Friday, September 4, 2015

விடியற்காலை அலப்பறைகள்...

கோழி கூவியும் கூவாமலும் இருக்கும் அந்த விடியற்காலை வேலையில் சென்னையில் புறப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸ் கோவையை நோக்கி சீரிப்பாய்ந்து வந்தது. உள்ளே முக்கால் உறக்கத்தில் குடும்பத்தோடு உட்கார்ந்திருந்தேன் நான்.

கோவை ஜங்சனில் இறங்கினால் மூட்டை முடிச்சுக்களை எல்லாம் நிறைய நேரம் சுமந்து நடந்து வெளியே வரவேண்டும் அதுவும் இல்லாமல் கூட்டம் வேறு அம்மும். இந்த முறை லக்கேஜ் மூட்டையே நாலு ஆனாதால் போர்ட்டர் வெச்சுக்கலாமா என்று தங்கமணியிடம் கேட்டேன், அவளின் பார்வை அப்ப நீ எதுக்கு இருக்கிறாய் என்று கேட்பது போல இருந்தது. சரின்னு கம்முன்னு இருந்துவிட்டேன்.

இரயில் டப்புன்ன ஒரு ப்ரேக் போடும் போது எனக்கு ஓரு ஐடியா தோன்றியது பேசாமல் வடகோவையில் இறங்கி ஆட்டோ பிடிச்சு போய்விடலாம் என்று, நீண்ட நேரம் நடக்கவும் தேவையில்லை, போர்ட்டர் வேலையும் நமக்கு மிச்சம் என்று மனது குத்தாட்டம் போட்டது. சரி என்று தங்கமணியிடம் அனுமதி வாங்கி வடகோவையில் இறங்கினேன்.

இறங்கி மெதுவாக வரும் போது முதல் ஆட்டோகாரர் வந்தார் பாப்பநாயக்கன் பாளையம் போகனும் என்றேன் 170 ரூபாய் என்றார். என்னங்க 170யா என்று கேட்டதற்கு ஆமாங்க எவ்வளவு நேரம் போகனும், வழியில், போக்குவரத்து நெறிசல் வேறு இருக்கும் என்றார் (விடியற்காலை 5 மணிக்கு) சிரிச்சிகிட்டே நடந்தேன், அடுத்தவர் வந்தார், 150 என்றார் 100 என்றால் வருகிறேன் என்றேன்.. கட்டாது கட்டாது என்று நகர்ந்துவிட்டார்.

அதற்குள் நெட்டை ஆன் செய்து OLA வில் கார் புக் செய்தேன். ஸ்டேசனை விட்டு வெளியே வருவதற்குள் கார் வந்துவிட்டது, கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் தான் வண்டி வந்துவிட்டது. வடகோவையில் இருந்து பாப்பநாயக்கன் பாளையம் வருவதற்கு நம்புங்கள் மக்களே 65 ரூபாய் தான் பில் வந்தது. 170 எங்கே 65 எங்கே என்று சொல்லிகிட்டே வந்தேன்.

இப்போது OLA நெட் அப்ளிகேசன் டவுன்லோடு செய்து கொண்டு வண்டி புக் செய்யும் போது அதிக பட்சம் 5 நிமிடங்களில் வண்டி வந்துவிடுகிறது. ( நேற்று சென்னையில் சுற்றும் போது அப்படித்தான்) குறைந்த பட்சம் இத்தனை கிலோ மீட்டர் இன்று டெக்னாலஜி நிறைய வளர்ந்து விட்டது, எல்லாருக்கும் எல்லாம் தெரியவில்லை என்றாலும் கொஞ்சமாவது தெரியும், இன்னும் இத்தனை கொடுங்க, அத்தனை கொடுங்க என்று சொல்லும் வண்டியில் மக்கள் நிச்சயம் ஏறுவதை தவிர்க்கத்தான் செய்வார்கள்.. இனியாவது யோசிப்பார்களா??

3 comments:

  1. ஹா... ஹா...
    170 - 65... எவ்வளவு மிச்சம்...
    மக்களிடம் கட்டாயம் மாற்றம் வந்துவிடும்...

    ReplyDelete