Thursday, April 26, 2012

அஞ்சறைப்பெட்டி 26/04/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
அடிக்கிற வெய்யில் அனைவரையும் புரட்டி போடுகிறது போதாக்குறைக்கு மின் தடை வேறு இயற்கையே மக்கள் மேல் இரக்கம் காண்பித்து நேற்று முன் தினம் பரவாலக மழை பெய்தது...

ரொம்ப நாளைக்கு அப்புறம் மழையில் நனைந்து வீட்டுக்கு சென்றேன்.. மழையை ரசித்தேன் ஆனால் கூடவே அடித்த சூறைக்காற்றால் எனது வாகனம் இடம் மாறி மாறி சென்றது அந்த அளவிற்கு சூறைக்காற்று... இருந்தாலும் மழையினால் பூமி குளிராகி மின் தடை ஏற்பட்ட பிறகும் சில் என்று இருந்தது ரொம்பா நாளைக்கு அப்புறம் ரொம்ப நேரம் தூங்கிய திருப்தி நேற்று...

...............................................................................................

இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை போக்குவரத்து காவலர் தலைகவசம் இல்லை என்று பிடித்து அபராதம் விதிப்பது நல்ல செயல் தான் ஆனால் பெண்கள் பலர் தமது துப்பட்டாவை தலைகவசம் போல் தான் சுற்றி வருகின்றனர் அவர்களை எல்லாம் நம்ம ஆட்கள் கண்டுகொள்வதில்லை..

தலைக்கவசம் இல்லாத பசங்களா பார்த்து அபராதம் விதிக்கின்றனர்.. ஆண் என்ன பெண் என்ன எல்லாருக்கும் உயிர் ஒன்னு தான்..



...............................................................................................

ஐபிஎல் போட்டி இந்த முறை மாணவர்களின் தேர்வு சமையத்திலேயே ஆரம்பித்தனர் இருந்தாலும் ஆண்டவன் சென்னையை தவிர மற்ற ஊர் மாணவர்களை கைவிடவில்லை. சென்னையில் இருப்பவர்களுக்கு ஒரு மணி நேரம் மின் தடைதான் அதனால் அவர்கள் தடையின்றி ஐபிஎல் பார்த்தனர். ஆனால் எங்க ஊர் பக்கம் ஐபிஎல் பார்க்காமல் அனைவரும் சிம்னி விளக்கில் படிக்க வேண்டிய நிலை.. எப்படியோ பசங்க ஐபிஎல்க்கு அடிமையாகமல் சிம்னி விளக்கிலாவது படிப்பது மகிழ்ச்சியே...
................................................................................................

சமீபத்தில் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒகே ஒகே படம் பார்த்தேன்.. நீண்ட நாளைக்கு பின் ரொம்ப நேரம் சிரித்து சிரித்து சந்தோசமனது மட்டுமல்லாமல் அந்த ஜோக்கை எல்லாம் வீட்டில் சொல்லியும் சிரித்துக்கொண்டு இருக்கேன்...
................................................................................................

இந்தியா அக்னி ஏவுகணையை பரிசோதித்தாலம் பரிசோதித்தது சுத்தி உள்ள நாட்டுக்கெல்லாம் இப்ப கொஞ்சம் கிலி ஏற்பட்டுவிட்டது. என்னதான் நாம் வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் ராணுவத்தில் சீனா நமக்கு 10 வருடத்துக்கு முன் சென்று விட்டார்கள் இருந்தாலும் நாம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக இருக்க வேண்டும்...
விண்ணில் இருந்தபடி பருவநிலை மாற்றம் குறித்து துல்லியமான தகவல்கள் தரும் ரீசாட்-1 செயற்கைகோள் இன்று காலையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது வரை இந்தியா விண்ணிற்கு அனுப்பியதில் இந்த செயற்‌கைகோளே மிக அதி எடை கொண்டது. இந்த செயற்கைகோள் விஞ்ஞான உலகில் ஒரு மைல்கல் என்பதில் நமக்கெல்லாம் பெருமையே...
...............................................................................................

இலங்கைக்கு சென்று வந்த எம்பிக்கள் குழு அங்கு செய்யப்படும் நிவாரண உதவிகள் நன்றாக நடைபெறுகின்றது என்கின்றனர் மகிழ்ச்சி. நிவாரணப்பணிகள் நன்றாக நடைபெறுவது தமிழர் பகுதிக்கா, சிங்களவர் பகுதிக்கா என்று தெரியவில்லை. சிங்களவர்கள் தமிழகர்கள் பகுதியில் கட்டாய குடியமர்த்தப்படுகின்றனர் என்கிறார்கள் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. தமிழ் இளைஞர்கள் அடிக்கடி காணமல் போகின்றனர் என்று சொல்றாங்க அதைப்பற்றி எதுவும் இல்லை. முகாம்களில் அடைக்கப்பட்டவர்களிடம் தனியாக பேசி இருக்கலாம், அங்கு முகாம்களில் உள்ள தளபதிகளின் மனைவிகளை பார்த்து விசாரித்திருக்கலாம் இதெல்லாம் நடந்திருந்தால் கொஞ்சம் மனநிறைவாக இருந்திருக்கும்.


..................................................................................................

மாவோயிஸ்ட்டுகள் கடத்தல் சமீப காலமாக மிக அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது நாட்டில் இன்று அதிகம் பேர் பேசிக்கொள்ளும் செய்தியாக இவர்களின் கடத்தல் தான் இருக்கின்றது. சமீபத்தில் கடத்தப்பட்ட மேனன் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதில் மிக வருத்தம். அதுவும் இல்லாமல் இவர் ஆஸ்மா நோயளி என்றும் அறியப்படுகிறது. இவர் பத்திரமாக திரும்ப வேண்டுகிறேன்..
..................................................................................................

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவீரமாக அதே சமயம் தகவல்கள் அதிகம் வெளிவரா வண்ணம் ஆதரவு தேடுகின்றனர்.  மீண்டும் அப்துல்கலாமிற்கு வாய்ப்பு வருவது போல் செய்திகள் வருகின்றன. ஒரு தமிழர் குடியரசுத்தலைவராக வந்தால் நிச்சயம் நமக்கெல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சியே...
..................................................................................................

புதுக்கோட்டைக்கு எதிர்பார்ததது போல் முன்னரே வேட்பாளரை அறிவித்து களத்தில் முன் இறங்கி உள்ளார் அம்மா. எப்பவும் இடைத்தேர்தல் ஆளம் கட்சிக்கு சாதகமாகத்தான் இருக்கும் அதற்கு புதுக்கோட்டை விதிவிலக்கல்ல.
கம்யூனிஸ்ட் போட்டியிட்ட தொகுதி கூட்டணி கட்சி என்று சொல்கின்றனர் சில நடுநிலைவாதிகள் அவர்களுக்கு நான் சொல்வது சட்டமன்ற தேர்தல் முடிந்த உடன் கூட்டணி முடிந்துவிட்டது. அதற்கு அடுத்த உள்ளாட்சி தேர்தலிலேயே கூட்டணி இல்லாமல் தான் அனைத்து கட்சியும் போட்டி போட்டது அது போலத்தான் இதுவும். 

திராணி இருந்தால் அனைவரும் தனியாக நில்லுங்கள் வெல்லுங்கள் வரவேற்கிறோம்...

..................................................................................................

 ஏற்கனவே நம் ஊரில் ஜாதிப்பிரச்சனைக்கு பஞ்சமில்லை. எத்தனை காதல் திருமணங்கள் நடந்தாலும் ஜாதிப்பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. ஏற்கனவே இங்குள்ள ஜாதிக்கட்சிகள் என் ஜாதி மக்கள் தான் அதிகம் என்று கூப்பாடு போடுகின்றனர் இதில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லாத ஒன்று... இதனால் ஜாதிபிரச்சனைகள் அதிகம் தோன்றுமே தவிர குறையாது...

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  ஓலை என்று தன் வலைப்பூவிற்கு பெயரிட்டு சிறுகதைகள் பல ரசிக்குமாறு வட்டார வழக்கில் எழுதி உள்ளார்.. ரசிக்க வேண்டிய கதைகள்...

http://siruvolai.blogspot.in/

தத்துவம்
சிந்திக்காமல் பேசத் தொடங்குவது, குறி பார்க்காமல் அம்பை விடுவது போன்றது!

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.

அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.

தகவல்


டேப்லட் மூலம் கட்டுப்படுத்தும் புதிய பறக்கும் எந்திர துப்பாக்கி ஒன்றை தயாரித்து, அதன் செயல் விளக்க வீடியோ யூடியூப்பில் அப்லோட் செய்யப்பட்டிருக்கிறது.

ஹெலிக்காப்டர் போன்று பறக்கும் ஒரு குவேட்ரேட்டர் எந்திரத்தை உருவாக்கி, அதில் இந்த எந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கியின் விசேஷம் மணிக்கு அதிகபட்சமாக 50 கிமீ வேகத்தில் இந்த குவேட்ரேட்டர் பாய்ந்து செல்லும்.

அதோடு இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியில் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளதால் இலக்கை சரியாக குறிவைத்து ஏவ முடியும். இதனால் மனிதர்களையும், பறவைகளையும் கூட வித்தயாசப்படுத்தி அறிந்து கொள்ளும் வகையில் இதன் கேமரா உதவும்.

இந்த எந்திர துப்பாக்கியின் முக்கிய அம்சமே, இதை டேப்லட் மூலம் இயக்க முடியும் என்பது தான். இதனால் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.

Wednesday, April 18, 2012

அஞ்சறைப்பெட்டி 19/04/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
இன்று பெற்றோர்கள் எவ்வளவு செலவானலும் பரவாயில்லை என் மகன் நன்றாக படிக்க வேண்டும் என்று அதிக செலவு செய்து தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். அங்கு வருடம் முழுவதும் பாடம் நடத்துகின்றனர் பல டெஸ்ட்டுகள் வைக்கின்றனர் அப்போதும் அந்த மாணவன் படிக்க வில்லை என்றால் பெற்றோரிடம் கூறி அவனை எப்படி படிக்கவைப்பது என்று யோசித்து அவனுக்கு புரிய வைக்க வேண்டும் ( பணம் வாங்குறீர்கள் அல்லாவா புரிய வைத்தால் தவறில்லை).

இதை எல்லாம் விட்டு விட்டு அந்த மாணவனுக்க பள்ளியில் தேர்வு நடக்கும் போது பிட் அடிக்க உதவியது எவ்வளவு கேவலமான விஷயம். தன் மகன் பிட் அடித்து தான் பாஸ் செய்தான் என்றால் அந்த பெற்றோருக்கு எவ்வளவு கேவலம். நிச்சயம் இதை அனுமதிக்க கூடாது. அந்த பள்ளியின் மேல் எடுக்கும் நடவடிக்கையில் மற்ற பள்ளிகள் இந்த தவறை செய்யக்கூடாது என்பதில் இதற்கு அளிக்கும் தண்டனையில் தான் இருக்கின்றது.


தங்கள் ப
ள்ளி 100 சதவீதம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக நடந்த கேவலமான விசயம். இதைப்போல் பல பள்ளிகளில் நடக்க வாய்ப்பிருக்கிறது அப்படி அவர்கள் செய்தார் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது.... இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு அந்த பொழப்பு பொழைக்கலாம்...
...............................................................................................
நான் தினமும் பயணிக்கும் வழியில் காலையும், மாலையும் வயதானவர்கள் நிறைய நின்று கொண்டு இருப்பர். ஒரு நாள் இரவு அலுவலகத்தில் இருந்து செல்லும் போது இரவு 11 ஆகிவிட்டது அப்பவும் அங்கு கூட்டம் இருந்தது. என்ன என்று விசாரிக்கும் போது தான் சொன்னார்கள் மண்ணெண்ணெய் வாங்க இரவில் இருந்து நிற்பதாகவும் அப்பவும் குறைந்த அளவு தான் கிடைக்கின்றதாம். எல்லா நாளும் கிடைப்பதில்லை அவர்கள் அறிவிக்கும் நாள் அன்று முன்னரே இடம் போட்டு விட்டால் அடுத்த நாள் சீக்கிரம் வாங்கிக்கொள்ளலாம் என்றனர். எத்தனையோ முன்னற்றம் இருந்தும் மண்ணெண்ணெய்க்காக 20 மணி நேரம் காத்திருந்து வாங்குவது கொடுமையான விஷயம்.. இப்படி இருந்தால் எப்ப நாம் வல்லரசு ஆகிறது?????


...............................................................................................

தலைகவசம் அணிவது நிச்சயம் கட்டாயம் ஆக்க வேண்டும் என்று நிறைய முறை எழுதியாச்சு இருந்தாலம் அனுபவிச்சு எழுதினால் தான் பலன் அதிகம்.. ஊரை விட்டு ஒதுக்குப்புறமான சாலையில் பயணிக்கும் போது எப்பவும் நண்பர் வேகமாக சென்று கொண்டு இருந்தார் நான் பின்னால் சென்று கொண்டு இருந்தேன் திடீர் என ஒரு நாய் ஒன்று நண்பரின் வாகனத்தில் குறுக்கே வந்து சக்கரததிற்கும் இன்ஜினுக்கும் நடுவில் சிக்கி நண்பரை புரட்டி போட்டதில் உடலில் காயம் சுமாராகவும் முகத்தில் சரிச்சு விட்டு இருந்தது. அப்பதான் நண்பனிடம் சொன்னேன் தலைகவசம் அணிவதை கிண்டல் செய்தாயே இப்ப பாரு உன் நிலமையை என்றதும் தலை குனிந்து நின்றான் நண்பன்.. மக்களே நிச்சயம் வாகனம் ஓட்டும் போது தாலைகவசம் அணியுங்கள்...

................................................................................................

காந்திஜியின் ஒரு துளி ரத்தம் படிந்த புல், மண் ஆகியவை ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.  1948-ம் ஆண்டில் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டபோது, அந்த இடத்தில் இருந்து இவை சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இவற்றைப் போலவே, காந்திஜி பயன்படுத்திய கண்ணாடி, ராட்டை போன்றவையும் எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு விலைக்கு ஏலம் கேட்கப்பட்டன. இறுதியில் கண்ணாடி ரூ.28 லட்சத்துக்கும், ராட்டை ரூ.21 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டன.  

ரத்தம் தோய்ந்த மண்ணும் புல்லும் கண்ணாடியிலான மேல்புறத்தைக் கொண்ட ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்கான கடிதமும் அதில் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பொருள்களை ஏலத்தில் வாங்கியவர்களைப் பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை.  ஏலம் விடப்பட்ட கண்ணாடி, 1890-ம் ஆண்டு வாக்கில் காந்திஜி லண்டன் வந்தபோது வாங்கியதாகும். காந்திஜி எழுதிய கடிதங்கள், ஆன்மிகத் தகவல்கள் அடங்கிய அந்தக் கால இசைத் தட்டு, பிற ஆவணங்கள் போன்றவையும் ஏலம் விடப்பட்டன. 

லண்டனைச் சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான முல்லாக், இந்த விற்பனைக்கு ஏற்பாடு செய்திருந்தது. காந்திஜியின் பொருள்கள் ஏலம் விடப்படுவது குறித்து இந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டபோது, பல்வேறு தரப்பிலிருந்து அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

................................................................................................

கடந்த சில நாட்களாக வெய்யிலின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது கடந்த வார விடுமுறையில் ஊரில் சுற்றும் போது  வெய்யிலின் உக்கரம் தணிக்க ஒரு நாளைக்கு 5 முறை குளிக்க வேண்யதாகிற்று. 
மின்சாரம் வேறு இல்லை அதனால் வேப்பமரத்தடியில் படுத்து ஓரளவிற்கு வெப்பத்தை தணித்தேன் ஆனால் இந்த வேகாத வெய்யிலிலும் கிராமத்தில் விவசாய நிலங்களில் உழுபவர்களையும், ஆடு மாடு மேய்ப்பவர்களையும் பார்க்கும் போது அவர்கள் இந்த வெய்யிலை பொருட் பொடுத்தாமல் தங்களது பணிகளில் மும்மரமாக இருந்தனர். என்னால் வெய்யில் தாங்க இயலாமல் கிணற்றில் சென்று தண்ணிக்குள் படுத்து தான் உஷ்ணத்தை தணித்தேன்...


...............................................................................................

 
கடந்த வாரம் 3 நாட்கள் விடுமுறையாக இருந்தால் வெய்யிலில் இருந்து தப்பிக்க எங்கள் பக்கத்தில் உள்ள கொடிவேரி அணைக்கு சென்றோம் அங்கு சென்றால் பயங்கர கூட்டம் அதனால் நீர்வீழ்ச்சியில் குளிக்காமல் அணையின் உட்பகுதியில் குடும்பத்தோடு தண்ணீரில் மிதந்து கொண்டு இருந்தோம். நாங்கள் குளித்த இடத்திற்கு பக்கத்தில் சில கல்லூரி பெண்களும், பசங்களும் விளையாடிக்கொண்டு இருந்தனர் பரிசல் சென்று வந்ததால் அதில் ஒரு பெண் மட்டும் தனியாக பிரிந்து வேறு பக்கம் வரும் போது அருகில் இருந்த 45 வயது உள்ள ஒரு ஆள் அந்த பெண்ணை தண்ணீரில் வைத்து ஒரு அமுத்து அமுத்தி விட்டு முழுகிவிட்டான் அந்த பெண் திரு திரு என்று முழிக்க நாங்கள் அவன் எங்கே என்று தேடும் போது அவனை கண்டுபிடிக்கவே முடியவில்லை அப்போது தான் அந்த பெண்ணைப்பார்த்தோம் வெள்ளை நிற சுடிதாரில் அப்பட்டமாக தெரிந்தால் என் மனைவி அந்த பெண்ணைக்கூப்பிட்டு இப்படி துணி போட்டுக்கொண்டு தண்ணீரில் இறங்கினால் இப்படித்தான் நடக்கும் முதலில் துப்பட்டாவை போர்த்தி குளி என்றதும் அந்த பெண் கண்ணீரோடு ம்ம் என்ற வெளியேறியது மிக பரிதாபமாக இருந்தது..

முதலில் வெளியில் குளிக்கும் போது பெண்கள் தங்கள் உடைகள் எப்படி இருக்கு என்று பார்த்த பின் தான் தான் தண்ணீரில் இறங்கி விளையாட வேண்டும் அங்கிருப்பவர்கள் நம்மை பார்க்கவேண்டும் என்று கவர்ச்சியான உடையில் நன்கு கூட்டம் உள்ள இடத்தில் குளித்தால் இப்படித்தான் நடக்கும்....


..................................................................................................

இங்கிலாந்தில் உள்ள லண்டனை சேர்ந்தவர் மாத்யூ ஹன்கின்ஸ். இவர் சவுத் ஆம்டன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவரது 4 வயது மகள் ஹெய்டி கான்கின்ஸ். லண்டனில் உள்ள 'மென்சா' என்ற நிறுவனம் பொது அறிவு போட்டி நடத்தியது. இதில் பெரியவர்களே இதுவரை 100 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்து உள்ளனர்.
ஆனால், ஹெய்தி 159 பொது அறிவு கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தாள். இதற்கு முன்பு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாவ்கிங் ஆகிய சிறுவர்கள் 160 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். இதன் மூலம் உலகிலேயே 2-வது இளம் அறிவாளி என்ற பெருமையை பெற்றாள். இவளது அறிவு திறனை மென்சா நிறுவன அதிகாரிகள் பாராட்டினர். அறிவு திறனை கண்டறிந்து அவளை ஊக்குவித்த பெற்றோரை பாராட்டி வாழ்த்தினர்.


..................................................................................................


இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி... என்ன தான் நமக்குள்ள பல பிரச்சனை இருந்தாலும் இந்த மாதிரி கண்டுபிடிப்புகளை நிச்சயம் பாராட்டித்தான் ஆகவேண்டும்... இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்..

..................................................................................................

இலங்கைக்கு சென்றுள்ள மத்திய குழுவினர் எதிர்பார்த்தபடியே கருத்துக்களை பத்திரிக்கைகளுக்கு அளிக்கின்றனர். அங்கு இருந்து இங்கு வந்த பின்னாவது யாராவது ஒருவர் உண்மையைச் சொல்வார்களா என்று பார்ப்போம்..


அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  விதியின் வலியே உயிர் செல்லும் என்று தன் வலைப்பூவிற்கு பெயரிட்டு கட்டுரைகள் பல, வரலாற்று நிகழ்வகள் என பல வகையில் எழுதி வருகிறார் அருண் ஜீவன். இவரின் தேவதைக்கான கவிதைகள் அனைவரும் ரசிக்கவேண்டிய ஒன்று..

http://humalaniman.blogspot.in/

தத்துவம்
அள்ளக் அள்ளக் குறையாத செல்வம் கல்வி என்றால், எதற்குமே ஈடு இணையற்ற செல்வம் தன்னம்பிக்கைதான்!

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

தகவல்
பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தில்  உள்ள சுக்கூர் பகுதியில் இம்ரான் அலி சேர்(31) என்கிற எக்ஸ்-ரே தொழில்நுட்ப பணியாளருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த போதே அந்த குழந்தைக்கு ஆறு கால்கள் இருந்தன. இந்த குழந்தை சுக்கூரில் இருந்து திங்கட்கிழமை கராச்சியில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவ மையத்திற்க்கு (என்.ஐ.சி.எச் ) மாற்றப்பட்டுள்ளது. 
இது குறித்து என்.ஐ.சி.எச் டைரக்டர் ஜமால் ராசா கூறும்போது: இது கால்கள் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளால் ஏற்பட்டது எனவும் இதில் ஒரு குழந்தை உயிருடன் இருப்பதாகவும் மற்றொன்றின் உடல் மறைந்து கால்கள் மட்டும் இருக்கிறது. தற்போது இக்குழந்தை நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனையில் உள்ள தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், குழந்தையின் அதிகப்படியான கால்களை நீக்குவது அந்த குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் எனவும் இது மருத்துவ சிக்கல்கள் நிறைந்த ஒன்று என்றும் தெரிவித்தார்.
எனினும் குழந்தையின் தந்தை இம்ரான் தனது குழந்தையை எப்படியாவது காப்பாற்றி தர வேண்டும் என மருத்துவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Wednesday, April 11, 2012

அஞ்சறைப்பெட்டி 11/04/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
நிலநடுக்கம், சுனாமி என்ற தகவலை நமது தகவல் தொழில்நுட்பத்தால் அனைவருக்கும் முன் கூட்டி தெரிவித்த விதம் அருமை இதிலும் பேஸ்புக், டிவிட்டரில் தகவல்கள் பற பற என பரந்தன என்றால் மிகையாகது. சுனாமி எதிர்பார்க்கிறோம் வந்தாலம் வரும் என்று பல தகவல்கள் வந்தாலும் கடைசியில் வராமல் போனது அனைவரின் நெஞ்சிலும் பாலை வார்த்தது.

சுனாமி வந்தால் எத்தனை இழப்புகள் அதை சரிசெய்யவே நமக்கு பல வருடங்கள் ஆகும். ஒரு முறை வந்து நாம் பட்ட துன்பம் போதும் இனி அந்த மாதிரி இழுப்புகளை இழக்காமல் இருக்க வேண்டும்...

சுனாமி வருவது இயற்கையின் சீற்றம் இதில் பல பேர் நடுநிலையாளர் போர்வையில் அம்மா ஆட்சி அதானல் தான் சுனாமி என்று வாய் கூசாமல் சொல்கின்றனர் இவர்கள் எல்லாம் படித்திருந்தும் முட்டாள் இதைத் தவிர வேறு என்ன சொல்ல...

...............................................................................................

ஐபிஎல் கிரிக்கெட் 4 மணியில் இருந்து இரவு வரை எங்க பார்த்தாலும் எல்லா வீட்டிலும் இப்போது இது தான் முக்கிய பொழுது போக்கு... யார் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் நமக்கு தேவை சியர்ஸ் கேர்ள்ஸ் நடனம் தான் என்கின்றனர் சிலர்...

...............................................................................................

ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய எம்.பி.க்களின் குழு வரும் ஏப்ரல் 16 -அன்று இலங்கைக்கு செல்ல இருக்கிறது. இப்பயணத்துக்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற அமைச்சகம் இணைந்து செய்து வருகிறது. இலங்கை செல்லும் 14 எம்.பி.க்களில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் போய் அங்கே ஒன்றும் நடக்கப்போவதில்லை ராஜபக்சே உடன் விருந்து சாப்பிடுவது தான் முழுமையாக நடக்கும்..

அங்கு முள் வேளிக்குள் இருக்கும் மக்களை இவர்களால் சந்திக்க முடியுமா? முன்னாள் விடுதலைப்புலிகள் கைதியாக இருக்கின்றார்களே அவர்களை சந்திக்க முடியுமா? தமிழ் பெண்களை தனியாக சந்தித்து அவர்களின் நிலை பற்றி கேக்க முடியமா? பல தளபதிகளின் மனைவிகள் தற்போது இலங்கை வசம் உள்ளனரே அவர்களை சந்தித்து பேச முடியுமா? 3 வருடம் ஆகிவிட்டது ஏன் மீள் குடியேற்றவில்லை என்று கேக்க முடியமா? தமிழர் பகுதியில் சிங்களர்கள் குடிபெயர்கின்றனர் என்று கூறுகிறார்களே இதைப்பற்றி ராஜபக்சே விடம் கேக்க முடியுமா? இதெல்லாம் நடந்தால் இக்குழு இலங்கை போவதில் ஓர் அர்த்தம் உண்டு. பயன்கள் உண்டு அங்குள்ள தமிழர்களுக்கு...

................................................................................................

ஆந்திராவில் விபச்சாராத்தில் கொடி கட்டி பறந்த நடிகையின் வாக்குமூலத்தி படிக்கும் போது நிச்சயம் பலருக்கு பல் ஆடியிருக்கும். கடைநிலை ஊழியன் முதல் மிகப்பெரிய பதவியில் இருப்பவர் வரை அனைவரும் இவர் வாடிக்கையாளர்கள்.. என்ன செய்வது அம்மணி இப்ப மாட்டிக்கிட்டாங்க...


................................................................................................

தற்போது உயிரணு (விந்து) தானம்மூலம் பெண்கள் குழந்தை பெற்று கொள்கின்றனர். ஆனால் கடந்த 1940-ம் ஆண்டில் இருந்தே உயிரணு தானம் பெற்றும் குழந்தைகள் பெற்றுள்ளனர். இவ்வாறு குழந்தை பெறுபவர்கள் மற்றும் உயிரணு தானம் வழங்கியவர்கள் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 
ஆனால், ஒரு விஞ்ஞானியின் உயிரணு தானம் மூலம் 600 குழந்தைகள் பிறந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவரது பெயர் பெர்டோல்டு வியஸ்னர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் லண்டனில் சொந்தமாக கருத்தரித்தல் மையம் ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். இந்த மையத்தில் உயிரணு தானம் வழங்கியதன் மூலம் 1500 குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றுள் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விஞ்ஞானி வியஸ்னர் உயிரணுவின் மூலம் பிறந்தவை என தெரியவந்துள்ளது.
 
இவர்களில் இரட்டையர்களும் அடங்குவர். கனடாவை சேர்ந்த டாக்குமெண்டரி சினிமா தயாரிப்பாளர் பார்ரி ஸ்டீவன், லண்டன் வக்கீல் டேவிட் கோலன்ஸ் இது குறித்து ஆய்வு நடத்தி இந்த ரகசியத்தை கண்டு பிடித்தனர். விஞ்ஞானி வியஸ்னர் ஆண்டுக்கு 20 முறை உயிரணு தானம் செய்துள்ளார். கடந்த 1940 முதல் 1960 வரை அதாவது 20 ஆண்டுகள் தானம் செய்து இருக்கிறார். இவர் தற்போது உயிருடன் இல்லை.
 
கடந்த 1972-ம் ஆண்டு இறந்துவிட்டார். அமெரிக்காவை சேர்ந்த ஒருவரின் உயிரணு தானம் மூலம் 150 குழந்தைகள் பிறந்துள்ளன. அதுவே உலக அளவில் அதிக அளவாக கருதப்பட்டது. அந்த சாதனையை விஞ்ஞானி வியஸ்னர் முறியடித் துள்ளார். மேலும் இதே கருத்தரித்தல் மையத்தில் இவருக்கு அடுத்த படியாக மற்றொருவர் அதி கம் பேருக்கு உயிரணு தானம் செய்துள்ளார். ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

...............................................................................................

இங்கிலாந்தில் உள்ள பைப் என்ற இடத்தில் பள்ளி பஸ் ஒன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் ஏராளமான மாணவ-மாணவிகள் அமர்ந்து இருந்தனர். பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மயங்கி சாய்ந்தார். பஸ் தாறுமாறாக ஓடியது. இதை கவனித்த அருகில் இருந்த 11 வயது மாணவன் சமயோசிதமாக செயல்பட்டு பஸ் ஸ்டியரிங்கை பிடித்து பஸ்சை சரியான பாதையில் செல்ல வைத்ததுடன் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினான்.

இதனால் பஸ்சில் இருந்த அனைவரும் காயமின்றி தப்பினர். மேலும் பஸ்சில் இருந்த மாணவர்களே அவசர உதவிக்கு தகவல் கொடுத்து டிரைவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
 
..................................................................................................

அனைவரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  விதியின் வலியே உயிர் செல்லும் என்று தன் வலைப்பூவிற்கு பெயரிட்டு கட்டுரைகள் பல, வரலாற்று நிகழ்வகள் என பல வகையில் எழுதி வருகிறார் அருண் ஜீவன். இவரின் தேவதைக்கான கவிதைகள் அனைவரும் ரசிக்கவேண்டிய ஒன்று..

http://humalaniman.blogspot.in/
 
தத்துவம்
 
மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!

நாம் படிக்கப் படிக்க நம்மிடமிருக்கும் அறியாமையை அறிந்து கொள்கிறோம்!

இந்த உலகில் நமக்கு விதிக்கப்பட்ட கடமையைச் சரிவரச் செய்து முடிப்போமானால், நாம் யாரிடமும் எப்போதும் அச்சமே அடையத் தேவை இல்லை.
 
தகவல்
 
 
ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம் என இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுசம்மந்தமாக அவர்கள் நடத்திய ஆய்வில் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முன்பு பலருக்கு ரத்த அழுத்த நோய் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

எனவே சர்க்கரை நோயின் அறிகுறியாகத்தான் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது இதயத்தில் உள்ள பாதிப்பாகவும் இருக்கலாம். சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதுவும் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

எனவே ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உடனடியாக இதயம், சிறுநீரகம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். மேலும் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்றும் பரிசோதித்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளர்.

Monday, April 9, 2012

கிராமத்து திருவிழாவும் ரெக்கார்ட்டு டேன்சும்...


ரெக்கார்ட்டு டேன்சு இல்லை எனில் கிராமத்திருவிழா இன்று களைகட்டாது என்று சொன்னால் அது மிகையாகது. ஆபாசம் அதிகரித்ததால் அந்நிகழ்ச்சியை தடை செய்துவிட்டார்கள்... 

திருவிழா ஒவ்வொரு ஊரிற்கும் மாறுபடும். ஒவ்வொரு ஊரிற்கும் ஒரு முறை இருக்கும் அதன்படி அந்த ஊரில் திருவிழாக்கள் அமைந்திருக்கும். திருவிழா அந்த ஊரின் மக்கள் ஒன்றாக சந்தோசமாக இருக்க அந்த ஊர் முன்னோர்களால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் என்றும் சொல்லலாம். எங்கள் ஊர் திருவிழா பற்றியும் அதன் முறைகள் பற்றியும் முன்னேரே எழுதி உள்ளேன். திருவிழாவில் இரவு நேர கலை நிகழ்ச்சிகள் மிக பிரபலம். ஒவ்வொரு ஊரிலும் ஒரு நிகழ்ச்சிகள் என ஊருக்கு ஊர் வித்தியாசப்படும் இந்நிகழ்ச்சி பற்றி என் நினைவில் உள்ள அனுபவங்கள்...

திருவிழாவை எங்கள் வட்டார வழக்கில் நோம்பி என்று சொல்வோம்.  நான் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் போது அப்போது எல்லாம் மே மாதம் மட்டும் தான் பள்ளி விடுமுறை. மே முதல் வாரத்தில் தான் எங்கள் திருவிழா வரும் அதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி அப்போது இருந்து இப்போது வரை ஊரில் இருக்கும் போது இரவு நேர கலை நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் பார்ப்பது என் வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்ச்சிகள் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் அனுபவமும்...

கூத்து



முதலில் திருவிழாவின்போது பொங்கல் நாள் வைக்கும் அன்று இரவு கூத்து நடத்துவார்கள். கிராம மக்களது வாழ்வாதாரங்களையும், அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலை. கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்குச் சொல்கின்றன. முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்தக் கூத்துக்களின் கதையம்சமும், கூத்துக்களினூடாக கூறப்படும் செய்திகளும் தற்போதைய சமூகத்தினரையும் ஈர்ப்பவையாக அமைந்து இருக்கும். கூத்தில் இரமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் உண்டு.. இந்த கூத்தில் கோமாளியின் நகைச்சுவை அவைரும் ரசித்து பார்க்கலாம்.. ( இவர் இடையில் கெட்டவார்த்தைகள் அதிகம் பயன்படுத்துவார்). இன்று இந்த கூத்து நிகழ்ச்சியை பார்ப்பது ரொம்ப கடினம்.



கூத்தில் பேசும் 2 அர்த்த வசனங்கள் இப்படித்தான் இருக்கும்....

“ இந்த உலகில் உள்ள சர்வ ஜீவ ராசிகளையும் நான் தான் படைத்தேன்”
“சர்வ ஜீவ ராசிகள்னா?”
“புல், பூண்டு முதல் மனிதன் வரை படைத்தவன் நான்தான்”
“அப்படின்னா, என்னை படைச்சது?”
“உன்னைப் படைத்ததும் நான்தான் மகனே”
“அடி செருப்பால... எங்க ஆத்தா இதக் கேட்டுச்சி விளக்கமாறு பிஞ்சிடும். நான் எங்க அப்பனுக்கு பொறந்தவன்டா”


திரைப்படம்


திருவிழா சமையங்களில் ஊரில் திரைகட்டி புரெஜெக்டர் வைத்து படம் ஓட்டுவார்கள் விடிய விடிய மூன்று திரைப்படங்கள் ஓடும். வீட்டில் இருந்து பாய், தலையாணை, தண்ணீர் பாட்டிலுடன் சென்று படம் பார்ப்போம். முழு படம் முடிந்த பின் தான் வீட்டுக்கு வருவோம்.. விடிய விடிய படம் பார்த்தோம் என்று சொல்லித்திரிந்த காலங்கள் அது. அதற்கு பின் விடியோ கேசட் மூலம் படம் ஒளிபரப்புவார்கள். இது தொலைக்காட்சி முன் ஊரே உட்கார்ந்து படம் பார்க்கும் இவ்வாறு பார்க்கும் போது சின்னக்கல்லை எடுத்து பிடித்வர்கள் மேல் போட்டு விளையாடுவது தனி சுகம். படகோட்டி, இதயக்கனி என பல படங்கள் நன்கு ஞாபகம் இருக்கிறது திரையில் பார்த்தது.

நாடகம்


இன்றும் கிராமத்திருவிழாவில் அழியாமல் ஊர் ஊருக்கு நடந்து கொண்டு இருப்பது நாடகம் தான்.  பழைய படி அதிகம் நடக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாடகத்தில் தான் எத்தனை சுவாரஸ்யங்கள் நாடகம் நடிக்க ரிகல்சர் பார்க்றேன் என்று  தம் அடிச்சு பழகியது எல்லாம் அப்பத்தான். நான் 6வது படிக்கும் போது முதன் முதலாக நாடகம் நடித்தேன் நாடகத்தின் பெயர் "நீந்தத்தெரியாத மீன்கள்" அந்த நாடகத்தில் நான் நடனமாடிய பாடல்  "வாடி என் கப்பங்கிழங்கே" என்ற பாடல் அப்புறம் ஒரு நான்கைந்து வருடம் நாடகம் நடித்தோம். நாடகத்தில் நடிக்க சேலத்தில் இருந்து நடிகைகளை அழைத்து வந்து நடத்துவார்கள். அவர்களுடன் நம்மாளுக அடிக்கும் லுட்டியை கிண்டல் செய்வது தான் அப்போதைய பொழுது போக்கு. கிராமத்து இளைஞனுக்கு அப்போதெல்லாம்  நாடகத்தை பற்றி தான் அவர்கள் பேச்செல்லாம் இருக்கும். இந்த நாடகம் இன்னும் மறையாமல் நிறைய இடங்களில் நடப்பது வரவேற்கத்ததக்கது ஆனால் விடிய விடிய பார்க்கனும் அது தான் கவலை...

நடன நிகழ்ச்சி

முதன் முதலாக எங்கள் ஊரில் மதுரை நீக்ரோ பாய்ஸ் நடனம் என்ற பெயரில் பாடலுக்கு நடனமும் பின் மிமிக்கிரி, தீ நடனம், பாம்பு நடனம் என்று பல்வேறு நடனங்கள் இடம் பெற்று பெருத்த எதிர்பார்ப்புகள் இருந்தன அப்போதெல்லாம் சுத்து வட்டாரத்தில் எந்த ஊரில் நீக்ரோ பாய்ஸ் நடனம் என்றாலும் மேடைக்கு முன் இருக்கும் இடம் எனக்குத்தான் இரவு 10 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சிக்கு 6 மணிக்கு துண்டு போட்டு உட்கார்ந்த காலம் எல்லாம் உண்டு. இந்த வகையான நடனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து பாடலுக்கு நடனம் அடுத்து அரைகுறை நடனம் என்று இன்று நடனங்கள் நடைபெறும் இடத்தில் இருந்து ஒரு அடி கூட நகரமுடியாத அளவிற்கு மக்களை ஈர்க்க ஆரம்பித்து விட்டன.

நடன நிகழ்ச்சியை பிற்காலத்தில் ஊரில் நாங்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கால கட்டம் வந்தது அதற்கு முன் நின்று வசூல் செய்து நடனம் ஆடும் நடிகைகளை தேர்வு செய்வதில் இருந்து அனைத்திலும் முன் நின்று செய்து செய்தது எல்லாம் இப்போது நினைவில். பின் சில வருடங்களுக்கு அப்புறம் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து விட்டார்கள் அப்புறம் நாடகம் நடத்தி அதில் இரண்டு காட்சிக்கு ஒரு நடனம் என்ற புதிய முறையாக நாடகத்தில் நடன நிகழ்ச்சியை புகுத்தி நாடகம் என்ற பெயரில் நடனம் இடம் பெறச்செய்தோம்.

இந்த வருடம் மீண்டும் நாடகம் மட்டுமே நடத்த அனுமதியாம் அதில் இடம் பெறும் பாடல்கள் 5க்குமேல் இருக்ககூடாது என்று சொல்கிறார்கள் என்றனர். இந்த வருடம் கிடாக்கறி சாப்பிட்டாலும் நடன நிகழ்ச்சி நடப்பதில்லை என்பது மிக வருத்தமே...

கரகாட்டம்



கிராமத்திருவிழாவில் இதற்கு அதிக இடம் உண்டு. கராகாட்டம், நையாண்டி மேளம் மற்றும் குறவன் குறத்தி ஆட்டம் என்று சூட்டைக்கிளப்பும் இந்த வகை ஆட்டங்கள். கராகட்டத்தில் கரகத்தை வைத்து சுற்று ஆடுவதும் அதில் பல வித்தைகளும் செய்து காட்டுவர் நடன மங்ககைகள் இப்போதெல்லாம் அந்த வகை ஆட்டத்தை பார்க்க இயவில்லை. சும்மா கரகத்தை வைத்து சீன் காட்டு ஆடும் ஆட்டம் தான் அதிகம். அதுவும் குறவன் குறத்தி ஆட்டத்தில் பேசும் வசனங்கள் எல்லாம் இரட்டை, மூன்று வசனங்கள் கொண்டதாக இருக்கும். பெண்ணுடன் பேசும் பேச்சு நேரடியாக வசனங்களை பேசி அனைவரையும் ரசிக்க வைப்பர்.. இதைப்பார்க்க கூட்டம் முண்டியடிக்கும்.

இந்த குறவன் குறத்தி ஆட்டத்தில் அவர்கள் பாடும் 2 அர்த்தம் கொண்ட பாடல்கள் அந்த நிகழ்ச்சிக்கு பின் சிறிது காலம் அனைவரையும் முனு முனுக்க வைக்கும். (சித்தாட கட்டிகிட்டு ) என்ற பாடலின் 2 அர்த்த முள்ள வேறொரு பாடல் இன்றும் நினைவில் உள்ளது.

அடுத்த பதிவு:

ஒரிஜனல் ரெக்கார்ட்டு டேன்ஸ் நடக்கும் இடமும் பார்க்க சென்ற போது ஏற்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளும்...

படங்கள் கூகுள்...

Wednesday, April 4, 2012

அஞ்சறைப்பெட்டி 05/04/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

கடந்த சில வாரங்களாக அதிக அளவில் பதிவுகள் எழுத இயலவில்லை கடந்த வாரம் அஞ்சறைப்பெட்டி அன்று ப்ராஜக்ட் டெலிவரி அதனால் வேலைப்பளுவில் அஞ்சறைப்பெட்டியும் எழுத இயலவில்லை. மீண்டும் இந்தவாரத்தில் தொடரும் வழக்கம் போல் எனது பதிவுகள்...
...............................................................................................

பங்குனி பிறந்ததில் இருந்து எனது மனைவி ஊரான அந்தியூர் பத்ரகாளியம்மனுக்கு பூ மிதிப்பதாக இருந்தேன் அதனால் வெளியில் சாப்பிடாமல், அசைவ உணவுகள் சாப்பிடாமல் இருந்தேன். கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து உணவுகள் சாப்பிடாமல் பால், பழம் மற்றும் பழ ரசங்கள் மட்டும் 3 நாட்கள் சாப்பிட்டு விரதம் இருந்தேன் நேற்று வெற்றிகரமாக மதியம் 2 மணியவில் பூ மிதித்துவிட்டு எனது நேர்த்திக்கடனை அம்மனுக்க நிறைவேற்றினேன்..

பூ மிதிக்கும் போது கூட எனக்கு அனல் தெரியவில்லை பூ மிதித்து விட்டு வீட்டுக்கு வரும் வழியில் தோர் சாலையில் ஒரு 7 நிமிடம் நடந்த போது கால் பாதத்தில் இதுவரை அப்படி ஒரு வெப்பத்தை கண்டதில்லை. கொஞ்ச நேரம் நடந்த எனக்கே இப்படி என்றால் செருப்பில்லாமல் நம்ம ஊரில் நடக்கும் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் அவர்களை நினைக்கும் போது மிக வருத்தமாக உள்ளது. இனி செருப்பு அந்ததும் அதை தூக்கி வீசுவதை விட்டு விட்டு பழைய துணிகளை கொடுப்பவர்களுக்கு செப்பலையும் கொடுக்கலாம்...

3 நாள் விரதத்தில் முக்கியமான விசயம் ஒரு 2 கிலோ எடை குறைந்துள்ளேன். இனி வாரம் ஒரு நாள் விரதம் இருக்கவேண்டியது தான்...


...............................................................................................

மீண்டும் ஐபிஎல் அதுவும் இப்போது பரிட்சை நேரத்தில் துவங்கி உள்ளது கொஞ்ச நாட்கள் தள்ளி துவங்கி இருக்கலாம். ஐபில் நடத்துபவர்களுக்கு பரிட்சையா முக்கியம் பணம் தானே முக்கியம். முழுக்க முழுக்க பணத்திற்காக மட்டுமே விளையாடும் விளையாட்டு இந்த ஐபிஎல் இதில் மெனக்கெட்டு பார்ப்பதை விட குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடலாம்...

................................................................................................

கிராமப்புறங்களில் நடக்கும் நடன நிகழ்ச்சிக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. முதலில் நடனங்களில் ஆரம்பித்து பின் இது ஆபாச நடனமாக மாறியது அனைவரும் அறிந்ததே. இந்நிகழ்ச்சிகளை ஆரம்பித்திலேயே தடை செய்திருந்தால் இன்று ஈசல் போல வளர்ந்திருக்காது ( ஒரு 4 வருடத்திற்கு முன்  இந்நிகழ்ச்சியை பார்க்க ஊர் ஊராக சுற்றியது தனிக்கதை). இந்நிகழ்ச்சிகளை தடை செய்தது போல் தொலைக்காட்சியில் வரும் ஆபாச நடனங்களையும் தடை செய்ய வேண்டும். ( அதுக்கு யாராவது வழக்கு தொடர்ந்தால் மிக்க மகிழ்ச்சி) அவ்வாறு செய்தால் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கும் போது தைரியமாக சேனல் மாற்றலாம்...

................................................................................................

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் `டொனால்டு டிரம்ப்ஸ்' என்ற அமைப்பின் சார்பில் உலக அழகிப்போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாடுகளில் அழகிப்பட்டம் வென்றவர்கள், இந்த போட்டியில் பங்கேற்பார்கள். அதன்படி, கனடா நாட்டின் அழகி போட்டியில் ஜென்னா தலக்கோவா என்ற 23 வயது மாடல் அழகி பங்கேற்றார்.
இறுதி சுற்று வரை தகுதி பெற்ற அவருக்கு போட்டியில் தொடர்ந்து நீடிக்கத்தடை விதிக்கப்பட்டது. காரணம், ஜென்னா ஆணாக இருந்து பெண்ணாக மாறிவர் என்பதுதான்.   உலக அழகி போட்டியில் கலந்து கொள்வதற்கு, ஒருவர் இயற்கையிலேயே பெண்ணாக பிறந்து இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. தற்போது ஜென்னா `உண்மையிலேயே ஒரு பெண்தான்' என்றாலும், விதியின்படி அவரை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த முடிவை எதிர்த்து மாடல் அழகி ஜென்னா போர்க்கொடி உயர்த்தினார். அவருக்கு ஆதரவாக பொதுமக்களும் குரல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து கனடா அழகி போட்டியில் பங்கேற்க ஜென்னாவுக்கு போட்டியை நடத்தும் அமைப்பு அனுமதி வழங்கி இருக்கிறது.   ஜென்னாவுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டபோது பேட்டி அளித்த கனடா அழகி போட்டி அமைப்பாளரான டெனிஸ் தவிலா, "ஜென்னா உண்மையான பெண்ணைப்போல் இருக்கிறார்.
அவர், உண்மையான பெண்தான். ஆனால், விதிகளின்படி (பிறக்கும்போதே பெண்ணாக பிறந்து இருக்க வேண்டும்) அவரை அனுமதிக்க முடியாது என்று கூறி இருந்தார். அதற்கு விளக்கம் அளித்த ஜென்னா, 4 வயது வரை பெண்ணாகவே இருந்ததாகவும், அதன்பிறகு ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தினால் ஆணாக மாறி, பின்னர் 19-வது வயதில் அறுவை சிகிச்சை மூலம் முழுமையான பெண்ணாக மாறிவிட்டதாகவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 
...............................................................................................

உயர்த்திய மின்சார கட்டணத்தை மீண்டும் குறைத்துள்ளார் முதல்வர். மின்சார கட்டணதை உயர்த்துவது பிரச்சனையல்ல மகக்ளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வேண்டும் என்பதே பிரச்சனை.. விரைவில் இப்பிரச்சனை தீரும் என அனைவரும் போல் நானும் எதிர்பார்க்கிறேன்...


..................................................................................................

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 47 வயது பெண் சூசன் மில்மேன். இவர் பேஸ்புக் இணைய தளம் மூலம் சிறுவர்கள் பலருடன் பழக்கம் வைத்திருந்தார். அதில் சில சிறுவர்களுக்கு தனது அந்தரங்க அழகை வெப் கேமரா மூலம் காட்டி வந்தார். இதில் மயங்கிய 15 வயது சிறுவன் ஒருவனை தனது படுக்கை அறைக்கு அழைத்து வந்த சூசன் சிறுவனுடன் 2 முறை செக்ஸ் உறவு கொண்டார்.

இதுபற்றிய தகவல் வெளியே தெரிய வந்தது. அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இங்கிலாந்து சட்டப்படி சிறுவர்களுடன் உறவு கொள்வது குற்றமாகும். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 1 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
தகவல்
திருமணமான பெண்கள் உடல் எடையை குறைக்க சாப்பாட்டில் கட்டுப்பாடுகளை மேற்கொள்கின்றனர். அதேபோன்று கர்ப்ப காலத்திலும் கடைபிடிப்பதால் விபரீத விளைவுகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது கர்ப்பிணி ஆக இருக்கும் பெண் உணவில் கட்டுப்பாட்டை மேற்கொள்வதன் மூலம் அவருக்கு குண்டான குழந்தை பிறக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

அதே நேரத்தில் அக்குழந்தையை எதிர்காலத்தில் சர்க்கரை நோய் பாதிக்கும். இது குறித்த ஆராய்ச்சியை மான்செஸ்டர் பல்கலைக் கழக நிபுணர்கள் செம்மறி ஆட்டின் மூலம் நிகழ்த்தினர்.

கர்ப்பமாக இருந்த பெண் ஆட்டுக்கு உணவு கட்டுப்பாடுகளை விதித்தனர். அந்த ஆடு “கொழு கொழு”வென குண்டான குட்டியை ஈன்றது. முன்னதாக, ஆட்டிக்குட்டி பிறக்கும் முன்பே அதன் மூளையை பரிசோதித்தனர். அதன் மூளை திசுக்களின் டி.என்.ஏ. மூலக்கூறுகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதுதான் குட்டிகளை கொழு கொழு வென பிறக்க செய்வது தெரிய வந்தது. அதே நேரத்தில் நன்றாக தீனி அளிக்கப்பட்ட ஆடு சாதாரண எடையுள்ள குட்டிகளை ஈன்றது. அதேபோன்று தான் மனிதர்களிலும் மாற்றங்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே, கர்ப்பிணிகள் சாப்பாட்டில் கட்டுப்பாடு வைத்து கொள்ளவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றன.
 

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  இனியவை கூறல் என்று தனது வலைப்பூவிற்கு பெயரிட்டு கட்டுரைகள் பல, வரலாற்று நிகழ்வகள் என பல வகையில் எழுதி வருகிறார். இவரின் கொங்கு மண்டல வரலாற்று சான்று அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று..

http://eniyavaikooral.blogspot.in/
தத்துவம்
ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்க்கையில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளைச் சரிவர செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம்.
ஒருவர் தான் எப்போதுமே எந்தத் தவறும் செய்ததில்லை என்று கூறுவரரேயானால். அவர் எப்போதும் புதிய ஒன்றை முயற்சிக்கவில்லை என்று அர்த்தம்...
 ஒரே குறிக்கோள்
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?