Saturday, July 20, 2013

நாட்டுக்கோழி பள்ளிபாளையம் செய்வது எப்படி?


 இன்று அனைவரும் படித்து விட்டு வெளியூருக்கு குடும்பத்தை விட்டு வேலைக்கு செல்கின்றனர். இதில் நிறைய பேர் மேன்ஷனில் தங்குகின்றனர் இன்னும் சில பேர் நண்பர்களின் அறையில் தங்குகின்றனர். இவர்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் பாட்டி கடை அல்லது கையேந்தி பவன் என அவர் அவர் வசதிக்கு ஏற்ப சாப்பிடுவார்கள். சிலர் நான்கு பேர் ஒரு வீடு எடுத்து சமையல் பாத்திரங்கள் எல்லாம் வாங்கி அவர்களே சமைத்து சாப்பிடுவார்கள். இதில் நான் கடைசி ரகம்.

நான் கொஞ்ச நாள் ஈரோட்டில் வேலை செய்து விட்டு சென்னைக்கு 2002 ம் ஆண்டு சென்னைக்கு வேலைக்குச் சென்றேன். அங்கு நாங்கள் 5 பேர் சேர்ந்து திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட் அருகே உள்ள முத்துருன்னிசா பேகம் வீதியில் உள்ள அப்துல் காதர் வீட்டில் வீடு எடுத்து தங்கி இருந்தோம் எனது அலுவலகம் வாலாஜா ரோட்டில் இருந்தது. முதன் முதலாக இங்கு தான் நான் சமைக்கப்பழகினேன். முதலில் தக்காளி பச்சி கூட செய்யத் தெரியாமல் குக்கரில் எத்தனை டம்ளர் அரிசிக்கு எவ்வளவு தண்ணீர் என தெரியாமல் இருந்த நான் கொஞ்ச நாளில் நாங்கள் 5 பேரும் சமையலை ஒரு அளவிற்கு கற்றுக்கொண்டோம். அன்று முதல் இன்று வரை சமையல் செய்வது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

நான் இம்முறை எங்கள் ஊரிற்கு சென்ற போது நாங்கள் ஒரு 10 பேர் சேர்ந்து நாட்டுக்கோழி 4 கிலோ எடுத்து காவிரி ஆற்றங்கரையில் சமைத்து சாப்பிட்டோம். அன்று எனது சமையல் ரொம்ப நாளைக்கு அப்புறம் அரங்கேறியது. நம் பதிவர்களில் நிறைய பேர் திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் என அனைவரும் இருப்பார்கள் உங்களில் பலபேருக்கு சமையல் தெரிந்து இருக்கும் தெரியாமலும் இருக்கும் நீங்கள் சிக்கன் செய்ய விரும்பினால் உங்களுக்கு எல்லாம் உதவும் என்ற வகையில் எனக்கு தெரிந்த எங்கள் ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரபலமான பள்ளிபாளையம் சிக்கன் எப்படி செய்வது என்று சொல்கிறேன். நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள் பள்ளிபாளையம் சிக்கனை.


பள்ளிபாளையம் சிக்கன்


தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி  - 1 கிலோ

சின்னவெங்காயம் - கால் கிலோ

வரமிளகாய் - 20 ( மிளகாய் உள் இருக்கும் விதைகளை எடுத்து விடவேண்டும்)

தேங்காய் - 1 (சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்)

சிக்கன் மசாலா - 50 கிராம்

நல்லெண்ணய் எண்ணெய் - 6 ஸ்பூன்

கறிவேப்பில்லை - 6 இலை

கொத்தமல்லி - 6 இலை

மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு

செய்முறை

சிக்கனை சுத்தமாக தண்ணீரில் அலாசி தண்ணீரை வடிகட்டிக்கொள்ள வேண்டும். அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்ற கடுகு பொறிய விடவேண்டும். பின் வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும். வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும். சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வதக்க வேண்டும் வதக்கும் போது மஞ்சள் தூள் கொஞ்சம் சிக்கன் மசாலா துளை போட்டு கொஞசம் தண்ணீர் தெளித்து வேக விடவேண்டும் சிக்கன் வேகும் போது கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். உப்பு தேவையான அளவு போட்டு விட்டு 20 நிமிடம் கழித்து நறுக்கிய தேங்காயை போட்டு நன்கு கிளற வேண்டும். மீண்டும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து சிக்கனை வேக விடவேண்டும். சிக்கன் வெந்துவிட்டதா என ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டு பாருங்கள் வெந்த உடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கி வைத்து சாப்பிட ஆரம்பிக்கவும். இப்ப சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார். இந்த பள்ளிபாளையம் சிக்கன் ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரபலம்.

நாட்டுக்கோழி சமைக்கையில் முக்கியமாக கவனிக்கவேண்டியது நல்லெண்ணை இதைக்கொண்டு சமைக்கும் போது நாட்டுக்கோழியின் சுவை அதிகமாகும்.

நண்பர்களே நீங்களும் செய்து சாப்பிட்டு இந்த சுவையை அனுபவியுங்கள்.

14 comments:

  1. சமைச்சி சாப்பிட்டு பார்த்தேன். கொஞ்சம் சுமாராதான் வந்துது. அடுத்த தடவை நல்லாதான் வரும்னு நினைக்கிறேன். முதல் முறைங்கிறதால அளவுலாம் கொஞ்சம் கூடக்குறைய ஆயிப் போச்சி.

    ReplyDelete
  2. நாளைக்கு ட்ரைபண்ணிடுவோம்...

    ReplyDelete
  3. சிறு துண்டு தேங்காய் சேர்த்தால் சிறிது இனிப்பாகி விடாதோ...? செய்முறை குறிப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  4. இதோ நாளை ஞாயிற்றுக்கிழமை செய்து சாப்பிடுட்டா போச்சு....

    ReplyDelete
  5. காவேரி ஆத்துதண்ணி ருசி எல்லாப் பக்கமும் வராது.

    ReplyDelete
  6. Long days i have been waiting for this recipe. My waiting is over. Thank you so much. When i was studying in Perundurai my all time fav is this only. In Pavilam Daba (Thindal) i used have this dish.

    ReplyDelete
  7. சமையல் குறிப்பு அருமை ஆனால் நீங்கள் சொன்னபடி சமைக்கலாம் ஆனால் சுவைப்பதில்தான் ஒரு கஷ்டம் அது என்ன கஷ்டம்னா நான் சிக்கன் சாப்பிட மாட்டேன்.......

    ReplyDelete
  8. //சிக்கன் வெந்துவிட்டதா என ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டு பாருங்கள் //

    இப்படியே ஒவ்வொரு துண்டாகத் தின்னு பார்த்துட்டால் அப்புறம் சட்டியிலே என்ன இருக்கும்:-))))))

    ReplyDelete
  9. ஒரு அங்குல நீள இஞ்சியை..சன்னமாக நீளவாக்கில் அரிந்து, ஆரம்பத்திலேயே சேர்த்துப் பாருங்கள்...அடுத்த முறை சொல்லுங்கள்!

    நாட்டுக் கோழி, உடம்பிற்கு சூடு..எனவே அதை "நியூட்ரலைஸ்" செய்ய நல்லெண்ணெய் உபயோகம்! ருசி தான் முதல் பட்சம்..இது கொசுறு!

    நன்று..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. நானும் சமைக்க முயற்சி செய்து இருக்கிறேன் ஆனால் நான் சமைத்ததை என்னாலே சாப்பிட முடியவில்லை

    ReplyDelete
  11. "சிக்கனை சுத்தமாக தண்ணீரில் அலாசி தண்ணீரை வடிகட்டிக்கொள்ள வேண்டும். அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்ற கடுகு பொறிய விடவேண்டும். பின் வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும். வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும். சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வதக்க வேண்டும் வதக்கும் போது மஞ்சள் தூள் கொஞ்சம் சிக்கன் மசாலா துளை போட்டு கொஞசம் தண்ணீர் தெளித்து வேக விடவேண்டும் சிக்கன் வேகும் போது கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். உப்பு தேவையான அளவு போட்டு விட்டு 20 நிமிடம் கழித்து நறுக்கிய தேங்காயை போட்டு நன்கு கிளற வேண்டும். மீண்டும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து சிக்கனை வேக விடவேண்டும்"

    ஐயா,
    எல்லா ஊரிலும் சிக்கன் பிரட்டல் இவ்வாறு தான் செய்வார்கள்.என்ன ஒன்று தேங்காய் அரைத்து போடுவார்கள்.

    இதே முறையில் நீங்கள் ,இறால்,நண்டு,கணவாய்,நத்தை,இன்னும் எது சமைத்தாலும் நன்றஆகத்தான் இருக்கும்.

    ):

    ReplyDelete
  12. இதை தட்ஸ் தமிழில் படித்த ஞாபகம்... தாங்கள் எழுதியதா?
    அருமையான குறிப்பு..

    ReplyDelete
  13. எம்புட்டோ முயற்சி செய்தும் எனக்கு சாப்பாடு செய்ய வராமலே போயிருச்சு மக்கா, அதனால அந்தந்த இடத்துல சமைச்சு தாரத்துக்கு ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி வச்சுக்குவேன், ஹோட்டல் சாப்பாடு அப்பபோ உண்டு...!

    ReplyDelete