Friday, August 2, 2013

தேன்மொழி


பாவாடை சட்டை அணிந்து முக்கை ஒழுகிக்கொண்டு இருக்கும் போது இருந்து பழக்கம் தேனு என்கிற தேன்மொழியை. செம்மண் காட்டிற்கு விடுமுறை நாட்களில் ஆடு மேய்க்க காலையிலேயே குடும்பத்தோடு சென்று விடுவான் சத்தி. கூடவே தூக்கு போசியில் பழையசோறும் தொட்டுக்க பச்சமிளாகாய், வெங்காயமும்...

அம்மாவோடு ஆட்டை ஓட்டிக்கொண்டு வருவாள் தேன்மொழி. சிறுவயது சிநேகம் எக்காரணம் கொண்டு தவறாக செல்லாது என அம்மாக்கள் ஆடு மேய்க்க, இவர்கள் இருவரும் நொண்டி விளையாடி மகிழ்வார்கள். அப்படியே மதிய வேளையில் வேப்பமர நிழலில் அஞ்சாங்கல் ஆடுவதும் பின் மாலை மீண்டும் ஆட்டை ஓட்டிக்கொண்டு வீடு வருவதும் இவர்களின் வார இறுதி நாட்களின் பொழுது போக்கு...

சக்தி சைக்கிள் ஓட்டி பழகும் போது தேனுக்கும் இவன் தான் பழக்கிவிட்டான். தேனுக்கு எப்பவும் இவனை பிடிக்கும் இவன் இல்லாமல் விளையாட செல்ல மாட்டாள் அப்படியே இருவரும் 12ம் வகுப்பு வரை படித்தனர்.

12ம் வகுப்பு படிக்கும் போது தேனு பிறந்தநாளுக்கு வகுப்பில் உள்ள எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்து வந்தாள் சத்தியின் இருக்கை வரும் போது சட்டென்று சத்தி எழுந்து வெளியே சென்றான் தேனுக்கும் குழப்பம் ஏன் எழுந்து சென்றான் என்று. மாலை பள்ளி முடிந்ததும் இருவரும் சைக்கிளில் வீடு செல்லும் போது முதன் முதலாக தேனுக்கு மிக பிடிச்ச ரொம்ப நாள் ஆசைப்பட்ட வாக்மேனை பரிசாக அளிக்கும் போது தேன் ஏன் என்னிடம் மிட்டாய் வாங்கவில்லை என்றதும் எல்லாருக்கும் கொடுக்கும் மிட்டாய் எனக்கு வேண்டாம் நான் எப்போது உன்னிடம் மட்டும் தனியாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு சைக்கிளை வேகமாக மிதித்தான்...

தேனுக்கு இரவு முழுவதும் தூக்கம் இல்லை ஏன் அவன் இப்படி சொன்னான் ஒரு வேளை இவன் நம்மை விரும்பிகிறானே என அவளுக்கு டவுட்... தேன் ஒரு மிக தில்லான பெண் யாராக இருந்தாலும் எதிர்த்து பேசுவாள் எகிறி நின்றாள் கையை வீசவும் தயங்காதவள், தயங்காமல் பேசும் தரமான சொற்களுக்கு சொந்தக்காரி. தேனிடம் உள்ளூர் பசங்க அதிகம் பேசமாட்டாங்க அந்த அளவீக்கு மிரட்டி பேசுவாள்..

அடுத்த நாள் சக்தி என்ன சொல்லப்போறாளோ என்று இருக்க சக்தியிடம் எனக்கு கண்ணாலம் நடந்தால் அது உங்கூடத்தாண்டா என்றாள் அந்த தைரியசாலி.

தேன் நல்ல உழைப்பாளி வீட்டு வேலையையும், தோட்டத்து வேலையையும் எடுத்து கட்சி செய்வாள் சக்தியிடம் பேசும் போதுதெல்லாம் வாழ்ந்த உன்னோடு தான்டா இல்லன்னா படிக்காமல் ஆட்டுக்குட்டிய மேச்சிகிட்டே இருந்திடுவேன். மறந்தும் கூட நீ வேற யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கனவில் கூட நினைக்கதே என்று மிரட்டினாள் இந்த பாசக்காரி.

சக்திக்கும் அவளை ரொம்ப பிடிக்கும் தேனு கருப்பும் இல்லாமல் சிகப்பும் இல்லாத இடைப்பட்ட நிறம் குறிப்பா சொல்லனும் என்றால் செஞ்சு வைச்ச சிலையழகி. அவளின் திகட்டாத பேச்சும், சினுங்கும் கண்களும் கான கொள்ளை அழகு என்பர்.

இந்நிலையில் இவர்கள் காதல் தேனுவின் மாமவிற்கு தெரியவர அவர் சக்தியை கூட்டி வரச்சொல்லி தம்பி உங்க குடும்பமும் எங்க குடும்பமும் சிறுவயது முதல் நண்பர்கள் இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம் நீயும் சந்தோசமாக இரு நாங்களும் சந்தோமாக இருக்கிறோம் எல்லாம் விட்டு விடு என்றார் தலையாட்டி சென்றான் செந்தில்.

இதைக்கேட்ட தேனு சக்தியிடம் அவரு சொன்ன நீ எதுக்கு பயப்படுற இப்ப சொல்லு இப்படியே வந்துவிடுகிறேன் என்றாள். சக்தி இல்லம்மா வேண்டாம் நாம் இதைப்பற்றி ஏன் யோசிக்ககூடாது என்றதும் அவள் விட்டேனா பார் எனக்கு தெரியாது நீ தாலி கட்டனும் என்று சிட்டாக பறந்தாள். இவன் ஊரில் எங்க இருந்தாலும் இவனைப்பார்த்து எப்ப கட்டுற என்று மிரட்டியே திரிவாள், இப்படியாக கடந்தது சில வருடங்கள்.

சத்திக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவுங்க அப்ப மஞ்சள் போட்ட பணத்தை எடுத்துக்கொண்டு இரண்டு நாள் சுற்றி பட்டணத்தில் பேக்கரி அமைத்தான். நண்பர்கள் மூலம் தேனுவுக்கு தகவல் தந்தவன் தனது நண்பர்கள் அறிவுரையை ஏற்று தேனுவை திருமணம் செய்ய முடிவெடுத்தான்.

ஆனால் திருமணம் செய்தால் இரு வீட்டாருக்கும் செல்வாக்கு இருக்கிறது இருவரும் மோதி கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்தவன் தனது பேக்கரியை நண்பனை பார்க்க சொல்லிவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து யோசித்தவன் திருமணம் நம்ம ஊர் எல்லை விநாயகர் கோவிலில் திருமணம் முடிந்ததும் உள்ளுரில் இருக்கும் நண்பனும் மச்சானுமான விஜி வீட்டில் தங்கிக்கொள்ளலாம் ஊருக்கு நடுவே இருக்கிறது விஜி வீடு ஊரில் என்ன நடந்தாலும் தெரியும் என முடிவெடுத்து தேனுக்கு சொல்லியும் அனுப்பினான்.

எதிர்பார்த்தது போலவே காலை பசுவிற்கு பால் கறக்க வரும் தேனுவை அதே புடவையில் கூட்டி வந்து ஊர் எல்லை கோயிலில் தாலிகட்டி விஜி வீட்டிற்கு வந்தான். ஊரின் ஒவ்வொரு மூளையிலும் நண்பர்களை நிறுத்து யாரும் பார்த்தார்களா என்று பார்ப்பதற்கு ஆள் வைத்து விட்டு விஜி வீட்டின் ஓரத்தில் உள்ள அறையில் தங்கினான்..

பால் கறக்க சென்ற பிள்ளை ஆளைக்காணம் என்ற செய்தி தீ போல ஊரெங்கும் பறவியது. நேராக சக்தியின் வீட்டில் விசாரிக்க சென்றால் அங்கு யாரும் இல்லை அவனுடன் ஓடிவிட்டாள் என்று முடிவு செய்யாமல் அவன் அப்பாவிடம் ஞாயம் கேட்க செல்ல முடியாது என்ன செய்வது என்று பங்காளிகள் எல்லாம் ஒன்று திரண்டு நிற்க இவன் அதே ஊருக்குள் நிம்மதியாக உறங்கினான்..

ஒரு வாரம் வீட்டிலேயே இருந்தவர்கள் பிரச்சனை தீரவுமில்லை யாரும் சமாதானமாக போவது போல் தெரியவில்லை என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போதே விஜி டேய் யாரும் சமாதானம் ஆகுவதற்கு வாய்ப்பே இல்ல.. நீ கிளம்பிடு நான் என் கார்லியே விடியற்காலை புறப்பட்டு விடலாம் ஈரோட்டில் காலை 8 மணி ரயில் ஏறி சென்னை போய்டு அங்க உன் கடையை பார்க்கும் சரவணன்கிட்ட சொல்லிட்டேன் அவ சென்ட்ரலில் இருப்பான் சோ நீ கிளம்ப தயராக இரு என சொல்லிவிட்டு அவன் காரை துடைத்து சுத்தப்படுத்தினான்.

மச்சானும், அக்காவும் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து வாழ்த்து வீட்டில் உள்ள எல்லா விளக்கையும் அணைத்து விட்டு காரில் பத்திரமாக காரில் ஏற்றினர் சொல்லி வைத்தாற் போல் நண்பர்கள் மின்சார கம்பத்தில் பீசை புடுங்கினர் இரட்டில் இவன் குடும்பத்துடன் ஊருக்கு செல்வது போல் ஈரோடு செல்லாமல் சேலம் சென்று வழியனுப்பி திரும்பினான்...

இன்று இந்த கிராமத்து கிளிகள் இரண்டும் குழந்தைகளோடு சென்னையில் பேக்கரி வைத்து நல்ல நிலைமையில் உள்ளனர் என்பது மகிழ்வான நினைவே....

17 comments:

  1. தில் உள்ள காதலர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கதை நல்லா இருக்கு ஆனாலும் பேரன் பேத்திய பார்க்க தாத்தா பாட்டி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  3. அன்பின் சங்கவி - கதை அருமை - இன்றும் கதா நாயகனும் கதா நாயகியும் இன்று சென்னையில் மகிழ்ச்சியாக வாழ்வது குறித்து மிக்க மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. அன்பின் சங்கவி - கதை அருமை - இன்றும் கதா நாயகனும் கதா நாயகியும் இன்று சென்னையில் மகிழ்ச்சியாக வாழ்வது குறித்து மிக்க மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. கிராமத்துக் கிளிகளின் காதல் மணம் வீசி நிற்கிறது.

    ReplyDelete
  6. கற்பனையோ உண்மையோ சொன்ன விதம் நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  7. அருமையான கதை ..! பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  8. வாசிக்கும்போது ஒரு பயம் ஏதாச்சும் ஆயிடுமோன்னு.மகிழ்ச்சியான முடிவு !

    ReplyDelete
  9. நல்ல கதை... (கதை தானே...?) வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. :-)))))

    டெம்பிளேட் கமெண்ட் போடுவோர் சங்கம்....

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள், ரசித்தேன்,

    ReplyDelete
  12. இதைத்தான் நாங்கள் மும்பையில் " உன்லோக்கே பியார்மே தம் ஹை" என்று சொல்லுவோம்...!

    ReplyDelete
  13. வாழ்த்துகள்.... அந்த காதல் ஜோடிக்கு....

    ReplyDelete
  14. சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  15. இது கதையா அல்லது நிஜமா.. துவக்கத்தில் கதை போல் துவங்கி இறுதியில் இன்று அவர்கள் சென்னையில் பேக்கரி வைத்து மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்று முடித்துள்ளீர்கள். கதை என்றால் முடிவு ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். ஆனால் நிஜத்தில் இப்படி சுளுவாக முடியுமா? ஊரையே கொளுத்திவிட்டுத்தான அடங்குவார்கள்? ஆனால் சொன்ன விதம் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  16. தித்திக்கும் காதல் கதை.... தேனும் சக்தியும் நன்கு வாழட்டும் !

    ReplyDelete