Thursday, March 31, 2011

அஞ்சறைப்பெட்டி 31.03.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
உலககோப்பையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு நுழைந்தது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்திய வீரர்களின் நிறையவான ஆட்டத்தால் பாகிஸ்தானை வென்றது 100 கோடி ரசிகர்களின் தாகம் தீர்ந்தது.

இந்திய அணி பந்து வீச்சை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும். நமது வீரர்களின் பந்து வீச்சு அற்புதமாக இருந்தால் அடுத்த உலக கோப்பையும் நமக்கே...

பங்காளி பாகிஸ்தானை வென்றது மகிழ்ச்சி என்றால் தமிழனின் எதிரி சிங்கள காடையர்களை வெல்வது தான் தமிழர்களுக்கெல்லாம் உலககோப்பை...

ஒரு வேளை இறுதிப்போட்டியை காண கொடுங்கோலன் ராசபக்சேவையும் அழைக்க வாய்பிருக்கிறது. வரட்டும் வந்து அவர்கள் தோல்வியை பார்த்துவிட்டு செல்லட்டும்.
...............................................................................................


விஜயகாந்த் தனது வேட்பாளரை அடித்தது தான் இன்று நம் ஊரில் மிக முக்கியமான செய்தி.  மற்ற தலைவர்கள் எல்லாம் வீட்டுக்குள் கூட்டி சென்று உதைக்கின்றனர் இவர் மக்கள் முன் உதைக்கிறார்.  அவர் ஒரு பேட்டி கொடுத்தால் நன்றாக இருக்கும் என் வேட்பாளர் தப்பு செய்தால் அதை என் முன் கொண்டு வந்தால் இன்று போல் அப்போது தாக்குவேன் என்றால் நிச்சயம் விஜயகாந்தின் அடி உதையை வரவேற்கிறேன்.

ஆனால் விஜயகாந்த் பிரச்சாரத்தின் போது பேசுவது தாகசாந்தி அருந்தி விட்டு பேசுவது போல் உள்ளது. ஒரு வேளை வடிவேல் சொன்னது உண்மையா இருக்குமோ????

...............................................................................................

தமிழகமெங்கும் குஷ்புவைக்காண கூட்டம் அலை மோதுகிறது ஆனால் குஷ்புவின் பேச்சில் அனல் இல்லை. இன்னும் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் அவர் மக்கள் முன் பேச...
........................................................................................................

திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு இலவச அறிவிப்புகள் அறிவித்தாலும் இலவசங்கள் தவிர்த்து இரு தேர்தல் அறிக்கையும் படித்தோமானால் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நிறைய தேவையான, அடிப்படையான திட்டங்கள் உள்ளன.

இதில் அனைவரையும் கவர்ந்தது கேபிளுக்கு மானிய விலை, மானிய விலையில் சூரிய சக்தி மின்சாரம் மிக வரவேற்கக்கூடியது மற்றும் கழிவில் இருந்து மின்சாரம் தயாரித்தல் போன்ற திட்டங்கள்.

........................................................................................................

தேர்தல் கமிஷன் நீதி மன்றத்தில் முறையிடும் போது போலீசார் வாகனத்தில் பணத்தை கொண்டு செல்கின்றனர் இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்று கூறி உள்ளனர்.
தேர்தல் ஆனையர் அந்த போலீசார் யார் என்று பொதுமக்களிடம் காட்டி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
நாட்டு நடப்பு
தமிழகத்தில் தேர்தல் சூடுபிடிக்கும் அதே வேளையில் தேர்தல் கமிஷனின் நடவடிக்கையும் சூடு பிடிக்கிறது. ஊரில் உள்ள சுவர்கள் எல்லாம் பளிச், ஒரு கொடி இல்லை, ப்ளக்ஸ் பேனர் இல்லை, போஸ்டர் இல்லை என தேர்தல் கமிஷன் தன் அதிரடியால் மக்களிடம் மிக நல்ல பெயர் கிடைத்துள்ளது.

தேர்தல் கமிஷனின் நடவடிக்ககையின் பாதிப்பை தினமும் கலைஞரின் பேச்சில் தருகிறது. தினம் ஒரு நடவடிக்கை எடுத்து அனைவரும் சபாஷ் போடும் நிலையில் இருக்கிறது அவர்களின் நடவடிக்கை.
தகவல்

இங்கிலாந்தில் உள்ள பார்க் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை விரிவாக்கம் செய்ய அங்கு மண்ணை தோண்டும் பணி நடந்தது. அப்போது அங்கு புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித உடலின் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. மண்டை ஓட்டின் மேற்புறத்தில் உள்ள மிருதுவான சதைப் பகுதிகள் அனைத்தும் மக்கி மண்ணாகி இருந்தன.

ஆனால் மூளை மட்டும் அப்படியே இருந்தது. மஞ்சள் நிறத்தில் சுருங்கி கிடந்தது. இந்த மூளை கடந்த 2500 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மனித உடலுக்குறியது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதே வேளையில், இவ்வளவு மிக நீண்ட காலமாக மூளை எவ்வாறு கெட்டுப்போகாமல் இருந்தது என விஞ்ஞானிகள் குழம்பி போய் உள்ளனர். அது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.


அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி யின் வாழ்க்கை வரலாறு, அவரின் புகைப்படங்கள், பேச்சுக்கள், அவர் புத்தகங்கள் என சிலம்புச்செல்வரை பற்றி அனைத்து தகவலையும் வருங்கால சந்ததியினருக்கு அறியும் வண்ணம் இந்த வலைப்பதிவு உருவாக்கப்ட்டுள்ளது. மபொசி பற்றி தகவல் அறிய இத்தளம் மிகவும் பயன்படும். மபொசி என்னும் மா மனிதரை அனைவரும் அறிய வேண்டும். இவ் வலைப்பதிவை உருவாக்கியர் மபொசியின் பேத்தியும் முனைவருமான பரமேஸ்வரி ஆவார்.
http://maposi.blogspot.com/

தத்துவம்
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.

32 comments:

  1. இனி மேலே படிச்சிட்டு வாரேன்...

    ReplyDelete
  2. //தமிழகமெங்கும் குஷ்புவைக்காண கூட்டம் அலை மோதுகிறது ஆனால் குஷ்புவின் பேச்சில் அனல் இல்லை. இன்னும் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் அவர் மக்கள் முன் பேச...//

    குஷ்புகான் சும்மா கவர்ச்சிக்காகதான் மக்கா...இவரை காண கூடும் கூட்டம் வெறும் ஜொள்ளு கூட்டம்தான்....

    ReplyDelete
  3. நெறஞ்ச பெட்டிக்கு வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  4. @MANO நாஞ்சில் மனோ

    :) என்ன இது?

    ReplyDelete
  5. >>
    தமிழகமெங்கும் குஷ்புவைக்காண கூட்டம் அலை மோதுகிறது ஆனால் குஷ்புவின் பேச்சில் அனல் இல்லை.

    sangkavi.. சங்கவி நெஞ்சை தொட்டு சொல்லுங்க.. குஷ்பூ எப்படி இருக்கார்னு பார்க்க மக்கள் போறாங்களா? அவரோட தமிழ்ப்பேச்சு எப்படி இருக்கு?னு கேட்க போறாங்களா?

    ReplyDelete
  6. இதில் அனைவரையும் கவர்ந்தது கேபிளுக்கு மானிய விலை, மானிய விலையில் சூரிய சக்தி மின்சாரம் மிக வரவேற்கக்கூடியது மற்றும் கழிவில் இருந்து மின்சாரம் தயாரித்தல் போன்ற திட்டங்கள்.

    எல்லாம் நல்லாத்தான் இருக்கு...ஆனா இதையெல்லாம் வெறும் அறிக்கையோட நிறுத்தாமல் ஜெயலலிதா செய்வாருன்னு நம்பிக்கையில்லை.அரசியல்வாதிகள் எல்லோருமே அறிக்கை புலிகள்தான்

    ReplyDelete
  7. குஷ்பூ வோட்டு கேட்டுதான் திமுக ஜெயிக்கணும்னா அந்த கட்சிய கலைக்கிறது நல்லது! பெரியாரின் பாசறை.. இப்படி போகனுமா?

    ReplyDelete
  8. மேட்ச் ஃபிக்ஸ் செய்து இருப்பது படி ஸ்ரீலங்காதான் ஜெயிக்கும் என்கிறார்களே?

    ReplyDelete
  9. இன்னைக்கு ரொம்ப லேட்டுங்க....
    இருந்தாலும் வந்துட்டேன்...

    ReplyDelete
  10. நல்ல தொகுப்பு. தத்துவங்கள், சூப்பர்! :-)

    ReplyDelete
  11. வழக்கம்போல் பல்சுவை தகவல்களின் தொகுப்புகள் மிகவும் அருமை நண்பரே..!!!

    ReplyDelete
  12. அறிமுகப் பதிவர்- அருமை..தகவலுக்கு நன்றி சங்கவி.

    ReplyDelete
  13. தேர்தல் நெடி தூக்கல்!

    ReplyDelete
  14. // இந்திய வீரர்களின் நிறையவான ஆட்டத்தால் பாகிஸ்தானை வென்றது 100 கோடி ரசிகர்களின் தாகம் தீர்ந்தது. //

    இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லுவீங்க... இப்ப 121 கோடி அப்பு...

    ReplyDelete
  15. // ஆனால் விஜயகாந்த் பிரச்சாரத்தின் போது பேசுவது தாகசாந்தி அருந்தி விட்டு பேசுவது போல் உள்ளது. ஒரு வேளை வடிவேல் சொன்னது உண்மையா இருக்குமோ???? //

    அதிலென்ன சந்தேகம்... உண்மையே தான்...

    ReplyDelete
  16. மூளைத் தகவலுக்கு நன்றி. நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  17. மனோ கலக்கியிருக்காருங்க..

    ReplyDelete
  18. கலக்கல் பக்கங்கள்..
    அஞ்சரைப்பெட்டி மணக்கிறது..

    ReplyDelete
  19. அஞ்சறைப்பெட்டி கமகம....

    வடிவேலுவே குடிச்சு, குடிச்சு தான் இவ்ளோ வீங்கி போயிருக்கான்... இவனுக்கு விஜயகாந்த பார்த்து சொல்றதுக்கு எந்த அருகதையும் இல்ல..

    குஷ்பு பிரச்சாரம்... போங்க பாஸ்.. நீங்க வேற காமெடி பண்ணிட்டு.. இதே குஷ்புவை தான் விளக்குமாறு காண்பித்து விடுதலை சிறுத்தைகள் எச்சரித்தது...இன்னிக்கு அதே குஷ்பு தான் ஓட்டு கேட்கறாங்க...

    சினிமாவை கடுமையாக சாடிய பா.ம.க.இன்று சினிமா நட்சத்திரங்கள் நிரம்பிய தி.மு.க.கூட்டணியில் கால்பிடித்து சேவகம் செய்கிறது...

    இந்த பச்சோந்தி பசங்கள பத்தி பேசாதீங்க பாஸ்ஸ்ஸ்ஸ்.....

    ReplyDelete
  20. //ஒரு வேளை இறுதிப்போட்டியை காண கொடுங்கோலன் ராசபக்சேவையும் அழைக்க வாய்பிருக்கிறது. //
    பிணம்தின்னி ராஜபக்ஷேவும் தான் வருகிறான். காங்கிரஸ் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.

    //விஜயகாந்த் தனது வேட்பாளரை அடித்தது தான் இன்று நம் ஊரில் மிக முக்கியமான செய்தி.//
    விஜயகாந்த் தன்னை தாக்கவில்லை என்றும், கீழே விழுந்த மைக் வயரை இருவரும் சேர்ந்து எடுத்த காட்சியை எதிர்கட்சி ஊடகங்கள் திரித்து விட்டன என்றும் வேட்பாளர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    விஜயகாந்த் மட்டுமா குடிகாரன்? தமிழ்நாட்டுல வீதிக்கு பாதி பேர் குடிகாரன் தான்.
    விஜயகாந்த் குடிகாரன் குடிகாரன் என்று கூச்சல் இடும் இந்த கட்சி தான் டாஸ்மாக்கை வெற்றிகரமாக நடத்தி வருகிறதே... டாஸ்மாக்கை இழுத்து மூட சொல்லுங்கள் பார்ப்போம்...

    ReplyDelete