மே 26ம் தேதி வீட்டில் இருந்து போன் நாளை காலை மருத்துவமனைக்கு வரச்சொல்லி இருக்கிறார்கள். அநேகமாக சிசேரியனாகத்தான் இருக்கும் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு குறைவு என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் என என் மனைவி கூறியதும் படபடப்புடன் நான்கு நாட்கள் விடுமுறை போட்டு விட்டு மனைவியைக் கான அந்தியூர் சென்றேன்.
இன்னும் ஒரு நாளில் குழந்தை பிறக்கப்போகிறது என்றதும் தகப்பனாகிய என் மனதில் பல கனவுகள் இருந்தாலும் மனைவி படும் பிரசவ வேதனையை நினைத்து முகம் சிரித்தாலும் உள்ளம் அழுதது. அப்பொழுது ஒரு பேச்சாளர் பேசியதுதான் ஞாபகத்திற்கு வந்தது ஆண்களுக்கு என்ன ஒரு சொட்டு செமன் விட்டால் போதும் ஆனால் பெண்ணுக்கு பத்து மாதம் சுமந்து தானும் உண்டு குழந்தைக்கும் உண்டு இதற்கு மேல் மருத்துவமனையில் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை உண்டு எந்த வேலையும் செய்ய முடியாமல் பத்து மாதம் அவள் படும் வேதனை சொல்லிமாளது.
நான் என் மனைவியை 9 மாதம் வரை என் பாராமரிப்பில் தான் வைத்து இருந்தேன். அவளது வேலைகளை நான் செய்து அவ்வப்போது பேசி குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து பார்த்து ரசித்தேன் முகத்தில் ஆனால் அவள் படும் வலி என் மனதை அழ வைத்தது. 9 மாதமும் இருந்த வேதனையை விட கடைசி மாதம் அவள் பட்ட வலிகள் என்ன சொல்வது உட்கார முடியாமல் திரும்பி படுக்க முடியாமல் எழு முடியாமல், குளிக்கும் போது தண்ணீர் குனிந்து எடுத்து ஊற்ற 2 நிமிடம் நான் கோவையில் இருந்து வார விடுமுறைக்கு இரண்டு நாட்களும் அவள் வலி என் கண்ணீரைத்தான் வரவலித்தது.
மே 27 அன்று குழந்தை பிறந்தால் அவள் 10 மாதம் பட்ட கஷ்டம் கொஞ்சம் குறைகியும் என்று நினைத்துக்கொண்டேன். மே 26 இரவு 11 மணிக்கு வீட்டிற்கு போன் சிசேரியன் செய்ய இருப்பதால் மயக்க மருந்து நிபுணர் அவசர வேலை காரணமாக ஊருக்கு சென்று விட்டார். நாம் சனிக்கிழமை சிசேரியன் செய்து விடலாம் என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள். நான் இங்கு விடுமுறையில் சென்றதால் அந்த இரண்டு நாட்கள் என்ன சொல்வது கொடுமையுடன் தான் சென்றது.
இன்னும் ஒரு நாளில் குழந்தை பிறக்கப்போகிறது என்றதும் தகப்பனாகிய என் மனதில் பல கனவுகள் இருந்தாலும் மனைவி படும் பிரசவ வேதனையை நினைத்து முகம் சிரித்தாலும் உள்ளம் அழுதது. அப்பொழுது ஒரு பேச்சாளர் பேசியதுதான் ஞாபகத்திற்கு வந்தது ஆண்களுக்கு என்ன ஒரு சொட்டு செமன் விட்டால் போதும் ஆனால் பெண்ணுக்கு பத்து மாதம் சுமந்து தானும் உண்டு குழந்தைக்கும் உண்டு இதற்கு மேல் மருத்துவமனையில் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை உண்டு எந்த வேலையும் செய்ய முடியாமல் பத்து மாதம் அவள் படும் வேதனை சொல்லிமாளது.
நான் என் மனைவியை 9 மாதம் வரை என் பாராமரிப்பில் தான் வைத்து இருந்தேன். அவளது வேலைகளை நான் செய்து அவ்வப்போது பேசி குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து பார்த்து ரசித்தேன் முகத்தில் ஆனால் அவள் படும் வலி என் மனதை அழ வைத்தது. 9 மாதமும் இருந்த வேதனையை விட கடைசி மாதம் அவள் பட்ட வலிகள் என்ன சொல்வது உட்கார முடியாமல் திரும்பி படுக்க முடியாமல் எழு முடியாமல், குளிக்கும் போது தண்ணீர் குனிந்து எடுத்து ஊற்ற 2 நிமிடம் நான் கோவையில் இருந்து வார விடுமுறைக்கு இரண்டு நாட்களும் அவள் வலி என் கண்ணீரைத்தான் வரவலித்தது.
மே 27 அன்று குழந்தை பிறந்தால் அவள் 10 மாதம் பட்ட கஷ்டம் கொஞ்சம் குறைகியும் என்று நினைத்துக்கொண்டேன். மே 26 இரவு 11 மணிக்கு வீட்டிற்கு போன் சிசேரியன் செய்ய இருப்பதால் மயக்க மருந்து நிபுணர் அவசர வேலை காரணமாக ஊருக்கு சென்று விட்டார். நாம் சனிக்கிழமை சிசேரியன் செய்து விடலாம் என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள். நான் இங்கு விடுமுறையில் சென்றதால் அந்த இரண்டு நாட்கள் என்ன சொல்வது கொடுமையுடன் தான் சென்றது.
மே 29 மாலை மருத்துவமனயைில் அனுமதி நேரம் ஆக ஆக என்ன செய்வது என்று தெரியவில்லை யாராவது எதாவது வேலை சொன்னால் என் மனம் முழுவமும் மனைவியின் மேல் இருக்க வேலை சொன்னவர்களிடம் எரிந்து விழுந்தேன். அவள் வலி எனக்கு இல்லை என்றாலும் அவளுக்கு வலிக்கும் வலி என் மனதிற்கு தெரியும் அல்லாவா?
சரியாக 10 மணிக்கு மனைவி சிசேரியன் அறைக்கு சென்றது மனம் அனைத்து கடவுளையும் வேண்டியது. பிரசவ அறையில் மனைவி வெளியில் கணவன் மற்றும் உறவினர்கள் அந்த ஒவ்வவொரு நிமிடமும் மனதில் யாரும், யாரையும் பார்க்காமலும் ஒவ்வொருவர் மனதிலும் அழுகை மாமா மட்டும் அனைவரையும் தேற்றிக்கொண்டு இருந்தார். ஒரு 38 வது நிமிடம் குழந்தையை குளிக்க வைத்து வெளியில் கொண்டு வந்து ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்றதும் அப்போது இருந்த சந்தோசம் என்ன சொல்வது ஆனந்தமாக அனுபவித்தேன். மீண்டும் 35 நிமிடத்திற்குப் பின் மனைவியை மயக்கம் தெளிய தெளிய வெளியே கூட்டி வந்தனர். மனைவியைப் பார்த்த உடன் தான் என் மனம் ஒரு சந்தோசத்தின் உச்சியில் இருந்தது.
வலியில் மனைவியும், இவ்வுலகத்திற்கு எங்களால் வந்த என் மகனின் அழகையும் அனு அனுவாய் மகிழ்ந்தேன். அந்நேரம் வாழ்க்கையில் மறக்க முடியாத நேரமும் கூட...
ஒவ்வொருவனும் ஒரு சந்தர்ப்த்தில் தந்தை ஆகிறான். அந்த புது உறவை உணரும் தருணம் அற்புதமானது. அந்த மணப்பூர்வமான உணர்தலில் மற்ற உணர்ச்சிகள் அடங்கிப்போய் விடுகின்றன.