கடந்த 2 நாட்களாக கோவையில் நடந்த கடத்தல் நிகழ்ச்சியை அனைவரும் பத்திரிக்கையில் படித்திருப்போம். பிஞ்சு குழுந்தைகளுடன் நன்றாக பழகி அவர்களை கடத்தி பாலீயல் பலாத்காரம் செய்து வாய்க்காலில் தள்ளி கொன்ற காமக்கொடூரனை என்ன செய்வது
இதைப்படிக்க படிக்க இரத்தம் கொதிக்கிறது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கடந்த 2 நாட்களாக பத்திரிக்கையில் பொதுமக்கள் கருத்து என்னவெனில் அவர்களை தூக்கிலிடவேண்டும் என்பது தான் அனைவருடைய கோரிக்கையாக இருக்கும் இக் கொடிய நிகழ்ச்சியை படித்த அனைவருக்கும் மனது பதைபதைக்கும்.
ஆனால் நம் சட்டம் இதற்கு இடம் கொடுக்காது. விசாரணை விசாரணை என்று நாடகள் தள்ளித்தான் செல்லும். நாம் இவ்வளவு வளர்ந்தும் இன்றும் நம் நாட்டுச்சட்டம் மட்டும் காலத்திற்கு ஏற்றாற் போல் கடுமையாக இல்லாதது வருத்தமே. இதே சம்பவம் வலைகுடா நாடுகளில் நடந்திருந்தால் அந்தக் கொடூரனை கல்லால் அடித்தே கொன்றிருப்பார்கள்.
இந்த கொடூர நிகழ்ச்சியை சாதாரணமாக என்ன முடியாது நமக்கும் குழந்தைகள் இருக்கின்றன இந்நிலமை நம் குழந்தைகளுக்கோ நம்மைச் சார்ந்த குழந்தைகளுக்கோ வந்து இருந்தால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அவர்கள் பெற்றோர்களை நினைத்துப்பாருங்கள் அழகான 2 குழந்தைகள் நேற்று இருந்தது இன்று இல்லை. நம்மால் என்ன செய்ய முடியும் இன்று பதிவெழுதி என் கண்டனத்தை தெரிவித்து விட்டு நாளை முதல் தீபாவளி கொண்டாட்டத்தில் இதை மறந்து விடுவோம். இது தான் நம் நிலை.
காமக்கொடூரைனை என்ன செய்வது அனைத்து தப்புகளையும் செய்து விட்டு இன்று பாதுகாப்பில் இருக்கிறான். அவனை நீதிமன்றத்துக்கு கூட்டிட்டுப்போய் விசாரணை நடத்தி தண்டனை அளித்து அதை நிறைவேற்றுவதற்குள் அனைவரும் இந்நிகழ்ச்சியை மறந்து விடுவோம்.
நம் சட்டம் மாறவேண்டும் இதைப்போன்று குற்றங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும். தண்டனை கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும். இவனுக்கு தூக்கு தண்டனை வழங்கி அதை சீக்கிரம் நிறைவேற்ற வேண்டும்.
குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...