Thursday, June 11, 2015

மை நேம் ஈஸ் சின்ன "காக்கா முட்டை"

My Name is சின்ன காக்கா முட்டை...

பிரபல ஹீரோ கிடையாது, பிரபல டைரக்டர் கிடையாது, பிரபல இசையமைப்பாளர் கிடையாது, திருட்டு விசிடியில் படம் பார்ப்பவர்கள் எல்லாம் தியேட்டர் நோக்கி வர வைத்து விட்டார்கள் இந்த சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்கா முட்டையும்..

சென்னை நகரில் மிக பிரமாண்ட கட்டிடங்களும், மால்களும், பணக்காரர்கள் வாழும் ஏரியாவையே திரையிலும், சின்னத்திரையிலும் பார்த்த நமக்கு, ஒண்டிக்குடிசையில்அதிலேயே சமையல், உறக்கம், வீட்டுக்கு வெளியே உள்ள இடம் தான் குளியல் அறை என்று உள்ள அந்த மக்களின் சொர்க்கத்தை மிக அழகியலோடு படம் பிடித்து காட்டி இருக்கிறார். 

இதைப்பார்த்த பலருக்கு சென்னையில் இப்படியும் இடங்கள் இருக்கின்றனவா என்று வாயைபிளக்கத்தான் செய்கின்றனர்.

இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியையும் மனுசன் செதுக்கி இருக்கிறார். ஒவ்வொரு இடமும் கலையாக, இலக்கியமாக தெரிகிறது.

பசங்க நடக்கும் இடம், அவர்களின் நடை, உடை பாவனை என்று அங்கு வாழும் பசங்களை துல்லியமாக படம் பிடித்துள்ளார். மெட்ராசில் வசிப்பவனுக்கு எல்லா இடமும் அத்துப்பிடி என்று நினைத்துகொண்டு இருந்தேன், இப்போது தான் தெரிகிறது அங்கு குப்பத்தில் வாழும் குழந்தைகள் மையிலாப்பூரை கூட அதிகம் பார்த்ததில்லை என்று...

மணிகண்டன் இந்த படத்தின் ஸ்க்ரிப்ட்டை செதுக்கி இருக்கிறார். ஒவ்வொரு இடமும் நச். படத்தில் குழந்தைகள் பேசும் அந்த பேச்சு, குழந்தைகள் நேர்மையாக வாழவேண்டும் என்று நினைப்பது போன்றவற்றை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார்.

இந்த படம் பார்க்கும் போது இடைவேளை என்று போட்டதும் மனைவியிடம் சொன்னேன் அதுக்குள்ள இடைவேளையா என்று அதே போல் படம் முடிந்ததும் படம் முடிந்ததா என்று கேள்வியோடு தான் நின்றேன். அந்த அளவிற்கு படத்தோடு ஒன்றிப்போயிருந்தேன்.

செவ்வாய்கிழமை மாலை காட்சிக்கு சென்றேன், தியேட்டர் புல், எங்க ஊரில் எல்லாம் வார இறுதி நாட்களில் தான் தியேட்டர் நிரம்பும் என்றார்கள், நல்ல படத்தை எப்போதும் நம் மக்கள் கைவிடவில்லை என்பதற்கு இதுஒன்றே சாட்சி...
நான் அனுபவித்துவிட்டேன் இந்த சுகானுபவத்தை.... நீங்கள்...???

இந்த படத்தை பற்றி எழுதினால் ஒவ்வொரு காட்சியாக எழுதிக்கொண்டே போகலாம்.. இந்த படத்தை பற்றி பேசுவதை விட படத்தை பார்த்து அனுபவிப்பதே சுகானுபவம்...

காக்கா முட்டையின் நினைவுகளில் இருந்து நிறைய பேர் மீளவில்லை... அதில் நானும் ஒருவன்..

அப்ப ஒரு நாள் ஒரு சொந்தக்காரன் வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க போயிருந்தோம். நாங்க போய் இருந்த அந்த வீட்டுக்காரர் நல்ல வசதி அப்பவே காரு, பைக்கு, போன் எல்லாம் வெச்சிருந்தாரு ( இது நடந்தது 1986) வீட்டுக்குள்ள போனதும் எங்க இருவரையும் ஏற, இறங்க பார்த்தாரு....

அந்த பெரிய மனுசன் நல்லாவே மூஞ்சு கொடுத்து பேசல, அப்படி ஒரு கேவளமான பார்வை பார்த்தாரு. என் கூட வந்த அண்ணன் மற்றும் கல்யாண மாப்பிள்ளைக்கு ரொம்ப தர்மசங்கடாமா போச்சு..

இவன் எல்லாம் கண்ணாலத்துக்க வந்தா என்ன? வரலீனா என்ன ? மனதில் திட்டிகிட்டே பத்திரிக்கையை கொடுத்தோம். அவரு டேபிள்ல வை என்று சொல்லி விட்டு உள்ளே போய்ட்டார்.

எழுந்து புறப்பட வெளியே வந்தோம், கிளம்பிட்டீங்களா காபி போடச்சொல்லாம்ன்னு இருந்தேன் சரி சரி கிளம்புங்க என்றார்.

இந்த காக்காமுட்டை படம் பார்த்த உடன் என் கண்ணீரோடு, அந்த ஞாபகமும் எட்டி பார்த்தது....

கிளம்புங்க என்று சொன்னது கூட பரவாயில்லை இனிமே இந்த மாதிரி துணி, செருப்பு எல்லாம் போட்டுட்டு என் வீட்டுபக்கம் வராதீங்க தம்பி, அக்கம் பக்கத்தில் என்னை என்ன நினைப்பாங்க என்று வெளியே தள்ளாத குறையாக தள்ளினார்...

10 comments:

  1. ஏறக்குறை பத்து ஆண்டுகளுக்குப் பின்
    ஹவுஸ் ஃபுல் என்கிற போர்டை
    இந்தப் படத்திற்குத்தான் பார்த்தேன்
    அற்புதமான படம்
    விமர்சனம் அருமை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அற்புதமான படத்தை பார்த்தேன்... ரசித்தேன்...

    ReplyDelete
  3. பரவலான பாராட்டைப் பெற்றுள்ள இப்படத்தின் இயக்குனருக்கு வாழ்த்துகள்.பஞ்ச் டயலாக் என்ற பெயரில் அபத்தங்கள் நிறைந்த தமிழ் படங்களில் இப்படி ஒரு படம் வந்தது ஆறுதல். சிறப்பான விமர்சனம்

    ReplyDelete
  4. தம்பீ , அந்த சம்பவத்தை இன்னுமா ஞாபகம் வச்சுருக்கீங்கோ ? நான் கூட மறந்திட்டேன். நான் அப்படி நடந்துகிட்டதுக்கோ சாரி ! தம்பி சாரி! கூடவே காதைப் பிடித்து திருகினதுக்கும்.
    இப்போ பஸ்ஸை எல்லாம் வித்துட்டோ பசு மாடு வாங்கி பண்ணை வச்சிருக்கோம். பண்ணைக்கு வாங்கோ என அன்புடன் அழைக்கிறேன்.

    ரஜினி சின்னசாமி

    ReplyDelete
  5. சிறப்பான சிறுகதையை வெள்ளித்திரையில் வெளுத்துக் கட்டி எடுத்திருக்கிறார்கள்.

    சர்புதீன்

    ReplyDelete
  6. படம் சூப்பர் சார்.

    தருமேந்திரன்.

    ReplyDelete
  7. என் சிறுவயது ஞாபகங்களை கிளறிவிட்டது , இந்த காக்கா முட்டை. அருமை.... வேறு என்ன சொல்ல.

    சொக்கநாதன்

    ReplyDelete
  8. வதனமே சந்தர பிம்பமோ போண்ற பாடல்கள் வந்த காலத்தில் கண்ணதாசன் தமிழ் பாடல்களைப் புகுத்தியதை போல் மசாலாக்களுக்கு நடுவில் ஒரு மொந்தை கள்ளைப் போல அற்புதமான படம்.

    அழகேசபூபதி

    ReplyDelete
  9. நல்ல படைப்பு நல்ல விமர்சனம்.

    முனைவர் சாந்தமூர்த்தி

    ReplyDelete
  10. அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பா! ஜெய் பாகுபலி பார்த்தாயிற்றா ?

    சந்திரமணி

    ReplyDelete