Tuesday, September 1, 2015

போகிற போக்கில்...

காலை வேலை கொஞ்சம் குளிராக இருந்தாலும், அலுவலகம் அவசரம், டென்சன் என்று நேரம் போவதே தெரியாது வீட்டில். நேரம் ஆன பின்பு அரக்க பறக்க ஒடியாந்து பேருந்து ஏறுவது வாரத்தில் 4 நாட்களாவது நடக்கும், இது தான் இன்றைய அசுர வேகத்தின் நிலை.

இப்படி அவசர கதியில் போய்க்கொண்டு இருக்கும் போது போன் வந்தால் நம்மா ஆட்கள் கம்முன்னு இருப்பாங்களா மாட்டாங்க. சொறங்கு புடிச்சவன் கையும் செல்போன் புடிச்சவன் கையும் ஒன்னு தான். சொறங்கு புடிச்சவன் சொறியுவான், செல்போன் பிடிச்சவன் பேசுவான், இல்ல சாட்டிங், பேஸ்புக், வாட்ஸ் அப்புன்னு பாத்துகிட்டே இருப்பான். எதுக்கால ஒருத்தன் செத்து கிடந்தாலும் அவனோடு செல்பி எடுத்து விட்டுதான் காப்பாத்துவான் இது தான் இன்றைய நிலைமை...

இப்படி நிலமையில் தான இன்று பையனை பள்ளியில் இறக்கிவிட்டு அலுவலகம் நோக்கி வந்தேன். நான் சிக்னலில் சிக்காமல் செல்ல சந்து பொந்துகளில் புகுந்து வருவேன். அவ்வாறு ஒரு சாலையில் புகுந்து வரும் போது என் முன்னே ஒருவர் செல்போனை கையில் பிடிச்சு பார்த்துக்கொண்டே ஒத்தக்கையில் தனது இரு சக்கர வாகனத்தி இயக்கினார். அவரு நேரம் உச்சத்தில் இருக்கும் போல அவரைத் முந்தி சென்ற இருவர் திட்டிக்கொண்டு சென்றனர். நம்ம ஆளு போடச்செர்த்தான் என்று திட்டிவிட்டு ஒரு கையில் போனும், ஒரு கையில் வாகனம், முன்னாடி மகன் வேறு அமர்ந்திருந்தான்.

எப்பவும் ஒரே மாதிரி போகதல்லவா, இவரு ஒத்த கையில் வண்டியில் போவாருன்னு நாய்க்கு தெரியுமா என்ன வேகமாக வந்த ஒரு பெண் நாயை ஆண் நாய்கள் துரத்தி வந்தது, வந்த வண்டி நாய் இவர் வாகனத்தில் மோத அவசரதத்தில் செல்போனை கீழே போடாமல் மனிதன் வண்டிய கீழே போட்டுட்டார். இவர் விழுந்தது இல்லாமல் இவரின் மகனும் விழுந்தான்.
கீழே விழுந்து எழுந்தவர் முதலில் மகனுக்கு கை கொடுக்காமல் செல்போனை தேடினார். மகனை விட செல்போன் தான் முக்கியமா போச்சு என்று அங்கிருந்தவர்கள் ஆளுக்கு நாளு வார்த்தை வீச மனிதன் செல்போனை பாத்துகிட்டே வண்டிய உதைக்கிறார்...

எத்தனை விழிப்புணர்வாக சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கன் இன்னும் இங்கு இருக்கத்தான் செய்கின்றன...

////////////////////////////////////////////

மாலை நேரங்கள் பரபரப்பான நேரமாகிவிட்டது இப்போது எல்லாம், அலுவலகம் முடிந்து அடிச்சி பிடிச்சு இருக்கின்ற வாகன நெறிசலை தாண்டி வீட்டுக்கு வருவதற்குள் டப்பா டேன்சாடிடும். சென்னை நெறியசலை ஒப்பிடுகையில் எங்க ஊர் நெரிசல் சப்பை மேட்டர் தான் இருந்தாலும் எங்களுக்கு அதுவே பெரும் பாடுதான்.

நண்பர் ஒருவரின் மகனின் பிறந்தநாள் விழாவிற்கு செல்ல வேண்டும் என்பதால் வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்து, அடிச்சி பிடிச்சு மகனையும், மனைவியையும் ஆழைத்து சென்றேன். நகர வாழ்க்கையை பொறுத்த வரை இந்த மாதிரி விழாக்ளில் தான் பல நண்பர்களை பார்க்க இயலும் அதனால் செல்ல அதிகம் ஆசைப்படுவேன்..

எப்போதும் வேலை வீடு, வார இறுதியில் ஊர், அப்பாவிற்கு மருத்துவமைன அழைத்து செல்வது என்று ஏகப்பட்ட வேலைகளோடு தான் ஊருக்கு செல்வேன். எங்கும் சிரிச்சு பேசி மகிழ அதிக நேரங்கள் கிடைப்பதில்லை. இரண்டு நாள் விடுமுறையும் பஞ்சாக பறந்துவிடும்.

இந்த பிறந்தநாள் விழாக்கள் எல்லாம் எனக்கு புதிய ஒன்று. கிராமத்தில் பிறந்தநாளுக்க கோவிலுக்க போவோம் பக்கத்து வீடுகளுக்கு மிட்டாய் கொடுத்து ஆசிர் வாதம் வாங்குவோம் அம்புட்டுத்தான். ஆனால் இன்று மிகப்பெரிய ஓட்டல்களில் சுவையான உணவோடு மிகச்சிறப்பாக, கையிறுப்பு கரையும் வகையில் கொண்டாடுகின்றனர்..

இந்த விழாவில் சென்று நண்பர்களிடம் பேசும் போது 5 நிமித்திற்கு மேல் ஒருவரிடமும் பேச இயலவில்லை, எனக்கு வீடு தொலைவு என்றும், இராத்திரி கிளைண்ட கால் இருக்கிறது என்றும், சீக்கிம் போகனும் நாளை பையனுக்கு பேன்சி டிரஸ் போட்டி இருக்கிறது என்று எல்லாரும் காலில் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றனர்..

என் பங்கிற்கு நானும் புதிய நண்பர்களோடு பேசி, பரிசுப்பொருளைக்கொடுத்து, ஓட்டல்காரர்கள் அழைத்து கையில் கொடுத்த தட்டை ஏந்தி அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்...

அன்று அந்த விழாவில் நடந்தவற்றை எல்லாம் அசைபோட்டு பார்த்தேன், முழுக்க முழுக்க செயற்கையான சிரிப்பு, செயற்கையான உணவு, செயற்கையான வாழ்த்து என்று அனைத்தையும் செயற்கையாகவே உணர்கிறேன்..

2 comments:

  1. உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாசமே
    அணையாத தீபமாய் சுடரென்றும் வீசுமே
    நெஞ்சில் உண்டான அன்பையே துண்டாடி வம்பையே
    உறவாகத் தந்திடும் சிலர் சொல்லை நம்பியே
    வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

    ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
    வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

    ReplyDelete