Wednesday, September 10, 2014

மெல்லிய கருத்த தேவதை..



தினமும் மனைவியை அவர்கள் கல்லூரி வாகனத்தில் ஏறுவதற்கு இறக்கிவிட்டு விட்டு எதிர் முனையில் நானும் மகனும் டாடா காட்டுகிறோம் என்று நிற்போம்... மகன் டாடா காட்டுவதில் மும்மரமாக இருப்பான்.. காலை நேரம் அனைத்து கல்லூரி பேருந்துகளும் நின்று செல்லும் இடம் அந்த இடத்தில் நிற்க எனக்கு என்ன கசக்குமா, 3 நிமடம் தான் நிற்பேன் என்றாலும் மனசு இருக்கும் எந்த டென்ஷனும் அமைதியாக அமுக்கும் நேரம் அது.. குளு குளுன்னு இருக்குன்னு சொல்வாங்களே அதே தருணம் தான். கடவுள் கண்ணை படிச்சதற்காக தினமும் நன்றி சொல்லவேண்டும். அந்த இடத்தில் இருந்து நகரும் போது, வானில் இருந்து நட்சத்திரங்கள் கீழே விழும் அதே எபெக்ட்டு.

இப்படியாக கடந்த நான்கு மாதமாக போய்க்கொண்டு இருந்த வாழ்வில் எதேச்சையாக இரு தினங்களுக்கு முன் தினமும் பார்க்கும் ஒரு தேவதை கடந்து சென்றது. தேவதை என்றதும் வெள்ளி நிற சுடிதார் அணிந்திருக்கும் என்று நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது. இந்த தேவதை காட்டன் புடவையில் உடலோடு ஒட்டு நிற்கும், மெல்லிய கருத்த முகத்தில் ( மாநிறம்ன்னு சொல்வாங்ளே அது தான்) சிறிய பொட்டும் அதே அளவில் மூக்குத்தியுடன் கடந்து போகும், ஒரு 25 செகன்டு தான் என்னை கடந்து சென்றாலும், உடல், பொருள், ஆவி அனைத்தும் அடங்கி எண் கண்கள் மட்டும் விழித்திருக்கும் நேரம் அது.

எப்பவும் போல அந்த தேவதை போய் இருந்தால் பரவாயில்லை,  எப்பவும் வடப்பக்கம் செல்லும் தேவதை, இன்று இடப்பக்கம் எனது சிங்கத்தருகில் வந்து வாட்டர் பால்ஸ் ஓவரா ஓடுது என்று அவள் தோழியிடம் வேகமாக, எனக்கு கேட்கும் அளவில் சொல்லி விட்டு சென்றாள்.. தோழி என்றால் சுமார்ன்னு நினைச்சுக்காதீங்க பாஸ் அதுவும் தேவதைதான், பட் எல்லாருக்கும் எல்லா தேவதையும் பிடிக்காதல்லவா, அது போலத்தான் இதுவும்...

எனக்கு முதல்ல வாட்டர் பால்ஸ் என்றதும் புரியல, நானும் என் மண்டைய குழப்பு குழப்பு பார்த்தேன், கவுட்டி கவுட்டியா யோசிச்சு பார்த்தேன்.. ம்கும் ஒன்னும் விளங்கள.. சரின்னு பொஞ்சாதிகிட்ட பேச்சு கொடுத்துட்டே ஒரு பொண்ணு இப்படிச்சொல்லுச்சு என்றேன்.. அவள் சிரி சிரின்னு சிரிச்சிட்டு ஓவரா ஜொள்ளு ஊத்தறீன்னு சிம்பிளா உன்ன கவுத்துட்டு போய்ட்டாங்க....
( ஏய் டண்டனக்க டணுக்குனக்கான்னு அவளுக்கு சந்தோசம்)... அடப்பாவமேன்னு அப்புராணி பையன இப்படி சொல்லிட்டாங்களேன்னு வருத்தம் தான் ஆனால் அடுத்த நாள் காலையில் இருந்து டாடா காண்பிக்க எதிரே நிற்பதில்லை, பொஞ்சாதியை பக்கத்திலேயே நின்னு பஸ் ஏற்றி விட்டு விட்டு வந்துடுறேன்...

ஆனாலும் அந்த மெல்லிய கருத்த தேவதை தூரத்தில் போய் திரும்பி பார்த்து சிரிக்க தவறுவதில்லை, அடுத்த நாலு ஸ்டெப்பில் தோழி தேவதையும் இப்பெல்லாம் பார்த்து சிரிக்குதுபாஸ்....

Friday, September 5, 2014

ரயில் பயணங்களில் தமிழன் மட்டும் தான் இளிச்சவான் போல...

ரயில்களில் நமக்கான உரிமை தமிழக எல்லையை தாண்டியதும் மறுக்கப்படுகிறது என்பது மறுக்க இயலா உண்மை. சேலத்தை கோட்டாமாக மாற்றுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நாம் பட்ட பாடு நன்றாக தெரியும். ரயில் பயணங்களில் நியாமாக நடந்து கொள்பவர்கள் இந்தியாவில் நம் தமிழர்கள் தான் என சத்தியம் செய்து சொல்லாம். ஆனால் நிறைய உரிமைகள் நமக்கு மறுக்கப்படுகின்றன என்பது தான் நிதர்சனம்.

தினமும் சென்னையில் இருந்து கேரளாவிற்கு நிறைய சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இயக்கப்படுகின்றன ஆனால் அதில் பாதி ரயில்கள் கோவைக்குள் வராது. கோவைக்கு வெளியே உள்ள போத்தனூர் வழியாக சென்று விடுகின்றன. அதே போல் இந்த சூப்பர் பாஸ்ட் ரயில்கள் தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே நிற்கும். ஆனால் கேரளாவில் எல்லா இடங்களிலும் நின்று செல்லும் நம்ம ஊர் டவுன் பஸ் போல.

சூப்பர் பாஸ்ட் ரயில்களில் நம்ம ஊரிற்கு ஒதுக்கப்படும் டிக்கெட்டுகள் மிக குறைவாகவே இருக்கும், ஆனால் பக்கத்தில் உள்ள பாலக்காட்டுக்கு இன்னும் கூடுதல் டிக்கெட்டுகளை ஒதுக்குவார்கள், இதனால் கோவையில் பலர் பாலக்காட்டில் இருந்து டிக்கெட் புக் செய்து விட்டு கோவையில் இருந்து ஏறிச்செல்கின்றனர் பலர்.

இது நமக்கும், நமக்கு மிக பக்கமாக உள்ள கேரளாவிற்கும் உள்ள வேறு பாடு தான், இன்னும் வட மாநிலங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் நம்மை இளிச்சவாயர்கள் என்று தான் சொல்வார்கள். பார்க்கப்போனால் நம்ம ஊரில் வித் அவுட்டில் அதுதாங்க டிக்கெட் இல்லாமல் செல்லும் நபர்களின் எண்ணிக்கை மிக குறைவு.

சில வருடங்களுக்கு முன்பு பீகாரில் இருந்து இராமேஸ்வரம் சுற்றுலா வந்த பலர் வித் அவுட்டில் வந்தனர். திரும் செல்லுகையில் பிரச்சனை ஆகி கடைசியில் என்ன ஆனது, அவர்கள் டிக்கெட் எடுக்காமலே சென்றனர் என்பது தான் ஹைலைட். நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வடநாட்டில் இந்த மாதிரி பிரச்சனை செய்ய இயலுமா, அல்லது அந்த அளவிற்கு செல்ல நம் ஆட்கள் தான் இடம் கொடுத்துவிடுவார்களா??.

இன்னும் வடமாநிலங்களில் பயணித்தவர்களின் இரயில் பயண அனுபவங்களை கேட்டால் தலைசுத்துகிறது. என் நண்பரின் அந்த இம்சையான அனுபவம் பற்றி கூறியதாவது. எதிர்  சீட்டில் உட்கார்ந்திருப்பவர் மேலே கூட கால் போட்டுவிட்டு  கவலைப்படாமல் இருக்கும் பிரயாணிகளை நிறையவே பார்த்திருக்கிறேன். இது சம்பந்தமாக  பயணிகளுக்கு இடையில்  வாக்குவாதமோ சண்டையோ வந்தால் பக்கத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் கூட நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிடுவார்கள். தொடரும் சண்டை சில சமயம் ஊர் போய்ச் சேரும் வரை கூட நீடிப்பதுண்டு. வடநாட்டு பகுதிகளில் ரயில் சண்டை இன்னும் உக்கிரமாக இருக்கும். அசந்தால் சாமான்களைக் கூட  ஆட்கள் மேல் அடுக்கிவிடும் வேடிக்கை நடப்பதுண்டு.

     இரண்டாம் வகுப்பு பயணத்தைப் பொறுத்தவரை வடநாட்டு பகுதிகளில்  ரிசர்வேஷன் பெட்டிகளுக்கும் ரிசர்வேஷன் இல்லாத பொதுப் பெட்டிகளுக்கும் (ஜெனரல் கம்பார்ட்மென்ட்) இடையில் அதிக வித்தியாசம் இருக்காது. ரிசர்வ் செய்தவர்களும் ரயிலில் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்யலாம். அவ்வளவுதான். முதல் வகுப்பு பயணம் இன்னும் அந்த அளவுக்கு மோசமாகி விடவில்லை.

        ரயில்வேயில் பணி செய்தவனாகையால் நிறைய ரயில்பயணம் செய்யும் அனுபவமும் அந்த பயணங்களில் வகை வகையான மனிதர்களைப் பார்த்து வேதனைப் பட்ட அனுபவமும் எனக்கு உண்டு. இன்னும் சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம் என முடித்தார்.


நேற்று என் அலுவலக நண்பரிடம் இதைப்பற்றி பேசும் போது அவர் கண்ணீர் விடாத குறையாக கூறினார்.  குர்லாவில் இருந்து கோவை வரும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரசில் சில நாட்களுக்கு முன் பயணித்துள்ளார். அப்போது இரயிலில் நடைபெற்ற சம்பவங்களால் வடமாநிலங்களுக்கு இரயிலில் செல்வதை இனி யோசிக்கவேண்டி இருக்கு இல்லை எனில் ஏசி கோச்சில் தான் செல்லவேண்டும் என முடிவு செய்து அப்பாவிடமும் சொல்லிட்டேன் என்றார். அப்படி என்ன நடந்தது என்று கேக்கும் போது அவர் கூறியதாவது...

இந்த முறை அவசரமாக குடும்பம் முழுதும் சென்றால் ஏசி கோச்சில் டிக்கெட் கிடைக்காமல், பர்த்தில் டிக்கெட் கிடைத்தால் புக் செய்து ரிட்டன் வந்துள்ளனர். ரயில் ஏறியதில் இருந்து டிடிஆர் என்னும் நபர் வரவே இல்லையாம்.


3 பேர் அமரும் இடத்தில் ஆறு பேர் அமர்ந்துள்ளனர். எட்டு பேர் படுக்கும் அளவில் உள்ள அந்த இடத்தில் 30 பேர் இருந்துள்ளனர். பாத்ரூம் செல்ல வேண்டும் என்று சென்றால் கழிவறையில் 3 பேர் நின்று கொண்டு பயணிக்கின்றனராம். நண்பருக்கு இந்தி தெரியும் ஆனால் பேசியும் பயணில்லை. எதவாது சொன்னால் அனைவரும் மிரட்டும் தோணியில் பேசுகின்றனராம்.

குழந்தைக்கு பால் கலக்குவதற்குள் பாடாத பாடு பட்டுள்ளனர். அருகே உள்ள ஏசி கோச்சில் உள்ள டிடிஆரைப்பாத்து சொன்னால் பதிலே சொல்லாமல் கதவை சாத்துவதிலேயே குறியாக இருந்திருக்கிறார். அங்கு இருந்த பணியாளரிடம் பேசி இருக்கிறார், அவர் தலைவிதி சாரே நாம ஒன்னும் பண்ண இயலாது இவர்களை எல்லாம். பேசாம காசு போன போகுதுன்னு ஏசில போன தப்பிச்சிகிட்டோம் என்றாராம்.

இவருடன் பயணித்த இன்னொரு தமிழ் குடும்பம் அபாயச் சங்கிலியை இழுத்துள்ளனர். ஆனால் ரயில் நின்றும் நிக்காமலும் வேகம் எடுத்துள்ளது. யாரும் இதைப்பற்றி கேக்கவும் இல்லை, பார்க்கவும் இல்லை. பகலில் தான் இந்த பிரச்சனை என்றால் இரவில் அதற்கு மேலாம், அங்கேயே படுத்து உறங்கி உள்ளனர். பெண்கள் கழிப்பறைக்கு செல்வதற்கு படும் பாடு பட்டு உள்னர். அன்று இரவு முழுவதும் இவர்கள் தூங்கவே இல்லையாம். பெட்டி படுக்கையையும், இவர்களையும் பார்த்துக்கொண்டே இருந்துள்ளனர்.

ஆனால் டிக்கெட் எடுக்காமல் வித்அவுட்டில் வந்த அவர்கள் பேப்பரை விரித்து நன்கு குறட்டை இட்டு நடக்கமுடியாத அளவில் படுத்து தூங்கி உள்ளனர். பெங்களூருக்கு முன் தான் டிடிஆர் வந்துள்ளார் அவரிடம் முறையாடியதற்கு நான் என்ன செய்ய இதெல்லாம் இங்க சகஜமுங்க, எங்க புகார் செய்தாலும் இதைத்தான் செய்வாங்க, டிக்கெட் எடுக்காமல் வித்தவுட்டில் தான் வருகின்றனர், நாம் தான் விலகிப்போய்க்கனும் என அட்வைஸ் மழை பொழிந்தாராம்.

இதே தமிழ்நாட்டில் ஒருவர் டிக்கெட் இல்லாமல் வந்தால் இந்த டிடிஆர்கள் படுத்தும் பாடு இருக்கே, சொன்னால் கதை கதையாக சொல்லலாம்.

ஆக இந்த ரயில்வேக்கு தமிழன் மட்டும் தான் இழிச்சவாயன் போல...

Wednesday, September 3, 2014

அஞ்சறைப்பெட்டி 04/09/2014



  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........

வணக்கம் வலையுக நண்பர்களே...

எனது உறவினர் ஒருவர் தீவிரமாக திராவிடத்தைப்பற்றி பேசுபவர். அரசியல்வாதியும் கூட.. எனது வேலை, மனைவியின் வேலை, மகனின் படிப்பு, உலக நடப்பு என பலவற்றை பேசினோம். பள்ளியில் மகனுக்கு இரண்டாவது மொழியாக இந்தியை தேர்ந்தெடுத்துள்ளேன் என்றேன், எதாச்சையாக மனுசன் பொங்கி வழிந்து விட்டார். இல்லைங்க தமிழும் படிக்கிறான், கூடுதலாக இந்தியும் படிக்கட்டும் என்று தான் சேர்த்தேன் என்றேன். மனிதன் கொஞ்சம் சூடாகி இது தப்பு என பேச ஆரம்பிச்சிட்டார். உடனே நான் சரி உங்களுக்கு இந்தி தெரியுமா என்றேன், தெரியாது என்றார்.

உங்க கட்சியில் உங்களுக்கு எம்பி பதவி கொடுத்திட்டால் என்ன செய்வீர்கள் என்றேன். அதற்கு வாய்ப்பே இல்லை என்றார். ஒரு பேச்சுக்கு சொல்லுங்க என்றதும், டெல்லி போவேன் என்றார், அங்க போய் தமிழில்லா பேசுவீங்க, அப்ப இந்தி தெரியாம கஷ்டப்படுவீங்க தானே என்றேன்.. உடனே குறுக்க பேசிய அவர் அப்ப நாளைக்கு உன் மகன் எம்பி ஆகிடுவாங்கிறாயா என்றார்..

யாருக்கு தெரியும் அவன் என்னவா வேண்டுமானாலும் ஆகலாம், ஆனால் என்னைப்பொறுத்த வரை அது ஒரு மொழி அதைக்கற்றுக்கொள்வதில் தவறில்லை.. உங்க கொள்கையில் தான் தவறு என்றேன்.. மனுசன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து யோசிக்க ஆரம்பிச்சிட்டார்....

------------------------------------------

தினமும் பார்த்து பழகுபவர் அப்புறம் தினமும் கட்டாயம் பேசும் அளவிற்கு வந்துவிட்டோம், ஒரு நாள் அவரின் நண்பரிடம் எனது நண்பன் என்று அறிமுகப்படுத்தினார். சில நாட்களுக்கு முன் எனக்கு நாளை நிச்சயம் வாங்க துணி எடுக்க போகிறேன், கூட வார்றீங்களா என்றார், சரி என்று வீட்டில் சொல்லிவிட்டு சென்றேன்.பின் நன்றி என்று புறப்பட்டு விட்டார்.

அடுத்த நாள் சந்திக்கும் போது நேற்று எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை மட்டும் அழைத்திருந்தேன். திருமணத்துக்கும் இதே போலத்தான் சிம்பிளாக சாரதாம்பாள் கோயிலில் வைத்துக்கொள்ளலாம் என்று இருக்கேன் என்றார்... என் மனைவியிடம் சொன்னேன். இப்படி ஒரு நண்பன் கிடைத்தற்கு நீங்க கொடுத்து வெச்சிருக்கனும் என்கிறாள்...
-------------------------------------------



தினமும் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்காக செல்லும் போது ஒருவர் தன் நாயுடன் தான் தினமும் வருவார். நாயுடன் வருவது கெத்தா அல்லது அவருக்கு பாதுகாப்பா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அந்த நாய் அவருக்கு எதிரில் மற்றும் பின் வருபவர்களை எல்லாம் மிக பயப்படுத்தக்கூடிய வகையில் பயங்கரமாக இருக்கும். அதைக்கண்டு யாராவது பயந்து ஓடினால் அதை அழைத்து வரும் நபர் சிரிப்பாருபாருங்க, அது செம்ம கெத்தா இருக்கும்.

இன்று ஒரு குறுகலான சந்தில் இருந்து ஜாக்கிங் என்ற பெயரில் மெதுவாக அசைந்து அசைந்து வந்து கொண்டு இருந்தேன். அந்த சந்து மெயின் ரோட்டில் வந்து சேரும், அந்த இடத்தில், சில பசும் கிளிகள் நடந்து சென்றதால் எனது ஜாக்கிங்கை கொஞ்சம் வேகப்படுத்தி அந்த இடத்தில் திரும்பினேன்.. எனது ஜாக்கிங்கில் மதி மயங்கிய அந்த நாய் எதிர் புறத்தில் இருந்து வவ் வவ் என்று தாவியது... எனக்கு பிபி எகிறி இன்னிக்கு நம்ம தொடை அவுட்டுடா என்று ஓஓஓஓ என கத்தினேன். அதற்குள் அந்த நாயின் ஓனர் ஒரு குச்சியை வீசி நாயை கட்டுப்படுத்தினார். ஆனால் நான் டர்ர்ர்ர் ஆனது ஆனது தான்..

எப்பவும் நாயை இழுத்து வருபன் இன்று கயிரை லுசாக பிடிச்சிருப்பான் போல, எத்தனை நாள் கோபமோ இன்னிக்கு என் தொடைக்கறியை சாப்பிட எத்தனித்தது, எப்படியோ தப்பிச்சிட்டேன்...

நாயின் ஓனர் அப்படியே கெத்தா சிரிச்சிகிட்டு போகிறார், அந்த பசுங்கிளிகள் தலை தப்பிரான் புண்ணியம் என ஓடிவிட்டார்கள். நான் பெப்பே என்று வீடு நோக்கி பொறுப்பா நடந்து போனேன்...
--------------------------------
மோடியின் 100 நாய் ஆட்சியைப்பற்றி ஆள் ஆளுக்கு பேசினாலும், 100 நாட்களில் எதுவும் மாற்ற இயலாது என்பதுதான் நிதர்சன உண்மை. இது ஊரில் உள்ள எல்லாருக்கம் தெரியும், ஆனா தெரியாத மாதிரியே காட்டிக்குவாங்க.. நமக்கு தெரிய பெட்ரோல் விலை குறைந்துள்ளது, மற்றபடி விலைவாசிகள் எல்லாம் அப்படியேத்தான் இருக்கின்றன. நதிநீர் இணைப்பு மற்றும் பங்கீடுகளில் இன்னும் தெளிவு இல்லை என்று தான் சொல்லனும். விவசாய உற்பத்தியை அதிகப்படுத்த என்ன செய்யப்போறாங்கன்னு தெரியல.. இதை எல்லாம் ஓராண்டுக்கு பின் தான் என்ன செய்யப்போறாங்கன்னு பார்த்து நமது மதிப்புரைகளை சொல்லலாம்.
---------------------------------------
பாகிஸ்தான் உள்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் எல்லை தாண்டிய தீவரவாத்தில் இருந்து பின்வாங்காமல் இருக்கின்றனர். நம் எல்லைப்பகுதியில் நடந்து வரும் சண்டை நமக்கு முழுவதுமாக தெரியவில்லை, தெரியும் போது தான் நம் வீரர்கள் படும் கஷ்டம் புரியும்.
--------------------------------
30 வருடமாக ப்யூனாவே இருப்பவர் மாத சம்பளம் மாதம் 20 ஆயிரம் ஆனால் 6 பங்களாக்கள், 2 சொகுசு கார்கள், நிறைய பணம் மற்றும் நகைகள் வைத்துள்ளார் எப்படி என்று ஒருத்தருக்கும் தெரியல.. என்னைப்பொறுத்தவரை இவர் ஒருவர் மாட்டி உள்ளார் ஆனால் மாட்டாமல் சுற்றுபவர்கள் இன்னும் நிறைய இருப்பார்கள்.. ப்யூனுக்கு இம்புட்டு என்றால் இன்னும் பெரிய பெரிய அதிகாரிக்கு எல்லாம்.. சொல்ல வேண்டியதில்லை, ரெய்டு போனாத்தான் தெரியும்...

---------------------------------

விபச்சார வழக்கில் நடிகை கைது என்று செய்தி வந்து விட்டால் போதும் நம்ம நேர்மையான பத்திரிக்கைக்காரங்க எல்லாம் அந்த நடிகை போட்டோவ எடுத்து வாழ்க்கை வரலாற்றை எடுத்து, எல்லாத்தையும் கலந்து மசாலா படம் மாதிரி பெரிய செய்தியாக போட்டு அன்றைய விற்பனையை உயர்த்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள் இந்த நேர்மயாளர்கள். 

உடம்பை விற்று அந்த காசில் தன் வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்ற மனசாட்சியே இல்லாமல் செய்தியை போடும் இவர்களை எல்லாம் என்னத்த சொல்ல.

---------------------------------
 
 வீட்டில் பொஞ்சாதி மற்றும் மச்சினிச்சிகளோடு பேசும் போது,  வெளியே போக நேரிடும் போது எங்க போறீங்க என்பார்கள், நான் கிண்டலாக சரக்கடிக்க போகிறேன் என்பேன், ஒரு நாள் சாராயம் குடிக்கப்போகிறேன் என்பேன், அவர்களும் அதற்கு நக்கல் பதில் விட்டு சென்று விடுவர்.

சமீபத்தில் உறவினர்கள், குடும்பத்தில் பெரியவர்கள் சிலர் பத்திரிக்கை கொடுப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளனர். என்னையு விசாரிச்சு விட்டு எனது மகனிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின் எங்கடா உங்க அப்பா என்று மகனிடம் கேட்க அவன் எங்கப்பா சாராயம் குடிக்க போய்ட்டார் என்று ஒரே போட போட்டுத்தள்ளிட்டான். பேசாமல் இருந்த அவர்கள் புறப்படும் போது நான் வர, வந்திருந்த ஒவ்வொருவரும் தனித்தனியாக என்னிடம் பேசி தாளிச்சு எடுத்துவிட்டனர். 

பையன் பெரிசாகிட்டான் இப்பபோய் இப்படி குடிக்கலாமா என்றும், வாரத்தில் ஒரு நாள் மட்டும் குடி என்று இன்னொருவரும் ஆக மொத்தம் எனக்கு தினமும் குடிக்கும் குடிகாரன் என்ற பட்டம் மட்டும் தரவில்லை.

பையன் முன்னாடி பேசக்கூடாது, அப்படியே பேசினாலும் தப்பா பேசினோம் இப்படி பன்னு வாங்கி அலையவேண்டியது தான்...