Monday, June 1, 2015

கல்யாண சோறு


இந்த வருட வைகாசியில் உறவுகள் மற்றும் நண்பர்களின் பல திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணம் என்றாலே உணவு தான் எல்லா வீட்டிலும் முக்கியமானதாக இருக்கும் மற்றும் அனைவரும் உணவிற்குத்தான் மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் அனைத்து இடங்களிலும் கொடுப்பார்கள். அந்த முக்கியத்துவம் அவர்களின் அந்தஸ்த்து போல இருக்கும், அதற்காக நிறைய செலவு செய்து உழைத்திருப்பார்கள் என்றால் அது மிகையாகது. 

நான் சாப்பிட்ட எல்லா இடங்களிலும் (ஒரு திருமணத்தை தவிர) உணவுகள் எங்குமே நம் பாரம்பரிய உணவு முறைகளில் இல்லை, ரொட்டி அல்லது நான் கொடுக்காத திருமணமே இல்லை, நான், பன்னீர் மசாலா, தயிர் சேமியா, ஊத்தாப்பாம் என்று எதுவுமே நம் உடலிற்கு ஏற்ற உணவாகவே இல்லை. இதை குறையாக எழுதவில்லை நிறைய செலவு செய்து இந்த மாதிரி நம் பாரம்பயித்திற்கும், நம் மண்ணிற்கேற்ற நம் உடலிற்கும் சம்பந்தம் இல்லாத உணவை பெருமை என்ற பெயரிலும். கெத்து என்ற பெயரிலும் பணத்தை வாரி இறைத்து உணவாக வைக்கின்றனர்.

அதுவும் கல்யாண வீட்டில் பபே என்ற பெயரில் நமக்க சம்பந்தமில்லாத உணவு முறையை இப்பொழுது எல்லாம் நாகரீகம் என்ற பெயரில் கொண்டு வருகின்றனர். நம்ம ஊர் பெருசுங்க எல்லாம் தோசை ஒன்னு, கொஞ்சம் சட்னி கொடுப்பா என்று தட்டை எடுத்துக்கொண்டு வரிசையில் காத்து நின்று வாங்கி உண்ணுகின்றனர். இது தான் நம் பாரம்பரிய மிக்க கல்யாண சாப்பாடா? என்றால் கேள்வி மட்டுமே மிஞ்சுகிறது.

அதுவும் இந்த பபே முறையில் எல்லா வகை சட்டினிக்களும், குழம்பும் ஒன்றாக கலந்து விடுகின்றது, இதில் எங்க சட்டினியின் சுவையை சுவைப்பது சுவைத்து உண்பது என்று தான் இன்னும் விளங்கல..

இதை எல்லாம் தான் நம் மக்கள் விரும்புகின்றனர். ஒவ்வொரு பப்பே முறை உணவிற்கு செல்லும் போது என் மனதிற்கு தோன்றுவது மேல் உள்ள என் குமுறல்கள்... இப்படி பபே பற்றி நம்ம ஊர் ஆட்களிடம் காதும் காதும் வைத்த மாதிரி கேட்டால் பொழுந்து கட்டுவார்கள்.

வரிசையாக வந்த திருமணத்தில் கடந்த சனி இரவு ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன் மணமகனின் அப்பா பாரம்பரியத்தை மிக விரும்புபவர் போல அனைவருக்கும் தலைவாலை இலை, 3 வகையாக காய்கள், கூட்டு, வடை, பாயசம் அப்பளம் என்று 15 வருடத்திற்கு முந்தைய திருமண விருந்தை கடைபிடித்து கலக்கி இருந்தார்.

திருப்தியாக சாப்பிட்டு விட்டு கையை கழுவிவிட்டு வெற்றிலை பாக்கு போடும் போது ஒரு ஆத்தா சொன்னது, இந்த மாதிரி விருந்து சாப்பிட்டு நொம்ப நாள் ஆச்சு... சின்னச்சாமி கலக்கிபுட்டாரு என்றது...

நானும் சொல்கிறேன் இதை போல, விருந்து சாப்பிட்டு நிறைய நாள் ஆச்சு என்று.... 

இனி எந்த கண்ணாலத்தில் இப்படி சோறு போட போறாங்களோன்னு என் மனசு அல்லோல்டுது.

2 comments:

  1. உண்மைதான் பெருமைக்கு விருந்து போடுவதே இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது :)

    ReplyDelete
  2. ம்ஹீம்... திருப்தியே இருக்காது...

    ReplyDelete