Tuesday, March 29, 2011

சாப்ட்வேர் இன்ஜினியர் மேனேஜரிடம் கேட்க விரும்பும் 10 கேள்விகள்..


1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க… ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது…?

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க… ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..? 

4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க… அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க..?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா…

6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க…?

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க…?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க…?

9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க…?

10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct,gmail ,Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don’t use company resources for your personal workனு சொல்றீங்க…?

ஏன் சார் ஏன்….
இத்த தான்…
திருக்குறள்ள
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்…
ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.

இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது.....


நன்றி : இதை என் மெயிலுக்கு பார்வேடு செய்த நண்பர்களுக்கு..........

20 comments:

  1. கரக்டான கேள்வி

    ReplyDelete
  2. நல்லா கேளுங்க...

    ஆமா நம்ம பக்கம் வரதில்லையே...

    ReplyDelete
  3. செல்வாவின் அறிவை அறிய
    கவிதை வீதி வாங்க..

    ReplyDelete
  4. நானும் கம்பெடுத்துட்டு வரட்டா மக்கா....

    ReplyDelete
  5. இதெல்லாம் சாஃப்ட்வேர் துறைக்கு மட்டுமா, எல்லாருக்கும் பொருந்துற விசயம் தானுங்களே? :-))

    ReplyDelete
  6. ஏன் உங்களுக்கு மெயிலை அனுப்பினார்கள்- நீங்கள் தான் அந்த டாமேஜர், ஸார், மேனேஜரா?!!

    நல்ல கேள்விகள் -"பெரியவங்க செய்தால் பெருமாள் செய்த மாதிரி!!"

    ReplyDelete
  7. நீங்களே சொல்லுங்க அந்த டமேஜரை என்ன பண்ணலாம் .......டேமேஜ் பண்ணலாமா இல்லை ஆட்டோ அனுப்பலாமா?

    ReplyDelete
  8. நல்லா டேமேஜ் பண்ணுனீங்க டேமேஜர.

    சரி... பதில் வருமா?

    ReplyDelete
  9. ச்சே! கொன்னுட்டீங்க பாஸ்! சூப்பர்! :-)

    ReplyDelete
  10. :(, குறளும் தவறு. அர்த்தமும் தவறு

    ReplyDelete
  11. இதெல்லாம் ரொம்ப பழசு. அப்படியே மொழி பெயர்த்து போட்ருக்கீங்க, மற்ற துறையில இருக்கறவங்களுக்கு மட்டும் இது புதுசு

    ReplyDelete
  12. பன்னாட்டு கம்பெனிகள் வரத்தொடங்கிய பிறகு ஏற்பட்ட மாறுதல் இது. இது சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு மட்டுமல்ல எல்லா நிர்வாகங்களுக்கும் இது பொருந்தும். தொழிளார்களுக்கு இருக்கும் சங்கம் அலுவலக பணியாளர்களுக்கு இல்லாதது பெரும் குறை தான். ஆனால் இதனை முன்னெடுத்து செல்வது இடியாப்ப சிக்கல்

    ReplyDelete
  13. என்னது காந்தியை சுட்டு கொன்னுட்டாங்களா? அந்தச் செய்தியை இப்பத்தான் செங்கோவிக்கு மெயிலில் அனுப்புனீங்களா? அடப்பாவிங்களா!!!

    ReplyDelete
  14. //அந்தச் செய்தியை இப்பத்தான் செங்கோவிக்கு மெயிலில் அனுப்புனீங்களா?// ஐயா, இவரு சங்கவி..நாந்தான் செங்கோவி..இவரு நல்ல புள்ளை..நயன் தாரா தனுஷுக்கு பாஸா வருவாங்களே..அந்த ஸ்டில்லைப் போடாததுலேயே தெரியலை இவரு கொயந்தை மாதிரின்னு!

    ReplyDelete
  15. { middleclassmadhavi } at: March 29, 2011 3:47 AM said...

    ஏன் உங்களுக்கு மெயிலை அனுப்பினார்கள்- நீங்கள் தான் அந்த டாமேஜர், ஸார், மேனேஜரா?!!

    நல்ல கேள்விகள் -"பெரியவங்க செய்தால் பெருமாள் செய்த மாதிரி!!"


    ...ha,ha,ha,ha,ha...

    ReplyDelete
  16. படிச்சவங்களுக்கான பதிவு போல எனக்கில்ல ஹிஹி!

    ReplyDelete
  17. நல்லா கேட்டீங்க போங்க டீடைலு

    ReplyDelete