Tuesday, January 31, 2012

அண்ணன் ஜாக்கி சேகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


வலையுலகின் மன்னன், 
இணையத்தில் இவர் எழுத்திற்கு என தனிப்பட்ட 
வாசகர்களை அதிகம் கவர்ந்தவரும், 
இணைய நண்பர்கள் அதிகம் பேர் 
சென்னை வந்தால் நிச்சயம் சந்திக்கும் நபரும், 
தன் மனதிற்கு தோன்றுவதை தன் எழுத்தில் பட்டென்று சொல்பவரும், கடலூரில் பிறந்து இன்று சென்னையில் வசித்தாலும் 
தன் சொந்த ஊரின் மேல் பற்றும் பாசமும் வைத்திருக்கும் 
என் அன்பு பங்காளி
ஜாக்கி சேகருக்கும் 
அவர் மனைவிக்கும் 
இன்று பிறந்தநாள்... 

இத்தம்பதியினர் எல்லா 

செல்வங்களும் பெற்று 

வளமுடன் வாழ்க! வளர்க!! என்று வாழ்த்துவோம்....

தாய்ப்பாசம்...


இன்று கணவன் மனைவி ஏற்படும் பிரச்சனைகளால் நிறைய பிரிவுகள் ஏற்படுகின்றன தினமும் நாம் பத்திரிக்கையில் படிக்கும் செய்திகளில் இதுவும் ஒன்று. விவாகரத்து கேட்டு கியூவில் நிற்பவர்கள் ஏராளம் இதற்கு நிறைய காரணங்கள் உண்டு அதில் ஓர் முக்கியமான காரணம் தாய்ப்பாசம்...

மனைவிகள் சொல்லும் அதிக புகார் அம்மா பேச்சை கேட்கிறார். அம்மா பேச்சை கேட்டு என்னைத் திட்டுகிறார் இதனால் தனிக்குடித்தனம் போகலாம் என்றால் அம்மாவை விட்டு வர மறுக்கிறார் இது தான் அதிக குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இன்றும் கூட்டுக்குடும்பம் இருக்கத்தான் செய்கிறது. கூட்டுக்குடும்பத்திற்கு முக்கிய காரணமே தாய்ப்பாசம்தான்.

இன்று மனைவி நாளை அம்மா நாளை மறுநாள் மாமியார் இதுதான் இன்றைய நிகழ்வு. நிறைய மனைவிகள் யோசிப்தில்லை நாளை நாமும் மாமியார் ஆகப்போகிறோம் அப்போது நம் மகனை நம்மிடம் இருந்து பிரித்தால் இதை யோசித்தால் போதும் இப்பிரச்சனைக்கு எளிய தீர்வு உண்டு.

ஒரு பெண் திருமணம் ஆகி கணவனிடம் வருகிறாள் அவள் கருவுற்றதற்கு முன் கணவன் மேல் இருக்கும் அன்பு கருவுற்றதற்கு அப்புறம் குறையத்துவங்குகிறது. தனக்கு குழந்தை பிறந்த பின் அத்தாய் தன் மகனை தன் கண்ணுக்குள் வைத்து காக்கிறாள் கூடவே தனது அனைத்து அன்பையும் குழந்தையின் மீது காட்டுகிறாள். குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் வைத்து அவனுக்கு என்ன வேண்டும் என்ன எதிர்பார்க்கிறான் என அவனை பார்த்து பார்த்து வளர்க்கிறாள். மகனின் முதல் ரசிகையே தாய். மகனுக்கு முதலில் தெரிவது தாய் தான் பின்பு தான் மற்றவர்கள். மகன் குப்புற விழுந்து, தவழ்ந்து, எழுந்து நின்று மேதுவாக விழுந்து விழுந்து நடந்து ஒவ்வொன்றையும் முதலில் ரசிப்பவள் தாய் மட்டுமே..

குழந்தைப்பருவத்திலேயே அம்மா மீது அதிக அன்பு கொள்கிறான். தன்னிடம் யார் விளையாடினாலும் அவன் அம்மாவைப் பார்த்த உடன் சிரிக்கும் சிரிப்பு இப்படியே எனக்கு உசிரு போய்விட வேண்டும் என்று தான் தாய் கூறுவாள். மகனுக்கு விபரத் தெரியும் போது தான் தன் அம்மா அப்பாவின் மனைவி என்று அவனுக்கு தெரியவருகிறது. மகனுக்கும் தாய்க்கும் உள்ள பாசத்திற்கு ஈடு இணை இல்லை. 

மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் போது பெண் மகனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தாய்க்கு நிச்சயம் பிடித்திருக்க வேண்டும் என்பது மகனின் விருப்பமாக இருக்கும். திருமணம் முடிந்து வரும் மருமகள் தன் மகன் மீது பொழியும் அன்பை தாய் ஏற்றால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சியே... தாய்ப்பாசத்திற்கு இவ்வுலகில் ஈடு இணை எதுவும் இல்லை..

Monday, January 30, 2012

ஆரோக்கியமான வாழ்விற்கு... வாழைப்பழம் சாப்பிடுங்கள்...



நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் போது கடவுளுக்கு படைக்கப்படும் பொருட்களில் வாழைப்பழம் முக்கியமானது. வீட்டில் எந்த விசேசமானலும் நமது இலையில் நிச்சயம் வாழைப்பழம் இருக்கும்.  நமது முன்னோர்கள் கூறிய முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம், பல மருத்துவ குணங்களைக்கொண்டது வாழைப்பழம், நமது சமூகத்தில் வாழைப்பழம் 100ல் 99 பேர் உயயோகப்படுத்துகிறோம். வாழைப்பழத்தின் வகைகள், அதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்களை பார்ப்போம்.


 வாழைப்பழம் :

வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது. கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள், மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க, இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது. 

கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போது வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எல்லாப் பழங்களும் பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளிப்படுத்தும். வாழையில் அதிகமாக இருக்கும்.


வாழைப்பழ வகைகள்
செவ்வாழை
ரஸ்தாளி
கற்பூரவல்லி
பேயன்
பச்சைநாடன்
பூவன்
மொந்தன்
கதலி
நவரன் 

குணங்கள்:

வாழை ஒரு மரமில்லாத மரம். மற்ற மரங்களுக்கு இருப்பதைப் போன்று கனத்த கெட்டியான அடிமரமோ, கிளைகளோ கிடையாது. 8௰ அடி உயரத்தில் மரம்போல் வளர்ந்தாலும் அதன் அடிமரம் அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகளாலானது. பலமாக காற்றடித்தாலும் மளுக்கென்று ஒடிந்து விடக் கூடியது. இந்தத் தண்டு பத்து அடி வரை வளர்ந்து 100 லிருந்து 150 பழங்கள் கொண்ட வாழைத் தாரையே தாங்கும் பலம் பெற்றிருப்பது எப்படி என்பது இயற்கையின் விந்தை.

இலைகள் நீண்டு பெரிதாக இருப்பதால் பழங்குடியினர் இதை வீட்டுக்கு கூரையாகவும், குடையாகவும் கூட உபயோகிக்கின்றனர். ஒரு மரம் ஒரு முறைதான் பழம் தரும். ஒரு சீப்பை கை என்றும், தனியாக ஒரு பழத்தை விரல் என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். பல அடுக்கு சீப்புகள் கொண்டது ஒரு குலை. வாழைச் சீப்பு எப்போதும் மேல் நோக்கியே இருக்கும். வீட்டிலும் அதை அப்படியே வைத்தால்தான் கெடாமல் இருக்கும்.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்:

வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி  இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்:

* இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும்.

* செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது.

* பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும்.

* மலைவாழை சோகையை நீக்கும்.

* பேயன் வாழை குடற்புண் தீர்க்கும்.

* நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும். 

* வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது.

* “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது.

* உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும். மூளையில் “செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது. 

* வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். மூளைக்கு வலுவூட்டும்.

* தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை நீங்கும்.

* பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும்.

* இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும். 

* சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும்.

* கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும். உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.

* தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும். 

* தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.


வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டியவர்கள் :

கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும்,நீரழிவு நோய் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும்.

Monday, January 23, 2012

நலமாய் வாழ மூச்சுப்பயிற்சி

 
ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்று விநாடி கழித்து இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்தக் கை மேலே உயருகிறது? அடிவயிற்றில் உள்ள கைதானே? ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதான். இதுதான் உண்மையாக மூச்சை இழுத்துக்கொள்ளும் முறை.

எந்த வயதுக்காரரும் தரையில் தலையணை எதுவுமின்றி படுத்துக் கொண்டு இப்படி வயிற்றிலும் நெஞ்சிலும் கைகளை வைத்துக்கொண்டு சுவாசித்தால், நுரையீரல்களின் கீழ்ப்பகுதிக்கு நன்கு ஆக்சிஜன் கிடைக்கும்.இதனால் எல்லா உறுப்புகளும் வலுப்பெறும்.

ஆனால், 100க்கு 99 பேர் நெஞ்சினால்தான் சுவாசிக்கிறார்கள். குப்பை அள்ளும் லாரி போகும் போதும், வியர்வை நாற்றம், புகைப் பிடிப்பவர் விடும் மூச்சு நாற்றம் முதலியவற்றைக் தடுக்க மூச்சையும் மூக்கையும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறோம் அல்லவா, அப்போது ஆக்ஸிஜன் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்குச் செல்வதே இல்லை. உலகில் இப்படிச் சுவாசிப்பவர்களே அதிகம். நெஞ்சினால் சுவாசிப்பவர்கள் உலகில் 99 சதவிகிதம் பேர்களாம். ஆனால் இவர்கள் நலமுடன் வாழ்கிறார்களே! இது எப்படி? ஆனால் இவர்கள் மூச்சுவிடுதல் தொடர்பான நோய்களைப் பெற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். சரியாக மூச்சுவிடத் தெரியாதவர்களுக்குத் தான் உடம்பில் அங்கங்கே வலிகளும் காய்ச்சல் வகைகளும் எட்டிப் பார்க்கும்.

பிராணாயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடங்கள் மாலையில் ஐந்து நிமிடங்கள் என தரையில் படுத்துக்கொண்டு ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும். எரிச்சல் வராது. பிறர் மேல் எரிந்து விழமாட்டீர்கள்.

அடுத்து ஆஸ்துமா, இதயநோய், ஒற்றைத்தலை வலி, காக்காய் வலிப்பு போன்ற நோய்கள் கட்டுப்படும். இந்த நான்கு நோய்களும் சரியாக மூச்சு விடத் தெரியாதவர்களுக்குத்தான் வருகின்றன என்கிறது கொலராடோவின் பெளல்டரில் உள்ள சர்வதேச மூச்சுப்பயிற்சி நிலையம்.

தரையில் படுத்துக்கொண்டு இப்படி ஆழ்ந்து சுவாசிக்கக் கற்றுக் கொண்டால் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்கும் நன்கு ஆக்ஸிஜன் கிடைப்பதால் மனமும் உற்சாகமாக இருக்கும். நல்ல இரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் கிடைத்து விடுவதால் வாழ்நாளும் நீடிக்கிறது.

ஒரு நிமிடத்திற்கு எட்டு முதல் 14 முறையே சராசரி மனிதன் மூச்சுவிடுகிறான். ஆனால் நுரையீரல்களுக்கு நன்கு காற்று கிடைக்காதவர்கள் 20 தடவைக்கு மேல் சுவாசிக்கிறார்கள். இதேபோல் ஆண்கள் பெல்ட்டுகளை இறுக்கி அணிந்தாலும் பெண்கள் நாடாக்களை இறுக்கிக் கட்டினாலும் நன்கு மூச்சுவிட முடியாது. சேலை, வேட்டி, பேண்ட் என அனைத்தும் வயிற்றை அதிகம் அழுத்தாமல் இருக்குமாறு அணிய வேண்டும்.

மூச்சுவிடும் முறையை நன்கு கற்றுக்கொண்டால் மூளையையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இரத்தத்தில் காடித் தன்மையும், காரத்தன்மையும் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். இதற்கு மூச்சுப் பயிற்சி உதவுகிறது.

முதல் பயிற்சி :
நேர்காணலுக்குச் செல்லும் போது இந்த முறையில் 5 நிமிடங்கள் சுவாசித்துவிட்டுப் புறப்பட்டால், நேர்காணலின் போது பதட்டம் ஏற்படாது. திடீர் இரத்தக்கொதிப்பு, ஸ்டிரோக் போன்றவற்றை இப்படி ஆழ்ந்து சுவாசிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இரண்டாவது பயிற்சி :
சம்மணமிட்டு உட்காருங்கள். மூக்கினால் மூச்சை இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு வாயைத் திறந்து அதை வெளியேற்றுங்கள். அடுத்து மூச்சை இழுக்காமல் தொடர்ச்சியாக ஊ…ஊ… என்று காற்றை ஊதுங்கள். இதற்குப் பிறகு முன்பு செய்தது போல மூக்கினால் இழுத்து வாயினால் வெளியேற்றி கடைசியல் ஊ….ஊ…. என்று ஊதுங்கள். மூன்று முறை இது போல் செய்யுங்கள்.

மூன்றாவது பயிற்சி :
நன்கு நிமிர்ந்து நின்று கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தூக்கியபடியே மூச்சை உள்ளுக்குள் இழுங்கள். தலைக்குமேல் கும்பிடுவது போல் கைகளை வைத்ததும் அப்படியே மீண்டும் பழையபடி பக்கவாட்டில் மெதுவாக இறக்கவும். இப்படி கைகளை இறக்கும் போது இழுத்த மூச்சை மெதுவாக வெளியேற்றுங்கள். இந்தப் பயிற்சியை காலை உணவிற்கு முன்பு பத்துமுறை செய்துவிட்டு புறப்பட்டால் அந்த நாள் முழுவதும் படுசுறுசுறுப்பாக இருக்கும். மற்ற இரு மூச்சுப் பயிற்சிகளையும் நீங்கள் செய்திருந்தால் உங்களிடம் ஒற்றைத் தலைவலி, எரிச்சல் முதலியன வாலாட்ட முடியாது. ‘இனிமையாகப் பழகும் அரிய மனிதர்’ என்று பெயர் பெற்றுவிடுவீர்கள்.

ஆழ்ந்து சுவாசிக்கும் இந்த மூச்சுப் பயிற்சியை அமெரிக்க டாக்டர்கள் பலரும் இரு வேளைகள் செய்கிறார்கள். ரெய்கி மருத்துவத்தில் இந்த ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி முக்கியமான குணப்படுத்தும் உத்தியாக இடம் பெற்றுள்ளது.
 
எனவே, எளிமையான இந்த சக்தி வாய்ந்த மூச்சப் பயிற்சியை இன்று முதல் ஆரம்பியுங்கள்.

Thursday, January 19, 2012

அஞ்சறைப்பெட்டி 18-01-2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக முடிந்து 4 நாட்கள் தொடர் விடுமுறைக்குப்பின் நேற்று தான் அலுவலகம் வந்தேன்.. இந்த வருடம் பொங்கல் கொண்டாட்டம் என் மகனுடன் கொண்டாடியதில் இதுவரை இல்லாத ஒரு புது சந்தோசம் இம்முறை.. காணும் பொங்கல் அன்று ஊரில் நடைபெற்ற சிறுசிறு விளையாட்டுடன் இந்த பொங்கல் நிறைவு பெற்றது.

இப்பொங்கல் திருவிழாவின் நான்கு நாட்களும் நான் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி கூட பார்க்கவில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி..

பொங்கலன்று காலை நண்பர்களுக்கு
அனைவருக்கும் தொலைபேசியில் அழைத்து  வாழ்த்து சொன்னதில் நண்பர்களுக்கு  மிக்க மகிழ்ச்சி அவர்களிடம் பேசியதில் எனக்கும் மகிழ்ச்சி.

நிறைய நண்பர்கள் அலைபேசி என் இல்லாததால் அழைக்க இயலவில்லை அவர்கள் மன்னிக்க..
...............................................................................................

ஐஐடி மாணவர்களின் விந்தணுக்கள் தேவை என்று சென்னையில் உள்ள தம்பதி விளம்பரம் தந்துள்ளனர்.

 இந்த விளம்பரம் இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐஐடியில் படிக்கும் புத்திசாலியான, ஆரோக்கியமான, உயரமான, அழகான மாணவர்களின் விந்தணுக்கள் தேவை.

 அதற்கு சன்மானமாக 20,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்ணும், இ-மெயில்
 முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி, ஐஐஎம் போன்றவைகளில் படிக்கும் மாணவர்களின் விந்தணுக்களை பெற்று புத்திசாலித்தனமாக குழந்தைகளை

 உருவாக்குவதே இதன் நோக்கம் என்று அந்த தம்பதி தெரிவித்துள்ளனர்.

இந்த விளம்பரம் ஐஐடி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாணவர்கள்,  ஐஐடியில் படிப்பவர்கள் மட்டும் புத்திசாலிகள் அல்ல. இது முட்டாள்தனமான விளம்பரம் என்று கூறியுள்ளனர்.

இதற்கு பெயர் தான் காலக்கொடுமை என்பது.
...............................................................................................

இன்று 7வது நாளாக டேங்கர் லாரி வேலை நிறுத்தம் இதனால் கேஸ் சிலிண்டர் இல்லாமல் பாடு படும் இலட்சசம் பேர்களில் நானும் ஒருவன். இந்த கேஸ் சிலிண்டர் வேலை நிறுத்தத்தால் சிலிண்டர் விலை மீண்டும் உயர நிறைய வாய்ப்பிருக்கிறது.. இதை எல்லாம் மத்திய அரசாங்கம் கண்டு கொள்வது போல் தெரியவில்லை. பிரச்சனையை ஆரம்பத்திலேயே முடிக்காமல் கொஞ்ச நாட்கள் விட்டால் பொதுமக்கள் மிக அவதிக்குள்ளவார்கள் என்பதை முதலில் ஆட்சியாளர்கள் அறிய வேண்டும்..
................................................................................................
கடலூர் மாவட்டம் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது இன்னும் பல இடங்களில் மின்சாரம், தண்ணீர் போன்ற அத்தியாவிசய பொருளுக்கு மிக கஷ்டப்பட வேண்டி இருக்கிறது என நண்பர்கள் சொன்னார்கள். சீக்கிரம் அவர்கள் மீண்டு வர நாம் வேண்டுவோம்..
................................................................................................

கடந்த சிலநாட்களாக குளிர் மிக அதிகமாக உள்ளது காலை 9 மணிக்கு கூட குளிர் போனபாடில்லை. குளிரால் பூக்களும், செடி, கொடிகளும் கருகிவிடுகின்றன. இதனால் பூக்கள் மற்றும் கீரைகளின் விலை மிக அதிகமாக ஏறிக்கொண்டு இருக்கிறது. இயற்கையை யாரும் ஒன்றும் செய்ய இயலாது.. குளிரை அனுபவித்துதான் ஆகவேண்டும்.
...............................................................................................

இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு இருக்கும் சுதந்திரம் பறிபோக வாய்ப்பிருக்கிறது ஆம் இணையத்தில் உள்ள சமூகவலைத்தளங்களில் நாம் அனைவரையும் போட்டுத்தாக்கிக்கொண்டு இருந்தோம் இவர்கள் நம் தாக்குதலை என்ன செய்யலாம் என்று யோசித்து சமூகவலைத்தளங்களை முடக்குவதற்கு ஏற்பாடு ஆகிக்கொண்டு இருக்கிறது. முடக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
..................................................................................................

திருவேற்காட்டை சேர்ந்த சாந்தவேல் (வயது 39) என்ற அய்யப்ப பக்தர் சபரிமலை சென்றபோது அவர் மீது டீக்கடைக்காரர் ஒருவர் வெந்நீரை ஊற்றினார். இதில் உடல் வெந்த நிலையில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சாந்தவேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். சாந்தவேலுவின் மர்ம சாவு தொடர்பாக கேரள போலீசாரை தொடர்பு கொண்டும் சென்னை போலீசார் பேசியுள்ளனர். அப்போது அவர்கள் சாந்தவேல் கொலை செய்யப்படவில்லை என்றும் எதிர்பாராத விதமாக வெந்நீர் கொட்டியதால் அவர் இறந்துவிட்டார் என்றும் கூறியுள்ளனர்.

எதிர்பாராதவிதமாக வென்னீர் கொட்டப்பட்டதா இல்லை கோபத்தில் கொட்டப்பட்டதா என்று விவாதிப்பதிற்கு பதில் உயிர் இழந்தவன் குடும்பத்துக்கு யார் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்...
..................................................................................................

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள வரலாற்று புகழ் பெற்ற நகரமான சார்லொட்டஸ்வில்லே என்ற நகரத்தின் மேயராக இந்தியாவைச் சேர்ந்த சத்யேந்திர சிங் ஹூஜா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
 
கடந்த 1960 -ம் ஆண்டு இவர் அமெரிக்காவுக்கு குடிவந்தார்.தலைநகர் வாஷிங்டனில் இருந்து 193 கி.மீ. தென்மேற்கில் இந்த நகரம் உள்ளது. இங்கு மொத்தம் 43000 பேர் வசிக்கின்றனர்.
 
உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த சிங் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியாற்றுகிறார். அமெரிக்காவின் அதிபர்களாக இருந்த தாமஸ் ஜெபர்சன், ஜேம்ஸ் மேடிசன் மற்றும் ஜேம்ஸ் மன்றோ ஆகிய மூவரும், இந்நகரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாண்டு கால மேயர் பதவியில், நகர மேம்பாட்டிற்காக உழைக்கப் போவதாக, சிங் உறுதியளித்துள்ளார்.

தகவல்

 
அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் ஆய்வு நடத்த கெப்லர் டெலஸ் கோப்பை நிறுவியுள்ளது. அதன் மூலம் விண்வெளியில் புதிதாக ஒரு கிரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
பூமியை போன்றுள்ள அந்த கிரகத்துக்கு கெப்லர் 16-பி என பெயரிட்டுள்ளனர். இது மனித உயிர்கள் வாழும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 
தற்போது டெக்சாஸ் பல்கலைக்கழக விண்வெளி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பூமியை போன்ற கெப்லர் 16-பி கிரகத்தில் 2 சூரியன்கள் உள்ளன. அவை அந்த கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கும் தண்ணீரை மிக வெப்பமாகவோ அல்லது மிகுந்த குளிராகவோ இருக்க செய்கிறது என கண்டுபிடித்துள்ளனர்.

அறிமுகபதிவர்

இந்த வார அறிமுக பதிவு சக்தி கல்விமையம் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கான பயனுள்ள பதிவு.. இவர் ஒரு பிரபல பதிவர் தற்போது கல்விக்காக ஒரு இணையத்தை தொடங்கி மாணவர்களுக்கு இலவச சேவையை துவக்கி உள்ளர்ர் இவரின் இம் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

http://www.sakthistudycentre.com/
 
தத்துவம்
 
சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

Friday, January 13, 2012

பொங்கல், மாட்டுப்பொங்கல், கறிநாள்....

நண்பர்கள்
அனைவருக்கும்
இனிய
தைத்திருநாள்
வாழ்த்துக்கள்...

Wednesday, January 11, 2012

அஞ்சறைப்பெட்டி 12.01.2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

2012ல் முதல் அஞ்சறைப்பெட்டி கடந்த வாரம் எழுத இயலவில்லை அதற்கு காரணம் உடனுக்குடன் எனது தகவல்கள் எல்லாம் பேஸ்புக்கில் அப்டேட் செய்வதால் என்ன எழுதுவது என்று யோசித்து யோசித்து எழுத முடியாமல் போனது. வர வர பதிவுலகத்தைக்காட்டிலும்  பேஸ்புக்மேல் காதல் அதிகமாகிக்கொண்டு போகின்றது.. இதனால் இந்த வாரம் திங்கட்கிழமையே எழுத ஆரம்பித்துவிட்டேன் அஞ்சறைப்பெட்டியை...

...............................................................................................

கடந்த வாரம் ஊருக்குச் சென்ற போது எங்கள் ஊரில் இருந்து ஈரோடு செல்ல 50 நிமிடங்கள்தான் ஆகும் ஆனால் தற்போது சாலை இருக்கும் கேவலமான நிலைக்கு 1.40 நிமிடம் ஆகிறது. அதுவும் இல்லாமல் காரில் சென்றால் வண்டி ஆடுகிற ஆட்டத்திற்கு எந்த பொருள் கழன்டு விடும் என்ற பயத்திலோயே வண்டி ஓட்ட வேண்டி இருக்கிறது. பவானி மேட்டூர் சாலைக்கு என்று தான் விடிவு காலம் வருமோ???

...............................................................................................

திருவாதரை அன்று காலை சிவன் கோயிலுக்கு சென்றால் நல்லாதாம் அதுவும் எனக்கு திருவாதரை நட்சத்திரம் என்பதால் நான் நிச்சயமாக செல்ல வேண்டும் என்று எனது மனைவி நடுராத்திரி 5 மணிக்கே எழுச்செய்து கோயிலுக்கு சென்றோம் அங்கு வரிசையில் 2 மணி நேரத்திற்கு மேல் நின்றோம் சிவனை தரிசிக்க. சன்னிதானம் வாசலுக்கு சென்றதும் விஐபி வருகிறார் என்று அங்கிருந்த சப்இன்ஸ்பெக்டர் விஐபிக்க என்ற பெயரில் ஒரு 50 பேரை உள்ளே அனுப்பினார் அவரைப்பார்த்து சார் நாங்க 2 மணி நேரத்துக்கு மேல் நிற்கின்றோம் என்ற கேட்டதற்கு ஒரு 5 நிமிடம் தான் பொறுத்துக்குங்க என்று கெஞ்சல் தோணியில் சொன்னார்... இப்போது பின்னாடி இருந்து ஒரு குரல் ரொம்ப வாங்கிட்டார் போல என்று... அவர் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். எங்கள் பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் இவருக்கு கூளைகும்பிடு போடுறதே பொழுப்பா போச்சு என்று அவர் அடித்த கமெண்டில் சுத்தி இருந்தவர்கள் எல்லாம் சந்தோச புன்னகை...

இந்த கோயில் வரிசை விசயத்தில் கேரளாக்காரர்களை பாராட்ட வேண்டும் யாராக இருந்தாலும் வரிசையில் தான் வரவேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு இன்றும் தொடர்கிறது... ஆனால் நம்வூரில் பணம் இருந்தால் முன்னே இல்லாதவன் பொது தரிசனம் இந்த கொடுமையை அந்த கடவுள் தான் கேக்கனும்...


...............................................................................................

கடலூரை புரட்டிப்போட்டுவிட்டது தானே.. இது நாள் வரை இல்லாத பாதிப்பு இந்த முறை அதுவும் செல்போன் டவரால் பாதிக்கப்பட்ட வீடுகள் ஏராளமாம். பாவம் அந்த சோலைவனம் தற்போது பாலைவனமாகிவிட்டது என்பதில் மிக்க வருத்தம். இதற்காக அளிக்கப்படும் நிவாரண உதவிகளில் அங்கங்கு சத்தம் இருந்தாலும் நிவாரணப்பணிகள் ஒரளவு மனதை திருப்பி அளிக்க வைக்கிறது.

இந்த நிவாரணப்பணிக்காக திமுக சார்பில் 50 லட்சம் கொடுத்துள்ளது பாராட்டத்தக்கது அந்த பணம் முழுவதும் மக்களுக்கு சேர்ந்தால் மிக்க மகிழ்ச்சி... பணமாக கொடுப்பதற்கு பதில் நான்கு கிராமங்களை தத்து எடுத்து நிவாரண பணிகள் மேற்கொண்டு இருக்கலாம்..

................................................................................................

தமிழ் வாரப்பத்திரிக்கையில் என்னைப்பொறுத்த வரை மிகவும் மட்டாமான பத்திரிக்கை தர்மமே இல்லாத செய்திகளை வெளியிடும் பத்திரிக்கை எதுவென்றால் அது நக்கீரன் தான்.. அது போல் பத்திரிக்கை விற்பதற்கும், நக்கீரன் என்ற ஒரு பத்திரிக்கை இருப்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக மாட்டுக்கறி மாமி என்று முதல்வரை கேவலமாக சித்திரிச்சு அதற்கு ஒரு செய்தியைப் போட்டுள்ளனர். இவர்கள் பத்திரிக்கை விற்பதற்கு பதில் வேறு பிழைப்பு பிழைக்கலாம்...
................................................................................................

தூத்துக்குடியில் மருத்துவர் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது இதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் அதைக்காரணம் காட்டி தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மருத்துவமனையை புறக்கனித்ததால் எத்தனை அப்பாவி மக்கள் வேதனைப்பட்டு இருப்பார்கள் என்று அறிய வேண்டும். மருத்துவர்கள் எல்லாரும் தவறானவர்கள் என்று எங்கும் எப்போதும் சொல்ல விரும்பவில்லை ஆனால் பணத்திற்கு அடிமையாகிய நிறைய மருத்துவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் இதை யாரும் மறுக்க இயலாது...

மருத்துவர்களே உங்கள் போராட்டத்தால் எத்தனை அப்பாவிகள் மனம் வேதனைப்பட்டு இருப்பர் என்று யோசித்துப்பாருங்கள்..

...............................................................................................

கடலூர், புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நித்யானந்தா சாமியாரின் தியான பீட ஆசிரமம் நிவாரண உதவிகளை செய்து வருகிறது.   புதுவை மாநிலம் ஏம்பலத்தில் தியான பீடம் ஆசிரமம் இருக்கிறது. இங்கிருந்து நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். கொடுப்பதற்கு என்று ஒரு மனம் வேண்டும் அது நித்தியானந்தாவிற்கு இப்போது வந்திருக்கும் போல... எத்தனை திட்டினாலும் இவர் செய்யும் இச்செயல் மிகவும் பாராட்டத்தக்கது...

..................................................................................................

ஆஸ்திரேலியா சென்று உள்ள நம் இந்திய அணி மன்னைக்கவ்வுகின்றது உள்ளுரில் வெற்றி கொடி நாட்டும் நாம் வெளியூரில் டவுசர் கிழிய ஓட வேண்டி இருக்கு...
..................................................................................................


அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் புதிய வகை சிகரெட் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். திராட்சை விதையில் இருந்து இதை உருவாக்கி உள்ளனர். புகையிலையால் தயாரிக்கப்பட்ட சிகரெட் போல இந்த சிகரெட் உடல் நலத்தை பாதிக்காது.   புகையிலை சிகரெட்டில் விஷத்தன்மை கொண்ட ரசாயணம் உள்ளது. 
இத னால் புற்று நோய் ஏற்படுகிறது. ஆனால் புதிய வகை சிகரெட்டில் விஷதன்மை இருக்காது. இருந்தாலும் புகையிலை சிகரெட்டை புகைத்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு இந்த சிகரெட்டிலும் ஏற்படும்.
அதே நேரத்தில் புதிய சிகரெட் மூலம் புகையை உள்ளே இழுப்பதால் அதனால் சில பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் புகையிலை சிகரெட் போல அதிக பாதிப்பு ஏற்படாது என்பதால் புகை பழக்கத்தை கை விட முடியாதவர்கள். புதிய சிகரெட்டை புகைக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

..................................................................................................

புத்தககண்காட்சியில் எனக்கு இரண்டு புத்தகங்கள் வேண்டும் என்று அண்ணன் வீடு திரும்பல் மோகன்குமாரிடம் கேட்டு இருந்தேன். அவர் மறக்காகமல் நான் கேட்ட கண்ணதாசனின் வனவாசமும், கவிஞர் மு.மேத்தாவின் கவிதைகள் புத்தகம் வாங்கி அனுப்பி இருந்தார் மிக்க  மகிழ்ச்சி எனக்கு. 
மோகன் அண்ணாவுக்கு மிக்க நன்றி...
..................................................................................................

அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் தின வாழ்த்துக்கள்...

பொங்கல் தினத்தன்று அனைவரும் தொலைக்காட்சியின் முன் உட்காரமால் குடும்பத்துடன் பொங்கல் வைத்து சந்தோசமாக பேசி சிரித்து மகிழுங்கள்... தொலைக்காட்சிக்கு அடிமையாகாதீர்கள்...

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் இந்த தை திருநாளில் நண்பர்கள் அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..


தகவல்


ஜெர்மனியில் உள்ள முயன்ஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீபன் ஸ்கலாட் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆய்வகத்தில் எலிகளின் விந்தணுவை உருவாக்க ஆராய்ச்சி மேற்கொண்டனர். எலிகளின் “ஜெர்ம்” செல்களில் இருந்து அவற்றை தயாரித்துள்ளனர். அவை நல்ல சத்தானவையாகவும் மரபணு பாதிப்பு இல்லாதவையாகவும் உள்ளன. 
எனவே இவற்றின் மூலம் எலிக் குட்டிகளை உருவாக்க முடியும் என இக்குழுவின் இஸ்ரேல் விஞ்ஞானி மகமூத் ஹலேகெல் தெரிவித்துள்ளார்.   இதே முறையில் ஆண்களின் விந்தணுவையும் உருவாக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆணின் விரையில் உள்ள “ஜெர்ம்” செல்களில் இருந்து இதே போன்று தரமான விந்தணுவை உருவாக்க முடியும். 
இதன் மூலம் ஆண்மையற்ற ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதற்கான ஆய்வுகள் பரிசோதனை கூடத்தில் நடந்து வருகின்றன. தற்போது அவை தோல்வி அடைந்தாலும், விரைவில் அதில் வெற்றி பெறுவோம் என்று விஞ்ஞானி ஹலேகெல் தெரிவித்துள்ளார்.



அறிமுகபதிவர்

இந்த வார அறிமுக பதிவர் வான் மழை போற்றுவோம் என்ற பெயரில் தனது கவிதையை பதிவாக்கு வருகிறார் குமரன் அவர்கள்.. மிகவும் ரசிக்கவைக்கும் கவிதைகள் பதிவு... அனைவரும் நிச்சயம் அறிய வேண்டிய பதிவு...

http://kumarankrishnan.blogspot.com/2012/01/blog-post.html


தத்துவம்

முடியாதது என்று எதுவும் இல்லை..! ஆனால் எல்லாமே சுலபமாக முடிவதில்லை!.......!


தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை
ஆரம்பிக்கிறது. 



அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்


எனது முகநூல் அப்டேட்ஸ்...

நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? ## ஒவ்வொரு மாநிலத்துக்கும் சண்டைய மூட்டிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறோம்...

 
வர்த்தகத்தில் சீனாவை முன்மாதிரியாக கருத வேண்டும்: ப.சிதம்பரம் ## அப்ப முந்தக்கூடாதா????

5 கோடியைத் தாண்டியது தமிழக வாக்காளர் எண்ணிக்கை: பிரவீண் குமார் ### அடுத்த வருடம் 6 கோடியை பிடிச்சுடுவமுள்ள...

புதிய அணைக்கு மக்கள் ஒப்புதல்: உம்மன் சாண்டி ### கேரள மக்களா ??? இல்லை உங்க அரசியல் மக்களா ???


 சேது சமுத்திர திட்டம்: நிபுணர் குழு அறிக்கையை கேட்கும் சுப்ரீம் கோர்ட் ###
தமிழ்நாட்டுக்கு அடுத்த பிரச்சனை கிடைச்சிடுச்சு...

இன்று காலை சிக்னலில் இருசக்கர வாகனத்தில் இருக்கும் போது இரண்டு மிஸ்டு கால்.. 3 வது காலை அட்டன் செய்தேன் இப்படி பேசியது...

ஏண்ணா இந்த தியேட்டர்ல பின் சீட்ல உட்கார்ந்து இருப்பவன் காலை விடுறான் !!!

விடுடி... கவலைப்படாதே இடைவேளையில் உன் முகத்தை பார்ப்பான்..!!!

உங்களுக்கு இந்த மாதிரி ஜோக்ஸ் வேண்டுமா 1யை பிரஸ் பன்டுங்க...

காலங்காத்தால கொலவெறி ஏத்திட்டானுக பிஎஸ்என்எல் காரணுக...


நண்பர்களே என்னை பேஸ்புக்கில் பின்தொடர search: sathish Sangkavi

Monday, January 9, 2012

பொண்ணு பார்க்க போனேன்...


ரகுவிற்கு 35 வயதைக் கடந்து விட்டது ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை, குடும்பம் குடும்பம் என்று இருந்தவன் தற்போது தான் பெண் தேடிக்கொண்டு இருக்கிறான்.

அன்று காலை அவனை சந்தித்த அவன் சித்தப்பாவும் புரோக்கருமான பொன்னுசாமி செட்டிபட்டியில் பொண்ணு இருக்குது, அதுக்கு 32 வயசாகுது எனக்கு இப்பதான் இந்த ஜாதகம் கிடைத்தது, எங்க சின்ன மாமா கொடுத்தார் ரொம்ப நாள் ஆச்சாம் அவர் கைக்கு கிடைச்சாம்

ரகு உன் ஜாதகத்துடன் பொருந்தி போகின்றது இந்த பொருத்தம் பெண்ணின் பெயர் அருக்காணி அப்பா பெயர் ராக்கியாம் எப்படா பார்க்கபோகலாம், என்ன சித்தப்பு இப்படி சொல்றீங்க நாளைக்கு காலைல நானும் மாமாவும் முதலில் சென்று பொண்ணப்பார்க்கிறோம் அடுத்து கல்யாணந்தான் சரியா சித்தப்பு..

ரகு ரொம்ப சந்தோசமாக இருந்தான் எப்படியும் இந்த வரன் அமைந்து விட வேண்டும் தற்போது நாம் பார்க்கும் இந்த டாஸ்மார்க் வேலைக்கு பெண் கிடைப்பதே பெரிய விசயம் இந்த பெண் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று வேண்டாத சாமி எல்லாம் வேண்டினான்.

அடுத்த நாள் மாமவுடன் பெண் பார்க்க செட்டிபட்டிக்கு சென்ற போது உறவினர் ஒருவர் தென்பட அவரை அழைத்து எங்க, இந்த பக்கம்? என்று அவரை விசாரிக்கும் போது ராக்கி வீட்டில் இன்று சீர் (பெண் வயதுக்கு வந்த சடங்கு) அதுக்குத்தான் வந்தேன்.

நீங்க இந்த பக்கம் என்றதும் இல்ல நாங்களும் ராக்கி வீட்டுக்குத்தான் வந்தோம் என்று மாமா சமாளித்தார். பின் டேய் பெண் அப்பா பெயரை நல்லாப்பாரு? என்றதும் ராக்கின்னு போட்டு இருக்கு மாமா என்றான் ரகு..!

ரகுவிற்கு குழப்பம் என்னடா இது ரொம்ப நாளைக்கு அப்புறம் பெண் பார்க்க வந்தா அந்த வீட்டில் சீர் என்கிறார்கள் ஒரு வேளை நான் பார்க்க வந்த பெண்ணிற்கு சீர் இருக்குமோ? என்று குழம்பினான், பெண்ணின் பெயரைப் பார்த்தான் அருக்காணி என்று இருந்தது. மாமாவை அழைத்து மாமா பெண் பெயர் அருக்காணி அப்பா பெயர் ராக்கி முதலில் விசாரிக்கலாம் மாமா அதற்கு பின் அவர்கள் வீட்டுக்கு போகலாம் என்றான்!!

நெருங்கிய உறவினரான கருப்புசாமி பேருந்தில் இருந்து இறங்க வர மாமா கருப்புசாமியை அழைத்து எங்க இந்த பக்கம் சீருக்கா என்றார், ஆமாம் நம்ம ராக்கி வீட்டில் சீருக்கு வந்தேன். ஒ! அப்படியா சரி ராக்கி வீட்டில் யாருக்கு சீர்? ராக்கி பெண் அருக்காணிக்கா? என்ற கேட்க கருப்புசாமி சிரித்துக்கொண்டே விளையாடதைய்யா...

ராக்கி பேத்தி ஸ்வர்ணாவிற்கு என்றதும் ரகுவிற்கு கொஞ்சம் சந்தோசம் அப்ப அருக்காணி என்பது ராக்கியோட பொண்ணுதானே என்று ரகு கேட்டதும் ஆமாங்க தம்பி என அவர் சொன்னதும் ரகுவிற்கு மனதில் நிம்மதி.

உடனே மாமா நாங்க ராக்கி வீட்டுக்குத்தான் பொண்ணு பார்க்க வந்திருக்றோம் என்றதும் கருப்புசாமி அப்படியா ராக்கிக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் பையனுக்கு ஒரு பொண்ணு இருக்கு உடனே ரகு அருக்காணிங்கிறது யாருங்க??? அதுவா தம்பி இன்னிக்கு சீர் நடக்குதே அந்த பொண்ணோட அம்மா...

என்னது நான் பார்க்க வந்த பொண்ணுனோட பெண்ணிற்கு சீர்ரா.....??????

( சீர் என்றால் பெண் வயதுக்கு வந்தவுடன் நடக்கு சடங்கிற்கு எங்கள் வட்டார வழக்கில் சீர் என்று பெயர்)