Sunday, December 30, 2012

2013ம் வருடமே நீ ! வருக !! வருக!!!

மணித்துளிகள் எண்ணப்படுகின்றன 2012 இன்னும் பல மணித்துளிகளில் நமக்கு மறந்துவிடும். இவ்வருடம் நாம் சாதித்தது என்ன? என அசைபோட நேரமில்லை....

இதுவரை எது நடந்தாலும் அதை மறந்து விட்டு 2013யை வரவேற்க நான் தயாராகிவிட்டேன். 2013ல் நான் சாதிக்கப்போவது நிறைய இருக்கிறது இந்த வருடம் என் வாழ்வில் மிக முக்கியமான வருடமாக நிச்சயம் இருக்கும்.  வரும் வருடத்தில் நிறைய புதிய வழித் தடங்களில் எனது பாதங்களை அடி எடுத்து வைக்கிறேன் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற தன்னம்பிக்கையோடு தடம் பதிக்கிறேன்.....
 
ஒவ்வொரு முறை நிகழும் போது அன்பு நண்பர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
 
என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...........
 
 
வாழ்த்துக்கள்... நண்பர்களே....
 
என்றும் அன்புடன்
சங்கமேஸ் (சதீஸ், சங்கவி)
www.sangkavi.com
www.vivasayam.com
 

Wednesday, December 26, 2012

அஞ்சறைப்பெட்டி 27/12/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

பாலியல் பலாத்காரம் இது தான் இன்று பெட்டிக்கடை முதல் தலைமை செயலகம் வரை உச்சரிக்கும் வார்தை எதோ டெல்லியில் மட்டும் இது நடைபெற்றது என்று சொன்னால் முட்டாள்தனம் இன்றும் கிராமப்புறங்களில் தினமும் நடக்கும் ஒன்று தான். பெண்கள் துணிந்து புகார் கொடுக்க முடியாத நிலை தான் கிராமப்புறத்தில் தண்டனைகள் அதிகம் ஆனால் மட்டுமே குற்றங்கள் குறையும்...
  ................................................................

இதுவும் பாலியல் வன்முறை தான்....

இந்த வார இறுதியில் கொடிவேரி அணைக்கு சென்று இருந்ததேன்.. கூட்டம் இல்லை சில காதலர்கள் இருந்தனர்.. ஒரு 8 பேர் இருக்கும் எல்லாரும் நிதானம் இழந்து நின்று இருந்தனர்.. அப்போது ஒரு காதலர்கள் அவர்களை தாண்டி வரும் போது நான் மீன் வாங்கிக்கொண்டு இருந்தேன் அந்த 8 பேரும் பேசிய வார்த்தைகள் இருக்கே அந்த இளம் பெண் ஓடிவந்து மீன் கடையில் நின்று விட்டது என்றால் அவர்கள் பேசிய வார்த்தை கற்பழிப்பை போல் இருந்தது... மீண்டும் அந்த பெண்ணை நோக்கி அவர்கள் பேச அந்த மீன் கடை பெண் நல்லா பேசறீங்கப்பா இப்படியே உங்க அம்மா, பொஞ்சாதி, அக்கா தங்கச்சிங்க இருந்தா நீ மாத்தி அவ மாத்தி பேசுங்க தூக்கி வெச்சு கொஞ்சுவாங்க என்று ஒரு போடு போட்டது.... பக்கத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக சேர அடுத்த 5 நிமிடத்தில் அங்கு இருந்து அவர்கள் எல்லாம் எஸ்கேப்...

இதுவும் பாலியல் வன்முறைதான் என்பேன்... அந்த இடத்தில் யாரும் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் அங்கும் நடக்க வாய்ப்புள்ளது.. டெல்லியில் மட்டுமல்ல இங்குள்ள சுற்லுலா தளங்களில் காதலனை தாக்கிவிட்டு காதலியை மானபங்க படுத்தி விசயம் நிறைய இடங்களில் கேள்விப்பட்டு இருக்கோம்...
..........................................................................................

அடுத்த கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம் ஆம் ரயில்வே கட்டண உயர்வு மிக விரைவில் வரும் என மத்திய அரசு மட்டுமல்ல வாக்களித்த பொதுமக்களும் விலை ஏற்றத்தை மட்டுமே எதிர்பார்க்கமுடியும்...
................................................................................................

2012ம் ஆண்டு சந்தித்த மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது மின்சாரம் தான் தமிழகத்தில் மின்சாரம் இல்லாமல் படும் பாடு சொல்லித்தெரிவதில்லை. தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்துக்கு கொடுத்தால் போதும் இருண்ட பூமி வெளிச்ச பூமியாகிவிடும்.

2013ம் ஆண்டு சந்திக்கபோகும் பிரச்சனை மின்சாரத்துடன் சேர்த்து தண்ணீரும் இருக்கும் என எதிர்பார்க்கலாம் வருணபகவான் கருணை காட்டவில்லை எனில் நிச்சயம் தண்ணீர் பிரச்சனை ரொம்ப இருக்கும்.

...............................................................................................

 
இதய நோயாளிக்கு ஆல்கஹால் சிகிச்சை அளித்து அவரது உயிரை டாக்டர்கள் காப்பாற்றினர்.
 
இங்கிலாந்தில் பிரிஸ்போல் பகுதியை சேர்ந்தவர் ரொனால்டு ஆல்டோம் (77). இதய நோயாளியான இவர் ஏற்கனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்.
 
இந்த நிலையில் அவருக்கு திடீரென மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது நெஞ்சுவலி குணமாகவில்லை. மாறாக இதயதுடிப்பு அதிகரித்து கொண்டே இருந்தது.
 
உடனே டாக்டர்கள் இந்த சிகிச்சை நிறுத்திவிட்டு மாற்று சிகிச்சை அளித்தார். அதன்படி இதயத்துக்குள் ஒரு குழாயை செலுத்தி ரத்தக் குழாய்களில் எத்தனாலை செலுத்தினார்.
 
இதைத்தொடர்ந்து எத்தனாலில் உள்ள ஆல்கஹாலால் இதயத்தில் உள்ள தேவையில்லாத தசைகள் அழிக்கப்பட்டது. இதையடுத்து இதயம் சீராக இயங்க தொடங்கி ஆல்டோம் குணமடைந்தார்.
 
இருந்தும் ஆஸ்பத்திரியில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
...............................................................................................

2012ம்முடிவுறும் தருணம் இது அனைவரும் 2013ம் ஆண்டை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம். இந்த வருடம் எனக்கு பல ஏற்றங்களைக்கொடுத்தது புதிதாக வாகனம் மற்றும் இடம் வாங்கும் அளவிற்கு முன்னேற்றம் இருந்தது. வரும் 2013 ம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் முக்கிய ஆண்டாக இருக்கப்போகிறது இந்த வருடம் சுயதொழிலில் ஈடுபடலாம் எனவும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறேன் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் நிச்சயம் வழி பிறக்கும் என துணிந்து என் முயற்சியில் சுயதொழிலை தொடங்க இருக்கிறேன் நண்பர்களாகிய உங்கள் ஆதரவோடு...
...............................................................................................

2013 ம் ஆண்டில் அனைவரும் அனைத்து நலன்களும் பெற்று வளமுடன் வாழ என் அன்பு வாழ்த்துக்கள்....



தகவல்
 
 
சூரிய மண்டலத்தில் 'இசோன்' என்ற வால் நட்சத்திரம் கடந்த செப்டம்பரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அது சூரிய மண்டத்தில் இருந்து விலகி சூரியனை நோக்கி வருகிறது.
 
இது அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் சூரியன் அருகே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இதை வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. எக்ஸ்ரே டெலஸ்கோப் மூலம் மட்டுமே காண முடியும். இந்த நட்சத்திரம் சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக இது கணிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தகவலை லண்டனில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் மைனர் பிளானட் சென்டர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 20-ம் நூற்றாண்டில் ஹேல்-பாட் என்ற வால் நட்சத்திரம் அதிகம் ஒளிரும் தன்மையுடன் திகழ்ந்தது. 1997-ம் ஆண்டில் இதை பார்க்க முடிந்தது.
 
இது சந்திரனுக்கு போட்டியாக அதிக வெளிச்சத்துடன் ஒளிரும் சக்தி கொண்டது. எனவே, இதை 'சூப்பர் வால் நட்சத்திரம்' என அழைக்கின்றனர்.
 
அதை தொடர்ந்து இந்த 21-ம் நூற்றாண்டில் முதன் முறையாக அதிகம் ஒளிரும் வால் நட்சத்திரமான 'இசோன்' தெரிய உள்ளது.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக இணையதளம் மின்மினி தேசம் என்ற பெயரில் எழுதி வருகிறார். இதில் இவர் எழுதும் சிறு, குறு மற்றும் குட்டி கதைகள் நம் மனதை கொள்ளை கொள்கின்றன...

http://minminidesam.blogspot.in/
தத்துவம்

ஆயிரம் பேர்களை வென்றவனைவிட தன்னைத்தானே வென்றவனே பெரிய வீரன்.

நீங்கள் சரியான பாதையிலேயே இருந்தாலும் கூட ஒரே இடத்தில் உட்கார்ந்துவிட்டால் வேறு யாரேனும் உங்களை முந்தி விடுவார்கள்… தொடர்ந்து முன்னேறுங்கள்!

யாரையும் தீயவன் என்று கூற வேண்டாம்; நீ நல்லவன், இன்னும் நல்லவனாய் இரு என்று சொல்லுங்கள்.

Sunday, December 23, 2012

மறக்க முடியாத சச்சின்....


கிரிக்கெட் தெரிந்தவர்கள் எல்லாம் உச்சரிக்கும் பெயர்
இந்தியா மட்டுமல்ல உலமே உச்சரித்த பெயர்
பந்து வீசுபவர் வீர வசனம் பேசினாலும் அவரை நடுங்க வைத்த பெயர்
கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் பேர் தன் குழந்தைகளுக்கு வைத்த பெயர்
கிரிக்கெட் ஜம்புவான்களின் தூக்கத்தை கெடுத்த பெயர்

இப்படி சொல்லகிட்டே போகலாம்...

நான் 7ம் வகுப்பு படிக்கும் போது அறிமுகம் ஆன பெயர் முதல் மேட்சில் விளையாண்டதைப்பற்றி அப்போது ஸ்போர்ட்ஸ் என்ற தமிழ் விளையாட்டு பத்திரிக்கை வரும் அதில் வரும் சச்சினின் அனைத்து போட்டோக்களும் எனது விடுதி பெட்டியின் முழுவதும் ஒட்டப்பட்டு இருக்கும்... 
 

அப்போதெல்லாம் மேட்ச் பார்க்கும் போது சச்சின் இருக்கிறாரா என்று பார்த்து தான் மேட்ச் பார்க்கவே ஆரம்பிப்பேன்... சச்சின் முன் முறையாக ஓப்பனிங் இறங்கி நியுசிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் ( சரியாக நினைவில்லை) அடித்த போது அன்று விடுதியில் நான் ஆடிய ஆட்டம் இன்றும் மறவா..

இந்தியா பாகிஸ்தான் உலக கோப்பையில் அக்தரின் பந்துகளை கிழி கிழி என்று கிழிப்பார் அந்த மேட்சை சென்னை அண்ணாசாலை வசந்த் அன்கோ முன்னாடி நின்று ஒவ்வொரு அடிக்கும் நான் போட்ட ஆட்டம் இன்று மறவா..

சச்சின் களத்தில் இருந்தால் அந்த மேட்சை எத்தனை வேலைகள் இருந்தாலும் அந்த மேட்சை பார்ப்பது தான் என் முதல் வேலை அந்த அளவிற்கு சச்சின் என்ற பெயர் மனதில் நீங்க இடம் பெற்றது. இந்திய அணியின் கேப்டனாக அவர் பணியாற்றிய போது அதிக மேட்ச்களில் வெற்றி பெறவில்லை என்றாலும் அப்போது நாங்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடிய கொண்டாட்டம் தனி...

நண்பர்களிடையே கிரிக்கெட் என்று பேச்சை எடுத்தால் நிச்சயம் அங்கு சச்சின் இருப்பார். இந்தியாவில் அவரின் பெயரை உச்சரிக்காத ஊர் இருப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு...

உலகின் மிகச்சிறந்த பவுலர்கள் எல்லாம் கடந்த 25 ஆண்டுகளாக சச்சினிடம் தலை குனிந்தார்கள் என்றால் அது நிதர்சன உண்மை... எவ்வளவு  பந்து வீச்சாளர்கள் சச்சினை திட்டி கொடுத்த பேட்டிக்கெல்லாம் அவர் என்றும் பதில் அளித்ததில்லை அவரின் மட்டை மட்டுமே இதுவரை பதில் சொல்லி உள்ளது..

ரேடியோவில் கமெண்ட்ரி கேட்டதில் இருந்து இன்று LED டிவியில் மேட்ச் பார்க்குவரை சச்சினின் ஒவ்வொரு ஆட்டத்தையும் மிக மிக ரசித்துள்ளேன்.. முதன் முதலாக இலங்கைக்கு எதிராக செஞ்சுரி போட்ட போது அன்று 1000 சரவெடி வாங்கி எங்கள் ஊரில் வெடித்து கொண்டாடிய அனுபவம் இன்றும் நினைவில்.



சென்னையில் இருந்த போது ஒரு டெஸ்ட் மேட்ச் கடைசிநாள் ஆட்டம் காலை 11 மணிக்கு மைதானம் செல்லாம் என்றும் எப்படியும் சச்சினை இன்று பார்த்து விடலாம் என்று பத்திரிக்கை பாஸ் எல்லாம் வாங்கி ஓடோடி சென்றேன் ஆனால் அன்று 10.45க்கே ஆட்டத்தை முடித்து விட்டார் சச்சின்.. அப்புறம் பெவிலியன் பக்கம் நின்று ரொம்ப தூரத்தில் ஸ்ரீநாத்துடன் பேசிக்கொண்டு இருக்கும் சச்சினை பார்த்தேன்.. ஆனால் அங்கு பாத்ததைவிட எனது பெட்டிக்குள்ளேயே தினமும் பார்த்தது தான் எனக்கு பிடித்திருந்தது..


இந்தியா உலககோப்பையை வென்றதும் சச்சினை தூக்கி வைத்துக்கொண்டு சக வீரர்கள் ஆடிய ஆட்டம் ஸ்டேடியத்தில் நடந்தாலும் இங்கு பாரில் அவரின் போட்டோவை வைத்து ஆடிய ஆட்டம் என்னைப்போல பல நண்பர்களுக்கு நிச்சயம் இருக்கும்.

ஒரு பெண்ணை லவ்வும் போது அது உனக்கு என்னை விட வயது குறைவு என்றது உடனே என் மானீசீக குரு சச்சின் கூட தன்னைவிட வயது மூத்த பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளார் அவர் வழியில் நானும் செல்ல இருக்கிறேன் என்று அவரின் பெயரை உபயோகித்து பிட்டு போட்ட காலங்களும் உண்டு..



நமக்கு சச்சின் மீதும் அவரின் ஆட்டத்தின் மீதும் தீராத காதல் இன்றும் உண்டு என்றால் அது தான் உண்மை அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தது நம்மை போன்ற ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கும் ஆனால் அவரின் பழைய கிரிக்கெட் ஆட்டங்கள் தான் நமக்கும் நம் சந்ததியினருக்கும் வரப்பிரசாதம்...

எத்தனை காலங்கள் ஆனாலும் எத்தனை வீரர்கள் வந்தாலும் சச்சின் என்ற இந்த மாபெரும் சாதனையாளனின் பெயர் உலக அரங்கில் கிரிக்கெட் உள்ள காலம் வரை ஒலிக்கும்... ஒலிக்கும்....


Wednesday, December 12, 2012

அஞ்சறைப்பெட்டி 13/12/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

சாலைகளில் சிக்னலில் நிற்கும் போது 20 விநாடி இருக்கும் போதே ஒருவர் அவர் தான் அறிவாளி என்ற நினைப்பில் இருசக்கர வாகனத்தை வேகமெடுத்தார். தீடீரென வந்த சைக்கிளால் நிலைகுலைந்து தானே குப்புற விழுந்தார் அருகில் சென்ற நான் தேவையா சார் இன்னும் கொஞ்சம் செகன்ட் இருந்தால் பறக்கலாம் இல்ல என்றேன்... ஒன்னும் அடிபட சார் நோ ப்ராபளம் என்று எஸ் ஆவதிலேய குறியா இருந்த மனுசனை அடுத்த சிக்னலில் தலைகவசம் போடவில்லை என்று அமுக்கியது காவல்... பக்கத்தில் செல்லும் போது இன்னிக்கு யாரு மூஞ்சில முழிச்சேன்னே தெரியல இப்படி சிக்கிட்டேன் என்று புலம்பினார்... இப்படித்தான் நம்மாளுக தவறை அவர்கள் மேல் வைத்து விட்டு பக்கத்தில் இருப்பவனை திட்டுவது...

  ................................................................

சமீபத்தில் கும்கி, பரதேசி இரண்டு திரைப்பட பாடல்களையும் கேட்டு மெய் மறந்திருக்கிறேன் அதுவும் கும்கியில் மச்சான் பாடலை தினமும் ஒரு 20 முறையாவது கேட்கிறேன் அந்த அளவிற்கு மூழ்கிவிட்டேன்.. இதுவரை எந்த படமும் முதல் காட்சி இன்று வரை பார்த்ததில்லை முதன் முதலாக கும்கியை பார்க்க போகிறேன்...

..........................................................................................

நீங்க உங்க செல்போன் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர் எனில் உங்க பில்லை மாதந்தவறாமல் செக் செய்யுங்க நமக்கே தெரியாம நேஷனல் ரோமிங், இன்டர்நேஷனல் ரோமிங் என ஒவ்வொன்றுக்கும் அமைதியாக காசு புடுங்கறானுக. இத்தனை நாள் கண்டுக்காம இருந்த நான் இப்ப மெயில்க்கு பில்வரும் போது தான் இதை எல்லாம் நான் கேக்கவில்லை என்று கட் செய்தேன்.. பணம் புடுங்கறதுல எவ்வளவு விவரமாக இருக்கானுகன்னு பாருங்க..

................................................................................................

பேருந்தில் தொங்கி செல்லும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி அரசும், நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இது சரியான ஒன்று தான் ஆனாடல காலை மாலை வேளையில் ஏன் தொங்கிச்செல்கின்றனர் என்றால் பேருந்து அதிகம் இல்லாத காரணத்தால் தான். எதோ ஒரு பேருந்தில் மட்டும் தொங்கிச்செல்வதில்லை எல்லா பேருந்துகளிலும் தொங்கிச்செல்கின்றனர் இதற்காக காலை வேளைகளில் பேருந்தின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.  எனக்குத் தெரிய எங்கள் வழித்தட்ங்களில் நான் படிக்கும் போது சென்ற பேருந்து தான் இன்றும் செல்கிறது காலை மக்கள் தொகைக்கு ஏற்ப பேருந்தை அதிகரிக்க வேண்டும் பேருந்தை அதிகரிக்கும் போது கூட்டம் குறையும் குறைவான கூட்டத்தில் தொங்கிச்சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்...
9 மணி வேலைக்கு 8.30க்கு பஸ்நிலையம் வந்தால் தொங்கித்தான் செல்லவேண்டும் கொஞ்சம் முன்னமே புறப்பட்டு தொங்கி செல்வதை நாம் தவிர்க்கலாம்... அரசு காலை வேளைகளில் அதிக பேருந்துகளை இயக்கி கூட்ட நெறிசலில் தொங்கி செல்வதை தவிர்க்கலாம்...


...............................................................................................

ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடிய அளவிற்கு எந்த பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் பாரதியின் பிறந்தநாளை கொண்டாடவில்லை நம் எதற்கொடுத்தாலும் பாரதியின் பாடலை மேற்கோள் காட்டுகிறோம் ஆனால் அவரின் பிறந்தநாளில் அவரின் அற்புட பாடல்களை அனைவருக்கும் தெரியும்படி செய்ய மறுக்கிறோம்.. மீடியாக்கள் அவர்கள் வருமானத்தை மட்டுமே பார்க்கின்றனர் யாரும் சேவை செய்வதில்லை அட்லீஸ்ட் தகவல்களையாவது பரிமாறலாம். ரஜினி 63 என்று நான்கு பக்கத்துக்கு செய்தியை கொடுத்த ஆனந்தவிகடன் பாரதிக்கு என்று ஒரு பக்கம் கூட ஒதுக்காதது என்னைப்போன்றவர்களுக்கு வருத்தம் தான்...

...............................................................................................

கூடங்குளம் அனு உலையைப்பற்றி எதற்கும் கவலைப்படாத கேரளாவிற்கு மின்சாரம் தரப்போகிறார்கள் என்று அறிவித்து இருக்கிறார் கேரள அமைச்சர். ஆனால் நம்ம ஊரில் தயாரிக்கப்படும் மின்சாரம் நமக்கு கிடைக்குமா கிடைக்காதா என்று விழி பிதுங்க வேண்டி உள்ளது.. நம்ம வீட்டில் சமையல் செய்து நம்க்கே சோறு போட மறுக்கிறார்கள் என்ற கதை தான் இது... அரசியல் சுய இலபாத்திற்காக தமிழகத்தின் பொருளாதராமும், நிறைய மக்களின் வாழ்வாதாரத்துக்கம் தேவையான மின்சாரத்தை வைத்துக்கொண்டே தர மறுக்கிறது மத்திய அரசு...

...............................................................................................

பனாமா நாட்டிலிருந்து பார்சலோனா வந்த விமானத்தில், மிடுக்காக உடையணிந்த, நவநாகரிக பெண் ஒருவர் வந்திறங்கினார். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பெண்ணின் உடமைகளை சோதனையிட்டபின், அவளது உடலையும் சோதனையிட்டனர்.

அப்போது, அவளது மார்பகத்தில் புதிதாக தையல் போட்ட தழும்புகளும், தழும்புகளில் இருந்து ரத்தம் கசிவதையும் கண்டு, காரணம் கேட்ட போது, மார்பகங்களை கவர்ச்சியாக வெளிப்படுத்துவதற்காக, சமீபத்தில் ஆபரேஷன் செய்துக் கொண்டதாக அந்த பெண் கூறினார்.

அவளது பேச்சில் சந்தேகப்பட்ட போலீசார், அவளது வாக்குமூலம் சரிதானா? என்பதை கண்டுபிடிக்க ஆஸ்பத்திரிக்கு அழைத்துக்
சென்று டாக்டர்களை வைத்து பரிசோதனை செய்தனர். இந்த சோதனையில், அறுவை சிகிச்சை மூலம் தனது இரு மார்பகங்களிலும் 'கொக்கைன்'போதைப்பொருளை அவள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது'.

இதையடுதது, அந்த பெண் மீது போதைப்பொருள் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவளது மார்பகங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  1 கிலோ 380 கிராம் எடையுள்ள 2 பாக்கெட்  கொக்கைன்-ஐ பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.

தகவல்
 
12.12.12 என்ற அபூர்வ தேதி கொண்ட நேற்று, பலர் நிச்சயதார்த்தம், திருமணம் ஆகியவற்றுக்கு நாள் குறித்திருந்தது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், தனது மரணத்தை தற்கொலையின் மூலம் தேர்ந்தெடுத்த ஒருவர், அதற்கான முகூர்த்த நேரமாக 12.12.12, பகல் 12.12 மணியை நிர்ணயித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டம் நரோரா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா பால். தனது பண்னையில் பூச்செடிகளை வளர்த்து, வியாபாரம் செய்து வந்தார். மனைவி, 2 மகள்கள், மகன் ஆகியோர் கொண்ட அழகான குடும்பம் இருந்தும், இவர் மனதில் ஓர் வினோத ஆசை தோன்றியது.

மனிதர்களின் மரணத்தை கடவுள் தான் நிர்ணயம் செய்கின்றார் என்று எல்லோரும் கூறுகின்றார்களே..! நமது மரணத்தை நாமே நிர்ணயித்துக் கொண்டால் என்ன? என்ற தாந்தோன்றி எண்ணம் இவரது மனதில் உதயமானது.

டெல்லி அருகே உள்ள காசியாபாத்திற்கு சென்ற கிருஷ்ணா பால், பிரதாப் விகார் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள 80 அடி உயர குடிநீர் தொட்டியின் ஏணியில் 'மளமள' வென்று தாவி ஏறினார். காலை 10 மாணியளவில் தண்ணீர் தொட்டி மீது ஏறிய அவர், ஒரு பையில் கற்களையும் ஒரு கயிறையும் கொண்டு சென்றார்.

தனது மரண வாக்குமூலத்தை கூட அவர் 12 பக்கங்களில் எழுதியிருந்தார். அந்த வாக்குமூலத்தை 12 செட் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்த அவர், தண்ணீர் தொட்டியின் உச்சியில் ஏறி நின்றார். அங்கிருந்த படி, தனது தற்கொலை வாக்குமூலத்தில் ஜெராக்ஸ் பிரதிகளை கீழே வீசி எறிந்தார்.

அவரது தற்கொலை வாக்கு மூலத்தில் கிருஷ்ணா பால் கூறியிருந்ததாவது:-

கடவுளின் விருப்பப்படி 12.12.1972 அன்று நான் பிறந்தேன் ஆனால், என் பெற்றோர்கள் என்னை பள்ளியில் சேர்க்கும் போது என்   பிறந்த தேதியை 10.10.1972 ஆக பதிவு செய்து விட்டனர். கடவுளின் விருப்பத்திற்கு மாறாக, கடவுளுக்கே சவால் விடும் வகையில், கடவுளின் கையில் உள்ள என் மரண விதியை, என்கையில் நான் எடுத்துக் கொண்டேன்.

என் மரணத்தின் மூலம் நான் சத்திய யுகத்தை வரவழைக்கப் போகிறேன்' இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது. தனது கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்ட அவர், 80 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில், கத்திக் கொண்டே பாய்வதற்கு முற்பட்டார்.

கீழே நின்றிருந்தவர்கள், இதைக் கண்டு பதற்றமடைந்தார்கள் அவர்களில் சிலர், கிருஷ்ணா பாலை காப்பாற்ற ஏணிப்படிகளில் ஏறி மேலே செல்ல முயற்சித்தனர். பையில் கொண்டு போயிருந்த கற்களால், தன்னை காப்பாற்ற வந்தவர்கள் மீது அவர் எறியத்தொடங்கினார். பொது மக்களில் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விஜய் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தற்கொலை முடிவை கைவிட்டு கீழே இறங்கி வரும்படி கூறினர். 'கடவுளுக்கே சவால் விட்டு இந்த முடிவை எடுத்தவன் நான். நீங்கள் என்ன? கடவுளைவிட பெரியவர்களா? உங்கள் முடிவுக்கு நான் கட்டுப்பட மாட்டேன்.

என் முடிவை யாராலும் மாற்ற முடியாது என்று கூறியபடி, சரியாக காலை 11.05 மணிக்கு தண்ணீர் தொட்டிக்குள் குதித்தார், கிருஷ்ணா பால். அவரை பின்தொடர்ந்து, போலீசாரும் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து, அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், வரும் வழியிலேயே கிருஷ்ணா பாலின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். 'அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் அவரை காப்பாற்ற முயற்சி செய்தார்கள். ஆனால், அது பலிக்கவில்லை. கிருஷ்ணா பால் மனநோயாளியாக இருக்கலாம்' என்று காசியாபாத் போலீஸ் சூப்பிரண்டு ஷிவ் ஷங்கர் சிங் யாதவ் நிருபர்களிடம் கூறினார்.

'வினாதி காலம் - விபரீத புத்தி' என்பது 12.12.12 விவகாரத்தில் பலித்து விட்டது.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக இணையதளம் மகாத்மா காந்தி பற்றிய செய்திகள் தமிழில் பகிர்ந்துள்ளனர். அவர் வாழ்வில் நடந்த பல சுவையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.. காந்தியை பற்றி அறிய விரும்பவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய இணையதளம்...
http://gandhiworld.in/tamil/news.html
தத்துவம்

அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல. உழைக்கும் நேரம்.

உழைப்பு எந்த மனிதனையும் ஏமாற்றுவதில்லை. மனிதன்தான் உழைப்பை ஏமாற்றுகிறான்.

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம்.

Thursday, December 6, 2012

" மாதவிடாய் " ஆவணப்படம்

மாதவிடாய் இந்த வார்த்தையை உபயோகிப்பதையே கேவலமாக நினைத்த சமூகம் நம் சமூகம். இதற்கு அந்த 3 நாட்கள், வீட்டுக்கு தூரம் என்று பல கேவலமான பெயர்கள் இட்டுத்தான் சொல்வார்கள். எவ்வளவு செல்வந்தாரக பிறந்தாலும் மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள் இதை மறுக்க இயலாது.

கால ஓட்டத்தில் இன்று இந்த கொடுமைகள் மறந்து இன்று நாப்கின் அறிமுகப்படுத்ப்பட்டு ஒரளவிற்குத்தான் மக்கள் இதை பின்பற்றுகின்றனர். ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் அந்த 3 நாட்களுக்கு மட்டும் என நாப்கின் விளம்பரம் வரும் போது என்ன ஏதுவென்று தெரியாமல் விழிபிதுங்கியவர்கள் தான் ஏராளம்.

பெண்களை விட ஆண்களுக்கத்தான் இதில் விழிப்புணர்வு தேவை என்று மாதவிடாய் என்று பெயரிட்டு ஆண்களுக்காக ஓர் ஆவணப்படத்தை உருவாக்கி உள்ளார்கள் முகநூலில் நான் அண்ணன் என்று அன்போடு அழைக்கும் இளங்கோவனும் அவரின் மனைவி கீதாவும்.

இந்த படத்தின் இயக்குநர் கீதா அவர்கள் மாதவிடாய் என்று படத்திற்கு  பெயரிட்டதற்கே அவரை பாரட்ட வேண்டும்...

இந்த ஆவணப்படம் ஆண்களின் விழிப்புணர்வுக்குத்தான்.. இந்த ஆவணப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...

இந்த படத்தை பற்றி பிரபலங்களின் கருத்துக்கள் முகநூலில் இளங்கோவன் மற்றும் நண்பர்கள் பதிந்தது...


தாய்வழிச்சமூகத்தின் விழுதுகள் பாய்ந்திருக்கும் சில இனக்குழுக்களுக்கிடையே இன்றும் மாதவிடாய் மதிப்புமிக்கதாகவும், வளமைக்கு அறிகுறியாகவும் கருதப்படுகிறது.

அஸ்ஸாமில் உள்ள காமாக்கியா என்னும் காளி மாதா கோவிலில் அம்மனின் மாதவிடாய் ரத்தமே பிரசாதமாக கொடுக்கப்படுவதாக ஐதீகம் இருக்கிறது.

தாந்திரிக முறை வழிபாட்டிலும் கூட யோனியும், மாதவிடாயும் வழிபாட்டுக்குரிய சங்கதிகளாகவே கருதப்படுகின்றன.
கடவுளோ, மத நூலோ மாதவிடாயை வெறுக்கும் படியோ, அதன் காரணமாய் பெண்களை ஒதுக்கிவைக்கும் படியோ சொன்னதில்லை.

பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க சமுதாயமே மாதவிடாய் பற்றிப் பொய்யும், இழிவுமான கற்பிதங்களைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன.

இது எல்லா மதத்துக்கும் பொருந்தும்.
துணியோ, நாப்கினோ...ஒழித்து வைத்துப்பயன்படுத்தும் நிர்பந்தம் எதற்கு பெண்ணுக்கு?

ஆண் ரேசர் வாங்கிச்சவரம் செய்யக் கூச்சப்படுகிறானா என்ன?
மாதவிடாய் பெண்களை தனிமைப் படுத்திக் கொடுமை செய்யும் "முட்டு வீடுகள்" இன்றைக்கும் நம் கிராமங்களில் உள்ளன என்பது தெரியுமா உங்களுக்கு?
மாதவிடாய் சமயத்திலும் மோனோபாஸ் சமயத்திலும் பெண்களுக்கு உளவியல்ரீதியான சிரமங்கள் நேரும் . அதன் விளைவாக காரணமே இல்லாமல் கூட எரிச்சல்படுவதும் சில பெண்களின் இயல்பாய் இருக்கும் என்ற மருத்துவ உண்மை எத்தனை ஆண்களுக்குத் தெரியும்?
"அரசு அலுவலகங்களிலுள்ள கழிப்பறைகளில் பெண்களின் மாதவிடாய் தேவைக்கான வசதிகள் என்ன ஏற்படுத்தித்தரப்படுகின்றன?" -என்ற கேள்வியை , தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, மத்திய அரசின் கட்டிடங்கள் கட்டும் அரசு நிறுவனமான சிபிடபிள்யூடி யிடம் கேட்ட போது, அப்படி எந்த வசதியும் செய்யப்படுவதில்லை என்றே பதிலாகக் கிடைத்துள்ளது.
 வீட்டிலிருக்கும்-அலுவலகத்திலிரருக்கும் பெண்களைக் காட்டிலும் பொதுவெளியில் களப்பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் பெரும் சவாலாக இருக்கிறது.

கழிப்பறை வசதிகள் இல்லாத சூழலில் எல்லாம் பணியில் கவனம் குறைந்திட அவளுடைய பணித்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுவிடுகிறது.
 மாதவிடாய் ரத்தம் அசிங்கமானதோ, அருவெறுப்பானதோ அல்ல.

தாய்ப் பாலைப் போன்று பெண்ணின் உடம்பில் ஊறும் ரத்தத்தில் உருவாகும் இன்னொரு இயற்கையான சங்கதி.

சமீபத்திய ஸ்டெம் செல் ஆய்வுகள் இந்த ரத்தத்தின் மூலம் குணப்படுத்த முடியா மனித நோய்கள் பலவற்றைக் குணப்படுத்த முடிவதாய் கண்டுபிடித்துள்ளன.

எனவே மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் உருவாகியுள்ளன.
"ஒரு பொது இடத்திலோ....மேடையிலோ....யாராவது என்னைக் கவனித்து " அம்மா....உங்க ஆடையில கறை...." என்று சொல்லத் தொடங்கினால் ஏதோ கொலைப்பாவம் செய்த மாதிரி ஒரு குற்றவுணர்வு......

எங்கிருந்து வருகிறது இந்தக் குற்றவுணர்வு....?

பொதுவாழ்க்கையில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கே இப்படியொரு குற்றவுணர்வு என்றால் சராசரிப் பெண்களின் நிலை என்ன?"

உங்களின் அன்பு மகளுக்காக நகையும் விலை உயர்ந்த ஆடைகளும் வாங்கிக் கொண்டே இருக்கிறீர்கள்...

ஆனால் அந்தக்குழந்தை சரியான கழிப்பறை வசதியில்லாத பள்ளியில் நாப்கின் மாற்ற முடியாமல் உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் சொல்லொண்ணா கொடுமையை அநுபவித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா?‘
சட்டங்களை இயற்றும் சட்ட மன்றத்திலும் சரி. அவற்றை நடைமுறைப்படுத்தும் அரசு அலுவலகங்களிலும் சரி. மாதவிடாய் காலத்துப் பெண்களின் தேவையை மனதில் கொண்டு கழிப்பறையில் எந்த வித வசதியும் செய்யப்படவில்லை. அப்படியொரு சிந்தனையும் இல்லை என்கிறார்.
- மாண்புமிகு தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி.
 பயன்படுத்திய நாப்கினை டாய்லெட்டுக்குள் போடுவதால் டாய்லெட் அடைத்துக்கொள்கிறதுதான்....

ஆனால் பெண்கள் நாப்கினை அப்புறப்படுத்த வேறு வழி என்ன கொடுத்திருக்கிறோம்?
 இந்தியாவில் சுமார் 80% பெண்கள் மாதவிடாய் சமயத்தில் துணியைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாய் அடித்தட்டுப் பெண்கள்.

அதில் தவறொன்றும் இல்லைதான்.

என்றாலும் துணியை ஆண்களுக்குத் தெரியாத வண்ணம் சுத்தப்படுத்தி உலர்த்திப் பயன்படுத்தவேண்டுமே என்ற சமூக நிர்பந்தம் காரணமாய் சரிவர சுத்தப்படுத்தாமலும், சரிவர உலர்த்தாமலும் பயன்படுத்துவதால் அதுவே பெரும்பாலான நோய்கள் வருவதற்கு காரணமாகிவிடுகின்றது.
"துப்புரவுப்பணி என்பதே தாழ்த்தப்பட்டவர்களுக்கான பணி"- என்ற சமுதாயத்தின் ஆதிக்க எண்ணமும் கூட கழிப்பறையில் எந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் நவீன முறையைக் கொண்டுவருவதற்கு ஒரு வகையில் தடையாக நிற்கிறது.

அதனாலேயே பெண்களின் அத்தியாவசியத் தேவையான கழிப்பறை சீர்திருத்தமும் தடைப் பட்டு நிற்கிறது.
  "ஜாதிக் கலவரத்தை கட்டுப்படுத்தி பந்தோபஸ்த்து டியூட்டில இருக்கிற பெண் காவலர் படுற சிரமம் மத்த வேலைகளுக்குப் போகும் பெண்களின் சிரமத்தை விட கொடுமையானது.

ரெண்டு ஜாதியில் எந்த ஜாதி வீட்டு டாய்லெட்டை பயன்படுத்தினாலும் அந்த ஜாதிக்குத்தான் காவல்துறை சப்போர்ட் பண்ணுறாங்கன்னு அடுத்த ஜாதிக்காரங்க கம்ப்ளைன்ட் பண்ணுவாங்க"

- திலகவதி ஐபிஎஸ் (ஓய்வு)
 
 "கழிப்பறை/ தண்ணீர் வசதி இல்லாததால் நாப்கின் மாத்த முடியாது. நாப்கின் மாத்த முடியாததால் சிறு நீர் கழிக்க முடியாது. சிறு நீர் கழிக்க முடியாததால் பகல் முழுக்க தண்ணீர் குடிக்க மாட்டோம்....தண்ணீர் குடிக்க முடியாது என்பதால் நாள் முழுக்க சாப்பிடவும் மாட்டோம்."

உங்கள் குழந்தைகள் மதியம் சாப்பிடாமல் டிபன்பாக்ஸை அப்படியே வீட்டுக்கு திரும்பக் கொண்டு வரும் போது, அதற்குள் இப்படியும் ஒரு காரணம் இருக்குமென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரு ஓரங்களில் வசிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வறுமை காரணமாய் நாப்கினோ- துணியோ பயன்படுத்தும் வசதி இருக்காது.

சுத்தப்படுத்திக் கொள்ளவும் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

இதன் காரணமாய் தொற்றும், சமயங்களில் கர்ப்பைப்பை புற்று நோய் நேரவும் இந்த சுத்தமின்மை காரணமாகிவிடுகிறது.
மகப்பேறு, குழந்தை வளர்ப்பு என்ற வரிசையில் மாதவிடாய் என்பதையும் "பொம்பளைங்க சமாச்சாரம்" என்று விலகியும், விலக்கியும் வைப்பது ஆண்களுக்கு வழக்கமாய் இருக்கிறது.

ஆனால் இது ஆண்மைக்கான அழகல்ல.

மேற் சொன்ன அனைத்து காரியத்திலும் ஆணுக்கும் பொறுப்பு உண்டு.

இதனால்த்தான் "மாதவிடாய்"- ஆவணப்படமும் பெண்களால் உருவாக்கப்பட்ட ஆண்களுக்கான படமாய் அமைந்தது.

எப்படியோ, இதற்கான அழைப்பிதழில் அந்த முக்கிய சங்கதி விட்டுப் போனதை இப்போதுதான் கவனித்தோம்.

எனவே " ஆண்களுக்கான பெண்களின் படம்", " A film by Women for Men" என்ற திருத்தத்தை உள்ளடக்கி அழைப்பிதழை மீண்டும் முன்வைக்கிறார் இளங்கோவன்..
இந்த ஆவணப்படம் வெற்றியடைந்து பல விருதுகளை பெறும் அதை விட இதைப் பார்த்து விழிப்புணர்வால் இந்த இயற்கை குருதியில் இருந்து சுகாதரமாக தன் மனைவியை கணவன்மார்கள் பாதுகாத்துக்கொண்டால்
அது தான் மிகப்பெரிய விருது...

Wednesday, December 5, 2012

அஞ்சறைப்பெட்டி 06/12/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
காவிரி நீர் தமிழக மக்களுக்கு கானல் நீராகவே போகின்றது.. இந்த உலகில் தமிழனுக்கு உதவுபவன் எவனும் என்று தான் சொல்ல வேண்டும் போல.. மத்திய அரசில் இருந்து நீதியரசர்கள் வரை எல்லோர் கேட்டும் இன்னும் தண்ணீர் வரவில்லை என்பது தான் நிதர்சனம்..

முன்னேயே பின்னால் என்ன வேண்டும் என்று யோசித்து பல திட்டங்களை தீட்டி இருந்தால் இன்று தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் அடுத்தவர்களை கையேந்த வேண்டிய நிலை நிச்சயம் இருக்காது...

  ................................................................

 
 
தமிழகத்தில் எந்த ஊரில் சாலைகள் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் என்று கேட்டால் நிறைய பேர் நிறைய இடங்களை சொல்வார்கள் ஈோடு மாவட்டத்துக்காரர்களை கேட்டால் யோசிக்காமல் கபிசெட்டிபாளையம் என்பார்கள் கோபியிலும் கோபியை சுற்றி செல்லும் சாலைகள் மற்றும் அங்குள்ள வீதிகளிலும் அனைத்து சாலைகளும் நேர்த்தியாகவும் இது நம்ம ஊர்தானா என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. 
 
ோபி சத்தி மெயின்ரோடு நல்ல அகலமாகவும் அந்த அளவிற்கு தரமானதாகவும் இருக்கின்றது கபியில் இருந்து சத்திக்கு 25 நிமிடத்தில் சென்று விடலாம் அந்த அளவிற்கு தரமானதாக உள்ளது. இதே போல் தமிழகம் எங்கும் சாலைகள் இருந்தால் பயணாளிகளாகிய நமக்கு இதை விட வேறு என்ன சந்ோசம் இருக்கும்.
 
..........................................................................................

சமீபத்தில் நடந்த என்கவுண்டருக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம் ஆனால் ஒருவரின் உயிரை எடுப்பதற்கு அதிகாரம் நம் கையில் இல்லை மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதியையே நாம் நான்கு வருடங்கள் குற்றங்கள் உண்மையாக நிருபனம் ஆன பின் தான் தூக்கிலிட்டோம்... ஒருவரின் தவறுக்கு மரணம் தான் தண்டணை என்பதை என் மனம் ஏற்கவில்லை...
................................................................................................

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு இதை நாம் என்ன தான் எதிர்த்தாலும் நிச்சயம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசும் அதன் கூட்டணி கட்சிகளும் முடிவு செய்தாச்சு இதைப்பற்றி கருத்து சொல்லி என்ன பயன்... எல்லாம் நம் தலை விதி என்று இதையும் கடக்க வேண்டியது தான்...


...............................................................................................

இந்த செல்போன் கம்பெனிக்காரனுக மாதிரி யாரும் கொள்ளை அடிக்க முடியாது. கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்லும் போது சிக்னல் எல்லாம் தானாகவே ரோமிங்காக மாறிவிடுகிறது அதற்கு இன்கம்மிங் ஒரு கட்டணம் அவுட்கோயிங் ஒரு கட்டணம் என்று பிடுங்குகிறார்கள். மொபைலில் நெட் வேலை செய்யவில்லை என்று போன் செய்து கேட்டால் சார் இங்க ஆக்டிவ் ஆகவேண்டு மெனில் என லொட்டு, லொசுக்கு என ஒவ்வொரு கட்டணமாக உயர்த்துகின்றனர்... ஏற்கனவே நம்மகிட்ட நிறைய பிடுங்குகின்றனர் இதில் ரோமிங் போய்ட்டோம்ம சொத்தை எழுதி கொடுத்துட்டுத்தான் வரனும் போல...

...............................................................................................

செய்தித்தாளில் மற்றும் பல கிராமப்புறங்களில் தான் சாதி பற்றிய செய்திகள் இருக்கும் என்றால் இப்போதெல்லாம் பேஸ்புக்கிலும் சாதி தீ கொழுந்து விட்டு எரிகிறது. அதற்கு லைக் கமெண்ட் போட்டு அடிச்சிக்க தனி கூட்டமே இருக்கிறது... எங்கே போய் முடியுமோ...


...............................................................................................

வைகோவிடம் இருந்து மீண்டும் ஒருவர் வெளியேறி மாற்றுக்கட்சியில் தஞ்சம் இதுவரை வெளியேறியவர்கள் எல்லாம் தாய்க்கழகத்திற்கு சென்றனர் ஆனால் தற்போது வெளியேறிய நாஞ்சில் சம்பத் மட்டும் அதிமுகவிற்கு தாவிஉள்ளார். இப்போது தான் அரசியல்வாதி ஆகி உள்ளார்.  வைகோவிடம் மீதி உள்ள நபர் என்றால் அது கணேசமூர்த்தியாகத்தான் இருக்கும் கூட இருந்த னைவரும் சென்று விட்டனர் இனி மீதி இருப்பவர்களையாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற அரசியல் இல்லாமல் இருக்கிறார். இனி இவர் கட்சியை நிறுத்தி வெற்றி பெற்று தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிப்பெதெல்லாம் நடந்தால் அதிசியம் தான். ோராட்ட குணம் உள்ளருக்கு அரசியல் குணம் இல்லாது போனது வருத்தம் தான்..
 
...............................................................................................

இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயதான உதவி ஆசிரியை, தனது மாணவர்களுக்கு கேஎப்சிக்கு கூட்டிச் சென்று சிக்கன் வாங்கிக் கொடுத்து, இன்ன பிற உணவுகளை வாங்கிக் கொடுத்து அவர்களைத் தாஜா செய்து பின்னர் செக்ஸ் வைத்துக் கொண்டு தற்போது சிக்கியுள்ளார்.

வகுப்பு இல்லாத சமயங்களில் இந்த மாணவர்களுடன் அவர் செக்ஸ உறவு கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவரது பெயர் எம்மா வெப். திருமணமானவர். தான் விரும்பிய மாணவர்களுக்கு முதலில் செக்ஸியான எஸ்எம்எஸ்களை அனுப்பி வலையில் இழுப்பார். பின்னர் அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை வாங்கிக் கொடுத்து பின்னர் வீட்டுக்குக் கூட்டி்ச சென்று செக்ஸ் வைத்துக் கொள்வார்.

2 குழந்தைகளுக்குத் தாயான இவர், ஒருமுறை ஒரு மாணவனிடம் உறவு வைத்துக் கொண்டபோது உனது குழந்தை எனது வயிற்றில் வளருகிறதே என்று கூறி கிண்டலும் அடித்தாராம்.

தகவல்



செவ்வாய் மண்ணில் 'கார்பன்' ..

செவ்வாய் கிரக ஆராய்ச்சில் இன்னும் ஒரு முக்கிய திருப்பமாக அந்த கிரகத்தின் மண்ணில் கார்பன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கை வலுப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பியுள்ள கியூரியாசிட்டி விண்கலத்தின் ஆய்வின் மூலம் இது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இது ஆரம்ப கட்ட கண்டுபிடிப்புதான். இந்த ஆய்வை வைத்து அங்கு உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு உறுதியாக வந்து விட முடியாது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கியூரியாசிட்டி விண்கலமே நடத்திய மண் மாதிரி ஆய்வின்போது, மண்ணில் கார்பன் மூலக்கூறுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கார்பன், உயிரினங்களின் உருவாக்கத்தை நிர்ணயிக்கும் கார்பனா அல்லது வேறு ஏதேனுமா என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளது. மேலும் இந்தக் கார்பன் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டியுள்ளது.

ஒரு வேளை இந்த கார்பன், செவ்வாய் கிரக மண்ணிலேயே இயற்கையாகவே இருந்தது என்றால் நிச்சயம் உயிரினம் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கைக்கு வர முடியும் என்றும் நாசா கூறுகிறது.

உயிரினம் வாழ மொத்தம் மூன்று விஷயங்கள் அவசியம். முதலில் தண்ணீர், சக்தி ஆதாரம் மற்றும் கார்பன். இது போக சல்பர், ஆக்சிஜன், பாஸ்பரஸ், நைட்ரஜன் ஆகியவையும் கூட தேவை.

கடந்த நான்கு மாதமாக செவ்வாய் கிரகத்தில் நிலை கொண்டுள்ள கியூரியாசிட்டி விண்கலம், பல்வேறு வகையான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. அதில் முக்கியக் கண்டுபிடிப்பாக தற்போது கியூரியாசிட்டி போய் இறங்கியுள்ள பகுதியில் ஒரு காலத்தில் அபரிமிதமான தண்ணீர் இருந்தது என்பதுதான்.
மேலும் அங்குள்ள நீர்ப்படுகையில், தாதுக்களும் அடங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக Scribblers என்ற பெயரில் துரை என்பவர் எழுதி வருகிறார். இவருடைய பதிவுகளில் சிறுகதை, தியானம், இலக்கியம் என பல முகுங்களில் பல அற்புதமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.. மீண்டும் மீண்டும் படிக்க தோன்றுகிறது இவரின் சிறுகதை...

http://blog.scribblers.in/

தத்துவம்

பிரச்னைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது.

எதை முடியாது என்று அதிகம் பேர் சொல்கிறார்களோ அதை துணிந்து செய் வெற்றி உனதே....