Tuesday, August 7, 2012

முத்தம்......... 01


வீட்டுக்குள் எல்லோரும்
இருக்கும் போது
யாருக்கும் தெரியாமல்
நீ கொடுக்கும் அந்து
ஒரு நொடி
முத்தத்திற்கு
ஈடு இணை இல்லை... 

------------------------------------------------


அந்த  தீவோலையில்
பொசுங்காத ஓர் முத்தத்தை
இன்னும்
பொத்தி பொத்தி வைத்திருக்கிறேன்
அடுத்த முறை  தீ மூட்ட!!!  

------------------------------------------------

சத்தம் வராமல்
முத்தம் தர நினைத்தேன்
உனக்கா கொடுக்கிறேன்
என்ற சந்தோசத்தில்
சுத்தி இருப்பவர்கள்
எல்லாம் திரும்பி
பார்க்கின்றனர்
நம் முத்த சத்தத்தை
கேட்டு.....

------------------------------------------------

நீ வாசிக்கும்
ஒவ்வொரு
கவிதையும்
உன் உதட்டை
ருசிக்க
தோனுகிறது...

------------------------------------------------

எங்கு கற்றாய்
இந்த முத்த
மந்திரத்தை
உன்னை சுற்றி
சுற்றி வர
வைக்கிறது...  

------------------------------------------------

நீ கொடுத்த முத்தத்தை
அறை முழுவதும்
பரப்பி வைத்தேன்
அங்கிருந்து நகர
மறுக்கிறது மனது....

மீண்டும் கிடைக்குமா
என்ற ஏக்கத்தில்... 


------------------------------------------------
 

15 comments:

  1. ///வீட்டுக்குள் எல்லோரும்
    இருக்கும் போது
    யாருக்கும் தெரியாமல்
    நீ கொடுக்கும் அந்து
    ஒரு நொடி
    முத்தத்திற்கு
    ஈடு இணை இல்லை.////


    சிம்ப்ளி சூப்பர்!!!!!!!

    ReplyDelete
  2. அனைத்து கவிதைகளும் அருமை தல..!! சூப்பர்.

    ReplyDelete
  3. //

    நீ கொடுத்த முத்தத்தை
    அறை முழுவதும்
    பரப்பி வைத்தேன்
    அங்கிருந்து நகர
    மறுக்கிறது மனது....

    மீண்டும் கிடைக்குமா
    என்ற ஏக்கத்தில்...
    //
    வாழ்வின் பயணத்தில் சொர்கத்தின் நிழலில் இளைபாருகிரீர்கள் போல இப்படி மழையாய் பொழிகிறது கவிதை

    அத்தனையும் அருமை

    ReplyDelete
  4. முத்தச் சந்தம்
    முத்தொலி இசைக்கிறது...

    ReplyDelete
  5. உங்களின் முத்தச்சத்தம்
    எங்களின் காதிலும் கூசுதுங்க நண்பரே.

    ReplyDelete
  6. அழகிய முத்த மழைத்துளி(கள்)...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 3)

    ReplyDelete
  7. அருமையான கவிதைகள். கலக்கல்

    ReplyDelete
  8. கவிதையா பின்னுறீங்க..

    ReplyDelete
  9. முத்தான முத்தக் கவிதைகள்
    படித்து ரசித்தேன்
    மனம் தொட்ட பதிவு
    படங்களுடன் கவிதை அருமை
    தொடர (பதிவையும்) வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. முத்தக்கவிகள் மொத்தமும் அழகு! வாழ்த்துக்கள்!
    இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

    ReplyDelete
  11. முத்தத்தில் நனைந்த கவிதைகள்...ஈரலிப்போடு.இரண்டாவது முத்தம் மிகப் பிடித்தது !

    ReplyDelete
  12. சத்தத்தில் வெளியான முத்தம் வரிகளாய் அருமை.

    ReplyDelete