Friday, November 18, 2011

நண்பனின் காதல் திருமணம்....


நான் எனது ஒரு சில நண்பர்களின் காதல் திருமணத்திற்கு (அதுதாங்க ஓடிப்போய் கல்யாணம் பன்றது)  துணை நின்று நடத்தி இருக்கின்றேன் அதில் ஒரு மறக்க முடியாத நான்(பன் வாங்கிய) எனது நண்பன் திருமணத்தின் அந்த திக் திக் சில நிமிடங்களை உங்களுடன் பகிர்து கொள்கிறேன்.....

நாங்கள் ஒரு 6 நண்பர்கள் கோவையில் ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தோம். அங்க பல சுவரசியமான, சிரிக்கும் படியான, குத்து வாங்கிய பல நிகழ்வுகள் நடந்தன, அதில் நாங்கள் அனைவரும் இணைந்து நடத்திய திருமணம் இது.

எங்கள் நண்பன் பாலா (கதையின் நாயகன்) கோவயைில் ஒரு பிரபலமான பைனான்சில் வேலை செய்தான் அவனுக்கு ப்ரமோஷன் கிடைத்து திருப்பூர் சென்றான்  இவர் அங்க மேனேஜர். அதே ஆபிசில் அந்த கிளையின் இன்சார்ஜ் கீதா இவரு போய் மூன்று மாதங்களில் இருவருக்கும் பத்திகிச்சு. 

அப்புறம் ஒரு 5 மாதங்கள் கழிச்சு நண்பன் எங்ககிட்ட வந்து நான் திருமணம் செய்தால் அவளைத்தான் செய்வேன் மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்று வசனம் பேசினான் என்ன பன்றது நண்பனாச்சே
என்னுடன் தங்கியவர்களில் இருவர் வக்கீல் சொல்லவேண்டுமா எங்களுக்கு உடனே திருமணத்திற்கு நாள் குறித்து இடம் குறிச்சோம்...

நாள் ஒருவாரம் கழித்து புதன்கிழமை இடம் கோவையில் உள்ள ஒரு பிரபலமான கோயில். கோவிலுக்கு விசாரிக்க வக்கீலும்,  சுரேசும் போனார்கள் அங்க என்னடான்னா காதல் திருமணம் இங்க அனுமதி இல்லை வேனும்னா வெளிய விநாயகர் கோயில்ல வெச்சு பண்ணிக்கலாம். இதற்கு புரோகிதர் வர மாட்டேன் என்கிறார். அவருக்கு பதில் காதல் திருமணத்திற்கு என இருக்கும் ஒருவருக்கு  ரூ.500 கொடுத்ததும் அவர் சரி என்று சொல்லிவிட்டர். மற்ற நண்பர்கள் பட்டுப்புடவை, வேஷ்டி, மாலை மற்றும் தாலி திருமணத்திற்கு தேவையான அனைத்துப்பொருட்களும் ஒரு ரூ.25000 ரெடி பண்டி வாங்கியாச்சு.

திருமண நாள் அன்று இரண்டு நண்பர்கள் பெண்ணை அழைத்துவர நடுராத்திரி 5 மணிக்கு போய்ட்டாங்க அப்புறம் நான், வக்கீல் சங்கர், சுரேஷ் கோவில்ல செய்ய வேண்டிய வேலை எல்லாம் ரெடி செய்து கொண்டு இருந்தோம். பொண்ணு இன்னும் வரல. கூட போனவங்க செல்லும் நாட் ரீச்சபல் என்னு பன்றது டென்சன், டென்சன்,டென்சன்.....

ஒரு அரைமணி நேரம் கழிச்சு நண்பன்கிட்ட இருந்து போன் மச்சி பொண்ணு இன்னும் வரலனு. என்னடா பன்றது மணி இப்பவே 8 ஆச்சசுனு டென்சனின் உச்சியில் இருக்கும் போது அடுத்த போன் பொண்ணு பொண்ணு வீட்டு பின்னாடி வழியா ஒரு 5 கீலோ மீட்டர் நட்ந்து வந்து பனியன் கம்பெனி பக்கதில இருக்குது நாங்க பிக்கப் பன்னிட்டு 1 மணி நேரத்தில்
வந்து விடுவோம் நீங்க ரெடியா இருங்க.

இந்த சமயத்தில் கோவில்ல பார்த்த கிட்டத்தட்ட அன்று மட்டு 20 கல்யாணம் நானும் சுரேசும் மத்த கல்யாணத்துக்கு வந்த பொண்ணுகனை சைட் அடிச்சிட்டு இருந்தோம்.

9 மணி பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சு நான் போட்டோகிராபர் அளாளுக்கு ஒரு வேலை செய்ய அய்யர் அவர் வேலையை செய்ய திருமணம் நல்ல நேரத்தில் சுபமா முடிந்தது. அடுத்தது என்ன செய்யலாம்னு முடிவெடுக்கும்
போது முதல்ல சாப்பிடலாம்னு ஒட்டல் ஆர்யாஸ்ல சாப்பிட்டுவிட்டு அடுத்த முடிவ எடுத்தோம். பொண்ணு வீட்டுக்கு போன் செய்து முடிவு செய்து மாப்பிள்ளைய பேசச் சொன்னோம்.

மாப்பிள்ளை பொண்ணு வீட்டுக்கு போன் செஞ்சா நாலு தடவை போன் எடுக்கல எங்களுக்கு பி.பி ஏறிருச்சு. மறுபடியும் ரிங்போகுது  நண்பர்கள் ஸ்பீக்கர் ஆன்ல அவங்க அப்பா ஒரு வழியா
போன எடுத்தார். மாப்பிள்ளை பேசினான் உங்க பொண்ணும் நானும் உங்க பொண்ணும் கல்யாணம் பண்ணிட்டாங்க இப்பதான் நடந்துச்சுன்னு மாப்பிள்ளை சொல்ல...

சும்மா ஒரு 5 நிமிடம் திட்டுட்டு( செம திட்டு) கடைசியா சொன்னார். எங்கிட்ட காலைல சொல்லி இருந்தா நானும் வந்து இருப்பேன்ல ஏன் சொல்லவில்லைனு கொஞ்சம் டென்சனா பேசினார்.

அடுத்து இரண்டு குடும்பமும் பொது இடத்தில் பஞ்சாயத்து பேசி மறுபடியும் இன்னொரு திருமணம் அவங்க குடும்பத்துடன் பவானி கூடுதுறையில் நடத்தினார்கள். 

இதில் மிக முக்கியமான விசயம் பொண்ணும் எங்க நண்பனும் குடும்பத்தோட நடந்த திருமணத்திற்கு எங்கள கூப்பிடவே இல்லை....

நண்பன் தானே எங்கிருந்தாலும் வாழட்டும் என்று சந்தோசமாக இதை கண்டுக்கல அவனை மறுபடியும் நாங்களும் கேக்கல... 

இது ஒரு மீள் பதிவு.... இரண்டு வருடத்திற்கு முன்னால் எழுதியது.. நேற்று நண்பனை எதாச்சையாக பார்த்தேன் எப்படி டா இருக்கேன்னு கேட்டா இல்லடா எனக்கு அவளுக்கும் ஒத்து வரல விவாகரத்து செய்யலாம்ன்னு ரெண்டு பேரும் முடிவு செய்து அப்ளை செய்திருக்கிறேன் என்றான்...
என்ன சொல்ல அவனிடம் ஓகே பாரு என்று வந்துட்டேன்...


இதுக்காட உனக்கு கல்யாணம் செய்து வைத்தோம் தூரத்தில் இருந்தாலும் சந்தோசமாக இருக்கிறேன் என்று சொன்னால் நிம்மதியாக இருக்கும் திருமணம் செய்த போது இருந்த நண்பர்களிடம் பேசினேன் ரொம்ப வருத்தப்பட்டது அவனை விட நானும் எனது நண்பர்களின் குடும்பமும் தான்....

7 comments:

  1. வாழ்க்கைனா சும்மாவா......

    ReplyDelete
  2. அவசர கோலமா மாறிப் போச்சே... உங்கள் முயற்சியில் நடந்த கல்யாணம்.


    நம்ம தளத்தில்:
    நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?

    ReplyDelete
  3. //இதில் மிக முக்கியமான விசயம் பொண்ணும் எங்க நண்பனும் குடும்பத்தோட நடந்த திருமணத்திற்கு எங்கள கூப்பிடவே இல்லை....//
    அதைத்தானே பாஸ் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' டிரெய்லர்ல சந்தானம் வாழ்க்கையோட முக்கியமான தத்துவம்னு சொல்றீராரே! :-)
    விடுங்க பாஸ்! எங்களுக்கும் இப்பிடி அனுபவம் இருக்கு! :-)

    ReplyDelete
  4. சங்கவி,

    “ நாடோடிகள்” படக்கதை ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது.

    ReplyDelete
  5. எனக்கும் வாசிக்கும் போதே நாடோடிகள் தான் நியாபகம் வந்தது. சத்ரியனும் அதே சொல்றார்

    ReplyDelete
  6. எல்லா காதலும் இப்படியே முடிவது ஏனோ?? :-(

    ReplyDelete