Monday, July 29, 2013

மனைவியின் அன்பை பெற...


இல்லற வாழ்வு இனிமையாக கழிய அன்பு தான் முக்கியம். மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று புலம்புவர்களுக்காக இது.

பெண்களின் அன்பை பெறுவது எளிதுதான். இதோ அதற்கான வழிகள்.....

முதலில் மனைவியிடம் நிறைய நேரம் பேசுங்கள் ஆபிசில் இருந்து வந்ததும் அவளின் உடையைப் பார்த்துவிட்டு கொஞ்சம் பாராட்டுங்க. அடுத்து சாப்பிட்டாயா, காலைல இருந்து என்ன செய்தாய் என்று பேசிகிட்டே இருங்க..
உங்க அலுவலக டென்சனை எல்லாம் வீட்டின் முன் நுழையும் போது செப்பலை கழட்டு விடும் போது அந்த நினைப்புகளை கழட்டிவிட்டுறுங்க.

இன்று தான் திருமணம் ஆனது போல் ஒவ்வொரு நாளையும் நினைச்சுகுங்க. புதுமாப்பிள்ளை போல் எப்பவும் சந்தோகமாக திரியுங்கள் உங்கள் மனைவியின் முன்.

வீட்டு வேலையைத் தவிர மற்ற துறைகளிலும் நிறைய சாதிக்க முடியும் என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மனைவியின் திறமையை மதியுங்கள் & ஊக்குவியுங்கள் வேற வழியில்லை வீட்டு வேலைகளை நீங்க தான் நண்பர்களே செய்ய வேண்டும் .. என்னை அடிக்க வர வேண்டாம் ஒகேவா? பெண்களை மயக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதுக்கே சோர்ந்து போனா எப்படி?

பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன.அந்த கனவுகளை சிதைத்து உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றால் அமைதியாக வழிவிடுங்கள்.

மனைவியை சமாதானபடுத்தம் பழைய வழிமுறைகளெள்லாம் ( மல்லிகை பூ, அல்வா ) இந்த காலத்திற்கு உதவாது. புதிய புதிய முயற்சியில் ஈடுபடுங்கள் .மனைவிக்கு திடீர் ஆச்சிரியம் கொடுக்கும் முயற்சியை கைவிடாதிர்கள். வெளியில் அழைத்து சென்று அதாவது ஒரு அன்பு பரிசை அளியுங்கள் (அப்புறம் உங்களிடம் அன்பு பொங்கும்)

ஆண்கள் அழக்கூடாது என்பது சரிதான். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்பது ரொம்ப உண்மை. அதற்க்காக எப்போதும் அழுமுஞ்சியாக இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. உணர்வு பூர்வமான இடங்களில் அழுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்..

நீங்கள் எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் மனைவியிடம் கலந்து ஆலோசியுங்கள் .அது எதைப்பற்றியது வேண்டுமானலும் இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள் அதற்கு மதிப்பு கொடுங்ககள். அவர்கள் முடிவு சரியாக இருந்தால் அதன் படி நடங்கள்..

பாசத்தில் மட்டும் அல்ல சமையலிலும் கெட்டிக்காரரை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். (நண்பர்களே மனைவியிடம் சண்டைப்போட்டு சாப்பாடு கிடைக்காத நாள்களில் இது நமக்கு மிகவும் கை கொடுக்கும்.. மாதத்தில் பாதி நாள் சண்டைதானே?) அவர்களுக்கு பிடித்தமானவற்றை நீங்களே சமைக்க முயலுங்கள் சாப்பிட்டதும் உங்களை மிக பாராட்ட வேண்டும். மாதத்தில் 4 முறையாவது சமைச்சு போடுங்க ( என்னைப்போல் தினமும் சமைத்து மாட்டிக்காதீங்க)

பெண்களுக்கு பேசுவது என்றால் பிடிக்கும். எனவே எல்லாவிஷயங்களைப் பற்றி பேசுங்கள். அரசியல் , பொருளாதாரம் , ஊழல், உங்கள் லட்சியம் கனவுகள். உங்கள் நண்பர்கள் அடிக்கும் சைட்டுக்கள் எல்லாவற்றையும் பற்றி பேசுங்கள். நீங்கள் அடிக்கும் சைட்டைப்பற்றி அரை குறையாக சொல்லுங்கள் அப்புறம் உங்களுக்கு எமன் ஆகிவிடும் பார்த்து சொல்லுங்க.. மற்ற பெண்கள் அழகை மனைவியின் முன் விவரிக்காதீங்க ( அப்புறம் விவாகரத்தாகிவிடும்)

உங்கள் மனைவி உங்கள் குடும்பத்தோட மட்டும் ஒட்டி போகிவிட வேண்டுமென்று நினைக்காதிர்கள். நீங்களும் மனைவியின் குடும்பத்தாரோடு ஒத்து போங்கள்.அவர்கள் வீட்டில் உள்ளவர்களையும் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். ( முக்கியமாக மச்சினிச்சு கேட்டத வாங்கிக்கொடுத்துடுங்க )

மிக முக்கியமாக உங்கள் மனைவியின் அழகிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் வெளியே செல்லும் போது அவர்களுக்கான புடவை, நகைகளை நீங்களே அவர்களிடம் கொடுத்து இன்று இதை அணி இந்த புடவைக்கு இது தான் அழகு என்று கொஞ்சலை அதிகரியுங்கள்... (திரும்ப உங்களுக்கு ஏகப்பட்ட கொஞ்சல்கள் வரும்)

அவ்வப்போது டயலாக் பேசுவதை விட்டுவிடாதீர்கள் டயலாக் பேசும் போது நீதான் என் உலக அழகி.. உன்னைத்தவிர எனக்கு வேற எதுவும் அழகா தெரியலை என்று பேசுங்க ( ஒரு பொய் சொல்வதான் ஒன்னும் குறைஞ்சு போக மாட்டிங்க.. மற்றொன்று அழகான பொய்களை பெண்கள் ரொம்ப விரும்புவாங்க)....

இதை எல்லாம் மறக்காமல் செய்து பார்த்து எனக்கு சொல்லுங்க நானும் எங்க வீட்டில் முயற்சி செய்கிறேன்.. விடா முயற்சி பலனைத்தருமாம்...

21 comments:

  1. அன்பின் சங்கவி - எலாம் நல்லாத்தான் இருக்கு - யாராச்சும் பரிசோதனை எலி ஆயிருக்காங்களா ? நீங்களே இன்னும் ட்ரை பண்ணல போல இருக்கு - முயல்வோம் - வெற்றி பெறுவோம் - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம்... முடியாததது முயலாதது தாங்க...

      Delete
  2. மனைவியை சமாதானபடுத்தம் பழைய வழிமுறைகளெள்லாம் ( மல்லிகை பூ, அல்வா ) இந்த காலத்திற்கு உதவாது.
    >>
    அன்பு சகோ’ஸ் இனி வீட்டுக்கு போகும்போது பாசந்தி, ரசமலாய் மாதிரி புது ஸ்வீட்டும் சூரியகாந்தி, டேரி, மாதிரி பூவும் வாங்கிட்டு போங்க. அதான் சங்கவி சொல்லிட்டாருல்ல!!.

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் நம்ம மக்கள் இதில் உசாரா இருப்பாங்க...

      Delete
  3. மாதத்தில் பாதி நாள் சண்டைதானே?)
    >>
    பரவாயில்லையே! மாசத்துல மிச்ச பாதி நாள் சண்டையில்லாம இருக்கீங்களே! :-)

    ReplyDelete
    Replies
    1. சண்டையே சமாதானத்திற்கு அடுத்த வழி...

      Delete
  4. இப்படியெல்லாம் வளைஞ்சு குடுத்து வாழ்ந்திட்டாலும்......நம்ம ஆண்கள் !

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் வாழ்வோமுங்க...

      Delete
  5. சிறுசிறு சண்டைகள் தான் சுவாரஸ்யமே... ஆனால் அளவோடு...!

    ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க தனபாலன் சிறு சண்டைகளை சந்தோசம்...

      Delete
  6. பயனுள்ள யோசனைகள்தான்! செயல்படுத்தி பாத்துட வேண்டியதுதான்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கம், கருத்துக்கும் நன்றி நண்பரே..

      Delete
  7. இதுல சிலத நான் செஞ்சாலும் என்னோட மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே...

      Delete
  8. கணவன் மனைவிக்கும் இடையே பெருகும் அன்பும் நேசமும் இயல்பான ஒன்று… அதை கட்டுப்படுத்தியோ அல்லது கட்டாயப்படுத்தியோ இப்படி இரு… நான் இப்படித்தான் இருப்பேன் என்று இருந்தால் அங்கு பெருகுவது நேசமாக இருக்காது கண்டிப்பாக…. பிடிக்காததையும் பிடிக்கச்செய்யும் சக்தி அன்புக்கு மட்டுமே சாத்தியமாகிறது….

    ஆசையாக அன்பாக வாங்கி தரலாம் எதுவும்… ஆனால் இப்படி வாங்கிக்கொடுத்தா நம்ம பேச்சை கேட்பா என்ற நினைப்புடன் வாங்கி தருவதை விட வாங்கி தராமல் இருப்பதே சிறப்பு…

    நேசத்தை விட்டுக்கொடுக்காமல் வேண்டாத்தை விட்டுக்கொடுத்து ஈகோவை மொத்தமாக புறம் தள்ளி வீட்டு விஷயத்தை கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை பிறரிடம் விவாதிப்பதையும் பகிர்வதையும் தவிர்த்து…

    பிள்ளைகள் முன்பு மனைவியை திட்டுவதும் அடிப்பதும் தவறு… மனைவிக்கு வலி தரும் செயல் இவை…

    பிரச்சனை, சண்டை எதுவுமே அன்றே தீர்த்துவிட வேண்டிய ஒன்று… அதை மனதில் வைத்துக்கொண்டு திரும்பத்திரும்ப பேசி மனதை வருத்திடக்கூடாது..

    அருமையான விஷயங்களை சொல்லி இருக்கீங்க சங்கவி…. அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  9. நீங்க முயற்சித்து வெற்றி பெற்று தான் இந்த பதிவ எழுதி இருகிங்கன்னு நான் நினைத்தேன் தல

    ReplyDelete
  10. சாப்பிட்டதும் உங்களை மிக பாராட்ட வேண்டும். மாதத்தில் 4 முறையாவது சமைச்சு போடுங்க//

    சுடு தண்ணி வைக்ககூட தெரியாதேய்யா...!

    ReplyDelete
  11. சமையல் கட்டு பக்கம் போனாலே பூரிக்கட்டையை தூக்கி காட்டுறாயிங்க கொன்னேப்புடுவேன்னு.

    ReplyDelete
  12. நீங்கள் எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் மனைவியிடம் கலந்து ஆலோசியுங்கள் .அது எதைப்பற்றியது வேண்டுமானலும் இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள் அதற்கு மதிப்பு கொடுங்ககள். அவர்கள் முடிவு சரியாக இருந்தால் அதன் படி நடங்கள்..//

    இங்க இது தலைகீழால்ல நடக்குது. வீட்ல டிசைட் பண்றதெல்லாம் அவங்கதாங்க. நம்மக் கிட்ட முடிவெடுத்துட்டு சொல்றதுதான் வழக்கம். அதுகூட ஒரு இன்ஃபர்மேஷனுக்காகம்பாங்க :))


    ReplyDelete
  13. முயற்சித்துப் பாருங்க :)))

    ReplyDelete