Wednesday, December 7, 2011

அஞ்சறைப்பெட்டி 08.12.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

எனது வலைப்பதிவிற்கும் 500 நண்பர்கள் பலோயர்ஸ் ஆக பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.. நான் எதிர் பார்க்கவில்லை எனக்கும் இத்தனை நண்பர்கள் கிடைப்பார்கள் என்று. நண்பர்கள் இவ்வளவு பேர் கிடைத்ததில் சந்தோசம்... எனது பதிவை தொடர்ந்து படிப்பவர்களுக்கும், பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கு


நன்றி... நன்றி...நன்றி...
 ...............................................................................................

2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, சரத்குமார் ஜாமீனில் விடுதலை தான் ஆனால் அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் கொடுத்த உற்சாக வரவேற்பை நினைக்கும் போது சிரிப்பு தான் வருகிறது.


ஜாமீனுக்குகே இந்த வரவேற்பா ? அன்று ஏற்பட்ட போக்குவரத்து நெறிசல் அவர்கள் தொலைக்காட்சியில் காட்டிய இவ்வரவேற்பு மக்களிடம் முகம் சுளிக்கத்தான் வைத்தது. இந்த ஜாமீன் நாடாளுமன்ற தேர்தலின் போது இச்சம்வம் நடந்திருந்தால் நிச்சயம் எதிரொலிக்கும் மக்கள் வாக்கில்...
...............................................................................................

முல்லை பெரியாறு பிரச்சனையை தேவையில்லாமல் பெரும் அரசியலாக்குகின்றனர் கேரளா அரசியல்வாதிகள் இதில் பாதிக்கப்படுவது கேரள அப்பாவி பொது மக்களும், அப்பாவி தமிழனும் தான்...


இப்பிரச்சனையில் முதலில் தாக்க ஆரம்பித்தது மலையாளிகள் தான். கேரள அரசிற்கும், கேரள மக்களுக்கும் அதிக வருமானத்தை தேடித்தருவது ஜயப்பன் கோயில் மூலமாகத்தான் அங்கு வரும் பக்தர்கள் அப்படியே சுற்றுலா செல்வதால் கேரளாவிற்கு அதிக வருமானம் கிடைக்கிறது.


தமிழகர்கள் அதிகம் பேர் ஐயப்பன் மழைக்கு செல்கின்றனர் அவர்களைத் தாக்குவதால் இழப்பு கேரளாவிற்குத்தானே தவிர தமிழர்களுக்கு இல்லை. இங்குள்ள மலையாளி வணிக வளாகத்தை ஒரு சில தமிழர்கள் தாக்குவது கண்டனத்துக்கு உரியது.. ஆனால் மலையாளிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் நாம் தாக்கினால் பின் அவர்களும் தாக்குவார்கள் என்று...


தமிழகத்தில் நிறைய மலையாளிகள் வாழ்கிறார்கள் என்பதையும், தமிழர்கள் கேரளாவில் வாழ்கிறார்கள் என்பதை இரு மாநிலத்தவரும் உணரவேண்டும். இதை தூண்டிவிடும் நபர்களும் உணர வேண்டும்...


தமிழகத்தில் இருந்து லாரிகள் செல்லவில்லை என்றால் அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காது என்பதை அறிய வேண்டும்...

...............................................................................................

ஐயப்ப பக்தர்களே வருடா வருடம் மாலை போட்டு விரதம் இருந்து கேரளாவில் போய் செலவு செய்து மலையாளிகளை வாழ வைத்தது போதும் இனி நம் தமிழ்நாட்டில் உள்ள பழனி, திருவண்ணாமலைக்கு சென்று வழிபடுங்கள்... முருகனின் அறுபடை வீடுக்கு செல்லுங்கள் இனியாவது தமிழனை வாழ வையுங்கள்.....

................................................................................................
உணவு பணவீக்கம் கூடாமல் இருப்பதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும்  சொன்னவர் பிரணாப்முகர்ஜி... ஐயா நாங்க உழைக்கிறோம் ஆனால் நீங்க விலையேற்றத்தை கட்டுப்படுத்த உழையுங்க..


எப்ப விலையேற்றம் நடைபெற்றாலும் நீங்க சொல்லும் பதில் எங்க கையில் ஒன்றும் இல்லை... விலையை குறைக்க இயலாது என்று தான் சொல்றீங்க...
................................................................................................
நில அபகரிப்பு வழக்கில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்னை நானே தண்டித்துக் கொள்வேன் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
என்னை ஏன் கைது செய்யவில்லை என்கிறீர்கள் இப்ப இப்படி சொல்றீங்க... அப்ப என்ன நடந்தது என்று நீங்களே சொல்லுங்க...

..................................................................................................
சாரயம் விற்றால் தூக்கு தண்டனை குஜராத்தில் அதிரடி சட்டம் கலக்கராங்கப்பா குஜராத்காரங்க...
நம்ம ஊர்ல என்னடான்ன டாஸ்மார்க் இல்லை என்றால் அரசையே நடத்த முடியாது என்கிறார்கள்...
அங்க என்னடான்னா விற்றால் தூக்கு தண்டனை என்கிறார்கள்.. ஒரே நாட்டில் எத்தனை விதமான சட்டங்கள்...

..................................................................................................

பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர், கூகுள் பிளஸ் என பல்வேறுபட்ட சமூக வலைதளங்கள் இணையத்தில் இயங்கி வருகின்றன. இங்கு வரம்பை மீறினால் நடவடிகக்கை என்று அறிவித்துள்ளார் கபில் சிபில்...
ஏம்பா இவர தாக்கு தாக்குன்னு கமெண்ட் போட்டும் மனுச அசர மாட்டேன் என்கிறார். இனிமேல் நாம யாரை தாக்கி எழுதினாலும் நடவடிக்கை எடுப்பாங்க போல... பாத்து சூதனமா இருக்கேனும் இனி...
 ..................................................................................................


ஈரோட்டில் பதிவர் சங்கமம் 18.12.2011

பதிவர் சந்திப்பு வருகிற 18.12.2011 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.
இடம் : ரோட்டரி சி.டி ஹால், பழையபாளையம், ஈரோடு.

நிகழ்ச்சி நிரல் பற்றிய செய்திகள் விரைவில்...



பதிவர்கள், முகநூல் நண்பர்கள், டிவிட்டர்கள், வாசகர்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்....

தகவல்

வானவியல் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையம் சக்தி வாய்ந்த அதிநவீன கெப்லர் டெலஸ்கோப்பை பயன்படுத்தி வருகிறது. அதன் மூலம் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் சமீபத்தில் பூமி போன்று மற்றொரு கிரகம் வானத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர்.


அதற்கு “கெப்லர் 22-பி” என பெயரிட்டனர். அந்த கிரகம் பூமியில் இருந்து 600 வெளிச்ச ஆண்டுகள் தொலைவில் 1 லட்சத்து 50 ஆயிரம் நட்சத்திரங்கள் மத்தியில் உள்ளது. பூமியை விட 2.4 மடங்கு பெரியது. இங்கு 22 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் நிலவுகிறது. அது பூமிக்கு மிக அருகில் உள்ளது. அந்த கிரகத்தில் பெரும்பாலான பகுதிகள் எப்படி இருக்கும் என கணிக்க முடியவில்லை.


Posted Image


அவை பாறைகளாகவோ, கியாஸ் அல்லது திரவ நிலையிலோ இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த புதிய கெப்லர் 22-பி கிரகம் குறித்து சமீபத்தில் நடந்த வானவியல் விஞ்ஞானிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்த கிரகம் பூமியை போன்றதுதான் என உறுதி செய்து அறிவிக்கப்பட்டது. அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என்றும் கருதப்படுகிறது.

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் சுரேஷ்குமார் இவரின் பதிவுகள் நக்கல் நையாண்டியுடன் படித்த உடன் சந்தோசத்தை ஏற்படுத்துகின்றது. இவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி....
தத்துவம்

துன்பங்களை பலர் பொறுத்து கொள்கின்றனர். ஆனால், அவமதிப்பை சகிப்பவர்கள் வெகு சிலர் தான்..


எப்போதும் உற்சாகமாய் இருங்கள் உலகத்தில் ஏற்கனவே இருக்கும் உம்மனா மூஞ்சிகள் போதும்..


தவறு செய்து விட்டோம் என்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே..

19 comments:

  1. எனது வலைப்பதிவிற்கும் 500 நண்பர்கள் பலோயர்ஸ் ஆக பெற்றதில் மிக்க மகிழ்ச்சி

    வாழ்த்துக்கள் சங்கவி

    ReplyDelete
  2. மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்,
    இந்த தருனம்... என் வாழ்வில் மறக்க முடியாதது....உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. அஞ்சரை பெட்டி, அறுசுவை பெட்டி வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  7. மனப்பூர்வ வாழ்த்துக்கள். Keep it up sathish....

    ReplyDelete
  8. //முருகனின் அறுபடை வீடுக்கு செல்லுங்கள் இனியாவது தமிழனை வாழ வையுங்கள்....//
    கலக்கல் பாஸ்!

    தத்துவங்கள் மூன்றும் மிக அருமை!

    ReplyDelete
  9. வாழ்த்துகள் சங்கவி. நல்ல தகவல்களும் கூட.

    ReplyDelete
  10. வாழ்த்துகள் பாஸ்... :)

    ReplyDelete
  11. உள்ளுரில் இருந்து உலகம் வரை........

    அனைத்தும் கலக்கல்

    ReplyDelete
  12. அருசுவையான அஞ்சரைப் பெட்டி

    ReplyDelete
  13. 500 நண்பர்களைப் பெற்றதற்கு உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! கனிக்கு வரவேற்பை மட்டும்தான் பார்த்தீர்களா? அண்ணாசாலை முழுக்க வழியெங்கும் பேனர்கள், ப்ளெக்ஸ்கள்! யப்பப்பா...

    கேரளாவிற்கு செல்லாமல் தமிழக கடவுள்களுக்கே விரதமிருங்கள் என்று நீங்கள் சொல்லியிருப்பது எனக்கு மிகப் பிடித்தது. பதிவர் சந்திப்பு அவசியம் ஈரோடு வர வேண்டுமென்று நினைத்தேன். வேறு ஒரு தவிர்க்க இயலாத கடமை குறுக்கிட்டு விட்டதால் என் வாழ்த்துக்களை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். ந்ன்றி.

    ReplyDelete
  14. //ஒரே நாட்டில் எத்தனை விதமான சட்டங்கள்...//
    இதைத்தான் நேரு சொன்னாரோ ”unity in the midst of diversity” என்று!!
    அஞ்சறைப் பெட்டியில் எல்லாமே இருக்கு!(இப்பல்லாம் ஏழறைப் பெட்டிதான்!)

    ReplyDelete
  15. Super.. congrats..

    500 poda vaichu iruken.. treat vainga.. ;-)

    ReplyDelete
  16. 500 நண்பர்களைப் பெற்றமைக்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    செய்தயும் அதற்கான விமர்சனமும்
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 8

    ReplyDelete