Wednesday, March 20, 2013

அஞ்சறைப்பெட்டி 21.03.2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
மாணவர்களின் போராட்டத்தில் மிக பாராட்டுக்குறியது அவர்களின் அறவழிப்போராட்டம் எந்த அரசியல் கட்சியையும் சாராமல் இத்தனை மாணவர்கள் வீதியில் வந்து போராடுவதை பார்க்கும் போது நான் இப்போது மாணவனாக இல்லை என்ற ஏக்கம் என் மனதில் ஏறக்குறைய நிறைய பேர் மனதில் நிச்சயம் இருக்கும். அதுவும் இந்த போராட்டத்தில் மாணவிகளின் கூட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..

கோவையில் ஏறக்குறைய அனைத்து கல்லூரிகளும் விடுமுறை விட்ட நிலையில் மாணவர்களின் போராட்டத்தில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் மாணவக்கண்மணிகள் கலந்து கொண்டார்கள் என்பதில் தெரிகிறது அவர்களின் உறுதியான மனநிலை..

இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் மிகப்பெரிய அளவில் நடக்கும் போராட்டம் இந்த ஈழப்போராட்டம் தான் மாணவர்கள் ஈழப்போராட்டத்தோடு சேர்ந்து நம் மீனவர்கள் தாக்கப்படுவதையும் முன்னிறுத்த வேண்டும் என்பது என் ஆவா...

  ................................................................

இத்தாலி நாட்டினர் கேரள மீனவர்களைத்தாக்கி விட்டு சென்றதை கண்டிக்கும் நம் பாரத பிரதமர் 40க்கு 40 கொடுத்து முதன் முதலில் ஆட்சி பீடத்தில் அவரை பிரதமாராக ஏற்றிய தமிழன் மீன்பிடிக்க சென்றபோது 500க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக்கொன்றபோது இன்றளவும் கண்டிக்காதது வருந்தத்தக்கது...
..........................................................................................

பாஜக, சமாஜ்வாடி, நிதிஷ்குமாரின் கட்கிள் எல்லாம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மறுக்கின்றனர் ஏன் டெசோ அமைப்பு அவர்களை சந்தித்து ஆதரவு கேட்கக்கூடாது ஒரு வேளை கேட்டுவிடுவார்கள் என்று தெரிந்து தான் இன்று சிபிஐ ரெய்டு நடத்திவிட்டார்களோ...

................................................................................................

இன்று ஜெனிவாவில் எடுக்கப்படும் வாக்கெடுப்பு வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் இலாபம் இலங்கைக்கே.. இதனால் நம் மாணவர்கள் மனம் தளரக்கூடாது அடுத்த கட்ட நடவடிக்கை அடுத்த கட்ட போராட்டம் இன்னும் வழுவாக இருக்கவேண்டும்.. அதாவது இலங்கையின் தயாரிப்பு பொருட்களை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இலங்கை அரசுக்கு சொந்தமான விமானத்தில் செல்வதை தவிர்க்கவேண்டும் நம்மால் இலங்கைக்கு கிடக்கும் வருமானத்தை தடுக்கவேண்டும் போன்ற அடுத்த கட்ட போராட்டத்தில் பொது மக்களும் அறவழியில் ஈடுபடவேண்டும் என்பது என் எண்ணம்...
...............................................................................................

வேலைக்கு போகும் பெண்கள், திருமணம் மற்றும் விழாக்களுக்கு செல்லும் இல்லத்தரசிகள் ‘லிப்ஸ்டிக்’ பூசாமல் வெளியே செல்வதில்லை. உதட்டில் லிப்ஸ்டிக் பூசியே செல்கின்றனர். அவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் புதிதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி லிப்ஸ்டிக்கில் உள்ள ராசயனம் இருதய நோயை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எலிகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

லிப்ஸ்டிக்கில் உள்ள டிரைக்ளோசன் என்ற ரசாயனம் எலிகளுக்கு கொடுக்கப்பட்டு 20 நிமிடத்திலேயே அவற்றின் இருதய செயல்பாட்டை படிப்படியாக குறைத்தது. ஆகவே, மனித உடல்களிலும் இது நடக்கலாம் என எச்சரித்துள்ளனர்.

டிரைக்கோளன் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களிள் அனைத்திலும் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியது. இது இருதயம் உள்பட மூளையில் இருந்து செய்திகளை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எலிகளில் பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட டிரைக்ளோசன் அளவு அதிகம். ஆனால் லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் இந்த ரசாயனத்தின் அளவு மிக குறைவாகவே சேர்க்கப்படுகிறது என அவற்றின் தயாரிப்பாளர்கள் மறுத்துள்ளனர்.

இருந்தாலும் லிப்ஸ்டிக் போடும் பெண்களே உஷாராக இருங்கள். லிப்ஸ்டிக் போட்டால் மட்டுமே அழகு கூடுகிறது என்பதை விட்டு ஒழியுங்கள். இயற்கையே அழகுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
...............................................................................................

கோடை வெய்யிலை சந்திக்க இருக்கிறோம் அதே போல் தண்ணீர் பிரச்சனையுயைம் சந்திப்போம் போல இருக்கிறது.. எல்லா ஆறு குளம், குட்டைகள் எல்லாம் தண்ணீர் குறைந்து வறண்டு போய் இருக்கிறது.. காட்டில் உள்ள மிருகங்கள் எல்லாம் தண்ணீர் தேடி ஊருக்குள் வர ஆரம்பித்து விட்டன. இனி நாம் தண்ணீருக்கு எங்கே போவது என்று தான் புரியாத புதிராக உள்ளது....

தகவல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கலை எப்படி சமாளிப்பது? என்பது குறித்து பிரதிநிதிகள் சபையின் அறிவியல் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாசா விண்வெளி அமைப்பின் தலைவர் சார்லஸ் போல்டன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் இதுதொடர்பாக நடந்த விவாதத்தில் பிரதிநிதிகள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
நியூயார்க் நகரை நோக்கி வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய விண்கல்லை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். விண்கல்லை திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நீங்கள் பிரார்த்திக்க வேண்டும்.
பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் 95 சதவிகித விண்கற்களை நாசா கண்காணித்து வருகிறது. அதில் ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய விண்கற்களும் அடங்கும். இந்த விண்கல்லானது மனித நாகரிகத்தை அழித்துவிடும் அபாயம் இருக்கிறது.
10,000-க்கும் மேற்பட்ட நகரங்களை தாக்கி அழிக்கும் விண்கற்களில், 50 மீட்டர் விட்டமுடைய வெறும் 10 சதவிகித விண்கற்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து அறியமுடியாத விண்பாறைகள் மற்றும் விண்கற்கள் பூமியை தாக்குவதை சமாளிப்பது குறித்து முடிவெடுக்கவேண்டியது அனைத்தும் அமெரிக்காவை சார்ந்து இருக்கிறது. 
கடந்த பிப்ரவரி மாதம் 17 மீட்டர் விட்டமுடைய விண்பாறை ஒன்று ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் என்னுமிடத்தை நோக்கி வந்தது. அந்த விண்பாறையானது ஆகாயத்திலேயே குண்டுகளை வீசி தகர்க்கப்பட்டது. அப்போது அப்பகுதி வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்தன. இதில் 1500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
அதன் பிறகு மிகப்பெரிய விண்கல் ஒன்று சமீபத்தில் பூமியிலிருந்து 17,200 மைல் தூரத்திற்கு அப்பால் வந்து சென்றதை நமது விண்கலங்கள் படமெடுத்தன.
பூமியை தாக்கும் விண்கற்களை திசைதிருப்புவது சம்பந்தமாக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து பன்னாட்டு ஒத்துழைப்பை நாசா எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

தத்துவம்

காணும் கனவை நிஜமாக்கி காட்டுபவர்கள் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை

தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.

பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க சிறந்த வழி மெளனம். பல பிரச்சனைகளை தவிர்க்க மிக சிறந்த ஆயுதம் புன்னகை.

Monday, March 11, 2013

தாய்


இன்று கணவன் மனைவி ஏற்படும் பிரச்சனைகளால் நிறைய பிரிவுகள் ஏற்படுகின்றன தினமும் நாம் பத்திரிக்கையில் படிக்கும் செய்திகளில் இதுவும் ஒன்று. விவாகரத்து கேட்டு கியூவில் நிற்பவர்கள் ஏராளம் இதற்கு நிறைய காரணங்கள் உண்டு அதில் ஓர் முக்கியமான காரணம் தாய்ப்பாசம்...

மனைவிகள் சொல்லும் அதிக புகார் அம்மா பேச்சை கேட்கிறார். அம்மா பேச்சை கேட்டு என்னைத் திட்டுகிறார் இதனால் தனிக்குடித்தனம் போகலாம் என்றால் அம்மாவை விட்டு வர மறுக்கிறார் இது தான் அதிக குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இன்றும் கூட்டுக்குடும்பம் இருக்கத்தான் செய்கிறது. கூட்டுக்குடும்பத்திற்கு முக்கிய காரணமே தாய்ப்பாசம்தான்.

இன்று மனைவி நாளை அம்மா நாளை மறுநாள் மாமியார் இதுதான் இன்றைய நிகழ்வு. நிறைய மனைவிகள் யோசிப்தில்லை நாளை நாமும் மாமியார் ஆகப்போகிறோம் அப்போது நம் மகனை நம்மிடம் இருந்து பிரித்தால் இதை யோசித்தால் போதும் இப்பிரச்சனைக்கு எளிய தீர்வு உண்டு.

ஒரு பெண் திருமணம் ஆகி கணவனிடம் வருகிறாள் அவள் கருவுற்றதற்கு முன் கணவன் மேல் இருக்கும் அன்பு கருவுற்றதற்கு அப்புறம் குறையத்துவங்குகிறது. தனக்கு குழந்தை பிறந்த பின் அத்தாய் தன் மகனை தன் கண்ணுக்குள் வைத்து காக்கிறாள் கூடவே தனது அனைத்து அன்பையும் குழந்தையின் மீது காட்டுகிறாள். குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் வைத்து அவனுக்கு என்ன வேண்டும் என்ன எதிர்பார்க்கிறான் என அவனை பார்த்து பார்த்து வளர்க்கிறாள். மகனின் முதல் ரசிகையே தாய். மகனுக்கு முதலில் தெரிவது தாய் தான் பின்பு தான் மற்றவர்கள். மகன் குப்புற விழுந்து, தவழ்ந்து, எழுந்து நின்று மேதுவாக விழுந்து விழுந்து நடந்து ஒவ்வொன்றையும் முதலில் ரசிப்பவள் தாய் மட்டுமே..

குழந்தைப்பருவத்திலேயே அம்மா மீது அதிக அன்பு கொள்கிறான். தன்னிடம் யார் விளையாடினாலும் அவன் அம்மாவைப் பார்த்த உடன் சிரிக்கும் சிரிப்பு இப்படியே எனக்கு உசிரு போய்விட வேண்டும் என்று தான் தாய் கூறுவாள். மகனுக்கு விபரத் தெரியும் போது தான் தன் அம்மா அப்பாவின் மனைவி என்று அவனுக்கு தெரியவருகிறது. மகனுக்கும் தாய்க்கும் உள்ள பாசத்திற்கு ஈடு இணை இல்லை. 

மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் போது பெண் மகனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தாய்க்கு நிச்சயம் பிடித்திருக்க வேண்டும் என்பது மகனின் விருப்பமாக இருக்கும். திருமணம் முடிந்து வரும் மருமகள் தன் மகன் மீது பொழியும் அன்பை தாய் ஏற்றால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சியே... தாய்ப்பாசத்திற்கு இவ்வுலகில் ஈடு இணை எதுவும் இல்லை..

Friday, March 1, 2013

அஞ்சறைப்பெட்டி 01.03.2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
பட்ஜெட்டை பொறுத்தவரை எப்பவும் ஆளும் கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் நிறைவான பட்ஜெட் என்பார்கள்.. எதிர்கட்சிகள் உப்பு சப்பு இல்லாத பட்ஜெட் என்பர் ஆக அது அவர்களின் கட்சி அடிப்படையிலான முடிவு... நம்மைப்போன்ற நடுத்தரவர்க்கத்தை பொறுத்தவரை எல்லாத்துக்கும் அரசுக்கு வரி கட்டுகிறோம் எந்தபொருள் வாங்கினாலும் வரி அது போல நாம் வாங்கும் சம்பளத்துக்கும் வரி மொத்தத்தில் வரி கட்டுவதற்காகவே கொஞ்சம் சேர்த்து உழைக்கனும் போல...
  ................................................................

 
சமீபத்தில் வீடு வாங்கலாம் என்று ஞானம் பிறந்து அடுக்குமாடி குடியிருப்பை விசாரிக்கலாம் என்று சென்றேன் சிட்டி மெயினில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பு 1 கோடி என்றனர் திரும்பி பார்க்காமல் ஓடிவந்தேன் கொஞ்சம் ஊர் ஓரமாக விசாரிக்கலாம் என்று விளம்பரத்தை பார்த்து நேரில் சென்றேன் இரண்டாவது மாடி 45 இலட்சம் என்றும் கார்பார்க்கிங் வாங்கவேண்டியதில்லை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றனர் சரி எங்க இருக்கு உங்க அடுக்குமாடி குடியிருப்பு என்றேன் இப்பதான் கட்ட ஆரம்பித்திருக்கிறோம் இது தான் இடம் என்று ஒரு கோவைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஊரைக்காட்டினார்கள் மீண்டும் திரும்பி பார்க்காமல் வந்தேன்.. வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு நேரில் சென்றேன் அங்கு இருந்த போன் நெம்பரை சுழற்றி பேசும் போது இன்னும் 4 வீடுகள் தான் உள்ளது சீக்கிரம் சொல்லுங்க முடிச்சிடலாம் 65 இலட்சம் என்றார் கார்பார்க்கில் எல்லாம் சேர்த்து மாத பராமரிப்பு 1500 என்று சொன்னதும் சரிங்க என்று அங்கு குடியிருக்கும் ஒரு பெரியவர் வந்தார் அவரிடம் விசாரித்தேன் எல்லாம் சரிதான் கண்ணு இங்க ஆகாயமும் சொந்தமிள்ள பூமியும் சொந்தமிள்ள நடுவுல மட்டும் தான் சொந்தம் என்றார்.. நாளை எதாதாதவது அசம்பாவிதம் நடந்தால் நம்ம வீடு எங்க இருக்கு என்று கான்பிக்கிறது...

..........................................................................................

தமிழர் இனம் இலங்கையில் அழிக்கப்பட்டபோது எடுத்த படங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக பல குற்றங்கள் வந்தாலும் இலங்கைக்கு ஆதரவாக உள்ள நாடுகள் நிறைய உள்ளதால் முக்கியமாக சுற்றி உள்ளதால் என்னைப்பொறுத்தவரை இலஙகையை அதிகம் தண்டிக்க இப்போது இயலாது ஆனால் என்றாவது ஒரு நாள் இந்த இன அழிப்பிற்கு அவர்கள் வருந்தி மடியத்தான் போகிறார்கள்...

தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் நிச்சயம் தர்மம் மறுபடியும் வெல்லும்....
................................................................................................

இப்போது எங்கு பார்த்தாலும் ஆசிட் வீசி எதிராளியை தண்டிப்பது அதிகரித்து விட்டது இதற்கு ஆசிட் விலை குறைவு மற்றும் எளிதில் கிடைக்ககூடிய பொருளாக இருப்பது தான் காரணம். பகைக்கு எதிராளியை அளிப்பது தீர்வாகது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் ஆசிட் கூசிய பெண்ணின் குடும்ப நிலையையும், வீசியவனின் குடும்பநிலையையைம் ஒரு கனம் யோசித்தால் குற்றங்கள் குறைய நிறைய வாய்ப்பிருக்கிறது...
...............................................................................................

 
அரேபிய தீபகற்பத்தில் அமைந்துள்ள, ஐக்கிய அரவு எமிரேட் நாட்டின் ஒரு நகர மாநிலமாக திகழ்வது துபாய் நகரம். இந்த துபாய் நகரம், உலகின் முதன் முதலாக தான் திகழ வேண்டும் என்று தீராப்பசி கொண்ட நகரமாகும். இது தனது முதன் முதல் பட்டியலில், அடுத்து 72 மாடிகள் கொண்ட அதி நவீன ஓட்டல் ஒன்றை சேர்த்துள்ளது. 

உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த 72 மாடி கொண்ட ஓட்டலை கடந்த செவ்வாய் அன்று முறைப்படி துபாய் திறந்துள்ளது. 355 மீட்டர் உயரமுள்ள உலகின் மிகப்பெரிய இந்த ஒட்டலின் பெயர் ஜே.டபிள்யூ. மரியட்ஸ் மார்கியூஸ் துபாய் ஆகும்.

இது உலகின் அதி உயர 828 மீட்டர் கட்டிடமான பர்ஜ் கலீப் கட்டிடத்தின் அருகிலேயே கட்டப்பட்டுள்ளது.
...............................................................................................

உலகின் மாபெரும் ரயில் கொள்ளையன் என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தின் ப்ரூஸ் ரெனால்ட்ஸ் தனது 81வது வயதில் லண்டனில் மரணமடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக தனது தந்தை இறந்ததாக ப்ரூஸின் மகன் நிக் ரெனால்ட்ஸ் தெரிவித்துள்ளார். 1963ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒரு ரயில் கொள்ளைச் சம்பவம் அப்போது உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. கிளாஸ்கோவிலிருந்து லண்டன் சென்ற லண்டன் மெயில் ரயிலில் நடந்த பரபரப்பான கொள்ளை அது. அப்போது அந்த ரயிலில் புகுந்த கொள்ளைக் கும்பல் அதிலிருந்து 20 லட்சம் பவுண்டு பணத்தை கொள்ளையடித்து விட்டு துணிகரமாக தப்பியது. அந்தப் பணத்தின் மதிப்பு இப்போது 4 கோடி பவுண்டுகளாகும். இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தே ஆடிப் போனது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தை திட்டமிட்டு நடத்திய கொள்ளைக் கும்பலின் தலைவர்தான் ப்ரூஸ். கொள்ளைச் சம்பவத்திற்குப் பின்னர் 5 வருடம் தலைமறைவாக இருந்தார் ப்ரூஸ். 1968ம் ஆண்டுதான் அவர் சிக்கினார். பின்னர் அவருக்கு 25 வருட சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் பத்து வருடத்தில் விடுவிக்கப்பட்டார். பிறகு எழுத்தாளராக மாறி பத்திரிகைகளில் எழுதினார். சுயசரிதை எழுதினார். இப்போது மரணமடைந்துள்ளார்.

தகவல்


செவ்வாய் கிரகத்துக்கு புதுமண ஜோடி தேனிலவு செல்லும் சுற்றுலா திட்டத்தை தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்ணில் சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய கிரகம் செவ்வாய் (மார்ஸ்) இது சூரியனில் இருந்து 4-வது இடத்தில் பூமிக்கு அடுத்ததாக காணப்படுகிறது.

பூமிக்கு சந்திரன் துணைக்கோள் இருப்பதுபோல செவ்வாய் கிரகத்துக்கு போபோஸ், டெயிமோஸ் என்ற 2 துணைக் கோள்கள் உள்ளன. தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி உள்ளது.

இதுபோல் பல்வேறு உலக நாடுகளும் செவ்வாய் கிரகத்தை பற்றியே ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. பூமியைப்போல செவ்வாய் கிரகத்திலும் மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான தண்ணீர் அதிக அளவு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் காணப்படுவது போலவே செவ்வாயிலும் பருவ நிலை சுழற்சி நிகழ்கின்றது. மலைகள், பள்ளத்தாக்குகள், கால்வாய்கள், எரிமலைகள், பாலைவனங்கள் உள்ளன.

தற்போது செவ்வாயின் சுற்றுப் பாதையில் அமெரிக்காவின் 3 விண்கலங்கள் சுற்றி வருகின்றன. வருங்காலத்தில் அங்கு மனிதன் குடியேற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் டிட்டோ என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனம் எதிர்காலத்தில் விண்வெளிக்கு மனிதன் சுற்றுலா செல்லும் திட்டத்தை ஏற்கனவே அறிவித்தது. இதற்கான ஒப்பந்தத்தை நாசாவுடன் இணைந்து செய்துள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் இது தொடங்கும் என்று அறிவித்தது.

தற்போது செவ்வாய் கிரகத்தில் தேனிலவு பயணம் செல்லும் திட்டத்தையும் அது அறிவித்துள்ளது. இதில் திருமணமான தம்பதி பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மொத்தம் 501 நாட்கள் பயணம். இதற்கான செலவு ரூ. 5,400 கோடி என்றும் இன்னும் 5 வருடத்தில் இந்த திட்டம் தொடங்கும் என்றும் அதன் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கு தேர்வு செய்யப்படும் தம்பதிக்கு விண்வெளிப்பயணம் பற்றிய பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு செவ்வாய் கிரகத்துக்கு பயணம் தொடங்கும்.

தத்துவம்
 
உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தர முடியாது. மற்றவரை அறிந்தவன் புத்திசாலி; தன்னைத்தான் அறிந்தவன் ஞானி.

நல்லவர்களோடு நட்பாயிருங்கள்; நீங்களும் நல்லவனாகலாம்.

வாழ்க்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன்.. வாழ்க்கையை முழுவதாக வாழவில்லை என்று தான் பொருள்...