Wednesday, November 30, 2011

அஞ்சறைப்பெட்டி 01.12.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
ஊரெங்கும் பெய்த மழையால் எல்லா சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மழையினால் பாதிக்கப்பட்ட சாலை சாலைகளை போர்க்காள அடிப்படையில் சீராக்கினால் மக்கள் மட்டுமல்ல மந்திரிகளும் சொகுசாக செல்லலாம்..

சமீபத்தில் பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் பயணிக்கும் போது 27 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 2 மணி நேரம் ஆனது அந்த அளவிற்கு சாலைகள் உள்ளன. அதை சாலை என்று கூற இயலாது. துளை விழுந்த சாலை என்று கூறலாம்..


சீக்கிரமா சாலையை செப்பனீடுங்கப்பா...
...............................................................................................

2ஜி வழக்கில் இருந்து அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு அவரும் வெளியே வந்து விட்டார். 3 ம் தேதி சென்னை வருகிறார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர் இந்த சிறை வாழ்க்கை கனிக்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கலாம்..

என்ன கனி வந்துட்ங்கா  ராசா ???????
...............................................................................................

முல்லைப்பெரியாறு விவகாரத்தையொட்டி தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன. ஆனால் கேரளா வாகனங்கள் மட்டும் தமிழகத்திற்குள் தங்குதடையின்றி வந்து போய்க் கொண்டுள்ளன.

வெட்கம் மானம் ரோசமுள்ள கேரளாக்காரர்கள் தமிழ்நாட்டுக்கு வராமல், தமிழ்நாட்டில் வாழாமல் கேராளவே திரும்பினால் இன்னும் சந்தோசம் தான்...
................................................................................................

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகேயுள்ள பியாஸ் என்ற நகரை சேர்ந்தவர் கிறிஸ்டோபி சேம்பியனாஸ் (35). இவரது மனைவி சார்லின் (25), இவர்களுக்கு பாஸ்டியன் என்ற 3 வயது மகன் இருந்தான். இவன் அங்குள்ள ஒரு நர்சரி பள்ளியில் படித்து வந்தான். படு சுட்டியான இவன் தன்னுடன் படிக்கும் சக மாணவனின் ஓவியத்தை வீணடித்ததாக கூறப்படுகிறது.
எனவே, பள்ளி நிர்வாகம் கிறிஸ்டோபியை அழைத்து கண்டித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மகன் பாஸ்டியனின் கை, கால்களை கட்டி வாஷிங் மெஷினுக்குள் போட்டார். பின்னர் சுவிட்சை ஆன் செய்து துணி சலவை செய்வது போன்று அவனை துவைத்து எடுத்தார்.
இதனால் அவன் தலை மற்றும் கை, கால்களில் அடிபட்டது.   இதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அவரது மனைவி சார்லின் இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து கிறிஸ் டோபியை தடுத்து நிறுத்தி சிறுவன் பாஸ்டியனை வாஷிங் மெஷினியில் இருந்து மீட்டனர். படுகாயங்களுடன் இருந்த அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இங்கு எத்தனையோ குடும்பங்கள் குழந்தை இல்லாத அல்லாடிகிட்டு இருக்கு இவனுக இப்படி இருக்கானுக..
................................................................................................

இன்று முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு மீண்டும் 0.85 பைசா குறைப்பு.. சந்தோசமான விசயம் தான் ஆனால் இது தொடரனும்... விலை குறையறத சொன்னேன்...
..................................................................................................

சில்லரை வர்த்தகத்திற்கு அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மீண்டும் நடக்க விடாமல் எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு..

எப்படியோ ஓட்டு போட்ட மக்களுக்காக கேள்வி கேட்கவில்லை என்றாலும், எதிர்ப்பாவது தெரிவிக்கிறார்களே...

முதன் முறையாக இந்த பிரச்சனைக்காக மத்திய அரசு கூட்டணிக்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு முன் பெட்ரோல் விலையேற்றம் மற்றும் மத்த பிரச்சனைகளில் கூட்டணி அரசை கண்டுகொள்ளாத மத்திய அரசு இன்று அழைக்கிறது...

கூட்டணிக்கட்சிகள் எப்படா கூப்பிடுவாங்க என்று இருக்கிறார்கள் இவர்களும் சென்று மத்திய அரசுக்கு நிச்சயம் ஆதரவளிக்கத்தான் போகிறார்கள்...

..................................................................................................

இன்று தமிழகமெங்கும் கடை அடைப்பு நடத்தி தமிழ்நாடு வணிகர்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்ன தான் எதிர்ப்பு தெரிவித்தாலும் செவிடன் காதில் சங்குதிய கதைதான்...
 ..................................................................................................

இன்று எய்ட்ஸ் தினம்.... எய்ட்சை எதிர்ப்போம் வராமல் காப்போம்... எய்ட்ஸ் நோயாளிகளை ஆதரிப்போம்...

..................................................................................................

அடுத்த இடைத்தேர்தலுக்கு தயாராகிறது தமிழகம் அது சங்கரன்கோயில் தொகுதி அநேகமாக இத்தொகுதியில் மதிமுக களம் இறங்குகிறது. ஆளும் கட்சிக்கும் , மதிமுகவிற்கும் சரியான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்...
தகவல்

தற்போது உலகம் முழுவதும் நீரிழிவு நோயினால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். அவைகளை தவிர்த்து இந்த நோய் குணமாகும் வழியை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். நெதர்லாந்தை சேர்ந்த லெய்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் புதிதாக ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி இரண்டாம் பிரிவு நீரிழிவு நோயை உணவு கட்டுப்பாட்டின் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். அவர்கள் குறைந்த சக்தி (கலோரி) தரும் உணவு வகைகளை 4 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும். அவர்களை பாதித்துள்ள நீரிழிவு நோய் குணமாகி விடும்.
இதன்மூலம் அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பது குறையும். இதன் மூலம் இருதயத்தில் கொழுப்பு படிவது தடுக்கப்படும். இதன்மூலம் இருதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் தினம் ஒரு ஆன்ட்ராய்டு அப்ளிக்கேசன் என்ற பெயரில் தினமும் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேசன் பற்றிய விபரங்களை தருகிறார்கள்.. மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது இப்பதிவு...



தத்துவம்
மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை.

முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே உலகம் உன்னை விழுங்கிவிடும்...

உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் தத்துதவத்தை நிலைநாட்டுவீர்.

Tuesday, November 29, 2011

ஆண்களுக்கான அழகு " டிப்ஸ் "

 
அழகு குறிப்புகள் என்றால் பெண்களுக்கு மட்டும் தான் எப்போதும் இருக்கும் ஆண்களுக்கு அதிகம் இருக்காது. நம் வீட்டிலேயே எதாவது நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் எனில் ஆண்கள் 5 நிமிடத்தில் புறப்பட்டு விடுவார்கள் பெண்கள் புறப்பட 50 நிமிடம் ஆகும் அவர்களின் அலங்காரத்துக்கு நேரம் செலவாகும்.
 
ஆண்களும் தற்போது அழகில் அதிக கவனம் செலுத்துகின்றனர் முக்கியமாக திருமணம் ஆகப்போகும் இளைஞர்கள் இவர்களுக்கான சில சிப்ஸ்...


முகம்
 
சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும்.

பாசிபயிறு மாவு, கடலைமாவு சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது முகம் அலசும் போதும் இந்த பேஸ்டை பயன்படுத்தவும்
 
பெரும்பாலான ஆண்கள் தங்களை அழகு படுத்தி கொள்வதே இல்லை.அவர்களை பொருத்த வரையில் முக அலங்காரம் என்பது ஷேவ் செய்வதும் மீசையை அழகு படுத்தி கொள்வது மட்டுமே
நீங்கள் முகசவரம் செய்து கொள்வது மட்டும் அல்லாமல் பேசியல் செய்து கொள்ளலாம்.முகத்திற்கு க்ரிம் தடவி உங்களை அழகு படுத்தி கொள்ளலாம்.அவ்வாறு முகபள பளப்புடனும் ஜொலிப்புடனும் இருக்கின்ற ஆண்களை தான் பெரும் பாலும் பெண்கள் விரும்புகின்றனர் எனவே கொஞ்சம் முகசவரம் செய்து கொண்டு முகத்தை அழகு படுத்திடுங்கள்
 
முகம் வரட்சியினை போக்க:

கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வரலாம்.

ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வரட்சி மாறும். வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம். இதைக் கை கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

உதட்டுக்கு வேசலீன் அடங்கிய லிப் ஜெல்களைப் பயன்படுத்தவும்

கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி நீட்டாக வைத்திருப்பதே ஆண்களுக்கு அழகு.
 
சருமம்
பெண்களை பொறுத்த வரையில் ஆண்கள் முகத்திற்கும் சருமத்திற்கும் கவனம் செலுத்துவதே இல்லை
 
.பெண்கள் ஆண்மை தன்மையை மட்டும் விரும்புவது இல்லை.அழகிற்கு தான் அதிக முக்கியத்துவம் தருவார்கள்.சில ஆண்களுக்கு முகசுருக்கங்களும் பருக்களும் அவர்கள் அழகையே கெடுத்து விடும்.
 
நீங்கள் உங்களுக்கான க்ரிம்களை தடவி உங்கள் சருமத்தை அழகு படுத்திடுங்கள். நீங்கள் சருமத்தின் மீது கவனம் செலுத்துங்கள்பின்பு பெண்கள் உங்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள்
பற்கள்
முகத்திற்கு புன்னகை சேர்க்கும் விதமாக விளங்குவது பற்கள். அப்பற்களை எவ்வளவு சுத்தமாக பாதுகாத்து கொள்ள வேண்டும்.ஆனால் புகைபிடிப்பது காபி டீ பருகுவது என பற்களின் நிறத்தை கெடுத்து கொள்கிறார்கள்
பற்களின் நிறத்தை பளிர்நிற வெண்மைக்கு கொண்மைக்கு கொண்டுவர பல சிகிச்சை முறைகள் வந்து விட்டன.தினமும் இருமுறை பல்துலக்குவதே பற்களின் பாதுகாப்புக்குப் போதுமானது. 
 
தலைமுடி
 
கூந்தல் ஆண்களும் தலைமுடியை பராமரிப்பதில் நல்லஆர்வம் காட்டுகிறார்கள்.
கவர்ச்சிகரமாக முடிவெட்டிக் கொள்வது, அவ்வப்போது ஸ்டைலை மாற்றிக் கொள்வது இளைஞர்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதுமட்டும் கேசப் பராமரிப்பிற்குப் போதுமானதல்ல. முடிகள் உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். 
 
தலையில் பொடுகுகள் பெருகுவது இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தலைப் பராமரிக்கலாம்.
ஆடை மற்றும் அணிகலன்கள்

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள்.  ஆண்கள் ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும்.

நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது
நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக இருக்கும் சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக வெள்ளை குர்தா அணிந்தால்,கேஷுவலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க, பட்டுவேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன். அழகக இருக்கும் ஆடைகள் வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட்பிங்க், லைட்ப்ளூ லைட் எல்லோ, போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்லாய் இருக்கும்.

எல்லோரிடமும் கல கலப்பாக பேசுங்கள்.நல்ல பேச்சாளன் என்ற பெயரை வாங்குங்கள்.அப்போதுதான் நீங்கள் ஒரு இடத்தைவிட்டு நகர்ந்தாலும் அங்கு உங்களின் நினைவை நீங்காமல் இடம்பெறச் செய்வது உங்களது கனிவான பேச்சுதான்.

உதடுக்கு


சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும். (தொடர்ந்து சிகெரட் குடிப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனில்லை). 

Sunday, November 27, 2011

அதிகரிக்கும் முதிர் கண்ணன்கள்


கடந்த காலங்களில் குழந்தைகள் விடுமுறை விட்டால் தாத்தா வீட்டுக்கு சென்று தாத்தா, பாட்டியோடு ஆட்டம் பாட்டத்துடன் இருப்பார்கள் இனி வரும் காலங்களில் பேரக்குழந்தைகளோடு கொஞ்சி குழாவி மகிழ வருங்கால தாத்தாக்கள் அந்த உடல் நலத்தோடு இருப்பார்களா என்றால் நிச்சயம் சந்தேகம் தான்...

இதற்கு முந்தைய தலைமுறையினர் அதிகபட்சம் 25 வயதில் திருமணம் செய்து கொண்டனர் இதனால் தங்களது மகனுக்க 25 ஆகும் போது அவர்களுக்கு 50 வயதாகி இருக்கும் தன் மகனுக்கு 26 அல்லது 27ல் திருமணம் செய்து வைத்து தங்களது பேரன் பேத்திகளோடு நல்ல உடல் ஆரோக்கியத்தோடு விளையாட முடிந்தது. இளமைகாலங்களிலும் சந்தோசமாக வாழ முடிந்தது.

இப்போதைய இளையஞர்கள் படித்து முடித்தவுடன் வேலை எதிர்பார்க்கின்றனர் வேலை கிடைத்ததும் திருமணத்தை பற்றி யோசிப்பதில்லை கேட்டால் இன்னும் அதிக சம்பளத்தில் வேலையில் சேர வேண்டும் வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தில் செட்டில் ஆக வேண்டும் பின்பு தான் திருமணத்தைப்பற்றி யோசிக்க வேண்டும் என்கின்றனர்.

இன்றைய இளைஞர் தனது இளமைக்காலங்களை சம்பாரிப்பதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் இது தவறில்லை ஆனால் சம்பாரிக்கும் வயதில் இளமையை தவறு விடுகின்றனர் என்பது தான் இதில் கவனிக்கவேண்டியது. இன்றைய கலாச்சாரத்தில் லிவிங்டுகெதர் அதிகம் இருப்பது சற்றே இளப்பாருகிறார்கள் என்று கூறலாம். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இளைஞர்கள் வேலைக்கு அலையும் போதும் குறைந்த சம்பளத்தில் வேலையில் இருக்கும் போது அவர்களது இளமைக்காலங்கள் கட்டாயமாக அமுக்கப்படுகிறது.

கலாச்சார சீர்கேடு என்று நகரங்களிலும், இப்பெவெல்லாம் காலம் கெட்டுப்போச்சு என்று கிராமப்புறங்களிலும் சொல்பவர்கள் சரியான வயதில் திருமணம் செய்து வைத்தால் இப்பிரச்சனைக்கு ஓரளவு தீர்வுகாணலாம். ஆனால் அதை அனைவரும் செய்ய மறுப்பர் காரணம் இன்னும் செட்டில் ஆகவில்லை இன்னும் சம்பாரிக்க வேண்டும் என்ற கனவால் திருமணத்தைப்பற்றி யோசிப்பதில்லை.

என் நண்பன் இன்று சென்னையில் பெரிய கம்பெனியில் உயர்ந்த பதவியில் அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்குகிறான் எங்கள் ஊரைச் சேர்ந்தவன் அவன் வயது 33 இன்னும் திருமணம் ஆகவில்லை எப்ப கேட்டாலும் அவன் அப்பா சொல்வது பார்த்துகிட்டே இருக்கிறோம் ஒன்னும் செட்டாக மாட்டிங்கு அவனுக்கு செவ்வாய் இல்ல சுத்த ஜாதகம் எப்படியும் இன்னும் 2 வருடத்தில் முடித்துவிடுவேன் என்கிற அவருக்கு வயது 65. அவனைக்கேட்டால் என்னடா செய்யறது வீட்ல பார்த்து முடிக்கட்டும் என்று இருக்கிறேன் என்கிறான். இவனைப்போல் முதிர்கண்ணன்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர்.

பெண்களில் 27 வயதுக்கு மேல் திருமணம் செய்யும் பெண்கள் அதிகம் பேர் சிசேரியன் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர் என்று ஒரு கருத்து கணிப்பு கூறுகிறது. முன்னர் சரியான நேரத்தில் பெண்ணுக்கு திருமணம் செய்யும் போது அவர்களது உடல் அமைப்பில் மாற்றம் வர வர குழந்தை பேரு இயற்கையானதாக இருக்கிறது. தற்போது தான் சிசேரியன் பழக்கம் அதிக அளவில் உள்ளது கடந்த காலங்களில் 5, 6 குழந்தை பெற்றவர்கள் எல்லாம் இயற்கையாகத்தான் குழந்தை பெற்றுள்ளனர். தற்போது அது குறைந்து வருகிறது.

வயது அதிகமாக திருமணம் செய்வதால் குழந்தை இல்லாமல் தவிப்பர்கள் இன்று ஏராளம் இதற்கான மருத்துவமனைகளில் இன்று கூடும் கூட்டத்தை கண்டாலே தெரியும்.

30 வயதில் இருந்து 35 வயதுக்குள் தான் இன்று அதிகம் திருமணம் செய்கின்றனர் அவ்வாறு செய்யும் போது அவர்களது வாழ்க்கையில் பாதி வருடங்கள் முடிவடிந்து விடுகிறது நம் ஆட்களின் சராசரி ஆயுட்காலம் 65 என்கின்றனர். பாதி வாழ்க்கையில் திருமணம் செய்து தன் மகன் அல்லது மகளுக்கு திருமணம் முடிக்கும் போது அவர்களுக்கு 65 வயதாகிவிடுகிறது தங்கள் பேரன் பேத்திகளோடு அந்த கால தாத்தாக்கள் போல இந்தக்கால, வருங்கால தாத்தாக்கள் இருப்பார்களா என்றால் நிச்சயம் சந்தேகம் தான்...

நிச்சயம் இன்று விற்கும் விலைவாசிக்கு நல்ல சம்பாரித்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்பது நன்றாக தெரியும் ஆனால் அந்த 24 வயதில் இருந்து 30 வயதுவரையான இளமைக்காலங்களை இழக்கின்றனர் என்பது தான் என் கருத்து.

பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாரிக்கலாம் ஆனால் வயது???????

Friday, November 18, 2011

நண்பனின் காதல் திருமணம்....


நான் எனது ஒரு சில நண்பர்களின் காதல் திருமணத்திற்கு (அதுதாங்க ஓடிப்போய் கல்யாணம் பன்றது)  துணை நின்று நடத்தி இருக்கின்றேன் அதில் ஒரு மறக்க முடியாத நான்(பன் வாங்கிய) எனது நண்பன் திருமணத்தின் அந்த திக் திக் சில நிமிடங்களை உங்களுடன் பகிர்து கொள்கிறேன்.....

நாங்கள் ஒரு 6 நண்பர்கள் கோவையில் ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தோம். அங்க பல சுவரசியமான, சிரிக்கும் படியான, குத்து வாங்கிய பல நிகழ்வுகள் நடந்தன, அதில் நாங்கள் அனைவரும் இணைந்து நடத்திய திருமணம் இது.

எங்கள் நண்பன் பாலா (கதையின் நாயகன்) கோவயைில் ஒரு பிரபலமான பைனான்சில் வேலை செய்தான் அவனுக்கு ப்ரமோஷன் கிடைத்து திருப்பூர் சென்றான்  இவர் அங்க மேனேஜர். அதே ஆபிசில் அந்த கிளையின் இன்சார்ஜ் கீதா இவரு போய் மூன்று மாதங்களில் இருவருக்கும் பத்திகிச்சு. 

அப்புறம் ஒரு 5 மாதங்கள் கழிச்சு நண்பன் எங்ககிட்ட வந்து நான் திருமணம் செய்தால் அவளைத்தான் செய்வேன் மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்று வசனம் பேசினான் என்ன பன்றது நண்பனாச்சே
என்னுடன் தங்கியவர்களில் இருவர் வக்கீல் சொல்லவேண்டுமா எங்களுக்கு உடனே திருமணத்திற்கு நாள் குறித்து இடம் குறிச்சோம்...

நாள் ஒருவாரம் கழித்து புதன்கிழமை இடம் கோவையில் உள்ள ஒரு பிரபலமான கோயில். கோவிலுக்கு விசாரிக்க வக்கீலும்,  சுரேசும் போனார்கள் அங்க என்னடான்னா காதல் திருமணம் இங்க அனுமதி இல்லை வேனும்னா வெளிய விநாயகர் கோயில்ல வெச்சு பண்ணிக்கலாம். இதற்கு புரோகிதர் வர மாட்டேன் என்கிறார். அவருக்கு பதில் காதல் திருமணத்திற்கு என இருக்கும் ஒருவருக்கு  ரூ.500 கொடுத்ததும் அவர் சரி என்று சொல்லிவிட்டர். மற்ற நண்பர்கள் பட்டுப்புடவை, வேஷ்டி, மாலை மற்றும் தாலி திருமணத்திற்கு தேவையான அனைத்துப்பொருட்களும் ஒரு ரூ.25000 ரெடி பண்டி வாங்கியாச்சு.

திருமண நாள் அன்று இரண்டு நண்பர்கள் பெண்ணை அழைத்துவர நடுராத்திரி 5 மணிக்கு போய்ட்டாங்க அப்புறம் நான், வக்கீல் சங்கர், சுரேஷ் கோவில்ல செய்ய வேண்டிய வேலை எல்லாம் ரெடி செய்து கொண்டு இருந்தோம். பொண்ணு இன்னும் வரல. கூட போனவங்க செல்லும் நாட் ரீச்சபல் என்னு பன்றது டென்சன், டென்சன்,டென்சன்.....

ஒரு அரைமணி நேரம் கழிச்சு நண்பன்கிட்ட இருந்து போன் மச்சி பொண்ணு இன்னும் வரலனு. என்னடா பன்றது மணி இப்பவே 8 ஆச்சசுனு டென்சனின் உச்சியில் இருக்கும் போது அடுத்த போன் பொண்ணு பொண்ணு வீட்டு பின்னாடி வழியா ஒரு 5 கீலோ மீட்டர் நட்ந்து வந்து பனியன் கம்பெனி பக்கதில இருக்குது நாங்க பிக்கப் பன்னிட்டு 1 மணி நேரத்தில்
வந்து விடுவோம் நீங்க ரெடியா இருங்க.

இந்த சமயத்தில் கோவில்ல பார்த்த கிட்டத்தட்ட அன்று மட்டு 20 கல்யாணம் நானும் சுரேசும் மத்த கல்யாணத்துக்கு வந்த பொண்ணுகனை சைட் அடிச்சிட்டு இருந்தோம்.

9 மணி பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சு நான் போட்டோகிராபர் அளாளுக்கு ஒரு வேலை செய்ய அய்யர் அவர் வேலையை செய்ய திருமணம் நல்ல நேரத்தில் சுபமா முடிந்தது. அடுத்தது என்ன செய்யலாம்னு முடிவெடுக்கும்
போது முதல்ல சாப்பிடலாம்னு ஒட்டல் ஆர்யாஸ்ல சாப்பிட்டுவிட்டு அடுத்த முடிவ எடுத்தோம். பொண்ணு வீட்டுக்கு போன் செய்து முடிவு செய்து மாப்பிள்ளைய பேசச் சொன்னோம்.

மாப்பிள்ளை பொண்ணு வீட்டுக்கு போன் செஞ்சா நாலு தடவை போன் எடுக்கல எங்களுக்கு பி.பி ஏறிருச்சு. மறுபடியும் ரிங்போகுது  நண்பர்கள் ஸ்பீக்கர் ஆன்ல அவங்க அப்பா ஒரு வழியா
போன எடுத்தார். மாப்பிள்ளை பேசினான் உங்க பொண்ணும் நானும் உங்க பொண்ணும் கல்யாணம் பண்ணிட்டாங்க இப்பதான் நடந்துச்சுன்னு மாப்பிள்ளை சொல்ல...

சும்மா ஒரு 5 நிமிடம் திட்டுட்டு( செம திட்டு) கடைசியா சொன்னார். எங்கிட்ட காலைல சொல்லி இருந்தா நானும் வந்து இருப்பேன்ல ஏன் சொல்லவில்லைனு கொஞ்சம் டென்சனா பேசினார்.

அடுத்து இரண்டு குடும்பமும் பொது இடத்தில் பஞ்சாயத்து பேசி மறுபடியும் இன்னொரு திருமணம் அவங்க குடும்பத்துடன் பவானி கூடுதுறையில் நடத்தினார்கள். 

இதில் மிக முக்கியமான விசயம் பொண்ணும் எங்க நண்பனும் குடும்பத்தோட நடந்த திருமணத்திற்கு எங்கள கூப்பிடவே இல்லை....

நண்பன் தானே எங்கிருந்தாலும் வாழட்டும் என்று சந்தோசமாக இதை கண்டுக்கல அவனை மறுபடியும் நாங்களும் கேக்கல... 

இது ஒரு மீள் பதிவு.... இரண்டு வருடத்திற்கு முன்னால் எழுதியது.. நேற்று நண்பனை எதாச்சையாக பார்த்தேன் எப்படி டா இருக்கேன்னு கேட்டா இல்லடா எனக்கு அவளுக்கும் ஒத்து வரல விவாகரத்து செய்யலாம்ன்னு ரெண்டு பேரும் முடிவு செய்து அப்ளை செய்திருக்கிறேன் என்றான்...
என்ன சொல்ல அவனிடம் ஓகே பாரு என்று வந்துட்டேன்...


இதுக்காட உனக்கு கல்யாணம் செய்து வைத்தோம் தூரத்தில் இருந்தாலும் சந்தோசமாக இருக்கிறேன் என்று சொன்னால் நிம்மதியாக இருக்கும் திருமணம் செய்த போது இருந்த நண்பர்களிடம் பேசினேன் ரொம்ப வருத்தப்பட்டது அவனை விட நானும் எனது நண்பர்களின் குடும்பமும் தான்....

Thursday, November 17, 2011

கணவனும் மனைவியும்...


"என்னடி ராதா கல்யாணம் ஆகி 4 மாதம் ஆச்சு எப்படி இருக்கு சென்னையும், உன் திருமண வாழ்க்கையும் எப்படி இருக்கு?"

"நல்லாயிருக்கும்மா"

"உம்புருஷன் சென்னையிலேயே 10 வருசமா இருக்கிறாரு உன்னைய ஊர் சுத்திக்காட்டறாரா?"

"ம்.. அதுக்கென்னம்மா குறை நான் கேக்கமலேயே வெளியே கூட்டிட்டுப்போய் நிறைய சுத்திக்காட்டுகிறார்"

"சம்பளம் எல்லாம் உன் கையில தராரா இல்ல அவரே வெச்சிக்கிறாரா?"

"எல்லாம் ஏடிஎம் கார்டுதான்ம்மா"

"என்னடி. அம்மாவும், மகளும் பேசிகிட்டே இருக்கீங்க? சீக்கிரம் கோழிய அடிச்சு குழம்பு வையுங்க மத்தியானம் மருமகன் அவர் சிநேகிதன் வர்றாராம்"

"சும்மா கத்தாதீங்க மருமகன் முன்னாடியே சொல்லிட்டாரு!"

"ஏன்டி சிரிக்கிற?"

?இல்லம்மா எம் புருஷன் காலைல 5 மணிக்கு எழுந்து எக்ஸர்சைஸ் எல்லாம் முடிச்சிட்டு 5அரை மணியில் இருந்து வீட்டு வேலை, சமையல் வேலை எல்லாம் எனக்கு ஒத்தாசையா இருப்பாரும்மா"

"மாப்பிள்ளை சமைப்பாராம்மா?"

"ம்.. என்ன நச்சரிக்கமா அவரே சாப்பாடு எடுத்து வைச்சு டைமுக்கு புறபட்டுருவாரு.. மாலை வந்தது துணிகளை எல்லாம் எடுத்து வாசிங்மெசின்ல போட்டு அவரே காயவைச்சு எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்வாரும்மா"

"இந்த சுத்து வட்டாரத்துல எத்தனை பேரை விசாரித்து இந்த மாப்பிள்ளைய உனக்கு கட்டி வெச்சோம்! நாங்க புடிச்ச மாப்பிள்ளைன்னா சும்மாவா!! கேக்கவே சந்தோசமா இருக்கு ராதா!!!"

"போம்மா எம்புருஷன் என்னை சோதிக்கிறாரும்மா?"

"என்னடி சொல்ற?"

"ஆமாம்மா இவரு ஆபீஸ் விட்ட நேரா வீட்டுக்கு வந்தருவாரு குடி, சிகெரெட், தண்ணி என எந்த பழக்கமும் இல்ல அவருகிட்ட குறையே கண்டுபிடிக்க முடியலம்மா?"

"இப்படி ஒருத்த கிடைக்கரதுக்கு கொடுத்து வச்சிருக்கனும் ராதா!"

"போம்மா. ஒரு பொண்டாட்டிக்கு, புருஷனை ஆட்டிவைக்கணும், புருஷன் செய்யற தப்பைக் கண்டுபிடிச்சு வசைபாடணும், காதைத்திருகி குட்டி வைக்கணும்னு... இப்படியெல்லாம் ஆசை இருக்காதா?! இப்படி என் ஆசை எதையுமே நிறைவேற்றிக்க முடியாம இவர் என்னை ஒரேயடியா இப்படி சோதிச்சா எப்படி?!’’

Wednesday, November 16, 2011

அஞ்சறைப்பெட்டி 17.11.2011


உள்ளுரில் இருந்து உலகம் வரை........

மீண்டும் இலங்கை கடற்படையினர் தாக்குதல்... இதைக்கண்டித்து முதல்வர் பிரதமருக்கு கடிதம்.. ஆட்சி மாறினாலும் இவ்விசயத்தி காட்சி மாறவில்லை...
இக்காட்சி மாற வேண்டுமெனில் மத்தியில் காங்கிரஸ் ஆளக்கூடாது.. காங்கிரசை தவிர வேறு யார் ஆட்சி நடத்தினாலும் இந்திய மீனவர்கள் மீது தாக்கப்படுவது இருக்காது...

சிலரைக்கேட்டால் இந்திய மீனவர்கள் தாக்கப்படவில்லை... தமிழக மீனவர்கள் தான் தாக்கப்பட்டனர் என்பர்...

தமிழ்நாட்டில் இருந்து எம்பிக்கள் மட்டும் வேண்டும்... ஆனால் தமிழர்கள் வேண்டாமாம்....
...............................................................................................

கவுரவ கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை ;19 பேருக்கு ஆயுள்: மதுரா கோர்ட் அதிரடி தீர்ப்பு... சபாஷ் வரவேற்க வேண்டிய தீர்ப்பு...

கவுரவ கொலைகள் வடநாட்டில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நடக்கிறது.. கவுரவ கொலை செய்பவர்களுக்கு இதுபோல் கடுமையான தண்டனைகள் கொடுக்கம் போது தான் கட்டபஞ்சாயத்துக்கள் குறையும்...

இச்சம்பவத்திம் நடந்தது 1991 தண்டனை வழங்கியது 2011... தீர்ப்புக்கு 20 வருடம் என்றால் தண்டனையை நிறைவேற்ற??????

...............................................................................................

உத்திரபிரதேசத்தில் ராகுல் தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார் என்று பரபரப்பாக கத்தியது மீடியாக்கள்...

உபியை நான்காக பிரிக்கவேண்டும் என்று கூறி சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றப்போகிறோம் என்ற அறிவித்து எல்லாரையும் ஆப் ஆக்கிவிட்டார் மாயாவதி.....
................................................................................................

இந்தவாரம் சிறைகம்பியை எண்ணும் விஐபி ஜே.கே.ரித்திஷ்... அடுத்த வாரம் யாரோ?????
................................................................................................

காங்கிரசின் புதிய தலைவர் ஞானதேதிகனுக்கு வாழ்த்துக்கள்... எப்படித்தான் எல்லா தலைவர்களையும் அரவனைத்துப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

..................................................................................................

பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாத, முதல் 100 தொழிலதிபர்களின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட வேண்டும்' என, ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சபாஷ் வரவேற்க வேண்டிய உத்தரவு...

நம்ம ஊர்ல ஒரு ஏழைப்பையன் படிக்க வேண்டும் என்று வங்கியில் கடன் கேட்டால் இந்த வங்கி அதிகாரிங்க செய்யர அலப்பறை இருக்கே சொல்ல முடியல...

இதே பணக்காரா தொழில் அதிகபர்கள் ஒருபாய் கூட முதல் போடாமல் சொத்தை கணக்கு காட்டி கடன் வாங்கி தொழில் நடத்த ஓடிப்போய் கடன் தருகிறார்கள்... இதே தொழில் நஷ்டத்தில் இயங்கினால் எப்படி தள்ளுபடி ஆகும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறார்கள்....

இருப்பவர்களுக்கு ஒரு சட்டம்... இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என்று மாறும் இந்நிலமை....
..................................................................................................

 கூடங்குளம் அனுமின் நிலையம் வேண்டுமா வேண்டாமா என்று மக்களிடம் கருத்து கணிப்பு கேட்டு அதற்கு பின் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...
..................................................................................................

பாராளுமன்ற கூட்டத் தொடர் அமைதியாக நடக்க  பெட்ரோல் விலையை குறைத்து விட்டனர்... கூட்டத்தொடர் முடிந்ததும் நிச்சயம் பெட்ரோல் விலை உயர்வை எதிர்பார்க்கலாம்...
..................................................................................................

பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் விதிமுறைகளை மீறும், பெரிய அளவில் சேர்க்கை கட்டணம் வசூலிக்கும், பேராசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி போட, புதிய சட்டம் ஒன்று பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. 

இதை வரவேற்கலாம் ஆனால் அதற்கு முன் பொதுமக்கள் ஏன் நன்கொடை தருகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். தரமான கல்வியை தனியார் நிறுவனங்கள் தருவதால் தான் அங்கு நன்கொடை அளிக்க மக்கள் முன்வருகின்றனர்.


முதலில் அரசு கல்லூரிகளை அதிமாக்கி தரமான கல்வி அளிக்க முன் வாருங்கள் நன்கொடை வசூலிப்பது தானாக மறைந்து விடும்...

தகவல்

சூரிய குடும்பத்தில் வேற்று கிரகவாசிகள் அலைந்து திரிவதாகவும், அவர்களை நெருங்கி பார்க்க முடியவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சூரிய குடும்பத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதற்கான ஆதாரங்களோ, அவர்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர் என்பதற்கான ஆதாரங்களோ கிடையாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
 
ஆனால், இந்திய வம்சா வழி விஞ்ஞானி உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதாக நம்புகின்றனர்.   அமெரிக்காவைச் சேர்ந்த பென் ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இருவர், ஒபாமா நிர்வாகத்தின் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளனர். எங்களது ஆழமான விண்வெளி ஆராய்ச்சியில், இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
நாசாவின் பயோனீர் மற்றும் வொயா ஜெர் விண்வெளி ஓடங்களை கொண்டு மிகவும் ஆழமாக ஆராய்ந்தால், இது புலப்படும்  என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் இந்த கருத்தை “ஆக்டா” என்ற விண்வெளிக்கான அமைப்பு ஏற்றுக் கொண்டு, அதன் இணைய தளத்திலும் வெளியிட்டுள்ளது. 
 
ராக் எத்திக்ஸ் இன்ஸ்டியூட் ஆராய்ச்சியாளர் ஜேக்கப் ஹக் மிஸ்ரா, புவி மற்றும் சுற்றுச்சூழல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ரவிக்குமார் ஆகியோரும், வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றனர். வேற்றுக்கிரக வாசிகளின் விண்வெளி ஓடம், நமது சூரிய குடும்பத்தை சுற்றி வருவதை காண முடிகிறது.
 
ஆனால், அதன் புறப்பகுதியை நெருங்கிச் சென்று பார்க்க முடியவில்லை. இன்னும் ஆழமாகச் சென்று, நுணுக்கமான முறையில் ஆராய்ச்சி செய்தால், வேற்றுக்கிரக வாசிகளை நெருங்கிச் சென்று பார்க்க முடியும் என்று அவர்கள் உறுதிப்பட கூறி உள்ளனர். 
 
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் தமிழ் டிவிட்டர் என்ற பெயரில் தமிழில் வரும் டிவிட்டுகளில் நச்சு என்று உள்ள வரிகளை தனியாக தொகுத்து ஒரு வலைப்பதிவை உருவாக்கி உள்ளார்... நச் டிவிட்டுகள் இங்கு கிடைக்கின்றன...



தத்துவம்

வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை தீமை என்ற இரு நூல்களும் இருக்கும்.
 
உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்; ஆனால் யாராவது ஒருவருக்கு. நீங்களே உலகமாக இருக்கலாம்.

வெற்றி இலவசமாக கிடைப்பதில்லை... தேவையான உழைப்பும், தியாகமும் அவசியம்...

Tuesday, November 15, 2011

ஆண்களின் வெள்ளை அனுக்களை பெருக்கும் பொன்னாங்கண்ணி கீரை...


கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கம் கீரை பொன்னாங்கண்ணி அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை..

சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. இதில் ஊட்டச்சத்து, நீர்சத்து, கொழுப்புச் சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை இது.

பொன்னாங்கண்ணியை தொடந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப்பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துள்ளியமாக தெரிய உதவும் கீரை.

பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி என்றும், நாட்டுப் பொன்னாங்கண்ணி எனவும் இரு வகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி  பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுவது .மருத்துவ குணம் குறைவு . பெச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங் குணங்கள் கொண்டது.  உடலுக்கு குறிச்சியை தரக்கூடியது.

பொன்னாங்கண்ணியின் பயன்கள்:
இக்கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

துவரம் பருப்பு, நேய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

கீழா நெல்லிச்சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் விலகும்.

சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.

உடல் தோள் பளபள என்று மாற்றுவதில் பெரும்பங்குண்டு.

மூலநோள், மன்னீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது.

இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது. பொன்னாங்கண்ணிக் கிரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.


அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனை நீங்கும்.

கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது - 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது - 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயமும் மூளையும் புத்துணர்வாக்கும். மேனியை பளபளக்கச் செய்யும். நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.

பொன்னாங்காணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலை முழுகிவர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.

பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப் பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்து வர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.

உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை. குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை ‘விந்து கட்டி எனப் பேசுகிறது.

இந்தக் கீரை வயல் வரப்புகளிலும், கிணற்று மேடுகளிலும், குளம் குட்டைகளில் கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். இனி கண்டால் விடாதீர்கள் ,பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்கவேண்டும் . இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு பலன் இல்லை என்று பாராதீர்கள் .குறைந்தது ஒரு மண்டலம் எந்த மூலிகைக்கும் தேவை.

Monday, November 14, 2011

அதிகரித்துவரும் சர்க்கரை நோயாளிகள்...


புதிய மருத்துவ வணிகத்துக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியாவை மாற்றிக்கொண்டிருக்கிறது சர்க்கரை நோய்! இந்திய மருத்துவ ஆய்வுக் கழகமும் இந்தியா டயாபெடிக்ஸ் அமைப்பும் இணைந்து நடத்திய மாதிரி ஆய்வின்படி இந்தியாவில் நிகழாண்டில் 6.2 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள். அடுத்து சர்க்கரை நோய்க்கு இலக்காகக்கூடிய எல்லைக்கோட்டில் நிற்போர் 7.7 கோடி பேர்.

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி உலகம் முழுவதும் 220 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள். இவர்களில் 50.8 மில்லியன் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்.இந்தப் புள்ளிவிவரங்கள் முழுமையானவை அல்ல. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் எடுத்த மாதிரிச் சான்றுகள் அடிப்படையில் மொத்த மக்கள்தொகைக்கும் பொருத்திப் பார்க்கும் முறையைக் கொண்டவை. இதில் மிகைப்படுத்தல் தவிர்க்க முடியாதது. அதற்காக இவை முழுக்க முழுக்கப் பொய்யான தகவல் என்று ஒதுக்கிவிடவும் முடியாது. 

இந்தியா என்றாலே மக்கள் தொகை அதிகம், விழிப்புணர்வு குறைவு என்பதால், கொஞ்சம் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்வதென்பது, இத்தகைய ஆய்வுகளில் அவர்களாகவே அனுமதி எடுத்துக்கொள்கிற விஷயமாக இருக்கின்றது. 

இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் இவற்றின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது உண்மை. இதற்கு அடிப்படைக் காரணம் இந்தியர்களின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. உணவுப்பழக்கம் முன்புபோல இல்லை. 

மனஅழுத்தமும், மனச்சோர்வும் நடுத்தர மக்களிடம் குடிகொண்டுவிட்ட நோய்களாகவே மாறிவிட்டன. இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாகப் பெருகி வருவதைப் பயன்படுத்திக்கொள்ள இந்திய மருத்துவமனைகள் வரிந்துகட்டி நிற்கும் அதேநேரத்தில், வெளிநாட்டு மருத்துவமனைகளும் இந்திய மருத்துவமனைகளோடு இணைந்து சிறப்பு சர்க்கரை நோய் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை மையங்களைத் திறக்கத் தொடங்கிவிட்டன. 

ஆனால், மத்திய அரசு இன்னும் விழித்துக்கொண்டு இதற்கான நடவடிக்கைகளில் வேகமாக இறங்கவில்லையே என்பதுதான் வருத்தமளிக்கிறது.இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகியிருப்பதால் மேலதிகமாக பாதிக்கப்படப்போவது யார் என்றால், முதியோர்களும் பெண்களும் மட்டுமே. 

இந்தியாவில் சர்க்கரை நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 10.07 லட்சம் பேர்களாக இருந்தால், இதில் 5.81 லட்சம் பேர் பெண்களாக இருக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகளில் 60 விழுக்காட்டினர் தங்களுக்கான மருத்துவச் செலவை தங்கள் வருங்காலச் சேமிப்புத் தொகையிலிருந்துதான் செலவழிக்கிறார்கள். 

இவர்களுக்கு வேறு வருவாயோ அல்லது மருத்துவக் காப்பீடோ இல்லை. இதிலும் பெண்கள்தான் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.அரசின் கணக்கெடுப்பின்படி சர்க்கரை நோயாளி ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ. 26,000 மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளுக்காக செலவிடுகிறார். 

அதாவது மாதம் குறைந்தபட்சம் ரூ. 2,000 செலவிட வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு முதியவருக்கு இந்த அளவுக்கான பணம் ஓய்வூதியத்தில் பெரும் பகுதி என்பதும், இதன் பிறகு அவர் எந்தத் தொகையை வைத்து வாழ்க்கை நடத்துவார் என்பதும் நினைத்துப் பார்க்கவே சங்கடமானது.இதையும்விட சங்கடமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை நோயாளிகளுக்குத் தொடர் நோய்களாக விழித்திரை பாதிப்பால் பார்வை பறிபோதல், கால் நரம்புகள் செயலிழப்பதால் கால்கள் வெட்டியெடுக்கப்படுதல், ரத்தத்தின் மிகை சர்க்கரையைத் தொடர்ச்சியாக வெளியேற்றும் சிறுநீரகம் விரைந்து கெட்டுப்போதல் என்று பல பிரச்னைகளை முதியோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 

இத்தகைய மோசமான சூழ்நிலை ஏற்படாமல் சற்று தணிவான சூழலை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசு செய்ய வேண்டியது, இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்கள், இலவச ஆய்வுக்கூட வசதி ஆகியவற்றை முதற்கட்டமாக நாடு முழுவதும் அறிமுகம் செய்ய வேண்டியது இன்றியமையாதது.அண்மையில், இந்திய மருத்துவ ஆய்வுக் குழுமத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், சர்க்கரை நோய் பரிசோதனை அட்டைகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று கூறியுள்ளார். 

சர்க்கரை அளவைப் பரிசோதிக்கும் அட்டைகள் தயாரிப்பில் பல்வேறு பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றின் விலை அதிகம். சிறுநீரில் சர்க்கரை அளவை நோயாளிகளே கணக்கிடுவதற்கும், ரத்தத் துளியை அட்டையில் தடவியதும் சர்க்கரை அளவை அறியும் கருவிகளும் பல்வேறு நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்டாலும் இவற்றின் விலை அதிகமாகவே உள்ளது. 

மிக மலிவான விலையில், தரமான அட்டைகளை இந்திய நிறுவனங்களே உருவாக்கும் சூழ்நிலை ஏற்படுமானால் சர்க்கரை நோயாளிகளின் மருத்துவச் செலவு பாதியாகக் குறையும் என்பது உறுதி.எளிய மூலிகைகளால் ஒருவர் தன் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது என்றால் அதை ஊக்கப்படுத்தவும், சர்க்கரை அளவை அறியும் கருவிகள் பயன்பாட்டுக்கு மட்டும் ஆங்கில முறையைப் பயன்படுத்திக்கொள்ளச் செய்வதும் ஒரு நோயாளிக்குச் செய்யும் பேருதவி. சில நோய்களுக்கு சித்த, ஆயுர்வேத மருந்துகளுடன், அலோபதி மருத்துவ ஆய்வுக்கருவிகள் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவை உள்ளது.எந்தவகை மருத்துவம் என்பதல்ல முக்கியம். நோய்க்கு மருந்து எது என்பதுதான் விடையாக இருக்க முடியும். 

நன்றி தினமணி தலையங்கம்

Thursday, November 10, 2011

பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை...!


ஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது நல்லது....

1. `நாம கொஞ்சம் பேசணும்‘

உங்களவர், உலக சாம்பியன் வேகத்தில் ஓடி மறைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மேற்கண்ட மூன்று வார்த்தைகளைக் கூறினால் போதும்.
`ஏதோ பிரச்சினையைக் கிளப்பத் தான் அடி போடுகிறாள்’ என்று உணர்ந்துகொண்டு உடனடியாகத் தலைமறைவாகி விடு வார்.

`பேசுவது’ எல்லாம் கடைசியில் அழுகை, ஆத்திரம், தீர்வில்லாத நிலையில் தான் முடியும் என்று ஆண்களுக்குத் தெரியும்.

பெண்கள் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை எப்படிக் கையாளுவது என்று ஆண்களுக்குத் தெரியாது. அப்போது கன்னாபின்னா வென்று நடக்கத் தொடங்கி விடுவார்கள்.
எதையும் மனந்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது கட்டுரைகளில் சரியாகத் தெரியலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவாக ஒத்து வராது.

2. `நீங்க அம்மா பையன்’
 
பெண்கள் தங்கள் துணைவருடன் உறவு சீர் கெட விரும்பினால், அவரின் அம்மாவை அடிக்கடி பேச்சில் இழுத்தால் போதும். `பாருங்கஸ உங்க அம்மா இப்படிப் பண்றாங்க’, `உங்க அம்மா எப்போதும் அப்படித்தான்’ என்றெல்லாம் சொல்வதை எந்த ஆணும் விரும்புவ தில்லை.

பெண்களுக்கு எப்படித் தங்கள் அம்மாவைப் பிடிக்குமோ, அப்படித்தான் ஆண் களுக்கும் தங்கள் அம்மாவைப் பிடிக்கும். அதனால் அம்மாவைக் குறை சொல்வதை அவர்கள் ரசிப்பதில்லை. அதேபோல, `நீங்க அம்மா பிள்ளைஸ உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு’ என்று கூறுவதையும் விரும்புவதில்லை.

பெண்கள் தங்களைத் தமது கணவர் அல்லது காதலரின் அம்மாவுடன் தராசுத் தட்டில் நிறுத்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நடந்துகொள்ள வேண்டும். அது, பெண்கள் தாங்கள் அம்மாவாகும்போது உதவும்.

3. `உங்க நண்பரைப் பாருங்க’

 `உங்க நண்பரைப் பாருங்க... எவ்வளவு ஸ்டைலா இருக்காரு! நீங்களுந்தான் இருக்கீங்களே, தொந்தியும் தொப்பையுமாஸ’ என்று பேசும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துணைவருடான உறவுக்குக்குத் தாங்களே வேட்டு வைப்பவர்கள்.

இப்படி பேசத் தொடங்குவது, `அப்படின்னா நீ `அவனை’யே காதலிச்சிருக்கலாம்’ அல்லது, `நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கலாம்’ என்ற வெறுப்பான கத்தலில் தான் முடியும்.

பெண்கள் தங்கள் கணவரின் அல்லது துணைவரின் நண்பரிடம் வெளிப்படை யாகக் காணாத பல குறைபாடுகள் இருக்கக்கூடும்.

கண்ணில் தெரிவதை மட்டும் கண்டு, வியப்பது அறிவீனம். பெண்கள் எப்படித் தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லையோ, அதேபோலத்தான் ஆண்களும் என்று உணர வேண்டும்.

4. 'நீங்க எப்பவும் இப்படித்தான்...'

திருந்தவே மாட்டீங்க’ முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரும்புவதில்லை. அதிலும் அவர்களே தங்களிடம் இருந்து துறக்க விரும்பும் பழக்கங்களை, குறைபாடுகளை அடிக்கடி குத்திக்காட்டுவதை தாங்குவதே இல்லை.

ஒருவரைப் பற்றி, `இவர் இப்படித்தான்’ என்று வெகு சீக்கிரமாக முடிவு கட்டிவிடுவது பெண்களின் குறைபாடு. எல்லாருமே தவறு செய்வது இயல்பு. சிலருக்கு இயல்பாகவே சில தவறுகள் சிலமுறை நேர்ந்துவிடும்.
அதுகுறித்து அந்த ஆணே வருத்தத்தில், குற்ற உணர்வில் இருப்பார். அப்போது, ஆறுதலாக இருப்பதுதான் பெண் துணையின் மீதான மதிப்பை ஆணுக்கு உயர்த்தும்.

மாறாக, நொந்த வேளையில் `லந்து’ செய்வது வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். `இப்பல்லாம்ஸ’ என்ற வார்த்தையையும் தவிர்க்கலாம். `இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி அன்பாயில்லஸ’ என்று மூக்கைச் சிந்துவதால் பயனில்லை.

5. `தலையெல்லாம் நரைச்சுப் போச்சு’

மத்திய வயதை நெருங்கும் ஆண்களுக்கு தலையில் நரைமுடிகள் தலைகாட்டத் தொடங்குமனூ. அவற்றை `இளநரை’ என்றெண்ணிச் சமாதானம் அடைவது ஆண்களின் வழக்கம். அதுகுறித்து அதிகம் சுட்டிக்காட்டுவதும், `உடனே சலூனுக்கு ஓடிப்போய் `டை’ அடிச்சுட்டு வாங்க’ என்று நெட்டித் தள்ளுவதும் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

`கல்யாணத்துக்கு முன்னால கொடியிடையா இருந்தேஸ இப்போ தடியிடையா ஆயிட்டேஸ’ என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமில்லையா....?!

sourse: http://www.nidur.info

Wednesday, November 9, 2011

அஞ்சறைப்பெட்டி 10.11.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

கடந்த சில மாதங்களாக அலுவலகத்தில் வேலை, தந்தையின் உடல்நிலை கவலைக்கிடம் போன்ற காரணங்களால் அதிகமாக வலைப்பக்கமும் வரமுடியவில்லை கிட்டத்ததட்ட 1 வருடம் வியாழன் அன்று அஞ்சறைப்பெட்டி எழுதிக்கொண்டு இருந்த என்னால் எழுத முடியவில்லை இந்த வாரம் தான் கொஞ்சம் நேரம் கிடைத்ததால் மீண்டும் அஞ்சறைப்பெட்டியை ஆரம்பித்துவிட்டேன்...

...............................................................................................

பெட்ரோல் விலை உயர்வு மிகவும் கண்டிக்கத்தக்கது அதற்காக நம் மத்தியில் ஆளும் வர்க்கத்தினர் வாங்கும் வக்காலத்து இன்னும் கேவலமாக உள்ளது. பக்கத்து நாடுகளில் நம்மை விட பாதி விலை தான் உள்ளது என்ன செய்வது தனியாருக்கு அடிமைப்பட்டு கிடக்கிறோம் இது தான் நம் வழி...

பெட்ரோல் விலை உயர்வை எந்த எதிர்கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக, ஆக்கப்பூர்வமாக எதிர்த்த மாதிரி தெரியவில்லை. முதல் இரண்டு நாள் மம்தா கூக்குரளிட்டார். இப்ப அவரும் அமைதி.

மத்தியில் ஆளும் கூட்டணியில் உள்ள திமுக பெட்ரோல் விலையைப்பற்றி கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இதுவே மாநில அரசு பேருந்து கட்டணம் உயர்த்தி இருந்தால் திமுகவினர் ஊரெங்கும் போராட்டம் நடத்தி இருப்பர். மத்திய அரசு என்பாதல் கப்சிப்...
...............................................................................................

கனிமொழிக்காக ஜாமீன் கேட்டு கேட்டு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் என்று மாற்றி மாற்றி படியேறியும் பயன் இல்லை. ஜமீனை வாங்க முடிஞ்சவங்களால் இப்ப ஜாமீனை வாங்க முடியல...

................................................................................................

கூடங்குளம் அனுமின் பிரச்சனைக்காக இன்று குரல் கொடுக்கும் அப்துல்கலாம் தன் சொந்த ஊரான இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர் தற்போது அவ்வப்போது தாக்கப்பட்டு வருகின்றனர் அதற்கு ஏன் கேள்வி கேட்பதில்லை?

மத்திய அரசின் மனதை பார்க்காமல் மக்கள் மனதை பாருங்க அப்துல்கலாம் சார்..... இல்லையேல் கனவு காணுங்கள்...

................................................................................................

மக்கள் நலப்பணியாளர்கள் அய்யா நியமிக்கிரார்... அம்மா தூரத்திவிடுகிறார்... இதெல்லாம் தமிழ்நாட்டு அரசியலில் சகசமப்பா....

..................................................................................................

மெக்சிகோவில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மிகவும் சொகுசாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்குள்ள சிறைகளில் உயர் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிறை அறைகளில் ஆண் கைதிகளுடன் விபசார அழகிகளும் தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவர்கள் சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒத்து ழைப்புடன் அங்கு வந்து விபசாரம் நடத்துவதும் தெரிய வந்தது. அங்கிருந்த 19 அழகிகளை கைது செய்தனர். இவை தவிர, சிறைகளில் கைதிகள் பொழுது போக்குக்காக அரசு அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த 100 அதிநவீன டெலிவிஷன்கள், மற்றும் “மரிஞ்ஜுனா” என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

நம்ம ஊர் சிறையில் இப்படி இருந்தா ஜெயிலில் இடம் இருக்காது நிரம்பி வழியும்....


..................................................................................................



மிசோரம் மாநிலத்தில் பக்தவங்கிலான்நும் என்ற கிராமத்தில் சியானா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் 39 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் 121 மகன், மகள்கள் இருக்கிறார்கள். இந்த குடும்பம்தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய கூட்டுக்குடும்பமாக கருதப்படுகிறது. சியானா தனது 39 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது முதல் மனைவிக்கு தற்போது 71 வயது ஆகிறது.அவருக்கு 7 குழந்தைகள் பிறந்தனர். 39-வது மனைவியை கடந்த 2000-ம் ஆண்டில் சியானா மணந்தார். 31 வயது ஆகும் இந்த இளம் மனைவி மூலம் சமீபத்தில் சியானா ஆண் குழந்தை பெற்றார். கடந்த ஜூலை மாதம் சியானா 67-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது 39 மனைவிகளும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்கள். 39 மனைவிகள் மற்றும் மகன்கள், மகள்கள் வாழ்வதற்கு அவர் 4 அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை கட்டி உள்ளார். அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் 39 மனைவிகளும் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு ஒரே இடத்தில்தான் சமையல் செய்யப்படுகிறது. காலை சாப்பாட்டுக்கு மட்டும் 50 கிலோ அரிசி, 60 கிலோ இறைச்சி வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. கோடீஸ்வரரான சியானா இந்த செலவுகளை தனது பண்ணையிலிருந்து வரும் வருமானம் மூலம் சமாளித்து வருகிறார்.

நம்ம ஊர்ல 1க்க கல்யாணம் செய்து 2வது கல்யாணம் செய்தால் மகன், மச்சினன் என்று யாராவது ஒருத்தர் போட்டுத்தள்ளிடறானுக... இந்த ஆளுக்கு மச்சந்தான்....

தகவல்
மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ)  சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் புதிய பதிவை தொடக்கி உள்ளது.
மேலும் இதன் மூலம் மக்கள் உதவியுடன் வழக்குகளை விரைந்து முடிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கான உதவி பெறும் முறை முதல்கட்டமாக போபாலில் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், மக்களின் வரவேற்பை பொறுத்து பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த உள்ளதாகவும் சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
இன்டர்நெட் மூலம் தகவல் வழங்கும் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் முக்கிய வழக்குகள் பலவும் இதன் மூலம் தீர்வை எட்டும் எனவும்  சி.பி.ஐ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் எனது பயணங்கள் என்ற தலைப்பில் எழுதிவருகிறார் இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது.

தத்துவம்

மனிதர்கள் இரண்டு வகை உண்டு. ஒன்று திறமையானவர்கள் மற்றொன்று திறமையைப்பயண்படுத்ததாவர்கள்

வயதானவர்கள் கவலைப்படுவதெல்லாம், தங்களுக்கு வயதாகி விட்டதே என்பதல்ல, மற்றவர்கள் இளமையாக இருக்கிறார்களே என்று தான்...

Tuesday, November 8, 2011

சொகுசு பேருந்தும் விபத்துக்களும்...

பவானி சித்தோட்டில் நடந்த விபத்தில் ஓட்டுநர் எரிந்து சாம்பலாக உள்ளார்

சமீபகாலாமாக விபத்துக்களை கேட்கும் போதே கண்ணீரில் நீர் வருகிறது அந்த அளவிற்கு விபத்துக்கள் நடந்து கொண்டு இருக்கின்றது. இதற்கு முன் விபத்துக்கள் எல்லாம் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதல் என்றும் சாலையோர மரத்தில் மோதியது என்றும் தான் அதிகம் நடந்து கொண்டு இருந்தது. நான்கு வழிச்சாலையாக மாறினால் விபத்துக்கள் குறையும் என்று தான் நினைத்தோம்.

தற்போது நான்குவழிச்சாலையில் நடக்கும் விபத்துக்கள் எல்லாம் காதில் கேட்கும் போதே கண்ணீரை வரவழைக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அரக்கோணம் அருகே நடந்த விபத்துத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்து பலர் உயிர் இழந்தனர்.

ஒரு வாரத்திற்கு முன் சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தில் டிவிடி ப்ளேயரில் பாட்டுக்களை மாற்றி கொண்டு வந்தவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு சிலர் உயிரிழந்தனர்.

சில நாட்களுக்கு முன் பவானி சித்தோடு அருகே தனியார் சொகுசு பேருந்து முன்னால் சென்று கொண்டு இருந்த பெட்ரோல் டேங்கர் லாரியை ஓவர் டேக் செய்ய முயன்றபோது லாரியின் பின் பகுதியில் இடுத்து டேங்கர் லாரி ஓட்டையாகி அதில் இருந்த பெட்ரோல் பேருந்து மேல் கொட்டு தீப்பிடித்து பலர் உயிரிழந்தனர் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். இச்செய்தியை உள்ளுர் பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்தியை படிக்கும் போது நம்மையும் அறியாமல் மனது அடித்துக்கொள்கிறது.


பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படும்போது இரு வண்டிகளில் ஒருவர் மேல் தவறு இருக்கும் என்போம் ஆனால் இந்த மூன்று விபத்துக்களையும் பார்க்கும் போது முற்றிலும் ஓட்டுநரின் தவறால் நடந்தவை என்பதை யாரும் மறுக்க இயலாது.

நான்கு வழிச்சாலையில் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிககுறைவு தேர்ச்சியான ஓட்டுநர் ஓட்டும் போது. ஆனால் இந்த விபத்துகளின் ஓட்டுநரின் வயதைப்பார்த்தால் 30க்குள் தான் வருகிறது. 80 கிலோமீட்டர் போகும் பேருந்தை 110 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டும்போது எதாவது ஒருநாள் ஓட்டுநர் தவறு செய்யும் போது பெரும் விபத்தை தவிர்க்க இயலாது.

சாதாரண பேருந்தை விட படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகும் போது அதிக உயிர் சேதம் ஆகின்றது. சொகுசு பேருந்துகளில் ஒரு கதவு மட்டுமே இருக்கிறது இதுவும் ஆட்டோமேடிக் முறையில் உள்ளதால் இதன் சுவிட்ச் ஓட்டுநரிடம் இருக்கும் அவர் நினைத்தால் மட்டுமே கதவை திறக்க இயலும் மேலும் இது குளிர்சாதன பேருந்தாக இருப்பாதால் காற்று புகாதவாறு வடிவமைத்து இருப்பர் அவசர உதவிக்கு சிறு கதவு மட்டுமே இருக்கும் இதனால் எந்த பயனும் இருக்காது. இவ்வாறு இருக்கும் பேருந்துகள் பயணத்திற்கு சொகுசாக இருக்கலாம் விபத்து வந்தால் உயிருக்கு மிக ஆபத்துதான்.

உலகிலேயே அதிகூடிய விபத்துக்கள் இடம்பெறும் நாடாக சீனா பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அந்நாட்டில் கடுமையான சட்ட திட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டதையடுத்து தற்போது இந்தியாவே அதிகளவு விபத்துக்கள் இடம்பெறும் நாடு என்ற ஸ்தானத்தை அடைந்துள்ளது.

இந்த விபத்துக்கள் அனைத்துக்கும் மிக முக்கிய காரணம் சாலைவிதிகளை மதிக்காத ஓட்டுநர்கள் தான். இந்த நான்கு வழிச்சாலைகளில் வாகனங்களின் குறைந்த பட்ச வேகமே மணிக்கு 75 முதல் 130 கி.மீ என்ற அளவில் இருக்கிறது. இந்தப் பாதைகளில் வாகனங்களின் வேகமாக செல்கின்றன என்பதை விட பேருந்துகள் பறக்கின்றன என்றால் அது மிகையாகது.

கனரக வாகனங்கள் சாலை ஓரம் நின்று கொண்டு இருக்கும்போது வேகமாக வரும் வாகன ஓட்டியால் அந்த வாகனம் நிற்கிறதா செல்கிறதா என்று யோசித்து முடிக்கையில் விபத்து ஏற்பட்டு விடுகிறது. சுங்கவரி வசூலிப்பதில் இருக்கும் ஆர்வம் துளி கூட விபத்தை எப்படி தவிர்ப்பது என்பதில் இல்லை.

நான்கு வழிச்சாலை அமைக்கும் போது வாகனங்கள் ஓய்வெடுக்க தனியாக இடம் அமைக்க வேண்டும், வழியில் பாத்ரூமிற்கு செல்ல வேண்டி வரும் அதற்காக குறிப்பிட்ட கிலோமீட்டர் இடைவெளியில் தரமான கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். அப்போது கண்ட இடத்தில் வாகனங்கள் ஓரம்கட்டி நிற்க வாய்ப்பில்லை.

சாலைவிபத்துக்களை தவிர்க்க ஓட்டுருக்கு நிறைய பயிற்சி அளிக்க வேண்டும் குறிப்பிட்ட வேகத்தை தாண்டி அதிக வேகமாக ஓட்டும் ஓட்டுநருக்கு தடை விதிக்க வேண்டும்.

நல்ல அனுபவம் உள்ள ஓட்டுநர்களையே சொகுசு பேருந்துக்கு ஓட்டுநராக அனுப்ப வேண்டும்.

ஓட்டுநர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தி விட்டரெனில் அவரின் லைசென்ஸ் குறிப்பிட்ட காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும்.

அதிகவேக வாகனங்களை அதிகாரிகள் கவனித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்..

இதுவரை நடந்த சாலை விபத்துக்களை கணக்கிட்டு ஏன் நடந்தது என்பதை ஆராய்ந்து இனி இந்த தவறு வராமல் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று ஓட்டுநருக்கு பாடம் எடுக்க வேண்டும்.

இந்த மாதிரி செய்தால் ஓரளவிற்கு விபத்தை தவிர்க்க இயலும்...

என்னதான் பதிவெழுதி, போராட்டம் நடத்தி, ஊர்வலம் சென்று சாலை விதிகளை கவனியுங்கள் என்றாலும் ஓட்டுநர்கள் அதிகம் கேட்கமாட்டார்கள் ஏனெனில் வாகன உரிமையாளர் இந்த நேரத்துக்கு இங்க இருக்கனும் அங்க இருக்கனும் என்று கட்டாயப்படுத்துவர் யாராவது பிடித்தால் என் பேரைச் சொல்லு நான் பார்த்துக்கிறேன் என்று தைரியம் சொல்வார்கள். இவர்கள் சம்பாரிப்பதற்கு நம்பி வரும் தொழிலாளியும், வாடிக்கையரும் உயிரை இழக்க வேண்டி இருக்கிறது...

நிச்சயம் சாலை விபத்து தொடர்கதைதான் இதற்கு முடிவெழுதுவது என்பது கஷ்டமே....

நம் உயிருக்கு நாம் தான் பாதுகாப்பு...

முடிந்தவரை நாம் சாலைவிதிகளை மதித்து பின்பற்றுவோம்...