவரிசையில் இன்னொரு ஊழல் இது இஸ்ரோ அலைவரிசையாம் இதுல 2 லட்சம் கோடி ஊழல்ங்கறானுக இதுக்கு எத்தனை சைபரோ..
...............................................................................................

ஆந்திராவில் தனியாக நின்றால் எப்பவும் ஜெயிக்க முடியாது இருக்கற காசை செலவு செஞ்சுட்டோம் இனி என்ன பன்றதுன்னு யோசிக்காம காங்கிரசில் இணைந்து விட்டார் சிரஞ்வீவி இனி அடுத்த கோஷ்டி ஒன்று தயாராகிவிட்டது ஆந்திரா காங்கிரசில்.

........................................................................................................

பாராளுமன்றத்தை சுமுகமாக நடத்த பிரனாப்பும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார் எதிர்கட்சிகள் செவிசாய்ப்பார்களா?

..........................................................................................................
சமீபத்தில் ஆடுகளம் திரைப்படம் பார்த்தேன் எனது சின்ன வயதில் எங்க தாத்தா கட்டுச்சாவலுக்கு போவர் வீட்டில் கட்டுச்சாவல் வளர்த்துவார் ஒன்னு தான் வளர்த்துவார் சேவலை சண்டைக்கு கொண்டு செல்வதற்கு முன் தினமும் அதற்கு சண்டைப்பழக்கு வார்கள் சேவல் முன் கையை நீட்டு கொத்த விடுவார்கள் கட்டுச்சாவலை சண்டைக்கு பழக்குவது ஓர் அற்புதமான கலை இதை அழகாக படம் எடுத்த ஆடுகளம் இயக்குநருக்கு ஒரு சபாஷ்... 

..................................................................................................
#tnfisherman என்ற பெயரில் மீனவர்களுக்கு ஆதராவக டிவிட்டர்கள் எல்லாம் பொங்கி கமெண்ட் பின்னிவிட்டார்கள் இந்த கமெண்டில் பிடித்த கமெண்ட் எல்லாம் போட்டால் 10 பதிவு பத்தாது.


நாட்டு நடப்பு

தமிழக காங்கிரசில் திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச குழு அமைத்திருக்கிறார்கள் இந்த குழுவில் ஈரோட்டுத் தலைவருக்கு இடம் இல்லை என்றதும் அவருடைய ஆதரவாளர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனராம். இவர் குழுவில் இடம் பெற்றிருந்தால் தான் ஆதரவாளர்களுக்கு சீட் பெற உதவியாக இருக்கும் இப்ப என்ன செய்யப்போறாரோ இனி அதிரடி பேட்டி குறைவாகத்தான் இருக்கும்.

பாமக இப்போது எந்த கூட்டணி என்று தெரியாமல் விழிக்கின்றனர் தொண்டர்கள் ஐயா தினமும் அதிரடி பேட்டி கொடுத்து கலக்கிக்கொண்டு இருக்கின்றார் ஆனால் கூட்டணியில் கலக்க முடியாமல் போய்விடுமோ ? இவரை தேடித் தேடி கூட்டணி வைத்தவர்கள் எல்லாம் இன்று இவர் தேடி செல்ல வேண்டி இருக்கிறது.

தகவல்


கால்களுடன் வாழ்ந்த பாம்பின் எலும்புக்கூடு லெபனானில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பாம்புகள் ஊர்வன இனத்தை சேர்ந்தவை. அவைகளுக்கு கால்கள் கிடையாது. இதற்கு முன்பு கால்களுடன் பாம்புகள் இருந்ததற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது.

பழங்காலத்தில் வாழ்ந்த அரிய உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் லெபனானில் ஒரு பாம்பின் எலும்பு கூட்டை கண்டெடுத்தனர்.   சுமார் 19 “இஞ்ச்” நீள முள்ள அந்த பாம்பின் எலும்பு கூட்டில் கால்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.

இவை சுமார் 9 1/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. லெபனானில் கண்டெடுக்கப்பட்ட பாம்பின் எலும்பு கூட்டில் சுமார் “1 இஞ்ச்” அளவுக்கு கால் எலும்புகள் இருந்தன. அதே நேரத்தில் பாம்பின் வயிற்றுப் பகுதியில் கால்கள் வளர்ந்து வந்ததற்கான அறிகுறிகளும் இருந்தன.

அந்த எலும்புகள் “1/2 இஞ்ச்” அளவில் வளர்ந்திருந்தன.இந்த வகை பாம்புகள் கால்கள் மூலம் நடந்து திரிந்ததால் நிலத்திலும், நீரிலும், பொந்துகளிலும் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த வகை பாம்புகளின் கால்கள் காலப்போக்கில் படிப்படியாக மறைந்து அவை ஊர்வன இனத்தை சேர்ந்தவையாக மாறியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர் தமிழன் எங்கே போகிறது இந்து மதம் என்ற தலைப்பில் பல அற்புதமான கட்டுரைகள் எழுதி வருகிறார். அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள் என்று அறிவித்து பல தகவல்கள் தந்துள்ளார்.

http://thathachariyar.blogspot.com/2011/02/blog-post_2453.html



குறுஞ்செய்தி

ஒரு டீக்கடையில்: என்னையா டீயிலே
“ஈ” குளிக்குது!
ஆமா...நீ கொடுக்கர இரண்டார் ரூபா காசுக்கு
திரிஷ்ஷாவா வந்து குளிப்பா!

.....................................................................................


ஆசிரியர்: அசோகர் ஏன் குளங்கள் வெட்டினார்?

மரங்கள் நட்டினார்?
மாணவன்: குளங்கள்... பெண்கள் குளிக்க!
மரங்கள்... பின்னாலிருந்து எட்டிப்பார்க்க!



பதிவுலக கிசு கிசு

சமீபத்தில் ஒரு புதிய பதிவர் ஒரு பிரபல பதிவர் வீட்டுக்கு சென்றுள்ளார் தங்கமணியின் அனுமதியுடன் இருவரும் மொட்டை மாடியில் உற்சாகபானம் அருந்தி உள்ளனர். தங்கமணி கொடுத்த ஆம்லெட்ல வெங்காயம் போடாம  என்ன சமைக்கிற நீ என்று அதட்டி உள்ளார் ரங்கமணி. சரி விடுங்க என்று ஓசியில் உற்சாக பானம் அருந்திய புதிய பதிவர் முடிந்தவரை குடித்துவிட்டு  புறப்பட்டாரம் இவர் வெளியே வந்து வாசலை தாண்டியதும் வீட்டில் கும் கும் என்று சத்தமாம் வீட்ல குடிக்கறதே தப்பு இதுல வெங்காயம் விக்கற விலைக்கு ஆம்லெட்ல வெங்காயம் போடலைன்னு  குத்தம் வேறையா என்று கும்மிவிட்டாராம் தங்கமணி இதைப்பார்த்த ஓசில குடிக்கப்போனவருக்கு மப்பு தெளிந்து இத பதிவா எழுதலாமா வேண்டாமா என்று விடிய விடிய யோசிக்கிறாராம்....

21 comments:

  1. //இவர் வெளியே வந்து வாசலை தாண்டியதும் வீட்டில் கும் கும் என்று சத்தமாம்//

    திரும்பிப் போயி சண்டையைத் தீர்த்துப்போட்டு போயிருக்கலாமே...? நான் சொன்னது அந்த பதிவருக்கு....! :-))

    ReplyDelete
  2. Me the first.,

    என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
    என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
    See,
    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

    ReplyDelete
  3. அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
    வாழ்த்துக்கள்....

    பதிவுலக கிசு கிசு...அது யாருன்னு நான் கண்டுபிடித்துவிட்டேன்..

    ReplyDelete
  4. அஞ்சறைப்பெட்டி வழமைபோலவே கலக்கல்தான்..

    ReplyDelete
  5. என்ன இருந்தாலும் வெங்காயம் கேட்டது மன்னிக்க முடியாத குற்றம் தான் கும்மியது தப்பே இல்லை

    ReplyDelete
  6. ஒரு டீக்கடையில்: என்னையா டீயிலே
    “ஈ” குளிக்குது!
    ஆமா...நீ கொடுக்கர இரண்டார் ரூபா காசுக்கு
    திரிஷ்ஷாவா வந்து குளிப்பா!//

    ippo 5 rooba annae

    ReplyDelete
  7. நிறைவான பதிவு நண்பரே.

    ReplyDelete
  8. அஞ்சரை பெட்டியில் எல்லாமும் இருக்கே ,ஆனா வெங்காயம் மட்டும் வெளியில இருக்கா?
    வெங்காயம் தான் வெல குறைஞ்சு போச்சே இனிமே ஆம்லட்ல வழக்கம் போல வெங்காயம் போட சொல்லுங்க.

    ReplyDelete
  9. தகவல்கள் அருமை

    அந்தப்பதிவர் நெலமைய நெனச்சி பாத்தேன்...........

    எதால விழுந்திருக்கும் அடின்னு தெரியலையா ஹி ஹி

    ReplyDelete
  10. ரொம்ப ஆணியோ?! அஞ்சறைப் பெட்டி சின்னதா இருக்கு :)

    ReplyDelete
  11. கலக்கல் நண்பரே

    ReplyDelete
  12. வழக்கம்போலவே அஞ்சறைப்பெட்டி அசத்தல்... :))

    ReplyDelete
  13. ஆந்திரா காங்கிரஸ்,சிரஞ்சீவி -ரசித்தேன்

    ReplyDelete
  14. எல்லா துணுக்கும் கலக்கல்.... அதெப்படி கிசு கிசு பிடிக்கிறிங்க???

    ReplyDelete
  15. பாம்பு பற்றிய செய்தி மிக மிகப் புதிது !

    ReplyDelete
  16. இன்னைக்கு தகவல்கள் குறைச்சலா இருக்கு தல..

    ReplyDelete
  17. kisu கிசு கிசு செம ஹிட்டு போல்

    ReplyDelete
  18. 2 ரூவாய் டீயில திரிஷா குளிக்கறது இருக்கட்டும்...

    //ஆசிரியர்: அசோகர் ஏன் குளங்கள் வெட்டினார்?
    மரங்கள் நட்டினார்?//

    அசோகர் மரங்கள் நட்டினார்னு எழுதி இருக்கீங்களே, நட்டினார் என்பது அந்த காலத்து தமிழோ!!

    ReplyDelete