Wednesday, December 30, 2009

2010ம் வருடமே நீ வருக! வருக!! வருக!!!

மணித்துளிகள் எண்ணப்படுகின்றன 2009 இன்னும் பல மணித்துளிகளில் நமக்கு மறந்துவிடும். இவ்வருடம் நாம் சாதித்தது என்ன? என அசைபோட நேரமில்லை
இதுவரை எது நடந்தாலும் அதை மறந்து விட்டு 2010யை வரவேற்க நான் தயாராகிவிட்டேன். 2010ல் நான் சாதிக்கப்போவது நிறைய இருக்கிறது ஒவ்வொரு முறை நிகழும் போது அன்பு நண்பர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
என் முகம் அறிந்த முகமறியா 
வலைப்பூ நண்பர்களுக்கு 

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...........


Monday, December 28, 2009

நீச்சல் கலை

அலுவலகம் மூன்று நாட்கள் விடுமுறை என்றதும் ஊருக்குப் போவது என்று முடிவெடுத்தேன். எனது கிராமத்திற்கு செல்வது என்று முடிவானதுடன் அங்கு நண்பர்கள் எல்லாம் விடுமுறைக்கு வருகின்றேன் என்றதும் சந்தோஷம் பொங்கியது. வியாழன் இரவு புறப்பட்டு அந்தியூர் மாமா வீட்டிற்கு சென்றேன். வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு எனது கிராமத்திற்கு சென்றேன். மழை பெய்து இருந்தாதால் வழிநெடுக பச்சை பசேல் என நெற்பயிர்களும், மஞ்சள் காடுகளும், வாழை மரங்களும் அழகாக ரசித்துக்கொண்டே சென்றேன் ( அங்க ஹெல்மெட் போடலினா யாரும் பிடிக்கமாட்டாங்களே ). ஊரில் நண்பர்களை சந்திததுவிட்டு அனைவரும் குளிக்கப்போகலாம் என்று முடிவெடுத்து ஆத்துக்குப்போகலாமா இல்லை கிணற்றுக்குப்போகலாமா என முடிவெடுக்கும் போது அனைவரும் கிணற்றுக்குப் போகலாம் என முடிவெடுத்து கிளம்பினோம்.

கிணறு ஒவ்வொரு கிராமத்து இளைஞனும் அவனது சிறுவயதில் நீச்சல் கற்க தந்தையுடனே இல்லை மாமாவுடனோ இல்ல ஊர்ல இருக்கிற அண்ணன்களுடனோ சென்று நீச்சல் பழகி இருப்பார்கள் இன்று நாம் என்ன தான் வளர்ந்து பெரிய ஆள் ஆனாலும் அன்று கற்ற நீச்சல் இன்றும் மறக்காது. சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் கற்பது இவை இரண்டும் ஒரு முறை கற்றால் வாழ்வில் மறக்காத கலைகள் ஆகிவிடும். கிராமத்தில் சைக்கிள் ஓட்டத்தெரியதா ஆட்கள் கூட இருப்பார்கள் ஆனால் நீச்சல் தெரியாத ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நான் எனது 10வயதில் நீச்சல் கற்றேன். எனது ஊர் காவிரி ஆற்றிற்குப் பக்கத்தில் இருந்ததால் ஆற்று நீச்சமும் தெரியும். நான் எப்படி நீச்சல் கற்றேன், நான் எப்படி டைவ் அடிததுப்பழகினேன், ஆற்றீல் எதிர் நீச்சல் எப்படி அடித்தேன், வேகமாக இழுத்துச் செல்லும் தண்ணீரில் எப்படி நீந்தி கரையேறுவது என நினைத்தேன். கிராமத்தில் உள்ளவர்கள் எப்பவுமே தண்ணீரைக்கண்டால் பயமில்லாமல் குதிப்பார்கள் ஆனால் நகரத்தில உள்ளவர்கள் அய்யோ எனக்கு நீச்சல் தெரியாது என்பார்கள். அதுவும் இல்லாமல் உலகில் மிகச்சிறந்த உடற்பயிற்சிகளில் நீச்சல் கலையும் ஒன்று என்று படித்த ஞாபகம். நீச்சல் கலையைப்பற்றிய எனது பதிவு.
நீச்சல் கற்பது எப்படி?
நீச்சல் கற்க நிச்சயமாக நன்கு நீச்சல் தெரிந்த நபர் வேண்டும். அவரின் உதவியுடன் தான் கற்க முடியும். முதலில் அவர் தனது கைகால்களை எவ்வாறு அசைக்கிறார் என பார்க்கவேண்டும். காலும் கையும் தண்ணீருக்குள் இருக்கும் தலைமட்டும் மேலே தூக்கி கை, கால்களை மெதுவாக ஆட்டியபடி மிதப்பார் இதை நன்கு கவனித்துவிட்டு நாம் தண்ணீரில் இறங்க வேண்டும். தண்ணீருக்குள் இறங்குவதற்கு முன் கிராமத்தில் புரடை(சுரைக்காயை ஒரு 2 மாதம் காய வைத்தால் அதற்கு பெயர் புரடை) கட்டுக்கொண்டு இறங்குவார்கள் இப்ப எல்லாம் லாரி டியூப்பில் காற்றை நிரப்பி அதற்குள் அமர்ந்து கொள்கிறார்கள். ஒரு இரண்டு நாட்கள் உதவியுடன் இறங்கினால் மூன்றாம் நாள் தைரியம் வந்து நாமும் மெதுவாக இறங்கி கை, கால்களை அசைக்கும் போது நன்கு நீச்சல் தெரிந்தவர் நமது அரைநான் கயிறை பிடித்துக்கொண்டு பின்னால் வருவார். ஒரு இரண்டு முறை பிடித்து விட்டு மூன்றாவது முறை விட்டு விட்டு பிடிப்பார். அடுத்த நாள் இந்தபக்க சுவரையும் அந்தப்பக்க சுவரையும் பிடித்து செல்ல வேண்டும் இவ்வாறு ஒரு ஒருவாரம் சென்றால் அழகாக நீச்சல் கற்றுக்கொள்ளலாம்.

இந்த வகை நீச்சல் கிணறு, நீச்சல்குளம், ஏரி, கோயில் குளத்திற்கு மட்டுமே பொருந்தும்.

ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது எப்பபொழுதும் தண்ணீர் செல்லும் பக்கமாகதான் செல்ல வேண்டும். எதிர் திசையில் செல்வதை எதிர் நீச்சல் என்பர் இது மிகவும் கடினமான ஒன்று. ஆற்றிற்கும் ஒரு நல்ல அனுபவமிக்க நீச்சல் தெரிந்த நண்பருடன் செல்லவேண்டும். ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது கால்களை விட இரண்டு கைகளில் ஒவ்வவொரு கையையும் முன்புறம் தூக்கி தண்ணீரை பின்னுக்கு கொண்டு வரைவேண்டும் அப்பொழுது நாம் முன்னுக்குச்செல்வோம். கைகளை எந்த அளிவிற்கு வீசுகிறோமோ அந்த அளவிற்கு நாம் முன்னிற்குச் செல்லலாம். ஆற்று நீச்சல் கற்க குறைந்தது 15 நாட்கள் ஆகும். கைகளை வீசும் போது சுழல் இருந்தாலும் நாம் எளிதாக தப்பிக்கலாம். கடல் நீச்சல் பற்றி நான் இப்பபோது தான் விபரம் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
நீச்சலின் பயன்கள் :
1. நீச்சல் என்பது ஒரு வகையான கலை மட்டும்லல நல்ல உடற்பயிச்சியும் தான்.
2. தினமும் 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் உள்ள ஊளைச் சதைகள் குறையும்.
3. கை, கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும்.
4. நன்கு பசி எடுக்கும். கை, காலை குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
5. இரத்த ஓட்டம் சீராகிறது.
6. நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.
7. நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.
8. சிறந்த முதலுதவிக்கலையாகவும், தற்காப்புக்கலையாகவும் விளங்குகிறது.
9. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க நீச்சல் உதவுகிறது.
10. ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப்பகுதிகளும் இயங்குகிறது

எனது வேண்டுகோள் :
குழந்தைகள் படிக்கும்போது பள்ளிகளில் நீச்சல் கட்டாயப்பாடமாக்கவேண்டும். இல்லையேல் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கண்டிப்பாக கற்றுத்தரவேண்டும்.
நோயற்ற சமுதாயத்தை உருவாக்க நீச்சல் கலையும் உதவும்.

Wednesday, December 23, 2009

விகடனின் வரவேற்பரையில் சங்கவி.....

இன்று காலை நண்பர் தண்டோ..ரா அவர்கள் என்னை அழைத்தார். நண்பரே இந்த வார விகடன் (30.12.2009) வரவேற்பரையில் உமது வலைப்பூவை வரவேற்று இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் என்றார். சந்தோஷத்தில் மனது குளிர்ந்தது (ஏற்கனவே மார்கழி குளிர் வேற) நான் விகடனை கடந்த 10 வருடங்களாக வாசித்து வருகிறேன் எப்பவும் சனிக்கிழமை தான் வாங்குவேன் இன்று நண்பர் கூறியதும் உடனே வாங்கி படித்துவிட்டு என் மனைவியிடம் கூறி வாழ்த்துப்பெற்றேன்.



 நன்றி! நன்றி !! நன்றி !!!

வலைச்சரத்தில் என்னை முதலில் அறிமுகப்படுத்திய நண்பர் தண்டோ..ரா

எனக்கு Health conscious விருது கொடுத்த நண்பர் மோகன்குமார்

பதிவர் சங்கமம் நடத்திய ஈரோடு பதிவர் சங்கமம்

ஈரோடு பதிவார் சங்கமத்தில் என்னை வரவேற்று பதிவர்களிடம் அறிமுகப்படுத்திய ஈரோடு கதிர், பாலாசி

வலைப்பதிவில் கொலஸ்டிராலைப்பற்றி எழுத எனக்கு பல தகவல்கள் தந்த நண்பர் கார்த்திகேயனுக்கும்

வலைப்பூவில் எப்படி எழுதவேண்டும் எதை எழுதவேண்டும் என எனக்கு ஆலோசனை வழங்கிய நண்பர் பட்டர்பிளை சூர்யா

விகடன் வரவேற்பரையில் படித்ததும் எனக்கு வலைப்பூவில் உடனே வாழ்த்துச்சொன்ன பரிசல்காரன்

நான் வலைப்பூவிற்கு வந்து மூன்றே மாதங்களில் என்னை
ஆனந்த விகடன் வரவேற்பரையில்
அறிமுகப்படுத்தி ஆனந்த விகடனுக்கும் மற்றும்
எனது வலைப்பூவிற்கு வந்து படித்த எனக்கு பின்னூட்டம் எழுதி என்னை செம்மைப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது

கோடான கோடி நன்றிகள்...

Tuesday, December 22, 2009

வாழைப்பழம் சாப்பிடுங்கள்.....நலமுடன் வாழுங்கள்...



நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் போது கடவுளுக்கு படைக்கப்படும் பொருட்களில் வாழைப்பழம் முக்கியமானது. வீட்டில் எந்த விசேசமானலும் நமது இலையில் நிச்சயம் வாழைப்பழம் இருக்கும்.  நமது முன்னோர்கள் கூறிய முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம், பல மருத்துவ குணங்களைக்கொண்டது வாழைப்பழம், நமது சமூகத்தில் வாழைப்பழம் 100ல் 99 பேர் உயயோகப்படுத்துகிறோம். வாழைப்பழத்தின் வகைகள், அதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்களை நான் தெரிந்து கொண்டதை இப்பதிவின் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

 வாழைப்பழம் :
 வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது. கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள், மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க, இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது.
கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போது வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எல்லாப் பழங்களும் பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளிப்படுத்தும். வாழையில் அதிகமாக இருக்கும்.



வாழைப்பழ வகைகள்
செவ்வாழை
ரஸ்தாளி
கற்பூரவல்லி
பேயன்
பச்சைநாடன்
பூவன்
மொந்தன்
கதலி
நவரன்
குணங்கள்:
வாழை ஒரு மரமில்லாத மரம். மற்ற மரங்களுக்கு இருப்பதைப் போன்று கனத்த கெட்டியான அடிமரமோ, கிளைகளோ கிடையாது. 8௰ அடி உயரத்தில் மரம்போல் வளர்ந்தாலும் அதன் அடிமரம் அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகளாலானது. பலமாக காற்றடித்தாலும் மளுக்கென்று ஒடிந்து விடக் கூடியது. இந்தத் தண்டு பத்து அடி வரை வளர்ந்து 100 லிருந்து 150 பழங்கள் கொண்ட வாழைத் தாரையே தாங்கும் பலம் பெற்றிருப்பது எப்படி என்பது இயற்கையின் விந்தை.
இலைகள் நீண்டு பெரிதாக இருப்பதால் பழங்குடியினர் இதை வீட்டுக்கு கூரையாகவும், குடையாகவும் கூட உபயோகிக்கின்றனர். ஒரு மரம் ஒரு முறைதான் பழம் தரும். ஒரு சீப்பை கை என்றும், தனியாக ஒரு பழத்தை விரல் என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். பல அடுக்கு சீப்புகள் கொண்டது ஒரு குலை. வாழைச் சீப்பு எப்போதும் மேல் நோக்கியே இருக்கும். வீட்டிலும் அதை அப்படியே வைத்தால்தான் கெடாமல் இருக்கும்.


வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி  இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.
வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்:
* இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும்.
* செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது.
* பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும்.
* மலைவாழை சோகையை நீக்கும்.
* பேயன் வாழை குடற்புண் தீர்க்கும்.
* நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

* வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது.
* “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது.
* உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும். மூளையில் “செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது. 
* வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். மூளைக்கு வலுவூட்டும்.
* தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை நீங்கும்
* பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும்.
* இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும்.
* சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும்.
* கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும். உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.

* தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும்.
* தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.


வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டியவர்கள் :
கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும்,நீரழிவு நோய் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும்.

Sunday, December 20, 2009

ஈரோட்டில் வலைப்பதிவர்களின் அட்டகாசமான ஆரம்பம்.......


நிகழ்ச்சி நடந்த இடம்

ஈரோட்டில் வலைப்பதிவர் சங்கமம் என சொன்னதுமே நானும் கலந்துக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனால் நமக்கு யாரையும் தெரியாது எனது சொந்த முயற்சியிலே நான் வலைப்பதிவை தொடங்கினேன். கதிர் சாரின் வாசகன் நான் ஆனால் அவரை தெரியாது, அவர் ஈரோடு நண்பர்கள் பலரது பெயரை கொடுத்து இருந்தார். அதில் இருக்கும் நண்பர்களில்
எனது வலைப்பதிவிற்கு அடிக்கடி வருபவர் நண்பர் பாலசி அவரைத் தொடர்பு கொண்டேன். அதற்கடுத்து வலைப்பதிவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தியவர் நண்பர் தண்டேரா அவரை தொடர்பு
கொண்டேன் நாங்களும் சென்னையில் இருந்து வருகிறோம் என்றார். நமக்கு தொலைபேசியிலேயே ஒரு வட்டம் கிடைத்துவிட்டது இனி தயக்கம் இன்றி செல்லாம் என முடிவு செய்து கதிர் சாரை தொடர்பு கொண்டு வருவதை உறுதி செய்தேன்.
                                                    இங்கதாங்க தங்கியிருந்தாங்க.........


ஞாயிறு காலை நண்பர் தண்டேராவை தொடர்பு கொண்டேன். அவர் நாங்கெல்லாம் ரூம் போட்டு குளிச்சுகிட்டு (தண்ணீல) இருக்கிறோம் நீங்களும் வாங்க என்றார். நானும் முகம் அறியா நண்பர்கள் அனைவரையும் கானும் ஆவலுடன் அந்தியூரில் இருந்து பஸ் ஏறினேன். வழியெங்கும் ஒரே யோசனை நாம இப்பதான் வலைப்பதிவே ஆரம்பித்து இருக்கிறோம் அங்க இருக்கும் நண்பர்கள் எல்லாம் வலைப்பதிவில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் நாம எப்படி பேசுவோம் என்றென்னியவாறு அந்தியூரில் இருந்து பவானி செல்லும் வழியில் வழியெங்கும் பச்சை பசேல் என நெற்பயிர்களை ரசித்து
விட்டு யோசித்துக் கொண்டு சென்றேன். ஒரு 45 நிமிடத்திற்குப்பின் ஈரோட்டை அடைந்தேன்.

நண்பர்கள் தங்கியிருந்த ராஜேஸ்வரி விடுதியில் நம்மாளுங்க எங்க தங்கியிருப்பாங்கன்னு போன அங்க உள்ள போனதும் ஓரே கூச்சலா இருந்தது உடனே முடிவு செய்தேன் இதுதாண்டா நம்மாளுங்க ரூம்னு உள்ளே சென்றால் நண்பர் தண்டோரா வாங்கன்னு சொல்லி நண்பர்களை அறிமுகப்படுத்தினார். அப்ப ஒரு நண்பர் சிங்கிள் பீஸ் டிரஸ்ல நடந்துகிட்டே இருந்தார் (கொஞ்ச ஓவரா போய்ருச்சுன்னு நண்பர்கள் சொன்னாங்க) அவர் யாருன்னு பார்த்த பின்னாடி வால் இருந்துச்சு ஓ இவர் தான் அவரான்னு கேட்ட அமாங்க நான் தான்னு சொன்னார். புதுகை அப்துல்லா, அகநாழிகை வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா மற்றும் நண்பர்கள் இருந்தனர். பாத்ரூம்ல குளிக்கறங்கற பேர்ல ஓரே சத்தம் யாருன்னு கேட்டா யூத்ன்னு சொன்னாங்க... அப்புறம் 2 நிமிடத்தில் வெளியே வந்துட்டார் (குளிச்சிட்டராமா). உண்மையிலயே அவருடைய பேச்சாலும் எண்ணத்தாலும் யூத்தாத்தாங்க இருந்தார் நம்ம கேபிள் ஜீ...

வா...வா....வந்துட்டங்க............

நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டார்கள் எல்லாம் போகலாம்னு புறப்பட்டா வாலு சிங்கிள் பீஸ்ல இருந்து மாறவே இல்லை. ஒரு வழியா நிகழ்ச்சிக்கு வந்தோம் நண்பர் ஆரூரான் நிகழ்ச்சிகளை அழகாக நடத்திக்கொண்டு இருந்தார். நண்பார்கள் ஒவ்வொருவரும் அறிமுகம் செய்யப்பட்டார்கள். ஒவ்வொரு தலைப்பைக் கொடுத்து நண்பர்கள் பேசினார்கள் இதில் பழமைபேசி தனது கருத்துக்களை அழகாக சொன்னார், நண்பர் பட்டர்பிளை சூர்யா உலக சினிமாவைப்பற்றி பேசும்போது நான் 6 படங்களைப்பார்த்தால் அனைத்தைப்பற்றியும் எழுதுவதில்லை அதில் எது நல்ல படமோ அதைப்பற்றி மட்டுமே எழுதுகிறேன் தேவையில்லாததை எழுதி எனக்கும் டைம் வேஸ்ட் அதை படிக்கும் உங்களுக்கும் டைம் வேஸ்ட் செய்ய விரும்பவில்லை என்று அழகாக கூறினார். அகநாழிகை வாசுதேவன் தனது கருத்துக்களை சுருங்கச் சொன்னாலும் நிறைவான கருத்தை கூறினார்.

 
ஆமர்களம் ஆரம்பிச்சர்சசு............



வெட்டிப்பேச்சு ஆரம்பிச்சாச்சு............


அப்துல்லா  ரொம்ப யோசிக்கிறாரு.........

 

ஆள விட்டாப்போதும்ன்னு நினைக்கிறாரோ.............



இதுக்குப்பேர் தான் போஸ் கொடுக்கறது..............

கதிர் அவர்கள் கலந்தாய்வுக்கூட்டத்தை நடத்தினார். அக்கூட்ட்திற்குப்பின் விழா நிறைவுபெற்று அனைவருக்கும் உணவுகள் பறிமாறப்பட்டது. பல நண்பர்கள் சாப்பிட்டு விட்டு (சரக்குதான்) அப்புறம் சாப்பிடவந்தனர்.
உணவுகள் கொங்கு மண்ணிற்கே உண்டான சுவையில் நன்றாக இருந்ததது நான் என்ன சாப்பிட்டேன்னா இட்லி, புரோட்டா, காளிபிளவர் சில்லி, பிரைடுரைஸ், பள்ளிபாளையம் சிக்கன்,
தயிர்சாதம், முட்டைதோசை, ஆம்லெட் என போட்டுத் தாக்கிட்டு இருந்தேன் அப்போது தான் நண்பர்கள் மதுரை ஸ்ரீ, சீனா, திருப்பூர் வெயிலான், சுமஜ்லா, ரம்யா, நாகா, பழமைபேசி, விட்டலன் மற்றும் பல நண்பர்களிடம்
கலந்துபேசிக்கொண்டு இருந்தேன் (நிறையபேரை விட்டுவிட்டேன் கோவிச்சுக்காதீங்க). பல நண்பர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தர்கள் (சரக்குதான்) அங்க சென்று நண்பர்களிடம் விடை பெற்றுக்
கொண்டு இருந்தேன் அப்ப நம்ம யூத்து புல்லா வந்து ஒரு சின்ன ஆட்டம் போட்டார், நம்ம வால் முத்தம் கொடுத்து வழியனுப்பினார் எல்லோரிடமும் விடை பெற்று நண்பர் பாலாசி பஸ்நிலையத்தில் இறக்கி விட்டார் அங்க நம்ம மதுரை நண்பர்கள் அவர்களிடம் பேசிகிட்டே ஈரோடு பேருந்து நிலையம் சென்று பிரியமனமில்லாமல் பிரிந்து எங்க ஊர் பஸ் ஏறினேன். நமக்கு முகமறியா நண்பர்கள் இவ்வளவு பேரா அனைவரும் என்ன உதவி என்றாலும் கேளுங்க என்னால் முடிந்த அளவு உதவுகிறேன் என்று சொன்னவிதம், ஏதோ குழந்தையில் இருந்து பழகியவாறு அனைவரையும் கதிர் சார் வரவேற்ற விதம்,
நண்பர் தண்டோரா மற்றும் புதுகை அப்துல்லாவின் அழகான அன்பு வார்த்தைகள், வால்பையன் அடித்த லூட்டிகள் அனைத்தும் மறக்கமுடியாமல் இரவு முழுவதும் அந்த நினைவலையிலேயே உறங்கினேன் கலை முதல் இக்கட்டுரையை பதிவேதே எனது முதல் வேளையானது....
நிறைய பேரை விட்டுவிட்டேன் கோவித்துக்கொள்ளாதீர்கள், நிறைய விஷயங்களையும் விட்டுவிட்டேன் அதை எல்லாம் மற்ற பதிவார்கள் போட்டு விடுவார்கள் படித்துக்குங்க.. இக்கட்டுரை ரொம்ப போர் அடிச்சுருந்தா கோவிச்சுக்காம படிச்சதற்கு ரொம்ப நன்றி......
இச்சந்திப்பை இவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும் நடத்திய ஈரோடு பதிவர் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


நண்பர்கள் போட்டாவில் சின்ன சின்ன கமெண்ட்ஸ் போட்டு இருக்கிறேன்.. ஏதாவது தவறாக இருந்தால் கோவிச்சுக்காதீங்க நண்பர்களே...........

Thursday, December 17, 2009

மார்கழி மாத கோலமும்........ சங்கவியும்.....



நேற்று காலை 5 மணிக்கு எல்லாம் வீட்டு அலாரம் அடித்தது என்னடா இன்றைக்கு நடுராத்திரில அலாரம் அடிக்குதுன்னு ஆப் பண்ணீட்டு தூங்கிட்டேன். அப்புறம் விடியற்காலை ஒரு 7.30 மணிக்கு மாடியில் இருந்து பார்த்தால் வீதி எங்கும் கோலம். என் வீட்டு முன்னாடியும் ஒரு அழகான கோலம் யார் போட்டதுன்னு கேட்டா என் மனைவி நாந்தான்னு ஒரு அழகான சிரிப்பு (பொய்தான்). அப்புறம் சொன்னாங்க இன்னிக்கு மார்கழி 1.

இந்த மாசம் முழுவதும் நாம நேரத்தில எழுந்து குளிச்சு வாசல்ல கோலம் போட்டுவிட்டு கோயிலுக்கும் போகனும் இன்னிக்கு முதல் நாள் அதனால வேலைக்குப்போய்ட்டு வந்து சாயங்காலம் போகலம் (இந்த மாசம் என் தூக்கம் போச்சு). அப்புறம் மனைவிய வேலைக்கு அனுப்ப வண்டி எடுத்தா
கோலம் கஷ்டப்பட்டு போட்டு இருக்கிறேன் பார்த்து அழிச்சராதீங்கன்னு ஒரு குட்டு வேற. சரிம்மான்னு வண்டி எடுத்துட்டுப்போனா வீதி எல்லாம் அழகான கோலங்கள். ஏன் இந்த மாதம் எல்லாரும் கோலம் போடறாங்க, கோலத்தில் எத்தனை வகை இருக்கும்ன்னு ஒரு அலசு அலசி நான் தெரிஞ்சுகிட்டத உங்களுக்கும் சொல்லலாம்னு முடிவு பண்டி ஒரு பதிவாக்கிட்டேன்.

நான் ஆபிஸ் வருவதற்கு வண்டிய எடுக்கப்போகும் போது பக்கத்து வீட்டு மாமி கோலத்தை ரசிச்சுகிட்டு இருந்தாங்க அப்ப மாமியக்கேட்டேன் மாமி கோலம்னா என்ன? மாமி சொன்னாங்க கோலம்னா ஒரு பொதுவான தோற்றம் இல்லைன்னா வடிவம்னு சொன்னங்க ஒகே மாமின்னு வந்துட்டேன். அப்புறம் கோலத்தை பற்றி விசாரிச்சா பல தகவல்கள்.





மார்கழி மாதங்களில் இன்றும் அதிகாலையில் எழுந்து பனி விலகும் முன்னே குளித்து வீதியில் பஜனை பாடிக்கொண்டே நடப்பவர்கள் இருக்கிறார்கள். வண்ணக் கோலங்கள் வீதியை நிரப்பும்.

பக்தியைப் பார்க்காமல் நடைமுறையில் விளையும் நன்மை குறித்தது மட்டுமான காரணம் குறித்த வகையில் யோசித்தால், மார்கழி மாதம் குளிர் ஆரம்பித்து விடும். மார்கழிக் குளிர் மச்சியைத் துளைக்கும், தை மாதக் குளிர் தரையைத் துளைக்கும் என்பர். குளிரென்றால் காலையில் எழுவதற்கு சோம்பல். தாமதமாக எழுந்தாலோ அன்றாடப் பணிகளில் தாமதம். அதனால் சோர்வு. மனக்கிலேசம்.

இதை முறியடிக்கவே அதிகாலைக் குளியல். புத்துணர்ச்சி பூத்து சோம்பலைத் தூக்கியடித்துவிடும். வீட்டிற்கு வெளியே நடக்க வர ஓஸோன் வாயுவின் அருமை நுரையீரலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். மனதைத் தூய்மைப்படுத்தும். கோலமும், பாடலும் மனதை ஒருமைப்படுத்தி உணர்வுகளைச் சமனப்படுத்தும். நடைப்பயிற்சியோ இன்னும் தேக ஆரோக்கியம் தரும் என அறிந்தேன்.

கோலமிடுவது எப்படி? என்ன வேண்டும்?

நம்ம ஊர்ல கோலங்கள் அரிசிமா, முருகைக்கற்பொடி போன்ற வெண்ணிற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன. வீட்டுக்கு வெளியே மண்தரையாயின், நீர் தெளித்துப் புழுதி அடக்கப்படும். பின்னர் பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து, விரல்கள் நிலத்தில் படாமல், நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்து, ஏற்கெனவே எண்ணியபடியான வடிவம் கிடைக்கும் வகையில், பொடியைத் தூவிச் செல்வார்கள். பசுச் சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவதாயின், சிலவேளைகளில் அரிசியை நீர்விட்டுப் பசைபோல் அரைத்துப் பின்னர் வேண்டிய அளவு நீர் விட்டுக் கரைத்து, அதை ஒரு துணியில் தோய்த்துக்கொண்டு விரல்களுக்கிடையே மெதுவாக வைத்து அழுத்த விரல்களில் வடியும் மாக்கரைசலினால் பேனாவால் வரைவதுபோல் கோலம் வரையலாம். காய்ந்த பின்னர் இது நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடியது.

கோலத்தில் நிறைய வகைகள் இருக்கிறது ஆனால் நம்ம ஊர்ல அதிகமா வரையறது.
1. புள்ளிக்கோலம்
2. ரங்கோலி(கலர் பொடியில் வரைவது)

இதில் புள்ளிக்கோலம் தினமும், ரங்கோலி கோலம் விஷேச நாட்களில் வரைவார்கள். எப்பொழுது வரைந்தாலும் கோலத்தின் அழகே அழகு......
கோலம் வரைதல் ஒரு யோகசனமாம் மற்றும் பெண்களுக்கு நல்ல உடற்பயிற்ச்சி என்றும் அறிந்தேன்.

கோலத்தைப்பற்றிய தகவல்கள் நிறைய இருக்கும் என நினைக்கிறேன் இருந்தால் நீங்களும் சொல்லுங்களேன்...

Wednesday, December 16, 2009

வாங்க நாமும் கொலஸ்டிராலை கட்டுப்படுத்தலாம்...... எப்படி?




இன்றைய உலகில் நாம் எல்லாம் படிப்பதற்கும், பணம் சம்பாதிக்கவுமே நமக்கு நேரம் செலவாகிறது. வாரத்தில் 5 நாட்களில் இதற்காகவே செலவிடுகிறோம். வார இறுதி நாட்களில் நன்றாக சாப்பிட்டுவிட்டு டிவி பார்ப்பது தான் வேலை. இப்படி இருந்தால் நமக்கு நிறைய நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது ஆனால் உடல் பருமன் உடனடியாக வந்து விடுகிறது ஏன்னா நமக்கு உணவுக்கட்டுப்பாடும் இல்லை, உடற்பயிற்சியும் இல்லை இது தான் இன்றைய இளையதலைமுறையின் நடைமுறை.

போன வார விடுமுறையில் நண்பன் சரியாக ஜீரணம் ஆவது இல்லை வா டாக்டரிடம் போகலாம் என்று அழைத்தான் நான் சனிக்கிழமை டாக்டர் 2 மணிக்கு சென்று விடுவார் அப்பாயிண்மெண்ட் வாங்கு என்று சொல்லி கோவையின் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று அப்பாயிண்மெண்ட் வாங்கிவிட்டு ஒரு 12 மணி அளவில் சென்றோம். 1 மணி நேர காத்திருப்பிற்குப்பின் உள்ளே சென்றால் டாக்டர் செக் செய்து விட்டு சரியான உடற்பயிற்சி இல்லை கொலஸ்டிரால் அதிகமாக இருக்கிறது இந்த இளம் வயதில் இதை எல்லாம் குறைக்கவேண்டும் என ஒரு பட்டியலே கொடுத்தார். நண்பனை அனுப்பி விட்டு வீட்டில் வந்து யோசித்தேன் கொலஸ்டிரால்னா என்ன அது ஏன்? எதனால்? எதற்காக? வருகிறது என்று விசாரித்தேன் நான் தெரிந்து கொண்டதை உங்களுக்கும் தெரிவிக்கலாம் என்று தான் இந்தப்பதிவு.....





உடல் பருமன் :

நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள்
தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்டிரால்ல நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு இதைதாங்க எழுதியிருக்கேன் படியுங்க எனக்கு தெரிந்த அளவு நான் படித்த அளவு எழுதியிருக்கிறேன் பின்னூட்டத்தில் உங்க விமர்ச்சனத்தை சொல்லுங்க.

கொலஸ்ட்ரால்:

கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது. இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. உடலானது தேவையான அளவு கொலஸ்டிராலினை உற்பத்தி செய்கிறது. எனவே வேறு கொலஸ்டிரால் உடைய உணவை உண்ணாமல் இருந்தால் நல்லது. ஆனால் உணவில், கொலஸ்டிராலை முழுமையாக தவிர்ப்பதென்பது கடினமானமாகும். ஏனெனில் பல உணவுகள் இதனை தன்னுள் கொண்டுள்ளன. உடலில் அதிகளவு கொலஸ்டிரால் என்பது இதய நோய்கள் போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பல காரணிகள் உயர் அளவு கொலஸ்டிரால் ஏற்பட பங்களிக்கிறது, ஆனால் சில செயல்கள் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.

  • கொலஸ்டிரால் அளவு உங்கள் உடலில் உள்ள எச்டிஎல் கொலஸ்டிரால் அளவு (நல்ல கொலஸ்டிரால்) மற்றும் எல்டிஎல் கொலஸ்டிரால் அளவு (கெட்ட கொலஸ்டிரால்) களை பொறுத்துள்ளது. எல்டிஎல் கொலஸ்டிராலைவிட எச்டிஎல் கொலஸ்டிரால் உடலில் அதிகளவு இருப்பது உடலில் உள்ள சுகாதாரமான கொலஸ்டிரால் அளவை பேண மிக முக்கியமாகும்.
  • உடலில் நல்ல கொலஸ்டிராலலின் அளவை அதிகரிக்க, உங்கள் உணவில் எந்த வகையான கொழுப்புகள் உள்ளன என்பதனை கவணியுங்கள், குறிப்பாக ட்ரான்ஸ் பாட் (அன்சாச்சுரேட்டெட் பாட்) டினை தவிர்ப்பது நல்ல வழியாகும்.

  • இதய இரத்தநாள பயிர்ச்சிகளை ஒழுங்காக செய்வது, உணவில் குறைந்த அளவு கொலஸ்டிராலினை எடுத்துக்கொள்வது மற்றும் புகைக்காமல் இருப்பது போன்றவை உடலில் கெட்ட கொலஸ்டிரால் சேர்வதை அகற்றும் பிறவழிகளாகும்.
கொலஸ்டிரால் உள்ளவர்கள் எதை சாப்பிடலாம் எதை தவிர்க்கலாம் :

  • வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள். மொனொ அன்ஸேச்சுரேடெட் எண்ணெய் மற்றும் பாலி அன்ஸேச்சுரேடெட் எண்ணெய்கள், சமையலில் உபயோகிக்க
    வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.
  • கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெயிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.
  • பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.
  • ஒலிவ எண்ணெய் (ஜைத்தூன் எண்ணெய்) யில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ்(antioxidants) உள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. FDA பரிந்துரைப் படி தினமும் 2 மேஜைக்கரண்டி (23 Gram) ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு மிக நல்லதாம்.
  • தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையை குறைக்கிறது என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
    தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இதை தொடக்கூடாது என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது.
    தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் Capric Acid,மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் போதிய அளவு தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம்.
  • எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்டைஸ்டு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.
  • அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் அதிகம் உள்ளது.
  • முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம்.ஆனால் முட்டையை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.
  • அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.
  • கொட்டை வகைகள்: முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.
  • வால் நட்டில் அதிக அளவு பாலி அன் சேச்சுரேட்டட் அமிலக் கொழுப்பு உள்ளது. இது கொலெஸ்ட்ராலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. பாதாமும் இதைப் போல் குணமுடையது
  • பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.
  • ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்
  • எண்ணெயில் பொரித்துண்ணும் உணவுகளை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்ததோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.
  • கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk), வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.
  • டோனட்ஸ் (Dough nuts), மஃப்பின்ஸ்(muffins) போன்ற pastry பாஸ்ட்ரி வகை துரித உணவு(fast food)களைத் தவிர்க்க வேண்டும்.
  • பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.
  • வெண்ணையைத் தவிர்த்து, திரவ நிலையிலான மார்கரின் பயன்படுத்தலாம்.
  • உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளவது கூடுதலாக உள்ளக் கொழுப்பு உணவைத் தவிர்க்க உதவும்.
  • இனிப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • நார்ச்சத்து காய்கறிகள்: நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.
  • ஓட்ஸில்(Oatmeal) கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது .இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கிறது.கிட்னி பீன்ஸ், ஆப்பிள், பியர்ஸ், பார்லி போன்றவற்றிலும் இத்தகை கரைக்கூடிய நார் சத்து அதிகம் உள்ளது.
  • வாழைப் பழத்தில் அதிக நார் சத்து உள்ளது -நல்லது
நாம் சாப்பிடும் உணவு வகையில் கொலஸ்டிராலின் அளவு :

* முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) -550 (mg /100gm)
* வெண்ணெய் -250 (mg /100gm)
* சிப்பி மீன் (Oyster)-200 (mg /100gm)
* இறால் (Shrimp)-170 (mg /100gm)
* மாட்டு இறைச்சி -75 (mg /100gm)
* ஆட்டிறைச்சி (Mutton)-65 (mg /100gm)
* கோழியிறைச்சி-62 (mg /100gm)
* பனீர் (cottage cheese)-15 (mg /100gm)
* ஐஸ் கிரீம்-45 (mg /100gm)
* நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை)-34 (mg /100gm)
* கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை)-5 (mg /100gm)
* பிரெட்-1 (mg /100gm)
* ஸ்போஞ்ச் கேக்-130 (mg /100gm)
* சாக்லேட் பால்-90 (mg /100gm)
நாமும் இதைப்பின்பற்றினால் கொலஸ்டிரால் இல்லாத மனிதனாக வாழ முயற்சிக்கலாமே.......

Sunday, December 13, 2009

ஆரோக்கியமாய் இருக்கவேண்டுமா?...... இதைஎல்லாம் சாப்பிடலாமே........?




எனது அலுவலத்தில் மதியம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம் அன்று எனது தோழிகளும் எங்களுடன் அமர்நது உணவு அருந்தினார்கள்.
அன்று நான் அவரைக்காய் பொறியல், இன்னொரு நண்பர் பாகற்காய், புடலங்காய் பொறியல் இதை எல்லாம் எங்கள் தோழிகள் மூவருக்கும் கொடுத்தோம் அதற்கு அவர்கள் சொன்ன பதில் நாங்க நாட்டுக் காய் எல்லாம் சாப்பிடமாட்டோம் என்றார்கள். வேறு என்னதான் சாப்பிடுவீர்கள் என்றால் இங்கிலீஸ் காய்களான கேரட், பீன்ஸ், பீட்டூட், பட்டாணி, முட்டைகோஸ் தான் சாப்பிடுவார்களாம். என்ன இவர்கள் நாட்டுக்காய்களின் அருமைகளை சொன்னால் இவர்கள் சொன்ன பதில் நாங்க எல்லாம் கான்வென்ட்ல படிச்சோம் அங்க இதேல்லாம் சாப்பிட மாட்டோம் நாங்க அப்ப இருந்து இங்கிலிஸ் காய்கறிதான் சாப்பிடுகிறோம் எங்க வீட்டில் எங்களுக்கு இதுதான் பிடிக்கும்  என்று சொல்லிவிட்டார்களாம் அதனால அவங்க சமைச்சாலும் இவர்களுக்குத் தரமாட்டார்களாம். இப்ப என் தோழிகளுக்கு வயது 24 இவர்களுக்கு இதன் மகத்துவத்தை சொன்னால் யோசிக்கிறார்கள்.
ஐந்தில் வளையதாது ஐம்பதில் வளையுமா இந்த பழமொழிதான் எனக்கு ஞாபகம் வந்தது. கீரை சாப்பிடுவீர்களா என்றால் அவர்களிடம் இருந்து வந்த பதில் ஜயே... எனக்கு அது புடிக்கவே புடிக்காது. அப்புறம் அவர்களுக்கு ஒவ்வொரு மகத்துத்தையும் எடுத்துக்கூறி அப்புறம் ஒரு ஆறு மாதத்தில் கொஞ்சம் சாப்பிட பழகிவிட்டார்கள் அவர்கள் அம்மாவிடம் பேசினால் பரவாயில்லை தம்பி இப்பவாவது சாப்பிடுதுங்களே என்றார்கள்..

இப்ப இருக்குறவங்களே சாப்பிடுவதில்லை இனி அடுத்ததலைமுறையாவது சாப்பிடுமா கேள்விக்கூறியே பதில். எனக்கு இருந்த தோழி போல் எத்தனை நண்பர்கள் நமது காய்கறிகளின் மகத்துவம் தெரியாமல் சாப்பிடாமல் இருக்கிறார்களோ. இது என் நினைவிற்கு வந்தது அதனால் எனக்கு தெரிந்த காய்கறிகளையும் அதன் மகத்துவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன் அதனால் இந்தப்பதிவு...






முருங்கை காய் :

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.


சுரைக்காய் :


சுரைக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இதனால் இது சூட்டைத் தணிக்கும். சிறுநீரைப் பெருக்குவதுடன், உடலை உரமாக்கும். இதுவொரு சிறந்த மலச்சுத்தி காய் ஆகும். தாகத்தை அடக்க வல்லது. கருஞ்சுரைக்காய் என்று ஒரு வகை இருக்கிறது. அது குளுமை செய்வதுடன் தாகத்தை அடக்கும். அத்துடன் சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கி விடும்.

புடலங்காய் :
இது ஒரு சத்துள்ள உணவாகையால் கிடைத்தபோது வாங்கி சமைத்து உண்ணலாம்.மேலும் இது பத்தியத்துக்கு மிகவும் சிறந்த காய். எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த, கபங் களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றைப் போக்கும். வாத, பித்தங்களை அடக்கி வீரிய புஷ்டியைக் கொடுக்கவல்லது. இதனால் ஏற்படும் தீமைக்கு கடுகுப் பொடி, கரம் மசாலா மாற்றhகும்.
இந்தக் காயை உண்டால் காமத்தன்மை பெருகும்

பீர்க்கங்காய் :

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.


வெண்டைக்காய் :

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்;த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.
வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.
வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.
வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்.

அவரைக்காய்:

அவரைக்காயில் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உட்கொள்ளலாம்.
இதைச் சமைத்து சாப்பிட்டால் உடலை உரமாக்கும். காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் ஏற்ற காய் ஆகும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைத் தாராளமாகச் சாப்பிடலாம். அவர்களுக்கு மிகவும் நல்லது.

பயத்தங்காய்:
இது நல்ல உணவுப் பொருள். இதனுடைய சுபாவம் குளிர்ச்சி ஆகும். இந்தக் காய் பசியைத் தூண்டி நீரைப் பெருக்கும். கபத்தை அகற்றும். காற்றை நீக்கும்.
இதைப் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்தோ, கறி செய்தோ சாப்பிடலாம். சுவையாக இருக்கும். சற்று பிஞ்ஞாக சமைப்பதே நலம்.
ஆனால் ஒரு கண்டிஷன். இந்தக் காயை மருந்து உண்ணும் காலங்களில் கண்டிப்பாக சாப்பிட வேண்டாம்.

காய்கறிகளைவிட கீரைகளில் பசுமைச்சத்து இருப்பதால் பல்வேறு நன்மைகள் வந்தடைகின்றன. இதில் உள்ள தாதுப் பொருள்கள் பெரும்பாலும் காரத்தன்மை உடையவை. இதனால் நமது உடலில் சேரும் கழிவுப்பொருள்களை வெளியேற்றிட ஒரு உந்துசக்தியாக இருக்கிறது.



அகத்திக்கீரை:
சித்தமுறைப்படி, அகத்திக் கீரையை 30 நாட்களுக்கு ஒரு முறையே உண்ண வேண்டும். அமாவாசை நாளன்று உண்பது மிகவும் உகந்தது. சூரிய உதயத்திற்கு முன் கீரையைப் பறிக்க வேண்டும். நாள் பட்ட கீரைகளை, சமைத்துண்ணுவது உடலுக்கு சிறப்புடையதன்று. வேறு மருந்துகளை(எந்தவகை / முறை மருந்து என்றாலும்)உட்கொள்ளும் காலங்களில் ,இதனை தவிர்த்தல் மிக நலம்.காரணம், உட்கொள்ளப்படும் மருந்தின் ஆற்றலை மிக மிக குறைத்து விடும். சுருங்க்ககூறின், நம் அகத்தின் தீயை அகற்றும். எனவே, அகத்தி என்றாகியது.

மணத்தக்காளிக் கீரை:
இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகள் காரணமாக இது உணவில் உட்கொள்ளப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் ஆகியன. இதை உட்கொள்வதன்மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல் தொடர்பான பல நோய்கள் குணமாகும்.

கொத்தமல்லிக் கீரை:
வயிற்றுவலி, வயிற்றுப் பெருமல் போன்ற நோய்களுக்கு கொத்தமல்லி ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

முளைக் கீரை:
பசியைத் தூண்டிவிடும் சக்தி இதற்கு உண்டு. சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு முளைக்கீரையை சேர்த்து கொடுத்தால், ‘சாப்பாடு கொடு’ என்று அடம் பிடிப்பார்கள்! காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முளைக்கீரையை அதிகம் சாப்பிடலாம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இந்தக்கீரைக்கு மட்டுமே உண்டு.


பொன்னாங்கண்ணி:
விழியைப் பற்றிய வாதகாசம், பார்வையில் தடுமாற்றம், பக்கவாதம், மூலச்சூடு, ரோகம், பிலிகம் சொறிசிரங்கு, தேமல் போன்ற நோய்களைத் தடுத்து நிறுத்திடும். நோய்கள் கண்டால் இக்கீரையைத் தொடர்ந்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் பஞ்சாய்ப் பறந்து போகும். கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து தேக உஷ்ணத்தைச் சீராக வைத்திருக்கும்.

முருங்கைகீரை:
உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை. குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை ‘விந்து கட்டி’ எனப் பேசுகிறது.

இதை எல்லாம் சாப்பிட்டால் உடலுக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கும் என முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் நாமும் பயன்படுத்தி பார்ப்போம் என உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். எதையாவது விட்டு இருந்தால் நீங்களும் எனக்கு சொல்லுங்களேன்.........

Thursday, December 10, 2009

விஜய்யின் வேட்டைக்காரன் 100 நாளை நோக்கி..............? பாகம் 1




நான் விஜய்யின் ரசிகன் ஒரு காலத்தில்.. அவர் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் கில்லி 15 முறை பார்த்து இருப்பேன். அதற்கு அப்புறம் நான் சினிமா பார்ப்பதை குறைத்து விட்டேன்
விஜய் படங்கள் எல்லாம் ரீமேக் படமாக இருப்பதால் சுத்தமாக பார்ப்பதில்லை. ஆனால் சமீபத்தில் வேட்டைக்காரன் ரொம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படம் ஓடுமா ஓடாதா என எனது நண்பர்கள்
மட்டுமின்றி அனைவரும் பட்டிமன்றமே நடத்துகின்றனர். இந்த சமயத்தில் விஜய்யைப்பற்றியான எஸ்.எம்.எஸ் எனக்கு நிறைய வருகிறது. அது இன்று மிக பிரபலமாக இருக்கிறது. இன்று காலை எனது நண்பனின் மொபைலில் ஒரு பிரபல சானலில் வரும் செய்தியைப்போல் வில்லு படத்தை போட்டு தாக்கு தாக்கு என தாக்கி இருந்தார்கள் என்னடா நமது தலைவரை இந்த தாக்கு தாக்கறாங்கன்னு மனது கேட்கல அதனால எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் எல்லாம் உங்களுடன் பகிர்நது இது சாரியானு கேட்கலாம்னு தான் இந்தப்பதிவு. எத்தனை எஸ்.எம்.எஸ் வந்தாலும் தலைவரின் வேட்டைக்காரன் 100 நாளை நோக்கி போகுமா? இல்ல பொங்கலுக்கு படத்தை மாத்திருவாங்களான்னு 18ம் தேதி வரை பொறுமையுடன் இருப்போம். எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் எல்லாம் கொடுத்து இருக்கிறேன் நீங்களும் பார்த்து உங்க கருத்துக்களை சொல்லுங்க...

காவல் அதிகாரி: நாளைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை எதுவாவது இருக்கா?

கைதி: நான் அஜித்தப் பாக்கனும்.

காவல் அதிகாரி: அவர் சூட்டிங்கில பிஸியா இருக்காரு பதிலுக்கு விஜயைப் பாக்குறியா?

கைதி: அதுக்கு நான் தூக்கிலயே தொங்கிடுவேன்

*******************************************************************************

விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்டே

நாலுமாசம் தூங்க மாட்டே


ரசிகர்: டேய் நீ அடிச்சாக்கூட பரவாயில்லடா

நீ நடிச்சாத்தான் தாங்க முடியல


*********************************************************************************************** 


பிச்சைக்காரர்: அய்யா தருமம் பண்ணுங்கய்யா...

நடிகர் விஜய்: இந்தா 1000 ருபா வைச்சுக்க

விஜயின் பிஏ: என்ன சார் பிச்சைக்காரனுக்கு 1000 ருபா போட்டுடிங்க

நடிகர் விஜய்: யோவ் உனக்கு இந்த பிச்சைக்காரன தெரியல இரண்டு வருசத்துக்கு முன்னாடி என்ன வச்சி படம் எடுத்த தயாரிப்பாளர்ய்யா..

**********************************************************************************************


டைரக்டர்:படத்துக்கு வடிவேல் போடலாமா?
அல்லது விவேக் போடலாமா?

dr.விஜய்:சார் கவலைய விடுங்க நானே காமெடி ரோலும் பண்ணிடறேன்.....

டைரக்டர்:காமெடி ரோல் நீங்க தான் பண்ணுறீங்க , நான் படத்துக்கு ஹீரோ வா யார போடலாம்னு கேட்டேன்....

 

******************************************************************************  


 சினிமா தியேட்டரில் விஜய் படம் பார்க்க வந்தவர்களுக்கு ஏன் இஞ்சி மிட்டாய் கொடுக்கிறார்கள் தெரியமா?

கதையை ஜீரணிக்க முடியாததால்.



*********************************************************************************************


அதோ போறாரே அர் வில்லு படத்தை தொடர்ந்து 100 தடவையா பார்த்துக்கிட்டிருக்கார்.

அவ்வளவு தீவிர விஜய் ரசிகரா...?

ம்ஹும் அவரு தியேட்டர் ஆப்ரேட்டர்...!

*********************************************************************************


விஜய் படம் வெளியிட்டிருக்கிற தியேட்டரில் மட்டும் நாற்காலியின் உள்பகுதியை வெட்டி இருக்கீங்களே ஏன்?


அப்பத்தானே மக்கள் மத்தியில் சீட் நுனியில் உட்கார்ந்து படம் பார்த்தாகள்னு சொல்லலாம்.

*********************************************************************************


விஜய் யோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா?

ஏன்யா...! என்னாச்சு?

பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க

*******************************************************************************************


கணவன்: ஏண்டி! பிச்சகாரன நடு வீட்ல வச்சி சோறு போட்டுட்டு டி.வீ பார்க்க விட்ருக்க...?

மனைவி: விடுங்க... பார்த்துட்டு போகட்டும்.. அந்த காலத்தில அவர் எடுத்த விஜய் படம் தானாம் அது....


************************************************************************************


ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா?எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....

உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...

**********************************************************************************

விஜய் அவங்க அம்மாவிடம் : ஏம்மா என்ன கருப்பா பெத்த?

ஷோபா : கலரா இருந்தா மட்டும் நீ என்ன நடிக்கவா போற ? ரீமேக்கு இது போதும்.

**********************************************************************************

எல்லாம் படிச்சீங்களா இப்படி போட்டுத்தாக்குன்னா தலைவர் என்னங்க பண்டுவார்........

எல்லாருக்கும் வேட்டைக்காரன்ல பதில் சொல்லுவார் என எனக்கு நம்பிக்கை இருக்கு......

மீண்டும் அடுத்த பதிவில் மற்ற எஸ்.எம்.எஸ் எல்லாம் பாகம் 2 ஆக பதிய இருக்கிறேன் காத்திருங்கள்...........................

ஓடுகிற பாம்பை பிடிக்கும் வயதில்................

ஓடுகிற பாம்பை பிடிக்கும் வயது இந்த வாக்கியத்தை ஒவ்வொரு வீட்டிலும் அதிகமாக பாட்டிகள் பயன்படுத்துவார்கள்.
எனது 7 வயது முதல் 15 வயது வரை அதிகமாக எனது வீட்டில் ஒடுற பாம்பை பிடிக்கற வயசுல இருட்டுக்குள்ள போக மாட்டேன்னு சொல்றாம்பாரு என
ஏத்து விழுகும். அப்புறம் அம்மா இருட்டுனா ஒன்னும் இல்ல நான் வருகிறேன் நீயும் வான்னு சொல்லி பயத்த போக்கிட்டாங்க...
இந்த பதிவுல நான் இந்த வயதில் என்னை அறிந்தும் அறியாமலும் செய்த குறும்புகளை உங்களுடன் பகிர்கிறேன்.

பயம்

எனது 7வது வயதில் இருட்டைக்கண்டால் பயம், தனியாக ஆத்துக்குப்போனால் பயம், மீசை பெரியாதாக உள்ள மாமவைக்கண்டால் பயம்,
இரவில் நாய், ஓநாய் குரைத்தால் பயம், சைக்கிள் போனால் பயம், சுடுகாட்டுப் பக்கம் போனால் பயம் (பின்னாட்களில் எனது பொழுது போக்கு மையமே இதுதான் இது தனிக்கதை)
பாம்பு சட்டையைக் கண்டால் பயம், கோயில்ல மினி சாமியப்பார்த்தா பயம், இடி இடித்தால் பயம், இரவில் தனியாக நடந்தாலும், அம்மாவுடன் நடந்தாலும் பயம், கிணற்றை எட்டிப்பார்த்தால் பயம்
இப்படி எதைக்கண்டாலும் பயந்தே இருந்தேன். அப்பதான் பக்கத்து வீட்டு பாட்டி ஒடுற பாம்பை பிடிக்கற வயசில ஏன்டா இப்படி இருக்கறன்னு என்ன சொல்லி சொல்லி அப்பா, அம்மா, மாமா எல்லாரும் எனது பயத்தை கொஞ்சம் கொஞ்சமா போக்கி நான் 6 வது பஸ்ஸில் போய் படிக்கனும் நான் அப்பவே பஸ்ல படிக்கட்டுல தொங்கற அழவிற்கு தைரிய வந்திருச்சு....

குறும்பு

7, 8 வது எல்லாம் நான் வீட்டில் இருந்து தான் படித்தேன் என்னுடைய தைரியமும், வம்பு இழுக்கறத பார்த்துவிட்டு எல்லாறும் திட்டுவாங்க. நான் வீட்டில் இருக்கும் போது சனி
ஞாயிறு லீவ் நாளில் கிரிக்கெட் விளையாடிவிட்டு ஆத்துக்கு குளிக்கப்போவம் அப்படி ஒரு நாள் குளிக்கும்போது சுழல் வந்து என்னை இழுக்க நான் தண்ணீரில் சென்று எனது காலை பக்கத்தில்
இருந்த பாறையில் உந்தியதால் பிழைத்தேன் அப்ப இருந்து ஆறு சுழல் மீது எனக்கு இருந்த பயம் போய்விட்டது. எனக்கு நாயைக்கணடால் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது நாய்க்கு பக்கத்துல போய்
அதுகிட்ட பழகி அப்படியே நாயின் இரண்டு முன்கால்களைப் பிடித்து சுத்தி வீசுவது இது மிகப்பெரிய தவறு தான் ஆனா அந்த வயதில் எனக்கு தெரியவில்லை அப்புறம் விட்டுவிட்டேன்.

புரட்டாசி, சித்திரை மாதங்களில் சித்தேஸ்வரன் மலைக்கு நண்பர்களுடன் போவேன் அப்ப காட்டுக்குள்ள போய் கொய்யா, பலாப்பழம் எல்லாம் மலைக்காரர்களுக்குத் தெரியாமல் பறித்து கூட்டாக
எப்பவுமே நண்பர்களுடன் தான் சாப்பிடுவேன். நாங்களே மலையில் சமைச்சு சாப்பிடுவோம் மலையில் உள்ள கோயிலுக்கெல்லாம் போக மாட்டேன் ஆனால் அந்த இயற்கையை ரொம்ப ரசிப்பேன் ( இந்த மலை ஆட்டத்தைப்பற்றி தனியா ஒரு பதிவை எழுதிக்கொண்டு இருக்கிறேன்).

இன்று டிவியில் நாம் பார்க்கும் கேண்டிட் கேமரா நான் 1988லேயே செய்துவிட்டேன். எங்கள் ஊரில் நரசுஸ் காபித்தூள் பாக்கெட் கவர் மட்டும் நண்பர்கள் எல்லாம் வீட்டில் இருந்து எடுத்து வந்து அதில் செம்மண் நிரப்பி ரோட்டில் வைத்து விடடு நாங்க பஞ்சாயத்து கிணறு மேல் உட்கார்நது கொள்வோம் அதை எடுக்கும் ஆட்கள் எல்லாம் அதை மறைத்து கொண்டுபோவதை பார்த்து சிரிப்போம் பேக்கிங் உடைந்து போய் ரோடடில் மணல் கொட்டும் மணலைப்பார்தது முழிப்பார்கள் அதைப்பார்க்கும் பொழுது எங்களுக்கு ஒரு ஆனந்தம். சைக்கிள் பஞ்சர் பண்டுவது விளையாடுகிறேன் என்ற
பேரில் நண்பனின் மண்டையை உடைத்தது இப்படி பயங்கர குறும்பு பண்டும்போது தான் குறும்பு தாங்காமல் என்னை 6ம் வகுப்பில் டிசி கொடுத்து அனுப்பிட்டாங்க. அப்புறம் ஒரு கிறிஷ்டின்
நடுநிலைப்பள்ளியில் சேர்த்தாங்க அங்க என்ன அடி பின்னு பின்னுன்னு பின்னி ஒருவழியா படிக்க வெச்சாங்க.. இங்க தான் எனக்கு மறக்க முடியாத ஆசான்கள் சின்னப்பன், ரவிக்குமார், பெலிக்ஸ், குமார், லூர்து, சார்லஸ். அப்புறம் 8 வது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் ஏன்னா முதன் முதலா அங்க தான் டூர் கூட்டிட்டடுப்போனங்க.. கோயம்பத்தூருக்கு முதன் முறையா கோவையில் மருதமலை, பொட்டானிக்கல் கார்டன், மைக்கெல் ஸ்கூல், பேரூர் முக்கியமா ஏரோப்பிளேன் எல்லாம் பார்த்தேன் அங்க படிப்பு முடிச்சு 9 வது ஹாஸ்டல் வந்துவிட்டேன். இங்க அடிச்ச கூத்து இன்றைக்கு
நினைத்தாலும் நெஞ்சில் இருந்து அகலவில்லை. என்னங்க இவ்வளவு நேரம் படிச்சு போர் அடிச்சுருச்சா....... ரொம்ப நன்றி நண்பர்களே இவ்வளவு நேரம் படிச்சதுக்கு.... மீண்டும் சந்திப்போம் எனது
ஹாஸ்டல் வாழ்க்கையில் ( உங்கள அவ்வளவு சீக்கிரம விடமாட்டேன்).....

Monday, December 7, 2009

நாங்க எல்லாம் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்….

1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க… ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது…?
2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க… ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..?
3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..?
4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க… அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க..?
5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா…
6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க…?
7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க…?
8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க…?
9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க…?
10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct,gmail ,Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don’t use company resources for your personal workனு சொல்றீங்க…?
ஏன் சார் ஏன்….
இத்த தான்…
திருக்குறள்ள
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்…
ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.
இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது.....

இத நான் எழுதலிங்க...... நண்பர்கள் எழுதியது எனது மெயிலுக்கு பார்வேடு ஆகி இருந்தது
என்னாலயும் மேனேஜர்கிட்ட கேட்க முடியல.... அவர் எனது பதிவை படிப்பார்னு தெரியும்
இப்படியாவது அவருக்கு சொல்லலாம்னு தான்........

நீங்களும் உங்க மேனேஜர்க்கு பார்வேடு பண்ணுங்க.......

நன்றி : இதை என் மெயிலுக்கு பார்வேடு செய்த நண்பர்களுக்கு..........

Wednesday, December 2, 2009

நண்பனின் காதல் திருமணம்.........அந்த திக் திக் சில நிமிடங்கள்.........

நான் எனது ஒரு சில நண்பர்களின் காதல் திருமணத்திற்கு (அதுதாங்க ஓடிப்போய் கல்யாணம் பன்றது)
துணை நின்று நடத்தி இருக்கின்றேன் அதில் ஒரு மறக்க முடியாத நான்(பன் வாங்கிய) எனது நண்பன் திருமணத்தின் அந்த திக் திக் சில நிமிடங்களை
உங்களுடன் பகிர்து கொள்கிறேன்.....

நாங்கள் ஒரு 6 நண்பர்கள் கோவையில் ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தோம். அங்க பல சுவரசியமான, சிரிக்கும் படியான, குத்து வாங்கிய பல நிகழ்வுகள் நடந்தன,
அதில் நாங்கள் அனைவரும் இணைந்து நடத்திய திருமணம் இது. (இப்ப தாங்க மேட்டருக்கு வர்ரேன்)

எங்கள் நண்பன் பாலா (கதையின் நாயகன்) கோவயைில் ஒரு பிரபலமான பைனான்சில் வேலை செய்தான் அவனுக்கு ப்ரமோஷன் கிடைத்து திருப்பூர் சென்றான்
இவர் அங்க மேனேஜர். அதே ஆபிசில் அந்த கிளையின் இன்சார்ஜ் கீதா இவரு போய் மூன்று மாதங்களில் இருவருக்கும் பத்திகிச்சு. அப்புறம் ஒரு 5 மாதங்கள் கழிச்சு
நண்பன் எங்ககிட்ட வந்து நான் திருமணம் செய்தால் அவளைத்தான் செய்வேன் மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்று வசனம் பேசினான் என்ன பன்றது நண்பனாச்சே
என்னுடன் தங்கியவர்களில் இருவர் வக்கீல் சொல்லவேண்டுமா எங்களுக்கு உடனே திருமணத்திற்கு நாள் குறித்து இடம் குறிச்சோம்...

நாள் ஒருவாரம் கழித்து புதன்கிழமை இடம் கோவையில் உள்ள ஒரு பிரபலமான கோயில். கோவிலுக்கு விசாரிக்க நானும், வக்கீலும் போனாம் அங்க என்னடான்னா காதல் திருமணம் இங்க அனுமதி இல்லை வேனும்னா வெளிய விநாயகர் கோயில்ல வெச்சு பண்ணிக்கலாம். இதற்கு புரோகிதர் வர மாட்டேன் என்கிறார். அவருக்கு பதில் காதல் திருமணத்திற்கு என இருக்கும் ஒருவருக்கு
ரூ.500 கொடுத்ததும் அவர் சரி என்று சொல்லிவிட்டர். மற்ற நண்பர்கள் பட்டுப்புடவை, வேஷ்டி, மாலை மற்றும் தாலி திருமணத்திற்கு தேவையான அனைத்துப்பொருட்களும் ஒரு ரூ.25000 ரெடி பண்டி வாங்கியாச்சு.

திருமண நாள் அன்று இரண்டு நண்பர்கள் பெண்ணை அழைத்துவர நடுராத்திரி 5 மணிக்கு (எனக்கு எப்பவுமே 8 மணிக்குத்தாங்க வெடியும்) போய்ட்டாங்க அப்புறம் எனக்கும் வக்கீலுக்கும் கோவில்ல வேலை எல்லாம் ரெடி ஆகி இருக்கிறோம். பொண்ணு இன்னும் வரல. கூட போனவங்க செல்லும் நாட் ரீச்சபல் என்னு பன்றது டென்சன், டென்சன்,டென்சன்.....

ஒரு அரைமணி நேரம் கழிச்சு நண்பன்கிட்ட இருந்து போன் பொண்ணு இன்னும் வரலனு. என்னடா பன்றது மணி இப்பவே 8 ஆச்சசுனு டென்சனின் உச்சியில் இருக்கும் போது
அடுத்த போன் பொண்ணு பொண்ணு வீட்டு பின்னாடி வழியா ஒரு 5 கீலோ மீட்டர் நட்ந்து வந்து பனியன் கம்பெனி பக்கதில இருக்குது நாங்க பிக்கப் பன்னிட்டு 1 மணி நேரத்தில்
வந்து விடுவோம் நீங்க ரெடியா இருங்க (நாங்க தான் ரெடியாச்சே) இந்த சமயத்தில் கோவில்ல பார்த்த கிட்டத்தட்ட அந்நிக்கு மட்டு 20 கல்யாணமாம் (இது கோவில்ல பதிவு பண்டுன கல்யாணம்) காதல் திருமணம் ஒரு 3 நடந்துச்சு.

9 மணி பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சு நான் போட்டோகிராபர் அளாளுக்கு ஒரு வேலை திருமணம் நல்ல நேரத்தில் சுபமா முடிந்தது. அடுத்தது என்ன செய்யலாம்னு முடிவெடுக்கும்
போது முதல்ல சாப்பிடலாம்னு ஒட்டல் ஆர்யாஸ்ல சாப்பிட்டுவிட்டு அடுத்த முடிவ எடுத்தோம். பொண்ணு வீட்டுக்கு போன் செய்து பேசறது பேசறது நான்னு என்ன முடிவெபண்ணிட்டானுக.....

அந்த திக் திக் சில நிமிடங்கள்

நான் பொண்ணு வீட்டுக்கு போன் செஞ்சா நாலு தடவை போன் எடுக்கல எனக்கு பி.பி ஏறிருச்சு. மறுபடியும் ரிங்போகுது என்னைச்சுத்தி நண்பர்கள் ஸ்பீக்கர் ஆன்ல அவங்க அப்பா ஒரு வழியா
போன எடுத்தார். நான் பேசினேன் உங்க பொண்ணும் எங்க நண்பன் அவங்க ஆபிஸ்ல மேனேஜரும் கல்யாணம் பண்ணிட்டாங்க இப்பதான் நடந்துச்சுன்னு சொண்ணேன்.
சும்மா ஒரு 5 நிமிடம் திட்டுட்டு( செம திட்டு) கடைசியா சொன்னார்......................
எங்கிட்ட காலைல சொல்லி இருந்தா நானும் வந்து இருப்பேன்ல ஏன் சொல்லவில்லைனு எனக்கு மாத்து அப்புறம் வீட்டுக்கு வரச்சொல்லுனு சொல்லி அவங்க குடும்பம் எல்லாம் ஒன்னு சேர்நது மறுபடியும் இன்னொரு திருமணம் அவங்க குடும்த்துடன் நடந்தது. இதில் மிக முக்கியமான விசயம் பொண்ணும் எங்க நண்பனும் குடும்பத்தோட நடந்த திருமணத்திற்கு
எங்கள கூப்பிடவே இல்லை............

Tuesday, December 1, 2009

நம்ம ஊரு கோவில், சுற்றுலாத்தளங்களை பல கோணங்களில் பாருங்க....

ஒரு வாரத்துக்கு அப்புறம் இப்பதான்
வலைப் பூ விற்கு வந்தேன்....

நான் நெட்ல இருக்கும் போது
ஒரு அழகான 360 view வெப்சைட்  பார்த்தேன்
அதுவும் நம்ம தமிழ்நாட்டு கோவில்கள்....
நான் ரொம்ப ரசிச்சு ரசிச்சுப் பார்த்தேன்....
ரொம்ப அழகா இருந்துச்சு நீங்களும் பாருங்களேன்........

360 view வெப்சைட்டுக்கான லிங்க் கீழே இருக்கு பாருங்க.......



மதுரை : http://www.view360.in/virtualtour/madurai/

தஞ்சாவூர் : http://www.view360.in/virtualtour/thanjavur/

மகாபலிபுரம் : http://www.view360.in/virtualtour/mamallapuram/

ராமேஸ்வரம் : http://www.view360.in/virtualtour/rameswaram/

கன்னியாகுமரி: http://www.view360.in/virtualtour/kanyakumari/vivekanandarrock/

கொல்லி மலை: http://www.view360.in/virtualtour/kollihills/arapaleesarartemple/

ஏலகிரி:http://www.view360.in/virtualtour/yelagiri/murugantemple/

நம்ம ஊரு இயற்கை எழில் கொஞ்சும் இடமான

குற்றால அருவிகள்

கொல்லி மலை அருவிகள்

ஏற்காடு மலை

நீங்களும் பார்த்து ரசியுங்கள்....... http://www.view360.in/index.html