Thursday, June 30, 2011

அஞ்சறைப்பெட்டி 30.06.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
மாதம் மாதம் சம்பளம் வாங்குவது போல் உயர்கிறது பெட்ரோல், டீசல், கேஸ் விலை. மத்திய அரசு இது வரை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுத்தது போல் தெரியவில்லை. மத்திய நிதி அமைச்சர் விலையேற்றம் தவிர்க்கமுடியாதது என்கிறார் தடுக்க முடியாத இவர் அமைச்சராக இருந்து என்ன பிரயோசனம்.

மேற்கு வங்கத்தில் மம்தா சமையல் வாயுவிற்கு மாநில அரசின் வரியை குறைத்தது வரவேற்கத்தக்க விசயம். அதே போல் தமிழகத்திலும் சமையல் வாயுவிற்கான வரியை குறைத்ததற்காக அம்மாவிற்கு அம்மாக்களின் சார்பாக வாழ்த்துக்கள்...


...............................................................................................

திரைப்படநடிகர்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துகிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளனர் நடிகர்கள் அவர்களின் அன்பான பாராட்டு விழாவை தவிர்த்த முதல்வருக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்.

முதல்வரே தமிழகதில் மின்சாரத் தட்டுப்பாடு, விலையேற்றத்தை கட்டுப்படுத்துங்கள் எங்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்புக்கள் இதுதான்.


...............................................................................................

சீனாவில் பிரபலமானவற்றில் நாய் கறியும் ஒன்று. பெரும்பாலும் சீனாவின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் நாய் கறியை விரும்பி உண்ணும் பழக்கம் கொண்டவர்கள்.

தற்போது சில வருடங்களாக சீனாவின் யுலின் என்ற பகுதியில் நாய் கறியை சமையல் செய்து உண்பதை அவர்கள் ஒரு கலாசாரமாக வைத்துள்ளனர். திருவிழா போன்று ஒரு வாரம் வரை நடைபெறும் இதற்காக 15 ஆயிரம் நாய்களை கறிக்காக கொன்றுள்ளனர்.

நாய் கறி பல மருத்துவ பலன்களை கொண்டது என காலங்காலமாக அவர்களது நம்பிக்கையாக உள்ளது. எனினும், இதனை கொடுமையாக கருதி, நாய் கறி உண்பதை தடை செய்ய சட்டம் இயற்றுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2008 ஒலிம்பிக்போட்டியின் போது பல்வேறு நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்ததால் அப்போது குறிப்பிட்ட உணவகங்களின் மெனுவில் இருந்து நாய் கறி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நமக்கு ஆர்டர் கொடுத்து இருந்தால் 15 ஆயிரம் என்ன அதற்கு மேலும் நம்ம ஊரில் உள்ள தெரு நாய்களை அனுப்பி இருக்கலாம்...


........................................................................................................

இங்கிலாந்து, தலைநகர் லண்டனை சேர்ந்த ஒருநிறுவனம் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. ஒருசில ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் படுக்கைகள் மற்றும் தலையணைகள் நீண்ட நாட்களாக மாற்றப்படாமல் சுத்தமில்லாமல் அழுக்காக இருந்தன.

இந்த தலையணைகளில் நோயாளிகளின் உடலில் இருந்து உரிந்து விழுந்த தோல்பகுதிகள், தலையில் இருந்து உதிர்ந்த பொடுகுகள், வியர்வைதுளிகள் போன்றவைகளால் பிசுபிசுப்பான அழுக்கு ஏற்பட்டிருந்தது.

இது குறித்து அந்த ஆய்வு நிறுவனம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், தலையணையில் உள்ள அழுக்குகளால் 30 வகையான நோய்க்கிரிமிகள் உண்டாகின்றன. இவை சின்ன அம்மை, மஞ்சள் காமாலை மற்றும் தொழுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.

எனவே, தலையணைகள் மற்றும் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும்.   நர்சுகள் தங்கள் கைகளை தினசரி சுத்தம் செய்ய வேண்டும். தலையணையின் ஓரத்தில் ஏற்படும் கிழிசல்களை உடனுக்குடன் தைக்க வேண்டும். அதன் மூலம்தான் நோய்க்கிரிமிகள் உள்ளே புகுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆஸ்பத்திரிகளுக்கு மட்டுமல்ல, வீடுகளில் தங்கியிருக்கும் பொது மக்களுக்கும் ஒரு முன் எச்சரிக்கையாகும், தாங்கள் பயன்படுத்தும் படுக்கைகளையும், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

........................................................................................................

சமீபத்தில் எங்கள் ஊரில் பாலம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்தார்கள் அப்போது புறம்போக்கு இடங்களில் ஒரு 15 குடும்பத்தினர் குடியிருக்கின்றனர் அவர்களின் வீடு எல்லாம் காலி செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் அறிவித்திருந்தனர் இதையறிந்த மக்கள் என்ன செய்வது நமக்கு குடி இருக்க இடம் வேண்டும் என்றதும் தொகுதி எம்எல்ஏவிடம் முறையிடலாம் என்று முடிவானது இவர்கள் அனைவரும் அவரைப்பார்க்க கிளம்பிய செய்தி அவரை எட்டி அவர் உடனே ஊர் முக்கியஸ்தருக்கு போன் செய்து என்னைப்பார்க்க யாரும் வரவேண்டாம் எதுவாக இருந்தாலும் பிரச்சனை என்றால் நானே நேரில் வருகிறேன் என்று நேரில் வந்து ஊர் கிராம நிர்வாக அலுவலர், தாசில்தாரிடம் கலந்து ஆலோசித்து உடனே மாற்று இடம் ஏற்பாடு செய்தார்.

இதில் மிக்க பாராட்டப்பட வேண்டிய விசயம் எந்த பிரச்சனையாக இருந்தாலும் என் எண்ணிற்கு அழையுங்கள் நானே நேரில் வருகிறேன் என்று அவர் எண்ணை கொடுத்து சென்றுள்ளார் அவருக்கு நம் பாராட்டுக்கள்.

........................................................................................................

கடந்த ஆட்சியில் நில அபகரிப்பு பிரச்சனையில் இப்பதான் ஒரு சிலர் கைதாகி உள்ளனர் இந்த எண்ணிக்கை நிறைய இருக்கும் என எதிர்பார்க்கிறேன். தைரியமாக சென்று புகார் கொடுத்து தண்டனை வாங்கி தர நினைக்கும் பொது மக்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பாராட்டுகிறேன்..

நாட்டு நடப்பு
சமச்சீர் கல்வியின் வழிமுறைகளை அடுத்த வாரம் முழுவதும் தெரியவரும். இன்று மக்களின் முக்கிய நினைவே சமச்சீர்கல்வியின் மேல் தான்.

தகவல்

எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, தன் குடலையே கொடுத்து விட்டு தப்பிக்கும் கடல் வெள்ளரி மீனினங்கள், மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. கடலடியில் வாழ்வியல் பிரச்னைகள், உணவிற்கு போராட்டம், பாதுகாப்பின்மை என எத்தனையோ இன்னல்கள் வந்தாலும், அவற்றை தாக்கு பிடிக்கும் திறன்கள் பல உயிரினங்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளன. இவைகளின் உத்திகள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன.

உணவிற்கும், உயிர் பிழைக்கவும், இனப்பெருக்கம் செய்வதில் பல வினோதங்கள் மீனனிங்களிடம் உண்டு. உணவு, இடம் பாதுகாப்புக்கு ஒன்றையொன்று சார்ந்திருத்தல், இருபாலரும் உறவால் பலன் பெறுதல் என எத்தனையோ உறவு மலர்கள். அவற்றுள் சற்று வித்தியாசமானது கடல் வெள்ளரி. இவை தன் உடலினுள் மீனொன்று பதுங்கி வாழ அடைக்கலம் தருகிறது. சேற்றின் அழுக்கை தின்று, சுத்தப்படுத்தும் இயல்பு கொண்டது.

இத்தகை சிறப்பு வாய்ந்த இந்த கடல் வெள்ளரி, ஆள் விழுங்கி மீனிடமிருந்து தப்பிக்க பல தந்திரங்களை கையாள்கிறது. அவற்றுள் ஒன்றுதான் தனது குடலையே வெளியேற்றி விடுவது. தாக்க வரும் இனம் அதை தின்று விட்டு போய்விடும். குடலில்லாத வெள்ளி மீனுக்கு மீண்டும் குடல் உருவாகிவிடும். இவை மன்னார் வளைகுடா பகுதி கடலடியில் காணப்படும் ஒரு அரிய வகை உயிரினம்.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் சுந்தர் ஆனந்தமாயிருங்கள் என்ற பெயரில் பதிவெழுதிவருகிறார். இவரின் பதிவின் முக்கிய அம்சம் சொரியாசிஸ் பற்றி எழுதிவருகிறார் அதற்காக ஆலோசனைகளையும் வழங்குகிறார். இவர் தற்போது பதிவெழுதுவதுதில்லை அவரிடம் பேசிய போது நிறைய ஆர்ட்டிக்கள் கையில் இருக்கிறது வேலைப்பளு காரணமாக அதை பதிவிட இயலவில்லை என்றும் விரைவில் அனைத்தையும் பதிவிடுகிறேன் என்று கூறினார்.

உங்களுக்கு எதாவது தோல் நோய் பற்றி சந்தேகமோ அல்லது தோலில் எதாவது மாற்றம் இருந்து அது தோல் வியாதியாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தால் அவரை தொடர்பு கொள்ளவும்.


அவரின் மின் அஞ்சல்  sundarsiddha@gmail.com

கைபேசி எண் 9994063531

http://villiputturan.blogspot.com/




தத்துவம்
 
குழந்தையின் மழலை,
பைத்தியக்காரனின் பிதற்றல்,
மகானின் பொன்மொழி
இவற்றுக்கெல்லாம் பொதுவான ஒரு தன்மை உண்டு.இலேசில் புரியாது.
 
 
இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
கண்பார்த்து சிரிப்பவன் காரியவாதி
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

Monday, June 27, 2011

பெட்ரோல் விலை உயர்வு ஏன்?????


மீண்டும் பெட்ரோல் விலையேற்றம். ஒவ்வொரு முறை விலை ஏற்றத்தின் போதும் எதிர்கட்சிகள், லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்துவார்கள் பின்பு அரசு அதைப்பற்றி முடிவு சொல்லும் போது இது தேவையானது சர்வதேச சந்தையில் விலை உயர்வு அதனால் பெட்ரோல் விலை உயர்வு என அறிவிப்பார்கள் இது அனைவருக்கும் தெரிந்தது. இதைப்பற்றி முபமையாக தெரிந்து கொள்ளும் ஆவலில் நண்பரிடம் கேட்டேன் அவர் துக்ளக் இதழில் ஓர் கட்டுரை இதைப்பற்றி வந்து இருக்கு என எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். அக்கட்டுரை உங்களுக்காக...

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. அந்த விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யின் விலை உயர்வையே காரணமாக அரசு காட்டுகிறது. ஆனால் முழுமையான காரணம் அதுவல்ல.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை விலையில், அரசு விதித்த வரிகளே பாதிக்கும் அதிகமாகும். வரி வசூல் மூலம் நிதி திரட்ட உகந்த ஒன்றாக பெட்ரோலை மத்திய மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன.

எல்லா நாடுகளும் பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிக்கின்றன. ஜெர்மன், இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் அதிக வரி விதிக்கும் நாடுகளாக இருக்கின்றன. ஆனால், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகளே காரணம் என்று இவை கூறுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல என்கின்றன எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள்.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் 2004-2008 வரையிலான ஆண்டுகளில் தான் விற்பனை செய்த கச்சா எண்ணெயின் மதிப்பு 3,346 பில்லியன் அமெரிக்க டாலர். அதே காலக்கட்டத்தில் ஜி-7 என்னும் ஏழு நாடுகளின் அமைப்பில் அடங்கிய நாடுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதித்த வரிகளின் மூலம் பெற்ற வருவாய் 3,418 பில்லியன் டாலர்கள் என்கிறது. அதாவது எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகளுக்குக் கிடைத்ததைவிட அந்த எண்ணெயின் மூலம் ஜி-7 நாடுகள் திரட்டிய வரி வருவாய் அதிகம்.

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் கொடுக்கும் விலையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக வரிகளுக்கே செல்கிறது. கச்சா எண்ணெய்க்கு நுழைவு வரி, மாநிலங்கள் வசூலிக்கும் சுங்கம், துறைமுகக் கட்டணம், மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி(தமிழ்நாட்டில் இது 30 சதவிகிதம்) கல்வி வரி, மத்திய அரசின் விற்பனை வரி என்று பல வரிகளின் மூலமே பெட்ரோலின் விலை பூதாகாரமாக உயர்கிறது.

அரசு தனது சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்த வரி விதிப்பின் மூலம்தான் வருவாய் திரட்ட முடியும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. என்ன நோக்கங்களுக்காக வரி விதிப்பின் மூலம் வருவாய் திரட்டப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படுகின்றனவா?

உதாரணத்திற்கு, 1991-92ம் ஆண்டில் இருந்து எண்ணெய்த் தொழில் வாரியத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு விற்பனை வரியாக 84,337 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது. ஆனால் எண்ணெய்த் தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு 902 கோடி ரூபாயை மட்டுமே தந்திருக்கிறது.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை மானிய விலையில் தந்து கொண்டிருப்பதாகவும், அதனால் எண்ணெய் நிறுவனங்களும், அரசும் நிதிச் சுமையைத் தாங்க நேரிடுவதாகவும் அடிக்கடி கூறப்படுகிறது. இதில் கொஞ்சமும் உண்மையில்லை. 2009-2010-ம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியத் துறையின் மூலம் வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைகள் வாயிலாக தங்களது கஜானாவிற்குக் கொண்டு சென்ற தொகை 1,83,861 கோடி ரூபாய்.

அதே 2009-2010-ல் பெட்ரோலிய நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன்(ONGC) ரூ.16,767 கோடியும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.10,220 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1301 கோடியும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1,837 கோடியும், ஆயில் இந்தியா நிறுவனம் ரூ.2,610 கோடியும் லாபம் ஈட்டியுள்ளன. இந்த நிறுவனங்களின் ஒட்டு மொத்த லாபம் ரூ.32,735 கோடி ரூபாய். இது இறுதியில் அறிவிக்கப்பட்ட லாபம். ஆனால் உண்மையான லாபம் இதைப் போல ஐந்து மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை. அந்தத் தொகை எங்கே போயிற்று..?

எண்ணெய் நிறுவனங்கள் மிகவும் ஆடம்பரமான செலவுகளைச் செய்கின்றன. அத்துடன் இந்த நிறுவன ஊழியர்களின் சம்பளம் வேறு எந்தத் துறையிலும் கற்பனை செய்ய முடியாதது.

உதாரணத்திற்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 15 வருட அனுபவம் பெற்ற சாதாரணத் தொழிலாளியின் வருடச் சம்பளம் 8,39,757 ரூபாய். எம்.காம். பட்டம் பெற்ற டிரைவர்களின் சம்பளம் வருடத்திற்கு 22 லட்சம் ரூபாய். கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளர்(படித்தது 5-ம் வகுப்பு) பெறும் வருடச் சம்பளம் 8,56,731 ரூபாய். 8-ம் வகுப்பு மட்டுமே படித்து 1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டரின் தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய்.

எண்ணெய் நிறுவனங்களின் உண்மையான லாபம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவை ஒரு எடுத்துக்காட்டு.

மக்களுக்கு மான்ய விலையில் தந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். அதனால் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்கிறார்கள். அரசுக்கு நிதிச் சுமை என்கிறார்கள். கச்சா எண்ணெய்க்காக, எண்ணெய்ப் படுகைகளில் துரப்பணமிடும்போது, அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பிறகு கச்சா எண்ணெய் கிடைக்கிறது.

அந்தக் கச்சா எண்ணெயில் இருந்து சமையல் எரிவாயு, பெட்ரோல், நாப்தா, கெரசின், விமான எரிபொருளான வெள்ளை பெட்ரோல், டீசல் வகைகள், ஆயில் வகைகள், தார், மெழுகுகள் என பிரித்து எடுக்கப்படுகின்றன. இந்தப் பொருட்களின் மீது சுத்திகரிப்புச்செலவு, அவற்றின் மதிப்புக்குரிய வகையில் பிரித்து, மதிப்புக் கூட்டப்படுகிறதா..?

எத்ரேஆலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..?

பெட்ரோலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..!?

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா, ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 5,515 கோடி ரூபாயை மான்யமாகத் தந்திருப்பதாக அறிவிக்கிறார்.

எண்ணெய் விநியோக நிறுவனங்கள் 3,661 கோடி ரூபாயை லாபம் ஈட்டியுள்ள காலாண்டில் எதற்காக மான்யம் தரப்பட வேண்டும்..? கூடுதலான விலையில் விற்றிருக்கும் எண்ணெயை குறைந்த விலையில் அந்த நிறுவனங்கள் விற்றனவாம். அதனால் அந்த இழப்பை ஈடுகட்ட ONGC மான்யம் தருகிறதாம்.

விற்றிருக்க வேண்டிய விலை என்று ஒரு தொகையை இவர்களாக நிர்ணயித்து விற்ற விலையுடன் ஒப்பிட்டு இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லி மான்யம் அளிக்கிறார்கள். ஆக விலை குறைத்து விற்ற நிலையிலேயே அந்த நிறுவனங்கள் 3661 கோடி லாபம் ஈட்டியிருக்கின்றனவே. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நாங்கள் மான்யம் தந்து நஷ்டப்படுகிறோம் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்தும் யுக்தியா இது..?

மான்யம் என்பது என்ன..? அதிக விலைக்கு ஒரு பொருளை கொள்முதல் செய்து, அதைக் குறைந்த விலைக்கு மக்களுக்கு விநியோகம் செய்யும்போது ஏற்படும் நஷ்டத்தை அரசே ஏற்றுக் கொள்வதுதானே மான்யம்..

உதாரணத்திற்கு, மத்திய அரசு நெல்லை கொள்முதல் செய்து அரிசியாக்கும்போது ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 13 ரூபாய் ஆகிறது. அதை மத்திய அரசு, மாநில அரசுக்கு மூன்று ரூபாய்க்குத் தருகிறது. மாநில அரசு அதை மக்களுக்கு ஒரு ரூபாய்க்குத் தருகிறது. ஆக, மக்கள் ஒரு ரூபாய் விலையில் பெறும் ஒரு கிலோ அரிசியில் மத்திய, மாநில அரசுகள் 12 ரூபாயை இழக்கின்றன. இந்த இழப்பை மக்களுக்கு அளித்த மான்யமாக ஏற்றுக் கொள்கின்றன.

இப்படிப்பட்ட தெளிவான முறை பெட்ரோலியப் பொருட்களின் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. காரணம், இவ்விஷயத்தில் மான்யம் என்று எதையும் அரசு தரவில்லை. மாறாக, வரிகள் என்ற பெயரால் லாபம் மட்டுமே அடைகிறது. அதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில், உண்மை நிலை என்ன என்பதை நிபுணர்கள் ஆராய்வது அவசியம்.

பெட்ரோல் விலை மீதான விலைக்கட்டுப்பாட்டை இப்போது அரசு நீக்கிவிட்டது. அதனால் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இனி பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படும் என்கிறது அரசு. கச்சா எண்ணெய் விலை ஏறினால், பெட்ரோல் விலை உயரும். கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் விலை குறையும் என்று இதற்கு அர்த்தம்.

ஆனால் கச்சா எண்ணெய்யுடன் விதவிதமான வரிகளும் சேர்ந்தே பெட்ரோலியப் பொருட்களின் விலையாக உள்ள நிலையில், இனி எந்த நிலையிலும் பெட்ரோல் விலை பெரிதாகக் குறைவதற்கான வாய்ப்பு மிக, மிகக் குறைவுதான்.

இக்கட்டுரை ஒரு மீள் பதிவு 8வது முறையாக பெட்ரோல் விலை ஏற்றத்தின் போது துக்ளக் இதழில் வந்த இக்கட்டுரையை தற்போதைய சூழ்நிலைக்கு சரியாக இருக்கும் என்று பகிர்கிறேன்....

தோழியும், மனைவியும்....


"குட்மார்னிங்"

"ம்... குட்மார்னிங்"

"எப்ப வந்த"

"இப்பதான் வந்தேன், பஸ்ல கூட்டம் கொன்னுட்டானுக, திங்கட்கிழமை காலைல ஆபீஸ் வருவதென்றாலே போர்தான்"

"ஆமாம்"

"ஏன் காலைல பொழம்பற"

"இந்த மேனேஜர் சோடப்புட்டி மெயில் அனுப்பி காலைலியே கொல்றான், இன்னும் ரெண்டு நாள்ள முடிச்சு அனுப்பனுமா பாடாப்படுத்துறான்"

"விடு விடு ஆபீஸ்னா இதெல்லாம் சகஜம் நாம தான் கண்டும் காணாம போயிக்கனும்"

ம்..
"ஆமாம் அப்புறம் நேத்து என்ன பண்டுன"  உன் வருங்கால மனைவிய பார்த்தியா??  ஊர்ல அப்பா அம்மா எல்லாம் சைக்கியமா?

"எல்லாரும் நலம்" அவளைப்பார்த்தேன் கண்ணுலியே பேசறா, அவ கண்ணு பார்க்க பார்க்க பார்க்கனும் போலவே இருந்தது, அப்பறம் ஒரு அரை மணி நேரம் பேசிட்டு வந்துட்டேன்"

"என்ன சொன்னாங்க உங்க ஆசை வருங்கால மனைவி"

"கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் நிறைய பேசலாம் என்றால்"

"ஹா ஹா ஹா லவ்வு, கலக்குடா கலக்கு"

"காலைல வேளையப்பாரு வந்துட்டா வம்பிலுக்க..."

"ஏம்ப்பா நேத்து அவளைப் பார்த்தியே புடவை கட்டி இருந்தாலா சுடுதாரா"

ம்ம்ம் (  காலைல கடுப்பேத்தராலே, நாமும் ஆரம்பிப்போம்)

"புடவை கட்டு ஒரு முழம் மல்லிகை வைச்சுட்டு வந்திருந்தாள்"

"அப்படியா... சூப்பர்... புடவை என்ன கலர்ப்பா"

"மெரூன் கலர்"

"ஓ உனக்கு பிடிச்ச கலர்"

ஐயோ !!!   (கடுப்படிக்கிறாளே)

"சாப்பிட எதாவது கொடுத்தாங்களா"

"ம்... பில்டர் காபி, அவளைப்போலவே இருந்துச்சு"

ஓகோ!!!  "நீ என்ன வாங்கிட்டுப்போன"

"எதுக்குமா இப்படி கேள்வி மேல கேள்வி கேக்கற"

"ஏ நான் கேக்க கூடாதா" (இப்பவாவது சொல்டா நான் சொன்னது பொய் என்று)

"கேக்கலாம் அதுக்காக அவளைப்பத்தியே கேட்டுகிட்டு இருக்கியேன்னு கேட்டேன்.."

"சரி சரி நீ என்ன டிரஸ்ல போன"

"இப்படியே தான் போனேன்" (என்னடி உனக்கு வேனும்)

"குளிக்காமையா ??? "

"மேனேஜர் வர்றான் அடங்கு"


"அது போயிருச்சு உண்மைய சொல்லு, அப்புறம் அவ கிட்ட என்ன பேசுன"

"மனைவிகிட்ட என்ன பேசுனன்னு கேட்டா என்ன சொல்ல??  அது உன்கிட்ட சொல்ல மாட்டேன்"

" என்னம்மோ உயிர் தோழின்னு சொன்ன இப்ப சொல்ல மாட்டிங்கற, எதுவும் உங்கிட்ட மறைக்கமாட்டேன்னு சொன்ன, தினமும் உங்கிட்ட நடக்கறத சொல்லாம இருக்க மாட்டேன்னு சொன்ன போதுன்டா உன் உயிர் தோழி நடிப்பு இனி நீ உன் வேலைய பாரு நான் என் வேலைய பாக்கறன், நீ எங்கிட்ட சொல்லவும் வேண்டாம் பேசவும் வேண்டாம்"


"இல்லப்பா நான் என்ன சொல்ல வர்றேன்னா"

"வேலையப்பாரு பொய் பொய் உயிர் உயிர்ன்னு பொய், வேண்டாம் விடு நமக்கு ஒத்து வராது நீ திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இரு என்ன ஆளை விடு"

(அய்யய்யோ சண்டை போட்டுடாளே, இனி பேசலினா என்ன பன்றது)

(உடனே பாத்ரூத் போய் போனை எடுத்து ரவியிடம் பேசினான்)

"அடேய் பன்னாடை உம் பேச்சக்கேட்டு கல்யாணம் பொண்ணு பார்க்க போனேன்னு அவகிட்ட பொய் பேசி காலய்ச்சு இப்ப இருந்த நட்பும் புட்டுகிடுச்சி மவனே அவ மட்டும் இன்னிக்கு எங்கிட்ட பேசாம இருக்கட்டும் உனக்கு இருக்குதுடி இன்னிக்கு!! "

அடேய் நான் இப்படித்தான் பேசினேன் என் ஆபீஸ்ல எனக்கு பக்கத்துல இருந்த தோழி இப்ப எனக்கு லவ்வராயிருச்சு உனக்கு ஓர்க்கவுட் ஆகல நான் என்ன செய்ய... சரி சரி சோகத்தை தீர்க்க சாயங்காலம் வந்து சரக்கு வாங்கி கொடு..

"வாங்கித் தர்றேன்டா என்டோ சல்பான் வாங்கித்தர்றேன்"

இவங்கிட்ட ஐடியா கேட்டு இப்ப ஐயோ அம்மான்னு அடிச்சுக்ககிட்டு இருக்கேன் இவளத் தோழியா பிடிக்கறதுக்கு ஒரு வருசம் கஷ்டப்பட்டேனே... எல்லாம் போச்சு இந்த பன்னாடையால....

Friday, June 24, 2011

இதய நோய் வராமல் காக்க.....


இன்று அனைவரையும் தாக்கும் நோய்யில் இதய நோய்க்கு அதிக பங்கு உண்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்நோய் தாக்குகின்றது. இதற்கு மிக முக்கிய காரணம் உணவுப்பழக்கம் தான். இநநோய்யில் இருந்து தப்பிப்பது எப்படி என்று பார்ப்போம்...

எடையை குறையுங்கள், உடற்பயிற்ச்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள், நார்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள், டென்ஷன் அடையாதீர்கள்! என்று தான் எல்லாரும் சொல்வார்கள் ஆனால் அதற்கு பதில் உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

தற்போது நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் இதய நோய்க்குரிய சூழலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தினசரி 200ம் அதற்கு மேலும் வைட்டமின் “ஈ” எடுத்துக் கொள்வர்களுக்கு சர்வ தேச அளவில் 77 சதவீதம் இதய நோய்கள் வர வாய்ப்பில்லை என்கின்றனர் 2 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களை வைத்து ஆராய்ந்த ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள். 400 முதல் 600 யூனிட் வைட்டமின் “ஈ” எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இதய நோய்களே வருவதில்லையாம்.

இளவயதுக்காரர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும், நடு வயதுக்காரர்கள் இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கவும். வைட்டமின் “ஈ” உள்ள சோளம், பார்லி, ஓட்ஸ், தவிடு நீக்காத கோதுமை மாவு, முளைவிட்ட தானியங்கள், அவாகோடா பழம், கொட்டை உள்ள உணவுகள் (நிலக்கடலை போன்றவை), கீரைகள், சூரியகாந்தி விதைகள், தாவார எண்ணெய் (சூரியகாந்தி எண்ணெய்), ஆலிவ் எண்ணெய், கடுகு, கேனோலா எண்ணெய் போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி குரூப்பிலுள்ள போலிக் அமிலம் நல்ல இதய நோய் தடுப்பானாக செயல்படுகிறது என்கின்றனர் ஹார்வார்டு யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள். தினசரி 400 மி.கி., போலிக் அமிலம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு இதய நோய் அபாயம் குறைவு என்கின்றனர். போலிக் அமிலம் அதிகமுள்ள உணவுகள் ஆரஞ்சு சாறு, கீரைகள், பச்சைக்காய்கறிகள், முளை கட்டிய பருப்புகள்.

இதயத்தில் கொலஸ்ட்ரால் தேங்கினால் ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால், இதயச் செயலிழப்பு ஏற்படும். இதைத் தடுப்பதில் அமிலச் சத்தான “ஒமேகா 3″ வேகம் காட்டுகிறது என்கிறார் வாஷிங்டன் நேஷனல் ஹெல்த் சென்டர் ஆராய்ச்சியாளர் சிமோபவுலாஸ். இந்த சத்து மீனில் அதிகம் உள்ளதால் மீன் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் அபாயம் இல்லை என்கின்றனர்.

உடலில் கொழுப்பு சேர விடாமல், “ஒமேகா 3″ தடுக்கிறது. எனவே, வாரத்திற்கு இருமுறை சால்மன், புளூபிஷ், மகிரால் வகை மீன்களை உண்ண சிபாரிசு செய்கிறார் சிமோபவுலாஸ். மீன் சாப்பிடாதவர்கள் வால்நட் பருப்பு, ப்ளாக்ஸ் ஆயில், சோயா, மொச்சை, ஆலிவ் ஆயில் போன்றவைகளை உபயோகியுங்கள் என்கின்றனர். ஆலிவ் ஆயில் இதய நோய் வரும் வாய்ப்பை 53 சதவீதம் குறைக்கிறதாம்.

இதய நோய்கள் அபாயம் இன்றி வாழ தினமும் அரை கப் மாதுளம் பழச்சாறு அருந்துங்கள் என்கின்றனர் இஸ்ரேல் நாட்டிலுள்ள ராம்பம் மருத்துவ ஆராய்ச்சி மைய அறிஞர்கள். மாதுளை சாற்றில், “பாலி பெனோல்ஸ்” என்ற இதயத்திற்கு நன்மை செய்யும், “ஆன்டி ஆக்ஸிடென்ட்” அதிகமாக இருக்கிறதாம்.

டால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத எண்ணெய் போன்றவற்றினால் ஆன உணவு பதார்த்தங்களை உண்ணாதீர்கள். அதிக கொழுப்பு சத்து நிறைந்த பாலாடைக் கட்டி, ஐஸ்கிரீம் போன்றவற்றை குறைவாக உபயோகியுங்கள் என்கின்றனர்.

அதிக உப்புத்திறன் கொண்ட “அஜினமோட்டோ”, சமையல் சோடா, சமையல் பொடி, போன்றவற்றை உபயோகிக்க கூடாது. உணவு உண்ணும் மேஜையிலிருந்து உப்பு தூவும் குடுவையை எடுத்துவிடுங்கள். உப்பிற்கு பதிலாக, எலுமிச்சை, பூண்டு மற்றும் வெங்காயம் கொண்டு உணவு தயாரிக்கவும்.

எப்பொழுதும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உண்ணுங்கள், ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி போன்றவற்றை உணவில் சேருங்கள். பீன்ஸ், உருளைகிழங்கு போன்றவற்றையும் உணவில் அதிகம் சேர்க்கவும். எல்லாவற்றையும் விட அதிக நீர் குடியுங்கள்.

Thursday, June 23, 2011

அஞ்சறைப்பெட்டி 23.06.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

3 வருட உத்திரவாதத்துடன் மாணவர்களுக்கு இலவச லேப்டாப், 2 வருட உத்திரவாத்துடன் மிக்சி, கிரைண்டர் இலவசம் கொடுத்தாலும் அதை தரமானதாக தருகிறார்கள் இதற்காகவே வரவேற்கிறேன்...


...............................................................................................

சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் கண்காட்சிக்கு சீமான் இலங்கை பொருட்களுக்கும், இலங்கை நிறுவனங்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது சந்தோசமான விசயம்...

தமிழனை அழிக்க நினைப்பவன் பொருளை தமிழன் ஏன் பயன்படுத்த வேண்டும்.

...............................................................................................

மீண்டும் இலங்கை தனது வேட்டையை ஆரம்பித்துள்ளது 23 மீனவர்களை கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. முதல்வர் பொருளாதார தடை போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதும் பழிவாங்குவதற்காகவே கைது செய்துள்ளனர்.

இப்பிரச்சனையில் பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்து மீனவர்களை நோக்கி மீண்டும் துப்பாக்கியை தூக்குவர் சிங்களர்கள்...


........................................................................................................

இந்தியாவை சேர்ந்தவர் ரெட்டி ஆலென். இவரது மனைவி டாக்டர் பத்மா ஆலென். இவர்கள் அமெரிக்காவில் புளும்பெர்க் நகரில் தங்கியுள்ளனர்.

புளும்பெர்க் மாநகராட்சியில் சிட்டி டைம் என்ற மிகப்பெரிய திட்டத்தை மேயர் மைக்கேல் தொடங்கியுள்ளார். இந்த திட்டப் பணிகளில் ரெட்டி ஆலெனும், அவரது மனைவி பத்மா ஆலெனும் ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.  

இது குறித்து மேன்காட்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் கணவன், மனைவி இருவரும் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும், போலியான ஆவணங்களை தயார் செய்தும் ரூ.2075 கோடி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நம்ம ஆளுங்க எங்க போனாலும் ஊழலில் தனியா நிக்கறாங்கப்பா....



  ........................................................................................................

இந்த ஆண்டு தென்மேற்கு பருமழை இன்னும் முழுவதும் பெய்யவில்லை. நிறைய மேட்டுக்காடுகள் எல்லாம் மழையை நோக்கி காத்திருக்கின்றன.


  ........................................................................................................
 
கேரளாவில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை தன் வியாபார விருத்திக்காக நிறைய அதிகாரிகளுக்கு அந்த பெண்ணை விருந்தாக்கி உள்ளான் பண வெறி பிடித்த ஒரு மிருகம்.

நாட்டு நடப்பு

இந்த வாரம் கனிமொழிக்கு மீண்டும் ஜாமீன் கிடைக்காததால் டெல்லி சென்று மகளை சந்தித்தார் முன்னாள் முதல்வர்.

சாருநிவேதிதா ஒரு பெண்ணுடன் சாட் செய்ததை தமிழச்சி வெளியிட்டு பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது இணைய உலகம்... இந்த விசயத்தில் யார் மேல் தவறு என விவாதிக்க விரும்பவில்லை
. இதில் இருந்து கற்றுக்கொள்வது சாட் செய்யும் போது கவனத்துடன் செய்யுங்க....
 
தகவல்


 
சூரிய மண்டலத்தில் தற்போது, பூமி, செவ்வாய், சந்திரன், வியாழன், புதன் சனி போன்ற 9 கிரகங்கள் உள்ளன. இவை சூரியனை சுற்றி வருகின்றன. இது தவிர ஏராளமான சிறிய கிரகங்களும் சூரியனைச்சுற்றி வருகின்றன. சூரிய மண்டலம் பற்றி சர்வதேச விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.

இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இடம் பெற்றுள்ளனர்.அப்போது சூரிய மண்டலத்துக்கு வெளியே 10 கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை பல லட்சம் வருடங்கள் வயது கொண்டவை. இதில் ஒரு கிரகம் சூரிய மண்டலத்தில் உள்ள நெப்டியூன் கிரகத்தைப் போல் இரு மடங்கு பெரிது.

சனி கிரகம் போன்ற மற்றொரு கிரகமும் சூரிய மண்டலத்தின் வெளியே உள்ளது. பிரான்ஸ் நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் சக்தி வாய்ந்த டெலஸ் கோப்பை பயன்படுத்தி இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 10 கிரகங்களில் 7 கிரகங்கள் வெப்பம் அதிகம் நிறைந்தவை.


அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் சுபாவின் குறிப்புகள் என்ற பெயரில் சுபா என்பவர் எழுதி வருகிறார். உடல் நலம், அழகுக்குறிப்புகள், உணவுகள், உடல் பாராமரிப்புக்கான டிப்ஸ்கள் என்று ஒவ்வொரு பதிவும் அனைவரும் அறிய வேண்டிய பதிவாக எழுதி வருகிறார். இவரின் பதிவுகள் அனைத்தையும் ப்ரிண்ட் எடுத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் படிக்கும் படியான பயனுள்ள பதிவுகள்...
http://subawin.blogspot.com/


தத்துவம்

சிந்திக்காதவன் முட்டாள், சிந்திக்கத் துணியாதவன் கோழை, சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்.

Wednesday, June 22, 2011

உடலுக்கு புத்துணர்ச்சியை ஊட்டும் கொத்தமல்லி


இயற்கை உணவுவகைகளைப் பற்றி பதிவெழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது. இன்றைய இயந்தர சூழ்நிலையில் நமது உணவுப்பழக்கங்கள் மிக மாறிவிட்டது. நம் வேகத்திற்கு ஏற்பவும் நேரத்திற்க ஏற்பவும் உணவுப்பழக்க வழக்கங்ளும் மாறிவிட்டன என்றால் அது மிகையாகது.

நம் வீட்டு அருகே கிடைக்கும் பல அற்புதமான பழங்கள், காய்கறிகள் மிக முக்கியமாக கீரை வகைகளை நாம் அதிகம் உண்பதில்லை அதற்கு காரணம் அது சமைக்கும் போது ஏற்படும் நேர விரயமாக கூட இருக்கலாம். கீரைகள் வாரம் மும்முறை உண்டு வந்தால் நிறைய நோய்களை வராமல் தவிர்க்க முடியும். அந்த வகையில் இன்று அனைவரும் அதிகம் பயன்படுத்தும் வாசனையான மற்றும் மருத்துவ குணமுள்ள கொத்தமல்லியை பற்றி பார்ப்போம்.

மக்கள் பிணி நீங்கி  நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவு கின்றன.  இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம்.  மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும்.

கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும்.  இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப் படுகிறது என்பதை அறிந்திருக்க மாட்டோம்.


நம் முன்னோர்கள் உணவின் மூலமே நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதற்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவை சாட்சிகள்.

கடையில் காய் வாங்கினால் ஏதோ கொசுறாக கொத்தமல்லித் தழையைக் கொடுப்பார்கள்.  அதை நாமும் வாங்கி பயன்படுத்துவோம்.  ஆனால் அதிலுள்ள மருத்துவப் பயனைஅறிந்ததில்லை.

பசுமையான, மணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையான விதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லி.  இதன் விதைகளுக்கு தனியா என்று பெயர்.  இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும்.

நஞ்சை, புஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர்.  இதன் விதை மிகவும் மருத்துவப் பயன் கொண்டது.   இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை.  இது இந்தியா முழுவதும் பணப்பயிராகப் பயிரிடப் படுகிறது.

இது கார்ப்புச் சுவை கொண்டது.  குளிர்ச்சித் தன்மையுடையது.  சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயுவகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டது.

கொத்துமல்லிக் கீரையுண்ணில் கோரவ ரோசகம்போம்
பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண்- சத்துவமாம்
வெச்செனவே போகம் விளையுஞ் சுரந்தீருங்
கச்சுமுலை மாதே! நீ காண்
-அகத்தியர் குணவாகடம்
பொருள்
 
சுவையின்மை, சுரம் நீங்கவும், உடலை வன்மையாக்கவும், விந்துவைப் பெருக்கவும் உதவும்.

கொத்தமல்லியின் பயன்கள்

சுவையின்மை நீங்கும்.

வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணிக்கச் செய்யும்.

வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும்.  மலச்சிக்கல் நீங்கும்.  

இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற அசடுகளை வெளியேற்றும்.  மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.

புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.

கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்  கண் சூடு குறையும்.

சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும்.  மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.

உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல்.  இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.  இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.

நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.  மன அமைதியைக் கொடுக்கும்.

உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.  விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும்.  இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும்.  இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வாய் நாற்றத்தைப் போக்கும்.  பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.

சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.

சொரசொரப்பான தோலை மிருதுவாக்கும்.

கொத்தமல்லி இலை     – 1 கைப்பிடி
சின்ன வெங்காயம்    – 5
மிளகு        – 10
சீரகம்        – 2 தேக்கரண்டி
பூண்டு        – 5 பல்
மஞ்சள் தூள்        – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை    – 1 கொத்து
உப்பு         -  தேவையான அளவு

எடுத்து நீர் விட்டு சூப் செய்து காலை, மாலை, டீ, காபிக்கு பதிலாக இதனை அருந்தி வந்தால் உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.

கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.

5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.

கொத்தமல்லி சூரணம்

கொத்தமல்லி     – 300 கிராம்
சீரகம்        – 50 கிராம்
அதிமதுரம்        – 50 கிராம்
கிராம்பு        – 50 கிராம்
கருஞ்சீரகம்        – 50 கிராம்
சன்னலவங்கப்பட்டை 50 கிராம்
சதகுப்பை        – 50 கிராம்

இவை அனைத்தையும்  இளவறுப்பாய் வறுத்து பொடி செய்து சலித்து 600 கிராம் வெள்ளை கற்கண்டு பொடியுடன் கலந்து வைக்கவும்.  இந்த சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.
கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.

காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும்.  இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது.

இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால்  சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்.

Tuesday, June 21, 2011

உங்கள் காதலி உங்களையே சுற்றி வர (19+)

கடவுள் எல்லாவற்றையும் கொடுத்தாலும் அவர் கொடுத்த ஆறாம் அறிவை ஒழுங்காக பயன்படுத்தாமையால் வருகிற வினைதான் சிக்கல்கள். ஒரு குடும்பத்தில்  சிக்கல்கள் என்றால் அடிப்படையான காரணத்தை பார்த்தால் பிரதானமாக இருப்பது திருப்தியற்ற தாம்பத்திய உறவு தான். எனவே சுமூகமான செக்ஸ் நிச்சயம் ஒரு சந்தோசமான வாழ்க்கைக்கு உதவும். அதற்கு  சிறந்த விழிப்புணர்வு அவசியம். அது தொடர்பான சில டிப்ஸ்.

 
1 )சுயநலகாரனாய் இருக்க வேண்டாம்

இந்த விடயத்தில் பெருன்பான்மையான சமயத்தில் ஆண்களின் ஆதிக்கமே கொடிகட்டி பறக்கிறது.அதாவது ஆண்கள் தான் எஜமானர்களாகவும் பெண்கள் அடிமைகளாகவும் உள்ளனர்.இது தவறு.ஆண் பெண் இருவரின் ஆதிக்கமும் சம அளவில் இருக்க வேண்டும். அதாவது ஆண் தனது இஷ்டத்துக்கு ஆட முடியாது.ஒவ்வொரு செயற்பாடும் இருவரின் மனம் ஒன்றியே நடக்க வேண்டும்.உதாரணமாக உடலுறவின் புதிய பரிமாணங் களை படைக்கிறேன் என்று கிளம்புபவர்கள் பலர் அதனால் தம் ஜோடி  படும் துன்பங்களை அறிவதில்லை.எனவே ஆண் தனக்கு தோன்றும் விருப்பங்களை போல் தனது துணைக்கும் சில விருப்பங்கள் இருக்கும் என புரிந்து நிறைவேற்ற பழக வேண்டும்.

2 )புரிந்து கொள்ளுங்கள்

பெண்கள் மனதை அறிவது கடினம என்பார்கள். அதற்காக சும்மா விட முடியாது.குறிப்பாக இந்த விடயத்தில் அவர்களின் மனது உங்கள் சட்டை பையில் என்றால் நீங்கள் தான அவளது ஒரே ஒரு ஹீரோ. இதற்காக நீங்கள் இருவரும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.எந்த வெட்கமோ தயக்கமோ இருக்க கூடாது. நண்பர்களுடன் கதைப்பதை போல் இயல்பாக இருவரும் கதைப்பதின் மூலம் இருவரின் விருப்பு வெறுப்புக்கள் புரியப் பட்டு எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக இருக்கும். நீங்கள் உங்கள் உங்கள் விருப்பங்களை திணிப்பதற்கு பதிலாக அவளின் விருப்பத்தை அறியுங்கள். அதே நேரம் உங்கள் விருப்பங்களின் தொடர்பான நிலைப்பாட்டையும் அறிய முயலுங்கள்.

3 )பச்சையாக கதைக்கலாம்

இது சற்று கடினமானது ஒன்று தான். நிங்கள் உங்கள் துணையுடன் மேற் கூறியவாறு இந்த விடயத்தில் ஒரு நல்ல புரிந்த்துனர்வை பேணுமிடத்து இது சுலபம். ஏனெனில் இப்படியான பேச்சுக்கள்  இருவருக்கு நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும். மேலும் இறுக்கமான மன நிலையில் இருந்தது ஒரு பார்க்கின்ற மனநிலைக்கு எடுத்து செல்லும். இது மேலும் உங்கள் துணையின் மனதை அறியவும் காட்டும் reactions  இல் இருந்து அடுத்த கட்டத்துக்கு செல்வது தொடர்பாக நீங்கள் சிந்திக் கலாம். “I’d like to (blank) your beautiful (blank) while softly squeezing your (blank),”என்று சொலவதில் தவறில்லை. தமிழில் எழுதினால் மோசமாகி விடும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.

4 )நல்ல சூழலை ஏற்படுத்துங்கள்  

நிங்கள் தான் இதற்க்கு பொறுப்பு. எடுத்தோமா கவுத்தொமா என்று இல்லாமல் ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக சத்தம் இருக்க கூடாது.டிவி,ரேடியோ போன்றவற்றை நிறுத்தி விட வேண்டும். உங்களை ஒருவரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எவன் கதவை தட்டுவானோ, அல்லது நாங்கள் அபபடியிரிக்கிறோம் என்பதை கண்டு பிடித்து விடு வார்களோ என்று பயந்து கொண்டிருக்க வேண்டியது தான. இது தான் சில பெண்கள் தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் பிரதான காரணி. ஏனெனில் பெண்கள் மற்றவவர்கள் நம்மை கவனிப்பார்களோ என்று பயப்படுகின்றனர். அவர்கள் சுதந்திரமான சூழலையே விரும்புகின்றனர்.

5 )அவளை கடவுளின் வரமாக  மதியுங்கள்

சிலர் பெண்களை எதோ செக்ஸ் இயந்திரம் போலவும் பெண்கள் இந்த உலகத்தில் இருப்பதே செக்ஸ் இக்கும் பிள்ளை பெறவும் தான என்று நினைக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக சந்தோசமாக இருக்க முடியாது. முதலில் உங்கள் அனுபுக்குரியவளை கடவுள் உங்களுக்கு தந்த வரமாகவும் அவளூடாக தான் அவர் உங்களின் வாழ்கையை வசந்தமாக வைத்திருக்க போகிறார் என்பதை நீங்கள் புரிந்தது கொண்டாலே நீங்கள் அவளை கொண்டாட அவள் உங்களை கொண்டாடுவாள். எனவே அவளுடலை பாவித்து விட்டு எரியும் plastic tea cup போல நினைக்காமல் அதை உங்கள் மனதின் வடிவமாக பாருங்கள். பிறகு உங்கள் வாழ்வில் வசந்தம் மட்டும் தான்.

Monday, June 20, 2011

டிவி அதிகம் பார்ப்பதால் இளைஞர்களுக்கு ஏற்படும் விளைவுகள்

அனைத்து பெற்றோர்களும் தமது குழந்தைகள் அனைத்து விசயத்திலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று பல அறிவுரைகள் வழங்குவார்கள் ஆனால் அவர்களே அதிக நேரம் தொலைக்காட்சியில் செலவிடுவார்கள். இன்னும் சில பேர் குழந்தைகளை ஒரு அறையில் விட்டு அடைத்துவிட்டு நீ படி என்று கூறிவிட்டு இவர்கள் சத்தம் மெதுவாக வைத்து தொலைக்காட்சியை ரசிப்பார்கள்.

இன்னும் சில பெற்றோர்கள் இந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் பார் என்று அவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியைப்பார்க்க கருணை காட்டுவார்கள். இதில் பெற்றோர்கள் மேலும் தவறு நிறைய உணடு.

இப்பிரச்சனையில் இருந்து விடுபட தினமும் குறிப்பிட்ட ஒரு நேரத்தை ஒதுக்கி அதில் குழந்தைகளுக்கு தேவையான நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிக்கலாம். அப்போது குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் பார்த்தால் போதும் என்ற மனநிலை உருவாகும். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பாதால் குழந்தைகளுக்கு மனதளவில் பல விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தொலைக்காட்சி அதிகம் பார்க்கப்படுவதால் ஏற்படும் சில விளைவுகள்

முரட்டுத்தனம்
 

ஒருவர் 20 வயதை அடையும் போது ஏறக்குறைய 200 000  சண்டை காட்சி களையும் , 50 000 கொலைகளையும்   தொலைகாட்சிகளில் பார்ப்பதற்கான சாத்திய கூறுகளும் சில இடங்களில் காணப்படுகிறது. அண்மையில் குறிப்பாக சிறுவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது ,  1 - 3 மணித்தியாலங்கள் வரை தொலைகாட்சி பார்க்கும்,22 .5 % ஆன  சிறுவர்கள் மற்றயவர்களுடன் சண்டை,களவு என்பவற்றில் ஈடுபட்டுள்ளார்கள். 
05 மணித்தியாலங்களிற்கு மேல் பார்க்கும் போது  இந்த 22 .5 % - 28 .8 % க்கு உயர்வடைகிறது .இருந்தாலும் 01 மணித்தியாலத்திற்கும்  குறைவாக தொலைகாட்சி பார்க்கும் 5 .7 % ஆன சிறுவர்களும் தப்பான நடவடிக்கை களில் ஈடுபடுகிறார்கள் . இதற்கு, வீடுகளில் சிறுவர்கள் பெற்றோரால் துன்புறுத்தப்படுவதும் ஒரு காரணியாக அமைகிறது .

 
தனிமை போல உணருதல்


சில தொலைகாட்சி நிகழ்சிகளிலும் ,படங்களிலும் வருகிற கதாபாத்திரங்கள் சில பிரச்சனைகளில் மாட்டுபட்டு இருப்பது போல காட்டுவார்கள் . அத்துடன் வாழ்க்கையில் வெற்றி பெற தவறியவர்கள் சமூகத்தில் இருந்து விலகி தனியாக வாழ்வது போல காட்டுவார்கள் . 


படமாக இருந்ததால் 02 மணித்தி யாலங்களுக்குள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அனால் இதுவே தொடர் நாடகங்களாக இருந்ததால் 02 வருடங்களுக்கு பின்  நாடகம் முடியும் போதே பிரச்சனைகளில் இருந்து விடு படுவது போல காட்டுவார்கள். 

இவ்வாறான படங்களயும் , நாடகங்களையும் தொடர்ச்சியாக சிறுவர்கள் பார்க்கும் போது  நடிக நடிகைககளை Role Model ஆக பின்பற்றும் இவர்களும் பிரச்சனைகளில் மாட்டுபட்டு தனியாக வாழ்வது போல உணர்ந்து தப்பான முடிவுகளை எடுக்கிறார்கள் ., காலப்போக்கில் மனிதர்களோடு பழகாமல் உயிர் அற்ற பொருட்களுடன் [ விளையாட்டு பொருட்கள்  ] கதைத்து வாழ்க்கையை நடத்துகிறார்கள் .

 
ஒரு விடயத்தில் கவனம் [ concentration ] செலுத்த முடியாமை
 
சிறுவர்களை கவர்வதற்காக சிறுவர் தொலைகாட்சி நிகழ்சிகள் மிகவும் வேகமாகவும், நிறங்கள் அதிகமானதாகவும் , மிகவும் தெளிவாகவும் காட்டப்பட்டு இருக்கும். காலப்போக்கில் சிறுவர்கள் இந்த வேகத்திற்கு இயல்படைந்து விடுகிறார்கள். பாடசாலைகளில் ஆசிரியர்கள் பாடங்களை விரைவாகவும் , குறைந்த நேரம் மட்டுமே படிப்பிக்க வேண்டும் என இந்த சிறுவர்கள் எதிர் பார்க்கிறார்கள் .


சிறுவர்கள் அதிக நேரம் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் திணறு கிறார்கள்.ஆராய்சியில் ஒரு நாளைக்கு 02 மணித்தியாலங்கள் சிறுவர் களுக்கு TV பார்க்கவும் ,Games விளையாடவும் கொடுத்தபோது அநேக மானோர் சிறிது நாட்களின் பின்னர் பாடங்களில் கவனம் செலுத்த சிரமப் பட்டுள்ளார்கள்.

 
கனவுகளை மாற்றுகிறது
 
எங்களில் அநேகமானோருக்கு கனவுகள் [Dreams ]கருப்பு வெள்ளையில் தான் வருகிறது . 50 பேரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி  [ இவர்களில் பாதிபேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் , பாதிபேர் 55 வயதுக்கு மேற் பட்டவர்கள் ] ,இவர்கள் காணும் கனவுகளை ஒரு புத்தகத்தில் குறித்து வைக்க கூறி உள்ளார்கள் .

இறுதி முடிவை பார்த்த போது 25 வயதுக்கு உட்பட்டவர்களில் அநேக மானோர்  கண்ட கனவுகள் பல நிறங்களாக  [colourful ] உள்ளது . 55 வயதுக்கு மேற் பட்டவர்களில் அநேகமானோர்  கண்ட கனவுகள் கருப்பு வெள்ளையில் வந்துள்ளது .55 வயதுக்கு மேற் பட்டவர்கள் அந்த காலத்தில் கருப்பு வெள்ளை தொலைகாட்சியை பார்த்தமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது .

 
என்ன பார்க்கிறோம் என அறியாத வயது
 
தற்போது குழந்தை எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் தொலைகாட்சிகளில் போகும் பாட்டுகளுக்கு தனது கால்களை அசைத்து நடனம் ஆடுகிறது .இதை வீட்டுக்கு வரும் எல்லோரிடமும் பெற்றோர்கள் பெருமையாக சொல் கிறார்கள்.29 மாதங்களே ஆன குழந்தைகளிடம் நடந்த ஆராய்ச்சியின் போது,

அதிகம் TV பார்த்த குழந்தைகள் எதிர் காலத்தில் கணக்கு பாடத்தில் குறைவான புள்ளிகளையும் , வகுப்பறைகளில் சோம்பலாகவும் இருப்பதாக கூறுகிறார்கள் .பிரான்ஸ் நாட்டில் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது .

 
உடல் பருமன்
 

TV ஐ தொடர்ந்து பார்ப்பதால் நாம் மற்றைய வேலைகளை செய்யாது ஒரே இடத்தில் இருந்து கொண்டு நொறுக்கு பண்டங்களை சாப்பிடும் போது calories இழக்கப்படாது உடல் பருமன் அசுர வேகத்தில் கூடி விடுகிறது . நடத்தப்பட்ட ஆராச்சியில் TV ஐ குறைவாக பார்த்தோர் , தினமும் 05 மணித்தியாலங்கள்  TV ஐ பார்த்தோரை விட 120 calories ஐ இழந்துள்ளார்கள்.

 
இன்னும் நிறைய காரணங்கள் இருக்கலாம் விடுபட்டவைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்..
தொலைக்காட்சி அதிகம் பார்ப்பதை தவிர்க்க ஒரு வழி இருக்கிறது... என்ன வென்றால் அந்நேரத்தில் நிறைய படியுங்கள்...

Thursday, June 16, 2011

என் தேவதை...(சிறுகதை)


“சத்தியமா உன்ன நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று சொன்ன என் தேவதையை உற்றுப் பார்த்தேன்.பொய் சொன்னதாக தெரியவில்லை. பத்து வருட காதல், விவரிக்க வார்த்தையில்லை.எங்கே நிகழ்ந்தது தவறு என்பதை யோசிக்கும் முன்னமே அவள் என்னை விலகி நடக்க ஆரம்பித்திருந்தாள்.அவள் வீட்டு நாய்க்குட்டி போல அனிச்சை செயலாய் அவள் பின்னே நடக்க ஆரம்பித்திருந்தேன்…

“ரம்யா please என்னன்னு தான் சொல்லிட்டு போயேன்” என்ற என் குரல் எனக்கே சரியாய் கேட்கவில்லை. என் தேவதை என்னை கடந்து main கேட்டை அடையும் போது தான் சுய நினைவு வந்தது அவள் hand bag என்னிடம் இருந்தது. அவளுக்கும் அது தோன்றியிருக்க வேண்டும். கோபம் தணியாத அதே முகத்துடன் எனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். கோபத்தில் அவள் முகம் இன்னமும் சிவப்பாய் இருந்தது. மோதலில் ஆரம்பித்த எங்கள் காதல் மோதலிலே முடியுமென்று கனவிலும் நினைக்கவில்லை. “என் bagஅ குடு” என்று கை நீட்டியபடி வந்தவளை என் கைக்கொண்டு தடுத்து “ரம்யா please எதுன்னாலும் உட்கார்ந்து பேசலாம் வா” என்றேன். “அப்போ இவ்ளோ நேரம் பேசினதெல்லாம் செவிடன் காதில ஊதின சங்கா… நீயெல்லாம் திருந்தவே மாட்டே டா” என்று இன்னமும் கோபம் குறையாத முகத்துடன் பேசிவிட்டு, அவள் bagயை என்னிடமிருந்து பிடுங்கி கொண்டு விலகி நடந்தாள்…

என் நினைவுகள் 10 வருடங்களுக்கு முன்னே போனது. +1 ல் என்னுடைய ஸ்கூலில் அவள் சேர்ந்திருந்தாள். 10ல் நான் தான் school first. ஆனால் +1ல் ஒரு term test, quaterly, half yearly exam என எதிலும் நான் class first வரவேயில்லை. எல்லாவற்றிலும் அவள் தான் first நான் second. இயல்பான் ஒரு கோபம் அவள் மீது வந்தது. ஒல்லியாய் ஒரு உருவம், கொஞ்சமாய் தலைமுடி, sharp ஆய் கண்கள். பார்த்தவுடனே அவளை எனக்கு பிடிக்காமல் போயிற்று. “அவள் மூஞ்சியும் முகரையும்” என்று அவள் கண்ணெதிரே comment செய்ததுண்டு. ஆனால் அவள் கவனம் எப்போதுமே படிப்பில் மட்டும் தான்.

என்ன தான் அவள் class first வாங்கினாலும் எப்போதுமே நான் தான் mathsல் first. ஒரு நாள் அவள் என்னிடம் வந்து “சஞ்சய் if you dont mind, உங்கிட்ட ஒரு 2 minutes பேசலாமா” என்றாள். “என்ன” என்றேன் அவள் முகத்தைப் பார்க்காமலே. ” நான் maths ல கொஞ்சம் weak, எனக்கு maths சொல்லி கொடுப்பியா” என்றாள். ” hey sorry நான் யாருக்கும் சொல்லிக் கொடுக்கமாட்டேன்” என்று மூஞ்சில் அடித்த மாதிரி சொல்லிவிட்டேன். எனக்கே தெரிந்தது first rank எடுக்க முடியாத கோபத்தை காட்டுகிறேன் என்று. ” ஓ அப்படியா சாரி” என்றபடி அவள் இடத்திற்கு சென்றாள்…

அதுக்கு பிறகு அவள் என்னிடம் எதுவும் பேசவில்லை. ஒரு இரண்டு மாதம் போயிருக்கும் திடீரென ரம்யா என்னிடம் கோபத்துடன் பேசினாள். “ஏன் அன்னைக்கு அப்படி எங்கிட்ட சொன்ன, எனக்கு தெரியும் உன் friends க்கு நீ maths ல ஹெல்ப் பண்றே னு, சொல்லிக் கொடுக்க இஷ்டமில்லைன்னு சொல்லியிருக்கலாம்ல. Its ok நீ first rank வாங்கலைன்னு கஷ்டம் உனக்கு. Don’t worry இந்த annual exam ல நீ தான் first வருவே +2 ல ம் நீ தான் first வருவே. நீ நினைச்சா மாதிரி GCT, Computer Science தான் கிடைக்கும் all the best” என படபடவென பேசிவிட்டு நகர்ந்தாள்….

எனக்கோ பயங்கர ஆச்சரியம் இவளுக்கு எப்படி இதெல்லாம் தெரியுமென்று. விசாரித்து பார்த்ததில் விஷ்ணு தான் இதையெல்லாம் சொன்னது தெரிந்தது. அடுத்த ஒரு மாசத்தில் annual exam. எனக்கு துளி கூட நம்பிக்கையில்லை நான் class first/school first வருவேன் என்று அதுக்கு தான் ரம்யா இருக்காளே. ஒரு மாத லீவில் அவளை சுத்தமாக மறந்துவிட்டேன்.

Annual result வந்த அன்று, நானும் விஷ்ணுவும் schoolக்கு சென்றோம். அங்கே எனக்கான ஆச்சரியம் காத்திருந்தது. school entranceல் ராகுல் தான் என்னை முதலில் பார்த்து எனக்கு wish பண்ணினான். “Congrats டா மச்சான் நீ school first டா” என்றான். என்னால் நம்பவே முடியவில்லை.
அப்போது ரம்யா cycle ஐ தள்ளியபடி என்னருகில் வந்தாள். “Sanjay, you made it, congrats” என்றாள் சிரித்தபடி… எப்படி இவளால் தோல்வியை தாங்கிக்கொள்ள முடிகிறது ? என் character க்கு just opposite ஆக இருந்தாள். சின்ன தோல்வியைக் கூட தாங்கி கொள்ள முடியாது என்னால். I felt guilty.

+2 classes ஆரம்பித்து ஒரு வாரம் போயிருக்கும். chemistry labக்கு ரெண்டு ரெண்டு பேரா team form பண்ணாங்க… என்னவோ திடீர்னு ரம்யா தான் lab ல என் pair ஆ வரணும்ன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டேன், life லயும் அவ தான் என் pair ன்னு தெரியாமலே…..
நான் வேண்டின மாதிரியே ரம்யா தான் எனக்கு labmate ஆ வந்தா. இதுல ஆச்சரியப்பட ஒன்னுமே இல்ல. என் roll no 4 அவளது 28 class strength 48. Divide பண்ணா 24, obvious ஆ அவ தான் வருவா… mindக்கு தெரிஞ்சது மனசுக்கு அப்போ தெரியல….

மீண்டு(ம்) வந்தது என் நினைவுகள். அவள் போய் இரண்டு மணி நேரம் இருக்கும். எப்போதும் ஒரு நிமிடத்திற்கு 5 முறையாவது SMS அனுப்பும் அவளிடமிருந்து ஒரு SMS கூட வரவில்லை. என் எந்த அழைப்புக்கும் பதில்லை. பேசாமல் அவள் இருக்கும் hostelக்கே போனாலென்ன என்று தோன்றியது. பல்சரை start செய்தேன். 10 நிமிடத்தில் அவள் ஹாஸ்டலில் என் வண்டி நின்றது. “I am outsite your hostel. Please come down darling” என்று அனுப்பினேன். பதில் வராது என தெரியும். ஆனால் என்னைப் பார்க்க வருவாள் என ஒரு நப்பாசை தான்.

ஒரு 10 நிமிடம கழித்து ரம்யா வெளியே வந்தாள். ரொம்ப அழுது கண்ணெல்லாம் வீங்கியிருந்தது, இவ்வளவு அவள் அழும் அளவு நான் தவறொன்றும் செய்யவில்லை. “என்ன வேணும் இப்போ உனக்கு, நான் நிம்மதியா இருக்கிறது உனக்குப் பிடிக்கலையா.. எங்கயாவது கண் காணாத இடத்திக்கு போயிரு ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.

இவ (பொண்ணுங்களே) இப்படித்தான் சின்ன சின்ன விசயத்திற்கு எல்லாம் தாம் தூம் என குதிப்பார்கள். இவங்கள கடவுளால கூட புரிஞ்சுக்க முடியாது, “அப்படி என்னடி நான் தப்புப் பண்ணிட்டேன். என்னமோ பெரிசா சொல்ற. நீ பண்றத விடவா பண்ணிட்டேன். உன் தப்பு உனக்கு பெரிசா தெரியல. நான் பண்ணது மட்டும் பெரிசா தெரியுதா. என்னைப் புரிஞ்சுக்காதவ ஒண்ணும் எனக்கு தேவையேயில்லை. Good bye” திரும்பிக் கூட பார்க்காமல் என் வண்டியை start செய்து கிளம்பிவிட்டேன்.

என் room க்கு வந்த பிறகு, என் mobile ஐ தூக்கி எறிந்தேன் கோபத்தில் . அது எங்கே விழுந்தது என கூட பார்க்கவில்லை. சாப்பிட கூட தோன்றவில்லை. வெறும் தரையிலே படுத்துக்கொண்டேன். தனிமையை போல ஒரு கொடுமை இல்லை. அதும் நமக்கு பிடித்தவர்கள் இல்லை என்றால் வாழ கூட தோன்றாது.

எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. காலையில் சுள்ளென்று வெயில் பட்ட போது சுரணை வந்தது, Mobile ன் ஒவ்வொரு parts யும் தேடி எடுத்து switch on செய்தேன். 4 SMS வந்திருந்தது. ஒன்றை தவிர மற்றது எல்லாம் ப்ரியாவிடமிருந்து. “Sorry da sanju” என்று ஆரம்பித்து ஏன் mobile ல switch off பண்ணிருக்கே, “I knew its my mistake i m really sorry da. I didnt mean to hurt you. Please …. ” படித்து முடிக்கும் முன்னமே Darling Calling என்று ப்ரியாவின் picture display ஆனது.

சுரத்தே இல்லாமல் “என்ன” என்றேன். “எப்படிடா இருக்கே.. இன்னும் கோபம் போகலையா. Night full ஆ நா தூங்கவேயில்ல தெரியுமா நீ எப்போ mobile switch on பண்ணுவேன்னு திரும்ப திரும்ப டயல் பண்ணிட்டே இருந்தேன்”. நான் அவளிடம் செய்ததை அவள் எனக்காக செய்திருந்தது எனக்கே சற்று ஆச்சரியமாய் இருந்தது. நானாவது தூங்கிவிட்டேன் அவள் நைட் fulla தூங்காமல் ஒரு கிறுக்கி மாதிரி திரும்ப திரும்ப dial பண்ணிருக்கிறாள். நினைக்க நினைக்க நான் ஏன் இப்படி பண்ணினேன் என்று என் மீது கோபம் கோபமாய் வந்தது. அவளும் night சாப்பிட்டு இருக்கவில்லை.

“Sorry மா” என்றேன், அதற்கு மேல் என்ன பேசுவது என்றே தெரியவில்லை, 5 நொடி மெளனத்திற்கு பிறகு, “சரி போய் சாப்பிடு என்றேன்” “இல்ல உன்ன நேர்ல பார்த்தா தான் சாப்பிடுவேன், என்னப் பார்க்க வா” என்றாள். நேற்று “என் கண் முன்னாடி இருக்காத போ” என்று துரத்தியது இவள் தானா ???

“சரி 10 நிமிசத்தில ரெடியா இரு வரேன்” என்றபடி கிளம்ப தயாரனேன். அடுத்த 1/2 மணி நேரத்தில் அவளைப் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்த sky blue tops ம் black jean ம் அணிந்திருந்தாள். “ஐயா ரொம்ப சுறுசுறுப்பு” என்றபடியே என் பைக்கில் அமர்ந்தாள். “எங்க போலாம்” என்றேன். “நேத்து போன அதே beach, ஆனா no fights” என்றாள் கண்ணடித்தபடியே..

எதற்காக சண்டை அப்பறம் சமாதானம் என்று அவள் கடைசி வரை சொல்லவேயில்லை. நானும் கேக்கவேயில்லை.