Tuesday, February 26, 2013

அவள்....



விட்டு பிடித்து
தள்ளி அணைக்கும்
கள்ளியடி நீ....

••••••••••••••••••••••••••••••••••


தத்தி தாவும் மனதில்
காதல் கொண்டு...
ஊஞ்சல் ஆடுகிறது
என் மனது

எத்தனை வேலி
இருந்தாலும் உன்னை
அடைவேன் என்கிறது
உன்மேலான காதல்....

••••••••••••••••••••••••••••••••••


இச் என்ற
சத்தத்தில்
நச் என்று
பொசுங்கியது
மனசு!!!


••••••••••••••••••••••••••••••••••

அவள் பார்வையில்
விபத்துக்குள்ளானது
என் இதழ்கள்
முத்தத்தால் முதலுதவி
செய்வாள்
என்ற நம்பிக்கையில்...

••••••••••••••••••••••••••••••••••


எதையும் இல்லை
என்று சொல்லாதவள்
முத்தத்தில் மட்டும்
கருமியாக இருக்கிறாள்...

போடி கருவாச்சி
என்றேன்...
மார்பில் முகம் பதித்து
இன்னொருமுறை
காதோடு சொல்
என்கிறாள்....

••••••••••••••••••••••••••••••••••

அவளின் இதழ்
அசையும் போதெல்லாம்
என் பெயரையே
உச்சரிப்பது போல்
பிரமை....
 
 
 
 
 

8 comments:

  1. அழகிய காதல் வரிகள்! சிறப்பான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  2. ம்...

    ரசிக்கும்படியான காதல் வரிகள்...

    ReplyDelete
  3. //அவள் பார்வையில்
    விபத்துக்குள்ளானது
    என் இதழ்கள்
    முத்தத்தால் முதலுதவி
    செய்வாள்
    என்ற நம்பிக்கையில்...//

    ஹ ஹா ரொம்ப ஆசை தான் பாஸ்

    ReplyDelete
  4. மாம்ஸ்...........என் நிலைமை உங்களுக்கு தெரியும்.......
    பின்னர் விரிவாக.....வருகிறேன்.....

    அதுவரை.........என் அன்பர்கள்.........தயவு செய்து என்னை
    மன்னிக்க்கவுமம்ம்ம்மம்ம்ம்ம் ...................

    ப்ளீஸ்,,.................

    ReplyDelete
  5. போடி கருவாச்சி
    என்றேன்...
    மார்பில் முகம் பதித்து
    இன்னொருமுறை
    காதோடு சொல்
    என்கிறாள்....// என்னா அன்பு என்னா அன்பு... ச்ச்சோச்சோ


    ReplyDelete
  6. ம்ம்ம்...காதல் பொங்குது வரிகளில்..

    ReplyDelete