Wednesday, September 26, 2012

அஞ்சறைப்பெட்டி 27/09/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
 
அலுவலகம், வீடு இரண்டிலும் ஜெனரேட்டர் வசதி இருப்பதால் மின்தடை பற்றி அதிகம் உணரவில்லை படிப்பதோடு சரி எங்கள் ஊருக்கு சென்றாலும் எனக்கு மின்தடை இல்லை எங்கள் ஊரில் தண்ணீர் உந்து நிலையம் மூலம் வெளியூருக்கு தண்ணீர் கொண்டு செல்வதால் அங்கும் எப்போதும் மின்சாரம் இருக்கும் ஆனால் இம்முறை ஊருக்கு சென்றபோது கிட்டத்தட்ட 14 மணி நேரம் அதாவது நண்பன் கூட்டில் UPS போட்டு இருந்தும் அது சார்ஜ் ஆகவே மாட்டிங்குது...

ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை பவர்கட் எப்ப போகும் எப்ப வரும் என்று யாருக்கம் தெரியாது.. கிராமம் என்பதால் எல்லார் வீட்டிலும் அம்மி, ஆட்டங்கல் இருப்பதால் சமைப்பதற்கு பிரச்சனை இல்லை ஆனால் விவசாயத்திற்கு கிணற்றில் நீர் இருந்தும் நீரை இரைக்க தண்ணீர் இல்லை.. இந்த வருடம் மழையும் இல்லை மின்சாரமும் இல்லை...
..............................................................................................
 
 
சமீபத்தில் சுந்தர பாண்டியன் திரைப்படம் பார்த்தேன் மிகநேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.. படத்தில் பேருந்தில் வரும் காட்கிகள் எல்லாம் 10 வருடம் பின் நோக்கி பயணிக்க வைத்தது.. நிறைய வசனங்கள் நன்றாக மனதில் பதிந்த காதல் வரிகளானது...

இந்த படத்தின் ஹிரோயின் கிராமத்து மண் வாசனையில் ஆழமாக மனதில் பதிந்து விட்டார்....

பேருந்தில் சைட் அடிப்பதும் பெண்ணிற்கு நூல் விடுவதும் மிக எதார்த்தமாக இருந்தது.. நல்ல பொழுது போக்கான படம் நிச்சயம் அனைவரும் பார்க்கலாம்...

" எத்தனையோ பேர் வாக்கு தவறி இருக்கலாம் ஆனா அவுங்க நாக்கு சுத்தம் இல்லைன்னு சொல்வதில் அர்த்தம் இல்லை என்போம் அவர்களின் சூழ்நிலை அறியாமல் "

படத்தில் பிடிச்ச வசனத்தில் இதுவும் ஒன்று..
 
..........................................................................................


 த்திய பிரதேசத்தில் வைகோவின் போராட்டம் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தது உண்மைதான்.. இந்த அளவிற்கு யாரும் இறங்கி போராடமாட்டார்கள் பல பேரை திரட்டிக்கொண்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பக்த்து நாட்டு தலைவரை எதிர்த்தது வரலாற்று நிகழ்வு ஆனால் இதை மீடியாக்கல் ரொம்ப பெரிது பண்ணவில்லை இதையே ஒரு வடநாட்டு தலைவர் செய்திருந்தால் அது மட்டுமே செய்தி ஆகியிருக்கும்..

வைகோ என்னதான் மக்களின் பிரச்சனைக்கு போராடினாலும் அவருக்கு என ஓட்டு போடும் மக்கள் மிக குறைவுதான்.. அவரின் போராட்டத்தையும், மக்களுக்காக அவர் கொடுக்கும் குரலையும் ஆதரிக்கும் மக்கள் அவரை தேர்தலில் ஆதரிப்பதில்லை என்பது தான் நிதர்சண உண்மை...

................................................................................................

 
உலகிலேயே மிக குள்ளமான சிறுமியாக சார்லட் கள்சைட்டை கின்னஸ் சாதனை புத்தகம் அறிவித்துள்ளது. 5 வயதான இவள் இங்கிலாந்தை சேர்ந்தவள். இவளது உயரம் 68 செ.மீட்டர். எடை 9 பவுண்டு. அதாவது 4 கிலோவுக்கும் குறைவுதான்.
 
தற்போது பள்ளியில் படித்து வருகிறாள். இவளது தந்தை ஸ்காட் கார்சைட். தாயார் பெயர் எம்மா நியூமேன். பிறக்கும்போது இவள் 25 செ.மீட்டர் உயரமே இருந்தாள். எடை 2 பவுண்டு அதாவது 900 கிராமே இருந்தது. பொம்மைக்கு அணிவிக்கும் உடைகள் போன்று மிக சிறிய உடைகள் இவளுக்கு அணிவிக்கப்பட்டது.
 
...............................................................................................


இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை பெருமைப் படுத்தும் விதமாக லண்டனில் புதுவித உணவுக்கு அவருடைய பெயரிடப்பட்டுள்ளது. நம் ஊரில் பஞ்சாபி தாலி என்று இருப்பதுபோல் அங்கு ‘மகாத்மா தாலி' (Mahatma Thali) என்று சூட்டப்பட்டது.

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள கணபதி சௌத் இந்தியன் கிச்சன் என்ற அந்த ஹோட்டலில் 12 வகை டிஷ்களுடன் கூடிய வாழை இலையில் பரிமாறப்படும் உணவிற்கு ‘மகாத்மா தாலி' உணவு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மகாத்மா காந்திபற்றி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அவர் சாப்பாட்டு விசயத்தில் சைவ உணவுகளை சிறந்த முறையில் கடைபிடித்துள்ளார் என்பது யாரும் அறிந்திராத ஒன்றாகும். அவரது உணவுப்பழக்கம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியதன் காரணமாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உணவிற்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது என்று ஓட்டல் உரிமையாளர் மணாலி ஜக்தாப் நையீம் விளக்கமளித்தார்.
லண்டன் போனாலும் தேசப்பற்று போகலையே!

...............................................................................................

 
உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் புருனே சுல்தான். அவருக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர். இவர்களில் 5 வது மகள் ஹபிசாவுக்கு திருமணம் கோலாகலமாக நடந்தது.
 
ஹபிசா மன்னர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருக்கு 32 வயதாகிறது. தன்னைவிட 3 வயது குறைவான முகமது ருசானியை திருமணம் செய்து கொண்டார். முகமது ருசானி பிரதமர் அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் 1700 அறைகள் கொண்ட மன்னர் அரண்மனையில் நடந்தது.
 
பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து மிக விமரிசையாக திருமணத்தை நடத்தினார்கள். திருமண விழாவில் தாய்லாந்து பிரதமர், மலேசிய பிரதமர், கம்போடியா பிரதமர் உள்பட ஏராளமான வெளிநாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தகவல்

 
கடந்த 2003-ம் ஆண்டில் ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் சார்ஸ் (எஸ்.ஏ.ஆர்.எஸ்) என்ற வைரஸ் கிருமிகளால் சுவாச நோய் பரவியது. அதில் 800 பேர் உயிரிழந்தனர். தற்போது இதுபோன்று புதிய உயிர்க்கொல்லி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு ஆசியாவை சேர்ந்த கத்தார் நாட்டை சேர்ந்த ஒருவர் புதுவிதமான சுவாச நோய் பாதித்து சிகிச்சைக்காக லண்டன் வந்தார்.
 
அவரிடம் நடத்திய பரிசோதனையில் அவரை புதிய வகை உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்தது. சமீபத்தில் இவர் சவுதி ஆரேபியா சென்று இருந்தார். அங்கு இவரை இந்த நோய் தாக்கியுள்ளது. அங்கு இது போன்ற நோய்க்கு ஏற்கனவே ஒருவர் பலியாகி இருக்கிறார். தொடக்கத்தில் ஜலதோஷம் போன்று ஏற்படும் இந்நோய் படிப்படியாக நுரையீரலில் பரவி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இந்நோய் பாதித்தவர் லண்டனில் சிகிச்சை பெறுவதால் இங்கிலாந்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிரிகரி ஹார்டில் கூறும்போது. தற்போது இந்த நோய் 2 பேருக்கு மட்டும் பாதித்து இருப்பது. தெரிய வந்துள்ளது. இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என தெரியவில்லை. இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுக பதிவர் கண்ணன் இவர்க கவிதைகள் உணர்வுகளின் வெளிப்பாட்டில் கண்முன் காட்சி அளிக்கிறது இவரது வரிகள்..

http://www.kannam.com
 
தத்துவம்
முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது
எல்லாச் செல்வங்களிலும் ஞானமே அழியாத செல்வமாகும்.
நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

Tuesday, September 25, 2012

நம்ம ஊரு வயாகரா.... ஜாதிக்காய்...

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது.

ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.


உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் :-

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும்.

ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன, அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.


மேலும் சில குறிப்புகள் :-

ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? ஜாதிக்காய்க்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு.

ஜாதிக்காயை + சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.

எச்சரிக்கை :-

ஜாதிக்காய் அதிகம் சாப் பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதை யும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதை மெயிலில் அனுப்பிய நண்பனுக்கு நன்றி...

Monday, September 24, 2012

அழிந்து வரும் ஒப்பாரி பாடல்கள் .... 02


ஒப்பாரி பாடல்கள் ஏறக்குறைய இன்று அழிந்து விட்டன.. கால ஓட்டத்தில் மறைவதில் ஆச்சர்யமில்லை. இப்பாடல்களை பாடுவதற்கு ஆட்கள் இல்லை என்றாலும் பாடல்களை பதிவு செய்வதன் மூலம் மீண்டும் படிக்க இயலும்...

எங்க வீட்டு பெரியவர் இறந்த போது அவரைச் சுற்றி பெண்கள் எல்லாம் நின்று ஒரு பாடல் பாடினர் அது சொக்க பாடல் என்றும் அந்த பாடலை பாடினால் தான் அந்த உடல் சொர்க்கத்து போய் சேரும் என்று சொன்னார்கள்  அப்போது அந்த பாடலை பாடிய பெரிசுகளை நிறைய முறை சந்தித்தும் அவர்கள் பாட மறுத்து விட்டார்கள்.. அதை இப்ப எல்லாம் சொல்லக்கூடாது இறந்தவர் முன் தான் சொல்லனும் என்றனர். அந்த பாடலை விரைவில் பதிவு செய்ய முயற்சிசெய்து கொண்டு இருக்கேன்...

என்னுடன் என் மனைவியின் பாட்டி தங்கி உள்ளார் அவர் அந்த காலத்தில் நாற்று நடும்போது தான் அப்போது அங்கு வரும் முதிய பெண்கள் எல்லாம் இந்த கிராமிய பாடலை சொல்லிக்கொடுப்பார்களாம். அப்போது தான் இந்த ஒப்பாரி பாடல்களும் வருமாம்.. கிராமத்தில் வீட்டில் உள்ள பெண்களை விட வயல் வேலைக்கு செல்லும் பெண்களுக்குத்தான் கும்மிப்பாட்டு, ஒப்பாரி போன்ற பாடல்கள் தெரியுமாம்..

இன்று எல்லாம் மிஷினிலேயே நடைபெறுவதால் இவர்களின் கூட்டமும் குறைந்துவிட்டது பாட்டுக்களும் குறைந்துவிட்டது...


சமீபத்தில் கேட்ட ஒப்பாரி பாடல்கள்...

என்னென்ன சொல்ல நினைச்சியோ..
என் மாமா...
ஒரு வார்த்த சொல்லாம போனியே...
என் மாமா

உன் உடம்பு என்ன பண்ணுச்சோ
என் மாமா
அத தாங்காம போனியோ
என் மாமா

போகிற வயசா உனக்கு
என் மாமா
போகாத இடம் போனியே
என் மாமா..

உனை இப்படிப்பாக்கத்தான்
வந்தேனோ
என் மாமா
உனக்கு முன் நான்
போயிருக்கக்கூடாதோ
என் மாமா...

..........................................

தந்தநானே தானநன்னே
தந்தநானே தானநன்னே
தந்தானே தானநன்னே     
தானநன்னே   தந்தநானே

வானம் கருத்திருக்கு 
வட்டநிலா வாடிருக்கு 
எட்டருந்து பாடுறேனே
எங்கப்பா எங்கபோன?

 சிங்க தெருவெல்லாம் 
 சிந்தி அழுகிறேனே 
சிங்கார சிங்கபூர 
கண்ணீரில் கழுவுறேனே 

வட்டிகடன் வாங்கி 
வாக்கப்பட்டு போறவள 
வாசலோடு நிக்கவச்சி 
வந்துநானும் சேர்ந்தேய்யா

வட்டிகடன் கட்டி 
வண்டியில சாமான்வாங்கி 
வந்தவக வாயடக்க 
வரிசை கொடுத்தேன்ய்யா 

பக்கவாதம் வந்து 
பாலகனா போனவரே 
தொண்டைகுழி  விக்கி 
தொலைதூரம் போனதேனோ?

போனமகன் வரலயான்னு 
பொறுக்கலையா உன்னுசுரு 
புள்ளகொல்லி விழாம 
போனதய்யா உன்னுசுரு  ....

..........................................

 கிருஷ்ண மூர்த்தி என்பவர் எழுதிய இந்த ஒப்பாரி பாடல் மிக கவர்ந்தது....

கண் திறந்து பாரடா மகனே..!
பத்து மாதம் சுமந்து பெற்றேன்..
ஈ கொசு அண்டாமல்
இமைபோல் காத்தேன்..
ஊரே பழித்தாலும்
உனக்காய் வாழ்ந்தேன்..
யாரும் இனி எனக்கில்லை..
மாதாவை தனியே விட்டு
மாய்ந்தாயே மகனே??

சோறூட்டிய கைகளில் வாய்க்கரிசி
பாலூட்டிய மார்பினில் செங்குருதி..
இந்த தள்ளாத வயதினில்,
தவிக்க விட்டுச் சென்றாயே..
கண் திறந்து பாரடா மகனே..!
இது தாயில் அலறல்..
*
காடு மனையெல்லாம் வித்தேன்
கடன் வாங்கி படிக்க வைச்சேன்..
சேம நிதி கூட எடுத்து- உன்
திருமணத்தை நடத்தி வைச்சேன்..
இப்படி திடுதிப்புன்னு செத்துப்போனா..
பட்ட கடனை எப்படி அடைப்பேன்!
ஐயா.. ராசா..!
இப்படி திடுதிப்புன்னு செத்துப்போனா..
நான்
பட்ட கடனை எப்படி அடைப்பேன்?
பதில் சொல்லிப் போ மகனே..!!
இது தந்தையின் புலம்பல்..
*
பெத்தவங்க,
கூடப் பொறந்தவங்க..
சாதி சனம் எல்லாரையும்
மறந்து வந்தேன்..
நீ ஒருத்தனே கதியென்று
உன்னோடு பறந்து வந்தேன்..!

வயித்தில வளரும் கரு
ஆணா பெண்ணா
அறியுமுன்னே..
என்னை நட்டாற்றில்
விட்டுச் சென்றாயே..!

நரம்பில்லாத நாக்கு
என் ராசியை குறை சொல்ல
தாலியை பறித்துச் சென்றாயே!

ஏழு ஜன்மமும் கூட வருவேன்னு
என் மேல சத்தியம் செய்த கை
குப்புறக் கிடக்குதிங்கே
ஐயோ..!
என் குடிகெட்டு போயிருச்சே!

வாக்குறுதி தந்த வாயில
வாக்கரிசி போட வைச்சு
வாழ்வை தேடி வந்த எனக்கு
விதவைச் சாயம் பூசியதென்ன?

ஐயோ..

இந்த கேள்விக்கும் உன் பதில்

மௌனம் தானா??!
இது மனைவியில் கதறல்..

*
இறந்த சடலத்திடம்
எத்தனைக் கேள்விகள்..?
எத்தனை குற்றச்சாட்டுகள்..??

ஆவியாகிய ஆன்மாவிடம்
எத்தனை புலம்பல்கள்?!
எத்தனை பழிச்சொற்கள்..?!

சொர்க்கம் சேர வேண்டி
ஒரு பக்கம்
சாங்கியம் நடக்கிறது..
பதில் தர வேண்டி
மறு பக்கம்
ஒப்பாரி ஒலிக்கிறது..!
சுயநல
ஒப்பாரி ஒலிக்கிறது..!!
*
இறைவா..
உன்னிடம் ஒரு வேண்டுகோள்…
இங்கு யாரும்
பிரேதத்தைப் பார்த்து
பெருமை பாடுவதில்லை..!

சுயநல மனிதர்கள்
செத்த பிறகும் ஆன்மாவை
விட்டு வைப்பதாயில்லை!


இங்கே,
ஒப்பாரி பட்டியலில்
ஆறுதல் வார்த்தையை விட
ஆத்திரக் கேள்விகளே அதிகம்..!


ஆன்மாவின் வழியனுப்பலை விட
அவரவர்
வயிற்றெரிச்சலே அதிகம்..!!

அதனால் இறைவா..
உயிர் பிரியும்போது மட்டும்
ஆன்மாக்களை
கொஞ்சம் செவிடாக்கி விடு..! 

..........................................


முத்து பதித்த முகம்
முதலிமார் மதித்த முகம்
தங்கம் பதித்த முகம்
தரணிமார் மதித்த முகம்...

ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு
நான் ஒய்யாரமா வந்தேனே
இப்ப நீ பட்ட மரம்போல
பட்டு போயிட்டையே.

பொட்டு இல்ல பூவில்லை
பூச மஞ்சலும் இல்ல
நான் கட்டன ராசாவே
என்ன விட்டுத்தான் போனிங்க.

பட்டு இல்லை தங்கம் இல்லை
பரிமார பந்தல் இல்ல
படையெடுது வந்த ராசா
பாதியியில போரிங்க்கலே

நான் முன்னே போரேன்
நீங்க பின்னே வாருங்கோ என
சொல்லிட்டு இடம்பிடிக்கப் போயிதங்களா.

நான் காக்காவாட்டும் கத்தரனே,
உங்க காதுக்கு கேக்கலையா
கொண்டுவந்த ராசாவே
உங்களுக்கு காதும் கேக்கலையா.

இந்த சொர்க்க பாடல்களை இன்னும் நிறைய பெரியவர்களிடம் இருந்து சேர்க்க வேண்டும்.. முடிந்தவரை சேர்ப்போம்...

இதற்கு முன் நான் எழுதிய ஒப்பாரி பாடல் பதிவு படியுங்கள்......

அழிந்து வரும் ஒப்பாரி பாடல்கள்...

Wednesday, September 19, 2012

அஞ்சறைப்பெட்டி 20/09/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........

இன்று அகில உலக பந்துன்னு சொன்னாங்க ஆனா ஊரில் கடைகள் தான் சாத்தியிருக்காங்க பேருந்தும் வேலைக்கு செல்லும் மகா ஜனங்கள் எல்லாம் எப்பவும் போல போய்க்கிட்டுத்தான் இருக்காங்க. தனியார் பேருந்து ஓடலை ஆனால் அரசு பேருந்துகள் அனைத்து ஓடிகிட்டுத்தான் இருக்கு.. இதனால் நான் அறிந்து கொண்டது என்னவெனில் நீங்க என்னமோ அறிவிச்சுக்குங்க அதானல அவுங்க விலை குறைக்கப்போவதில்லை.. 


எங்களுக்கு வயிறு நிறைய சாப்பிடவேண்டும் என்றாலோ வண்டிக்கு பெட்ரோல் அடிக்கனும் என்றாலே நிச்சயம் பணம் வேண்டும் எங்களுக்கு இந்த பந்த், போராட்டத்தில் நம்பிக்கை இல்லை அதானால் எப்பவும் போல் வேலைக்கு செல்கிறோம் இதுதான் வெகுசாமானிய மக்களின் எண்ணமாக நிச்சயம் இருக்கும்..

இதன் காரணமாகத்தான் இப்பவெல்லாம் போரட்டம், பொதுக்கூட்டத்திற்கு கூட்டம் அதிகம் சேருவதில்லை என்பது அப்பட்டமான உண்மை.. வேலைக்கு சென்றால் என்ன கூலியோ அதை கொடுத்தால் கூட்டத்துக்கு வருவதற்குத்தான் மக்கள் தயராக உள்ளனர்.. ஆக மக்கள் தெளிவாகத்தான் உள்ளனர் என்றால் ஆச்சர்யப்படுவதற்கில்லை...

..............................................................................................


சமீபத்தில் ஒரு சலூனில் முடிவெட்டிக்கொண்டு இருந்தேன் பக்கத்தில் ஒருவர் வந்து உட்கார்ந்து கட்டிங் சேவிங் என்றார் அண்ணே விலை ஏற்றிவிட்டோம் இப்ப 70 ரூபாய் என்றார்.. உடனே அவர் ஏம்பா உங்க பாட்டுக்கு விலை ஏத்திட்டீங்க ப்ளேடு, சோப்பு விலையா ஏறிபோச்சு என்றார் உடனே உட்கார்ந்திருந்த ஒருவர் ஆமாம்பா இவுங்க பாட்டுக்கு ஏத்திக்கறாங்க இதை எல்லாம் கேக்கனும் என்றார்.. உடனே அந்த சலூன் கடை தம்பி ப்ளேடு, சோப்பு விலை எல்லாம் ஏத்தலைங்க உங்க கடையில டீ விலையும் அவர் கடையில் புரோட்டா விலையும் ஏத்திட்டீங்க அதை சாப்பிட எங்களுக்கும் காசு வேண்டாமா என்றதும் இருவரும் கப்சிப்...

இன்று விலை ஏற்றம் அனைத்து இடங்களிலும் சகஜம் தான் யாரையும் யாரும் குறை சொல்ல இயலாது...

..........................................................................................

போய் விடுவேன், போய் விடுவேன் என்று சொல்லிக்கொண்டே, இன்றும் போகிறேன் என்று தான் சொல்லுகிறார். வரும் வெள்ளிக்கிழமைக்குள் தங்கள் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என மம்தா அறிவித்துள்ளார். இது இந்த முறை உண்மையாகுமா இல்ல கடந்த முறை மாதிரி கடைசி நேரத்தில் எல்லாத்தையும் சரி என்பார்களோ... எல்லாம் சம்பாரிப்பவர்களுக்கே வெளிச்சம்...
................................................................................................

மீண்டும் காவிரி பிரச்சனை இது எப்போதும் தீராது தீர்ந்தால் அங்க யாரும் அரசியல் செய்ய முடியாது... இந்த பிரச்சனைக்கு ஒரே வழி வருணபகவான் கண் திறந்து பொத்துகிட்டு ஊற்றினால் சரியாகிடும்...

...............................................................................................

இந்தியாவிற்கு வரும் ராசபக்சேவிற்கு கருப்பு கொடி காட்ட சென்ற வைகோ கைது இது அறிந்த விசயம் தான் ஆனாலும் ஒரு இனத்தை அழித்தவனை எப்படி வரவேற்க முடியும்.. அவர்களுக்கு நாம் எத்தனை செய்தாலும் ஒருநாள் நம்மை எதிர்க்க நிச்சயம் துணிவார்கள் என்பதே நிதர்சன உண்மை..


...............................................................................................


தலைவலி மற்றும் உடல் வலிக்காக பெண்கள் புழக்கத்தில் இருக்கும் சாதாரணமான வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில்    பெரும்பாலானவை அவர்களின் காதுகளை செவிடாக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. 

இதற்கான ஆய்வு 62 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது. அவர்களில் வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட 13 சதவீதம் பெண்களின் காது கேட்கும் திறன் குறைந்துள்ளது. அவற்றில் ஒரு ரக மாத்திரையை வாரத்துக்கு 2 தடவை உபயோகித்தால் 24 சதவீதம் செவிட்டு தன்மையும், மற்றொரு ரக மாத்திரையை  வாரத்துக்கு 6 தடவை பயன்படுத்தினால் 21 சதவீதம் செவிட்டு தன்மையும் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


தகவல்


தெம்பு தரும் குளிர்பானம் தானே... என்று ஐஸ், டீயை தொடர்ந்து விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்...? உங்கள் தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டிய  நேரம் வந்து விட்டது என்று சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 

சிறுநீரகங்களில் சாதாரண கற்கள் உருவாகுவதற்கு தொடர்ந்து ஐஸ், டீ குடிப்பதும் ஒரு முக்கியமான, மோசமான காரணம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

சிகாகோவில் உள்ள லயோலா மருத்துவ கல்லூரியின் சிறுநீரக இயல்துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் ஜான்மில்னர் சமர்ப்பித்துள்ள ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 

ஐஸ், டீயில் அதிகமாக உள்ள ஆக்சலேட் என்னும் திடப்பொருள் கலவை சிறுநீரக கற்களை உருவாக்கும் மூல வேதியல் பொருள் என அறியப்பட்டுள்ளது. இவை சிறுநீரில் உப்பாகவும், தாதுக்களாகவும் தேங்கி நின்று சிறுநீரக கற்களை உருவாக்குகின்றன. 

பொதுவாக, இந்த படிமங்கள் தீங்கற்றவையாக கருதப்பட்டாலும், இவை பெரிய அளவில் வளர்ந்து சிறுநீரக பாதையில் அடைப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. 

தண்ணீரை விட சுவையாக உள்ளது. குறைந்த கலோரிகளை கொண்டது என்பதற்காக ஏராளமான மக்கள், அதிகமாக ஐஸ், டீயை பருகும் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், சிறுநீரகத்திற்கு ஏற்படும் பாதிப்பை ஒப்பிட்டுப்பார்த்தால், அவர்கள் தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவின் தட்ப-வெப்ப நிலைக்கு ஏற்றவாறு ஐஸ், டீ குடிக்கும் பழக்கத்தை நாம் கைவிடவேண்டும். மேலும், ஆக்சலேட் எனப்படும் மூலப்பொருள் அதிகம் கொண்ட பசலைக்கீரை, சாக்லேட், உப்பு, பயறு மற்றும் இறைச்சி வகைகளும் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும் காரணிகளான பிற உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 

சிறுநீரக கற்களின் வளர்ச்சியை எலுமிச்சைப்பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் கட்டுக்குள் வைக்கும். எனவே, நிறைய தண்ணீர், எலுமிச்சை ரசம், பார்லி போட்டு கொதிக்க வைத்த தண்ணீர் ஆகியவற்றை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் நம்மால் சிறுநீரக நோய்களில் இருந்து விடுபட முடியும்.


அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர் நிஜமாகும் நிழல்கள் என்ற பெயரில் விஷ்னு என்பவர் எழுதி வருகிறார்.. இவரின் காதல் கவிதைகள் அனைத்து கொள்ளை கொள்கின்றன மனதை...

தத்துவம்

நம்மை எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிற அளவிற்கு  . நம்மை முழுதாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அக்கறை நமக்கு இல்லை ....

முகத்தை அழகாக வைத்துக்கொள்ள செலவில்லாத ஒப்பனை புன்னகை.

Tuesday, September 18, 2012

தாய்...


இன்று கணவன் மனைவி ஏற்படும் பிரச்சனைகளால் நிறைய பிரிவுகள் ஏற்படுகின்றன தினமும் நாம் பத்திரிக்கையில் படிக்கும் செய்திகளில் இதுவும் ஒன்று. விவாகரத்து கேட்டு கியூவில் நிற்பவர்கள் ஏராளம் இதற்கு நிறைய காரணங்கள் உண்டு அதில் ஓர் முக்கியமான காரணம் தாய்ப்பாசம்...

மனைவிகள் சொல்லும் அதிக புகார் அம்மா பேச்சை கேட்கிறார். அம்மா பேச்சை கேட்டு என்னைத் திட்டுகிறார் இதனால் தனிக்குடித்தனம் போகலாம் என்றால் அம்மாவை விட்டு வர மறுக்கிறார் இது தான் அதிக குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இன்றும் கூட்டுக்குடும்பம் இருக்கத்தான் செய்கிறது. கூட்டுக்குடும்பத்திற்கு முக்கிய காரணமே தாய்ப்பாசம்தான்.

இன்று மனைவி நாளை அம்மா நாளை மறுநாள் மாமியார் இதுதான் இன்றைய நிகழ்வு. நிறைய மனைவிகள் யோசிப்தில்லை நாளை நாமும் மாமியார் ஆகப்போகிறோம் அப்போது நம் மகனை நம்மிடம் இருந்து பிரித்தால் இதை யோசித்தால் போதும் இப்பிரச்சனைக்கு எளிய தீர்வு உண்டு.

ஒரு பெண் திருமணம் ஆகி கணவனிடம் வருகிறாள் அவள் கருவுற்றதற்கு முன் கணவன் மேல் இருக்கும் அன்பு கருவுற்றதற்கு அப்புறம் குறையத்துவங்குகிறது. தனக்கு குழந்தை பிறந்த பின் அத்தாய் தன் மகனை தன் கண்ணுக்குள் வைத்து காக்கிறாள் கூடவே தனது அனைத்து அன்பையும் குழந்தையின் மீது காட்டுகிறாள். 

குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் வைத்து அவனுக்கு என்ன வேண்டும் என்ன எதிர்பார்க்கிறான் என அவனை பார்த்து பார்த்து வளர்க்கிறாள். மகனின் முதல் ரசிகையே தாய். மகனுக்கு முதலில் தெரிவது தாய் தான் பின்பு தான் மற்றவர்கள். மகன் குப்புற விழுந்து, தவழ்ந்து, எழுந்து நின்று மேதுவாக விழுந்து விழுந்து நடந்து ஒவ்வொன்றையும் முதலில் ரசிப்பவள் தாய் மட்டுமே..

குழந்தைப்பருவத்திலேயே அம்மா மீது அதிக அன்பு கொள்கிறான். தன்னிடம் யார் விளையாடினாலும் அவன் அம்மாவைப் பார்த்த உடன் சிரிக்கும் சிரிப்பு இப்படியே எனக்கு உசிரு போய்விட வேண்டும் என்று தான் தாய் கூறுவாள். மகனுக்கு விபரத் தெரியும் போது தான் தன் அம்மா அப்பாவின் மனைவி என்று அவனுக்கு தெரியவருகிறது. 

மகனுக்கும் தாய்க்கும் உள்ள பாசத்திற்கு ஈடு இணை இல்லை. மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் போது பெண் மகனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தாய்க்கு நிச்சயம் பிடித்திருக்க வேண்டும் என்பது மகனின் விருப்பமாக இருக்கும். திருமணம் முடிந்து வரும் மருமகள் தன் மகன் மீது பொழியும் அன்பை தாய் ஏற்றால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சியே... தாய்ப்பாசத்திற்கு இவ்வுலகில் ஈடு இணை எதுவும் இல்லை..

Monday, September 17, 2012

கிராமத்து மனசு.... 5 (தேன்மொழி)


பாவாடை சட்டை அணிந்து முக்கை ஒழுகிக்கொண்டு இருக்கும் போது இருந்து பழக்கம் தேனு என்கிற தேன்மொழியை. செம்மண் காட்டில் விடுமுறை நாட்களில் ஆடு ஓட்டிக்கொண்டு காலையிலேயே குடும்பத்தோடு சென்று விடுவான் சத்தி. பழையசோறும் தொட்டுக்க பச்சமிளாகாய், வெங்காயமும்...

அம்மாவோடு ஆட்டை ஓட்டிக்கொண்டு வருவாள் தேன்மொழி. சிறுவயது சிநேகம் எக்காரணம் கொண்டு தவறாக செல்லாது என் அம்மாக்கள் ஆடு மேய்க்க, இவர்கள் இருவரும் நொண்டி விளையாடி மகிழ்வார்கள். அப்படியே மதிய வேளையில் வேப்பமர நிழலில் அஞ்சாகல் ஆடுவதும் பின் மாலை மீண்டும் ஆட்டை ஓட்டிக்கொண்டு வீடு வருவதும் இவர்களின் வார இறுதி நாள் பொழுது போக்கு...

சைக்கிள் ஓட்டி பழகும் போது தேனுக்கும் இவன் தான் பழக்கிவிட்டான். தேனுக்கு எப்பவும் இவனை பிடிக்கும் இவன் இல்லாமல் விளையாட செல்ல மாட்டாள் அப்படியே இருவரும் 12ம் வகுப்பு வரை படித்தனர். 12ம் வகுப்பு படிக்கும் போது தேனு பிறந்தநாளுக்கு வகுப்பில் உள்ள எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்து வந்தாள் சத்தியின் இருக்கை வரும் போது சட்டென்று சத்தி எழுந்து வெளியே சென்றான் தேனுக்கும் குழப்பம் ஏன் எழுந்து சென்றான் என்று. மாழை பள்ளி முடிந்ததும் இருவரும் சைக்கிளில் வீடு செல்லும் போது முதன் முதலாக தேனுக்கு மிக பிடிச்ச ரொம்ப நாள் ஆசைப்பட்ட வாக்மேனை பரிசாக அளிக்கும் போது தேன் ஏன் என்னிடம் மிட்டாய் வாங்கவில்லை என்றதும் எல்லாருக்கும் கொடுக்கும் மிட்டாய் எனக்கு வேண்டாம் நான் எப்போது உன்னிடம் மட்டும் தனியாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு சைக்கிளை வேகமாக மிதித்தான்...

தேனுக்கு இரவு முழுவதும் தூக்கம் இல்லை ஏன் அவன் இப்படி சொன்னான் என்று ஒரு வேளை இவன் நம்மை சைட் அடிக்கிறானே என்றும் அவளுக்கு டவுட்... தேன் ஒரு மிக தில்லான பெண் யாராக இருந்தாலும் எதிர்த்து பேசுவாள் எகிறி நின்றாள் கையை வீசவும் தயங்காதவள் தயங்காமல் பேசும் தரமான சொற்களுக்கு சொந்தக்காரி. தேனிடம் உள்ளூர் பசங்க  பேசமாட்டாங்க அந்த அளவீக்கு மிரட்டி பேசுவாள்.. சக்தியிடம் காதலை சொன்னதே தேனுதான் அந்த அளவிற்கு தைரியசாலி, உழைப்பாளி இப்படி இருந்தவள் சக்தியை காதலிக்கும் போதும் வாழ்ந்த உன்னோடு தான்டா இல்லன்னா இப்படியே படிக்காமல் ஆட்டுக்குட்டிய மேச்சிகிட்டே இருந்திடுவேன். மறந்தும் கூட நீ வேற யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கனவில் கூட நினைக்கதே என்று மிரட்டினாளும் பாசக்காரி.

சக்திக்கும் அவளை ரொம்ப பிடிக்கும் தேனு கருப்பும் இல்லாமல் சிகப்பும் இல்லாத இடைப்பட்ட நிறம் குறிப்பா சொல்லனும் என்றால் செஞ்சு வைச்ச சிலையழகி. அவளின் திகட்டாத பேச்சும், சினுங்கும் கண்களும் கான கொள்ளை அழகு என்பர்.

இந்நிலையில் இவர்கள் காதல் தேனுவின் மாமவிற்கு தெரியவர அவர் சக்தியை கூட்டி வரச்சொல்லி தம்பி உங்க குடும்பமும் எங்க குடும்பமும் சிறுவயது முதல் நண்பர்கள் இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம் நீ உங்க அப்பா சொத்தில் வாழ்கிறாய் நீயும் சந்தோசமாக இரு நாங்களும் சந்தோமாக இருக்கிறோம் எல்லாம் விட்டு விடு என்றார் தலையாட்டி சென்றான் செந்தில்.

இதைக்கேட்ட தேனு சக்தியிடம் அவரு சொன்ன நீ எதுக்கு பயப்படுற இப்ப சொல்லு இப்படியே வந்துவிடுகிறேன் என்றாள் சக்தி இல்லம்மா வேண்டாம் நாம் இதைப்பற்றி ஏன் யோசிக்ககூடாது என்றதும் அவள் விட்டேனா பார் எனக்கு தெரியாது நீ தாலி கட்டனும் என்று சிட்டாக பறந்தாள். இவன் ஊரில் எங்க இருந்தாலும் இவனைப்பார்த்து எப்ப கட்டுற என்று மிரட்டியே திரிவாள், சத்திக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவுங்க அப்ப மஞ்சள் போட்ட பணத்தை எடுத்துக்கொண்டு இரண்டு நாள் சுற்றி பக்கத்து டவுனில் பேக்கரி அமைத்தான். நண்பர்கள் மூலம் தேனுவுக்கு தகவல் தந்தவன் தனது நண்பர்கள் அறிவுரையை ஏற்று தேனுவை திருமணம் செய்ய முடிவெடுத்தான்.

ஆனால் திருமணம் செய்தால் இரு வீட்டாருக்கும் செல்வாக்கு இருக்கிறது இருவரும் மோதி கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்தவன் தனது பேக்கரியை நண்பனை பார்க்க சொல்லிவிட்டு மீண்டும் ஊருக்குவந்து யோசித்தவன் திருமணம் நம்ம ஊர் எல்லை விநாயகர் கோவிலில் திருமணம் முடிந்ததும் உள்ளுரில் இருக்கும் நண்பனும் மச்சானுமான விஜி வீட்டில் தங்கிக்கொள்ளலாம் ஊருக்கு நடுவே இருக்கிறது விஜி வீடு ஊரில் என்ன நடந்தாலும் தெரியும் என முடிவெடுத்து தேனுவிக்கு சொல்லியும் அனுப்பினான்.

எதிர்பார்த்தது போலவே காலை பசுவிற்கு பால் கறக்க வரும் தேனுவை அதே புடவையில் கூட்டி வந்து ஊர் எல்லை கோயிலில் தாலிகட்டி விஜி வீட்டிற்கு வந்தான். யாரும் பார்த்தார்களா என்று பார்ப்பதற்கு ஆள் வைத்து விட்டு வீட்டின் ஓரத்தில் உள்ள அறையில் தங்கினான்..

பால் கறக்க சென்ற பிள்ளை ஆளைக்காணம் என்ற தீ போல ஊரெங்கும் பறவியது. நேராக சக்தியின் வீட்டில் விசாரிக்க சென்றால் அங்கு யாரும் இல்லை அவனுடன் ஓடிவிட்டாள் என்று முடிவு செய்யாமல் அவன் அப்பாவிடம் ஞாயம் கேட்க செல்ல முடியாது என்ன செய்வது என்று பங்காளிகள் எல்லாம் ஒன்று திரண்டு நிற்க இவன் அதே ஊருக்குள் நிம்மதியாக உறங்கினான்..

ஒரு வாரம் வீட்டிலேயே இருந்தவர்கள் பிரச்சனை தீரவுமில்லை யாரும் சமாதானமாக போவது போல் தெரியவில்லை என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போதே விஜி டேய் யாரும் சமாதானம் ஆகுவதற்கு வாய்ப்பே இல்ல.. நீ கிளம்பிடு நான் போய் கார் எடுத்துட்டு வருகிறேன் 9 மணிக்கு ஈரோட்டில் ரயில் ஏறி சென்னை போய்டு அங்க நம்ம சரவணன் பால்  விற்றுக்கொண்டு இருக்கான் அவனிடம் பேசிட்டேன் கிளம்ப தயராக இரு என்று பத்திரமாக காரில் ஏற்றி இவன் குடும்பத்துடன் ஊருக்கு செல்வது போல் ஈரோடு செல்லாமல் சேலம் சென்று வழியனுப்பி திரும்பினான்...

இன்று இந்த கிராமத்து கிளிகள் இரண்டும் 3 குழந்தைகளோடு சென்னையில் பேக்கரி வைத்து நல்ல நிலைமையில் உள்ளனர் என்பது மகிழ்வான நினைவே....

Thursday, September 13, 2012

திருமண நாள்..... 5ம் ஆண்டில்....


திருமணம் ஒவ்வொருவரின் வாழ்விலும் சந்தோசங்களை அள்ளிக்கொடுக்கும் காலக்கட்டம். வாழ்வில் பல சந்தோசங்கள் இருந்தாலும் திருமண நாள் என்ற சந்தோசம் மிக இனிமையானது. எத்தனையோ திருவிழாக்கள் வந்தாலும் அதை கொண்டாடுவோம் ஆனால் அசை போடமாட்டோம் ஆனால் திருமண நாள் நம் நினைவுகள் நிச்சயம் அன்று நடந்த நிகழ்வுகளை அசை போட வைக்கும்..

இப்பதிவை எழுதும் போது நினைவுகளுடன் ரீங்காரமிட்டு ஒரு வித சந்தோச உணர்வுடன் பகிர்கிறேன்..



சிறுவயதில் இருந்து சொந்தபந்தங்கள், நண்பர்கள் திருமணத்திற்கு செல்லும் போது நம் திருமணம் எப்படி நடக்கும் என்று ஒரு எண்ண ஓட்டம் நிச்சயம் மனதில் இருக்கும்.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இரண்டு  வகை சொந்தத்தில் திருமணம் செய்வது, புது சொந்தத்தில் திருமணம் செய்வது என்று சொல்லலாம். சொந்தத்தில் திருமணம் செய்வது மிக அதிக சந்தோசம் என்னைப் பொறுத்தவரை...

எனக்கு சிறுவயதில் இருந்து மாமா வீட்டுக்கு சென்றால் அங்கு அக்கா பெண்ணோடு விளையாடிக்கொள்டு இருப்பேன். அப்போது பார்ப்பவர்கள் என்ன இப்பவே ஊர்  விளையாடுகிறாயா என்று கிண்டல் அடிப்பார்கள். 
எதாவது நிகழ்ச்சிகளுக்கு சென்றால் என்னடா எப்ப பார்த்தாலும் அக்கா பொண்ணோடு சுத்தற என்று சிறுவயதில் இருந்து மன ஓட்டத்தை அக்கா பெண் மேல் திரும்பிய காலகட்டம் கல்லூரி செல்லும் போது தான் என்றாலும் ஞாபகம் தெரிந்து முதல் என் முதல் பெண் தோழி அக்கா பெண் தான்.

அக்கா பெண்ணை என் முதல் தோழியை  திருமணம் செய்து கொள்ளலாம் என் குடும்ப பெரியவர்கள் சம்மதித்து ஒரு நல்ல நாள் பார்த்து பேசி முடிவானது என் திருமணம். திருமண 14.09.2008 அன்று அந்தியூரில் லட்சுமி திருமண மண்டபத்தில் முடிவாகி சரியாக 4 வருடங்களுக்கு முன் என் முதல் தோழியை, என் அக்கா மகளை பெற்றோர்கள், உற்றார்கள், உறவினர்கள் முன் மனைவியாய் ஏற்றேன்...


இன்று 2 வயது மகனுடன் கொண்டாடுகிறேன் இத்திருமணநாளை...


இன்றோடு நான்கான்டுகள் முடிந்து ஐந்தாவது ஆண்டில் கடவுளின் ஆசியோடும் உங்கள் வாழ்த்துக்களோடு அடிஎடுத்து வைக்கிறேன்....

அன்புடன்
சங்கவி....
(சங்கமேஸ், கவிதா)

Tuesday, September 11, 2012

அந்தியூர் கிடாவிருந்து....

 கோயில்

குருநாத சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு வருடா வருடம் நாங்கள் கிடா வெட்டி பொங்கல் வைப்பது வழக்கம் கடந்த 3 ஆண்டுகளாக பதிவில் பகிர்ந்து வருகிறேன் இத்திருவிழாவை ஆனால் கிடாவிருந்தை பதிவு செய்ய இயலவில்லை இந்த வருடம் அதை நிறைவேற்றுகிறேன்..

குருநாதசுவாமியிடம் வேண்டினால் நினைத்த காரியம் நனவாகும் என்பது இந்த ஏரியா மக்கள் மட்டுமல்ல தமிழகத்தில் பல பகுதியில் இருந்து வந்து கிடாவிருந்து இங்கு வைக்கின்றனர்.

 விருந்து நடக்கும் இடம்

திருவிழாக்காலங்களில் மட்டுமல்ல அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இங்கு விருந்து நடந்து கொண்டு தான் இருக்கும் மற்ற நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும் திருவிழாக்காலங்களில் மிக அதிகமாக இருக்கும்.. சுமார் ஆயிரம் கிடாவெட்டி எங்க பார்த்தாலும் மரத்துக்கு மரம் ஆட்டை தோள் உரித்துக்கொள்டு இருப்பர்.

நிறைய பேர் கோழி அறுத்து அதையும் அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு மாலை தான் செல்வர். அந்த அளவிற்கு கிடா விருந்துக்கு பெயர் போன இடம் வனம் என்பார்கள்.
 எங்க விருந்து இங்க தான்...

பொங்கல் வைபோவம்
நாங்கள் எப்போதும் முந்தைய நாள் மாலை சென்று இடம் பிடித்து அந்த இடத்தை சுற்றி தடுக்கு அமைத்துக்கொள்வோம். காலை 7 மணிக்கு செல்லும் போது அப்போதே கறி மணக்கும் நிறைய விருந்துகளில்.. கர்நாடகாவில் இருந்து வந்து விருந்து வைப்பவர்கள் களியும், குடல் குழம்பும் வைத்து காலையே வெளுத்து வாங்குவார்கள்.

நாங்கள் 7 மணிக்கு சென்று அங்கேயே பொங்கல் வைத்து அப்புறம் ஆட்டுக்குட்டியை தூக்கிச்சென்று கோயில் முன் தீர்த்தம் போட்டு அறுக்க தயாரானபோது நண்பர் கோவை நேரம் ஜீவாவும் அவரது மகளும் வந்தனர் அவர்களையிம் அழைத்துக்கொண்டு கிடா வெட்ட தீர்த்தம் போட்டால் இந்த வருடம் கிடா கொஞ்ச நேரம் துலுக்கவில்லை நான் என் மகன், மாமா, அக்கா என் மாறி மாறி கயிறு பிடித்தோம் ஒரு பத்து நிமிடத்துக்கு பின் துலுக்கி விட்டது.

கிடா துலுக்கும் இடம்

அப்புறம் இரத்தத்தை கொடுத்து விட்டு கிடாவை தூக்கிக்கொண்டு பந்தலுக்கு வந்தோம் வந்ததும் அழைப்பு ஈரோடு கதிர் அழைத்தார் கிடா துலுக்கிவிட்டாதா நாங்கள் 2 மணிக்கு வந்து விடுகிறோம் என்றார்.. அடுத்து அழைப்பு நம்ம வால்பையன் தல புறப்பட்டுட்டேன் தலக்கறி எனக்குத்தான் மறந்திடாதீங்க வந்து கிட்டே இருக்கேன் என்றார்.

அடுத்து அண்ணன் தாமோதர் அழைத்தார் மாலை போட்டு இருக்கேன் நானும் விஸ்வமும் வர வில்லை அடுத்த முறை நிச்சயம் கலந்துகொள்வோம் என்றார். அப்புறம் நெருங்கிய நண்பர்கள் வட்டம் எல்லாம் வர கோழி பிரியாணியும், கறிச்சாரும் தயாராகிக்கொண்டு இருந்தது. இந்த கோயிலுக்கு சாமி கும்பிட செல்லும் போது ஆட்டு ஈரலை சுட்டு மாவிலக்குடன் எடுத்து செல்வோம் எடுத்து சென்று பூஜை செய்துவிட்டு சரியாக 1 மணிக்கு மண மணக்கும் கறிச்சாருடன் பந்தியை ஆரம்பித்தோம்..

 நிறைய விருந்துகள்...

இந்த வனத்தில் இம்முறை அதிக கூட்டம் என்பதால் எந்த போனும் வேலை செய்யவில்லை எல்லாம் நாட் ரீச்லியே இருந்தது. நண்பர்களை அழைத்து வருவதற்குள் படாத பாடு பட்டு விட்டோம் அத்தனைக்கூட்டம் எங்க பார்த்தாலும் ஆட்குழம்பு மனம் ஒவ்வொரு இடத்திலும் ஒரு மனம் என களைகட்டியது அந்த ஏரியாவில் விருந்து..


 எங்க வீட்டு விருந்து



  சினிமா பாடல் புத்தகம்

 அருவாமனை, பனியாரக்கல்



 கையில் பச்சை குத்தும் பெண்...


வனத்தில் அதிக கடைகள் இல்லை என்றாலும் மண்ணின் மனம் கவர்ந்த தோசைக்கல், பணியாரக்கல், வீச்சருவாள் கடைகளும் கூடவே அந்த நாள் ஞபாகமாக பாட்டு புத்தகங்களும் இடம் பெற்று இருந்தது நண்பர் ஜீவா அவர்கள் எல்லாத்தையும் ஒன்னு விடாம போட்டோ எடுத்துக்கொண்டே இருந்தார்.

இந்த வருட கிடா விருந்துக்கு  இணைய நண்பர்கள் ஈரோடு கதிர், கார்த்தி, லவ்டேல் மேடி மற்றும் அவர் நண்பர், கோவையை சேர்ந்த ஜீவா, சுந்தரவடிவேலு, சுரேஷ் வந்திருந்தனர்.. அடுத்த வருட விருந்துக்கு இன்னும் நிறைய பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்...

Monday, September 10, 2012

கொலுசு சத்தம் கேக்கையிலே...



கொலுசே கொலுசே
உந்தன் பாடல் கொலுசே....

கொலுசு உன் காலோடு
சென்றுவிடுகிறது அதன்
சத்தம் மட்டும் என்
காதுகளில் இன்னும் ஒலிக்கிறது

இப்படி கொலுசின் அழகை விவரிக்காத கவிஞர்களே இல்லை என்று சொல்லாம்.  கொலுசின் பேரை உபயோகித்து நிறைய திரைப்பட பாடல்கள் வெற்றி பெற்றுள்ளன. 

கொலுசு பெண்களின் பாதத்தின் அழகுக்கு அழகுட்டும் ஓர் அணிகலன் இன்று வளர்ந்த நாகரிகம் என்று எப்படி சொன்னாலும் பெண்களுக்கு கொலுசின் மேல் ஈர்ப்பு அதிகம் தான் இதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் கால் அழகை பராமரிப்பது தான்.

குழந்தைக்கு கொலுசு போடுவது குழந்தையின் உணர்வுகளை அம்மாவிற்கு உணர்த்தத்தான். தூளியில் படுத்திருக்கும் குழந்தை விழித்ததும் காலை ஆட்ட ஆட்ட கொலுசு சப்தமிட்டு குழந்தை எழுந்ததை அறிவிக்கும்.

கொலுசு நம் இந்திய தமிழ் பாரம்பரியத்தின் ஓர் அங்கம் இன்று பிறந்த குழந்தைகள் கொஞ்சம் தவழ்ந்து பழகுகையில்  கொலுசை அணிவிக்கிறோம் அந்த குழந்தை நடந்து ஒரு இரண்டுவயது வரை கொலுசை அதன் கால்களில் இருந்து நாம் கழட்டுவதில்லை. பிறந்த பிள்ளைகளுக்கும் காலில் தண்டை, கொலுசு அணிவது வழக்கமாக இருந்து வந்தது. குழந்தை தவழும்போதோ தத்தி தத்தி நடக்கும்போதோ எழும் ஓசை வீட்டில் உள்ளோர்களை உளமகிழச்செய்யும். குழந்தைக்கு பேச்சு முழுவதமாக பேசும் வரை அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது கொலுசு சத்தத்தின் மூலம் தான் அறிய முடியும்...

கொலுசை வெள்ளியில் தான் முன்பெல்லாம் அணிந்து கொண்டிருந்தனர் நகாரிகம் பணம் எல்லாம் வளரும் இக்காலத்தில் தங்கத்திலும் அதிக பெண்கள் கொலுசு அணிவதை நாம் அதிகம் பார்க்க இயலும்..


தங்கத்துக்கு அடுத்து அதன் அத்தனை பெருமைகளையும் கொண்டது வெள்ளி. வெள்ளி நகை அணிவதால் ஆயுள் விருத்தியாகும். உடலில் உள்ள சூட்டை வெளியேற்றி குளிர்ச்சியாக உடலை வைத்துக்கொள்ள உதவும், மிக முக்கியமாக சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள உதவும் என நம் பழைய மருத்துவ குறிப்பில் நிறைய குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக கொலுசு மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு என்று வகைப்படும். மயில், வண்ணத்துப்பூச்சி, அன்னம் போன்றவற்றையும் அதில் வேலைப்பாடுடன் பதிந்து செய்யப்பட்டன. முதலில் திருமண அடையாளமாய் கொலுசு அணியப்பட்டது இப்போது குழந்தைகள் முதல் அணைத்து பெண்களும் அணியும் அணிகலனானது.

விசேச காலங்களில் பெண்கள் காலுக்கு மருதாணி போட்டு அதன் மேல் கொலுசுடன் இருக்கும் கால்களில் அழகு கொள்ளை கொள்ளும். 


பேய் என்று சொல்லும் போது கொலுசு அங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பேய் வருவதற்கான அறிகுறி 'ஜல்' 'ஜல்' என்ற கொலுசு சத்தமே என கூற கேள்விப்பட்டிருக்கேன். இரவில் தனியாக இருக்கும் போது ஜல் ஜல் சத்தம் கேட்டால் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது..

பொதுவாக, உடல் ரீதியாக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு. கலவியில், மல்லிக்கு அடுத்து கொலுசு சத்தம் அழைப்பு மணியாய் இருக்கிறது.

உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது.

சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்.

இன்று கால்களை அழகுபடுத்த நிறைய விஷயங்கள் வந்துவிட்டாலும், கொலுசுக்கு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது..

இதனால் தான் கொழுசு சத்தம் கேக்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குதுன்னு பாடினார்களோ....

Sunday, September 9, 2012

குரங்கு போல மனம்....


மனம் ஒரு குரங்கு
குரங்கு மரத்துக்கு மரத்
தாவுவது போல் மனமும்
தாவுகிறது..

எங்கு குதிக்க வேண்டும்
எங்கு குதிக்க கூடாது
என்ற சாட்டையை சுழற்றுவது
நம் கையில் தான் உள்ளது.....

சாட்டையை சுழற்றி குரங்கை அடக்க முடியுமா என்றால் நிச்சயம் கஷ்டமே அதுபோலத்தான் மனமும் இதை செய்யக்கூடாது என்று சொல்லி செய்யமல் இருப்போம் நம் விருப்பமானவர்கள் அதை கேட்டால் நிச்சயம் செய்வோம். அப்போது மாறத்தொடங்குகிறது நம் மனம்...

"மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்" என்று அவ்வையின் முதுமொழி.. ஆனால் நினைத்த மாத்திரத்தில் நினைத்தை நடத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம் அதை யோசித்து நிதானித்து இப்ப செய்யக்கூடாது அப்புறம் செய்யலாம் என்பவர் தான் தன் மனத்தை கொஞ்சம் அடக்கி தன்னுள் வைப்பார்.

"பதறாத காரியம் சிதறாது" என்பார்கள் அந்த பதற்றத்தை உண்டாக்குவதே மனம் தான். என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்று நின்று நிதானிக்கும் போது மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.. உணர்ச்சி வசப்பட்டால் நிச்சயம் கட்டுப்பாட்டிற்குள் வராது.

நம் மனம் சிதறுவதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்

பல மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்காமல்  உடலை வகுப்பறையில் விட்டு விட்டு மனதை அலைபாயவிடுகிறார்கள்.

பல பொதுக்கூட்டங்களில் பெரிய மனிதர்கள் தூங்குகின்றனர் அல்லது உடலினை அங்கே விட்டு விட்டு மனதை அலைபாய விடுகின்றனர்.

ஏறினால் இறங்கும், இறங்கினால் ஏறும் அது தான் மனம்..

இந்த மனத்தை கட்டுப்படுத்துவதால் நாம் பல வகைகளில் நன்மை அடைகின்றோம். இதை கட்டுப்படுத்த தெரியாததால் தான் இன்று பல யோக மையங்களும், தியான மையங்களும் கல்லா கட்டுகின்றன.

மனம் பற்றி என் நண்பன் எனக்கு சொன்ன கதை...

சாமியார் ஒருவர் குரங்கு ஒன்றை பணியாளாக வைத்திருந்தார். சாமியைப் பார்க்க வந்திருந்தவருக்குப் பணிவிடைகள் செய்ய குரங்கை ஏவிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வேலை சொல்லும் முன்னாலும் குரங்கில் தலையில் கையில் இருந்த குச்சியால் ஒரு அடி அடித்து அனுப்பிக் கொண்டிருந்தார். வந்தவரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்். என்ன இது, அது பாவம், வாயில்லா உயிர், அமைதியாக இவர் சொல்வதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறது. இவர் சும்மா அடித்துக் கொண்டே இருக்கிறாரே என்று பரிதாபப்பட்டு “சாமி கொஞ்ச நேரம் அந்தக் குச்சிக்கு ஓய்வு கொடுங்களேன்” என்று கொஞ்சம் கடிதலாகவே சொன்னார்.

சற்று நேரத்தில் குரங்கு வந்தவரின் அருகில் வந்து அமர ஆரம்பித்தது. யாரும் எதுவும் சொல்லவில்லை. அவரது சட்டையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தது. இவ்வளவு நல்ல குரங்கு, விளையாடி விட்டுப் போகட்டும் என்று அவரும் கண்டு கொள்ளவில்லை. இப்படியே போய், கடைசியில் அவர் தலையில் ஏறி முடியைப் பிடித்து ஆட்ட ஆரம்பித்த பிறகுதான் “சாமி, உங்க குச்சிக்கு வேலை கொடுங்க” என்று கேட்க மனம் வந்தது அவருக்கு.

நம் மனம் என்னும் எண்ணங்களும் அப்படித்தான். குதித்து கும்மாளம் போட்டு நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களையும் சிக்கலில் மாட்டி வைப்பதில் கில்லாடி. அதற்காக குச்சியைக் கையில் எடுத்தால் சாதுவாக மாறி விடுகிறது. சாதுவாகி விட்டதே என்று குச்சியைக் கீழே போட்டு விட்டால் திரும்பப் பழைய புத்தி திரும்பி விடுகிறது.

மனத்தைப்பற்றி சமீபத்தில் நான் படித்த எனக்கு மிக பிடித்த கவிதை...

என் கண்கள் 
இறுக்கமாக கட்டப்பட்டன
நான் தீயதையே பார்க்கிறேனாம்....

என் காதுகள்
பஞ்சால் அடைக்கப்பட்டன
நான் தீயதையே கேட்கிறேனாம்....

என் வாய்
துணிகள் கொண்டு பொத்தப்பட்டன
நான் தீயதையே பேசுகிறேனாம்....

என் உடல் 
யாருமற்ற தீவில்
தூக்கி வீசப்பட்டது

என் மனம் 
தன் கோரைப் பல் கொண்டு
என் உடலை கிழித்து வெளிவந்து
அவர்கள் தீயது என்று சொன்னதை 
தேடிச் சென்றது!!!

மனதை அடக்க முயலுகிறேன்... ஆனால் முடியவில்லை என்று சொல்பவர்கள் தான் ஏராளம் அதில் நானும் ஒருவன் என்றால் அது பொய்யாகாது...

Thursday, September 6, 2012

மழையும் அவளும்...


மழை நீர் பட்ட
உன்னை அள்ளி
அணைக்கையில்
துள்ளிச்சிரிக்கிறது
மழைச்சாரல்...

000000000000000


உன் கெண்டைக்காலில்
பட்டுச் செல்லும்
மழைநீர் எங்கும்
செல்லாமல் சொக்கி
நிற்கிறது...

000000000000000


நீ மழையில்
நனையும்
போது
வியர்க்கிறது
எனக்கு...

000000000000000

என்னவளின்
முகத்தில்
மழைத்துளி
பட்டு
ஒட்டாத வரை....

மழையை
எனக்கு
ரொம்ப
பிடிக்கும்...

000000000000000




000000000000000

நாளை பார்க்கலாம்
என்கிறான் பால்ய நண்பன்

பிறகு பேசலாம்
என்கிறாள் தோழி

கடித போக்குவரத்தில்
யாரும் இப்ப இல்லை

கோயிலில் பார்த்தால்
கும்பிட்டு போய்டுறான்
நண்பன்

யார் மீதும்
வருத்தம் வைக்க
விரும்பவில்லை

குவிந்து கிடக்கின்றன
மனதில் நட்பும் வரிகளும்

இப்போதைக்கு
நமக்கு நட்பு 
இணையத்தில் மட்டுமே....