Tuesday, June 14, 2011

அன்பு காதலியின் இம்சைகள்...

பெண்களில் சிலர் மட்டும் தான் விளையாட்டுகளை விரும்புகிறார்கள். காதலிக்க ஆரம்பித்த தொடக்க நாட்களில் காதலனின் மனதில் தங்கி விடுவதற்காக "எனக்கு விளையாட்டு என்றாலே உயிர்" என்று பந்தா காட்டுவது.அதிலும் சாமர்த்தியமாக முதலிலேயே "உங்களிற்கு எந்த விளையாட்டு, எந்த அணி,எந்த வீரர் பிடிக்கும்" என போட்டு வாங்கி விட்டு "ஐயோ எனக்கும் இது தாங்க பிடிக்கும், என்ன ஒரு பொருத்தம்" என பாசாங்கு காட்டுறது.

 பெண்கள் தங்களுடய காதலன் தன்னை தவிர மற்றைய பெண்களை பார்க்க கூடாது என்ற எண்ணத்தை கொண்டவர்கள். காதலிக்க ஆரம்பித்த மறுகணமே ஆப்பு வைச்சிடுவாங்க.எவ்வளவு நேரம் தான் ஒரு முகத்தையே பார்ப்பது என்று,பக்கத்தாலே போற பெண்களை சைற் அடித்தால், காதலித்த புதுசில் கண்டும் காணாதது போல தான் இருப்பாங்க, போக போக தான் காதலியின் சுயரூபம் தெரியும்.இன்னொரு சொர்ணா தான்.பிறகென்ன Road ல மண்ணை பார்த்த படி தான் போகணும்.

ஆண்கள் எப்பவுமே பாவமப்பா.நாங்கள் ஒரு பெண்ணை பார்த்தால் ,முகம் பொசுங்கிற அளவிற்கு முறைச்சு பார்க்கிறது.ஆனால் தாங்க மட்டும் தங்களுடைய நண்பர்களை கண்டால் மட்டும் பாய்ந்தடித்து கட்டியணைப்பது. யாரு என்று கேட்டால் நண்பன் என்பது.எங்களுக்கு தானே தெரியும் அந்த நண்பன் எப்படியான மன்மதன் என்று.அவன் தப்பான எண்ணத்துடன் உன்னோட பழகிறான் என்றால் "நீ என்னை சந்தேக படுகிறியா? என கத்தி குளறுவது".

 பெண்கள் சொல்லும் பொய்களில் இது தான் மிகவும் முக்கியமானது.எவ்வளவு தான் பிடித்து இருந்தாலும்,பிடிக்காதது போல காட்டி வெறுப்பேற்ற செய்வதில் இவர்களிற்கு அப்படி ஒரு கொண்டாட்டம். பெண்களின் மனதை வாசித்து உண்மையை அறிய கூடிய இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்தால் தான் இதை முடிவுக்கு கொண்டு வரலாம்.தாங்கள் எப்போதுமே Serious ஆக இருப்பதாக காட்டி கொள்வதற்காக காரணமே இல்லாமல் ஏதாவது ஒரு சிறிய காரணத்தை சாட்டாக வைத்து உயிரை எடுக்கிறது.

பெண்கள் காதலிக்க ஆரம்பித்தவுடன், காதலனனின் நண்பர்கள் அதிக நேரம் தங்களுடன் இருப்பதை விரும்புவது கிடையாது.இதையும் மீறி படம் பார்க்கவோ அல்லது மது அருந்தவோ தினமும் நண்பனின் வீட்டிற்கு சென்றால் மறைமுகமான தாக்குதல்களை எதிர் கொள்ள நேரிடும். 
 
இப்படித்தான் எனது நணபன் ஒருவன் தனது நண்பனின் வீட்டுக்கு மல்யுத்த விளையாட்டு TV யில பார்க்க போய் முகம் எல்லாம் இரத்தமா வந்தான். என்னடா இப்படி வாற மல்யுத்த விளையாட்டை பார்த்து உணர்ச்சி வசப் பட்டு மண்டையை எங்காவது மோதி விட்டாயா என கேட்க அவன் சொன்னான் "படுபாவி அவள் வேண்டுமென்றே நிலத்தில தண்ணிய ஊத்தி விழ வைச்சிட்டாளடா"

காதலிக்காமல் இருப்பவனுக்கு ஒரே ஒரு கவலைதான். ஆனால் காதலிப்பவர்களிற்கு காதலியினால் படும் இம்சைகள் பல...
 
அனுபவிச்சாத்தான்  தெரியும் இம்சைகளின் சுகம்...

31 comments:

  1. மொத வடையா?? வெயிட்...

    ReplyDelete
  2. //பெண்களில் சிலர் மட்டும் தான் விளையாட்டுகளை விரும்புகிறார்கள். //
    என்ன விளையாட்ட சொல்லுறியள்.

    ReplyDelete
  3. //.அவன் தப்பான எண்ணத்துடன் உன்னோட பழகிறான் என்றால் "நீ என்னை சந்தேக படுகிறியா? என கத்தி குளறுவது".//
    ஹா ஹா கரெக்டு கரெக்டு.. நல்லா அனுபவிச்சிருக்கியல்.

    ReplyDelete
  4. // பெண்களின் மனதை வாசித்து உண்மையை அறிய கூடிய இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்தால் தான் இதை முடிவுக்கு கொண்டு வரலாம்.//
    அப்டி ஒன்னு இருந்தா ஒருத்தனும் லவ் பண்ண மாட்டான். அந்த மெசின்ல இவன் தாடியோட சுத்துரமாதிரி தெரியும்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தொடரட்டும் தங்களின் இம்சைகள்..

    இந்த இம்சைகளில் தாங்கள் மாட்டியதுண்டா...

    ReplyDelete
  7. ////
    பெண்களின் மனதை வாசித்து உண்மையை அறிய கூடிய இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்தால் தான் இதை முடிவுக்கு கொண்டு வரலாம்///////

    இது வந்துட்டா எந்த பிரச்சனையும் வராதுங்க...

    ReplyDelete
  8. //காதலிக்காமல் இருப்பவனுக்கு ஒரே ஒரு கவலைதான். ஆனால் காதலிப்பவர்களிற்கு காதலியினால் படும் இம்சைகள் பல...
    அனுபவிச்சாத்தான் தெரியும் இம்சைகளின் சுகம்...//
    அனுபவிச்சு சொல்லியிருக்கிரியல். எத்தனையோ பேர் இதெல்லாம் வெளில சொல்ல பயபுடுறாங்க ஏன்னா அப்புறம் வீட்ட போய் பொண்டாடிகையாள வாங்கணும். நீங்க எதுக்கும் அசராம சொன்னதுக்கு பாராட்டுக்கள்.

    எனது வலைப்பதிவில்
    உச்சக்கட்ட இன்பம்?.

    ReplyDelete
  9. அண்ணன் டைட்டில்ல ஒரு மிஸ்டேக் பண்ணிட்டாரு மகா ஜனங்களே.. காதலிகளின் இம்சைகள்னு வரனுமாம்..

    ReplyDelete
  10. சித்தாரில் நான் சைட் அடித்த சிட்டுக்கள் பார்ட் 4 எப்போ அண்ணெ வரும்?

    ReplyDelete
  11. சி.பி சொன்னது.
    //அண்ணன் டைட்டில்ல ஒரு மிஸ்டேக் பண்ணிட்டாரு மகா ஜனங்களே.. காதலிகளின் இம்சைகள்னு வரனுமாம்.. //
    அம்புட்டுபேர வச்சுக்கிட்டா அட்வைஸ் பண்ணுறாரு?? முற்றும் உணர்ந்த மனுஷன்ஐயா

    ReplyDelete
  12. வாங்க அஸ்வின்...

    வட மட்டுமல்ல போண்டா, பஜ்ஜி எல்லாம் உங்களுக்குத்தான்...

    ReplyDelete
  13. ////பெண்களில் சிலர் மட்டும் தான் விளையாட்டுகளை விரும்புகிறார்கள். //
    என்ன விளையாட்ட சொல்லுறியள்.//

    பல்லாங்குழி...

    ReplyDelete
  14. ..//.அவன் தப்பான எண்ணத்துடன் உன்னோட பழகிறான் என்றால் "நீ என்னை சந்தேக படுகிறியா? என கத்தி குளறுவது".//
    ஹா ஹா கரெக்டு கரெக்டு.. நல்லா அனுபவிச்சிருக்கியல்...

    ஐய்யய்யோ நான் ரொம்ப நல்லவன்ங்கக...

    ReplyDelete
  15. ..தொடரட்டும் தங்களின் இம்சைகள்..

    இந்த இம்சைகளில் தாங்கள் மாட்டியதுண்டா.....

    அனுபவமே வாழ்க்கை சௌந்தர்...

    ReplyDelete
  16. //////
    பெண்களின் மனதை வாசித்து உண்மையை அறிய கூடிய இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்தால் தான் இதை முடிவுக்கு கொண்டு வரலாம்///////

    இது வந்துட்டா எந்த பிரச்சனையும் வராதுங்க...//

    நிச்சயமாக வராதுங்க...

    ReplyDelete
  17. ..//காதலிக்காமல் இருப்பவனுக்கு ஒரே ஒரு கவலைதான். ஆனால் காதலிப்பவர்களிற்கு காதலியினால் படும் இம்சைகள் பல...
    அனுபவிச்சாத்தான் தெரியும் இம்சைகளின் சுகம்...//
    அனுபவிச்சு சொல்லியிருக்கிரியல். எத்தனையோ பேர் இதெல்லாம் வெளில சொல்ல பயபுடுறாங்க ஏன்னா அப்புறம் வீட்ட போய் பொண்டாடிகையாள வாங்கணும். நீங்க எதுக்கும் அசராம சொன்னதுக்கு பாராட்டுக்கள்...

    அடுத்த பதிவு பொண்டாட்டியிடம் அடிவாங்கிய அனுபவம்ன்னு போட்டுறலாம்...

    ReplyDelete
  18. //அண்ணன் டைட்டில்ல ஒரு மிஸ்டேக் பண்ணிட்டாரு மகா ஜனங்களே.. காதலிகளின் இம்சைகள்னு வரனுமாம்..//

    எனக்கு காதலி மட்டும் தான்....

    ReplyDelete
  19. ..சித்தாரில் நான் சைட் அடித்த சிட்டுக்கள் பார்ட் 4 எப்போ அண்ணெ வரும்?..

    ஊருக்குள்ள நான் ரொம்பபபபப நல்லவன்.....

    ReplyDelete
  20. ஹி.. ஹி...ஹி.. நிறைய அனுபவம் போலிருக்கு தல.. செமையா சொல்லியிருக்கீங்க..
    சூப்பர்.

    ReplyDelete
  21. இந்த பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ்...!! ஹி.. ஹி.. பொண்ணையும் பிரச்சினையையும் பிரிக்கவே முடியாது தல. ஒரு சில நல்லவங்களை தவிர்த்து... அவ்வ்வ்வ....

    ReplyDelete
  22. காதலிக்காமல் இருப்பவனுக்கு ஒரே ஒரு கவலைதான். ஆனால் காதலிப்பவர்களிற்கு காதலியினால் படும் இம்சைகள் பல...

    அனுபவிச்சாத்தான் தெரியும் இம்சைகளின் சுகம்...



    ithula nirayyaa ullkththu irrukkaa???

    ReplyDelete
  23. மாப்ள காதல் லீ(!)நல்லா இருக்குய்யா!

    ReplyDelete
  24. எல்லாமே உங்க அனுபவம் போல் இருக்கு

    ReplyDelete
  25. நல்லா இருக்குடே..

    ReplyDelete
  26. சங்கவி எப்படி பெண்களின் மனசுக்குள்ள நுழைஞ்சி வந்த மாதிரி...ஹஹஹஹ்ஹா

    ReplyDelete
  27. இது தங்களின் அனுபவப்பதிவா அன்பரே
    120% உண்மையான கருத்துக்கள் தான்

    ReplyDelete
  28. காதலிக்காமல் இருப்பவனுக்கு ஒரே ஒரு கவலைதான். ஆனால் காதலிப்பவர்களிற்கு காதலியினால் படும் இம்சைகள் பல...

    அனுபவிச்சாத்தான் தெரியும் இம்சைகளின் சுகம்.../// அண்ணே..

    ReplyDelete
  29. சங்கவி வண்டி ரொமாண்டிக் கியர் போட்டு டாப்ல பறக்குது

    ReplyDelete
  30. ஹலோ சங்கவி சார் அனுபவமோ ??????? சார் மேட்டர் நல்லாத்தான் இருக்கு ஆனால் பெண்களுக்கு மட்டும்தான் இயந்திரமா ?????????/ நீங்கள் எல்லோரும் ரொம்ப நல்லவங்கா ????????? Anyhow " ALL THE BEST "

    ReplyDelete