Friday, September 25, 2015

லெக்கின்ஸ்ம் சங்கவியும்...



எப்பவும் போல தங்கமணியை அழைக்க மாலை வேளையில், மாலை என்பதை விட பாதி சூரியன் மறைந்தும் மறையாமலும், இருட்டியும் இருட்டாமலும் இருக்கும் ஓர் அற்புதமான தருணம் அந்த தருணத்தில் அவினாசி ரோட்டில் லஷ்மி மில்ஸ் சந்திப்பில் சில நிமிடங்கள் நின்றாலே இன்னும் சில நிமிடம் இங்கே கிடைக்காதா? என்பது போல ஏக்கப்பெருமூச்சு விடும் அளவிற்கு கண்ணிற்கும் மனதிற்கும் குளிர்ச்சியான இடம் லஷ்மி மில்ஸ் ஜங்சன் என்றும் சொல்லலாம்..

இப்படி ஓர் இடம் இருப்பதால் தான் தினமும் தங்கமணியை மாலை வேளையில் அழைக்க தவறாமல் ஆஜர் ஆகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பில்லை...

அந்த அற்புதான தருணத்தில் தான் ரொம்ப செவப்பு என்றும் சொல்ல முடியாது, ஆனால் மாநிறமும் இல்லாமல் ஒரு பாவை என்னை கடக்க முயன்றார். கொஞ்சம் கூர் முகம், கோனக்காய் போன்ற வளைந்த மூக்கும், பிறை போல இருந்த உதட்டின் மேல் நட்சத்திரம் போல மச்சம். ப்யூட்டி பார்லர் போகாத புருவமும் அமைந்த அந்த பாவை அழகு என்று சொல்லமுடிய வில்லை ! இல்லை என்றும் மறுக்க இயலவில்லை!! பட் பிடிச்சிருந்தது 11

ஒரு நிமிடம் அவள் கடக்கையில் இம்புட்டு தாங்க பார்க்க முடிந்தது. கடந்தது சென்றவளை மீண்டும் திரும்பிப்பார்த்தேன் அவள் அணிந்திருந்த அந்த ப்ளு கலர் டாப்ஸ் அந்த கொஞ்சூண்டு அழகிற்கு இன்னும் அழகை சேர்த்தது. அநேகமாக 3/4 என்று நினைக்கிறேன். டாப்ஸ்க்கு கீழே உடை அணிந்திருந்தாளோ என்ற அளவிற்கு சந்தேகப்படும்படியான ஸ்க்கின் கலர் லெக்கின்ஸ் அமைந்திருந்தது. அந்த அந்தி மாலை நேரத்தில் அந்த இடத்தில் அவளை கடந்தவர்களுக்கு நிச்சயம் அந்த லெக்கின்ஸ் கலவரப்படுத்தி இருக்காது. அம்புட்டு நேர்த்தியான உடை அணிந்திருந்தது வெகுமாக கவர்த்திழுத்தது என்னை...

இவ்வளவு அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் பராக்கு பார்த்து கொண்டு இருந்த என்னை ஒரு கை தோளை தட்டியது, திரும்பி பார்த்தேன் தங்கமணி... ஙே ஙே என்று ஒரு சிரிப்பை உதறிவிட்டு கம்முன்னு வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்து வீடு வந்து திரும்பும் போது மீண்டும் பார்த்தேன் அந்த ப்ளு கலர் டாப்சை. அப்படியே மனசு கோவைக்குற்றாலத்தில் கவுந்தடிச்சு விழுவது போல உணர்ந்தது...

Friday, September 4, 2015

விடியற்காலை அலப்பறைகள்...

கோழி கூவியும் கூவாமலும் இருக்கும் அந்த விடியற்காலை வேலையில் சென்னையில் புறப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸ் கோவையை நோக்கி சீரிப்பாய்ந்து வந்தது. உள்ளே முக்கால் உறக்கத்தில் குடும்பத்தோடு உட்கார்ந்திருந்தேன் நான்.

கோவை ஜங்சனில் இறங்கினால் மூட்டை முடிச்சுக்களை எல்லாம் நிறைய நேரம் சுமந்து நடந்து வெளியே வரவேண்டும் அதுவும் இல்லாமல் கூட்டம் வேறு அம்மும். இந்த முறை லக்கேஜ் மூட்டையே நாலு ஆனாதால் போர்ட்டர் வெச்சுக்கலாமா என்று தங்கமணியிடம் கேட்டேன், அவளின் பார்வை அப்ப நீ எதுக்கு இருக்கிறாய் என்று கேட்பது போல இருந்தது. சரின்னு கம்முன்னு இருந்துவிட்டேன்.

இரயில் டப்புன்ன ஒரு ப்ரேக் போடும் போது எனக்கு ஓரு ஐடியா தோன்றியது பேசாமல் வடகோவையில் இறங்கி ஆட்டோ பிடிச்சு போய்விடலாம் என்று, நீண்ட நேரம் நடக்கவும் தேவையில்லை, போர்ட்டர் வேலையும் நமக்கு மிச்சம் என்று மனது குத்தாட்டம் போட்டது. சரி என்று தங்கமணியிடம் அனுமதி வாங்கி வடகோவையில் இறங்கினேன்.

இறங்கி மெதுவாக வரும் போது முதல் ஆட்டோகாரர் வந்தார் பாப்பநாயக்கன் பாளையம் போகனும் என்றேன் 170 ரூபாய் என்றார். என்னங்க 170யா என்று கேட்டதற்கு ஆமாங்க எவ்வளவு நேரம் போகனும், வழியில், போக்குவரத்து நெறிசல் வேறு இருக்கும் என்றார் (விடியற்காலை 5 மணிக்கு) சிரிச்சிகிட்டே நடந்தேன், அடுத்தவர் வந்தார், 150 என்றார் 100 என்றால் வருகிறேன் என்றேன்.. கட்டாது கட்டாது என்று நகர்ந்துவிட்டார்.

அதற்குள் நெட்டை ஆன் செய்து OLA வில் கார் புக் செய்தேன். ஸ்டேசனை விட்டு வெளியே வருவதற்குள் கார் வந்துவிட்டது, கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் தான் வண்டி வந்துவிட்டது. வடகோவையில் இருந்து பாப்பநாயக்கன் பாளையம் வருவதற்கு நம்புங்கள் மக்களே 65 ரூபாய் தான் பில் வந்தது. 170 எங்கே 65 எங்கே என்று சொல்லிகிட்டே வந்தேன்.

இப்போது OLA நெட் அப்ளிகேசன் டவுன்லோடு செய்து கொண்டு வண்டி புக் செய்யும் போது அதிக பட்சம் 5 நிமிடங்களில் வண்டி வந்துவிடுகிறது. ( நேற்று சென்னையில் சுற்றும் போது அப்படித்தான்) குறைந்த பட்சம் இத்தனை கிலோ மீட்டர் இன்று டெக்னாலஜி நிறைய வளர்ந்து விட்டது, எல்லாருக்கும் எல்லாம் தெரியவில்லை என்றாலும் கொஞ்சமாவது தெரியும், இன்னும் இத்தனை கொடுங்க, அத்தனை கொடுங்க என்று சொல்லும் வண்டியில் மக்கள் நிச்சயம் ஏறுவதை தவிர்க்கத்தான் செய்வார்கள்.. இனியாவது யோசிப்பார்களா??

Tuesday, September 1, 2015

போகிற போக்கில்...

காலை வேலை கொஞ்சம் குளிராக இருந்தாலும், அலுவலகம் அவசரம், டென்சன் என்று நேரம் போவதே தெரியாது வீட்டில். நேரம் ஆன பின்பு அரக்க பறக்க ஒடியாந்து பேருந்து ஏறுவது வாரத்தில் 4 நாட்களாவது நடக்கும், இது தான் இன்றைய அசுர வேகத்தின் நிலை.

இப்படி அவசர கதியில் போய்க்கொண்டு இருக்கும் போது போன் வந்தால் நம்மா ஆட்கள் கம்முன்னு இருப்பாங்களா மாட்டாங்க. சொறங்கு புடிச்சவன் கையும் செல்போன் புடிச்சவன் கையும் ஒன்னு தான். சொறங்கு புடிச்சவன் சொறியுவான், செல்போன் பிடிச்சவன் பேசுவான், இல்ல சாட்டிங், பேஸ்புக், வாட்ஸ் அப்புன்னு பாத்துகிட்டே இருப்பான். எதுக்கால ஒருத்தன் செத்து கிடந்தாலும் அவனோடு செல்பி எடுத்து விட்டுதான் காப்பாத்துவான் இது தான் இன்றைய நிலைமை...

இப்படி நிலமையில் தான இன்று பையனை பள்ளியில் இறக்கிவிட்டு அலுவலகம் நோக்கி வந்தேன். நான் சிக்னலில் சிக்காமல் செல்ல சந்து பொந்துகளில் புகுந்து வருவேன். அவ்வாறு ஒரு சாலையில் புகுந்து வரும் போது என் முன்னே ஒருவர் செல்போனை கையில் பிடிச்சு பார்த்துக்கொண்டே ஒத்தக்கையில் தனது இரு சக்கர வாகனத்தி இயக்கினார். அவரு நேரம் உச்சத்தில் இருக்கும் போல அவரைத் முந்தி சென்ற இருவர் திட்டிக்கொண்டு சென்றனர். நம்ம ஆளு போடச்செர்த்தான் என்று திட்டிவிட்டு ஒரு கையில் போனும், ஒரு கையில் வாகனம், முன்னாடி மகன் வேறு அமர்ந்திருந்தான்.

எப்பவும் ஒரே மாதிரி போகதல்லவா, இவரு ஒத்த கையில் வண்டியில் போவாருன்னு நாய்க்கு தெரியுமா என்ன வேகமாக வந்த ஒரு பெண் நாயை ஆண் நாய்கள் துரத்தி வந்தது, வந்த வண்டி நாய் இவர் வாகனத்தில் மோத அவசரதத்தில் செல்போனை கீழே போடாமல் மனிதன் வண்டிய கீழே போட்டுட்டார். இவர் விழுந்தது இல்லாமல் இவரின் மகனும் விழுந்தான்.
கீழே விழுந்து எழுந்தவர் முதலில் மகனுக்கு கை கொடுக்காமல் செல்போனை தேடினார். மகனை விட செல்போன் தான் முக்கியமா போச்சு என்று அங்கிருந்தவர்கள் ஆளுக்கு நாளு வார்த்தை வீச மனிதன் செல்போனை பாத்துகிட்டே வண்டிய உதைக்கிறார்...

எத்தனை விழிப்புணர்வாக சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கன் இன்னும் இங்கு இருக்கத்தான் செய்கின்றன...

////////////////////////////////////////////

மாலை நேரங்கள் பரபரப்பான நேரமாகிவிட்டது இப்போது எல்லாம், அலுவலகம் முடிந்து அடிச்சி பிடிச்சு இருக்கின்ற வாகன நெறிசலை தாண்டி வீட்டுக்கு வருவதற்குள் டப்பா டேன்சாடிடும். சென்னை நெறியசலை ஒப்பிடுகையில் எங்க ஊர் நெரிசல் சப்பை மேட்டர் தான் இருந்தாலும் எங்களுக்கு அதுவே பெரும் பாடுதான்.

நண்பர் ஒருவரின் மகனின் பிறந்தநாள் விழாவிற்கு செல்ல வேண்டும் என்பதால் வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்து, அடிச்சி பிடிச்சு மகனையும், மனைவியையும் ஆழைத்து சென்றேன். நகர வாழ்க்கையை பொறுத்த வரை இந்த மாதிரி விழாக்ளில் தான் பல நண்பர்களை பார்க்க இயலும் அதனால் செல்ல அதிகம் ஆசைப்படுவேன்..

எப்போதும் வேலை வீடு, வார இறுதியில் ஊர், அப்பாவிற்கு மருத்துவமைன அழைத்து செல்வது என்று ஏகப்பட்ட வேலைகளோடு தான் ஊருக்கு செல்வேன். எங்கும் சிரிச்சு பேசி மகிழ அதிக நேரங்கள் கிடைப்பதில்லை. இரண்டு நாள் விடுமுறையும் பஞ்சாக பறந்துவிடும்.

இந்த பிறந்தநாள் விழாக்கள் எல்லாம் எனக்கு புதிய ஒன்று. கிராமத்தில் பிறந்தநாளுக்க கோவிலுக்க போவோம் பக்கத்து வீடுகளுக்கு மிட்டாய் கொடுத்து ஆசிர் வாதம் வாங்குவோம் அம்புட்டுத்தான். ஆனால் இன்று மிகப்பெரிய ஓட்டல்களில் சுவையான உணவோடு மிகச்சிறப்பாக, கையிறுப்பு கரையும் வகையில் கொண்டாடுகின்றனர்..

இந்த விழாவில் சென்று நண்பர்களிடம் பேசும் போது 5 நிமித்திற்கு மேல் ஒருவரிடமும் பேச இயலவில்லை, எனக்கு வீடு தொலைவு என்றும், இராத்திரி கிளைண்ட கால் இருக்கிறது என்றும், சீக்கிம் போகனும் நாளை பையனுக்கு பேன்சி டிரஸ் போட்டி இருக்கிறது என்று எல்லாரும் காலில் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றனர்..

என் பங்கிற்கு நானும் புதிய நண்பர்களோடு பேசி, பரிசுப்பொருளைக்கொடுத்து, ஓட்டல்காரர்கள் அழைத்து கையில் கொடுத்த தட்டை ஏந்தி அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்...

அன்று அந்த விழாவில் நடந்தவற்றை எல்லாம் அசைபோட்டு பார்த்தேன், முழுக்க முழுக்க செயற்கையான சிரிப்பு, செயற்கையான உணவு, செயற்கையான வாழ்த்து என்று அனைத்தையும் செயற்கையாகவே உணர்கிறேன்..