Wednesday, July 10, 2013

கணவன் மனைவி ரொமான்ஸ் ரகசியங்கள்...

 


கணவனை, மனைவி கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள  ரொமான்ஸ் ரகசியங்கள் பல உண்டு இல்லற வாழ்க்கையில் சின்னச் சின்ன ரொமான்ஸ் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும் இதற்கு இன்னொரு பெயரும் சொல்லலாம் தலையணை மந்திரம் என்பார்கள்.

பெண் திருமணம் ஆனவுடன் அவளது அம்மா மற்றும் உறவினராக உள்ள மூத்த பெண்கள் சொல்லிக்கொடுக்கும் முதல் வார்த்தை கணவனை உன் கைக்குள் வைத்துக்கொள் என்பது தான். கணவனை கைக்குள் வைத்துக்கொள்வதற்கு தலையணை மந்திரம் மட்டும் போதாது கொஞ்சம் புகழ்ச்சியும் தேவைப்படும்.

ஒரு குடும்பத்தில் அந்த குடும்ப தலைவன் முன்னேற வேண்டும் என்றால் நிச்சயம் அங்கு மனைவியின் ஊக்கமும் உறுதுணையும் தேவை. மனைவியின் உறுதுணை இல்லை என்றால் முன்னேறுவது கொஞ்சம் கடினமே. கணவன் கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி உழைத்து வருகையில் அவனை களைப்பு தீராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மனைவியின் கடமை ஆனால் இந்த வாங்கியம் இன்றைய நிலைக்கு பொருந்துமா? என்று ஆராயும் போது நிச்சயம் பொருந்தாது ! என்று தான் சொல்லவேண்டும்.

கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் காலம் இந்த காலம் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதோடு இல்லாமல் இருவர் வேலைகளை பற்றியும் பகிர்ந்து கொள்ளவேண்டும் அப்போது தான் இருவரின் கஷ்டமும், நஷ்டமும், சந்தோசமும் புரிந்து கொள்ள முடியும். கணவருக்கு பிடித்த மாதிரியான செயல்பாடுகளை மனைவி செய்வதில் எந்தவித தவறும் இல்லை அதே போல் மனைவிக்கு பிடிக்கும் செயல்பாடுகளையும் கணவன் செய்யவேண்டும் என மனைவி நிச்சயம் எதிர்பார்ப்பார்கள்..

நீ மட்டும் தான் சம்பாதிக்கிறாயா? நானும் சம்பாதிக்கிறேன் என்று ஏட்டிக்கு போட்டி நடந்தால் அந்த குடும்பம் சரியாக நடக்காது ஏழரையாகவே இருக்கும். இன்றைய கால கட்டத்தில் வீட்டில் நிம்மதி குறைய குறைய எந்த பணியையும் சரியாக செய்ய இயலாது. அதனால் இருக்கும் நோய்கள் எல்லாம் வருவதற்கு ஏதுவாக அமையும். வீட்டுச்சாப்பாடு நன்றாக இல்லாத பட்சத்தில் ஹோட்டலுக்கு செல்ல மனம் ஏதுவாகும் இதற்கு இடம் அளிக்காமல் இருக்கவேண்டும்.

இருவரும் வேலைக்கு செல்லும் போது கணவனை மனைவியும், மனைவியை கணவனும் கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் மனைவி கணவனை எப்படி கைக்குள் வைத்துக்கொள்வது எப்படி என்ற அவர்களின் ரொமான்ஸ் ரகசியங்களுக்குள் உள்ளே செல்வோம்..

காலையில் கணவன் எழும் போது நச் என்ற முத்தத்தோடு எழும் போது அன்றைய பொழுது புத்துணர்ச்சியாக தொடங்கி அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவே இருக்கும்.

கணவனை தினமும் வாக்கிங் போங்க அப்பத்தான் உடல் ஆரோக்கிமாக இருக்கும் உடல் வலி தெரியாது உங்களோடு நானும் வருகிறேன் என அதற்காக தினமும் அரை மணி நேரம் ஒதுக்குங்கள் அது காலையாகவும் இருக்கலாம் மாலையாகவும் இருக்கலாம். இந்த சந்தர்ப்பத்தில் இருவரின் அலுவலகம் தொடர்பான விசயங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

அவருக்கு பிடித்தமான உணவுகளை சமையுங்கள் தெரியவில்லையா? இருக்கிறதே இருக்கு இணையம் இங்கு நிறைய ரெசிபிக்கள் இருக்கு, இதை பார்த்து படித்து செய்து கொடுங்கள். நீங்கள் சமைக்கும் போது காய்கறி நறுக்க  மற்றும் சில உதவிக்கு கணவரை கூட இருக்க சொல்லுங்க அங்கு அவ்வப்போது கிள்ளல், கொஞ்சல், செல்ல அடி என ரொமன்சை மறந்திடாதீங்க.. "அங்க அடிக்கிற ரொமான்சில் எப்படா கிச்சனுக்கு போவோம் என்று மனசு அலைபாயனும்"
எப்போதும் இன்றைக்கு என்ன ஸ்பெசல் என்பதில் ஆண்கள் ஆர்வம் காட்டுவார்கள் அது சமையல் அறையாக இருந்தாலும் சரி, படுக்கை அறையாக இருந்தாலும் சரி அங்கு ஸ்பெசலாக கணவனை கவனிக்க கவனிக்க அவர்களின் மனம் திருப்தியாகும் நீங்களும் சமையம் பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் வேண்டாம் என்பதை சொல்லலாம் அப்புறம் பாருங்க அவர் உங்க முந்தாணிய பிடிச்சிகிட்டு பின்னாடியே சுத்துவார்.

ஊருக்கு அவரை விட்டு விட்டு தனியாக செல்லும் போது அவ்வப்போது போனில் பேசி நான் இருந்தா அதை செய்திருப்பீங்க இதை செய்து இருப்பீங்க என்று பேசுங்க.. அப்பத்தான் நீங்கள் இல்லாத கொண்டாட்டத்தில் தண்ணி அடிக்கிறாரா என்று வேவு பார்க்க முடியும் அதை கண்டுபிடிச்சிட்டீங்கன்னா சண்டை போடாதீங்க அவர் போக்குலியே அவரை மிரட்டி வெச்சுக்குங்க..


விலை உயர்ந்த கிப்ட் மனைவிக்கு பரிசளிப்பது என்பது கணவருக்கு பிடித்த மான விசயம். அதேசமயம் கணவர் வீட்டு செலவிற்கு கொடுத்த பணத்தில் மிச்சம் பிடித்து அதில் இருந்து கிப்ட் வாங்கிக் கொடுத்தால் கணவர் குளிர்ந்து போய்விடுவார். எனவே அடிக்கடி இல்லாவிட்டாலும் திருமணநாள், கணவரின் பிறந்த நாளில் மனம் கவர்ந்த பரிசினை வாங்கிக் கொடுங்களேன் கூடவே நாலு முத்தத்தையும்.

உள்ளூரிலேயே இருப்பதை விட 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை வெளியில் போங்க அங்கு நல்ல அறை எடுத்து அந்த ஊரை சுற்றிபார்க்கும் சாயலில் உங்க காதலையும் ரொமான்சையும் வளர்த்துங்க.. புது புது இடமா தேர்வு செய்து அதைப்பற்றி நெட்டில் சுட்டு அவருக்கு சொல்லுங்க. புது இடங்களில் புது கொண்டாட்டத்தை ஆரம்பியுங்க அங்க ஆடிய ஆட்டம் அடுத்த சுற்றுலா செல்லும் வரை மனதில் ஓடவேண்டும். அவ்வப்போது அதை ஞாபகப்படுத்தி ஆட்டம் போடுங்க.

இருவருக்கும் காலையில் சண்டை வந்தால், மாலை நீங்களாகவே என்னங்க மதியம் என்ன சாப்பிட்டீங்க? என்ன? ஏது? என்று தானாகவே முன் வந்து ஒரு இரு முறை பேசுங்க அப்புறம், அவர் சண்டையிட்டால் அடுத்த 10 நிமிடத்தில் அவரே பேசும் பழக்கத்துக்கு வருவார். அப்படி வரும் போது இருக்க அணைச்சு ஒரு உம்மா கொடுங்க மொத்த கோபமும் பறந்து விடும் இருவருக்கும்.

முக்கியமாக அவரின் அப்பா அம்மா வந்தால் அவர்களுக்கு என்ன வேண்டும் வேண்டாம் என்று முதலிலேயே தெரிந்து கொண்டு அவர்களுக்கு பிடிக்காதவற்றை தள்ளிவிட்டு பிடித்தவற்றை செய்யுங்க அவுங்க பாரட்டை அள்ளுங்க அவர்கள் பாராடை பெற பெற கணவர் உங்களையும் உங்க குடும்பத்தையும் மெச்சுவார் அப்போது எல்லாம் உங்களுக்காத்தாங்க எனக்கு நீங்களும் முக்கியம் அவர்களும் முக்கியம் என்று பிட்டை அள்ளி விடுங்க.

தலையணை மந்திரம் மட்டும் இல்லாமல் அவ்வப்போது விளையாடும் விளையாட்டுக்கள், சிறு சண்டைகள் எல்லாம் இருக்கனும் ஆனால் அதை ஊதி பெரிதாக்காமல் விட்டு புடிங்க உங்க ஆள் உங்களை சுத்தி சுத்தி வருவார். அப்புறம் என்ன ரொமான்சும் சந்தோசமும் துள்ளி விளையாடும் உங்க வீட்டில்.

53 comments:

  1. அட்வைசுகள் எல்லாமே சூப்பர் பிரதர். இதில் எத்தனை பர்சொன்ட் சொந்த அனுபவம்?

    ReplyDelete
    Replies
    1. அண்ணே... ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும்...

      Delete
  2. ரொமான்ஸ் டிப்ஸ் சூப்பர்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே...

      Delete
  3. ஹீஹீ அண்ணே எனக்கு வெட்கமாகீது

    ReplyDelete
    Replies
    1. அண்ணே அதிகமா வெட்கப்பட்டா ரொமான்ஸ் ஓடிடும்...

      Delete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சமுத்திரா

      Delete
  5. அருமை ,நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்தி

      Delete
  6. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

      Delete
  7. நல்ல தகவல். யாரும் யாரையும் கைக்குள்ள வச்சுக்க வேணாம். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடந்தாலே போதும்

    ReplyDelete
    Replies
    1. அக்கா அனுபவசாலி சொன்ன கேட்டுக்கோனும் குமாருருருரு...

      Delete
  8. வீட்டுச்சாப்பாடு நன்றாக இல்லாத பட்சத்தில் ஹோட்டலுக்கு செல்ல மனம் ஏதுவாகும் இதற்கு இடம் அளிக்காமல் இருக்கவேண்டும்//////
    எவ்வளவு பெரிய விஷயத்தை இப்படி இலைமறைக்காயாய் பட்டுன்னு சொல்லிப்புட்டீக?...
    ஐடியாவெல்லாம் உண்மையிலேயே சூப்பர்தான்...

    ReplyDelete
    Replies
    1. கண்டுபிடிச்சிட்டீங்களா...

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ரோஸ்...

      Delete
  9. ரசிக்கும்படியான ரகசியம்

    ReplyDelete
  10. ரசிக்கும்படியான ரகசியம் narasimhan srinivasan

    ReplyDelete
  11. நமக்கு ஏதாவது டிப்ஸ் ??

    ReplyDelete
    Replies
    1. இருக்குப்பா.. நமக்கு இல்லாததா... அடுத்த பதிவே அதுதானே...

      Delete
  12. சங்கவி தலைப்பை பார்த்ததும் ஒரு நொடி பயந்தே போனேன் . முழுவதும் வாசித்ததும் ரசிக்கும் வகையில் இருந்தது . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சங்கர்...

      Delete
  13. சங்கவி மாம்ஸ்....இன்னுமா பிளாக் எழுதுரீர்....????????

    அப்ப நீர் மூத்த பதிவர் இல்லையா...???

    அல்லது...பிரபல பதிவர் இல்லையா??????????

    ReplyDelete
    Replies


    1. அண்ணே நல்லாதானே இருந்தீரு இப்போ என்னவே ஆச்சு ஹி ஹி....

      Delete
    2. மாம்ஸ்... நம்ம பொழுது போக்கே எதாவது கிறுக்குவது தானே.. ஒன்னு ப்ளாக்கில் இல்லேனா முகநூலில்...

      மாம்ஸ்... நான் யூத் பதிவர் மாம்ஸ்...

      பிரபலமா ஆள விடுங்கப்பா... பிரபலம் என்றாலே பிராப்ளம் தான்...

      Delete
  14. SIMPLY SUPER.....m

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

      Delete
  15. ஆஹா இப்படி எல்லாம் இருக்கா அண்ணாச்சி!கற்றுக்கொள்வோம்!

    ReplyDelete
    Replies
    1. கத்துக்கனும் அப்பதான் சந்தோசம் இரட்டிப்பாகும்...

      Delete
  16. இப்போ எல்லாம் ரொமான்ஸ் பண்ணுற நிலைமையிலா இருக்கோம், ராஜி தங்கச்சி சொன்ன மாதிரி யாரும் யாரையும் கைக்குள்ளே வச்சுக்க வேணாம் பரஸ்பரம் புரிந்து, விட்டு கொடுத்து வாழ்ந்தாலே சொர்க்கம்தான் மக்கா.

    ReplyDelete
    Replies
    1. மக்கா ரொமான்ஸ் செய்து பாருங்க... இன்னும் புத்துணர்ச்சி அதிகமாகும் இது ஆராய்ந்த உண்மை..

      Delete
  17. ///காலையில் கணவன் எழும் போது நச் என்ற முத்தத்தோடு எழும் போது அன்றைய பொழுது புத்துணர்ச்சியாக //
    படிக்க நன்றாகத்தான் இருக்கிறது முத்தம் கிடைத்தால் சரி ஆனால் நமக்கு கிடைப்பதென்னவோ நச் என்ற ஒரு குத்துதானே நண்பா

    ReplyDelete
    Replies
    1. குத்து வாங்கியதும் திருப்பு நீங்க குத்து கொடுக்கனும் இதழால்...

      Delete
  18. //கணவனை தினமும் வாக்கிங் போங்க அப்பத்தான் உடல் ஆரோக்கிமாக இருக்கும் உடல் வலி தெரியாது உங்களோடு நானும் வருகிறேன் //

    என்ன நண்பா தப்பு தப்பா அட்வைஸ் தருகிறிர்கள் நாம தனியாக போனாதான் நாலு பிகர்களை சைட்டு அடித்துவிட்டு புத்துணர்ச்சியோடு இருக்க முடியும்

    ReplyDelete
    Replies
    1. பொண்ட்டியோட சைட் அடிங்க அது தான் பாதுகாப்பும் கூட...

      Delete
  19. /அங்க அடிக்கிற ரொமான்சில் எப்படா கிச்சனுக்கு போவோம் என்று மனசு அலைபாயனும்//

    தப்பு தப்பு அங்க அவங்க அடிக்கிற (பூரிக்கட்டையால்) அடியிலே எப்படா கிச்சனைவிட்டு போவோம் என்று மனசு அலைபாயதுங்க


    என்னங்க நம்ம பொண்னுங்க சின்ன வயசில் இருந்து அவங்க வீட்டு கத்துகிட்ட சமையலை ஒழுங்கா பண்ணிணா போதாத இதில வேற நெட்ல் பாத்து ரெசிப்பி கத்துக்க சொல்லூறீங்க

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எதுக்குங்க பூரி கட்டை எல்லாம் அத தூக்கி வீசிட்டு அதுற்கு பதிலா சின்ன மிஷின் வாங்கிக்குங்க அது நல்லா உருட்டும்...

      பூரி கட்டையில் அடிக்கும் போது இடையில் ஒரு கிள்ளு கிள்ளிட்டு எஸ் ஆகுங்க அப்புறம் பாருங்க ரொமான்ஸ் கும்முன்னு இருக்கும்...

      Delete
  20. //புது புது இடமா தேர்வு செய்து அதைப்பற்றி நெட்டில் சுட்டு அவருக்கு சொல்லுங்க. புது இடங்களில் புது கொண்டாட்டத்தை ஆரம்பியுங்க ///

    பாட்டில் புதுசா இருந்தாலும் சரக்கு என்னவோ அதே சரக்குதானே அதை நாம வழக்கமா சாப்பிடுற இடத்தில் இருந்து சாப்பிட்டா என்ன புது இடத்தில சாப்பிட்டா என்னங்க

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவருக்கும் ஒரு சுவை.. உங்களுக்கு ஒரு சுவை எனக்கு ஒரு சுவை.. நல்ல காற்றோட்டமான இடம் குளு குளு அறையில் அப்படியே தனிமையில் பேசிகிட்டு ரொமன்ஸ் விடுங்க... அப்ப சாப்பிடும் சாப்பாட்டின் சுவை இன்னும் கூடி இருக்கும்...

      Delete
  21. திருமணம் என்பதே இருமனம் சேர்த்தல் தானே இது எல்லோருக்கும் பொருத்தமான தகவல்களைப் பரிமாறிக்கொண்டமைக்கு பாராட்டுக்கள்.


    த-ம.-7

    ReplyDelete
    Replies
    1. இருமணம் சேருவதற்கும் ரொமான்ஸ்க்கும் சம்பந்தம் இருக்கு...

      Delete
  22. Avargal Unmaigal...ஒரு பதிவே எழுதிடலாம்..

    ReplyDelete
    Replies
    1. ஆம் எழுதி இருக்கலாங்க... எழுதுவார்ன்னு நம்புவோம்...

      Delete
  23. இந்த ரகசியத்தை வெளியில சொல்லலாமா?

    ReplyDelete
    Replies
    1. நாலு பேர் சந்தோசமா இருக்க இது பயன்படும் என்றால் சொல்லலாம் சார்...

      Delete
  24. ஓ... இது தான் ரகசியமா?
    நல்லது. நன்றி.

    ReplyDelete
  25. ரொமான்ஸ் டிப்ஸ் சூப்பர்,நன்றிங்க..

    ReplyDelete
  26. டிப்ஸ் சூப்பர்..
    it's all in the game anna :P :)

    ReplyDelete
  27. anne 25 vayathil thiumanam seithu kolalama??

    ReplyDelete
  28. neenga sonathula etha senjalum my hus care panikave maataar and epa veeta vitu escape ahalam nu than try panitey irupar. what to do

    ReplyDelete