Sunday, October 31, 2010

இந்த காமக்கொடூரன்களை என்ன செய்யலாம்

கடந்த 2 நாட்களாக கோவையில் நடந்த கடத்தல் நிகழ்ச்சியை அனைவரும் பத்திரிக்கையில் படித்திருப்போம். பிஞ்சு குழுந்தைகளுடன் நன்றாக பழகி அவர்களை கடத்தி பாலீயல் பலாத்காரம் செய்து வாய்க்காலில் தள்ளி கொன்ற காமக்கொடூரனை என்ன செய்வது

இதைப்படிக்க படிக்க இரத்தம் கொதிக்கிறது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கடந்த 2 நாட்களாக பத்திரிக்கையில் பொதுமக்கள் கருத்து என்னவெனில் அவர்களை தூக்கிலிடவேண்டும் என்பது தான் அனைவருடைய கோரிக்கையாக இருக்கும் இக் கொடிய நிகழ்ச்சியை படித்த அனைவருக்கும் மனது பதைபதைக்கும்.

ஆனால் நம் சட்டம் இதற்கு இடம் கொடுக்காது. விசாரணை விசாரணை என்று நாடகள் தள்ளித்தான் செல்லும். நாம் இவ்வளவு வளர்ந்தும் இன்றும் நம் நாட்டுச்சட்டம் மட்டும் காலத்திற்கு ஏற்றாற் போல் கடுமையாக இல்லாதது வருத்தமே. இதே சம்பவம் வலைகுடா நாடுகளில் நடந்திருந்தால் அந்தக் கொடூரனை கல்லால் அடித்தே கொன்றிருப்பார்கள்.

இந்த கொடூர நிகழ்ச்சியை சாதாரணமாக என்ன முடியாது நமக்கும் குழந்தைகள் இருக்கின்றன இந்நிலமை நம் குழந்தைகளுக்கோ நம்மைச் சார்ந்த குழந்தைகளுக்கோ வந்து இருந்தால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அவர்கள் பெற்றோர்களை நினைத்துப்பாருங்கள் அழகான 2 குழந்தைகள் நேற்று இருந்தது இன்று இல்லை. நம்மால் என்ன செய்ய முடியும் இன்று பதிவெழுதி என் கண்டனத்தை தெரிவித்து விட்டு நாளை முதல் தீபாவளி கொண்டாட்டத்தில் இதை மறந்து விடுவோம். இது தான் நம் நிலை.

காமக்கொடூரைனை என்ன செய்வது அனைத்து தப்புகளையும் செய்து விட்டு இன்று பாதுகாப்பில் இருக்கிறான். அவனை நீதிமன்றத்துக்கு கூட்டிட்டுப்போய் விசாரணை நடத்தி தண்டனை அளித்து அதை நிறைவேற்றுவதற்குள் அனைவரும் இந்நிகழ்ச்சியை மறந்து விடுவோம்.

நம் சட்டம் மாறவேண்டும் இதைப்போன்று குற்றங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும். தண்டனை கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும். இவனுக்கு தூக்கு தண்டனை வழங்கி அதை சீக்கிரம் நிறைவேற்ற வேண்டும்.

குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

Thursday, October 28, 2010

கதை... விடுகதை...1


விடுகதை போடுவதும் அதற்கு பதில் சொல்வதும் சுவாரஸ்யமான விசயம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.. ஏற்கனவே நிறைய விடுகதைகளுடன் கூடிய பதிவை போட்டுள்ளேன் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ஒவ்வொரு முறையும் விடுகதை சொல்லும் போது அதற்கான பதிலை முதலில் சொல்வோம் அது சரியாக இருந்தால் அந்த சந்தோசம் தனி...

இந்த முறை நிறைய விடுகதைகள் சொல்லப் போறேன் யார் அனைத்து விடுகதைக்கும் பதில் சொல்கிறார்களோ அவர்களுக்கு ஓர் இனிய தீபாவளி பரிசு...

1. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல,  உருண்டோடி வரும்
பந்தும் அல்ல அது என்ன?

2. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?

3.ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?

4. செக்க செவந்த அழகி  நீ கோபத்துக்கு பேர் போனவலடி!!!  யார் நீ?

5. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?

6. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம் அவன் யார்?

7. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

8. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் அது என்ன?

9. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?

10. குதிரை ஓட ஓட வால் குறையும் அது என்ன?

11. பூக்கும், காய்க்கும், வெடிக்கும் ஆனால் பழுக்க மட்டும் செய்யாது அது என்ன?

12. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலை  யைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?

13. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான்  அவன் யார்?

14. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானம் அவன் யார்

15. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன?

16. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?

17. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?

18. தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்?

19. கல்லில் காய்க்கும்பூ தண்ணீரில் மலரும்பூ, அது என்ன பூ?

20. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?

ஏழை வீட்டு விருந்து

கண்ணம்மா இன்று எங்க மாமவும், அக்காவும் வருகிறார்களாம் இப்ப தான் மாமா போன் செய்தார் உன் சமையல் இன்னிக்கு அசத்திரனும் உன்னுடைய கை பக்குவத்தில் அருமையா இருக்கும் நாட்டுக்கோழி குழம்பு வைச்சிடு, காடை வறுவல், இரத்தம் குடல் வறுத்து முட்டை தொக்கு வைச்சிறு மாலை 7 மணிக்கெல்லாம் ரெடி பண்ணிடு கண்ணம்மா என்று சொல்லிவிட்டு மற்ற வேலைகளை பார்க்ச்சென்றாள் வீட்டு எஜமானி

சரிம்மா...

கண்ணம்மா இன்று காலை வரும் போது தன் மகன் சுந்தர் சொன்னது ஞாபகம் வந்தது

அம்மா எங்க பள்ளியில் நடந்த மாவட்ட அளவிளான ஓட்டப்பந்தயத்தில் நான் தான் முதல்ல வந்தேன் எல்லோரும் என்னை பாராட்டி இந்த கோப்பைய கொடுத்தாங்கம்மா...

சரிப்பா படிப்பு விளையாட்டு இதுல எல்லாம் நீ எப்பவும் முதல்ல வரனும் இது தாம்ப இந்த அம்மா ஆசை...

சரிம்மா வந்துறன்.. இந்தாம்மா கோப்பை அம்மா இன்னிக்கு இராத்திரி சாப்பாட்டுல என்ன அசத்திடனும்மா

சரிப்பா... சாம்பார் வைக்க கூட காசில்ல எங்க நம்ம பையனுக்கு நல்ல சாப்பாடு போடறது நேத்து தான் ரேசன் கடையில அரிசி வாங்கின எப்ப சாம்பார் வைக்கறதுன்னு நினைச்சேன் இவ வேற விருந்து கேக்கிறானே...

கண்ணம்மா சந்தோசப்பட்டாள் அப்ப இன்னிக்கு இங்க சமையல முடிச்சு போகும் போது எப்படியும் மீதி இருக்கும் கொடுப்பாங்க பையன அசத்தி விடலாம் என்று மனமகிழ்ந்தல்.

சீக்கிரம் சமையலை முடித்தாள் எப்பவும் விட இன்றைக்கு நல்லா மனம் என்று வீட்டு எஜமானி அம்மா சொன்னாள் (இவள் மகனை நினைத்து செய்தேன் என்றால் மனதில்)

அனைவரும் சாப்பிட்டுவிட்டு சாப்பாடு சூப்பர் என்று மகிழ்ந்து பாராட்டினார்கள் மாமவும் அக்காவும் நீ எங்க வீட்டுக்கும் வந்து சமைச்சு கொடும்மா என்றார்கள் இல்லைங்க என்று மறுத்து சிரித்தாள்..

அனைவரும் சாப்பிட்ட பின் கொல்லப்புறம் சென்று தன் குண்டாக்களை எடுத்து வந்து சாப்பாடு போட சமையறலைக்குள் நுழைந்தாள் பின்னாடியே நுழைந்த வீட்டு அம்மா கண்ணம்மா இன்று உன் சமையல் சூப்பர் அதனால அவர் நண்பர்கள் இரண்டு பேர் வருகிறார்களாம் சாப்பாட்ட வைச்சிடு இந்த உனக்கு 100 ரூபாய் நாளை காலை வாம்மா...

சரிம்மா... பையன் நல்ல சாப்பாடு கேட்டானே என்ன பன்றது கையில பணம் இருக்குது மணி 9 ஆச்சு இனிமேல் சமைக்கிறதுக்குள்ள தூங்கிடுவான் ஒரு நாளைக்கு நல்ல சாப்பாடு போடமுடியலியே என்று மனதிற்குள் நினைத்தாள்

என்னம்மா சாப்பாடு ரெடியா

வா சுந்தர் சாப்பிடலாம் என்று பழைய சாப்பாடு, தயிர், கூட சின்ன வெங்காயம் எடுத்துக்கப்பா..

அம்மா உன்கையால எனக்கு மிகவும் பிடிச்ச சோறு இந்த பழைய சோறுதாம்மா இத நீ கரைச்சி கொடுக்குற பக்குவம் இருக்கே இது தாம்மா எனக்கு பிடிச்சிருக்கு..

கண்ணம்மா நெகிழ்ந்து அவனை மார்போடு அணைத்தாள்...

Monday, October 25, 2010

எப்பொழுதும் தேவை ஆசை


ஆசை இல்லாதவன் இன்று மனிதனாக இருக்க முடியாது அனைவருக்கும் ஆசை உண்டு. புத்தர் சொன்னார் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று  கூறி நாம் ஆசைப்படக்கூடாது என்று  அவர் ஆசைப்பட்டார். ஆசையால் தான் ஒவ்வொருவருடைய முன்னேற்றமும் இன்று வெற்றியுடன் செல்கிறது. சிறுவயதில் இருந்தே ஒவ்வொருவக்கும ஆசை ஆரம்பமாகிறது. ஒருவடைய துன்பத்திற்கும், சந்தோசத்திற்கும் ஆசையே காரணம். அதிக ஆசையால் அழிந்தவர்களும் உண்டு. நம் ஆசையை நாம் எவ்வாறு நிறைவேற்றுகிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது.

நடந்து செல்பவனுக்கு சைக்கிளில் செல்ல ஆசை
சைக்கிளில் செல்பனுக்கு பைக்கிள் செல்ல ஆசை
பைக்கில் செல்பனுக்கு காரில் செல்ல ஆசை
காரில் செல்பவனுக்கு உயர் ரக காரில் செல்ல ஆசை


மனிதன் வாழ்நாள் முழுவதும் ஆசையால் தான் நடந்து கொண்டு இருக்கிறது. அவர் அவர் தகுதிக்கேற்ப ஆசை இருந்தால் அது நிறைவேறும் போது அடுத்த ஆசைக்கு மனம் செல்கிறது. தான் ஆசைப்பட்டது நடக்கும் போது இருக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இருக்காது அது அனுபவிக்கும் போது தான் அந்த இன்பவலி தெரியும்.

ஆசையைப்பற்றி  பேராசை பெரு நட்டம் என்றொரு பழமொழி உண்டு. ஒருவன் ஆசைப்படலாம் ஆனால் அவன் தகுதியும் திறமையும் பொறுத்து. ஒருவன் படிக்கும் போது அவன் அப்பா அவனை கூலி வேலை செய்து படிக்க வைத்திருப்பார் அப்பொழுது அவன் ஆகாய விமானத்தில் பறக்க ஆசைப்படலாம் அப்பொழுது அவனுக்கு பொருளாதார வசதி இருப்பதற்கு வாய்ப்பு குறைவு ஆனால் பிற்காலத்தில் அவன் படித்து பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததற்கு பின் அவனது தகுதியையும் திறமையையும் வைத்து முன்னேறிக்கொண்டு இருக்கும் போது அது சாத்தியாகிறது. அன்று அவன் ஆசைப்பட்டதால்  சாத்தியம்.

என் சிறுவயதில் என்னைப்படிக்க வைக்கும் போது என் பெற்றோர் என் மகன் படித்து பெரிய அதிகாரி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டனர் அது நடக்கல. ஆனால் நான் ஆசைப்பட்டது எப்பவும் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டு இருப்போம் ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் நீ வருங்காலத்தில் என்ன ஆகப்போற என்ன படிக்கப்போற என்று கேட்டார் எனக்கு அவரைப் பிடிக்காது எப்ப பார்த்தாலும் என்ன அடிச்சிகிட்டே இருப்பார் (இது அவர் ஆசையா இருக்கலாம்) அப்ப என் வரிசை வரும் போது நான் அரசியல்வாதியாக ஆசைப்படுகிறேன் என்று சொன்னேன் அந்த ஆசை நிறைவேறவில்லை ஆனால் அந்த ஆசிரியர் அன்றில் இருந்து என்னை அடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை நிச்சயம் இருக்கும் அந்த ஆசை நிறைபேருக்கு நிறைவேறி இருக்கலாம் நிறைவேறாமலம் இருக்கலாம் எனது சிறுவயது முதல் நான் ஆசைப்பட்டது நிறைய எனக்கு கிடைத்திருக்கிறது நிறைய கிடைக்காமல் போய் இருக்கிறது. கிடைக்காமல் போனதை பற்றி கவலைப்படாமல் கிடைத்ததை வைது சந்தோசப்பட்டேன் இப்பொழுது இன்னும் நிறைய ஆசைகளை சுமந்து கொண்டு அது நிறைவேற உழைத்துக்கொண்டு இருக்கிறேன் ஆசைகள் நிறைவேறும் என்று..

என்னைப்பொறுத்த வரை அனைவரும் ஆசைப்பட வேண்டும் அந்த ஆசை சிறுவயது முதல் இருக்க வேண்டும் அப்போது தான் வெற்றி என்னும் கனியை எளிதாக பறிக்க முடியும்.

அனைவரும் ஆசைப்படுங்கள்

முயற்சி செய்யுங்கள்

வெற்றி நமக்கே....

Tuesday, October 19, 2010

தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் பாகற்காய்



ஒரு கொடியை தூக்கத் தூக்க ஓராயிரம் பாவக்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி கொத்தாகக் காய்க்கக் கூடியது பாகற்காய். 'இலைமறைவு காய்மறைவு' என்ற பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும்வரை அதன் நிறத்திலேயே கொடியின் நிறமும் (பச்சையாக) இருந்து காயைக் காப்பாற்றும். சட்டென்று பார்த்தால் காய் இருப்பதே தெரியாது. கொடியைத் தூக்கிப் பார்த்தால் அடியில் காய்கள் தொங்கும்.

இலையும் கொடியும் சேரும் இடத்தில் பூக்கள் பூக்கும். பிஞ்சு பச்சைக் கலரில் இருக்கும். முற்றிப் பழுக்க ஆரம்பித்ததும் மஞ்சளாகி பின் சிவப்பாக மாறும். முற்றியதும் காய் வெடித்து தோல் மூன்று பாகங்களாகி மேல்நோக்கி சுருண்டிருக்கும். இதன் எல்லா பாகங்களுமே கசப்புதான். ஊறுகாய்க்குச் சிறந்தது. செராசி என்ற காட்டு பாகற்காயில் ஒருவகை பிசின் இருக்கும். அதை மெழுகுவத்தி செய்யப் பயன்படுத்துவார்கள். இதன் இலைகளை மேலை நாடுகளில் தேநீர், பீர் தயாரிக்கவும் சூப் மேல் தூவவும் பயன்படுத்துகிறார்கள்.

பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது. பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும். இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.
வாங்கும் போது கவனிக்கவேண்டியது 

பச்சையாக, தொட்டுப் பார்க்க கெட்டியாக, உள்ளே விதைகள் பிஞ்சாக இருந்தால் சமையலுக்கு நல்லது. மஞ்சள் தோல் இருக்கக் கூடாது. பழமாக உபயோகிக்க முழு சிவப்பு நிறமாக வாங்குங்கள்.

என்ன சமைக்கலாம்
பாகற்காய்க்கு அதன் கசப்பு தான் பலம், பலவீனம் இரண்டுமே. கசப்பைக் கொஞ்சம் குறைக்க வேண்டுமானால் மேலேயுள்ள கரடுமுரடான முள்ளைச் சீவிவிடலாம். காயை நீளவாட்டத்தில் வெட்டி விதைகளை நீக்கிவிட்டு உப்பு போட்டு பிசறி வைத்து உபயோகித்தால் கசப்பு குறையும். சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை போட்டு சமைத்தாலும் கசப்பு குறைந்து ருசியாக இருக்கும். பாகற்காயை வேகவைத்து, வதக்கி, பொரித்து, குழம்பாக, உருளைக்கிழங்கில் அடைத்து என்று பல வகையிலும் சமைக்கலாம். வற்றல் போட்டும் சாப்பிடலாம்.



என்ன சத்து இருக்கிறது

100 கிராம் பாகற்காயில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 25, கால்சியம் 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 70 மி.கிராம், புரோட்டின் 1.6%, கொழுப்பு 0.2%, இரும்புச்சத்து 1.8 மி.கிராம், மினரல்ஸ் 0.8%, பி காம்ளெக்ஸ் 88 மி.கிராம், நார்ச்சத்து 0.8%, கார்போஹைட்ரேட் 4.2%, சிறிதளவு விட்டமின் சி.

புற்று நோயை தடுக்கும் பாகற்காய்

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே. இவர்   “மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார்.

ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.

சர்க்கரை குறைய

1லிருந்து 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் கலந்து அல்லது அப்படியே தினம் மூன்று வேளை சாப்பிட்டால் சர்க்கரை அளவு மூன்று மாதத்தில் குறையுமாம்.

காமாலை மறைய

2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் உடனே மறையுமாம்.

கல்லீரல் பிரச்சனைக்கு

3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராதாம்.

பயன்கள்
  • பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க பாகற்காய் உதவுகிறது. 
  • அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.
  • பாகற்காயின் கசப்பு விஷம் இல்லை. நம் உடல் தனக்கு வேண்டிய அளவு இதன் சத்தை எடுத்துக் கொண்டு மிகுதியைக் கழிவுப் பொருளாக வெளியே தள்ளி விடும்.
  •  இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குஷ்டம், மந்தம், மாலை ஆகிய கொடிய  நோய்களை எளிதில் போக்கும்.
  • பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
  • பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
  • பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
  • பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
  • ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
  • இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.
  • பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும்.
  • பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
  • பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
  • நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
  • ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.
  • பாக்டீரியா, டயபெடீஸ், ரத்தப் புற்றுநோய், குடல்புண், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும் பயனளிக்கக் கூடியது.
  • மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.
  • இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
  • பாகற்காயின் விதையிலிருந்து எடுத்த எண்ணெயை காயங்களுக்குப் போடுகிறார்கள்.
  • சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.
  • பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
  • அமேசான் வனவாசிகள் இதை உணவாகவும் மருந்தாகவும் உபயோகித்தனர். பழம் இலைகளை கறி, சூப்பில் கலந்தனர்.
  • பெரு நாட்டில் பாகற்காயை அம்மைக்கும், மலேரியாவுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
  • உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

Sunday, October 17, 2010

இணையத்தால் இளைஞர்கள் கெட்டுப்போகிறார்களா?


இன்றும் உலகம் உங்கள் கையில காரணம் வீட்டில் உட்கார்ந்து பொட்டியைத்தட்டினால் என்ன தகவல் வேண்டுமோ அனைத்தும் உங்கள் முன் இதற்கு காரணம் வலைத்தளங்கள் விஞ்ஞான வளர்ச்சி.

இன்று கணினியைத் தெரியாதவர்கள் விரல் விட்டு எண்ணி விடலாம் அந்த அளவிற்கு கணினி மோகம் இது வளர்ச்சியை உணர்த்துகிறது. முக்கியமாக தமிழில் நிறைய வலைப்பூக்கள், புதிய புதிய வலைத்தளங்கள் இவற்றின் வளர்ச்சி கணக்கில் அடங்கா.

இன்று நிறைய பேர் கணினியில் உலா வரும் போது ஆபாசமான வார்த்தைகள் வருகின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர் இது சரியா? தவறா? என்று பார்த்தால் சரி என்றும் கூற முடியாது தவறு என்றும் கூற முடியாது. இதை தவறு என்று சொல்பவர்களிடம் முதல் கேள்வி செக்ஸ் என்பது தவறான விசயமா? இதற்கு அனைவரும் பதில் சொல்ல முடியாது நிறைய பேர் கருத்து தவறாக இருக்கலாம் சரி என்றும் இருக்கலாம்.

அனைவரும் அன்னப்பறவை போல் இருங்கள் இணையத்தில் உலாவரும் போது உங்களுக்கு தவறான வார்த்தைகள் வருகின்றன என்றால் உங்களுக்கு அது தேவை இல்லை என்றால் அடுத்த எழுத்துக்குப் போங்க இத விட்டு விட்டு இன்றைய இளைய தலைமுறையினரை பாதிக்கும் என்று கருத்து வேறு. எதோ இவர்கள் தான் இளைஞர்களின் வழிகாட்டி போல்.



இன்றைய இளைய தலைமுறையினர் விவரமாகத்தான் இருக்கின்றனர் முன்பெல்லாம் கல்லூரி மாணவர்கள் சண்டை, சாலை மறியல் என்று வாரத்திற்கு 4 செய்தகளாவது வரும் ஆனால் இன்று மிகவும் குைறைந்து விட்டது. இப்போதைய மாணவர்கள் எல்லாம் விவரமாக இருக்கிறார்கள் கல்லூரியில் சேரும் போது கேட்கும் கேள்வி இங்கு கேம்பஸ் இன்டர்வியூ இருக்கா இல்லையா என்பது தான் முதல் கேள்வி வந்து கல்லூரியில் படித்தோமா படித்து முடித்தவுடன் வேலைக்கு சென்றமா என்று தான் இருக்கிறார்கள்.

இணையத்தின் மூலம் இன்று வேலை தேடும் இளைஞர்கள் தான் அதிகம் ஒரு நிறுவனம் வேலைக்கு விளம்பரம் கொடுத்து உள்ளார்களா உடனே அந்நிறுவனத்தை பற்றி தெரிய வேண்டுமா செல் இணையத்திற்கு அதைப்பற்றியான அனைத்து தகவல்களும் வந்து விழுகின்றது.

இணையத்தை பயன்படுத்தி பயன் பெறுபவர்கள் தான் அதிகம், இல்லை இணையத்தின் மூலம் நிறைய பேர் கெட்டுப்போகிறார்கள் என்று சொல்பவர்கள் மஞ்சக்காமலை பிடித்தவனுக்கு எதைப்பார்த்தாலும் மஞ்சள் மஞ்சளாக தெரியும் என்ற கதை தான் ஞாபகம் வருகிறது.

Wednesday, October 13, 2010

அழிக்கப்படும் புராதனங்கள்- அரசுக்கு வேண்டுகோள்




சிதறாமல் அமர்வாரா ஜைனர்?

ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்டஆளுருட்டி மலை
 
புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

வெடித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியல்கள்
 
தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே
collr.tnpdk@nic.in மற்றும் collrpdk@tn.nic.in
 
மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மின் அஞ்சல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு  செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன் 
ஆரூரன் விசுவநாதன்
 
நண்பர் ஆருரான் வேண்டுகோளுக்கு இணங்க மீள் பதிவு....
 
To
The Collector,
Pudukottai Dist.
 
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.
 
Regds:\

Monday, October 11, 2010

நண்பன் அமைவதெல்லாம்...

நண்பன் எனக்கு இல்லை என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணலாம். அந்த அளவிற்கு நண்பர்கள் நம் வாழ்வில் இன்றியமையாதவர்களாகி விட்டனர் என்றால் அது மிகையாகாது.

ஒவ்வொருவருக்கும் ஒரு காலகட்டத்தில் நண்பர்கள் உருவாகி இருப்பர் நம் சிறுவயது முதற் கொண்டே நட்பு உருவாகிறது. குழந்தையாய் பக்தது வீட்டு குழந்தையுடன் முதல் நட்பு, பள்ளிக்குச் செல்லும் போது அங்குள்ள குழந்தைகளின் நட்பு, விடுமுறையில் அத்தை வீட்டுக்குச் செல்லும் போது அந்த ஊர் குழந்தைகளின் நட்பு என ஒவ்வொரு கால கட்டத்திலும் நட்பு இருந்தே வருகிறது. நட்புக்கு வரைமுறை எல்லாம் கிடையாது.

நண்பனை நம்பி ஏமாந்தவர்கள் நிறைய இருக்கின்றனர் ஆபத்தில் சிக்க விட்ட நண்பர்களும் இருக்கின்றனர், பாதியில் கழட்டி விட்ட நண்பர்களும் இருக்கின்றனர். இப்படி நிறைய வகை நண்பர்கள் உள்ளனர். யார் யாருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் நட்பு உருவாகலாம் அதை முறையாக கையாள்பவர்கள் தங்களது நட்பு கடைசிவரை உடன் வரும்.

நான் நிறைய நண்பர்களைப்பார்த்து உள்ளேன் அவர்கள் வீட்டு விசேசத்திற்கு அனைத்து வேலைகளையும் செய்வார்கள் அவர்கள் குடும்ப வேலைகளை இவர்கள் செய்வார்கள் என குடும்ப நட்பும் நிறைய உண்டு. உண்மையான நண்பன் கூட இருக்கும் போது எதற்கும் கவலை இல்லாம் இருக்கலாம். வெளியூரில் வேலை செய்யும் நண்பர்கள் தங்களது வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை எனில் முதலில் நண்பனைக் கூப்பிட்டு டேய் போய்பாரு என்று நண்பர்களுக்குத் தான் முதலில் தொடர்புகொள்வார்கள். நண்பனும் தங்களால் ஆன உதவியை செய்வார்கள் இது தான் இன்று நிறைய வெளியூரில் வேலை செய்யும் நண்பர்களிடம் இது அதிகமாக கணப்படும்.


உதவிக்காக மட்டும் தான் நண்பன் என்றால் அதுவும் தவறு. மாற்று உதவியை எதிர்பாரமல் உதவும் நண்பர்களே நண்பர்கள். நண்பனின் தேவை அதிகமாகும் இடம் வெளியூரில் வேலைக்குச் செல்லும் போது தான் அதிகரிக்கிறது. வேலைக்கு சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கும் போது நண்பர்கள் தேவை. வேறு ஊருக்கு வேலை காரணமாக செல்கிறோம் என்றால் முன்னரே நண்பனைக்கூப்பிட்டு இங்கே இருக்கிறேன் வாடா என்று உரிமையாக அழைக்கலாம். நண்பனை மட்டுமே அவன் எந்த பதவியில் இருந்தாலும் வாடா போட என்று அன்போடு அழைக்க முடியும்.

எனது நண்பர்கள் உடன் நான் அதிகம் சுற்றி எக்கச்சக்க சேட்டை செய்துள்ளோம் ஆனால் என் நண்பனுக்காக நான் செய்த ஒரு சின்ன உதவி இன்று வரை இருவரும் என்னை பார்த்தால் அவ்வளவு சந்தோசப்படுவார்கள். ஒரு 10 வருடங்களுக்கு முன்பு மே விடுமுறையில் எங்கள் ஊரிற்கு புதிதாக ஒரு பெண் வந்தாதாங்க அனைவரும் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வரும் போது பார்ப்போம் இதில் என் நண்பன் ஒருவன் எனக்கு அந்த பெண் பிடிச்சிருக்கு கட்டினால் இந்த பெண் தான் என்று சுத்த ஆரம்பித்தான். அந்த காதலுக்கு முதல் எதிர்ப்பே நான் தான் அதன் பின் அவன் என்னிடம் எதுவும் இப்பெண்ணைப்பற்றி சொல்வதில்லை நானும் கண்டுக்காமல் இருந்தேன். அப்புறம் தான் விசயம் தெரிய வந்தது காதல் ஒகே ஆகிவிட்டது என்றும் அந்தப்பெண் ஊரிற்கு சென்று விட்டாள் எனவும்.

சரி அந்த பெண்ணைப் பார்க்க போகனும் என்ன செய்யலாம் என்று அப்போது தான் என்னிடம் உண்மையை சொன்னான் சரி வா போகலாம் என்று எங்கள் ஊரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அப்பெண்ணின் ஊரிற்கு சென்றோம் இன்னும் இங்கிருந்து 2 கிலோ மீட்டர் உள்ளே போகனும் என்றான் ஊரைப்பார்த்து விட்டு அந்த ஊரில் என்ன செய்கிறார்கள் அந்த ஊர் எப்படி என்று விசாரித்து விட்டு திரும்பினோம். இதற்குப்பின் அவன் வேலை செய்யும் கம்பெனி வண்டியை எடுத்துக்கொண்டு அந்ந ஊரிற்கு சென்று கேஸ் அடுப்பிற்கு டியூப் வேண்டுமா என ஒவ்வொரு வீடாக நாங்கள் 5 பேர் அந்த ஊரைச்சுற்ற கண்டுபிடித்தோம் அவர்கள் வீட்டை அப்புறம் அந்த பெண்ணிடம் பேசிவிட்டு திரும்பினோம்.
இதற்குபின் அவன் தனியாக இருமுறை சென்று பார்த்துவிட்டுவந்து விட்டான். அப்புறம் பெண் கேட்கலாம் என நானும் அவனும் அவனது ஊரிற்கு செல்ல அந்த ஊர் இளைஞர்கள் இவன் வருவதையும் அப்பெண்ணிடம் பேசியதையும் பார்த்து வைத்துள்ளனர் சரியாக நாங்கள் இருவரும் போக ஊர் ஒன்று சேர்ந்து ரவுண்டு கட்டிவிட்டார்கள் அப்புறம் என்ன கொஞ்சம் கும்மாங்குத்து தான் அந்த ஊரில் உள்ள ஒரு பெரியவர் எங்களுக்கு சப்போட்டாக பேச அங்கு இருந்து தப்பி வந்தோம் எத்தனையோ நண்பர்கள் அவனுடன் சென்றாலும் நண்பனுக்காக பொதுமாத்து வாங்கியது நான்தான். அவர்கள் இருவரும் இன்றும் நினைவு கூர்ந்து சந்தோசப்படுவார்கள்...

அதற்குப்பின் இரண்டுமுறை அந்த ஊரிற்கு இரவில் கரும்புக்காட்டு வழியாக சென்று கடிதம் கொடுத்து மூன்றாவது முறை வெளியே கூட்டடிட்டு வந்து திருமணம் முடிந்து இன்று அனைவரும் சந்தோசமாக உள்ளனர் இது நண்பனுக்காக நான் செய்த உதவி மறக்க முடியாத நினைவுகள் தான்... நம்மில பல பேர் நண்பனுக்காக பல உதவிகள் செய்து இருப்பார்கள் நண்பர்களும் நமக்கு செய்து இருப்பார்கள். மனைவியிடம் பேச முடியாத விசயங்களைக் கூட நண்பனிடம் ஆலோசனை பெறபவர்கள் இங்கு அதிகம் இது தான் இன்றைய நிலையும் கூட....

இன்று நம் வலைப்பதிவில் எடுத்துக்கொள்ளுங்கள் எத்தனையோ முகம் தெரியாத நட்புக்கள் இதில் அனைவரும் சந்தித்திருப்பார்களா என்றால் நிச்சயம் குறைவு தான் ஆனால் நட்பு தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பது சந்தோசமான விசயம்....

நம் வாழ்விற்கு நண்பர்கள் முக்கியம்.. நண்பன் அமைவதொல்லாம் நாம் பெற்ற வரத்தைப் பொறுத்து... நண்பேன்டா.....

Friday, October 8, 2010

நம்ம ஊரு கூட்டாஞ்சோறு...2


கூட்டாஞ்சோறு என்னைப்பொறுத்த வரை வயது ஆக ஆக மாறிக்கொண்டே இருக்குது சிறு வயதில் கூட்டு சாப்பாட்டை இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். நாங்கள் முதன் முதலில அசைவ கூட்டாஞ்சோறு சமைக்கத் தொடங்கியது படித்து முடிதது வேலைக்கு செல்லும் போது தான் ஊரில் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம் ஞாயிறு அன்று நிச்சயம் வீட்டில் அசைவம் தான். புரட்டாசி மாதத்தில் யார் வீட்டிலும் அசைவம் இருக்காது மாதம் மாதம் சாப்பிட்டு பழகியாச்சு என்ன செய்வது வீட்டில் செய்யமாட்டாங்க. எங்களுக்கு பக்தி எல்லாம் கிடையாது அனைவரும் வேலைக்குச் செல்வதால் கையில் பணம் இருக்கும். ஆளுக்கு 20 ரூபாய் போட்டு கறி எடுத்துக்கொள்வோம்.

ஊருக்கு ஒதுக்குப்புறம் எல்லாம் செல்ல மாட்டோம் ஊர் நடுவில் உள்ள பஞ்சாயத்து மோட்டர் அறை தான் எங்கள் சமையல் அறை வீட்டில் அசைவம் செய்தாலும் அப்ப அப்ப எங்க சமையல் நடைபெறும். கிராமங்களில் சேவல் வளர்க்கும் பழக்கம் உண்டு எங்கள் எல்லார் வீட்டிலும் வளர்ப்போம் எங்க பசங்க யாராவது வீட்ல இருக்குற சேவலை தூக்கீடடுப்போய் சமைத்து சாப்பிடடு விட்டு அப்புறம் அவங்க வீட்ல மாத்து வாங்குன கதை எல்லாம் நிறைய இருக்கு...


அசைய சமையலில் நாங்கள் அதிகம் சாப்பிடுவது கோச்சை தான் கோச்சை என்பது கட்டுச்சாவல் என்று சொல்வார்கள் இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கோழிச் சண்டை நடக்கும் இடத்திற்கு சென்று சண்டையில் இறக்கும் கோழியை கோச்சை என்பார்கள் இதன் சுவையே தனி... ஒரு கோச்சை 3 முதல் 5 கிலோ வரை இருக்கும்.

கோச்சையில் இருக்கும பொங்கை பிய்ச்து எடுத்து விட்டு துண்டு துண்டாக நறுக்கி கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய்,வெங்காயம் போட்டு நன்கு வனக்கி நறுக்கிய துண்டுகளை உள்ளே போட்டு நன்கு எண்ணெய்யில் வனக்க வேண்டும் ஒரு பத்து நிமிடம் எண்ணெய்யில் வணக்கி கொத்தமல்லி தூள், மிளகாய்ப்பொடி போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு அரை மணி நேரம் பூ போல வேக வைப்போம் இன்னொரு அடுப்பில் ( அடுப்பு மூன்று கல்லை வைத்து அதற்கு மேல் பாத்திரம் இது தான் எங்கள் அடுப்பு) சாப்பாடு ரெடியாக இருக்கும் பக்கத்து தோட்டத்தில் தலை வாழை இலை கொண்டு வந்து நாங்கள் 10 பேர் மண் தரையில் தான் உட்காருவோம் ஆளுக்கு மூன்று கரண்டி கறித்துண்டும் குழம்பும் சாப்பாட்டோடு சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. இதுவரை நிறைய இடங்களில் சாப்பிட்டுவிட்டேன் ஆனால் இந்த சுவையும் சுகமும் கிடைக்கவில்லை.

அடுத்து ஆட்டுக்கறி எப்பவும் ஆட்டுக்கறி சமைப்பது என்று முடிவு செய்து விட்டால் கறி எடுக்க செல்வது தனி கலை. ஆடு முத்தி இருக்கக்கூடாது இளம் ஆடாகவும் செம்புளி ஆடாகவும் முன் தொடை கறியாகவும் பார்த்துதான் எடுக்க வேண்டும் அப்ப தான் சுவை அதிகமாக இருக்கும் ஆட்டுக்கறி சமைத்தால் கூட சாப்பிட எதாவது வேண்டும் (டாஸ்மார்க்) தான். எல்லாத்தையும் வாங்கிவிட்டு எங்கள் ஊரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவிரி ஆற்று கரைக்கு சென்று விடுவோம் யாரும் வராத இடமாக சென்று சமைத்து தண்ணீரில் குளித்துக்கொண்டே இருப்போம் ஒருவர் மாற்றி ஒருவர் சமையல் வேலைகளை பார்ப்போம் தண்ணீர் சாப்பிட்டுவிட்டு தண்ணீரில் குளிக்கும் சுகமே தனி தான்.. நன்றாக குளித்த பின் நல்ல பசி எடுக்கும் அப்ப மட்டன் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுப்பதெல்லாம் தண்ணீருக்குள்தான் இதன் சுகமும் சுவையும் தனிதான்...

இந்த மட்டன் வருவலும, கோச்சை கறியும் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் நண்பர்கள் நான் ஊருக்கு செல்லும் போது வாய்ப்பு கிடைக்கும் சென்று சாப்பிட்டு விட்டு வந்து விடுவேன் மற்ற அனுபவங்களுக்கு நேரமில்லை... ஆனால் இந்த கூட்டாஞ்சோறு கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களிடம் இன்றும் இருப்பது சந்தோசமான விசயமே...

Wednesday, October 6, 2010

எங்க ஊரு கூட்டாஞ்சோறு....1


எத்தனை உணவு விடுதிகள் வந்தாலும் என்னதான் வீட்டில் ருசியாக சமைத்துப்போட்டாலும் கூட்டாஞ்சோறு சாப்பிடுவது தனி சுகமே. கிராமத்தில் இருந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்தவர்களாகட்டும் கிராமத்து இளைஞர்களாகட்டும் நிச்சயம் கூட்டாஞ்சோறு சாப்பிட்டு அதன் சுவையை அறிந்தருப்பார்கள் இதன் சுவையும் அனுபவமும் அனுபவித்தால் தான் அறியமுடியும். அந்த வகையில் நான் அதிஷ்டசாலி இன்று வரை கூட்டாஞ்சோறு சமைப்பதை செய்து கொண்டு இருக்கிறோம்.

காலத்துக்கும் வயதிற்கும் ஏற்றவாறு கூட்டாஞ்சோறு மாறிக்கொண்டு இருக்கிறது முதலில் பொங்கல், தக்காளி சாதம், காய் சாப்பாடு (எல்லா காயையும் போட்டு சமைப்பது), மீன் சோறு (மீனை சுட்டு சாப்பாட்டுடன் சாப்பிடுவது), நண்டு வறுவல், நாட்டுக்கோழி வறுவல் உடன் சாப்பாடு என வயது ஏற ஏற இந்த கூட்டாஞ்சோறின் வகைகளும் மாறிக்கொண்டு இருக்கின்றன.

முதன் முதலில் 5ம் வகுப்பு படிக்கும் போது வீட்டிற்கு பின் இருக்கும் சாமி சிலைக்கு எங்கள் பக்கத்து வீட்டு அக்காக்கள் எல்லாம் இணைந்து அவர் அவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த அரிசி, நாட்டுச்சக்கரையுடன் பொங்கல் வைத்து சாப்பிடுவோம் இது அப்ப அப்ப நடக்கும இது தான் என் முதல் கூட்டாஞ்சோறு.

7ம் வகுப்பு படிக்கும போது நண்பன் விஜய் வீட்டில் இருந்து பாத்திரங்கள் எடுத்துக்கொண்டு பஞ்சாயத்து போர்டு டிவி அறைக்கு பின் உட்கார்ந்து யார் யர் வீட்டில் இருந்து என்ன கொண்டு வருவது என முடிவு செய்து எல்லாரும் அவர் அவர் பங்கை கொண்டு வந்ததும் எல்லா காய்களும் போட்டு சமைக்க ஆரம்பித்து விடுவோம் சாப்பாடு தயாரானதுடன் வாழை இலைகளை கொண்டு வந்து தண்ணீர் தொட்டியின் மீது அனைவரும் வரிசையாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.

10ம் வகுப்பில் நான் விடுதியில் தங்கி படித்ததால் கொஞ்சம் இடைவெளி வருடா வருடம் எங்கள் ஊரில் இருந்து அருகில் உள்ள சித்தேஸ்வரன் மலைக்கு செல்வோம் புரட்டாசி மாதமும், சித்திரை மாதமும் சனிக்கிழமைகளில் அங்கு பூஜை நடக்கும் நான் முதல் தடவையாக புரட்டாசி மாதம் சென்றேன் நாங்கள் மொத்தம் 40 பேர் சென்றோம் எல்லோரும் இங்கேயே அனைத்து பொருட்களையும் வாங்கி எல்லோரிடமும் பிரித்துக்கொடுத்து ஊமாரெட்டியூர் வழியாக விடியற்காலை 3 மணிக்கு மலை ஏற ஆரம்பித்தோம்.
முன்னால் செல்லும நபர் ஒரு சைக்கிள் டயரையும் கடைசியில் வருபவர் ஒரு டையரையும் தீ பந்தம் போல் பிடித்துக்கொண்டு செல்வோம். இடையில் கோயிந்தா கோயிந்தா என்று கோசமிட்டு செல்வோம் காலை ஆறு மணிக்கு நடுமலை மலையாளத்தான் காட்டுக்கு சென்று அங்கே மலை கிராம மக்களிடம் வீடு ஒன்று வாடகைக்கு(ஓலை குடிசைதான்) எடுத்துக்கொள்வோம் அனைவரும் ஆளுக்கு 10ரூபாய் முன்னாடி கொடுத்த பணத்தில் பாத்திரங்கள் வாடகைக்கு எடுத்து ஆளாளுக்கு ஒரு வேலை கொடுத்து காலை உப்புமா தயாராகும் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு வாங்கடா என்றால் யாரும் வரமாட்டார்கள்.

அப்புறம் ஒரு வழியாக 40 பேர் சென்றதில் ஒரு 5 பேர் கோயிலுக்கு செல்வோம் ஒத்தையடிப்பாதை வழியெங்கும பலாவும் கொய்யாவும் இருக்கும் பறிக்க முடியாது மலைக்காரனுக காவலுக்கு இருப்பார்கள் புரட்டாசி மாதம் மழைக்காலமாக இருப்பதால் நிறைய சிறு சிறு அருவிகள் இருக்கும் குழித்துவிட்டு ஆட்ட்ம போட்டு விட்டு பாறை மேல் தவழ்ந்து ஒத்த பாறையில் நடந்து என பல சவால்கள் நிறைந்த பாதை அது கடைசியாக சித்தேஸ்வரனை தரிசிப்போம். அங்கு இருந்து பார்த்தால் மேட்டூர் அனை தீப்பெட்டி அளவு தான் இருக்கும்.

நாங்கள் இறங்கி மீண்டும் வரும் போது எங்க நண்பர்கள் எல்லாம் பொறியல், பருப்பு, சாப்பாடு, ரசம் என ஒரு விருந்தே வைப்பார்கள். இந்த கூட்டாஞ்சோறு தான் மறக்க இயலாது அதுவும் அந்த மலைத்தண்ணீர் ருசிக்கு ரசம் குடி குடி என குடிப்போம். இரவுகளில் சாப்பாத்தியும் உப்புமாவும் செய்வோம் அங்கு தான் முதன் முதலில் சமைக்க கற்றுக்கொண்டேன். இந்த சித்தேஸ்வரன் மலையில் ஒரு சிறப்பு உண்டு இந்த கோயிலுக்கு வந்தால் பெண்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது எல்லா வேலையும் ஆண்களே செய்வார்கள் நிறைய ஊர்களில் இருந்து ஊரே ஒன்று திரண்டு வந்து சமைத்து சாப்பிட்டு செல்லும் போது கரடி, அனுமார் வேஷம் போட்டு ஆடிச்செல்வார்கள். நாங்கள் எப்பவும் இக்கோயிலுக்கு வந்தால் இரண்டு நாட்கள் தங்கி இருக்கும பொருளை எல்லாம் சாப்பிட்டு முடித்துவிட்டுதான் செல்வோம்.

இது எனது சைவ கூட்டாஞ்சோறுதான்... எனது அசைவ கூட்டாஞ்சோறு அடுத்த பதிவில் (தொடரும்)...

Tuesday, October 5, 2010

காதலும் கரண்ட்டும்

 

மேற்குத் தொடர்ச்சி மலை அருகே காவிரி ஆறு அழகாக ஓடுக்கொண்டும், மின்சாரம் தயாரிப்பதற்காக தேக்கியும் வைத்து இருப்பர். அடர்ந்த மலை அதன் அருகே சாலை அடுத்து காவிரி என்ற இயற்கை எழில் கொஞ்சும் அழகான கிராமம் சிறியூர். 300 குடும்பங்களை கொண்ட அற்புதமான ஊர். விவசாயம், ஆடு மாடு மற்றும் கோழி வளர்பது தான் பிரதான தொழில்.

ஊரில் அன்பு என்னும் பெரும் பணக்கார இளைஞன் நன்கு படிப்பவன் அனைவரையும் மதிப்பவன் ஊரில் அவனுக்கு என நட்பு வட்டங்கள் உண்டு. அவர் அப்பா ஒரு மிராசுதார் கிட்டத்தட்ட 25 ஏக்கர் நிலம் உள்ள ஒரு வசதியான விவசாயி எந்த வம்புக்கும் செல்லாதவர் தனது மகனையும் ஆதே போல் தான் வளர்த்தார். அன்பு கல்லூரி முடித்து மேல்படிப்பு படிக்காமல் விவசாயம் செய்து வந்தான். அவர்கள் பக்கத்து தோட்டத்து மணியின் பெண் சங்கீதா.

அன்புக்கு சங்கீதா மேல் ஒரு இனம் புரியாத அன்பு. இவனும் காதலை சொல்ல பல முறை முயற்சித்தும் சொல்ல முடியல. ஆனால் திருமணம் செய்தால் அது சங்கீதா தான் என்று மனிதில் எழுதி விட்டான். அடுத்து என்ன செய்வது என்று தனது அம்மாவிடம் சொல்கிறான் எனக்கு மனைவி என்றால் அவள் மட்டுமே நீதாம்ம பொண்ணு கேட்கனும் என ஐஸ் வைக்கிறான். அம்மாவிற்கு கோபம் ஆனால் காட்டிக்காமல் உங்க அப்பா வந்தால் பேசிப்பார்க்கலாம் என சொல்லி அனுப்புகிறாள்.

அவன் அப்பா வந்ததும் அம்மா காதில் போட அதுக்கென்ன போய் கேட்டுவிடலாம் என்று சொல்லி தனது தாய்மாமா சங்கரனுக்கு சொல்லி அனுப்புகிறார். அவர் வந்ததும் இது தான் விசயம் நாங்கள் மணி பெண்ணை கேட்கலாம் என இருக்கிறோம் நல்ல பொண்ணுதான் கேட்கலாம் என்று சங்கரன் மாமா சொல்லிவிட்டு மணி வீட்டுக்குச் செல்கிறார்.

மணி என் பெண்ணை நான் விவசாயம் பார்ப்பவருக்கு தரவில்லை அரசு வேலையில் இருக்கும மாப்பிள்ளைக்குத்தான் தருவேன் என்று சொல்லி மாமாவை திருப்பி அனுப்ப மாமாவும் அன்பு வீட்டில் வந்து சொல்லி விட்டார். அன்புக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கல்லூரி முடித்து 4 வருடம் ஆகிவிட்டது இனி எங்க அரசு வேலைக்குப் போக என எண்ண அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று முடிவெடுத்து இவனே மணியிடம் சென்று எனக்கு உங்க பொண்ண கல்யாணம் செய்யனும்னு ஆசைபடறேன் என்று சொல்ல யோசிக்கிறேன் அன்பு என்று சொல்லி அனுப்புகிறார்.

அவர் யோசிக்கிறேன் என்றதும் அன்பு சரி நமக்குத்தான் என்று சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கும் போது தான் வந்தது அதிர்ச்சி மாமா வடிவில் உனக்கு பக்க்தது ஊரில் சேகர் என்பவரின் பெண்ணைப் பார்த்து இருக்கிறோம் வரும் ஞாயிறு சாப்பிட போகிறோம். இல்ல எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்ல என்று கத்துகிறான் கட்டுனா அவளத்தான் கட்டுவேன் என கத்துகிறான்.
மகன் கத்துவதை கேட்டு திடுக்கிட்ட அவன் அம்மா ராணி அன்புவை தட்டி எழுப்புகிறாள் என்னடா மத்தியான நேரத்துல கனவா என தட்ட இவன் தூக்க்ம தெளிந்து அம்மாவை பார்க்கிறான். என்னடா பிரச்சனை யரோ ஒரு பொண்ணு பேரச் சொல்லி கத்துன யாருடா அது யாருனு சொல்லுடா கூட்டிட்டுகீது போயு குடும்ப மானத்த காத்துலவுட்டறாதே... கனவு கண்ணடது போதும் மத்தியான கரண்ட் வந்துருச்சாம போயி காட்டுக்கு தண்ணி கட்ற வேலையபாரு என்றாள்... ஆகா இவ்வளவு நேரம் நினைச்சது கனவா.......

Sunday, October 3, 2010

உடலுக்கு அழகு சேர்க்கும் மருதாணி



இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதா‌ணி இலையவெறு‌மஅழகு‌க்காபெ‌ண்க‌ளகைகக‌ளி‌லவை‌க்‌கிறா‌ர்க‌ளஎ‌ன்றகரு‌தினா‌லஅது ‌மிக‌‌ப்பெ‌ரிதவறாகு‌ம். மருதா‌ணி இலையகைக‌ளி‌லவை‌ப்பதா‌லப‌ல்வேறபய‌ன்களபெ‌ண்க‌ளபெறு‌கிறா‌ர்க‌ள்.

இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். ஒரு 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர். 



மருதாணியின் பயன்கள் 

மருதா‌ணி இலையஅரை‌த்தகைககளு‌க்கவை‌த்தர, உட‌லவெ‌ப்ப‌மத‌ணியு‌ம்.

கைகளு‌க்கஅடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டமனநோ‌யஏ‌ற்படுவதகுறையு‌ம்.

சிலரு‌க்கமருதா‌ணி இ‌ட்டு‌ககொ‌ண்டா‌லச‌ளி ‌பிடி‌த்து ‌விடு‌ம். இத‌ற்கமருதா‌ணி இலைகளஅரை‌‌க்கு‌மபோதகூடவே 7 அ‌ல்லது 8 நொ‌ச்‌சி இலைகளசே‌ர்‌த்தஅரை‌த்தவை‌த்து‌ககொ‌ள்ளலா‌ம்.

மருதா‌ணி இ‌ட்டு‌ககொ‌ள்வதா‌லநக‌ங்களு‌க்கஎ‌ந்நோயு‌மவராம‌லபாதுகா‌‌க்கலா‌ம். ஆனா‌லஇ‌ந்பய‌ன்க‌ளஎ‌ல்லா‌மத‌ற்போதகடைக‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌மமருதா‌ணி கோ‌ன்க‌ளி‌ல் ‌கிடை‌க்வா‌ய்‌ப்பஇ‌ல்லஎ‌ன்பதை ‌நினை‌வி‌லகொ‌ள்க.

சிலரு‌க்ககழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌மகரு‌ந்தேம‌லகாண‌ப்படு‌ம். இத‌ற்கந‌ல்மரு‌த்துவ‌மஉ‌ள்ளது.

மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌லசோ‌ப்பை‌சசே‌ர்‌த்தஅரை‌த்தபூ‌சி ர ‌விரை‌வி‌லகரு‌ந்தேம‌லமறையு‌ம்.

மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.


மேகநோய்

பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்து. இதன் இலை 10 கிராம் அளவு 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகிய வற்றை அரைத்து நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது, இதனால் மேக நோய் அதனால் ஏற்படும்கிரந்திப் புண், அரிப்பு ஆகியன குணமாகும். 10 - 20 நாள் சாப்பிட வேண்டும்.


தோல் நோய்

மேக நோயால் ஏற்பட்ட தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.

புண்கள்


ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர 

இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

தூக்கமின்மை 


தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

பேய் பூதம் 

மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார். இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம் நம்மை அண்டாது. வெள்ளளி, திங்கள் வீட்டடில் இதனைப் புகைக்க வேண்டும். 

கரப்பான் புரகண் 

பான் புண் என்பது கரும்படையுடனை நீரொழுகும் புண்ணாகும். இது அரிப்பையும் கொடுக்கும். நீர் வடியும் இடம் பட்ட இடம் படையுடன் புண் உண்டாகும். இதன் வேர்பட்டை 50 கிராம், முற்றிய தேஙுகாய் 100 கிராம், மிருதார்சிங்கி 15 கிராம், அரைத்து ஆமணுக்கு நெய் விட்டு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் சகல கரப்பான் படையும் புண்ணும் குணமாகும். 

கால் ஆணி 

உ‌ள்ள‌ங்கா‌லி‌லஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தா‌லமருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிதவச‌ம்பு, ம‌ஞ்ச‌ளக‌ற்பூர‌மசே‌ர்‌த்தஅரை‌‌த்து, ஆ‌ணி உ‌ள்இட‌த்‌தி‌லதொட‌ர்‌ந்தக‌ட்டி ஒரவார‌த்‌தி‌லகுணமாகு‌ம். 

படைகள் 

கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம். 

இளநரையை போக்கும் மருதாணி   

இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.
 
மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.