கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கம் கீரை பொன்னாங்கண்ணி அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை..
சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. இதில் ஊட்டச்சத்து, நீர்சத்து, கொழுப்புச் சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை இது.
பொன்னாங்கண்ணியை தொடந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப்பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துள்ளியமாக தெரிய உதவும் கீரை.
பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி என்றும், நாட்டுப் பொன்னாங்கண்ணி
எனவும் இரு வகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு
வளர்க்கப்படுவது .மருத்துவ குணம் குறைவு . பெச்சையாக கிடைக்கும் நாட்டு
பொன்னாங்கண்ணி தான் பல அருங் குணங்கள் கொண்டது. உடலுக்கு குறிச்சியை
தரக்கூடியது.
பொன்னாங்கண்ணியின் பயன்கள்:
இக்கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
துவரம் பருப்பு, நேய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
கீழா நெல்லிச்சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் விலகும்.
சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.
உடல் தோள் பளபள என்று மாற்றுவதில் பெரும்பங்குண்டு.
மூலநோள், மன்னீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது.
இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம்
கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதனால்
இரத்தம் அசுத்தமடைகின்றது.
பொன்னாங்கண்ணிக் கிரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன்
பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து
வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும்.
உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம்
அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும்
கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.
இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனை நீங்கும்.
கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்கண்ணி
இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது -
10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது - 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர்
தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும்
உபயோகிக்கலாம்.
பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயமும் மூளையும்
புத்துணர்வாக்கும். மேனியை பளபளக்கச் செய்யும். நோய் காரணமாக
பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி
பெருகி நல்ல பலம் சேரும்.
பொன்னாங்காணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து
அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு
20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி
வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலை முழுகிவர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால்
உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி
குணமாகும்.
பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப் பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்து வர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.
உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை
இவற்றை நீக்கவல்ல கீரை. குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக்
கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை
மருத்துவம் இக்கீரையை ‘விந்து கட்டி எனப் பேசுகிறது.
இந்தக் கீரை வயல் வரப்புகளிலும், கிணற்று மேடுகளிலும், குளம் குட்டைகளில்
கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். இனி கண்டால் விடாதீர்கள் ,பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்கவேண்டும் .
இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு பலன் இல்லை என்று பாராதீர்கள் .குறைந்தது ஒரு மண்டலம் எந்த மூலிகைக்கும் தேவை.
{ Online Works For All } at: November 15, 2011 11:29 PM said...
ReplyDeleteData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html//
இனி எங்கேயாவது உன்னை பார்த்தேன்னா அருவாளை எடுக்கவேண்டி இருக்கும் ஜாக்குரதை ராஸ்கல்....
அய்யா அருமையான மருத்துவம், பாட்டி வைத்தியத்தையும் மிஞ்சுட்டுது நன்றி மக்கா...!!!
ReplyDeleteஒரு கீரையில் இத்தனை மல்ட்டி பர்ப்பஸ் பலன்களா..? கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் செலவழிப்பதால் எனக்கு கண் பிரச்சனை இருக்கிறது. உடனே சாப்பிட்டுப் பார்த்துடறேன். பயனுள்ள தகவலுக்கு நன்றி சங்கவி சார்...
ReplyDeleteமாப்ள பயனுள்ள தகவல்கள் நன்றிங்கோ!
ReplyDeleteமிகவும் பயனில்ல தகவல்கள்,,
ReplyDeleteநன்றி..
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
Good info
ReplyDeleteசீமை மற்றும் நாட்டுக்கீரை என்பதை எப்படி அடையாளம் காண்பது
தலைப்பில் வெள்ளை அணுக்கள் என்று கொடுக்கப் பட்டுள்ளது, பதிவில் விந்து அணுக்கள் என்று கொடுக்கப் பட்டுள்ளது... இரண்டும் வேறு வேறு என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்... மற்றபடி அருமையான மருத்துவ விஷயங்கள்
ReplyDeleteஇங்கும் பொன்னாங்காணிக்கீரை பழுத்தல் கீரையோடு வருகிறது.
ReplyDeleteபொன்விலை.ஆனாலும் மாதமிருமுறையாவது வாங்கிச் சமைத்துக்கொள்வேன்.மிகவும் பிடித்த கீரை.அதன் பயன்கள் சொன்னீர்கள்.நன்றி சங்கவி !
thanks boos
ReplyDeleteyappade
ReplyDeleteநீர்முள்ளி 100 கிராம்
ReplyDeleteஓரிதழ்தாமரை 200 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
50 கிராம்
அஸ்வஹந்தா 50 கிராம்
பூனைக்காலி 100 கிராம்
முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123