Wednesday, June 19, 2013

அஞ்சறைப்பெட்டி 20.06.2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தலில் 6 வது வேட்பாளர் என்ற பேச்சு தான் இன்று பரபரப்பு பேச்சு அரசியலில். யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி குதிரி பேரம் நடக்குமா என்று ஒவ்வொலு டீக்கடையின் முன்பும் இதுதான் இன்றறைய சூடான விவாதம்.
யார் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் தூர நின்று வேடிக்கைபார்ப்பது நாம் தான் அன்று கூட்டணியே வேண்டாம் என்றவர்கள் எல்லாம் சந்தித்துக்கொள்கின்றனர் ஆனால் முடிவு எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  ................................................................
 
 
வடமாநிலங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.. தென் மாநிலங்களில் இந்த முறையுஙம பருவமழை பொய்த்து விட்டது போல.. தினமும் வாசல் மட்டுமே நனைகிறது... என்னைக்கு கொட்டு விவசாயம் செய்வது என்பது புதிராகவே உள்ளது...

நதிகளை இணைத்தால் பல பயன்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் எந்த அரசியல் கட்சிகளும் அதை நினைப்பது வட இல்லை தேர்தல் வரும் போது மட்டுமே அனைவருக்கம் ஞாபகம் வருகின்றது... இந்த நதி நீர் இணைப்பு...
 
  ................................................................
 



கடந்த வாரம் மிக சோகமான செய்தி நம் இயக்குநர் மணிவண்ணனின் இறப்பு தான்.. அவரை 2002ம் ஆண்டு சென்னையில் எல்லீஸ் சாலையில் நாங்கள் தங்கி இருந்த அறை அருகே தான் கீழைக்காற்று பதிப்பகம் இருந்தது அங்கு புத்தகம் வாங்க வந்த இவரை இரண்டு, மூன்று முறை பாத்திருக்கிறேன்.. ஒரு முறை காரில் இருந்து இறங்கியவரிடம் கை கொடுக்க முற்பட்டபோது இருகை கூப்பி வணக்கம் சொன்னவாறே பதிப்பக்த்திற்குள் நுழைந்தார் அப்போது தான் பதிப்பகம் பற்றியும் அங்குள்ள புத்தகங்கள் பற்றியும் அந்த தெருவில் எங்கள் வீட்டு உரிமையாளர் பாய் எங்களுக்கு விளக்கமாக சொன்னதால் அறிய முடிந்தது...
திரைப்படத்தில் அவரின் நக்கலும், நையாண்டியும் கலந்த பேச்சும், அவர் சத்தம் போட்டு ஏற்ற இறக்கமாக பேசும் போதெல்லாம் மிக ரசிக்கதோண்றும்... தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை நம் கண்முன்னே கொண்டுவருவதில் அவருக்கு ஈடு இணை அவரே...
அதுவும் விஜய் மணி மணி என்று அழைக்கும் காட்சி எல்லாம் இன்றும் கண்ணுக்குள் நிலவாக இருக்கிறது...
We Miss u Mani sir.....
..............................................................................................

 
 
கர்ப்ப பையில் வளரும் குழந்தை தாயின் பேச்சை கவனிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மகாபாரத கதையில் அர்ஜூனன் தனது கர்ப்பிணி மனைவியிடம் போரின் ஒரு பகுதியான “சக்கரவியூகம்” குறித்து தெரிவித்த தகவலை அவளது வயிற்றில் வளரும் குழந்தை அபிமன்யு கேட்டு தெரிந்து கொண்டதாக புராணம் கூறுகிறது.

அது உண்மை என தற்போது விஞ்ஞான பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 74 கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். 36 வாரம் குழந்தை வளர்ச்சியுடைய கர்ப்பிணிகளிடம் ஒரு கதை புத்தகத்தை கொடுத்து படிக்க செய்தனர். அவர்கள் அக்கதையை சத்தம் போட்டு படித்தனர். அந்த நேரம் வயிற்றில் கர்ப்பபையில் வளரும் குழந்தைகளின் செயல்பாடுகள் பரிசோதிக்கப்பட்டன.

அப்போது, வயிற்றில் வளரும் குழந்தையின் இதய துடிப்பின் வேகம் சிறிதளவு குறைந்து இருந்தது. மேலும் அவற்றின் அசைவும் அடங்கி இருந்தது. அதன் மூலம் தாயின் பேச்சு மற்றும் செயல்பாடுகளை கர்ப்ப பையில் வளரும் குழந்தை கவனிப்பது தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தகவல்
 
 
 
சந்திரன் குறித்து பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சந்திரனின் மேற்பரப்பில் 66 எரிமலைகள் இருப்பதற்கான வாய்ப்பு தென்படுவது தெரிந்தது. அதே நேரத்தில் கண்ணுக்கு தெரியாமல் 280 எரிமலைகள் அங்கு மறைந்து கிடப்பது கண்
டுபிடிக்கப்பட்டது.

அவை சந்திரனின் மேற்பரப்பில் ஈரமற்ற நிலையில் இறுகி கிடக்கின்றன. இந்த தகவலை ஆய்வு மேற் கொண்டுள்ள பேராசிரியர் வில்பெதர்ஸ்டோன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்வெளிக்கு செல்ல 8 வீரர்களை தேர்வு செய்துள்ளது. இவர்களில் 4 பேர் பெண்கள். செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களுக்கு ஆட்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்காக தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தீவிர பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

தத்துவம்
 
உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.

துன்பங்களைக் கண்டு அஞ்சாதே, உறுதியாய் எதிர்த்து நில் வெற்றி உனக்கே...

"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்று மில்லை."

4 comments:

  1. மணிவண்ணன் ஐயா பற்றிய உங்க கருத்து நன்று.., வயிற்றில் இருக்கும் பாப்பா செவித்திறன் பற்றி ஸ்கேன், போன்ற வசதிகள் இல்லாமயே நம் முன்னோர்கள் பல நூறு வருடங்களுக்கு முன்னமயே சொல்லிட்டாங்கன்னு நினைக்கும்போது பெருமைப்படனும்.

    ReplyDelete
  2. வெள்ளத்தில் ஆரம்பித்து, தத்துவத்தில் சுருக்கமாக முடித்தாலும் இந்த அஞ்சரை பெட்டி சுவையாகத்தான் இருக்கிறது, தொடருங்கள் தொடர்கிறோம்

    ReplyDelete
  3. ம்... நல்ல படைப்பாளி...

    தத்துவம் அருமை...

    ReplyDelete
  4. சுவையான பதிவுகள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete