Thursday, December 2, 2010

அஞ்சறைப்பெட்டி 02.12.2010

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

மழை குறைந்து இந்த வாரம் தான் சூரியனை பார்த்தோம் ஆனால்  மறுபடியும் நேற்றும் இன்றும் பொத்துகிட்டு ஊத்துது. தமிழ்நாட்டை பின்னி எடுக்கிறது மழை. இந்த வருட தண்ணீர் பிரச்சனை இருக்காது என நம்புலாம்...
...............................................................................................

பெண்களின் உடலில் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும் என்ற ஆய்வை இங்கிலாந்தில் உள்ள மான் செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
அதில், அவர்களின் கண்கள் மற்றும் தலைமுடியை விட சிவப்பு நிற உதடு தான் ஆண்களை வசீகரித்து மயக்குகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது. 50 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெண்களின் உதடுகளை பார்த்த 10 வினா டிகளில் தங்கள் மனம் மயங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதுவும் “லிப்ஸ்டிக்” (உதடு சாயம்) பூசிய உதடுகள் பெருமளவில் தங்களை வசீ கரித்ததாக கூறினார்.
சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட உதடுகள் 7.3 வினாடிகளிலும், இளஞ்சிவப்பு நிற சாயம் பூறப்பட்ட உதடுகள் 6.7 வினாடிகளிலும் தங்களை ஈர்த்ததாக தெரிவித்துள்ளனர்.

நம்ம ஊர்ல மட்டும் இப்படி ஆய்வு எல்லாம் செய்ய மாட்டேங்கறாங்களே...

........................................................................................................

ஆந்திராவில் புதிய அரசியல் கட்சி. பதவி ஆசை யாரைத்தான் விட்டது. அப்பா முதல்வராக இருந்தால் அடுத்து மகனைத்தான் முதவராக்க வேண்டும் என்பது நியதி போல... முதல்வர் பதவி ஆசையில் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து புதிய கட்சியை தொடங்க இருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. இவுங்க சம்பாரித்தது எல்லாம் மக்கள் பணம். மக்களுக்கு செலவு செய்து மறுபடியும் சாம்பாதிக்க வருகிறார்.. பதவி, பணம் என்னும் போதை யாரை விட்டது...

.....................................................................................................
உலகின் பெரியண்ணன் பதவியில் இருந்து அமெரிக்க கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டு இருக்கின்றது. அமெரிக்காவின் அந்தரங்க ரகசியங்களை கண்காணித்து அவர்களுடன் உலகம் முழுவதும் உள்ள தூதரகங்கள் பறிமாறிக்கொண்ட விசயங்கள் என்ன என்ன என்று விலாவாரியாக புட்டு வைத்தது 
விக்கிலீக். இது அமெரிக்காவிற்கு அதிர்ச்சியான விசயம் மட்டுல்ல அலறும் விசயம் கூட...

யானைக்கும் அடி சறுக்கும் என்பது உண்மைதான் போல...


................................................................................................ 
நடந்து சென்ற இளம்பெண் மீது, அவ்வழியே சென்ற பஸ் இடித்து நிற்காமல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், அதே பஸ் திரும்பி வரும்போது தடுத்து நிறுத்தி, டிரைவரின் முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசினார். டிரைவரும் அருகில் இருந்த பயணிகளும் கண்ணில் மிளகாய் தூள் பட்டு அலறி உள்ளனர். இது நடந்தது கேரளாவில் எர்ணாகுளத்தில் இருந்து கோட்டயம் செல்லும் வழியில்...

பெண்கள் இவ்வாறு தைரிமாக நடந்து கொண்டால் பல தவறுகள் நடக்காமல் தவிர்க்கலாம்...

..............................
....................................................................
கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி ஊராட்சி ஊத்துப்பாளையம் துவக்கப்பள்ளியில் பள்ளிக்கு ஆய்வு செய்வதற்காக கல்வி அதிகாரி வந்துள்ளார் அவர் மாணவர்களிடம் விசாரித்தது போது பள்ளிக்கு தலைமை ஆசிரியர் வருவதில்லை, ஒழுங்காக பாடம் நடத்துவதில்லை என புகார் கூறிஉள்ளனர். இதை அறிந்த தலைமை ஆசிரியர் அடுத்த நாள் யார் புகார் கூறியது என கூறி அவர்களை அடித்துள்ளார். மாணவர்களின் கை, கால்கள் வீங்கியதை பார்த்த பெற்றோர் ஊர் பெரியவர்களுடன் நியாயம் கேட்க சென்றுள்ளனர். இனி மேல் இது மாதிரி நடக்காமல் பார்த்துக்கிறேன் என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த தலைமை ஆசிரியருக்கு எதுக்கு மன்னிப்பு இவர்களை எல்லாம் வேலையை விட்டு தூக்க வேண்டும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புகார் கூறுகிறார்கள் என்றால் இந்த ஆசிரியர் எந்த இலட்சனத்தில் பாடம் நடத்தி இருப்பார். பள்ளிக்கு ஒழுங்காக செல்லாத பாடம் நடத்தாத ஆசிரியர்களை வேலையை விட்டு தூக்க வேண்டும். அப்பதான் அடுத்து காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், அவர்கள் ஒழுங்காக பாடம் நடத்துவார்கள்.. இதனால் தான் தனியார் பள்ளி தரம் உயருகிறது.. 
வாங்கற சம்பளத்துக்காவது வேலை செய்யனும்...

.............................................................................

நடிகர் விஜய்க்கு சிலைவைத்திருக்கிறார்கள் நம்ம ஊர்ல இல்லிங்க கேராளவில்....இவர் அரசியலுக்கு வருவதற்காக மன்றத்தினருடன் இரகசிய கூட்டம் போட்டுகிட்டு இருக்கிறாராம்.. இது எங்க போய் முடியுமோ...

நாட்டு நடப்பு
கடந்த 14 நாட்களாக குளிர் கால பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கவில்லை.. நம்ம அப்ப வீட்டு காசு எல்லாம் இப்படி பாலா போகுது.. இவுங்கள ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்புனா அங்க யாரும் பேசறதும் இல்ல பேச விடறதும் இல்ல. தப்பு செஞ்சவ தப்ப ஒத்துக்கறது இல்ல. ஒத்துக்காம பேச விடறது இல்ல என்று இரு தரப்பும் அடிச்சுகிது ஏமாந்தது என்னமோ பொது சனந்தான்....

இலங்கை அதிபர் தற்போது இங்கிலாந்து அரசு முறை பயணமாக சென்று இருக்கிறார். போனவர் அந்நாட்டு ராணிக்கு என்னை கைது செய்துவடாதீர்கள் என்று கொஞ்சி ஒரு கடிதம் எழுதி அவர்கள் ஒப்புதலுக்கு பின் சென்று உள்ளார்... இதை விட கேவலம் எதாவது உண்டா...

ஒரு நாட்டு அதிபர் இன்னொரு நாட்டிற்கு அரசு முறை பயணமாக செல்லும் போது சிவப்பு கம்பள வரவேற்புடன் விமான நிலையத்தில் இறங்குவார்கள் ஆனால் இவர் பின்வாசல் வழியாக சென்றுள்ளார். ஏனோ நம்ம ஊர் பத்திரிக்கையில் இச்செய்திகள் அதிகம் வரவில்லை. இவர்களுக்கு தமிழனைவிட ராஜபக்சே மேல் தான் பாசம் போல.
கடும் பனி பொழிவிற்கும் நடுவில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அவர் செல்லும் இடம் எல்லாம் ஒலிக்கிறதாம்...

தமிழர்களின் பலத்த எதிர்ப்பால் ராஜபட்ச உரையாற்ற சென்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இலண்டன் வாழ் தமிழர்களின் முயற்சி வீண்போகவில்லை.


தகவல்

சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை! ஏன் தெரியுமா? சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்ட இழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க, அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன.
மொக்கை ஜோக்
மனைவி : ஏனுங்க உங்க பையனை வெளியில விடாம பிரிட்ஜ்க்குள் வைத்து பூட்டியுள்ளீர்கள்?

கணவன் : வெளியில விட்டா பையன் கெட்டுப்ப்போயிடுவோனோன்னுதா! பகாவான் கனவுல வந்து சொண்ணாரு



மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

அறிமுக பதிவர்
நம் நாட்டில் சுதந்திர போரட்ட தியாகிகள் மற்றும் அவர்களுக்கு முன் வாழ்ந்த தேத்திற்காக பாடுபட் தலைவர்கள். சமூக சீர்திருத்தவாதிகள், ஆன்மீகவாதிகள் என பலர் நமக்கு தெரிந்தும் தெரியாமலம் இருக்கின்றனர். அவர்களைப்பற்றியான ஓர் அற்புதமான தகவல்களை நமக்கு அளிக்கும் தளம் தான் தேசமே தெய்வம் என்னும் வலைப்பூ..நம் பாரதத்தில் சமூக சீர்திருத்தவாதிகள் பலர் இருந்துள்ளனர். நம் பாரதத்தின் முதல் சமூக சீர்திருத்தவாதியான மாகத்மா ஜோதிராவ் புலே என்னும் சீர்தித்தவாதியை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை இவர் போன்ற தலைவர்களை நமக்கு அறிமுகப்படுத்துவது தான் தேசமே தெய்வம் என்னும் வலைப்பூ.. வாருங்கள் பல நல்ல தலைவர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்...

http://desamaedeivam.blogspot.com/2010/11/blog-post_28.html


தத்துவம்
விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று...
வாழ்க்கையும் அப்படி தான்...
முடியும் வரை தெரிவதில்லை...
வாழ்வது எப்படி என்று...

நம்மைப்பற்றி கேவளமாக பேசுபவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் சரியான பதிலடி என்ன தெரியுமா?

மௌனம்தான்...

குறுஞ்செய்தி
ஆசிரியரும் அப்பாவும் பேசிக்கொண்டது..

வகுப்பில் முதல் மாணவன் உங்கபையந்தான்

அப்படிங்களா ரொம்ப சந்தேசாம்..

நீங்க வேற பெல் அடிச்சதும் அவன்தான் முதல்ல போவன்...

..............................

எல்கேஜி மாணவன் டீச்சரிடம்...

டீச்சர் என்ன உங்களுக்கு பிடிக்குமா..

ரொம்ப பிடிக்கும் செல்லம்...

பக்கத்து மாணவனிடம் பாத்தியாட அவுங்க எனக்கு ரூட் போடாறங்கன்னு சொன்னனல்ல...

30 comments:

  1. நம்ம ஊர்ல மட்டும் இப்படி ஆய்வு எல்லாம் செய்ய மாட்டேங்கறாங்களே...//

    நம்ம ஊர்ல, ரெண்டு செகண்ட் பாத்தாலே கேஸ் போட்டுடறாங்க...

    ReplyDelete
  2. nalla pakirvu thodarungal!!! sangavi

    ReplyDelete
  3. அஞ்சறைபெட்டி அசத்துது.

    ReplyDelete
  4. நல்லாருக்கு பங்காளி... சில விஷயங்கள் புதுசு...

    ஃபிரிட்ஜ் ஜோக் மிக சுமார் ரகம்...

    பிரபாகர்...

    ReplyDelete
  5. //விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று...
    வாழ்க்கையும் அப்படி தான்...
    முடியும் வரை தெரிவதில்லை...
    வாழ்வது எப்படி என்று...//

    நல்ல தத்துவம். நிறைய விஷயங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறது தங்கள் அஞ்சறைப்பெட்டி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வழக்கம் போல் நல்ல தொகுப்பு சங்கவி!! "பெண்களின் உடலில் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்" இதெல்லாம் மேலை நாட்டுக்குத்தான், நம்ம நாட்ல பெண் என்பவளையே மயக்கம் தரும் போதையாதான் பாக்குறாங்க!!!

    ReplyDelete
  7. பெண்களின் சிவந்த உதடுகள் ஆண்களுக்குப் பிடிக்கும் சரி.. ஆனால் லிப்ஸ்டிக் போட்ருந்தா அதுல ஒரு வித செயற்கைத்தனம் இருக்குமே.. அது எப்படி அவங்களுக்குப் பிடிக்குதுனு தெரிலங்க..

    அப்புறம் அதென்ன.. உலகின் பெரியண்ணன்???
    ஓ.. வளர்ந்த நாடுங்குறத சிம்பாலிக்கா சொல்றீங்களோ????

    ReplyDelete
  8. எல்லா செய்திகளும் கொஞ்சம் கொஞ்சம்.. அஞ்சறைப்பெட்டி அசத்துது.

    ReplyDelete
  9. அஞ்சறை பெட்டி அசத்தலா இருக்கு அண்ணா.. பல அறியாத தகவல்கள்...

    ReplyDelete
  10. அடடா..! ஓரே பதிவில் இத்தனை தகவல்களா..???!! என ஆச்சரிமூட்டுகிறது. முழுவதும் படித்து விட்டு வருகிறேன். தங்கள் சேவை தொடரட்டும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. எல்லா செய்திகளும் கலக்கலா இருக்கு..

    ReplyDelete
  12. ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே எல்லா செய்திகளும்

    ReplyDelete
  13. அஞ்சறைப் பெட்டி வழக்கம் போலவே அறுசுவை அண்ணா .,
    அதே மாதிரி முகத்துல மிளகாய் போடுறதுன்னு எல்லோரும் இறங்கிட்ட பிரச்சினைதான் அதிகம் ஆகும் . ஏன்னா நம்ம ஊர்ல ஒண்ணுமே இல்லாம சத்தம் போடுவாங்க ..

    ReplyDelete
  14. நிறைய விசயங்கள்.. நன்றி...

    ReplyDelete
  15. அஞ்சறைப்பெட்டி வழக்கம்போல கலக்கல் சார். ஜோக்ஸும் சூப்பர். குறிப்பா அந்த டீச்சர் ரூட் போடற மேட்டர் நல்லா இருக்கு.

    ReplyDelete
  16. //மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

    முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..! //

    இதை ரொம்ப ரசிச்சு சிரிச்சேங்க சதீஷ்...
    மற்ற தகவல்களும் ரசிக்கும்படியா இருந்தது... நன்றிங்க பகிர்வுக்கு....

    ReplyDelete
  17. //கடந்த 14 நாட்களாக குளிர் கால பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கவில்லை.. நம்ம அப்ப வீட்டு காசு எல்லாம் இப்படி பாலா போகுது.. இவுங்கள ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்புனா அங்க யாரும் பேசறதும் இல்ல பேச விடறதும் இல்ல. தப்பு செஞ்சவ தப்ப ஒத்துக்கறது இல்ல. ஒத்துக்காம பேச விடறது இல்ல என்று இரு தரப்பும் அடிச்சுகிது ஏமாந்தது என்னமோ பொது சனந்தான்....//

    ஆமாஞ்சாமி,

    தெரிஞ்சா மட்டும் என்ன செஞ்சிடப்போறோம்? மாத்திஎல்லாம் ஓட்டு போட மாட்டோம்.

    சொல்லப்போனா வெவரம் தெரிஞ்ச நாமெல்லாம் ஒட்டு போட போகவே மாட்டோம்.

    பதிவு மட்டும் மறக்காம போடுவோம்.
    படிச்சிட்டு பின்னூட்டமும் போடுவோம்.

    நம்மல நெனைச்சா நமக்கே கேவலமா இருக்கு சங்கவி.

    ReplyDelete
  18. அந்த ”பின் வாசல்” விருந்தாளிய நெனைச்சா ஒரே சிரிப்பா இருக்குது மக்கா.

    ReplyDelete
  19. கலக்கல் காக்டெயில்..
    தொடர்ந்து கலக்குங்க..

    ReplyDelete
  20. செய்தித்தாள் படிக்கவே வேணாம்போலே...எல்லா விஷயத்தையும் தொட்டுடிங்க...நல்லா இருக்கு சங்கவி..:))

    ReplyDelete
  21. //பள்ளிக்கு ஒழுங்காக செல்லாத பாடம் நடத்தாத ஆசிரியர்களை வேலையை விட்டு தூக்க வேண்டும். அப்பதான் அடுத்து காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், அவர்கள் ஒழுங்காக பாடம் நடத்துவார்கள்//

    அடி தூளு...

    ReplyDelete
  22. //சொல்லப்போனா வெவரம் தெரிஞ்ச நாமெல்லாம் ஒட்டு போட போகவே மாட்டோம்.

    பதிவு மட்டும் மறக்காம போடுவோம்.
    படிச்சிட்டு பின்னூட்டமும் போடுவோம்//.

    ReplyDelete
  23. மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

    முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!


    ......... இப்படி வேற ஒரு பதிலா? சரியா போச்சு!

    ReplyDelete
  24. //சிலந்தி //
    தெரியாத புது தகவல் பாஸ்

    //எல்கேஜி மாணவன் //
    எமகாதகன் :))

    ReplyDelete
  25. // டீச்சர் என்ன உங்களுக்கு பிடிக்குமா..

    ரொம்ப பிடிக்கும் செல்லம்...

    பக்கத்து மாணவனிடம் பாத்தியாட அவுங்க எனக்கு ரூட் போடாறங்கன்னு சொன்னனல்ல...//

    nice..

    ReplyDelete
  26. அஞ்சறைப் பெட்டி காரமும் சூடுமாத்தான் இருக்கு !

    ReplyDelete
  27. சுவாரசியமான பகிர்வு சங்கவி!

    ReplyDelete
  28. அஞ்சறைப் பெட்டி கலக்கல் நண்பரே அனைத்துத் தகவல்களுமே அருமை

    சூப்பர் தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    ReplyDelete
  29. அஞ்சறைப் பெட்டி-அருமை

    ReplyDelete