Thursday, May 31, 2012

கோவை மினி பதிவர் சந்திப்பு 31.05.2012

பதிவர் சந்திப்பு கோவையில் தான் முதன் முதலாக நடைபெற்றது என்று படித்துள்ளேன். கோவை பதிவுலக முன்னோடிகள்  பலர் தற்போது அதிகம் எழுதுவதில்லை புதிதாக எழுதும் நண்பர்கள் எல்லாம் ஒன்றினைவோம் என்று நான், கோவை நேரம் ஜீவா, தமிழ்பேரண்ட் சம்பத் ஆகியோர் பேசும் போது இந்த உரையாடலும் வந்தது. உடனே சம்பத் கோவை பதிவர்களுக்கு என் www.kovaibloggers.in என்ற வெப்சைட்டை உருவாக்கினார். மேலும் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் உடுமலை போன்ற பகுதியில் உள்ள நண்பர்கள் எல்லாம் ஒன்றினைந்து ஒரு பதிவர் குழுமம் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்து ஆரம்பித்தோம். அதில் வெற்றியும் கண்டோம்.

இரண்டு நாட்களில் 40 நண்பர்கள் இணைந்தனர் இதில் பேஸ்புக் நண்பர்களையும் அழைத்தோம் ஆனால் அவர்கள் யாரும் இணையவில்லை. இன்றும் நிறைய பதிவர்கள் இணையாமல் உள்ளனர் அவர்களும் இணைவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம். தற்போது கிட்டத்தட்ட 50 பதிவர்கள் நண்பர்களாக எங்கள் வட்டத்தில் இணைந்துள்ளனர் இது மகிழ்ச்சியான ஒன்று தான்...

குழும பதிவர்கள் எல்லாம் பரஸ்பர அறிமுகம் வேண்டும் என்பதற்காக சிறு பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று கலந்து ஆலோசிக்கும் போது இரண்டு மூன்று தேதிகள் தள்ளிப்போய்கொண்டே இருந்தது ஆனால் சந்திதித்த பாடில்லை இதனால் முதலில் பல தேதிகள் அறிவித்து தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஒரு மினி பதிவர் சந்திப்பு வேண்டும் என்று வாரநாட்கள் அல்லாமல் இடைப்பட்ட நாளில் வைக்கலாம் என்று முடிவெடுத்து மே 31 அன்று வைக்கலாம் என்று வைத்தோம். இச்சந்திப்பில் நாங்கள் எதிர்பார்த்தது 10 பேர் தான் என்று நினைத்தோம் ஆனால் வந்தது இருந்தது 17 பேர் இது மிக்க மகிழ்ச்சியான ஒன்று. 

இந்நிகழ்ச்சிக்கு முடிந்தவர்கள் வரவும் வர இயலாதவர்கள் அடுத்த சந்திப்பில் நிச்சயம் சந்திக்கலாம் என்று அறிவித்திருந்தோம் அதே போல் அடுத்த கோவை குழும நண்பர்கள் சந்திப்பு விரைவில் நடக்க உள்ளது அதில் கலந்து கொள்ள கோவையைச் சேர்ந்த பதிவர்களை அன்புடன் வரவேற்கிறோம். இது வரை உறுப்பினர் ஆகாத நண்பர்கள் kovaibloggers@gmail என்னும் முகவரிக்கு மின் அஞ்சல் செய்யவும்...

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

சங்கவி சதீஸ் 9843060707
சம்பத் 9965577404
ஜீவா 9894401474

31.05.2012 அன்று மினி பதிவர் சந்திப்புக்கு வந்திருந்த பதிவர்கள்

1. பழனி.கந்தசாமி
2. வின்சென்ட்
3. மூளிகை வளம் குப்புசாமி
4. எஸ்ஆர் சேகர்
5. கோவை சக்தி
6. மனசாட்சி
7. தமிழ் பேரண்ட்ஸ் சம்பத்
8. வீடு சுரேஷ்
9. கலாக்குமரன் செந்தில்
10. உலக சினிமா ரசிகன் பாஸ்கரன்
11.விஜிராம்
12.அகிலா
13.கோவை. மு. சரளா
14.ராமநாதன்
15.கோவை நேரம் ஜீவா
16.சங்கவி
17.இரவு வானம் சுரேஷ்

அடுத்து வரும் சந்திப்பில் கோவையைச் சேர்ந்த 50 பதிவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்...

கோவை பதிவர் மினி சந்திப்பு புகைப்படங்கள்..

  எஸ்.ஆர் சேகர், வின்சென்ட் இவர்களுடன் சங்கவி சதீஸ்
கோவை சக்தி, எஸ்.ஆர் சேகர், கலாக்குமரன், பழனி.கந்தசாமி
கலாக்குமரன்


முகம் தெரியாதவர் நண்பர் மனசாட்சி.

கோவை நண்பர்களே மீண்டும் சந்திப்போம் விரைவில்... அடுத்து அனைத்து ஊர் நண்பர்களும் விரைவில் சந்திப்போம் மெகா பதிவர் சந்திப்பில்.....

Wednesday, May 30, 2012

அஞ்சறைப்பெட்டி 31.05.2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து இன்று நாடு முழுவதும் பந்த் அறிவித்துள்ளது பாஜக. ஆனால் தமிழகத்தில் வழக்கம் போல் எந்த பிசிறும் இல்லாமல் அனைத்து வாகனங்களும் சென்று கொண்டு இருக்கின்றன. நிறைய இடங்களில் கடைகள் மட்டும் அடைத்துள்ளனர்..

எவ்வளவு விலை உயர்த்தினாலும் நாம் பெட்ரோல் போட்டுத்தான் ஆகவேண்டும். அதனால் இதை அரசியல் கட்சிகள் பெரிதுபடுத்தி விளம்பரம் தான் தேடவேண்டும்... மக்களின் தேவை விலை உயர்ற்றினாலும் சீராக பெட்ரோல் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். முக்கியமாக சென்னை மக்களின் மனநிலை இன்று இதுதான்...

...............................................................................................

ஜீன் 13ல் ஜனாதிபதி தேர்தல் அறிவித்து விட்டது தேர்தல் ஆணையம். இந்த தேர்தல் காங்கிரசுக்கு முக்கியமானது ஏன் என்றால் அவர்கள் நிறுத்திய வேட்பாளர் வெற்றி அடைந்தால் தான் அவர்களின் மெஜாரிட்டி மீது நம்பிக்கை கிடைக்கும். பார்ப்போம் யார் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று ...
...............................................................................................

இந்த முறை கோடை மழையை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கும் போது இன்னும் மழை பொய்க்கவில்லை. எப்படியும் கர்நாடகாவில் தண்ணீர் தரப்போவதில்லை நம்மிடமும் தண்ணீர் இறுப்பு குறைவாக இருக்கிறது இதை வைத்து இனி அரசியல் கட்சிகள் கொஞ்ச நாளைக்கு போரட்டம், பொதுக்கூட்டம் என வரிசையாக நடத்துவார்கள்.. எது நடந்தாலும் இதற்கு ஒரே தீர்வு மழைதான்.. வருணபகவான் கண்திறப்பாரா...

................................................................................................

இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் வித்தியாசமான ஆய்வு ஒன்றை நடத்தினர். மனைவி மற்றும் காதலியை தவிர்த்து மற்றவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்று இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளதொடர்பு வைத்திருந்தால் அது மனரீதியாக குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும். எனவே மேலும் செக்ஸ் உறவில் ஈடுபடும் போது அதிக பதட்டமும், ஆர்வமும் ஏற்படும். இது மாரடப்பை ஏற்படுத்துகிறது என்று அந்த ஆய்வு சொல்கிறது.

அதிலும் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்கள் குடித்து விட்டு உறவில் ஈடுபட்டால் அவர்களை அதிக அளவில் மாரடைப்பு தாக்கும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

செக்ஸ் உறவில் ஈடுபடும்போது சில நேரங்களில் மரணங்கள் நேரிடுவது உண்டு. இதில் மற்றவர்களை விட கள்ளதொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு 3 மடங்கு அதிக மரணங்கள் நிகழ்வதாக தெரிந்தது. 
...............................................................................................

இந்த முறை ஐபிஎல் மேட்சில் கொல்கத்தா பரிசு வாங்கிதை விட அந்த மாநில முதல்வர் அதை விமர்சியாக கொண்டாடியதை ரசிக்க இயலவில்லை இத்தனைக்கும் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் 2 பேர் மட்டுமே விளையாடி உள்ளனர் இதற்கு அரசு சார்பில் விழா எடுத்த பாரட்டப்ட வேண்டிய அவசியமில்லை.. மம்தாவிற்கு இதன் மூலம் என்ன அரசியல் ஆதாயமோ????

...............................................................................................
ஹாலிவுட் பட ஸ்டண்ட் நடிகர் கேரி கானரி. இவர் புகழ்பெற்ற ‘ஹாரிபார்ட்டர்’, ‘சேம்பர் ஆப் சீக்ரட்ஸ்’, ஜேம்ஸ்பாண்டு படமான ‘டை அனதர் டே’ உள்பட ஏராளமான படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார்.

41 வயதாகும் கேரி கானரி ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் இல்லாமல் குதித்து சாதனை படைக்க திட்டமிட்டார். இதற்காக தெற்கு இங்கிலாந்தில் தேம்ஸ் ஆற்றங்கரையோரம் உள்ள ஹென்லே என்ற திறந்தவெளி இடம் தேர்வு செய்யப்பட்டது.

காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் விசேஷ உடை அணிந்து இருந்தார். கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க தரையில் 18,000 அட்டை பெட்டிகளை ‘ரன்வே’ போல் அடுக்கி வைத்து இருந்தனர்.

ஹெலிகாப்டரில் சென்ற கேரி கானரி மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பறந்தபோது 2,400 அடி உயரத்தில் இருந்து பாராசூட் இல்லாமல் கீழே குதித்தார். அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகளில் துல்லியமாக விழுந்தார். இதன் மூலம் உலக சாதனை படைத்தார்.

இந்த சாதனையை பார்க்க ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். கேரி கானரி குதித்ததும் அவர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சாதனையை நேரில் பார்க்க மனைவி விவென்னியும் வந்திருந்தார்.

சாதனைப்பற்றி கேரி கானரி கூறுகையில்,

ஆகாயத்தில் இருந்து பாராசூட்டில் குதிப்பது என்பது நான் நினைத்துப் பார்க்காத சாதனை. தரையில் குதிக்கும்போது புதுவித அனுபவமாக இருந்தது. எனது கணிப்புகள் துல்லியமாக இருந்தது என்றார்.

இந்த சாதனைக்காக கேரி கானரி சுவிட்சர்லாந்தில் ஒரு வாரம் பயிற்சி எடுத்தார். பாராசூட்டுக்கு பதில் ‘ஸ்விங் சூட்’ என்ற நவீன ஆடையை பயன்படுத்தி மலைகளில் பயிற்சியில் ஈடுபட்டார். ஏற்கனவே இவர் தனது 23 வயதில் பாரிஸ் ஈபிள் டவர், லண்டன் ஐ ஆகிய கட்டிடங்களில் இருந்து பாராசூட்டில் குதித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


..................................................................................................

கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக வரும் ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று சர்ச் என்ஜின் இணையதளமான கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை நாங்கள் சரிசெய்து தருகிறோம் என்று உலகம் முழுவதும், மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் பரவவிட்டதை அடுத்து இந்த பிரச்சினை தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களிலிருந்து அரசு கம்ப்யூட்டர்களை பாதுகாப்பதற்காக, சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு வளையம் ஒன்றை அமெரிக்காவின் எப்பிஐ அமைத்தது. ஆனால் அந்த அமைப்பு ஜுலை 9-ம் தேதி அன்று, தனது பாதுகாப்பு வளையத்தை மூட உள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையதள சேவை கிடைக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எப்பிஐ சில மாதங்களாகவே விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வந்தது. அதில் ஒரு இணையதளத்தை பார்க்குமாறும், அதைப்பார்த்தால்தான் தங்கள் கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரிந்து விடும் என்று கூறியிருந்தது. மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் அப்பிரச்னையை எப்படிக் கையாள்வது என்றும் தெரிவித்திருந்தது.

அவ்வாறு வைரசால் பாதிப்புக்கு உள்ளான கம்ப்யூட்டர்கள் ஜுலை 9-ம் தேதிக்குப் பின்னர் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாது என்று கூகுள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.
..................................................................................................

இன்று மணநாள் காணும் அன்பு நண்பர் மதுரை கார்த்திகை பாண்டியனுக்கு எனது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
..................................................................................................

29.05.2012ம் அன்று 2 ம் ஆண்டில் அடி எடுத்து வைத்த என் அன்பும், பாசமும், உயிருமான என் மகன் பிரசன்னாவின் பிறந்தநாளில் முகநூல், வலைப்பதிவு மற்றும் கூகுள்+ ல் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி....


..................................................................................................

முதன் முதலாக கோவையில் தான் பதிவர் சங்கமம் நடந்ததாக படித்தேன் மீண்டும் அனைவரையும்  நான், தமிழ்பேரண்ட்ஸ் சம்த், கோவை நேரம் ஜீவா ஆகியோர் ஒருங்கிணைத்து கோவை பதிவர் குழுமம் என்று ஒன்றை உருவாக்கி இதுவரை கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் என பக்த்து ஊர் நண்பர்களை என 45 பேரை சேர்த்து விட்டோம் இன்று எங்கள் குழும நண்பர்களின் அறிமுக நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்சில் நடைபெறுகிறது  அனைத்து நண்பர்களையும் எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கிறேன் சந்திக்க....

தகவல்
உலகின் அபூர்வ வைரக்கற்களில் மார்ஷியன் இளம் சிவப்பு வைரமும் ஒன்றாகும். இந்த வைரக்கல் நேற்று ஏலம் விடப்பட்டது. இணையத்தளம் மற்றும் போன் மூலம் இந்த ஏலம் நடந்தது. அபூர்வ வைரக்கல் என்பதால் அதை ஏலத்தில் வாங்க கடும் போட்டி நிலவியது.
கடைசியில் தொழில் அதிபர் ஒருவர் அந்த வைரக்கல்லை ஏலம் எடுத்தார். அவர்  98 கோடி ரூபாய்க்கு அந்த வைரக்கல்லை பெற்றுள்ளார். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.
அந்த வைரக்கல் 12 காரட்டுகள், அதாவது சுமார் 2.5 கிராம் எடை கொண்டது. இவ்வகையான வைரம் மிக மிக அரிதானது என்று கூறப்படுகிறது. வட்டவடிவில் இருக்கும் இந்த வகையான ஒரு வைரக்கல் விற்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
1976-ம் ஆண்டு அமெரிக்கா செவ்வாய் கிரகத்துக்கு ஒரு செயற்கை கோளை அனுப்பியதை நினைவு கூறும் வகையிலும், அந்த கிரகத்தின் நிறத்தை குறிக்கும் வகையிலும் இதற்கு மார்ஷியன் வைரம் என்று பெயரிடப்பட்டது.
இதே போன்ற தன்மைகளை கொண்ட மற்றொரு வைரம் பிரிட்டிஷ் அரசி எலிசபெத்துக்கு 1947-ம் ஆண்டு அவரது திருமணத்தின் போது பரிசாக கொடுக்கப்பட்டது. 23.6 காரட் எடை கொண்ட அந்த வைரம் பின்னர் மேலாடையில் அணிந்து கொள்ளும் ஒரு நகையில் பதிக்கப்பட்டது.
வில்லியம்சன் பிங்க் என்றழைக்கப்படும் அந்த வைரம்தான் இப்போதும் உலகளவில் மிகவும் பிரபலமான வைரக்கல் ஆகும்.
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  கோவி என்ற பெயரில் எழுதி வருகிறார். கோவையில் விரிவுரையாளராக பணியாற்றி வரும்  இவரின் கவிதைகள் இளைப்பாரிக்கொள்ள மிகச்சிறந்ததாக இருக்குறது... நீங்களும் இளைப்பாறிக்கொள்ளுங்களேன்...

http://govipoems.blogspot.com/
தத்துவம்

சொற்ப இரண்டு நாட்களிலேயே, நாளை என்பது நேற்று என்றாகி விடுகிறது.


“நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!”

திட்டமிடத் தவறினால் நாம் தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்பது பொருள்.

Thursday, May 24, 2012

கோவையின் சொர்க்கபுரி புரூக்பில்ட்ஸ்..


சென்னை, பெங்களூர் போல இப்போது எங்கள் கோவையிலும் மிகப்பெரிய மால்.. கோவையில் இதுவரை லஷ்மி காப்ளக்ஸ், சேரன் டவர்ஸ் இது தான் பெரிய வணிகவளாகம் இதை விட்டால் தனியாக இருக்கும் துணிகடைகளைத்தான் சொல்வோம்... ஆனால் இப்போது இங்கேயும் பல கடைகளை கடல் போல் கொண்ட மால் புரூக்பீல்ட்ஸ்...

முதலில் ஆர்எம்கேவி தொடங்கிய போது சென்றிருந்தோன் அப்போது அனைத்து தளங்களிலும் கடைகள் அதிகம் இல்லை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இங்கு உள்ள நான்கு தளங்களும்  நிரம்பின. போதாக்குறைக்கு சத்தியம்  தியேட்டர்கள்  என களை கட்டுகிறது புரூக்பீல்ட்ஸ்...


கோவை மக்கள் அதிகம் செல்வது கிராஸ்கட் ரோடு, ஆஎஸ்புரம், ஒப்பனக்கார வீதி என்று சொல்லாம் ஆனால் தற்போது அதிக மக்கள் படையெடுக்கும் இடமாக புரூக்பீல்ட்ஸ் இருக்கிறது இந்த இடத்தை தற்போது கோவையின் சொர்க்கபுரி என்று சொன்னால் மிகையாகது...

கோவையில் இருந்து வெளியில் வேலையில் இருக்கும் யுவன்களும், யுவதிகளும் தங்கள் பெற்றோரை கூட்டி வந்து இதை விட பலமடங்கு பெரிய மால் எல்லாம் சென்னையிலும், பெங்களூரில் இருக்குது என்று பெருமை சொல்லும் போது அந்த பெற்றோர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு இருக்கிறது புரூக்பீல்ட்ஸ்.

 
இரண்டு தளங்களில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், இரண்டு இடங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்து தளம் ( இதற்கு 3 மணி நேரத்துக்கு 20 ரூபாய் இது தனிக்கதை) என்று அனைத்து நிரம்பி வழிகிறது விடுமுறை நாட்களில். அதுவும் இப்போதைய கோடை விடுமுறையில் அள்ளுகின்றனர்.

இங்கு கிடைக்காத பொருளே இல்லை என்னும் அளவிற்கு டெக்ஸ்டைல், மொபைல், டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் என அனைத்தும் மனதை கொள்ளை கொள்கிறது. ( பணத்தையும் தான்) 


புட் பிளாசைத்தான் மிக முக்கியமாக சொல்ல வேண்டும் மூன்றாம் தளத்தில் இடப்பக்கம் எல்லா உணவுவகைகளும் கிடைக்கும் வண்ணம் பல பிரபல கடைகள் அங்கு கடை விரித்துள்ளன.. அதற்கு பக்கத்திலேயே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விளையாட்டுக்கள். ஸ்நோபவுலிங் என ஒரு 5 மணி நேரம் செலவழிக்கலாம் ( பணத்தையும் சேர்த்து தான்).

இங்கு செல்வதற்கு மிக முக்கியமானது வேறென்ன பணம் தான்.. எங்கு சென்றாலும் பணத்தை கட்டி கார்டு வாங்கிக்கொள்ள வேண்டும் என்ன வேண்டுமோ வாங்கிக்கொண்டு ஸ்வைப் செய்துட்டு வந்துகிட்டே இருக்கலாம். இது இங்குள்ள மக்களுக்கு புதிதான ஒன்று தான்..


கோவையில் இருப்பவர்கள் வார இறுதி நாட்களை விட வார நாட்களில் செல்லலாம்.  பாப்கார்ன் ஒன்று 30 ரூபாய்க்கு வாங்கிவிட்டு விண்டோ ஷாப்பிங் செய்வதற்கு அருமையான இடம்...

நிச்சயம் கோவையில் இருந்தால் பார்க்கவேண்டிய இடம்...

Wednesday, May 23, 2012

அஞ்சறைப்பெட்டி 24/05/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 7.54 ஏற்றி இருக்கிறார்கள். எப்போது பெட்ரோல் விலையை ஏற்றினாலும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன அதானல் விலையை உயர்த்தினோம் என்கின்றனர் ஆனால் எண்ணெய் நிறுவனங்களில் வருட வருமானம் பார்த்தால் லாபத்தில் தான் இயங்குகிறது...

மக்களை முட்டாள் ஆக்குவதில் சிரமம் இல்லை இவர்களுக்கு...


பெட்ரோல் விலை ஏற்றத்தின் மூலகம் மகத்தான சாதனை படைத்த காங்கிரஸ் அரசு அடுத்து ஆட்சியை பிடிக்க வாய்ப்பு மிக மிக குறைவு...


பெட்ரோல் விலையை 7.54 ஏற்றி இப்பொழுது எதிர்கட்சிகளின் எதிர்ப்பால் 2.54 குறைக்க வாய்ப்பிருக்கிறது... ( இது கரண்ட்டை கொடுத்து பீசை பிடுங்கும் வேலை)


கடந்த 8 வருட ஆட்சியில் காங்கிரஸ் அரசின் மிகபெரிய சாதனையாக பெட்ரோல் விலையேற்றத்தை கூறி பெருமை பீத்திக்கலாம்...


...............................................................................................


காரில் இருக்கு கருப்பு ஸ்டிக்கரை கிழி கிழி என்று முக்குக்கு முக்கு நம்ம போலீசார் நிறுத்தி அபராதம் என்கின்றனர். சென்னையை அடுத்து இப்போது கோவையிலும் ஸ்டிக்கர் இருக்கக்கூடாது கட்டாயம் எடுக்க வேண்டும் என்கின்றனர்.

ஸ்டிக்கர் எடுக்கும் கடைக்கு சென்றால் 500 ரூபாய் கேட்கின்றனர் ஸ்டிக்கர் கிழிக்க....


ஆக எங்க போனாலும் நம்ம கிட்ட புடுங்குவதிலேயே குறியாக இருக்கின்றனர்..... ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் காரை செக் செய்பவர்களே அந்த ஸ்டிக்கரை கிழித்து விட்டால் புண்ணியமாக போகும்...


...............................................................................................

எப்பவும் முதலில் வேட்பாளரை அறிவித்து வெற்றியை பிடிப்பது தான் அம்மாவின் பாலிசி... இடைத்தோர்தல் போல இப்போது ஜனாதிபதி தேர்தலுக்கும் வேட்பாளரை முன்னிறுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்...

இப்ப நடந்த குரு பெயர்ச்சியால் தொட்டதெல்லாம் அம்மாவுக்குத்தான் வெற்றி என்று சித்தோடு ஜோசியர் சொல்லிட்டாருருருரு....

................................................................................................

சிக்னலில் நிற்கும் போது இடதுபுறம் ப்ரி லெப்ட் என்று இருக்கும் ஆனால் சிக்னலில் நிற்கும் நம் மக்கள் அந்த இடது புறவழியையும் அடைத்து தான் நிற்கின்றனர்... 


சாலை விதிகளை கடைபிடிக்காத நமக்கு காவல் துறை அபராதம் விதிக்கும் போது மட்டும் எகிறும் நாம் இது போன்ற சாலை விதிகளை கடைபிடிப்பதன் மூலம் போக்குவரத்து நெறிசலை குறைக்கலாமே.

சாலை விதிகளை சரியாக கடைபிடிக்காததால் தான் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன என்று தெரிந்தும் கடைபிடிக்காத நாம் படித்திருந்தும் முட்டாள்களே...

...............................................................................................

எவ்வளவு தான் படிச்சு படிச்சு சொன்னாலும் நம்மாளுக விடிய விடிய ஐபிஎல் பார்ப்பதை விட மாட்டார்கள்.. அங்கு மேட்சை பிக்ஸ் செய்து விட்டு விளையாடுகின்றனர். இவ்வாறு செய்திகள் வெளியாகி அது உண்மை என வருமானவரித்துறையினர் அங்கு  ரெய்டு நடத்துகின்றனர் என்று தெரிந்தும் மெனக்கெட்டு அந்த மேட்சை பார்ர்பபது வருத்தத்திற்கு உரியது...

அநேகமாக அந்த முறையியும் சென்னை அணி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்று காலையில் நண்பர்கள் பேசிக்கொண்டனர் ஒரு வேளை அவர்கள் அதிகம் பிக்சிங் செய்திருப்பார்களோ??? ##  டவுட்டு


...............................................................................................

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் கிரீன்ஸ் பேட்டையை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் கிரீஷ்குமார் (வயது 25) தொலைதூர கல்வியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கிரீஷ்குமார் சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அரசு வங்கிக்கு வந்தார். அங்கு  செலானை  பூர்த்தி செய்து  ரூ. 1600/-ஐ வங்கியில் செலுத்தினார். ரூபாய் நோட்டுக்களை வாங்கிய வங்கி கேஷியர் ரூபாய் நோட்டுகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

உடனே கிரிஷ்குமாரிடம் கம்ப்யூட்டரில் கோளாறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் உட்காருங்கள் என கூறி விட்டு ரூபாய் நோட்டுகளை  சோதனை செய்தார். அப்போது அது கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்  கணேசன் மற்றும் போலீசார்  விரைந்து  சென்று அந்த வாலிபரை  பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கிரிஷ்குமார் சித்தூரில் ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வந்ததும் அந்த அனுபவத்தில் தனது  வீட்டிலேயே  ஸ்கேன் மிஷின் மற்றும் பிரிண்டர்களை கொண்டு  கள்ள நோட்டுகளை  தயார் செய்து  அதனை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து  போலீசார் கிரிஷ்குமாரின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டின் இருந்து லேப்-டாப் நவீன ஸ்கேன் மிஷின் மற்றும் பிரிண்டர்களையும் அங்கிருந்த 100 ரூபாய் கள்ள நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து  போலீசார்  கிரிஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் கள்ள நோட்டுகள் எங்கெல்லாம்  புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

..................................................................................................

கொழுப்பு அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சத்து ஏற்படும். எனவே சாப்பாட்டில் அவற்றை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  
தற்போதோ அதுமட்டும் ஒரு காரணம் அல்ல. மிகவும் காலதாமதமாக உணவு சாப்பிட்டாலும்கூட உடலில் கொழுப்பு சத்து சேர்ந்து விடும் என கண்டறியப்பட்டுள்ளது.  
இதை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சால்க் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் இந்திய ஆராய்ச்சியாளர் டாக்டர் சச்சிதானந்தா பாண்டே கண்டுபிடித்துள்ளார். இவரது தலைமையிலான குழுவினர் இதுகுறித்து எலிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவற்றுக்கு தாமதமாக தீனி போட்டு சாப்பிட வைத்தனர்.
அவ்வாறு உணவு தின்ற எலிகளுக்கு கொழும்பு சத்து அதிகரித்து இருந்தது. அதே போன்றுதான் மனிதர்களின் உடலிலும் கொழுப்பு சத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓரு குறிப்பிட்ட நேரத்தில்தான் கல்லீரல் மற்றும் குடல் உறுப்புகள் வேகமாக வேலை செய்யும். மற்ற நேரங்களில் அவை அமைதியாக தூக்க நிலையில் இருக்கும். எனவே, அப்போது சாப்பிடும் போது உணவில் இருக்கும் கொழுப்பு சத்து எரிக்கப்படாமல் அப்படியே உடலில் சேர்ந்து விடுகிறது என்று விளக்கம் அளித்துள்ளனர். 
..................................................................................................

குறும்பு செய்த குழந்தையை வாஷிங் மெஷினில் வைத்து தம்பதி அடைத்தனர். வீடுகளில் குறும்பு செய்யும் குழந்தைகளை சில பெற்றோர் அறைகளில் போட்டு பூட்டி வைத்து தண்டனைகளை வழங்குவார்கள். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த தம்பதி தனது குறும்புக்கார குழந்தையை வாஷிங்மெஷினில் அடைத்து வைத்தனர்.

சம்பவத்தன்று அந்த குழந்தையின் தாய் துவைத்த துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது, அடுக்கிய துணிகளை அவருடைய குழந்தை கலைத்து போட்டது. இதைபார்த்து கோபமுற்ற தந்தை அந்த குழந்தையை தூக்கி அருகில் இருந்த வாஷிங்மெஷினில் உட்கார வைத்தார்.


இதையடுத்து வாஷிங் மெஷினின் தானியங்கி கதவு தானாகவே மூடிக்கொண்டு இயங்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வாஷிங் மெஷினை நிறுத்திவிட்டு, அந்நிறுவனத்துக்கு உடனே தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பழுதை சரிசெய்து அக்குழந்தையை மீட்டு வெளியே எடுத்தனர்.


வாஷிங் மெஷின் இயங்கியதால் குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின் தற்போது குணமாகி உள்ளது. இந்த காட்சி வீட்டில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கேமிராவில் பதிவானது. சமீபத்தில் இது ‘யூ டியூப்’ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.



..................................................................................................

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளரை டெபாசிட் இழக்க களம் இறங்கி உள்ள கட்சியினருக்கு நம் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

தகவல்
ஸ்பெயினில் உள்ள லாசக்ரா வானிலை மைய விண்வெளி நிபுணர்கள் ஒரு எரிகல்லை கண்டுபிடித்தனர். அதற்கு ‘டி.ஏ.14’ என பெயரிட்டுள்ளனர். இந்த எரிகல் 1 லட்சத்து 40 ஆயிரம் டன் எடை உள்ளது.
இது அடுத்த ஆண்டு (2013) பிப்ரவரியில் பூமியை நெருங்கும் என்று தெரிவித்துள்ளனர்.  இது பூமியை நெருங்கும் மோதும்போது பல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக பூமியை சுற்றி வரும் செயற்கை கோள்களில் மோதி அவை அழியும் வாய்ப்பு உள்ளது. குறைந்தது அவற்றின் தகவல் தொடர்புகள் கூட துண்டிக்கப்படலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ‘நாசா’ விண்வெளி மையமும் கருத்து தெரிவித்துள்ளது. அதாவது ‘டி.ஏ.14’ எரிகல் பூமியை தாக்கும்போது 0.031 சதவீதம் மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த 1908-ம் ஆண்டு இதுபோன்று ராட்சத எரிகல் சைபீரியா காட்டில் விழுந்தது. அப்போது பல நூறு சதுர மைல்கள் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. 
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  நட்புடன் சௌம்யா என்ற பெயரில் தித்திக்கும் நட்பில்.. திகட்டாமல் அன்பு சேர்க்கும்.. பிரியமான தோழி..! என்று அறிமுகமிட்டு எழுதி வருகிறார் சௌம்யா... இவரின் கவிதைகள் அனைத்தும் திகட்டாமல் படித்துக்கொண்டே இருக்கலாம்... நான் நிறைய ரசித்தேன் இவரின் கவிதைகளை... நீங்களும் ரசியுங்களேன்....

http://sowmyathinkings.blogspot.com/


தத்துவம்
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

முதல் குற்றத்தை சரி என்று சாதிப்பவன், இரண்டாவது குற்றத்தையும் செய்தவனாகிறான்...

ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் உங்கள் லட்சியத்தில் இருந்து பின்வாங்காதீர்.. போரட்டத்தையும் தவறுகளையும் கண்டு கவலைப்படாதீர்... உங்கள் லட்சியத்தில் வீறுநடைபோடுங்கள் வெற்றி உங்களுக்கே....

புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி.

Tuesday, May 22, 2012

கிராமத்து திருவிழாவும் ரெக்கார்டு டேன்சும் 1



கிராமத்து திருவிழாக்களில் திருவிழா அன்று நடக்கும் இரவு நிகழ்ச்சி தான் முக்கியத்துவம் வாய்ந்தது. பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு கிராமமும் ஒரு நிகழ்ச்சியை நடத்துவார்கள் அதில் எந்த ஊரில் நன்றாக இருக்கிறது என்று ஊர் பெருமை பேசுவர்கள் அவர்களின் நிகழ்ச்சியை பற்றி. அதனால் இரவு நிகழ்ச்சிக்கு மிக முக்கியத்துவம் இருக்கும் இது ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடும் இதில் என் அனுபவம் இரண்டாவது பதிவாக...

ஒரு 15 வருடங்களுக்கு முன்பு அப்போது தான் இந்த டேன்ஸ் பிரபலமானது நாங்க பசங்க எல்லாம் முடிவு செய்துவிடுவோம்  இன்னிக்கு இந்த ஊரில் நிகழ்ச்சி எல்லாரும் போகலாம் என்று. கிராமத்தில் வெய்யில் காலங்களில் வெளியில் தான் கயித்து கட்டிலில் படுத்து தூங்ககுவோம் அதனால் எல்லா நிகழ்ச்சிகளும் பார்த்திடுவோம். வெளியில் படுத்திருக்கும் ஒவ்வொருவராக சேர்ந்து பத்து பேர் சேர்ந்திடுவோம் பின் மாட்டு வண்டி அல்லது சைக்கிளில் போய் நிகழ்ச்சியை பார்த்து ரசித்து அவர்கள் மேடையில் ஆட கீழ நாங்க ஆட என்று நிகழ்ச்சிகளை கட்டும்...

இப்படி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருக்கும் போது தான் டேய் இன்னிக்கு அந்த மலையோர ஊரில் ரெக்காடேன்சாம் என்றார்கள்.. ஆஹா நானும் ரெக்கா டேன்ஸ் பார்த்ததில்லை போயே ஆகவேண்டும் அங்க செல்ல வேண்டும் எனில் வண்டி வேண்டும் யாரிடமும் வண்டி இல்லை என்ன செய்வது என்று சங்க கூட்டத்தை கூட்டி எல்லாம் அலசி ஆராய்ந்தோம். அதற்குள் எங்க ஊர் அண்ணன்களுக்கெல்லாம் செய்தி பரவ அவர்கள் வருவதை அறிந்து அவர்களை விசாரித்தேன் அண்ணே ரெக்கா டேன்ஸ் எப்படி இருக்கும் என்று அவர்கள் காதில் குசு குசு என பிசுபிசுத்தார் டேய் அங்க எல்லாம் ம்ம்ம்ம்................ தான்  இருக்கும் என்றார். உடனே மனதில் ஓர் இனம் புரியாத சந்தோசம் எனக்கு உள் மனதில். ஆளுக்கு பத்து ரூபாய் போட்டு டெம்போவை வாடகைக்கு எடுத்து அந்த ஊருக்கு முன்னால் அரை கிலோ மீட்டர் தூரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு சென்றோம்..

நான் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும் முன்னாடி போய் பார்க்கலாம் என்று இருந்தால் அங்கு எங்கு பார்த்தாலும் ஆட்கள், புதிதாக முளைத்துள்ள தேநீர் கடைகள், ரங்கரக்கட்டை விளையாட்டு என களை கட்டியது அந்த இடம்.. இது எந்த இடம் என்று சரியாக யோசிக்கும் போது நான்கு நாட்களுக்கு முன் நாங்கள் கிரிக்கெட் விளையாடிய மைதானம் தான் அது... சரி நிகழ்ச்சி எப்ப ஆரம்பிக்கும் எத்தனை மணிக்கு ............ டேன்ஸ் என்று ஒவ்வொருவராக விசாரித்துக்கொண்டு சென்றோம் அப்படியே எங்களை எங்க ஊர்க்காரங்க யாரும் பார்க்க கூடாது என்று ஒளிந்து ஒளிந்து சென்றோம்.

நிகழ்ச்சியின் மேல் இருந்த ஆர்வம் பொங்கி பட்டை ஒரு டம்ளர் சாப்பிட்டுவிட்டு நிகழ்ச்சி மேடை எப்படி இருக்கும் என்று பார்த்தால் 4 அடி உள்ள  மேடை அந்த மேடையை சுற்று டியூப்லைட் மைடைக்கு முன்பு முள் போல போட்டு இருந்தார்கள். இதற்குள்  நிறைய கிசு கிசு போன வருசம் எல்லாம் உள்ள போய் ரகளை செய்துவிட்டார்கள் அதனால பாதுகாப்பு பலமாக இருக்கிறது என்றனர். இன்னும்  ஆர்வம் அதிகமாகி அதிகமாகி ஆசையுடன் நின்று கொண்டு இருந்தோம்..

நிகழ்ச்சி ஆரம்பமானது ஆரம்பத்தில் பக்தி பாடல்களும் அப்புறம் ஒவ்வொரு பாடலாக மேதுவாக போய்க்கொண்டு இருந்தது நாங்க அப்படியே நகர்ந்து நகர்ந்து மேடைக்கு 20 அடிக்கு முன் இருந்தோம்.. அடுத்த பாடல்கள் என்று அறிவித்தார்கள் நேத்து ராத்திரி யம்மா, வா வா வாத்தியாரே, நான் ஆளான தாமரை போன்ற பாடல்கள் என்று சொன்னதும் விர் என்று சந்தோசத்துடன் இருக்கும் போது திரும்பி பார்த்தால் பக்கத்தில் எங்க ஊர் மக்கள் ஆஹா மாட்டிக்கிட்டோம் என்று இருக்கும் போது அவர்கள் எங்களை பார்க்க நாங்கள் அவர்களை பார்க்க கடைசியில் பார்க்காதது போலவே டேன்ஸ் பார்க்க ஆரம்பித்தோம்.

எதிர்பார்த்த எல்லா பாடல்களும் வந்தது நன்றாக ஆட்டம் போட்டார்கள் இங்கு பக்கத்தில் கேக்க கேக்க அடுத்த பாட்டுக்காம் இல்ல இதற்கடுத்த பாட்டுக்காம் என்று சூடேற்றிக்கொண்டு இருந்தார்கள் எதிர்பார்த்த எல்லா பாடல்களும் வந்துது ஆனால் எதிர்பார்த்து வந்த டேன்ஸ் வரல... நொந்து போய் தலையை தொங்க போட்டுக்கொண்டு கடைசியாக வந்து சேர்ந்தோம்...  எங்கள் ஊரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரம் நாங்க பார்க்க போன இடத்துக்கு...

அன்றில் இருந்து இன்று வரை நானும் விசாரிச்சு இந்த ஊர்ல நடக்குமாம் அந்த ஊர்ல நடக்குதாம் என்று போய் பார்த்து பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்...

••••••••

வருடா வருடம் நிகழ்ச்சி நடக்கும் போது இந்த வருடம் டேன்சுக்கு அனுமதி இல்லை என்பார்கள் அப்பதான் நாங்கள் யோசித்து நாடகம் போடுவது என்றும் நாடகத்தில் இரண்டு சீனுக்கு ஒரு முறை ஒரு பாடலுக்கு நடனம் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக டேன்சை நடத்தினோம்..

இந்த முறை உயர்நீதிமன்றத்தில் அனுமதி வழங்காததால் எப்படி நிகழ்ச்சியை நடத்துவது என்று குழம்பிக்கொண்டு இருக்கும் எங்கள் சுற்று வட்டாரத்தில் எங்கும் நிகழ்ச்சி நடக்கவில்லை என்ன செய்வது என்று யோசிக்கும் போது தான் வக்கில் நண்பர் மறுபடியும் மனு தாக்கல் செய்யலாம் என்றார் மறுபடியும் மனுதாக்கல் செய்து 75 ஆயிரம் ரூபாய்க்கு டேன்ஸ் நிகழ்ச்சிக்கு அட்வான்ஸ் 5 ஆயரிம் கொடுத்து காத்துக்கொண்டு இருந்தோம் திருவிழாவிற்கு அடுத்த நாள் நிகழ்ச்சி நடத்து என்று எதிர்பார்த்து இருக்கும் போது வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு எங்களுக்கு அனுமதி கிடைத்தது அப்புறம் இந்த வருடம் என்றும் இல்லாதது போல் வெற்றிகரமாக நடனத்தை நடத்தினார்கள் எம் நண்பர்கள்... எப்பவும் விட இந்த வருட ஆட்டம் கிளு கிளுன்னு இருந்தது...

இன்று தமிழகத்தில் அதிகம் சம்பாரிப்பது யார்??? ஓர் அனுபவ அலசல்...


தமிழகத்தின் அதிக கூட்டமும், அதிக வருமானம் உள்ள கடை எது என்றால் டாஸ்மார்க் என்பது அனைவரும் அறிந்ததே. டாஸ்மார்க் பற்றி நிறைய செய்திகள்  வருகின்றன வருமானம் அதிகம் இருந்தால் அதைப்பற்றியான கிசுகிசுக்கள் வருவது என்பது இயற்கையே. டாஸ்மார்க்கால் அரசுக்கு மட்டுமே அதிக இலாபம் என்று இருந்தால் அது தவறு என்பதை அனுபவத்தால் உணர்ந்தேன்.

இன்றைய இணைய உலகில் படித்து முடித்ததும் உடனே வேலைக்கு சென்று அதிக சம்பளம் வாங்குபவர்கள் பட்டியலில் சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு உண்டு. சாப்ட்வேர் என்றாலே அனைவரும் மெச்சுவர் அந்த அளவிற்கு ஐடி சம்பளத்தை கொடுக்கிறது என்றால் அது மிகையாகது. இவர்களை மிஞ்சும் அளவிற்கு சம்பாரிப்பவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் யார் என்று பார்ப்போம்....

நேற்று டாஸ்மார்க் சென்றேன் ஒரு பீர் வாங்கினேன் பீரின் விலை 75 தான் பாட்டிலில் குறிப்பிட்டு இருந்தது ஆனால் பணியாளர் 80 ரூபாய் வாங்கினார். 75 தானே இங்கே குறிப்பிட்டு இருக்கிறது என்றேன் கரண்ட் சார்ஜ் கட்டனும் பிரிட்ஜ் வாங்கினதுக்கு பணம் கட்டனும் இது தான் விலை இஷ்டமா இருந்தா வாங்கு சார் இல்லைனா விடுங்க சார் என்றார். சரி கொடுங்க சார் என்று நின்றேன்.

அப்போது அருகில் ஒருவர் எம்.சி 4 குவாட்டர் கொடு என்றார். சார் எம்சி இல்ல ஹனிபி தான் இருக்குது வாங்கிக்கு என்றார். சார் 4 குவாட்டர் இங்க குடிக்கறீங்களா இல்ல பார்சலா ? பார்சலுக்கு அனுமதி இல்ல சார் என்றதும் அவர் இங்க தாம்ப்ப குடிக்கிறேன். பார்சலுக்கு அனுமதி இல்லை என்று விதிமுறை எல்லாம் அழகா சொல்ற தம்பி சரக்கு வாங்கினா பில் போட்டு கொடுக்கனும் என்று ஒரு விதிமுறை போட்டாங்களே ஏன் அதை ஏம்பா செயல்படுத்துதில்லை நானே பதில் சொல்றேன் ஏன் என்றல் குவாட்டருக்கு 1 அல்லது 2 ரூபாய் அதிகம் வைத்து விக்கறீங்க அதனால தான் பில் தருவதில்லை என்றதும் விற்பனையாளர் வாயடைத்து நின்றார்.

அதற்குப்பின் தான் சாப்பிடும் போது அங்க பணியாற்றும் சிறுவனை கூப்பிட்டு ஏத் தம்பி இங்க ஒரு நாளைக்கு எத்தனை பீர் விற்கும் ?

1000க்கும் மேல விற்கும் சார் !!

குவாட்டர் ?

எப்படியும் 2000க்கும் பக்கமா விற்குமுங்க !!

அப்படியா சரிப்பா என்று யோசித்தேன் அதிர்ந்தேன்...

ஒரு பீருக்கு 5 ரூபாய் அதிகம் என்றால் 1000க்கு 5000 ரூபாய் ஆச்சு

ஒரு குவாட்டருக்கு 2 ரூபாய் என்றால் 4000 ரூபாய் ஆச்சு

ஒரு நாளைக்கு 9000 ரூபாயா கரண்ட் பில் வரும், ஆக பணியாளர்களுக்கு ஒரு நாள் வருமானம் 9000 ரூபாய்.

டாஸ்மார்க் கடைகளில் தினம் பணிபுரிவது ஒரு விற்பனையாளர், ஒரு சூப்பர்வைசர் என இரண்டு பேர் எப்படி இந்த பணத்த பிரிச்சுக்குவாங்க என்று டாஸ்மார்க் நண்பரிடம் விசாரித்தேன் இருவரும் பாதிக்கு பாதி பிரித்து கொள்வார்கள் ஆனால் நீ சொல்லும் அளவிற்கு எல்லா கடைகளிலும் விற்காது குறைந்தபட்சம் ஒருவருக்கு தினம் 2000 கிடைக்கும் என்றார்.

குறைந்த பட்சம் 2000 என்றால் சூப்பர் வைசர் தினம் வரவேண்டும் அவர் வருமானம் மாதம் 60000, 15 நாள் வரும் விற்பனையாளர் வருமானம் 30000 ஆயிரம்.

இப்ப சொல்லுங்க சாப்ட்வேர்ரா ? டாஸ்மார்க்கா ?

சில கேள்விகள்
டாஸ்மார்க் பணியாளர் எல்லாம் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அனைவரும் வேலைக்கு செல்லமாட்டோம் என போராட்டம் நடத்தினார்கள் அரசு வேலைக்கு வரவில்லை என்றால் வேலையை விட்டு தூக்கிவிடுவோம் என்றதும் 95 சதவீத பணியாளர்கள் வேலைக்கு சென்று விட்டார்கள் இப்பதான புரியுது ஏன்? என்று???

பாட்டிலுக்கு 2 அதிகமா விற்கும் போதே இவ்வளவு வருமானம் இது போலி மதுப்பாட்டில், பாட்டில் மூடிய கழட்டி சரக்க மாத்திவிடுகிறார்கள் என்று நிறைய செய்திகள் வேறு வருது அப்ப அதுல எவ்வளவு இலாபம்???

ஒரு புல் பாட்டிலை எடுத்து கட்டிங் ஊற்றுகின்றனர் இது சரியான அளவில் இல்லை என்று ஆரம்பத்தில் இருந்து பிரச்சனை இருந்து வருகிறது... இதுல வரும் வருமானம் எவ்வளவு??

டாஸ்மார்க்கு அரசை மட்டும் வாழவைக்கவில்லை அங்கு இருப்பவர்களையும் சுக போகமாக வாழ வைக்குது....
இது ஒரு மீள்பதிவு

Thursday, May 17, 2012

கோவை பதிவர்களே வாருங்கள் இணைவோம்....


அன்பிற்கினிய நண்பர்களுக்கு வணக்கம்,


கோவை மற்றும் கோவையைச்சுற்றி உள்ள இடங்களில் இருந்து வலைப்பதிவு, முகநூல் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களை தடம்பதித்து வரும் நண்பர்களை ஒன்று சேர்த்து கோவையில் ஓர் பதிவர் சந்திப்பு நடத்த ஏதுவாக முதலில் இங்குள்ள நண்பர்களை ஒன்று சேர்த்து ஒரு சந்திப்பு விரைவில் நடத்தாலாம்

ஆதலால் கோவையைச் சேர்ந்த நண்பர்கள் தங்களது பெயர் ,மொபைல் எண், வலைதள முகவரி, முகநூல் மற்றும் டிவிட்டர் ஐடிக்களை kovaibloggers@gmail.com என்ற முகவரிக்கு மறக்காமல் அனுப்பிவைக்கவும். தங்களுக்கு கோவைப்ளாக்கர்ஸ்  குழுமத்திலிருந்து வரும் அழைப்பிதழை ஏற்று குழுமத்தில் இணைந்து கொள்ளவும்.

இந்த குழு மென்மேலும் வளர தங்களது ஆலோசனைகள் தாராளமாக கூறவும். இதுவரை 25 நண்பர்களை சேர்த்திருக்கிறோம் அவர்களும் சிறு சந்திப்பிற்கு வருவதாக கூறிஉள்ளனர். 
விரைவில் கோவையில் ஓர் பிரமாண்ட பதிவர் குடும்ப சந்திப்பு நடக்க உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..
கோவை மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த பதிவர்கள் விரைவில் குழுமத்தில் இணையும் படி அன்புடன் வேண்டுகிறோம்...

மேலதிக தகவல்கள் வேண்டுவோர்..

சங்கவி - 9843060707
 
சம்பத்குமார் - 9965577404

சுரேஷ் - 9843941916

ஜீவா - 9894401474

Wednesday, May 16, 2012

அஞ்சறைப்பெட்டி 17/05/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கடந்த வாரம் நிறைய தூரம் பயணித்து செல்ல வேண்டி இருந்தது அதில் பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் ஒரு முறை சென்று வந்ததற்கே இடுப்பு கழன்டு விட்டது. தமிழகத்தின் மிக மோசமான சாலை எது என்றால் நிச்சயம் இந்த சாலையை சொல்லாம். இந்த சாலை வழியாக பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை நினைத்தால் கொஞ்சம் வருத்தாமாகத்தான் இருக்கிறது.


...............................................................................................

அதிமுக ஆட்சியின் ஒராண்டுன் வெற்றிகரமான நிறைவு நிறைய சாதனைகளை செய்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்க என் வாழ்த்துக்கள்... இந்த ஓராண்டின் முக்கிய சாதனையாக நான் கருதுவது டிஎன்பிசி தேர்வை நேர்மையான முறையில் நடத்தி ஆட்களை தேர்வு செய்வது, இலங்கை பிரச்சனையிலும், முருகன் உள்ளிட்டோர் தூக்கு தண்டனை பிரச்சனையிலும் அம்மா செயல்பட்ட வேகம் மக்களை மிக கவர்ந்தது...

...............................................................................................

15 மாதங்களுக்கு பின் 2 ஜி வழக்கில் கைதான ராசவுக்கு ஜாமீன் கொடுத்து ராசாவுக்கு ஜாமீனில் விடுதலையாகிவிட்டார். இனி 2ஜி வழக்கு இதே வேகத்தில் போகுமா? ஆமை வேகத்தில் போகுமோ???

................................................................................................

மதுரை அடுத்த ஆதினமாக நித்தியானந்தாவை நியமித்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதை மீட்க ஒரு குழு என தேவையில்லாமல் பொழுதை போக்குகிறார்கள்.. முதலில் இந்த சாமியார்களை நம்பும் மக்களைத்தான் நான் குறை சொல்வேன்.. அவர்கள் நம்ப நம்ப அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சம்... இதை நம்மக்கள் எப்ப புரிந்துகொள்ளப்போகிறார்களோ???
 
................................................................................................

இந்த வருடம் கத்திரி வெய்யிலின் தாக்கம் அதிகமாக ஆவதற்கு முன்பு ஆங்காங்கே மழை பெய்து வெய்யிலின் உக்கரத்தை குறைத்தது. கோவையைப்பொறுத்த வரை பகலில் நன்கு வெப்பமும் இரவில் குளிர்ச்சியாகவும் பருவநிலை நன்கு இருந்தது.. கோவையில் இருக்கும் சாலைகளில் இருபுறங்களிலும் உள்ள மரங்களை வெட்டியாதால் வாகனம் ஓட்டும் போதுதான் ரொம்ப சிரமப்படவேண்டி இருந்தது..

...............................................................................................

கோவை ப்ருக்பீல்டு மாலுக்க சென்றிருந்தேன் சென்னை, பெங்களூர் போல எங்கள் ஊரிலும் அனைத்து வசதிகளும் கொண்ட மால்.. 
எங்கள் ஊர் இளசுகளை எல்லாம் ரசிச்சு ரசிச்சு பார்க்க சிறந்த இடமாக இப்போது இது தான் உள்ளது.. வார விடுமுறை நாட்களில் கூட்டம் பிச்சுக்குது... 
ஊரில் உள்ள பாதி உணவு விடுதிகள் இங்கு கிளைகள் தொடங்கிவிட்டார்கள் அத்தனை இடங்களிலும் உட்கார இடம் இல்லாமல் சாப்பிட்டு தீர்க்கின்றனர் மக்கள்...
இங்கு எங்கு சென்றாலும் கார்டை கொடுத்து தான் பொருள் வாங்க வேண்டி இருக்கிறது அது ஒன்று தான் கடுப்படிக்கிற விசயம்....


..................................................................................................

கடந்த வாரம் எங்கள் ஊர் திருவிழாவை முன்னிட்டு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள் நடன நிகழ்ச்சியை உய்ர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி நடந்தது.. ரொம்ப நாளைய குத்தாட்டு ஏக்கம் அன்று நிறைவடைந்தது. குத்தாட்டத்தில் தான் எத்தனை வகை அத்தனையும் ஈடுகட்டி ஆடினர் கலைஞர்கள்...

..................................................................................................

இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சூரிய குடும்பத்தை விட்டு தனியாக கண்ணுக்கு தெரியாத தூரத்தில் மறைந்து கிடந்த புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிரகம் கே 01-872-0 என்ற நட்சத்திரத்தை சுற்றி உள்ளது. இது சனிக்கிரகம் அளவில் உள்ளது. புதிய கிரகத்தை 150 வருடங்களுக்கு முந்தைய தொழில் நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
இதே தொழில் நுட்பத்தை வைத்து தான் நெப்டியூன் கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் டெலஸ்கோப்பை கடந்த 2009-ம் ஆண்டு முதல் நிறுவியுள்ளது. அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட இந்த டெலஸ்கோப் மூலம் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கண்டறியப்படுகின்றன. இதன் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும். 

..................................................................................................


2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கான குறைந்த பட்ச கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஏற்கனவே சிபாரிசு செய்திருந்தது. கடந்த 2010-ம் ஆண்டில் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருமானம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி மட்டும்தான். ஆனால், டிராய் அமைப்பின் பரிந்துரை மூலம் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் ஏறத்தாழ 7 மடங்கு அதிகமாக அதாவது ரூ.7 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் டிராய் அமைப்பின் சிபாரிசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார், யூனினார், வீடியோகான் ஆகிய செல்போன் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் நேற்று டெல்லியில் மத்திய தொலை தொடர்பு மந்திரி கபில் சிபல், தொலை தொடர்புத்துறை செயலாளர் ஆர்.சந்திரசேகர் ஆகியோரை சந்தித்து பேசினர். தொலை தொடர்பு ஆணையம் செய்துள்ள பரிந்துரைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
தொலை தொடர்பு ஆணையத்தின் பரிந்துரைகளை அமல் படுத்தினால், சில பகுதிகளில் செல்போன் கட்டணம் 2 மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மந்திரி கபில் சிபலிடம் எச்சரிக்கை விடுத்தோம் என்று ஏர்டெல் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் கபூர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக இதே பிரச்சினை குறித்து நேற்று காலையில் ரிலையன்ஸ், டாடா, சிஸ்டமா ஷியாம் டெலி சர்வீசஸ், ஆஸ்பி ஆகிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் கபில் சிபலை சந்தித்து விவாதித்தனர்.
..................................................................................................


கோவையில் இருக்கும் பதிவர்கள் சார்பாக கோவையில் உள்ள பதிவர்கள் சந்திப்பு நடத்தலாம் அதானல் கோவையில் உள்ள பதிவர்கள், முகநூல் மற்றும் டிவிட்டர் நண்பர்கள் அனைவரும் விரைவில் ஒரு நாள் குறித்து சந்திக்கலாம்.

கோவையில் உள்ள பதிவர்கள் தங்கள் வலைப்பூவையும், தொடர்பு எண்ணையும் இநத் மின்மடலுக்கு kovaibloggers@gmail.com மடல் அனுப்பவும்.

கோவை, அதனை சுற்றி உள்ள பகுதியில் உள்ள பதிவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

விரைவில் சந்திப்போம்...



தகவல்
எல்லோருக்கும் கோடீஸ்வரன் ஆகும் ஆசை இருப்பது சகஜம். எப்படியாவது பணம் சம்பாதித்து கோடீசுவரன் ஆகிவிட மாட்டோமா என்ற நினைப்பு இருக்கும். ஆனால் அரியானா மாநிலத்தில் விவசாயி ஒருவர் ரூ. 965 கோடிக்கு அதிபதி ஆகி, அது 40 நிமிடத்தில் கலைந்துபோன சம்பவம் நடந்துள்ளது.
அந்த விவசாயி பெயர் சுஷில்குமார். அரியானா மாநிலம் நெக்லா கிராமத்தில் வசிக்கிறார். நிலத்தில் உழுது, பயிர் செய்து பிழைப்பு நடத்தி வரும் ஏழை. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் கணக்கு வைத்திருக்கிறார். நண்பர் ஒருவர் சுஷில்குமார் வங்கி கணக்குக்கு ரூ. 40 ஆயிரம் அனுப்பி இருந்தார். நேற்று அவர் தனது கிராமத்தின் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் சரி பார்க்கச் சென்றார். கார்டை சொருகி பேலன்ஸ் பட்டனை அழுத்தினார்.
அடுத்த நொடியே அவருக்கு இன்ப அதிர்ச்சி. தனது கணக்கில் ரூ. 965 கோடி இருப்பு இருப்பதாக காட்டியது. நண்பர் அனுப்பியது ரூ. 40 ஆயிரம். அனால் ரூ. 965 கோடி எப்படி வந்தது. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. இன்ப அதிர்ச்சியில் தலை சுற்றியது. உடனே அருகில் உள்ள மற்றொரு ஏ.டி.எம். மையம் சென்று அங்கு இருமுறை கார்டை சொருகி பார்த்தார். அங்கும் அவரது கணக்கில் ரூ. 965 கோடி இருப்பதாக காட்டியது. ஏ.டி.எம். மிஷினில் இருந்து வந்த சிலிப்பிலும் அதே தொகையை காட்டியது.
ஏழையாக இருந்த தான் ரூ. 965 கோடிக்கு அதிபதியானது எப்படி? ஏதாவது அதிசயம் நடந்து விட்டதா? என்று கோடீஸ்வரர் கற்பனையில் வீட்டுக்கு சென்றார். அவரது கனவு 40 நிமிடம் கூட நிலைக்கவில்லை. தவறை தெரிந்து கொண்ட வங்கி அதிகாரிகள் சிறிது நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்கள். கதவை திறந்து வந்த சுஷில்குமாரிடம் உங்கள் கணக்கில் தவறு நடந்துள்ளது. எனவே உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று கூறி விட்டுச் சென்றனர். 40 நிமிடம் கோடீஸ்வரராக இருந்தவர் மீண்டும் ஏழையாகி விட்டார்.
இதுபற்றி பஞ்சாப் நேஷனல் வங்கி முதன்மை மேலாளர் பி.ஆர்.சர்மா கூறுகையில், சுஷில்குமார் வங்கி கணக்கில் தவறு நடந்து உள்ளது. கம்ப்யூட்டர் மூலம் கணக்கில் பணம் வரவு வைக்கும்போது தவறு ஏற்பட்டு விட்டது. இந்த தவறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மனித தவறா? அல்லது கம்ப்யூட்டர் கோளாறா? என ஆய்வு நடக்கிறது என்றார். சுஷில்குமார் வங்கி கணக்கில் தவறுதலாக மாற்றப்பட்டு இருந்த பணம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது சுஷில் குமார் கணக்கில் ரூ. 40 ஆயிரம் மட்டுமே இருப்பு உள்ளது. முடக்கப்பட்ட அவரது கணக்கு உடனடியாக விடுவிக்கப்பட்டது. கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்கவில்லையே என்பதுபோல் விவசாயி ஏமாற்றம் அடைந்தார்.
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  என் ஜன்னலுக்கு வெளியே  என்று தன் வலைப்பூவிற்கு பெயரிட்டு தன் அனுபவங்களையும், பிடித்ததையும் எளிய நடையில் எழுதி நம்மை கவர்கிறார் நிரஞ்சனா.

http://nirusdreams.blogspot.com

தத்துவம்

பேசும்முன் கேளுங்கள், எழுதுமுன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம்.

வெற்றியை முழுமையாக அனுபவிக்கவேண்டும் என்றால் அவன் நிச்சயம் சிறு தோல்வியாவது சந்தித்திருக்க வேண்டும்...


வாழ்க்கையில் பொருள் செல்வத்தைச் சேர்ப்பது எளிது; அருள் செல்வத்தைச் சேர்ப்பதுதான் அரிதாகும்.

Monday, May 14, 2012

குடும்பத்தில் பெண்களின் விருப்பம்...


ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களுக்கு என எதிர்பார்ப்பும் விரும்பமும்  நிச்சயம் இருக்கும். அது தனது கணவர் மற்றும் குழந்தையின் பேரில் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் இருவரும் கஷ்டப்பட்டாலும் கணவனை விட மனைவிக்கு பொறுப்பு அதிகம் என்பதை மறுக்க இயலாது குறைந்த பட்சம் பெண்களின் விரும்பம் என்னவாக இருக்கும் என்பதில் கிடைத்த வரிகள்....

உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா? (சமையல் கொஞ்சம் பரவாயில்லை என்ற அளவில் இருந்தாலும் பாராட்டினால் அடுத்த நாள் இன்னும் நன்றாக சமைக்க முயற்சி செய்வர்)

 வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.

தன் கணவன் சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது பொறுப்பாக கணவனே அனைத்தையும் முன்னரே எடுத்து வைத்து விட்டு சந்தோசமாக செல்ல வேண்டும்.

உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.
எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது.

சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

“இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என அடிக்கடி பாராட்ட வேண்டும் (இரவு ஆடையை கூட சொல்லலாம்)

நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்.

கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது. பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு வர வேண்டும்

குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.
 
 நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

 நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

 பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

 அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

 படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

 பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

 சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.

மனைவி எதிர்பார்க்காத நேரத்தில் தினமும் ஒரு திடீர் என நச்சுன்னு முத்தம் கொடுக்க வேண்டும்.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

Sunday, May 13, 2012

உயிரைப்பணையம் வைக்கும் தீயணைப்பு வீரர்கள்...


தலை போகிற அவசரத்தில் நாம் சென்றுகொண்டிருந்தாலும் சைரன் ஒலித்தபடி விரையும் இரண்டு வண்டிகளின் மீது அனிச்சையாக நம் கண்களும் மனமும் குவியும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி இரண்டுமே உயிர்காக்கும் வண்டிகள் என்றாலும் தீயணைப்பு வண்டியின் சேவை கொஞ்சம் வித்தியாசமானவை. தங்கள் உயிரைப் பணயம் வைத்து மற்ற உயிர்களை காக்கும் உன்னத பணி.

வேகமாக பரவும் நெருப்போ,  சரிந்துவிழும் கட்டடமோ, உயிர் குடிக்கும் விஷ வாயுயோ, ஊரையே குடிக்கும் சுனாமியோ, பூகம்பம், கிராமங்களில் கிணற்றுகுக்குள் விழந்த மாடுகள் இப்படி  எதுவாக இருந்தாலும் அங்கே உதவிக்குத் தீயணைப்புத் துறையின் உதவுவர். மனிதனக்கு மட்டுமல்லாமல் விலங்குகளையும் ஆபத்தில் இருந்து காக்கும் அற்புத பணி இவர்களுடையது.
கருவிகள்

தீ விபத்து குறித்த தகவல் வந்த 20 வினாடிகளுக்குள் தீயணைப்புப் படையினர் அதற்குத் தகுந்த கருவிகள் பொருத்திய வண்டியுடன் புறப்படுவார்கள். சம்பவம் நடந்த இடத்தை அடைந்ததும் மின்னல் வேகத்தில் செயலாற்றுவார்கள். கட்டுப்பாட்டு அறையின் உதவியோடு வண்டியின் நிலையை அறிந்துகொள்ளும் வசதியும் இருக்கிறது.


தங்கள் உயிரைத் திரணமாக மதித்து மீட்புப்பணியில் களமிறங்கும் தீயணைப்பு வீரர்களுக்காக உதவும் வகையில் மிகுந்த சக்தி வாய்ந்த சில அதி நவீன உபகரணங்கள் உள்ளன இவற்றைத் தவிர, மிக உயரமான கட்டிடத்தில் சிக்கித் விப்போரை மீட்கவும் அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கித் தவிப்போரை மீட்கவும் Hazamat Vehicles, Sky Lifts  ஆகிய நவீன ரக உபகரணங்களும் பயன்படுகின்றன.

கொடிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. உயிருக்குப் போராடுகிறவர்களையும், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களையும் மீட்கும் கடினமான பணிக்காக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இயற்கை சீற்றம்

மனிதர்களால் ஏற்படும் விபத்து ஒருபுறம் இருக்க மறுபுறம் இயற்கை சீற்றமும் சமுதாயத்தை நிலைகுலைய வைத்துவிடுகிறது. இயற்கை சீற்றங்களான வெள்ளம், புயல், நில நடுக்கம், வறட்சி, மண் சரிவு போன்றவற்றால் ஏற்படும் அழிவு சமூகச் சூழலையே புரட்டி எடுத்துவிடும் அளவுக்கு அபாயமானவை. இதுபோன்ற நேரத்தில் உதவத்தான் தீயணைப்பு வீரர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் வருவதற்குள் சூழ்நிலையை எதிர்கொள்ளவும் நிலைமையைக் கையாளவும் கற்றுக்கொண்டால், பாதிப்புகளை ஓரளவுக்குக் குறைக்கலாம். இயற்கைப் பேரழிவுகளைத் தடுக்க முடியாவிட்டாலும், சீரிய திட்டமிடல் மூலம் விளைவுகளைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

தீ பரவுகிறது என்றால் சூழ்நிலையை அனுமானிக்க வேண்டும். பதற்றம், தேவையில்லாத சிக்கலை உருவாக்கும். இதுபோன்ற நேரத்தில், ‘நில், படு, உருண்டோடு’ என்பதைக் கடைபிடிக்கச் சொல்கின்றனர் தீயணைப்புத் துறையினர். இந்தச் செயல்களால் தீப்புகையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஒரு விபத்து ஏற்பட்டதும், நமக்கேன் வம்பு என ஒதுங்கிக்கொள்ளாமல் 101 என்ற எண்ணைச் சுழற்றி சம்பவம் நடந்த இடத்தை தெளிவாக ஏதேனும் ஒரு அடையாளத்துடன் தெரிவிக்க வேண்டும். அந்த அழைப்பு எழும்பூரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, சம்பவம் நடக்கும் தீயணைப்பு நிலையத்துக்குத் தெரிவிக்கப்படும்.

பணிகள்

ஒரு தீயணைப்பு வீரரின் பணி மிக கடினமான, துணிச்சலான அதே சமயம் சவால் நிறைந்த பணியாகும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது தெரிந்தும் தெரியாததுமான ஆபத்துகளைத் தாங்கிப் பணிபுரியும் பணியாளரின் உடல்நிலை மற்றும் மன நிலை பாதிக்கக்கூடும். தீ, வெள்ளம், புயல், பூகம்பம், நிலச்சரிவு, ரசாயன வாயுகசிவு, கட்டிட இடுபாடுகளில் மீட்பு பணி போன்ற நிகழ்வுகளில் பணிபுரியும்போது சிறியதும் பெரியதுமான  காயங்கள், உடல் உறுப்புகளின் தற்காலிக மற்றும் நிரந்தரச் செயலிழப்பு, உடல் உறுப்புகளைப் பறிகொடுத்தல் போன்ற பாதிப்புகள் மட்டுமின்றி சில விபத்துகளில் பணிபுரியும்போது மரணமும்கூட ஏற்படும்.

இத்தனை ஆபத்துக்களையும் தாண்டி சக உயிர்களைக் காப்பதொன்றே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள் தீயணைப்பு வீரர்கள். போர்க்களத்தில் எதிரிகளோடு போரிடும் வீரர்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல, பேரிடர் காலங்களில் கைகொடுக்கும் தீயணைப்பு வீரர்களது மீட்புப் பணி.

ஆனால் இந்த சமுதாயத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான முக்கியத்துவம் மிக குறைவு.. பல பள்ளிகளிளும், கல்லூரிகளிலும் பக்கத்தில் உள்ள தீயணைப்பு அதிகாரிகளை கூப்பிட்டு மாணவர்களுக்கு அவர்களின் அனுபவங்களை கூறச்சொல்பவர்களை விரல் விட்டு என்னி விடலாம்.. உயிரைப்பணையம் வைத்து காப்பாற்றும் இவர்களுக்கு நிச்சயம் ஊருக்குள் மரியாதை குறைவுதான்..