உள்ளுரில் இருந்து உலகம் வரை........
வணக்கம் வலையுக நண்பர்களே...
எனது உறவினர் ஒருவர் தீவிரமாக
திராவிடத்தைப்பற்றி பேசுபவர். அரசியல்வாதியும் கூட.. எனது வேலை, மனைவியின்
வேலை, மகனின் படிப்பு, உலக நடப்பு என பலவற்றை பேசினோம். பள்ளியில் மகனுக்கு
இரண்டாவது மொழியாக இந்தியை தேர்ந்தெடுத்துள்ளேன் என்றேன், எதாச்சையாக
மனுசன் பொங்கி வழிந்து விட்டார். இல்லைங்க தமிழும் படிக்கிறான், கூடுதலாக
இந்தியும் படிக்கட்டும் என்று தான் சேர்த்தேன் என்றேன். மனிதன் கொஞ்சம்
சூடாகி இது தப்பு என பேச ஆரம்பிச்சிட்டார். உடனே நான் சரி உங்களுக்கு இந்தி
தெரியுமா என்றேன், தெரியாது என்றார்.
உங்க கட்சியில் உங்களுக்கு
எம்பி பதவி கொடுத்திட்டால் என்ன செய்வீர்கள் என்றேன். அதற்கு வாய்ப்பே
இல்லை என்றார். ஒரு பேச்சுக்கு சொல்லுங்க என்றதும், டெல்லி போவேன் என்றார்,
அங்க போய் தமிழில்லா பேசுவீங்க, அப்ப இந்தி தெரியாம கஷ்டப்படுவீங்க தானே
என்றேன்.. உடனே குறுக்க பேசிய அவர் அப்ப நாளைக்கு உன் மகன் எம்பி
ஆகிடுவாங்கிறாயா என்றார்..
யாருக்கு தெரியும் அவன் என்னவா
வேண்டுமானாலும் ஆகலாம், ஆனால் என்னைப்பொறுத்த வரை அது ஒரு மொழி
அதைக்கற்றுக்கொள்வதில் தவறில்லை.. உங்க கொள்கையில் தான் தவறு என்றேன்..
மனுசன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து யோசிக்க ஆரம்பிச்சிட்டார்....
------------------------------------------
தினமும்
பார்த்து பழகுபவர் அப்புறம் தினமும் கட்டாயம் பேசும் அளவிற்கு
வந்துவிட்டோம், ஒரு நாள் அவரின் நண்பரிடம் எனது நண்பன் என்று
அறிமுகப்படுத்தினார். சில நாட்களுக்கு முன் எனக்கு நாளை நிச்சயம் வாங்க
துணி எடுக்க போகிறேன், கூட வார்றீங்களா என்றார், சரி என்று வீட்டில்
சொல்லிவிட்டு சென்றேன்.பின் நன்றி என்று புறப்பட்டு விட்டார்.
அடுத்த நாள் சந்திக்கும் போது நேற்று எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை
மட்டும் அழைத்திருந்தேன். திருமணத்துக்கும் இதே போலத்தான் சிம்பிளாக
சாரதாம்பாள் கோயிலில் வைத்துக்கொள்ளலாம் என்று இருக்கேன் என்றார்... என்
மனைவியிடம் சொன்னேன். இப்படி ஒரு நண்பன் கிடைத்தற்கு நீங்க கொடுத்து
வெச்சிருக்கனும் என்கிறாள்...
-------------------------------------------
தினமும் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்காக
செல்லும் போது ஒருவர் தன் நாயுடன் தான் தினமும் வருவார். நாயுடன் வருவது
கெத்தா அல்லது அவருக்கு பாதுகாப்பா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அந்த நாய்
அவருக்கு எதிரில் மற்றும் பின் வருபவர்களை எல்லாம் மிக பயப்படுத்தக்கூடிய
வகையில் பயங்கரமாக இருக்கும். அதைக்கண்டு யாராவது பயந்து ஓடினால் அதை
அழைத்து வரும் நபர் சிரிப்பாருபாருங்க, அது செம்ம கெத்தா இருக்கும்.
இன்று ஒரு குறுகலான சந்தில் இருந்து ஜாக்கிங் என்ற பெயரில் மெதுவாக அசைந்து
அசைந்து வந்து கொண்டு இருந்தேன். அந்த சந்து மெயின் ரோட்டில் வந்து
சேரும், அந்த இடத்தில், சில பசும் கிளிகள் நடந்து சென்றதால் எனது
ஜாக்கிங்கை கொஞ்சம் வேகப்படுத்தி அந்த இடத்தில் திரும்பினேன்.. எனது
ஜாக்கிங்கில் மதி மயங்கிய அந்த நாய் எதிர் புறத்தில் இருந்து வவ் வவ் என்று
தாவியது... எனக்கு பிபி எகிறி இன்னிக்கு நம்ம தொடை அவுட்டுடா என்று ஓஓஓஓ
என கத்தினேன். அதற்குள் அந்த நாயின் ஓனர் ஒரு குச்சியை வீசி நாயை
கட்டுப்படுத்தினார். ஆனால் நான் டர்ர்ர்ர் ஆனது ஆனது தான்..
எப்பவும் நாயை இழுத்து வருபன் இன்று கயிரை லுசாக பிடிச்சிருப்பான் போல,
எத்தனை நாள் கோபமோ இன்னிக்கு என் தொடைக்கறியை சாப்பிட எத்தனித்தது,
எப்படியோ தப்பிச்சிட்டேன்...
நாயின் ஓனர் அப்படியே கெத்தா
சிரிச்சிகிட்டு போகிறார், அந்த பசுங்கிளிகள் தலை தப்பிரான் புண்ணியம் என
ஓடிவிட்டார்கள். நான் பெப்பே என்று வீடு நோக்கி பொறுப்பா நடந்து போனேன்...
--------------------------------
மோடியின் 100 நாய் ஆட்சியைப்பற்றி ஆள் ஆளுக்கு பேசினாலும், 100 நாட்களில் எதுவும் மாற்ற இயலாது என்பதுதான் நிதர்சன உண்மை. இது ஊரில் உள்ள எல்லாருக்கம் தெரியும், ஆனா தெரியாத மாதிரியே காட்டிக்குவாங்க.. நமக்கு தெரிய பெட்ரோல் விலை குறைந்துள்ளது, மற்றபடி விலைவாசிகள் எல்லாம் அப்படியேத்தான் இருக்கின்றன. நதிநீர் இணைப்பு மற்றும் பங்கீடுகளில் இன்னும் தெளிவு இல்லை என்று தான் சொல்லனும். விவசாய உற்பத்தியை அதிகப்படுத்த என்ன செய்யப்போறாங்கன்னு தெரியல.. இதை எல்லாம் ஓராண்டுக்கு பின் தான் என்ன செய்யப்போறாங்கன்னு பார்த்து நமது மதிப்புரைகளை சொல்லலாம்.
---------------------------------------
பாகிஸ்தான் உள்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் எல்லை தாண்டிய தீவரவாத்தில் இருந்து பின்வாங்காமல் இருக்கின்றனர். நம் எல்லைப்பகுதியில் நடந்து வரும் சண்டை நமக்கு முழுவதுமாக தெரியவில்லை, தெரியும் போது தான் நம் வீரர்கள் படும் கஷ்டம் புரியும்.
--------------------------------
30 வருடமாக ப்யூனாவே இருப்பவர் மாத சம்பளம் மாதம் 20 ஆயிரம் ஆனால் 6 பங்களாக்கள், 2 சொகுசு கார்கள், நிறைய பணம் மற்றும் நகைகள் வைத்துள்ளார் எப்படி என்று ஒருத்தருக்கும் தெரியல.. என்னைப்பொறுத்தவரை இவர் ஒருவர் மாட்டி உள்ளார் ஆனால் மாட்டாமல் சுற்றுபவர்கள் இன்னும் நிறைய இருப்பார்கள்.. ப்யூனுக்கு இம்புட்டு என்றால் இன்னும் பெரிய பெரிய அதிகாரிக்கு எல்லாம்.. சொல்ல வேண்டியதில்லை, ரெய்டு போனாத்தான் தெரியும்...
---------------------------------
விபச்சார வழக்கில் நடிகை கைது என்று செய்தி வந்து விட்டால் போதும் நம்ம நேர்மையான பத்திரிக்கைக்காரங்க எல்லாம் அந்த நடிகை போட்டோவ எடுத்து வாழ்க்கை வரலாற்றை எடுத்து, எல்லாத்தையும் கலந்து மசாலா படம் மாதிரி பெரிய செய்தியாக போட்டு அன்றைய விற்பனையை உயர்த்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள் இந்த நேர்மயாளர்கள்.
உடம்பை விற்று அந்த காசில் தன் வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்ற மனசாட்சியே இல்லாமல் செய்தியை போடும் இவர்களை எல்லாம் என்னத்த சொல்ல.
---------------------------------
வீட்டில் பொஞ்சாதி மற்றும் மச்சினிச்சிகளோடு பேசும் போது, வெளியே போக நேரிடும் போது எங்க போறீங்க என்பார்கள், நான் கிண்டலாக சரக்கடிக்க போகிறேன் என்பேன், ஒரு நாள் சாராயம் குடிக்கப்போகிறேன் என்பேன், அவர்களும் அதற்கு நக்கல் பதில் விட்டு சென்று விடுவர்.
சமீபத்தில் உறவினர்கள், குடும்பத்தில் பெரியவர்கள் சிலர் பத்திரிக்கை கொடுப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளனர். என்னையு விசாரிச்சு விட்டு எனது மகனிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின் எங்கடா உங்க அப்பா என்று மகனிடம் கேட்க அவன் எங்கப்பா சாராயம் குடிக்க போய்ட்டார் என்று ஒரே போட போட்டுத்தள்ளிட்டான். பேசாமல் இருந்த அவர்கள் புறப்படும் போது நான் வர, வந்திருந்த ஒவ்வொருவரும் தனித்தனியாக என்னிடம் பேசி தாளிச்சு எடுத்துவிட்டனர்.
பையன் பெரிசாகிட்டான் இப்பபோய் இப்படி குடிக்கலாமா என்றும், வாரத்தில் ஒரு நாள் மட்டும் குடி என்று இன்னொருவரும் ஆக மொத்தம் எனக்கு தினமும் குடிக்கும் குடிகாரன் என்ற பட்டம் மட்டும் தரவில்லை.
பையன் முன்னாடி பேசக்கூடாது, அப்படியே பேசினாலும் தப்பா பேசினோம் இப்படி பன்னு வாங்கி அலையவேண்டியது தான்...