Wednesday, August 10, 2011

குதிரை சந்தை “களை” கட்டுகிறது

 
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த புதுப்பாளையத்தில் பழமையான குருநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப் பெருந்திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இந்த கோவில் திருவிழாவையொட்டி மாட்டு சந்தை- குதிரை சந்தையும் நடக்கிறது. மாட்டு சந்தை தொடங்கி நடந்து வருகிறது. இதில் காரி, சிம்மி, காங்கயம், நாட்டு மாடுகள் இடம் பெற்றுள்ளன. காரி மாடு வண்டிகளுக்கு பூட்ட ஏற்றது. சிம்மி, காங்கயம், நாட்டு மாடுகளும் வண்டியில் பூட்டவும், உழவு போடவும் ஏற்ற மாடுகள் ஆகும்.

இதுதவிர மலைமாடுகளும் விற்பனை செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் இறைச்சிக்காக வாங்கி செல்லப்படுகிறது. காங்கயம் ஜோடி மாடுகள் ரூ.32 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரை விற் பனையாகிறது. இவைகளை வாங்கிச் செல்ல தமிழகம் முழுவதும் இருந்து வியாபாரிகளும், விவசாயிகளும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

கோவில் திருவிழாவையொட்டி குதிரை சந்தை நாளை (10-ந்தேதி) தொடங்கு கிறது. இந்த சந்தைக்கு நூற்றுக்கணக்கான குதிரை கள் கொண்டு வரப்பட்டுள் ளன. ஒரு மாத குதிரைக்குட்டி ரூ.7 ஆயிரம் முதல் விலை போகிறது. ரூ.7 ஆயிரம் தொடங்கி ரூ.2 லட்சம் வரை மதிப்புள்ள குதிரைகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

திருவிழாவை முன் னிட்டு அந்தியூர் முதல் புதுப்பாளையம் வரை ரோட்டின் இருபுறமும் சுமார் 1000 திருவிழா கடைகள் அமைக்கப்பட்டுள் ளன. அல்வா கடை, பர்பி கடை, சோளக்கதிர் கடை, பேன்சி கடை, பிளாஸ் டிக் பொருட்கள் கடை, பாத்திரக்கடை, வீட்டு உப யோகப்பொருட்கள் கடை, ஓட்டல்கள் உள்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் பொதுமக்களை மகிழ்விக்கும் சர்க்கஸ், ராட்டினம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடை பெறுகின்றன. பக்தர்கள் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற் பாடும் செய்யப்பட்டுள் ளது. நாளை (10-ந் தேதி) காலை 10 மணிக்கு புதுப்பாளையத்தில் இருந்து குருநாத சாமி, பெருமாள் சாமி தேரில் எழுந்தருளி வனக்கோவில் செல்லும் நிகழ்ச்சியும், காமாட்சி அம்மன் சப்பரத்தில் வனக் கோவில் செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மதியம் சிறப்பு வழிபாடும், இரவு 9 மணிக்கு தண்ணீரில் விளக்கு எரியும் நிகழ்ச்சியும், இரவு முழுவதும் சிறப்பு பூஜையும் நடக்கிறது.
 
நன்றி மாலைமலர்

7 comments:

  1. ஹைய்... சென்ற வருடம் போலவே இந்த வருடமும் ஆகஸ்ட் 15 அன்று அந்தியூர் போகப் போறேன்... :-)

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பரே.... ஒரு குதிரையின் விலை இரண்டு லட்சம் வரையா? :)))

    ReplyDelete
  3. இதன் வரலாற்றைப்பற்றி அறிய ஆவல் .பதிவிடுவீர்கள் என நினைக்கின்றேன் .

    ReplyDelete
  4. Hi Friends,

    Please Visit www.tamilinternational.co.cc for all Entertainments
    உலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் உன்னத உலகம் - தமிழ் உலகம்

    ReplyDelete
  5. வித்தியாசமான குதிரைச்சந்தை.

    ஆனை விலை, குதிரைவிலைன்னு சொல்லுவாங்க. ஒரு குதிரையின் விலை ரெண்டுலட்சம்ன்னு கேக்கும்போது... சரியாத்தான் சொல்லியிருக்காங்கன்னு தோணுது :-)

    ReplyDelete