Wednesday, December 21, 2011

அஞ்சறைப்பெட்டி 21.12.2011


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
 
ஈரோடு சங்கமத்தில் கிட்டத்தட்ட 230க்ம் மேற்பட்டவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இதில் பதிவர்கள்  மட்டும் கிட்டத்தட்ட 180யைத் தாண்டும். பதிவர்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அரங்கிற்கு வந்தவர்களில் என்னால் முடிந்தவரை அனைவரையும் சந்தித்து வரவேற்றேன். யாரிடமாவது பேசாமல் சென்றிருந்தால் மன்னிக்கவும்.

பதிவர் சந்திப்பில் நிறைய நண்பர்கள் பதிவழுதும் போது அவர்களிடம் நான் பேசிய விதத்தையும், கவனித்த விதத்தையும் பாராட்டி எழுதி இருந்தனர் இதில் மிக மகிழ்ச்சி ஏன் என்றால் எங்கள் குழுவினர் எனக்கு கொடுத்த ஒரே வேளை அது தான் அதை சரியாக செய்ததில் மிக்க மகிழ்ச்சி..

நிறைய நண்பர்களிடம் அதிகம் பேச இயலவில்லை அனைவரையும் வரவேற்று, சாப்பிட்டார்களா என்று கேட்டு கவனித்ததில் நிறைய மனம் விட்டு பேச இயலவில்லை அடுத்த முறை இதை எல்லாம் சரி செய்து விடுகிறேன்..

...............................................................................................
நம் பதிவர்கள் தற்போது அதிகம் எழுதுவதில்லை குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் தொடந்து எழுதுகின்றனர் முடிந்தவரை அனைவரும் எழுதினால் பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கும்... எழுதுங்கள் வரவேற்கிறோம்.

புதியவர்கள் நிறைய பேர் தயக்கத்துடன் இருக்கின்றனர் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் அனுபவமுள்ளவர்கள் தீர்த்து வைப்பார்கள் அவர்கள் சொல்லவில்லை என்றால் சொல்லாதவரைப் பற்றி ஒரு பதிவெழுதுங்கள் விரைவில் நீங்களும் பிரபல பதிவர் ஆகிவிடலாம்...
...............................................................................................

தமிழக அரசியலில் தற்போது மிக பரபரப்பான விசயம் சசிகலாவை அம்மா வெளியேற்றியது இது அனைத்து தரப்பினரையும் சந்தோசப்படுத்தி உள்ளது. முக்கியமாக அம்மா எதிர்பார்க்காத வரலாற்று வெற்றியை கொடுத்த தமிழக மக்கள் மிகவும் சந்தோசத்துக்குள்ளாகி உள்ளனர். அதுவும் முதல் 6 மாதத்தில் எடுத்த இந்த களை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது..

எதிர்பார்க்காத வெற்றியை கொடுத்த தமிழக மக்களுக்கு அனைவரும் பாராட்டும் வகையில் ஆட்சியை கொடுங்கள் இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்... அப்படி கொடுத்தால் நீங்கள் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்...
...............................................................................................

 
வடகொரியா அதிபராக இருந்தவர் கிம்ஜொங்-2. கம்யூனிச நாடான இங்கு இவர் ராணுவ ஆட்சி நடத்தி வந்தார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் பக்கவாத நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரெயிலில் சென்று கொண்டிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
 
அதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.  அவர் மரணம் அடைந்த செய்தி தலைநகர் பியாங்யாங்கில் இருந்து வட கொரியா டி.வி.யில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது, நமது அன்பிற்குரிய தலைவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என தெரிவிக்கப்பட்டது.
 
கிம்ஜொங் மரணம் அடைந்ததை தொடர்ந்து பக்கத்து நாடான தென்கொரியாவில் ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் கூடி இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக தென்கொரியா அதிபர் லீ மியூங்-பக் தெரிவித்தார். 
 
வடகொரியாவில் ஒரு குடும்ப ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இவருக்கு முன்பு கிம்ஜொங்-2வின் தந்தை கிம் 2 சங் அதிபராக இருந்தார். கடந்த 1994-ம் ஆண்டு இவர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து கிம் ஜொங்-2 அதிபரானார். 17 ஆண்டு காலம் அதிபராக பதவி வகித்துள்ளார். இவரும் தனது தந்தை வழியில் ராணுவ ஆட்சியை நடத்தினார். இவர் மிகவும் சக்திவாய்ந்தவராக திகழ்ந்தார்.
 
யாருக்கும் புரியாத புதிராக இருந்தார். அணு ஆயுத கொள்கையின் மூலம் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கினார். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சீனா, ரஷியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.
 
தனது உடல்நலம் மிகவும் குன்றியதை தொடர்ந்து கடந்த ஆண்டு (2010) தனது 3-வது மகன் கிம்ஜொங் அங் என்பவரை அடுத்த அதிபராக அறிவித்தார். எனவே, இவர் வடகொரியாவின் அடுத்த அதிபராகிறார். கிம்ஜொங் 
 
................................................................................................

முல்லைப்பெரியாறு பிரச்சனையில் ஆரம்பத்தில் இருந்த அதே போரட்ட குணத்தோடு போரடிவரும் தமிழக தலைவர்களில் மிக முக்கியமானவர் வைகோ.. நிறையப் போராட்டங்களை நடத்தி மக்கள் செல்வாக்கை பெற முயற்சிக்கிறார் அவரைப்பொறுத்தவரை மக்கள் அவர் மேல் நன்மதிப்பு வைத்துள்ளனர் அவ்வளவுதான்... ஓட்டு வாங்குவது கடினமே...
................................................................................................

3000 ஆயிரம் லாரிகள் நிறுத்தம் கேரளாவிற்கு பால், காய்கறி, முட்டை போன்ற அத்தியாவிசயமான பொருட்கள் எதுவும் செல்லவில்லை. உப்பும் கூட செல்லவில்லை இது தமிழர்கள் வேண்டும் என்று செய்யவில்லை தமிழர்களின் லாரியை அடித்து நொறுக்கியதற்காக லாரி உரிமையாளர்கள் எடுத்த முடிவு.. 

மலையாளிகள் அரசிலாக்குகின்றனர் இப்பிரச்சனையை இதனால் பாதிக்கப்படுவது மலையாளிகள் தான்...
என்னைக்கேட்டால் இங்கிருந்து செல்லும் மின்சாரத்தையும் தடுக்க வேண்டும் அப்ப தான் அடங்குவானுக...
..................................................................................................

ஜப்பானியர்கள் தங்கள் கழிப்பறையை மிகவும் புனிதமானதாக கருதுகின்றனர். ஏனெனில், அது கடவுள் வந்து செல்லும் வழியாக நம்புகின்றனர். அதற்காக மிக அதிநவீன ஆடம்பர கழிப்பறைகளை அவர்கள் விரும்புகின்றனர்.
 
மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஜப்பான் நிறுவனங்கள் மிக அழகிய வேலைப்பாடுகள் அடங்கிய அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த கழிப்பறைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
 
அந்த வகையில், தற்போது அங்கு 72 ஆயிரம் பளிங்கு கற்களால் ஆன கழிப்பறையை தயாரித்துள்ளனர். அவை ஒன்றின் விலை ரூ.50 லட்சம். இந்த கழிப்பறையை ஜப்பான் நிறுவனத்துடன் சேர்ந்து ஆஸ்திரியாவின் நகை நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
 
அதுக்காக கழிப்பறைக்கு 50 இலட்சம் என்பதொல்லாம் ரொம்ப ஓவர்...
..................................................................................................

லோக்பால் மசோதாவில் மீண்டும் ஏமாற்றம் ஹசாரே குழுவினர்ருக்கு மட்டுமல்ல அனைவருக்குந்தான்...
 
..................................................................................................
 
 
பெண்களுக்கு 30 வயதிலும், ஆண்களுக்கு 40 வயதிலும் கவர்ச்சி அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்கள் எந்த வயதில் கவர்ச்சி ஆக காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
இதுபற்றி ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனிதனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில், பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் செக்சுடன் கூடிய கவர்ச்சியாக தெரிகின்றனர்.
 
ஏனெனில், 40 வயதில் தான் ஆண்கள் அழகான கவர்ச்சியான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது. அதுபோன்று பெண்கள் தங்களது 30 வயதில்தான் கவர்ச்சிகரமான இருக்கின்றனர். அந்த வயதில்தான் கவர்ச்சியான உள்ளாடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர்.
 
ஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர். மேலும், விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
..................................................................................................
 
 தற்போது அரசுப் பேருந்துகளில் விளம்பரங்கள் தாங்கி வருகின்றனது இதனால் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது என்பது நல்ல விசயந்தான் ஆனால் பேருந்து செல்லும் ஊர்ப்பெயர் இருக்கும் இடத்தில் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலம் வயதானவர்களும், தட்டித்தடுமாறி படிப்பவர்களும் ரொம்பச் சிறமப்படுகின்றனர்... இது களைய வேண்டிய ஒன்று...


தகவல்


காதலர்களோ, தம்பதியரோ முதலில் அவர்களின் அன்பை வெளிப்படுத்தும் அற்புத பாஷை முத்தம். முத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம் தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களைப் பொறுத்தும், வாங்கிக் கொள்கிறவர்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது.

முத்தத்தில் வித்தியாசம்

ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால், காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு. துணை அடுத்து என்ன செய்யப் போகிறான் அல்லது என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு காதலர்களுக்குள் இருப்பதால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது.

இப்போதெல்லாம் முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தப்படுவதால் பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன. உதாரணமாக உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்’. இந்த முத்தத்தின் போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.

முத்தத்தில் வேறுபாடு

பாலுறவின்போது ஆண், பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு. அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது. பிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும் பின்னிப் பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணையிடம் விரும்புகிறார்களாம்.

முத்தத்திற்கு மரியாதை

ஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாளப்படுகிறது. பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் சுகப்பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. பிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.

அவர்களுக்குள் காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை. அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனப்பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம்.

என்ன உங்கள் துணைக்கு ஆழமான முத்தம் கொடுக்க தயாராகிவிட்டீர்களா?
 
அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுக பதிவர் நாய் நக்ஸ் நக்கீரன்இவரின் நகைச்சுவையான பேச்சைப்போலவே இவரின் பதிவும் இருக்கிறது.
 
தத்துவம்
 
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே..

பலர் வெற்றியைக் கனவு காண்கிறார்கள்.. ஆனால் சிலர் அதற்காக உழைக்கக் கிளம்பி விடுகிறார்கள்...

உழைப்பவனுக்கு எந்த வேலையும் இழிவல்ல; சோம்பல்தான் இழிவு...


21 comments:

  1. வழக்கம் போல அஞ்சறைப்பெட்டி சுவை மிகுதி...

    ReplyDelete
  2. மிக விரிவான அலசல்..

    சங்கமத்தில் அத்தனைபேரையும் சாமாளித்து உபசரித்து அனுப்பிய ஈரோடு நண்பர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்..

    உங்களுக்கு ஸ்பெசல் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. அவர்கள் சொல்லவில்லை என்றால் சொல்லாதவரைப் பற்றி ஒரு பதிவெழுதுங்கள் விரைவில் நீங்களும் பிரபல பதிவர் ஆகிவிடலாம்..//

    ஆஹா கவுத்துபுட்டியேய்யா ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  4. முல்லைப்பெரியாறு பிரச்சனையில் ஆரம்பத்தில் இருந்த அதே போரட்ட குணத்தோடு போரடிவரும் தமிழக தலைவர்களில் மிக முக்கியமானவர் வைகோ.. நிறையப் போராட்டங்களை நடத்தி மக்கள் செல்வாக்கை பெற முயற்சிக்கிறார் அவரைப்பொறுத்தவரை மக்கள் அவர் மேல் நன்மதிப்பு வைத்துள்ளனர் அவ்வளவுதான்... ஓட்டு வாங்குவது கடினமே...//

    என்னுடைய கருத்தும் இதுதான்...!!!

    ReplyDelete
  5. 3000 ஆயிரம் லாரிகள் நிறுத்தம் கேரளாவிற்கு பால், காய்கறி, முட்டை போன்ற அத்தியாவிசயமான பொருட்கள் எதுவும் செல்லவில்லை. உப்பும் கூட செல்லவில்லை இது தமிழர்கள் வேண்டும் என்று செய்யவில்லை தமிழர்களின் லாரியை அடித்து நொறுக்கியதற்காக லாரி உரிமையாளர்கள் எடுத்த முடிவு..

    மலையாளிகள் அரசிலாக்குகின்றனர் இப்பிரச்சனையை இதனால் பாதிக்கப்படுவது மலையாளிகள் தான்...
    என்னைக்கேட்டால் இங்கிருந்து செல்லும் மின்சாரத்தையும் தடுக்க வேண்டும் அப்ப தான் அடங்குவானுக...//

    http://nanjilmano.blogspot.com/2011/12/blog-post_21.html

    ReplyDelete
  6. ஏனெனில், 40 வயதில் தான் ஆண்கள் அழகான கவர்ச்சியான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது. அதுபோன்று பெண்கள் தங்களது 30 வயதில்தான் கவர்ச்சிகரமான இருக்கின்றனர். அந்த வயதில்தான் கவர்ச்சியான உள்ளாடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர்.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  7. அஞ்சரைபெட்டி, பல்கலைகழகம்...!!!

    ReplyDelete
  8. Thanks
    nanri
    nanri
    thanks.............


    Eppadinga immam
    perusa post type
    pannureenga.....

    Monday varum namma
    post...
    Thalaippu
    roomba mosama irukkum
    ethir parungal......he...he...he

    ReplyDelete
  9. அஞ்சறைப் பெட்டி அமர்க்களமாக இருந்தது. பிரபல பதிவராக உங்கள் யோசனையை குறித்துக் கொண்டேன். உங்க ஆலோசனைகளை எனக்குச் சொல்லுங்க சார்... (ஆரம்பிச்சுட்டேன்ல...)

    ReplyDelete
  10. சங்கவி,

    அனைத்தும் அருமை. குறிப்பாக தத்துவம் டாப்.

    ReplyDelete
  11. அஞ்சறைப்பெட்டியில் உலகமே உழல்கிறது...

    அற்புதமான தொகுப்பு

    ReplyDelete
  12. சதீஷ் நிசமாவே அஞ்சறைப்பெட்டி வாசம் சற்று பலமாய் தான் இருக்கிறது இம்முறை..முத்தம் பற்றி ஆராய்ச்சி கட்டுரை அருமை..

    ReplyDelete
  13. நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  14. வணக்கம் சங்கவி சார்..

    //புதியவர்கள் நிறைய பேர் தயக்கத்துடன் இருக்கின்றனர் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் அனுபவமுள்ளவர்கள் தீர்த்து வைப்பார்கள் அவர்கள் சொல்லவில்லை என்றால் சொல்லாதவரைப் பற்றி ஒரு பதிவெழுதுங்கள் விரைவில் நீங்களும் பிரபல பதிவர் ஆகிவிடலாம்.//

    இது நல்ல ஐடியாவா இருக்கு சார்..

    பிரபலமான அறிமுகப் பதிவர் நக்கீரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. சங்கமம் உங்களுக்கு நிறைய உற்சாகம் கொடுத்திருப்பது அஞ்சறை பெட்டியில் தெரிகிறது

    ReplyDelete
  16. என் போட்டோவை போடததது தவிர மட்ட்றபடி அஞ்சறைப்பெட்டி... தூள்!

    :-)

    ReplyDelete
  17. வடகொரியாவைப் பத்தி யாரும் எழுதலையேன்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க எழுதிட்டீங்க

    ReplyDelete
  18. பிரபல பதிவர்களாக வேண்டுமா, கவலையே வேண்டாம் பதிவர்களே, இருக்கவே இருக்காரு நம்ம அகில உலக கில்மாஸ்டார் நாய் நக்ஸ் நக்கீரன். ரெண்டு நாள் அந்த பலியாட்டை போட்டு அறுத்தா போதும், நீங்கள் தானாகவே பிரபலமாகிவிடுவீர்கள் என்னைப் போல. (என்ன நாய் நக்ஸ் இன்னைக்கு இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா.

    ReplyDelete
  19. அஞ்சறைப் பெட்டி அழகிய பதிவு!! இனிய புத்தாண்டு,கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. பெட்டி ஃபுல்லா இருக்குய்யா...அதே நேரம் நல்லா இருக்குய்யா!

    ReplyDelete