Thursday, April 28, 2011

அஞ்சறைப்பெட்டி 28.04.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கோடை மழையால் ஊரொங்கும் குளிர்ச்சியாகவே இருக்கிறது. சித்திரை தொடங்கியதும் எப்பா என்னா வெய்யிலு என்று தான் எப்பவும் சொல்வோம் இந்தமுறை எங்க ஊரில் நல்ல மழை அங்க எப்படி என்று தான் அதிக பேச்சுக்கள் வருகின்றன.

இந்த கோடையில் தப்பியது மின்சார வாரியம் தான் அதிக வெய்யில் அடிக்கம் போது மின்சாரத்தின் பயன் அதிகரிக்கும் இந்த முறை மழை பெய்ததால் மின்சாரம் பயன்படுத்தும் அளவு கொஞ்சம் குறைந்துள்ளது. இல்லை எனில் அனைவரும் மின்சார வாரியத்தையும், மின்சார அமைச்சரையும் திட்டி தீர்த்திருப்பார்கள்..

...............................................................................................

சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் அனைத்தும் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிவந்துள்ளது இதை அனைவரும் பயன்படுத்துவதால் சர்வர் பிரச்சனையில் பாடத்திட்டங்களை டவுன்லோடு செய்ய முடியவில்லை.

இப்பாடத்திட்டங்களை தனியார் இணையதளத்துக்கு லிங்க் கொடுத்துள்ளனர் அவர்கள் இரண்டு முறையில் டவுன்லோடு வசதி செய்துள்ளனர் இலவச வசதி, கட்டண வசதி இரண்டு முறையில் டவுன்லோடு செய்ய முடியும்.
இதில் இலவச வசதியில் டவுன்லோடு செய்தால் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகின்றது ஆனால் கட்டண முறையில் டவுன்லோடு செய்தால் 2 நிமிடங்களில் டவுன்லோடு சேய்ய முடிகிறது.

அரச இலவசமாக தரும் பாட புத்தகங்களை எப்படி எல்லாம் யோசிச்சு காசு ஆக்குகிறார்கள். எத்தனையோ கோடிகளை செலவளிக்கும் அரசு நல்ல சர்வர் வாங்கி அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் பராமரிக்கலாமே..
...............................................................................................

இலங்கையின் போர்க்குற்ற செய்திகள் ஒவ்வொன்றையும் படிக்கும் போது கண்ணீர் வருகிறது அதுவும் படங்களைப் பார்க்கும் போது மனம் ரணமாகிறது.

இவர்கள் போர்குற்றம் செய்தது அனைவருக்கும் தெரியும் என்ன செய்வது தமிழனுக்கு உதவ இந்த உலகத்தில் யாருமே இல்லையே....

........................................................................................................

அனைவரும் தமிழக தேர்தல் ரிசல்ட்டை எதிர்பார்த்து ஓய்வு எடுக்கும் வேளையில் ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிக்கையில் கனிமொழியின் பெயரை சேர்த்து ஓய்வு எடுக்கும் தலைவர்களை ஓய்வில்லாமல் செய்துவிட்டது.

சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தும் எங்கள் மேல் தவறில்லை நீதிமன்றத்தில் பார்ப்போம் என்கிறார்கள்.. இப்படித்தான் ராசாவும் சொன்னார் இப்ப உள்ளே இருக்கிறார்... தேர்தல் முடிவுகளைப்பொறுத்து இந்த வழக்கின் வேகம் இன்னும் அதிகரிக்கலாம்.

நாட்டு நடப்பு
தற்போது தேர்தல் நடக்கும் அனைத்து இடங்களிலும் 75 சதவீதத்திற்கு மேல் ஓட்டுபதிவாகிறது மிகவும் சந்தோசமான விசயம் இன்னும் அடுத்த தேர்தலில் நிச்சயம் 85 சதவீதத்தை நெருங்க வாய்ப்பிருக்கிறது. தேர்தல் கமிஷனின் அற்புத முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

தகவல்
உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1980-ம் ஆண்டில் புதிய கருத்தடை மாத்திரைகளை தயாரித்தனர். அவை “மூன்றாம் தலைமுறை கருத்தடை மாத்திரை” என அழைக்கப்படுகிறது.  இவை இதற்கு முன்பு பெண்களால் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைவிட ஆபத்தானது. இது ரத்தத்தை உறைய செய்யக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.    இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நிபுணர்கள் 2 ஆய்வுகள் நடத்தினர். அதில் மேற்கண்ட தகவல் தெரிய வந்துள்ளது.  ரத்தம் உறைவதால் சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே டாக்டர்கள் பரிந்துரையின் பேரில்தான் பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் தமிழ்வாசி என்னும் பெயரில் பிரகாஷ் என்பவர் எழுதி வருகிறார்.  இவரின் பதிவுகளில் கொளுத்தும் வெய்யிலுக்கு என்ன சாப்பிடலாம் என்று காலத்திற்கு ஏற்ற அற்புதமான பதிவாக எழுதி உள்ளார்..

http://tamilvaasi.blogspot.com/2011/04/blog-post_24.html

தத்துவம்
பேசும்முன் கேளுங்கள், எழுதுமுன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. என்னால் மட்டுமே முடியும் என்பது அகம்பாவம்.

12 comments:

  1. பல்சுவைகளுடன் தகவல் தொகுப்பு மிகவும் அருமை. பதிவு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது நண்பரே..!!

    ReplyDelete
  2. பயனுள்ளதாக உள்ளது அஞ்சறைப் பேட்டி ... பத்தாம் வகுப்பு அறிவியல் தமிழ் மீடியம் புத்தகத்தை நீங்கள் டவுன்லோட் செய்திருந்தால் எனக்கு மெயிலில் அனுப்பமுடியுமா..

    ReplyDelete
  3. பேசும்முன் கேளுங்கள், எழுதுமுன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

    என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. என்னால் மட்டுமே முடியும் என்பது அகம்பாவம்.


    THATHUVUM THATHUVUM

    ::)))

    ReplyDelete
  4. அஞ்சரைப்பெட்டியில் உள்ள தகவல்கள் யாவும் புதிதாயும் உபயோகமாகவும் உள்ளது பங்காளி.... தொடருங்கள்...

    பிரபாகர்...

    ReplyDelete
  5. //இவர்கள் போர்குற்றம் செய்தது அனைவருக்கும் தெரியும் என்ன செய்வது தமிழனுக்கு உதவ இந்த உலகத்தில் யாருமே இல்லையே....//

    ம்ஹும் வேதனையின் உச்சம்....

    ReplyDelete
  6. //இந்த வார அறிமுகப்பதிவர் தமிழ்வாசி என்னும் பெயரில் பிரகாஷ் என்பவர் எழுதி வருகிறார். இவரின் பதிவுகளில் கொளுத்தும் வெய்யிலுக்கு என்ன சாப்பிடலாம் என்று காலத்திற்கு ஏற்ற அற்புதமான பதிவாக எழுதி உள்ளார்..//

    ஆமா ஆமா, விஜயகாந்த்'துன்னா இந்த பதிவருக்கு [[என் நண்பன்]] ரொம்ப பிடிக்குமாம் போயி படிச்சி பாருங்க ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  7. எலக்ஷன் கமிஷனுக்கு பாராட்டுகள்

    நல்ல பகிர்வு

    ReplyDelete
  8. //இவர்கள் போர்குற்றம் செய்தது அனைவருக்கும் தெரியும் என்ன செய்வது தமிழனுக்கு உதவ இந்த உலகத்தில் யாருமே இல்லையே//
    கொஞ்ச நாளைக்கு போர்குற்ற செய்தி பற்றி பரபரப்பாக பேசப்படும் (ஐ.நா. உட்பட) பின்பு எல்லாம் அடங்கிவிடும். எல்லோரும் சேர்ந்து செய்ததுதானே!

    ReplyDelete
  9. வழக்கம் போல் அருமை

    சந்தைக்கு புதுசு...


    http://speedsays.blogspot.com/2011/04/blog-post_28.html

    ReplyDelete
  10. நல்ல தொகுப்பு..ப்ளாக்கை வெப்சைட் ஆக்குவது எப்படி-ன்னு ஒரு மேட்டர் கேட்டிருந்தேனே பாஸ்..

    ReplyDelete