Monday, December 13, 2010

எனக்கு வடை கிடைச்சிருச்சு...

நேற்று மாலை 6 மணியளவில் எனது வலைப்பூ திடீர் என காணவில்லை. தீடீர் அதிர்ச்சி என்ன செய்வது என்று தெரியாமல் நண்பர்களை தொலை பேசியில் அழைத்து விவரத்தை சொன்னேன்.

பின் வீட்டிற்கு சென்று மனைவியிடம் சொல்லி விட்டு நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி தகவலை சொன்னேன். நானும், மனைவியும் பல உதவிப்பக்கங்களை தேடிக்கொண்டு இருந்தோம். நண்பர்களிடம் இருந்து அழைப்பும், சாட்டில் நண்பர்கள் நிறைய லிங்க்கொடுத்து இங்கெல்லாம் பாருங்க என்றனர். அனைத்தையும் படித்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன். மின்தமிழ் குழுமம், பன்புடன் குழுமம் இரண்டிற்கும் மின்னஞ்சல் அனுப்பினேன் நண்பர் தொடர்பு கொண்டு கவலைப்படாதீர்கள் நிச்சயம் காலை கிடைத்து விடும் என்றனர்.

நான் செய்த மிகப்பெரிய தவறு Backup எடுத்து வைக்கவில்லை. அதனால் மிக டென்சனாக இருந்தது.

காலை அலுவலகம் வந்ததும் ஒரு அரை மணி நேரம் தேடினேன் என்ன செய்வது என்று கூகுளுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். 9.45க்கு நண்பர் தொடர்பு கொண்டு உங்க வலைப்பூ வேலை செய்கிறது என்றார். மிக சந்தோசமாக இருந்தது. எனது நிறைய பதிவுகள் நிறைய இடத்தில் படித்து அதை தெரிந்தவர்களிடம் அது உண்மைதான் என்று கேட்ட பின் தான் பதிவிடுவேன். எல்லாம் போச்சே என்று இருக்கும் போது மீண்டும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...

அதற்காக எனக்கு தொலைபேசியிலும், சாட்டிலும் நண்பர்கள் எனக்காக இரவு வரை உதவி செய்த அனைத்து நட்புக்களுக்கும் என் நன்றி...

யாரையும் நான் பார்த்தது கூட இல்லை ஆனால் அனைவரும் செய்த உதவி மகத்தானது.. நன்றி நண்பர்களே..

நண்பர்களே இந்த அனுபவத்தின் மூலம் அறிவது வாரம் ஒரு முறை வேண்டாம் தினமும் பதிவிட்ட உடன் ஒரு பேக்அப் எடுப்பது நல்லது. எடுத்து வெச்சுக்குங்க ரொம்ப உதவியாக இருக்கும்..

குறிப்பு: நான் எனக்கு உதவிய நண்பர்களின் பெயரை குறிப்பிடவில்லை என்னை தொடர்பு கொண்டு உதவிய நண்பர்கள் என்னில் அடங்கா யாராவது ஒரு பேரை விட்டு விட்டால் அவர்களுக்கு சங்கடமாக இருக்கும் அதனால் பேரை குறிப்பிடவில்லை தவறாக எடுத்துக்கவேண்டாம்... ஆனால் பேக்அப் மட்டும் மறக்காம எடுத்துக்குங்க...

---------------------------------------------------------------------------
வருகிற 26.12.2010 அன்று ஈரோட்டில் நடக்கும் பதிவர் சங்கமத்திற்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்...



சகோதர, சகோதரிகளே ஈரோடு சங்கமத்துக்கு வாங்க  பழகலாம்....

35 comments:

  1. அடடா தப்பிச்சோம்ன்னு நெனச்சேனே... கெடைச்சிருச்சா?? :)....

    ReplyDelete
  2. அளவில்லா.. மகிழ்ச்சி.. நண்பரே..!!

    ReplyDelete
  3. நன்றி.. நன்றி.. நன்றி..

    ReplyDelete
  4. நான் நிச்சயம் கிடைத்துவிடும் என்று 100 சதவிகிதம் நம்பிக்கையில் இருந்தேன்..!! இங்கு அனைத்துமே சாத்தியம். இங்கு உதவிக்கரம் நீட்ட ஆயிரம் கரங்கள் உள்ளன. தொடர்ந்து அசத்துங்க. நண்பரே.!

    ReplyDelete
  5. வலைத்தளம் திரும்ப கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் நண்பரே

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. திரும்பவும் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி. கூகுளுக்கு உங்க மீது என்ன கோபமோ ஒரு இரவு முழுவதும் உங்கள் தூக்கத்தை கலைத்தது.

    ReplyDelete
  7. I also lost the connection for some time when I tried to open it after reading your mail. Good advice. Thanks

    ReplyDelete
  8. வடை. ஸாரி... பதிவு திரும்ப கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் சங்கவி.

    ReplyDelete
  9. எனக்கு வடை கிடைச்சிருச்சு..///
    அப்போ ட்ரீட் வைங்க.

    ReplyDelete
  10. இனி புதிய பதிவு போடும் போதெலாம் பேக் அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள்..

    ReplyDelete
  11. மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ரொம்பவே மகிழ்ச்சிங்க....

    ReplyDelete
  13. கலக்குங்க அண்ணா ..!

    ReplyDelete
  14. வடை கிடைச்சது சந்தோசம்

    ReplyDelete
  15. மகிழ்ச்சி சங்கவி...

    ReplyDelete
  16. ப்ளாக் உலகம் உங்களை அவ்வளவு எளிதில் விட்டுவிடாது..

    Welcome back

    கலக்கல் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. நல்ல வேளை! வாழ்த்துக்கள். கஷ்டப்பட்டு செய்யும் ஒரு விஷயம் கையை விட்டு போய் விட்டால் ஏற்படும் வலி மிகப்பெரியது. வலி நீங்கி வடை கிடைத்ததில் மகிழ்ச்சி!

    ReplyDelete
  18. பயமாத்தான் இருக்கு.முன்கூட்டின கவனம் இருக்கவேணும்போல இருக்கு.மகிழ்ச்சி சங்கவி !

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்.. மீண்டு வந்தமைக்கு..மகிழ்ச்சியும்.

    ReplyDelete
  20. சந்தோசம் சங்கவி!! தொடருங்கள்! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. Yes Back up is important. I have also taken back up

    ReplyDelete
  22. தளம் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி .....அன்றாடம் கையாளும் பொருள் தவறினால் அதன் வலி சொல்லி அடங்கா ..இது கணனி யுகம் எல்லாம் சாத்தியமே. நூறு ௦௦ வீதம் கிடைக்கும் என் நம்பினேன். .உங்கள் மகிழ்வில் நானும் கலந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  23. திரும்பக்கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி. இனி, வடை மட்டுமில்ல எதையும் விடாம பதிஞ்சு வெச்சுக்குங்க.

    ReplyDelete
  25. dhaLamதளம் மறைந்தது எதேச்சையாகவா?வெளிநாட்டு சதியா?சொல்ல்uங்க,கேப்டன் கிட்டே சொல்லி உண்டு இல்லைன்னு பண்ணிடுவோம்

    ReplyDelete
  26. தமிழ்மணம்டாப் 10 பிளேஸ்க்கு வழ்த்துக்கள்

    ReplyDelete
  27. நல்லது சங்கமேஸ்

    மகிழ்ச்சி!

    ReplyDelete
  28. நண்பர்களே இந்த அனுபவத்தின் மூலம் அறிவது வாரம் ஒரு முறை வேண்டாம் தினமும் பதிவிட்ட உடன் ஒரு பேக்அப் எடுப்பது நல்லது. எடுத்து வெச்சுக்குங்க ரொம்ப உதவியாக இருக்கும்..

    ..true. Welcome back!

    ReplyDelete
  29. உங்க பதிவ படிச்சிட்டு தலைப்ப படிச்சா சிரிப்புதான் வருது

    ReplyDelete
  30. பகிர்வுக்கு நன்றி!மீண்டும் கிடைத்தது மகிழ்ச்சி சதீஷ்.

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் சங்கவி

    அன்றைய தினம் எங்களுடைய வலைப்பூவும் தொலைந்து விட்டது.அதனால் உங்கள் உணர்வுகளை புரிந்துக்கொள்ள முடிகிறது. வலையுலகில் மேலும் சாதிக்கவாழ்த்துக்கள்.. . ..

    ReplyDelete