Thursday, June 30, 2011

அஞ்சறைப்பெட்டி 30.06.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
மாதம் மாதம் சம்பளம் வாங்குவது போல் உயர்கிறது பெட்ரோல், டீசல், கேஸ் விலை. மத்திய அரசு இது வரை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுத்தது போல் தெரியவில்லை. மத்திய நிதி அமைச்சர் விலையேற்றம் தவிர்க்கமுடியாதது என்கிறார் தடுக்க முடியாத இவர் அமைச்சராக இருந்து என்ன பிரயோசனம்.

மேற்கு வங்கத்தில் மம்தா சமையல் வாயுவிற்கு மாநில அரசின் வரியை குறைத்தது வரவேற்கத்தக்க விசயம். அதே போல் தமிழகத்திலும் சமையல் வாயுவிற்கான வரியை குறைத்ததற்காக அம்மாவிற்கு அம்மாக்களின் சார்பாக வாழ்த்துக்கள்...


...............................................................................................

திரைப்படநடிகர்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துகிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளனர் நடிகர்கள் அவர்களின் அன்பான பாராட்டு விழாவை தவிர்த்த முதல்வருக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்.

முதல்வரே தமிழகதில் மின்சாரத் தட்டுப்பாடு, விலையேற்றத்தை கட்டுப்படுத்துங்கள் எங்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்புக்கள் இதுதான்.


...............................................................................................

சீனாவில் பிரபலமானவற்றில் நாய் கறியும் ஒன்று. பெரும்பாலும் சீனாவின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் நாய் கறியை விரும்பி உண்ணும் பழக்கம் கொண்டவர்கள்.

தற்போது சில வருடங்களாக சீனாவின் யுலின் என்ற பகுதியில் நாய் கறியை சமையல் செய்து உண்பதை அவர்கள் ஒரு கலாசாரமாக வைத்துள்ளனர். திருவிழா போன்று ஒரு வாரம் வரை நடைபெறும் இதற்காக 15 ஆயிரம் நாய்களை கறிக்காக கொன்றுள்ளனர்.

நாய் கறி பல மருத்துவ பலன்களை கொண்டது என காலங்காலமாக அவர்களது நம்பிக்கையாக உள்ளது. எனினும், இதனை கொடுமையாக கருதி, நாய் கறி உண்பதை தடை செய்ய சட்டம் இயற்றுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2008 ஒலிம்பிக்போட்டியின் போது பல்வேறு நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்ததால் அப்போது குறிப்பிட்ட உணவகங்களின் மெனுவில் இருந்து நாய் கறி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நமக்கு ஆர்டர் கொடுத்து இருந்தால் 15 ஆயிரம் என்ன அதற்கு மேலும் நம்ம ஊரில் உள்ள தெரு நாய்களை அனுப்பி இருக்கலாம்...


........................................................................................................

இங்கிலாந்து, தலைநகர் லண்டனை சேர்ந்த ஒருநிறுவனம் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. ஒருசில ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் படுக்கைகள் மற்றும் தலையணைகள் நீண்ட நாட்களாக மாற்றப்படாமல் சுத்தமில்லாமல் அழுக்காக இருந்தன.

இந்த தலையணைகளில் நோயாளிகளின் உடலில் இருந்து உரிந்து விழுந்த தோல்பகுதிகள், தலையில் இருந்து உதிர்ந்த பொடுகுகள், வியர்வைதுளிகள் போன்றவைகளால் பிசுபிசுப்பான அழுக்கு ஏற்பட்டிருந்தது.

இது குறித்து அந்த ஆய்வு நிறுவனம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், தலையணையில் உள்ள அழுக்குகளால் 30 வகையான நோய்க்கிரிமிகள் உண்டாகின்றன. இவை சின்ன அம்மை, மஞ்சள் காமாலை மற்றும் தொழுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.

எனவே, தலையணைகள் மற்றும் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும்.   நர்சுகள் தங்கள் கைகளை தினசரி சுத்தம் செய்ய வேண்டும். தலையணையின் ஓரத்தில் ஏற்படும் கிழிசல்களை உடனுக்குடன் தைக்க வேண்டும். அதன் மூலம்தான் நோய்க்கிரிமிகள் உள்ளே புகுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆஸ்பத்திரிகளுக்கு மட்டுமல்ல, வீடுகளில் தங்கியிருக்கும் பொது மக்களுக்கும் ஒரு முன் எச்சரிக்கையாகும், தாங்கள் பயன்படுத்தும் படுக்கைகளையும், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

........................................................................................................

சமீபத்தில் எங்கள் ஊரில் பாலம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்தார்கள் அப்போது புறம்போக்கு இடங்களில் ஒரு 15 குடும்பத்தினர் குடியிருக்கின்றனர் அவர்களின் வீடு எல்லாம் காலி செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் அறிவித்திருந்தனர் இதையறிந்த மக்கள் என்ன செய்வது நமக்கு குடி இருக்க இடம் வேண்டும் என்றதும் தொகுதி எம்எல்ஏவிடம் முறையிடலாம் என்று முடிவானது இவர்கள் அனைவரும் அவரைப்பார்க்க கிளம்பிய செய்தி அவரை எட்டி அவர் உடனே ஊர் முக்கியஸ்தருக்கு போன் செய்து என்னைப்பார்க்க யாரும் வரவேண்டாம் எதுவாக இருந்தாலும் பிரச்சனை என்றால் நானே நேரில் வருகிறேன் என்று நேரில் வந்து ஊர் கிராம நிர்வாக அலுவலர், தாசில்தாரிடம் கலந்து ஆலோசித்து உடனே மாற்று இடம் ஏற்பாடு செய்தார்.

இதில் மிக்க பாராட்டப்பட வேண்டிய விசயம் எந்த பிரச்சனையாக இருந்தாலும் என் எண்ணிற்கு அழையுங்கள் நானே நேரில் வருகிறேன் என்று அவர் எண்ணை கொடுத்து சென்றுள்ளார் அவருக்கு நம் பாராட்டுக்கள்.

........................................................................................................

கடந்த ஆட்சியில் நில அபகரிப்பு பிரச்சனையில் இப்பதான் ஒரு சிலர் கைதாகி உள்ளனர் இந்த எண்ணிக்கை நிறைய இருக்கும் என எதிர்பார்க்கிறேன். தைரியமாக சென்று புகார் கொடுத்து தண்டனை வாங்கி தர நினைக்கும் பொது மக்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பாராட்டுகிறேன்..

நாட்டு நடப்பு
சமச்சீர் கல்வியின் வழிமுறைகளை அடுத்த வாரம் முழுவதும் தெரியவரும். இன்று மக்களின் முக்கிய நினைவே சமச்சீர்கல்வியின் மேல் தான்.

தகவல்

எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, தன் குடலையே கொடுத்து விட்டு தப்பிக்கும் கடல் வெள்ளரி மீனினங்கள், மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. கடலடியில் வாழ்வியல் பிரச்னைகள், உணவிற்கு போராட்டம், பாதுகாப்பின்மை என எத்தனையோ இன்னல்கள் வந்தாலும், அவற்றை தாக்கு பிடிக்கும் திறன்கள் பல உயிரினங்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளன. இவைகளின் உத்திகள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன.

உணவிற்கும், உயிர் பிழைக்கவும், இனப்பெருக்கம் செய்வதில் பல வினோதங்கள் மீனனிங்களிடம் உண்டு. உணவு, இடம் பாதுகாப்புக்கு ஒன்றையொன்று சார்ந்திருத்தல், இருபாலரும் உறவால் பலன் பெறுதல் என எத்தனையோ உறவு மலர்கள். அவற்றுள் சற்று வித்தியாசமானது கடல் வெள்ளரி. இவை தன் உடலினுள் மீனொன்று பதுங்கி வாழ அடைக்கலம் தருகிறது. சேற்றின் அழுக்கை தின்று, சுத்தப்படுத்தும் இயல்பு கொண்டது.

இத்தகை சிறப்பு வாய்ந்த இந்த கடல் வெள்ளரி, ஆள் விழுங்கி மீனிடமிருந்து தப்பிக்க பல தந்திரங்களை கையாள்கிறது. அவற்றுள் ஒன்றுதான் தனது குடலையே வெளியேற்றி விடுவது. தாக்க வரும் இனம் அதை தின்று விட்டு போய்விடும். குடலில்லாத வெள்ளி மீனுக்கு மீண்டும் குடல் உருவாகிவிடும். இவை மன்னார் வளைகுடா பகுதி கடலடியில் காணப்படும் ஒரு அரிய வகை உயிரினம்.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் சுந்தர் ஆனந்தமாயிருங்கள் என்ற பெயரில் பதிவெழுதிவருகிறார். இவரின் பதிவின் முக்கிய அம்சம் சொரியாசிஸ் பற்றி எழுதிவருகிறார் அதற்காக ஆலோசனைகளையும் வழங்குகிறார். இவர் தற்போது பதிவெழுதுவதுதில்லை அவரிடம் பேசிய போது நிறைய ஆர்ட்டிக்கள் கையில் இருக்கிறது வேலைப்பளு காரணமாக அதை பதிவிட இயலவில்லை என்றும் விரைவில் அனைத்தையும் பதிவிடுகிறேன் என்று கூறினார்.

உங்களுக்கு எதாவது தோல் நோய் பற்றி சந்தேகமோ அல்லது தோலில் எதாவது மாற்றம் இருந்து அது தோல் வியாதியாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தால் அவரை தொடர்பு கொள்ளவும்.


அவரின் மின் அஞ்சல்  sundarsiddha@gmail.com

கைபேசி எண் 9994063531

http://villiputturan.blogspot.com/




தத்துவம்
 
குழந்தையின் மழலை,
பைத்தியக்காரனின் பிதற்றல்,
மகானின் பொன்மொழி
இவற்றுக்கெல்லாம் பொதுவான ஒரு தன்மை உண்டு.இலேசில் புரியாது.
 
 
இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
கண்பார்த்து சிரிப்பவன் காரியவாதி
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

6 comments:

  1. //முதல்வரே தமிழகதில் மின்சாரத் தட்டுப்பாடு, விலையேற்றத்தை கட்டுப்படுத்துங்கள் எங்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்புக்கள் இதுதான். //

    அம்மாவுக்கு உடம்பு குண்டாவரதையே கட்டுப்படுத்த முடியலையாம்

    ReplyDelete
  2. தத்துவம் அசத்தல்..

    //திரைப்படநடிகர்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துகிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளனர் நடிகர்கள் அவர்களின் அன்பான பாராட்டு விழாவை தவிர்த்த முதல்வருக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்.//

    சபாஷ்..

    ReplyDelete
  3. மாப்ள கலக்கல் பெட்டிய்யா!

    ReplyDelete
  4. அஞ்சறைப் பெட்டி, அருமையான பெட்டிங்க!

    ReplyDelete
  5. அஞ்சறைப் பெட்டி... கலக்கல் பெட்டி.

    ReplyDelete