உள்ளுரில் இருந்து உலகம் வரை........
இந்த வருடத்தில் நான் நிறைய மகிழ்ச்சியை பெற்றுள்ளேன் பதிவுலகில் எனக்கு என்று தனி அடையாளமாக குறிப்பிட்ட அளவு நண்பர்களைப் பெற்று உள்ளேன். இந்த வருட கடைசியில் தான் நண்பர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற அஞ்சறைப்பெட்டி எழுத ஆரம்பித்தேன். அடுத்து மறக்க முடியாதது எனக்கு மகன் பிறந்தது.. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
&&&&&&&&&&&&&&
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என ஆசிரியர்கள் நாமக்கல்லில் தொடர் மறியல் போராட்டம் நடத்தி உள்ளனர் இது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அந்த அளவிற்கு ஊதியம் கேட்கும் இவர்கள் வாங்கும் ஊதியத்திற்கு பாடம் நடத்துகிறார்களா என்றால் கேள்விக்குறிதான். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றி வெற்றி பெற்றால் மட்டுமே இவர்களுக்கொல்லாம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். இல்லை எனில் படித்து வேலை இல்லாத புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
&&&&&&&&&&&&&
தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் வேலையில் விலைவாசியும் கிடு கிடு என்று உயர்ந்து கொண்டு இருக்கிறது வெங்காய விலை மீண்டும் 80தைத் தொட்டுள்ளது. கட்டுமானப்பொருட்களின் விலையும் விர் என்று உயர்ந்து இருக்கிறது. விலைவாசியை கட்டுப்படுத்தினால் தான் ஓட்டு கேக்கும் போது பதில் சொல்ல முடியும் இல்லை என்றால் எதிர்கட்சிகளுக்கு கொண்டாட்டம் தான். இறக்குமதியை அதிகப்படுத்தி விளைபெருட்களின் விலையை குறைக்க வேண்டும்.
&&&&&&&&&&&&&
சமீபத்தில் பவானியில் இருந்து மேட்டூர் சென்றேன் அழகான இடம் ஆனால் பேருந்தில் தான் செல்ல முடியவில்லை அந்த அளவிற்கு சாலைகள் மோசமடைந்து உள்ளன. பேருந்தில் ஒரு 20 நிமிடம் பயணம் செய்தாலே உட்காரும் இடம் அதிர்ந்து உடல் வழியை அதிகப்படுத்துகிறது. ஏற்கனவே சாலைகள் தரம் இல்லாமல் இருந்தது இப்போழுது மழையால் முற்றிலும் தரம் குறைந்து இருக்கிறது. விரைவில் தேர்தல் வருவதால் சாலைகளை கவனித்தால் ஓட்டுகள் கவனிக்கப்படும்...
&&&&&&&&&&&&&
நான் இடும் இடுகைகளை எல்லாம் நான் ஒரு இரண்டு முறை வாசிப்பேன் எனக்கு திருப்தி என்றவுடன் போஸ்ட் செய்வேன் சமீபத்தில் நண்பர் ஒருவர் எனது பதிவுகளை ஒரு 20 முறை படித்து அதில் உள்ள எழுத்துப்பிழைகளை மேற்கோள் காட்டி அனானிம்ஸ் ஆக கமெண்ட் போட்டு இருந்தார். தவறுகளை சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை நண்பரே உங்கள் சொந்த பெயரிலேயே கமெண்ட் போடுங்கள். என்னை சந்தித்துள்ளேன் என்று கூறி உள்ளீர்கள் நிச்சயம் நீங்கள் செய்யும் இந்த உதவிக்கு அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது நிச்சயம் ஒரு புல் உண்டு.
&&&&&&&&&&&&&
தென்கொரிய பள்ளிகளில் “ரோபோ”க்கள் மூலம் ஆங்கிலம் கற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக “எங்ஜீ” என்றழைக்கப்படும் வெள்ளை நிற முட்டை வடிவிலான “ரோபோ”க்களை கொரிய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.
3.3 அடி உயரமுள்ள “ரோபோ”க்களில் உருவப் படங்கள் தெரியும் வகையில் டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியை போன்று வகுப்பறை முழுவதும் சுற்றி நகர்ந்து வந்து மாணவர்களிடம் பேசிய படியே பாடம் நடத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பாட்டுபாடிக் கொண்டும், கை, கால் மற்றும் தலையை அசைத்த படி நடனமாடிய படியும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் வசதியும் இதில் உள்ளது. தொடக்கத்தில் தென்கொரியாவில் உள்ள தேகு” என்ற இடத்தில் உள்ள 21 தொடக்கப்பள்ளிகளில் இந்த “ரோபோ”க்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
&&&&&&&&&&&&&
திரைப்படங்களில் நாட்டாமையாக நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமாரின் பல தனிப்பட்ட விசயங்கள் சந்தி சிரிக்கின்றது. தந்தைக்கும், மகளுக்கும் உள்ள பிரச்சனையால் உலகமே சிரிக்கிறது. இவருக்கு இங்க தான் பிரச்சனை என்றால் இவர் நடிக்கும் சீரியலிலும் மகளால் இவருக்கு பிரச்சனை... நல்ல ஒற்றுமை...
நாட்டு நடப்பு
குளிர்கால கூட்த் தொடர் ஒரு நாள் கூட கூடாத நிலையில் அடுத்து வரும் பட்ஜெட் கூட்டம் நன்றாக நடக்க வேண்டும் என காங்கிரசார் இப்போது இருந்தே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். என்னைப் பொறுத்த வரை எதிர் கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றினால் நன்றாக நடக்கும் இல்லை எனில் வரும் தொடரும் தினமும் கூச்சலாகத்தான் இருக்கும்.
டீசல் விலை மீண்டும் உயர வாய்ப்பிருக்கிறது நாளை கூடும் மந்திரி சபையில் இதற்கான கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். இப்படியே விலையே ஏத்திகிட்டே போன எப்பதான் குறைக்கிறது. அரசு பெட்ரோல் டீசலில் கடைபிடிக்கும் நடை முறையை மாற்ற வேண்டும் அப்போது தான் இதற்கு விடிவு காலம் பிறக்கும்..
தகவல்
கங்காரு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விலங்கு. இதன் குட்டிகள் முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பே பிறந்துவிடுகின்றன. பாக்கி வளர்ச்சியெல்லாம் கங்காருவின் வயிற்றுப் பையில்தான் நடக்கும். குட்டி, பிறந்த உடனே வயிறு வழியாக ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். பிரசவ நேரத்தில் கங்காரு, குட்டி வெளியே வருகிற துளை முதல் வயிற்றின் மேல் பகுதிவரையான பாகத்தை நக்கும். இப்படி நக்கி நக்கி தன் உடல் ரோமத்தின் வழியே ஒரு பாதையை ஏற்படுத்தும். குட்டி இந்தப் பாதை வழியே ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். அம்மாவின் பாலைத்தவிர மற்ற உணவை, செரிக்கக்கூடிய திறன் வரும்போதுதான் உட்கொள்ளும். இத்திறன் வரும் வரை குட்டி, அம்மாவின் பைக்குள்ளேயேதான் இருக்கும். குட்டியின் உடற்பகுதிகளெல்லாம் முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகுதான் கங்காரு, தன் குட்டியை கீழே இறக்கிவிடும். பிறகு எப்போதாவது நரியோ, கழுகோ, மற்ற விலங்குகளோ பிடிக்க வரும்போது குட்டி ஓடி வந்து தன் தாயின் பைக்குள் ஏறி ஒளிந்துகொள்ளும்.
மொக்கை ஜோக்
ராஜா: ஏன் அவனை அடிக்கிறீங்க?
வீரன்: மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லீட்டான்.
ராஜா: நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!
வீரன்: அதைத்தான் சொல்லீட்டான்...!
--------------------
ஒரு வழுக்கைத் தலை ஆள்:
"கொஞ்சம் ஏமாந்ததால எல்லாரும் என் தலை மேல ஏறி உட்கார்ந்துட்டாங்க?"
"அப்புறம் என்ன ஆச்சு?"
"வழுக்கி விழுந்துட்டாங்க!"
------------------------------
ஒரு நாள் காட்டுக்குள்ள ஒருத்தன் வண்டி ஓட்டிட்டு போனான்.
அப்ப, 5 சிங்கங்க அவன துரத்துச்சி
அதுல இருந்து அவன் எப்படி தப்பிச்சி இருப்பான்?
இது கூட தெரியலையா?
left indicator போட்டுட்டு rightla போய்ட்டான்.
இப்படித்தான் அறிவு ஜீவியா இருக்கணும்.
வரட்டா.,…….
அறிமுக பதிவர்
தத்துவம்
என்னதான் நமக்கு இரண்டு காது இருந்தாலும்
1 என்று சொன்னால் 1 என்று தான் கேக்கும்...
எவ்வளவு நீச்சல் தெரிஞ்சாலும் டம்ப்ளர் தண்ணீல நீந்த முடியாது
செல்லுல பேலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது, மனுஷனுக்கு கால் இல்லனா, பேலன்ஸ் பண்ண முடியாது
மாப்ளே,புது படம் ஒன்று எடுக்கறேன்,நீதான் ஹீரோ,நான் வில்லன்,நான் ஹீரோயினை ரேப் பண்றேன்,நீ அவளை மேரேஜ் பண்றே,அவளுக்கு வாழ்க்கை தர்றே,ஏன்னா நீதான் ஹீரோவாச்சே,படத்தோட டைட்டில் “இனிஷியல் உன்னுது,பேபி என்னுது.”
நட்புக்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம்?
வீட்ல இருக்கறவனை ஒயின்சாப்புக்கு போகை வைப்பது காதல், ஒயின்சாப்ல இருக்கறவனை வீட்டுக்கு கூட்டிட்டு வருவது நட்பு...